Search This Blog

Friday, April 17, 2020

அர்த்தம் நிறைந்த ஒரு குட்டிக் கதை!

ஒரு முகாம் ஒன்றில் புதிய தளபதி நியமிக்கப்பட்டார்.
அவர் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது , 2 காவலாளிகள் ஒரு பெஞ்சை காவல் காத்து கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர் அருகில் சென்று
அவர்கள் ஏன் அதைக் காவல் காக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள்...
"எங்களுக்குத் தெரியாது சார். முன்னாள் தளபதி அவ்வாறு செய்யச் சொன்னார், அதனால் நாங்கள் செய்கிறோம்!"
அவர் உடனே
அந்த முன்னாள் தளபதியின் தொலைபேசி எண்ணைத் தேடி அழைத்து பேசினார். மேலும் இந்த குறிப்பிட்ட பெஞ்சை ஏன் காவலர்களை கொண்டு காத்தார் என்று அவரிடமே கேட்டார்.
"எனக்குத் தெரியாது. முந்தைய தளபதியிடம் இரண்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் அதை சிரத்தையாக பாதுகாத்தனர். அதனால், நான் பாரம்பரியத்தை உடைக்காமல் வைத்திருந்தேன்" என கூறினார்.
ஏன் என்று தெரியாமல் போனால் ஆர்வத்தில் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது , புதிய தளபதிக்கு.
அதனால்...மேலும் 3 முன்னாள் தளபதிகளை சந்தித்து பேசினார்.
அவர்களுக்கும் ஒன்றும் தெரியாமல் போக.... ஆனால் ,
அவர்கள் சொன்ன விவரங்களை வைத்து...
ஒரு 100 வயதான ஓய்வுபெற்ற முன்னாள் தளபதியைக் கண்டுபிடித்தார்.
அவர்தான்
இந்த பழக்கத்தை தோற்றுவித்தார்
என கூறியதன் பேரில்,
அவரிடம் சென்று...
"மன்னிக்கவும் ஐயா....
நான் உங்கள் முகாமின்
இப்போதைய தளபதி.
ஒரு சாதரணப் பெஞ்சை காக்க
இரண்டு காவலர்கள் இன்னமும் நியமிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.
நீங்கள் தான் அதற்கு தொடக்கம் என அறிந்தேன்.அவர்களை ஏன் அவ்வாறு செய்ய வைத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?"
என்று தயக்கத்துடன் கேட்டார்.
"என்ன...? அந்த பெயின்ட் இன்னுமா காயவில்லை..... ?!?"

No comments:

Post a Comment