Search This Blog

Tuesday, June 15, 2021

கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க

 கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க தவறாமல் செய்ய வேண்டிய விஷயம் என்ன? மறந்தும் இதை செய்ய மறக்காதீர்கள்!

கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் பொழுது எவ்வித துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் முன்னர் சொல்ல வேண்டிய மந்திரம் உண்டு. அம்மந்திரத்தை ஜெபித்து பின் கந்த சஷ்டி கவசம் வாசிப்பது முறையான பலன்களைக் கொடுக்கும். அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கந்த சஷ்டி கவசம் தீமைகளில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் கவசம் ஆகும். கந்த சஷ்டி கவசத்தை அடிக்கடி உச்சரிப்பவர்களுக்கு அந்த முருகனே நேரில் வந்து அவதாரம் புரிந்து காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை படிப்பதன் வாயிலாக கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக அனுபவிக்க வேண்டும்.
முருக கவச பாடல்:
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்!!
மேற்கண்ட இந்த மந்திரத்தில் இருக்கும் பொருளானது 36 முறை கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்பது அல்ல! இதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் 36 முறை கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் பலன்களை கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் சண்முக கவசத்தில் ஆறு அட்சரங்கள் உண்டு. அச்சரம் என்றால் எழுத்து என்கிற பொருள் உண்டு.
‘ஓம் சரவணபவ’ என்கிற இந்த ஆறு அட்சரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. இது போல 36 உரு கொண்ட அட்சரங்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளன. உங்களை சுற்றி இருக்கும் எதிரிகள் தொல்லைகளிலிருந்தும், தீராத நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை தரும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு
முருகன் போர் புரிந்த திருப்போரூர் ஸ்தலத்திலும், மதுராந்தகம் அருகாமையில் அமைந்துள்ள பெரும்பேர் கண்டிகை என்கிற ஊரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானுடைய கோவிலிலும் 36 அக்ஷரங்கள் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த யந்திரம் உள்ளது. இந்த எந்திரத்திற்கு அபிஷேகம் செய்வதன் மூலம் தீரா பிணிகளும், கஷ்டங்களும் அகலும் என்பது நம்பிக்கை.
கிரக தோஷம் நீங்கவும், ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சொல்ல வேண்டிய இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு பின்னர், சஷ்டி கவசத்தை வாசிக்கும் பொழுது அதனுடைய முழு பலனும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். 36 தடவை கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை! இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கந்த சஷ்டி கவசம் பாடினால் பெறற்கரிய பேறு கிட்டும்.
ஒரு வீட்டில் காலை, மாலை இரு வேளையும் கந்த சஷ்டி கவசத்தை படிப்பதும் அல்லது அதனை ஒலியாக கேட்பதும் அந்த வீட்டில் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். எந்த அளவிற்கு அதிகமாக கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வருகிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களுக்கு பலன்களும் உண்டு.
முருகனுக்கு உகந்த திதியாக இருப்பது சஷ்டி ஆகும். சஷ்டி திதி அன்று இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வேண்டிய வரங்களைப் பெறுவதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. நீங்கள் நினைத்தது நடக்க, வேண்டியது பலிக்கவும் மேற்கூறிய இம்மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வாருங்கள், நல்லதே நடக்கும்.

Sunday, June 13, 2021

சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு....


1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..
இந்த ஏழு வகை பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
தெய்வீக ரகசியங்கள்
1.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.
2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்
ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
3.குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.
4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.
8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல்நீங்கும் 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
11.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.
15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
17.இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.
20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
22.புத்திர பாக்கியம் இல்லாதோர்
6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.
27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
Thanks ஆன்மீக களஞ்சியம்

Wednesday, June 9, 2021

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புதம் (ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு)








முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். மூல மூர்த்தி செந்தில் வேலவன் எனும் திருநாமம் கொண்டு அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அளவிட முடியாத தெய்வ சானித்தியம் நிறைந்த இத்தலத்தை எண்ணற்ற அருளாளர்கள் பல்வேறு காலகட்டத்தில் போற்றிப் பரவி வந்துள்ளனர்.
1649 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் படையினர் செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அச்சமயம் மதுரையைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியை ஆண்டு வந்தவர் திருமலை நாயக்கர் எனும் மன்னர். செந்தூர் வடிவேலனிடம் அபரிமிதமான பக்தி கொண்டிருந்த இவர் பெரும் படையுடன் சென்று டச்சுப் படையினரைப் எதிர்த்தார். எனினும் அம்முயற்சி கைகூடவில்லை.
திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், ஷண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் வழியில் உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் மிகக் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் கதறிப் பதறிச் செய்வதறியாது திகைத்தனர். உற்சவ மூர்த்தங்களை உருக்க முனைந்ததாலேயே இந்த இக்கட்டான சூழல் உருவானது என்று ஏக மனதாக முடிவெடுத்து, அவற்றினை அக்கணமே கடலில் சேர்ப்பித்து விட்டனர்.
என்ன வியப்பு! சில கணங்களிலேயே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது. டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இவ்வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. செந்தூர் இறைவனான வள்ளி மணாளனின் திருவுளக் குறிப்பை யாரே அறியவல்லார்! அப்பெருமானின் அனுமதி இன்றி அணுவும் அசையக் கூடுமோ!
இந்நிகழ்வு நடந்தேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செந்தூர் திருக்கோயிலில் உற்சவ மூர்த்திகளைச் செய்விக்கும் பணி மீண்டும் தொடங்கப் பெற்றது. அச்சமயம் வடமலையப்பர் எனும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றியருளினார்; உற்சவ மூர்த்திகள் கடலில் புதையுண்டு இருக்கும் இடத்தைத் தெரிவித்தருளி, அடையாளமாக எலுமிச்சை மிதக்குமென்றும், வானில் கருடப் பறவை தோன்றுமென்றும் அருளிச் செய்தார்.
திருவருளின் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர் கடலில் மூர்த்திகளைத் தேடும் பணியைத் துவக்கினார். குறிப்பிட்ட இடத்தில் குமரக் கடவுளின் திருக்குறிப்பின் படி, நீரில் எலுமிச்சை மிதக்கவும், வானில் கருடப் பறவை தோன்றவும் கண்டு பெருமகிழ்வு எய்தினார். அவ்விடத்தில் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர்.
செந்தூர் வாழ் மக்கள் ஸ்ரீஷண்முகப் பெருமானையும், ஸ்ரீநடராஜ மூர்த்தியையும் திருக்கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்வித்து மகிழ்ந்தனர். தங்கள் வாழ்வோடும் ஆன்மாவோடும் கலந்து விட்ட ஸ்ரீஷண்முகக் கடவுளைப் போற்றித் துதித்துப் பிறவிப் பயன் எய்தினர்.

Tiruchendur Murugan Temple

கொரோனாவுக்குப் பிந்தைய நாட்கள் ஆரோக்கியம் மீட்க சித்த மருத்துவ வழிகள்!


எங்கள் சித்தமருத்துவர் அருள் அமுதனுடன், ஆனந்த விகடன் கி.ச. திலீபன் நேர்காணல்!
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தாலும், அதன் பிறகு சுமார் ஒரு மாதக் காலம் வரையிலும் அது விளைவித்த தாக்கங்களால் உடல் பிரச்னைகள் மற்றும் சோர்வு இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவேதான் அதன் பிறகு, சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கொரோனாவிலிருந்து மீண்ட பிறகான இந்த உடல் பிரச்னைகள் எதனால் ஏற்படுகிறது, அதைக் கையாள்வது எப்படி... விளக்குகிறார் சித்த மருத்துவரும் மணிப்பால் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருமான அருள் அமுதன்.
காரணம் என்ன?


‘‘கொரோனா வைரஸ் ஒருவரிட மிருந்து நமக்குத் தொற்றிய பிறகு, 1 - 5 நாள்களில் அது உடலில் பல்கிப் பெருகும். அடுத்து 6 - 11 நாள் களில்தான் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தெரியவரும். அந்த நாள்களில்தான் மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் நோய் எதிர்ப்பு சக்தி செயல் பாட்டுக்கு வருகிறது. அப்போது நோய் எதிர்ப்பு அணுக்கள் தாறு மாறாக இயங்கி, கொரோனா நோய்க் கிருமிகளை மட்டுமல்லாமல் மற்ற ரத்த செல்களையும் பாதிக்கிறது. சிலருக்குக் குறிப்பாக நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்தான் ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா நோய்க்கிருமி நம் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒருபுறம் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி விளைவிக்கும் தாக்கம் இன்னொரு புறம். இவை இரண்டின் காரணமாகத்தான் கொரோனாவி லிருந்து மீண்ட பிறகும் உடல் சோர்வு, பயம், பதற்றம், தலைசுற்றல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு, சிந்தனைத் திறன் குறைவு ஆகிய பிரச்னைகளுக்கு ஆட்பட நேர்கிறது.

உணவு மற்றும் பயிற்சி!

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிறகு, இந்த இரண்டு தாக்கங் களிலிருந்தும் உடலை சீர்படுத்தி பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

நமது உணவுமுறை மற்றும் சில பயிற்சிகள் மூலமே இதைச் செய்ய முடியும். சித்த மருத்துவத்தில் பாதிப்படைந்த உறுப்புகளை பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சையை மேற்கொள்ள, காயகல்பம் என்கிற துறை இருக்கிறது. அதன்படி ஒவ் வொருவரது பாதிப்புக்கும் ஏற்றாற் போலான சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
நரம்புப் பிரச்னைகளுக்கு வல்லாரை!


கொரோனாவுக்குப் பிந்தைய நிலையில் நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்புகள் இருக்கும். அதை சீர்படுத்த வல்லாரைக் கீரைதான் மருந்து. அதை துவை யலாகவும் சட்னியாகவும் செய்து நாளொன்றுக்கு ஒருவேளை சாப்பிட்டுவந்தால் மூளை தொடர்பான பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும். வல்லாரைக் கீரையை பச்சையாய் சாப்பிட்டால் மூன்று இலைகளை மட்டும் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் அது வேறு பல பிரச்னைகளை உண்டாக்கக்கூடும்.


நுரையீரலை சீர்செய்யும் பிராணாயாமம்!


நுரையீரல் தொடர்பான பாதிப்பு களை குணமாக்க திருமூலர் பிராணாயாமம் செய்ய வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு பக்க மூக்கை அடைத்துவிட்டு மற்றொரு பக்க மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து தேக்கி வைத்து, பின் அடைக்கப்பட்ட மூக்கின் வழியாக மூச்சை வெளி யேற்றலாம். இப்படியாக மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

திருமூலர் பிராணாயாமத்தின் சிறப்பம்சமே அதன் அளவு முறைதான். 1:4:2 என்கிற விகிதாச்சாரத்தில் இதை மேற்கொள்ள வேண்டும். மூச்சை உள்ளே இழுப்பதற்கு 10 நொடிகள் என்றால், 40 நொடிகள் அதை தேக்கி வைக்க வேண்டும். பிறகு 20 நொடிகள் அதை வெளியேற்ற வேண்டும். சித்த மருத்துவரை அணுகி பயிற்சி பெற்றும் இதை மேற் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் குறிப்பாக நுரையீரலை அதிகம் தாக்குவதால் இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் நோய் பாதிப்புக்குப் பின்னும் தொடரக்கூடும். அதை சீர்படுத்த, துளசி, கற்பூரவள்ளி, ஆடாதொடை, அதிமதுரம், தூது வளை, நொச்சி ஆகியவற்றில் கசாயம் செய்து குடிக்கலாம். துளசி, கற்பூர வள்ளி, நொச்சி ஆகியவற்றை ஆவி பிடிக்கவும் பயன்படுத்தலாம். தூது வளை லேகியம் மற்றும் திப்பிலி ரசாயனத்தை நாட்டு மருந்துக் கடை களில் வாங்கி உட்கொள்ளலாம்.


எலும்பு வலுப்பெற... முடக்கத்தான்!


எலும்பு மற்றும் தசைகளிலான வலியைப் போக்குவதற்கு வைட்டமின் டி சத்து அத்தியாவசிய மானது. காலையிலும் மாலையிலும் இளவெயிலில் சூரிய ஒளியில் உலவி விட்டு வந்தால் வைட்டமின் டி கிடைக்கப்பெறும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள பால், முட்டை ஆகிய வற்றை உட்கொள்ளலாம். எலும்பை வலுப்படுத்தும் ஒமேகா 3 இருப்பதால் மீன் வகைகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். முடக்கத்தான் கீரையை மாவில் கலந்து தோசை யாகச் சுட்டு சாப்பிடுவதன் மூலம் கை கால் இணைப்புகளில் ஏற் பட்டுள்ள வலி குறையும். அதுவே வலி அதிகமாக இருந்தால் இந்த உணவுகளை உட்கொள்வதோடு சிவப்பு குக்கில் தைலம் அல்லது கற்பூராதி தைலம் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கித் தடவினால் நல்ல பலன் கொடுக்கும்.
இதய படபடப்பை தணிக்கும் முசுமுசுக்கை!

சிலருக்கு அவர்களுக்கே கேட்கு மளவு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். அரை மணி நேரம் வரை யிலும்கூட இந்த வேகமான இதயத் துடிப்பு நீடிக்கும். அப்படியான சூழலில் பயப்படத் தேவையில்லை. பயந்தால் மேலும் பிரச்னை. அதுவே தானாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதால் நிதானமாக அதைக் கையாள வேண்டும். அந்த நேரத்தில் மல்லி, சீரகம் ஆகியவற்றை கசாயமாகக் காய்ச்சிக் குடித்தால் இந்தப் படபடப்பு நின்றுவிடும்.

முசுமுசுக்கைக்கீரையில் தோசை செய்து சாப்பிடுவதன் மூலமும், பிராணாயாமம் செய்வதன் மூலமும் இந்த வேகமான இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்தலாம். பிராணாயாமம் செய்யத் தொடங்கிய 100 நொடி களுக்குள் இந்தப் படபடப்பு கட்டுப் படுத்தப்பட்டுவிடும்.


வாதம், பித்தம், கபம் ஆகிய இம்மூன்றையும் தன்னிலைப் படுத்துவதற்காக, குறுமிளகு, மஞ்சள், சோம்பு, சுக்கு, பெருங்காயம், ஏலம், வெந்தயம், பூண்டு இந்த 8 பொருள் களை அரைத்து ரசம் செய்து குடிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள மருந்துகள் மற்றும் பயிற்சிகளை மேற் கொண்டால் ஒவ்வொரு உறுப்பு களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு களையும் குணப்படுத்தி பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்” என்கிறார் அருள் அமுதன்.
ஆனந்த விகடன்

Tuesday, June 8, 2021

கீழ்நாட்டு மருத்துமும்- மேல்நாட்டு மருத்துவமும் - ஆனந்தம் பண்டிதர்.



(1928 ஆம் ஆண்டு மருத்துவன் இதழில் அலோபதி மருத்துவம் குறித்து ஆனந்தம் பண்டிதர் எழுதிய கட்டுரை. பொறுமையாய் படித்து பாருங்கள்)
~ தோழர் காஞ்சிஅமுதன் யோகநாதன்
மேல்நாட்டாரின் மருத்துவ முறையின்படி இங்கிலீஷ் “டாக்டர்கள்” என்னும் அலோபதி மருத்துவர்கள் , நோயைக் கண்டு பிடித்தற்கு மக்களின் இரிகம் (நெஞ்சப்பை) நெகிழ்ந்து சுருங்குவதனால் உண்டாகும் ஓசையை ஸ்டெத்தஸ்கோப் (Stethoscope) என்னும் ஒலிக்குழலைக் கொண்டு காதால் கேட்டுப் பழகுகிறார்கள். உடம்பின் வெப்பத்தைத் தெர்மாமீட்டர் (சூடாறி கருவி) என்னும் இரசக்குழலால் ஒருவாறு அறிகின்றார்கள். அவர்கள் இக்கருவிகளையே நோய்களைக் கண்டு பிடித்தர்க்கு முதல் வழியாகக் கொண்டுள்ளார்கள்.; மேற்கண்ட கருவிகள் இல்லாவிடத்து அவர்களை நோய்களைக் கண்டுபிடித்தற்கு இயலாதவர்களாகின்றார்கள்.
ஆனால் , தமிழ் மருத்துவர்கள் தமக்கு வேறாக வேறொரு கருவியின் உதவியின்றத் தம் கைவிரல்களாலேயே நோயாளியின் கைநாடியின் துடிப்பைப் பார்த்தும், மற்ற குறிப்புகளைப் பார்த்தும், வாத, பித்த, ஐயமெனும்வளி, தீ, நீராகிய முப்பொருள்களின் நிலையையும் உணருகின்றார்கள். நெஞ்சப்பை, மூச்சுப்பை, ஈரல், குடல், பிருக்கம் (மூத்திரபிண்டம்) முதலிய உள்ளுறுப்புகளின் நிலைமையையும், அவைகளைப் பற்றிவரும் நோய்களையும் காண்கின்றார்கள். இவர்கள் அலோபதி மருத்துவர்களைக் காட்டிலும் மேலாக நோய்களை நிச்சயிக்கின்றார்கள். இதனை நாம் இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம்.
அலோபதி மருத்துவர்கள் உடம்பிலிருந்து இரத்தத்தை வெளிப்படுத்தி இரத்த சோதனை செய்கின்றார்கள். தமிழ் மருத்துவர்கள் இரத்தத்தின் நிலையையும், நோய்களையும்இரத்தத்தை எடுத்துப் பார்க்காமல் மேற்கண்ட சோதனைகளால் நிச்சயித்த நோய்களை நீக்குகிறார்கள். அலோபதி மருத்துவர்கள் கால் ஒடிந்தவர்களுக்கும், கை ஒடிந்தவர்களுக்கும்ஒடிந்த பகுதியை வெட்டி எடுத்துவிடுகிறார்கள்.. நாட்டு மருத்துவர் ஒடிந்த எலும்புகளையும், நொறுங்கிய எலும்புகளையும் ஒன்று சேர்த்து ஒட்டும்படி மேல்மருந்தாலும், உள்மருந்தாலும் வைத்தியம் செய்கின்றார்கள். அலோபதி மருத்துவர்கள் அறுத்து மருத்துவம் செய்ய வேண்டுமெனக்கூறும் நோயாளர்களில் பலருக்குத் தமிழ் வைத்தியர்கள் அறுக்காமலே வைத்தியம் செய்து நோய் நீக்குகின்றார்கள். ஆதலால், அலோபதி வைத்தியர்கள் சித்த வைத்தியத்தையும் கற்பது இன்றியமையாததாகும் . அதன்பிறகுதான் மேனாட்டுப் புதிய மருத்துவ நூலுக்கும், இந்திப் பழைய மருத்துவ நூலுக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை உலகம் அறியும்.
மேல்நாட்டாருடைய மருத்துவ நூல் பரு (ஸ்தூல)ப் பொருள்களைப் பற்றியே நிற்பது. ஆனால் நம் நாட்டு மருந்துவநூல் நுண்பொருளாகிய யோகஞானத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.. அறிவின்மயமாகிய சித்த மருத்துவ நூலின் பெருமையை யாரே அறிதற்கு வல்லார்! அவ்வித்தகச் சித்தர்களல்லரோ நம்மருத்துவ நூலின் பெருமையை அறியவல்லவர்.? அவர்களே நாடியை முற்றும் அறிவர். இதனை , “நாடி முற்றும் அறிந்தவர் சித்தரே” என்ற பாடலாலும் நன்குணரலாம்.
எழுபத்ஈராயிர நாடியவற்றுள்
முழுபத்து நாடிமுதல்
எனவும்,
சொல்லிய உந்திதன்னில் கழித்த தோர் எழுத்தைப்பற்றி
எல்லையி லெழுந்தபடி எழுபத்தீரா யிரத்துள்
வல்லவர் புகலுநாடி பத்ததில் ஏழுநீக்கி
நல்லதோர் நாடி மூன்றும் நலமுடன் அறிந்துபாரே
எனவும் சித்தர் கூற்றுப்படி மக்கள் உடம்பில் எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளிருக்கின்றன. அந்நாடிகளெல்லாம் பத்துநாடிகளில் அடங்கும். அப் பத்துநாடிகளும் மூன்று நாடிகளில் அடங்கி ஒடுங்கும் என்பது நம் சித்தர்கள் கண்டறிந்த உண்மையாகும். இந்நாடி, உயிர்ப்புடன் (மூச்சுடன் ) கலந்து பிரியாமல் நடைபெறுகின்றன. நாளொன்றுக்கு ( இரவு பகல்) மூக்கின் வழியாக நடைபெறும் மூச்சு இருபத்தோராயிரத்து அறுநூறு அதில் ஒரு தடவை வெளிப்படும் மூச்சின் அளவு பன்னிரண்டு அங்குலமாகும். அதில் நான்கு அங்குலம் வெளியே கழிய எட்டங்குல மூச்சே உட்செல்கின்றது. இந்த நான்கு அங்குலத்தைப் பாழாக்காமல் உட்செலுத்தும் வழிகளையும், இதனால் பிணி, மூப்பு, சாக்காடு, இல்லாமல் நெடுநாள் இருக்கும் வழிகளையும், நமது தமிழ் மருத்துவ நூலே செவ்விதின் உரைக்கின்றது. மக்களுக்கு எலும்புகள் ஐந்நூற்றுப் பத்தெனவும், நோய்கள் நாலாயிரமெனவும், உடம்பில் மூன்றரைக்கோடி மயிர்க்கால்களிருக்கின்றனவென்றும், அவைகளின் வழியே வாயுவின் போக்குவரவு உண்டெனவும் நமது நூல் கூறுகின்றது.
மயிர்கால் வழியெல்லாம் மாய்கின்ற வாயு
உயிர்ப்பின்று உள்ளே பதி
என வாயுதாரணையில் கூறப்படுகிறது.
மயிர் குழலாக விருப்பதால் மயிருக்குக் குழல் என ஒரு பெயர் தமிழில் இருப்பதையும் நமது தமிழ் மருத்துவ நூல்களால் நாம் நன்கறியலாம்.
இவ்வளவு அருமையுள்ள சித்தர்களின் மருத்துவ நூல்களை நன்றாகக் கற்று அனுபவத்தறிய வேண்டுமேயன்றி, சாத்திரமுறைகளை அறியாத ஒருவருக்கு இதன் பொருள் விளங்குதல் இயலாத காரியமாகும்.
தமிழர்கள் பண்டைக்காலம் முதல் பழகி அனுபவித்து வரும் தமிழ் மருத்துவமானது தமிழ்நாடு மட்டுமேயல்லாது, அசோக சக்கரவர்த்தி காலத்தில் , இந்தியா முழுவதும், இலங்கைத்தீவு முழுவதும், மேற்கில் மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா வரையிலும், பினாங்கு, சிங்கப்பூர் முதலிய கிழக்கிந்தியத்தீவுகள் வரையிலும் பரவி வளர்ந்து இக்காலத்தும் உயிருடனிருந்து வருகிறது. நம்முடைய மொழியையும், நம்முடைய மருத்தவம், ஓவியம் முதலான தொழில்களையும் பாதுகாத்து வளர்க்க வேண்டியவர் அரசாங்கத்தினரே யாவர். நமது நூல்களிலுள்ள பெருமைகளை அரசினருக்கு எடுத்துச் சொல்வதும் நம்முடைய கடமையே யாகும். ஒவ்வொரு நாட்டுக்கலைகளிலும் ஒவ்வொர் உண்மையிருக்கிறதென்பதை எவரும் மறுக்கமுடியாது. கீழ்நாட்டுக் கலைகள் மேல்நாட்டுக் கலைகள் ஆகிய இவ்விரண்டும் இருநாட்டினருக்கும் இன்றியமையாது வேண்டப்படுவனவேயாம். ஒருவன் ஒரு கட்டடத்தின் வெளித்தோற்றங்களையே பார்த்துக் கொண்டு உள்ளே சென்று காணவேண்டியதைக் காணாமலிருக்கிறான். மற்றொருவன் உள்ளே நடைபுறும் அற்புதங்களைக் கவனித்துக் கொண்டு வெளியில் உள்ள சங்கதிகளையே மறந்துவிடுகிறான். ஆதலின், இவ்விருவரும் கலக்க வேண்டுவது அவசியமாகும். அதனால் உலகத்துக்கு நன்மை பெரிதும் உண்டாகும். நம்முடைய மருத்துவநூல், நீதிநூல், ஞானநூல், சமயநூல் முதலியவைகளை மேல் நாட்டார் கற்க வேண்டும்.நாம் நம்முடைய நூல்களோடு நில்லாமல், இவுவலக வாழ்க்கைக்கு இன்றியமையாம மேல் நாட்டார்களுடைய கலைகளையும் கற்கவேண்டும். அப்போது தான் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் முதலியன உலகமுழுவதும் பரவும். நம்முடைய தமிழ் மருத்துவ நூல்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கு, நாம் தாராளமாக இடம்கொடுக்க வேண்டும். நமக்கு தெரிந்ததை மற்றவர்கள் அறியக்கூடாதென்னும் குறுகிய குணத்தை அறவே விடவேண்டும். அப்போது தான் நம்முடைய நீதிநூல், யோகநூல் முதலியவைகளில் சில பகுதியைக் கண்டறிந்த அமெரிக்க நாட்டாரும், மற்ற மேல்நாட்டாரில் பலரும் அவற்றை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றார்கள். நீதிசாஸ்திரங்களான திருக்குறள், நாலடியார் முதலியவைகளையும், தோத்திரங்களில் திருவாசகம் முதலியவைகளையும் ஆங்கிலத் துரைமகனாராகிய ரெவரண்ட்போப் முதலானவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தமது நாட்டார் எல்லோரும் அதன் அருமையை அறியும்படி செய்துள்ளார்கள். மிகச் சிக்கலானதும், விரிவானதும், நுட்பமானதுமான தமிழ் மருத்துவ நூலை மேல்நாட்டு நன்மக்கள் நன்றாக அறிந்து மகிழும்படி நாம் செய்ய வேண்டும். இதனை இன்றுவரை நாம் செய்யவியலாமலிருக்கின்றோம். ஆதலால், நமது தமிழ் மருத்துவமும் உலகில் பெருமையடையவில்லை.
தமிழ் மருத்துவத்தில் மணி, மந்திரம், மருந்து என மூவகைச் செய்கையையும் நோயாளிகளுக்குச் செய்ய வேண்டும் எனக் கூறுகின்றது. சரநூல், ஐம்பறவை, (பஞ்சபட்சி) தூதிலக்கணம், நாள்கோள்நிலை, விடமருத்துவம், மருத்துவம் முதலியவைகளை அறிந்தவனையே பண்டிதன், மருத்துவன், பரிகாரி, நாவிதன் எனக் கூறுவது மரபு. இவைகளை மேல்நாட்டார்களுடைய நூல்களில் காணவியலாது. மேல்நாட்டார் புதிதாகக் கண்டுபிடிக்கும் விஷயங்களெல்லாம் நமது வைத்திய சாஸ்திரத்திலிருக்க வேண்டுமெனில் அது எப்படி இயலும்? அரசாங்கத்தார் நமது வைத்தியத்தை வளர்ப்பது என்பதற்கு அருத்தமென்ன? நந்தமிழ் மருத்துவ நூல்களிலுள்ள நுட்பமான பொருள்களெல்லாம் கற்போரின்றி நாளுக்கு நாள் மறைந்தொழிகின்றன. இப்போதுள்ள நமது நாட்டு மருத்துவர்களில் பலர் அப்பொருள்களை அறியாது வைத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் எப்படியாயினும் பணம் சம்பாதிப்பதற்கான முயற்சியையே மிகப் பெரிதும் செய்கின்றார்கள்.
சோதிடம் பஞ்சபட்சி துலங்கிய சர நூல்மார்க்கம்
கோதுறு உடம்பின்கூறும் கொடியதாம் நோயின்கூறும்
தீதிலாப் பொருளின்கூறும் செய்வகை மருந்தின்கூறும்
ஈதெல்லாம் கற்றுணர்ந்தோர் இவர்களே மருத்தராவார்.
என்று நமது மருத்துவ நூல்கள் மருத்துவரிலக்கணத்தைக் கூறுகின்றன.
நாள், கோளாகிய சோதிடம், ஐம்பறவை,சரம், மந்திரம் முதலிவைகள் நோயளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டுவதில்லை.என மேல்நாட்டாரில் பலரும் நமது கீழ்நாட்டாரில் சிலரும் தற்போது சொல்கின்றனர். ஒரு நாட்டில் ஒரு காலத்தில் மக்களின் மனோநிலைக்குத் தக்கவிதமாக அக்காலத்துப் புலவர்கள் நூல்கள் எழுதி உள்ளார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. இஃது எந்த நாட்டிற்கும் பொதுவான விஷயமாகும். காலத்துக்கு காலம் மக்களின் கருத்து மாறுபட்டுக் கொண்டேவரும். சாத்திரங்களும் மாறும். நமது நாட்டில் மணி, மந்திரம், பஞ்சபட்சி, சரம்பார்த்தல் முதலியவைகளை பொதுமக்களின் மனதைவிட்டு நீங்கவில்லை. பெண்களைப் பேயோடவைப்பதும், கோணங்கி வைத்து உடுக்கை அடித்துக் குறி கேட்பதும், பல தேவதைகள் மக்கள் மீது ஊடுருவிப்பாய்ந்து கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லி மலையேறிப் போவதும் நடைபெறுகின்றன. கோழி, ஆடு முதலியவைகளைப் பலியிட்டு அத்தெய்வங்களை மகிழ்வித்தல் முதலிய இழிவான செய்கைகளை இன்றும் குறையாமல் நடைபெற்றுவரும் நம்நாட்டில் மக்களின் மனோநிலை எவ்வளவு கீழானநிலையிலிருகிறதென்பதை நாம் உணர வேண்டும். மணி, மந்திரம் முதலியவைகளை நாம் ஒழிக்க முயன்றாலும் உலகம் ஒழிக்கத் தயாரில்லை. ஆதலால் நமது நாட்டில் மக்களின் மனோபாவத்திற்குரிய பரிகார முறைகளை மோசம் போகாமல் ஜனங்கள், கல்வி அறவுள்ளவர்கள் மூலமாக அடையும்படி செய்ய வேண்டியது இன்றியமையாத்தாகும்.
பண்டைக்காலப் பரம்பரை மருத்துவர்களைப்போல் முறையாகக் கற்று, தக்க மருத்துவர்களிடத்தில் பழகி மருத்துவம் செய்வர்களை இக்காலத்தில் காண்பது மிகவும் அறிதாகிவிட்டது. ஆதலால் அரசாங்கத்தார் ஏற்படுத்தியுள்ள மருத்துப் பள்ளிக்கூடத்தில் மேல்நாட்டு நவீன சாஸ்திர முறையையே கற்றுக்கொடுக்கும் ஆங்கில மருத்துவப் பள்ளிக்கூடங்களைப்போல் நடத்தாமல், தமிழ் மருத்துவ நூல்களிலுள்ள நுண்பொருள்களையும், நோயணுகா விதிகளையும், பிராணாயாமம் என்னும் மூச்சுப் பழக்கத்தையும், மாணவர்களுக்குக் கற்பித்து உலகத்தில் மிகுந்துள்ள அகாலமரணம், கொள்ளைநோய்கள், மக்களுக்குப் பொதுவாக ஏற்பட்டுள்ள பலக்குறைவு முதலியவைகளை ஒழித்துத் துன்பத்தை நீக்கப்பெரிதும் கேட்டுக்கொள்கிறோம். – 1928 நவம்பர் மருத்துவன் இதழ் பக்கம் 29-34.
-பக்கம் 39 ஆனந்தம் பண்டிதர் சித்த மருத்துவரின் சமூக மருத்துவம். பதிப்பாசிரியர் கோ.இரகுபதி.-காலச்சுவடு பதிப்பகம்.வெளியீடு.
Thanks

Kutti Revathi

ரசவாத வேதை!!



































நேரம் கிடைக்கும்போது பண்டைய சீன இலக்கியங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது அதில் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கண்ணுற்றேன். தாழ் உலோகங்களைப் பொன்னாக வேதிக்கச் செய்யும் முறையைப் பற்றி கிபி.4-5 ஆம் நூற்றாண்டில் கொஹங் என்ற சீன ரசவாத வல்லுநர் யு-யங்-ஸாசூ என்ற நூலில் உரைத்துள்ளார். பாரத கண்டத்திலிருந்து சென்ற ஓர் இளவரசன் அப்போதைய சீனப் பேரரசருக்குப் பரிசாகக் கொடுப்பதற்காகத் தன்னுடன் பஞ்ச-சோ-ஷூய் என்ற திரவத்தை எடுத்துச் சென்றான் என்ற குறிப்பு உள்ளது. அதை விஷ-நீர் என்று பேச்சு வழக்கில் மொழிபெயர்த்துச் சொல்லலாம்.
இது இளமையை நீட்டிக்கும் கற்பம், தாழ் உலோகத்தை தங்கமாய் மாற்றவல்ல சக்தி படைத்தது. இந்த நீர்/திரவமானது மலைகளில், அங்குள்ள குழிப்பாறை கிணறுகளில் சேமிக்கப் பட்டிருப்பதையும் எடுத்துச் சொல்கிறான். அந்த விஷ மூலிகை திரவத்தில் மரம், தங்கம், இரும்பு, மாமிசம் என எதைப் போட்டாலும் அதைக் கரைத்துவிடும் ஆற்றல் பெற்றது என்று மன்னருக்கு விளக்குவதாய்க் குறிப்பு உள்ளது. அவன் அதைக் கற்பாறை (stone flask) குடுவையில் வைத்து எடுத்துச் சென்றான் என்றும், அதற்கு மாற்றாக முற்றிய பெரிய அளவு பாகற்காய்கூடு குடுவையிலும் சேமித்து வைக்கலாம் என்பது தெரிகிறது. அந்தத் திரவமானது மஞ்சள் சிவப்பு கருப்பு என மூன்று வண்ணங்களில் உள்ளதாகவும், ஒன்றோடொன்று கலக்கும்போது வெவ்வேறு நிறங்களில் திரவத் தைலங்கள் கிடைக்கும் என்று அந்த சீன நூல் சொல்கிறது.
இரும்பு, செம்பு போன்ற உலோகங்கள் மீது குறிப்பிட்ட விகிதாசார அளவில் இந்தத் திரவத்தைக் கொஞ்சம் பூசி, புடம் போட்டால் அது பத்தரை/ பன்னிரண்டு மாற்றுப் பொன்னாக மாறும். சீனர்கள் மெல்லிய சிவந்த நிற தங்கத்தை விரும்பியதாகவும், பாரதத்தில் அது மஞ்சள் உலோகமாக இருந்தாலே மதிப்பு மிக்கது என்றும் உரைக்கிறது. செம்பு:வெள்ளி:தங்கம் என்பதை 10:1:1 என்ற விழுக்காடு அளவில் அலோகமாக மாற்றியபின் மேற்கண்ட திரவத்தைப் பூசி வேதிக்கச் செய்யவேண்டும் என்பது ரசவாத முறை. இந்த ஆலோகத்தைப் புடம் போடும்போது செம்பு ஆக்ஸைடு உருவாகி அது அந்த மூலிகை ரசாயன திரவத்தில் பேதித்து இறுதியில் அதற்கு முதலில் சேர்த்த தங்கத்தின் நிறப்பூச்சு வந்திடும். இதில் ருதந்தி (எ) அழுகண்ணி மூலிகைதான் உலோகம் பேதிக்கும் நிகழ்வை எற்படுத்துகிறது.
நம் சித்த நூல்களில் உரைக்கப்படும் விஷயம்தான் இது என்றாலும் அது சீனத்திலும் கையாளப்பட்டது என்பது ஒத்துப் போகிறது. "வாதம் கெட்டால் மருந்துக்கு ஆகும்" என்பது பழமொழி. அதாவது ரசவாதம் முயன்று அதில் தங்கம் கிடைக்கவில்லை என்றால் அந்த வஸ்துக்கள் வீணாகாமல் கற்பமருந்துக்கு உபயோகப்படும் என்பதாகும்.
மேலே சொல்லப்பட்ட மலைப்பகுதிகள் சதுரகிரி. திரவம் உள்ள அந்தக் குழிப்பாறைகள்தான் காலாங்கிநாதர் சேமித்து வைத்த தைலக் கிணறு. இதை இன்றும் பிலாவடிக் கருப்புசாமி காவல் செய்வதாகப் போகர் சொல்லியுள்ளார். அந்த இளவரசன் நம் பல்லவ வம்சத்தவனாகவும் இருக்கலாம்.
- எஸ்.சந்திரசேகர்

சித்தர்களின் குரல்.

Monday, June 7, 2021

Which parts of the brain are activated by music?

When a person listens to music or practices music, their brain is activated in unique ways. For listeners, music activates the brain by setting off “fireworks”; quickly decoding each element of a piece (melody, rhythm, etc.) and combining it again to hear the song unified. But studies have shown that for music players, the activity in the brain when playing or practicing is much more intricate – equivalent to a full body workout.

Music has the power to motivate and soothe, no doubt about it. But how and why does it affect us? Why do certain songs trigger excitement or make us grin? Why do others bring relaxation, tears, or send shivers down our spines?

These are questions some scientists are asking in their laboratories. They are studying how our brains process music and learning why we respond in the ways we do. They are using new technologies to explore why music—whether it’s reggae, rap, rock, or Rachmaninoff—is celebrated in every human culture.

Exploring how our brains work is one of the most exciting areas of modern-day science. Magnetic resonance imaging (MRI) and other high-tech scanners let researchers see which parts of our brains tackle different tasks. With MRIs, a person is slid inside a tube-shaped tank. Then the machine finds where his or her brain “lights up” when undertaking certain activities, such as reading or doing math problems. The scan can also spot what parts of the brain go to work as the person sees pictures, hears sounds, or feels sensations.


How the brain processes music is an exciting area of this research. Researchers have discovered that the brain does not have one special place to analyze music. Instead, different parts of the brain handle different aspects of a song, like rhythm (the beat) and tone (pitch and loudness). And one of the most mind-blowing discoveries is that the parts of the brain that deal with emotions also fire up in response to music. In other words, music is wired directly into our feelings.

The Brain

Once the nerves deliver musical signals inside the skull, the brain goes to work. Researchers now realize music is not just processed in one part of the brain. Performing and listening to music gives big chunks of your brain a workout.

Use the labeled images in the slide player (below) to locate the parts of the brain highlighted in the text. Once you've found them, see if you can locate them on the unlabeled images!

Rhythm 

The belt and parabelt are located on the right side of the brain. They are mainly responsible for figuring out a song’s rhythm. When creating rhythm by tapping toes or beating a drum, the motor cortex and cerebellum get involved.

Pitch and Tone 

The recognition and understanding of pitch and tone are mainly handled by the auditory cortex. This part of the brain also does a lot of the work to analyze a song’s melody and harmony. Some research shows that the cerebellum and prefrontal cortex contribute, too.

Anticipation 

Research shows our brains create expectations when listening to a song. For example, it would figure out if a beat is steady or the melody makes sense. But we especially like it when songs surprise us with smart, quirky changes. This analysis takes place in the brain’s prefrontal cortex.

Memory 

People have an amazing ability to remember music. Chances are you can recognize your favorite song after hearing just a fragment. These memories are stored in the hippocampus.

Performance 

Musical acts like reading music, playing an instrument, and dancing fires up the cerebellummotor cortexsensory cortex, and visual cortex.

Emotion 

Music has the power to trigger feelings in listeners. Three main areas of the brain are responsible for these emotional responses: nucleus accumbensamygdala, and the cerebellum.

https://www.kennedy-center.org/

https://news.mit.edu/

Mhttps://www.creativesoulmusic.com/usic and feelings have always gone together. 

Wednesday, June 2, 2021

250 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் அதிசயிக்கத்தக்க விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில் உருவான ஒரு படைப்பு

 250 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின்

அதிசயிக்கத்தக்க விஞ்ஞானத் தொழில்
நுட்பத்தில் உருவான ஒரு படைப்பைத்தான்
படத்தில் பார்க்கிறீர்கள்.

ஒரு செப்புக் கிண்ணத்தில் பகவான் கிருஷ்ணனின் சிலை உள்ளது.அந்தக் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றினால்
முதலில் துளிநீர் கூட வெளியேறாத நிலையில் அந்தக் கிண்ணம் முழவதும்
நீரை நிரப்ப நீரின் மட்டம் கிருஷ்ணனின்
பாதங்களைத் தொட்டதும் கிண்ணத்தில் இருக்கும் நீர் கீழிருந்து வெளியேற
ஆரம்பிக்கிறது.
சொட்டு நீர்கூடக் கிண்ணத்தில் தங்காமல் முற்றிலும் வெளியேறிவிடுகிறது.இது என்ன தொழில் நுட்பம் என்று தெரியாமல் விழிக்கிறது உலகம்.

நாக லோகத்துடன் தொடர்புடைய கோயில்.



பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் நமது பூமி 7 லோகங்களை கொண்டது என்றார்கள். அந்த 7- லோகத்தில் நாகலோகமும் ஒன்று. இது எந்தளவுக்கு உண்மை என நாம் நினைத்தாலும் அறிவியல் வளர்ச்சியில் வளர்ந்துவிட்ட மனிதனுக்கு கூட சில விசயங்கள் புரிபடவில்லை (விமானங்கள் காணாமல் போகுதல் உட்பட) என்பது உண்மையாகும்.
நம் தமிழகத்தில் நாகத்திற்கு என பல கோயில்கள் இருந்தாலும் அதைவிட அதிக சக்தி வாய்ந்த கோயில், இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் நயினார் தீவில் அமைந்துள்ள "நாகபூசணி அம்மன்" கோயில் கிட்டத்தட்ட 14,000 வருங்கள் பழமையானது ஆகும்.
இந்த கோயில் நாகர்களால் கட்டப்பட்டது. நாகர்கள் என்பவர்கள் பண்டைய தமிழர்களின் ஒரு பிரிவினர்தான் என வரலாற்று ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோயில் பல அற்புத ரகசியங்களை உள்ளடக்கியது அணுவில் இருந்து தோன்றி பரிமாண வளர்ச்சி அடைந்த முதல் இனம் தமிழனம் என சான்றுகள் கூறுகின்றன. இந்த கோயில் அமையும்போது நாகலோகத்து நாகர்களும் கூட இருந்து தமிழர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார்களாம்.
எத்தனையோ ரகசியங்களையும், வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோயிலில் "நாகபூசணி அம்மனை வழிபட்டால் நாக தோசங்கள், கடுமையான "ராகு&கேது தோஷங்கள்" முற்றிலும் விலகும்.
தோல் வியாதிகள், விஷக்கடிகள், திருமணத்தடைகள், புத்திர தோஷங்கள் அனைத்தும் விலகி இன்பம் கிடைக்கும். ஆன்மிக அன்பர்கள் நேரமும், வாய்ப்பும் இருந்தால் அவசியம் "நயினார் தீவு நாக பூசணி அம்மனை" வணங்கிவிட்டு வாருங்கள் உங்கள் துன்பமெல்லாம் மறைந்து இன்பம் கிடைக்கும்...
கடவுள் நம்பிக்கையற்றவர்க்கும் கடவுள் நம்பிக்கை வரவைக்கும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் அதிசயங்கள் ஓர் சிறப்புப் பார்வை!
1. நாகங்கள் அதிகம் உள்ள இடத்தில் நாகப்பாம்பு தென்படுவது எல்லாம் அதிசயமா என்றால் வருடத்தில் 365 நாட்களில் திருவிழா நடைபெறப் போகும் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மற்றவர் கண்களில் இதுபோன்ற நாகங்கள் தென்படுவதில்லை ஏன்?
2. பரந்துபட்ட ஆலய வீதியிலோ ஏனைய பல இடங்களில் தென்படாத நாகங்கள் அம்மனின் புனித இடங்களான மூலஸ்தானம் மற்றும் இராஜ கோபுரம் தீர்த்தகேணி இதில் மட்டும் அடியவர்கள் கண்ணில் தெரிவது எப்படி.....?
3.கேணியில் நீர் குடிக்க வந்திருக்கும் என்ற சிலபேரின் கூற்றுப்படி பார்த்தால்
பாம்பு வருடத்தில் ஒரு தடவை மட்டுமா நீர் அருந்தும்
நீர் அருந்த நயினாதீவில் வேறு இடம் இல்லையா?
4. மனிதர்கள் நடமாடும் இடங்களில் பாம்பு தென்படாது என்பார்கள்
ஆலய வீதியில் எந்த எந்நேரமும் துப்பரவு பணியில் ஈடுபடுபவர்கள்
கண்ணில் தென்படாத நாகம்
முக்கியமான சில தினங்களில் தென்படுவதெப்படி?
5. தற்போதைய நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் கட்டிட அமைப்பின் படி பாம்புகள் உள் நுழைவது அவ்வளவு எளிதான விடயமல்ல
எவ்வாறு உள்ளே பாம்புகள் தென்படுகின்றன
6. நாகம் பூக்கொண்டு வந்து வழிபட்டதாக வரலாற்றை நினைவுபடுத்தும் பாம்பு வடிவில் இருக்கும் பாம்புசுத்திக்கல் இதுவரை எந்த கடல் சீற்றங்களுக்கோ அல்லது இயற்கை அனர்த்தங்களுக்கோ முற்றாக சேதமடையாமல் நிலைத்திருப்பது எப்படி....?????
7. பல சந்ததிகளுக்கே தெரியாத வன்னிமரத்தின் தோற்றம் இன்றுவரை நிலைத்திருப்பது எப்படி......?
8. மகோற்சவத்தில் 11ம் திருவிழாவான கருட சர்ப்பத்திருவிழாவில் பாம்புசுத்திக்கல் மற்றும் கருடக்கல்லுக்கு பூசையிடும் போது மட்டும் கருடன் அவ்விடத்தில் காட்சி கொடுத்து வட்டமிடுவது எப்படி....?
ஏனைய நாட்களில் அவை போன்ற காட்சி இடம் பெறுவதில்லை
ஏன்?
இவற்றுக்கு விடையில்லாத புதிரான புதிர் நயினாதீவு நாகபூசணி அம்மன் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.....!