Search This Blog

Monday, June 29, 2020

நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் உள்ள வித்யாசம்


நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் "பத்ததி" எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம் என்றால் நாடி என்பது ஜோதிட முறையில் உள்ள ஒரு யுக்தி [technique]. பத்ததி என்பது அடிப்படை கணிதம் முதல் பலன் சொல்லும் கட்டமைப்பு வரை என முழுமையான ஒரு வடிவம். எளிமையாக கூற வேண்டுமானால் பல சிறப்பான நாடி யுக்திகளை ஒருங்கே கொண்டது தான் பத்ததி. நாடிகளின் தோரணமே பத்ததி. நாடி ஜோதிட யுக்திகள் பாரத தேசத்தில் எண்ணில் அடங்காத அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பல ஜோதிட வல்லுனர்களை கொண்ட நாடாக இருந்ததால் சிறப்பான நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பத்ததிகளாக சிறந்து விளங்கின. பத்ததிகளாக தொகுக்கப்படாத நாடிகள் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டாலும் ஜோதிட உலகில் இருந்து மறைந்தன. நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடிப்பவர்கள் அந்த நாடி ஜோதிடத்தின் பெயரை தங்களுக்கு அடையாளப் படுத்துவதில்லை.

பல நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் யார் எனத் தெரியாது. தனது உபாசன தெய்வம், சப்த ரிஷிகள் என அவர்களின் பெயரை சூட்டுவது இந்த ஆணவமற்ற கண்டுபிடிப்பாளர்களின் வழக்கமாக இருந்தது. நாடி யுக்திகள் பல நுணுக்கங்களை கொண்டதாக உருவாகப்பட்டன. கோச்சாரத்தை கொண்டு பலன் சொல்வது, ராசி தன்மைகளை மட்டும் வைத்து பலன் சொல்வது, நட்சத்திர பிரிவுகளை பன்மடங்குகளாக பிரித்து பலன் சொல்வது என ஜோதிட பலன் கூறுவதற்கு ஏற்ப நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடி ஜோதிடத்தை நாடி நூல்களாக எழுதியவர்கள் கட்டுரை வடிவில் எழுதாமல் உரையாடல் வடிவில் எழுதினார்கள். இதனால் குரு இல்லாத நிலையிலும் எளிமையாக நாடி ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடிந்தது.

நாடி ஜோதிட நூல்களில் உள்ள உரையாடல்கள் குரு - சிஸ்யனுக்கும், சிவனுக்கும் - பார்வதிக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல்கள் ஆகும். குமார சாமியம் எனும் நூல் இதைப்போன்று ஜோதிடத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல். காலசக்கர நாடி எனும் நூல் அன்னப்பறவைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல் ஆகும். தான் எழுதினோம் என்ற அகந்தை இல்லாமல் இருக்க கடவுளின் பெயரிலோ, இயற்கையின் அமைப்பிலோ எழுதிய இந்த ஜோதிட வல்லுனர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நாடி ஜோதிட முறையில் எத்தனையோ ஜோதிட முறைகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த சில நாடி ஜோதிட முறைகளை உங்களுக்காக வரிசைப்படுத்துகிறேன்.
1. சப்த ரிஷி நாடி
2. சந்திரகலா நாடி
3. மீனா நாடி
4. பிருகு நாடி
5. சிவ நாடி
6. நந்தி நாடி
7. கால சக்கர நாடி
8. கணேச நாடி
9. சூரிய நாடி
10. சந்திர நாடி
11. அங்கார நாடி
12. புதன் நாடி
13. குரு நாடி
14. சுக்கிர நாடி
15. சனி நாடி.

மேலே குறிப்பிட்ட நாடிமுறைகள் சிறந்த நாடிஜோதிட முறைகளில் முக்கியமானவைகளாகும். சந்திர கலா நாடி, மீனா நாடி ஆகியவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதுதான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. சப்த ரிஷி நாடி என்பது கிரகங்கள் ஆட்சி ஆதிக்கத்தை பொறுத்து பலன் சொல்லும் முறையாகும். சந்திரகலா நாடி நட்சத்திரத்தை பல பகுப்புகளாக பிரித்து நுணுக்கமான முறைகளை கொண்டது. ஜோதிடராக உருவாவதற்கு ஒரு நாடி முறையை மட்டுமே படித்து செயல்படுத்துவது சிரமம். அனைத்து நாடி முறை யுக்திகளை கருவிகளாக பயன்படுத்தினால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக வரும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடி ஜோதிட முறைகளும் பிறப்பு ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு பலன் சொல்ல உருவாகப்பட்டவை. பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் சொல்லுவது கடினமான ஒன்று. அதற்காக உருவாக்கப்பட்டது காசிபநாடி.

சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் இயற்றியதாக சொல்லப்பட்டலும் இந்த முறை கிரக ஹோரைகளை கொண்டு பலன் சொல்லும் ப்ரசன்ன ஜோதிட முறையாகும். இந்த முறை தவிர பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற தோன்றிய முறை தான் கட்டை விரல் ரேகையை கொண்டு ஜாதகம் கண்டுபிடிக்கும் முறையாகும். ப்ரசன்ன முறையான இந்த முறை பதிலை பெற்று நாடி ஜோதிடம் என்றாலே இது மட்டும் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஜாதகம் பார்க்கும் நுணுக்கங்களை சிறப்பாக கற்று பயிற்சி செய்யும்பொழுது அந்த ஜோதிட ஆய்வாளரின் அறிவுக்கும், சீரிய சிந்தனைக்கும் விடையாக சில சூட்சுமங்கள் தோன்றுவதுண்டு. அந்த எளிய முறையை பல ஜாதகத்தில் ஆராய்ந்து பல கோண ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பான வடிவத்தை கொடுத்தால் அது நாடி என அழைக்கலாம். எனவே நீங்களும் ஆராய்து சிறந்த நாடியை உருவாக்கும் சாத்தியம் உண்டு.

நாடி ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கலாம். விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞான பூர்வமான நாடிகளுக்கு அடிப்படை விதிகள் கட்டமைப்புகள் என முறைபடுத்தப்பட்ட சட்ட திட்டம் உண்டு. இவ்வகையான நாடி முறைகளை கற்றவர் எவரும் குறுகிய காலத்தில் சிறப்பான பலன் கூறமுடியும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை என கூறப்படும் நாடி ஜோதிட முறைகள் பழங்காலம் முதல் அனுபவத்தால் வருவதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடி ஜோதிடரை தொடர்பு கொள்ளும்பொழுது அவர் சில நாடி நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். சந்திரனுக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் ஜாதகர் வீட்டிற்கு முன் ஒரு புளிய மரம் இருக்கும் என்றார். கிருஷ்ணமூர்த்தி முறை போன்ற விஞ்ஞான ஜோதிடத்தை கற்ற எனக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்திரனுக்கு நான்கில் செவ்வாய், சனி என்றால் இந்த அமைப்பு 2 1/4 நாளுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் வீட்டிற்கு முன்பு புளியமரம் இருக்குமா? என ஒரு சந்தேகம் ஏற்பட்டது. புளியமரம் இருப்பவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை சில ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்தேன். இது போல அந்த நாடி ஜோதிடர், வீட்டின் அமைப்பு வீட்டிற்கு முன்பு உள்ள கட்டடங்களின் லட்சணம் என பலவற்றை கூறும் நாடி விதிகளை பகிர்ந்தாலும் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக அமையவில்லை. அனுபவ ரீதியாக வருவதால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இந்த அறிவார்ந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பயன்கூற முடியும் அளவில் உள்ள எந்த நாடி விதிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.

நமது நோக்கம் துல்லியமாக பலன் கூறுவது மற்றும் சிறந்த ஜோதிட செயல்களை செய்வது என்னும் பொழுது நாடிஜோதிட யுக்திகளை அறிவியலா, அறிவியலுக்கு அப்பாற்பட்டதா என ஆராய்வது சிறப்பானது அல்ல. நாடி முறைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் உயர்வடைந்தால் மட்டுமே இதுபோல ஆய்வு செய்ய தகுதி உடையவர்களாகிறோம். ஆணவமும் எதிர்பும் அற்ற நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நாடிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்ய நாமும் அந்த தகுதியை பெற வேண்டும். நாடியை ஆய்வு செய்யும் தகுதி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? திரு மூலர் சொல்லுவதை கேளுங்கள்.

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்து இருந்தாரே

சித்தர்களின் குரல்

பாதாள லிங்கம் திருவண்ணாமலையில்

ரமணர் இளம் வயதில் தியானத்தில் இருந்த பாதாள லிங்கம் திருவண்ணாமலையில்......

Doctrine of Ultra Vires (வலுவிகழ்தல் கோட்பாடு )


The object clause of the memorandum of the company contains the object for which the company is formed. An act of the company must not be beyond the object clause otherwise it will be ultra vires and therefore, void and cannot be ratified even if all the member wish to ratify. This is called the doctrine of ultra vires. The expression “ultra vires” consists of two words: ‘ultra’ and ‘vires’. ‘Ultra’ means beyond and ‘Vires’ means powers. Thus, the expression ultra vires means an act beyond the powers. Here the expression ultra vires is used to indicate an act of the company, which is beyond the powers conferred on the company by the objects clause of its memorandum. An ultra vires act is void and cannot be ratified even if all the directors wish to ratify it. Sometimes the expression ultra vires is used to describe the situation when the directors of a company have exceeded the powers delegated to them. Where accompany exceeds its power as conferred on it by the objects clause of its memorandum, it’s not bound by it because it lacks legal capacity to incur responsibility for the action, but when the directors of a company have exceeded the powers delegated to them. This use must be avoided for it is apt to cause confusion between two entirely distinct legal principles. Consequently, here are restricting the meaning of ultra vires objects clause of the company’s memorandum.

வலுவிகழ்தல் கோட்பாடானது நிலைமுறை அதிகார வரம்பு மீறல், நடைமுறை அதிகார வரம்பு மீறல் என வகைப்படுத்தப்படும்.

இதனைத்தவிர சரியான விடயத்தை பொருத்தமான வழியில் பிழையான நோக்கத்திற்காக செய்தலும் வலுவிகழ்தலாகவே கருதப்படும். நியதிச் சட்டத்தின் நோக்கம், அதன் எல்லையை கருதாமல் எடுக்கப்படும் தீர்மானங்கள் முதலாவது வகையாகும்.


இங்கு நியதிச்சட்ட ஏற்பாடுகளின் படி நிர்வாக செயல் செய்யப்பட்டதா என பார்க்கப்படுமே தவிர அச்சட்டத்தை இயற்றிய அதிகார அமைப்பின் அதிகார தன்மை பற்றி கவனத்தில் எடுக்காது.


இந்திய வழக்கொன்றில் மாநில அரசானது தேயிலை பயிரிடுவதற்காக நிலமொன்றை மாற்றிக்கொடுக்க மறுத்தமை நியதிச்சட்டத்தின் நோக்கத்தை அடைவதற்காக செய்யப்படாததால் வலுவிகழ்தல் என கூறப்பட்டது.

அதிகாரசபையொன்று சட்டத்தால் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படாத துணி சலவை தொடர்பான சேவையை வழங்கியமை வலுவிகழ்தலாகும். பொலீஸ்மா அதிபர் தனக்கு அதிகாரம் வழங்கப்படாத இடமாற்றம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்தமை வரம்பு மீறலாகும். அனிஸ்மினிக் வழக்குக்கு முன்னர் நியாயாதிக்க எல்லைக்குள் செய்யப்பட்ட தவறுகள் வலுவிகழ்தலாக கருதப்படவில்லை.

இது பதிவேட்டின் முகத்தோற்றத்திலுள்ள தவறுகள் எனும் கோட்பாட்டின்படி (Error of Law on the Face of the Record) கையாளப்பட்டது.


இதன்பின்னர் வந்த வழக்குகளில் அனிஸ்மினிக் விதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்க்கில் நீதியரசர் றீட், கெட்ட நோக்கம், இயற்கை நீதி மீறல், நல்ல நோக்கமெனினும் ஏற்பாடுகளை தவறாக பொருள்கோடல் செய்தல், கட்டாயப்படுத்தப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுக்காமை போன்ற காரணங்களால் வலுவிகழ்தல் ஏற்படுமென கூறினார்.

இதன்படி நியாய சபைகளின் நியாயாதிக்கற்திற்குள் இடம்பெறும்; தவறுகள் வலுவிகழ்தலாகும். கீழ் நிலை நீதி மன்றங்களின் நிலை தொடர்பாக வழக்குகளில் முரண் நிலை காணப்படுகின்றது.

ஆனால் உயர்நிலை நீதி மன்றங்களின் நியாயாதிக்கற்திற்குள் விடப்படும் தவறுகள் மீளாய்வு மூலம் சீர்செய்ய முடியாது. நியதிச்சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே மேன்முறையீடு செய்யமுடியும்.

கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென நியதிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போது அதனை கவனத்தில் எடுக்காத நிலையில் நடைமுறை அதிகார வரம்பு மீறல் நிகழும்.


கல்வி ஆணைக்குழுவால் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட அறிக்கையை கருத்திலெடுக்காமல் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தீர்மானமானது வரம்பு மீறலாகும். சம்பள உயர்வுக்காக செய்யப்படும் மதிப்பீட்டு முறைமை சரியான செயன்முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படாமையால் வெற்றாக்கப்பட்டது.


கையளிப்பு செய்யப்பட்ட சட்டவாக்கம் வலுவிகழ்ந்ததா என தீர்மானிக்க நீதிமன்றமானது சட்டவாக்கத்தின் பின்னணி, பாராளுமன்ற மன எண்ணம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செழுத்தும். கையளிப்பு சட்டவாக்கமொன்றின் வலிதுடைமை தொடர்பில் முடிவெடுக்க சில சட்டக் கொள்கைகளை விருத்தி செய்துள்ளது.

வரிவிதிப்பு, நீதிமன்றத்ததை நாடுவதற்கான வழிவகைகள், மீள் கையளிப்பு, பின்னோக்கியாழும் சட்டம், நிச்சயத்தன்மை, நியாயபூர்வ தன்மை, முரண்பாடு, முறையற்ற நோக்கம் போன்ற கொள்கைகளே அவையாகும்.


நிர்வாகச் சட்டத்தின் அடுத்த முக்கிய கோட்பாடாக கருதப்படுவது இயற்கை நீதிக் கோட்பாடாகும். இது நடைமுறை அதிகார வரம்பு மீறலுடன் தொடர்புபட்டது. இருபுறம் கேட்டல் விதி, பக்கச்சார்புக்கு எதிரான விதி எனும் இரு முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது.

https://tamilbreakingnews.com/

https://www.lawteacher.net/

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது.....

(1) மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை இங்கே படித்துப் பாருங்கள் , கண்ணீர் பெருகும்....

(2) அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

(3) அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

(4) பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

(5) பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

(6) பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

(7) பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

(8) உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஜீவ இம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடே உயர்ந்த வழிபாடாகும்.

(9) மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

(10) எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

(11) ஆனால், இந்தக் காலத்தில் அன்னதானம் பண்ணினால் கூட வாங்குவதற்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. பெரிய கோவில்களில் எல்லாம் அன்னதான திட்டம் வந்துவிட்டது. திருவண்ணாமலையில் உணவு ஏதாவது கொடுத்தால் காசு இருந்தால் கொடுக்கலாமே என்று கேட்கும் சாதுக்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு அவர்களைப் பொறுத்தவரை உணவுக்கு பஞ்சமில்லை.

(12) அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும். மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

(13) நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது - இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் - அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.

(14) நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் - கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே.

- சித்தர்களின் குரல் shiva shangar

Sunday, June 28, 2020

கொடிய நோய்கள் நீக்கும் அகத்தியர் பெருமான் நாடியில் உரைத்த இந்த அற்புத பாடல்...

கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது அகத்தியர் பெருமான் நாடியில் உரைத்த இந்த அற்புத பாடல்...

வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், க
ண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:

"பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே."பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது......

நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி, நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.

என் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு இந்த பிரதோஷ வழிபாடு.....

(இலங்கையில் எங்கள் சித்தர்களின் குரல் அன்பர்களினால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வாழைச்சேனை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வர வைத்திய நாத சுவாமி தேவஸ்தானத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக உரிய முறையில் எங்களால் நடத்தப்படுகிறது..... அனைவரும் வருக....)

- சித்தர்களின் குரல் shiva shangar
 

வாஸ்து சாத்திரம்

வாஸ்து சாத்திரம் [ எத்தனை வசதியாக அரண்மனை அமைத்தாலும் -வாஸ்து பிழைத்தால் அங்கு வாழ முடியாது- ]

முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.

இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அளிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.
“வாஸ்து” என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது  கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.


6 அடி- நன்மை ஏற்படும்
7 அடி- தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 அடி - முன்னேற்றங்கள், தெய்வ அருள் உண்டு.
9 அடி- துன்பம் துயரம்
10 அடி - யோகம் உண்டு.
11 அடி - செல்வ நிலை உயரும்.
12 அடி- துயரம் புத்திரசோகம்
13 அடி- துன்பம் நோயினால் அவதி
14 அடி- பொருள் இழப்பு, கவலை
15 அடி- துன்பம் துயரம்
16 அடி - செல்வாக்கு உண்டாகும்
17 அடி - நிறைந்த வருமானம்
18 அடி- வீடு அழியும்
19 அடி- வறுமை உண்டு
20 அடி - சிறப்பான லாபம்.
21 அடி - பொன்னும பொருளும் சேரும்.
22 அடி - மனதில் தைரிய உணர்வு
23 அடி- கெடுதி ஏற்படும்
24 அடி- வரவும் செலவும் சமம்
25 அடி- மனைவிக்கு கண்டம்
26 அடி - பொன்னும் பொருளும் சேரும்.
27 அடி - பதவிகள் தேடிவரும்.
28 அடி - எளிதாக வெற்றி கிட்டும்.
29 அடி - மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
30 அடி - சிறப்பாக இருக்கும்.
31 அடி - காரியசித்தி உண்டு.
32 அடி - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 அடி- வாழ்க்கையின் நிலை உயரும்
34 அடி- இடமாற்றம் ஏற்படும்
35 அடி- திருமகள் அருள்
36 அடி- சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 அடி- செய்தொழில் முன்னேற்றம்
38 அடி- வறுமை, துன்பம்
39 அடி- நல்ல வாழ்வு
40 அடி- விரோதிகள் வலிமை பெறுவர்
41 அடி- செல்வம் பெருகும்
42 அடி- அஷ்டலட்சுமி வாசம்
43 அடி- நன்மை ஏற்படாது
44 அடி- பெரிய இழப்பு உண்டாகும்
45 அடி- மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 அடி- வறுமை, நோய்
47 அடி- பொருள் இழப்பு
48 அடி- தீயினால் ஆபத்து
49 அடி- தவறுகள், இழப்புகள்
50 அடி- நன்மை உண்டாகாது
51 அடி- வீண் தொல்லைகள்
52 அடி- பொருள் அபிவிருத்தி
53 அடி- பெண்களால் பொருள் நட்டம்
54 அடி- அரசின் சீற்றம்
55 அடி- உறவினர் விரோதம்
56 அடி- குடும்ப விருத்தி
57 அடி- சந்ததி நாசம்
58 அடி- கண்டம் ஏற்படும்
59 அடி- கவலைகள் வறுமை
60 அடி- செய்தொழில் அபிவிருத்தி

வீட்டின் பகுதிகள்
-------------------------------

ஒரு வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையை பொருத்தும், அந்த வீட்டின் பலன்கள் அமைகிறது என வாஸ்து சாஸ்த்திரம் விவரிக்கிறது.

  • இரண்டு கதவுகள் : நல்ல பலன்கள் கிட்டும்
  • மூன்று கதவுகள் : எதிரிகள் அதிகமாவார்கள்.
  • நான்கு கதவுகள் : நீண்ட ஆயுள் கிட்டும்.
  • ஐந்து கதவுகள் : அவ்வபோது நோய்களால் வேண்டிவரும்.
  • ஆறு கதவுகள் : புத்திர பாக்கியம் உண்டு.
  • ஏழு கதவுகள் : ஆபத்துக்கள் நேரிடலாம்.
  • எட்டு கதவுகள் : செல்வம் குவியும்.
  • ஒன்பது கதவுகள் ; நோய்கள் வரும் ஆபத்து உண்டு
  • பத்து கதவுகள் : பணமும் பொருளும் வீடு தேடி கவரும்
  • குறிப்பு: இதில், வீட்டின் சுற்று சுவரி உள்ள கதவுகள் பொருந்தாது.

    கிழக்கு - குடிநீர் ஆதாரம்
    தென் கிழக்கு .. சமையலறை
    தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
    மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை
    வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை
    வடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்து அமைக்கவும்.
    வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

    அலுவலக அறை வடமேற்கு திசை, புத்தக அறை தென்மேற்குத் திசை
    சமையல் அறை தென் கிழக்குத் திசை, உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
    படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள், பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
    குளியல் அறை கிழக்கு திசை, சேமிப்பு அறை வடக்கு திசை, கழிவறை வட மேற்கு திசை.

    எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.

    கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
    http://www.astrospider.in/

    No photo description available.

    Saturday, June 27, 2020

    மலர்தல்



    நிலாவென
    நான்
    ஒளிர்வதாகக் கூறுகிறாய்
    சூரியனாய் இருந்து கொண்டு

    என்
    நினைவின் அடுக்குகளில்
    எத்தனையோ கதைகள்
    பொதிந்துள்ளன

    நிலா இரவுகள்
    அன்று இருந்தது போல்
    இல்லை

    பால்யம்
    கடந்த இந்த இரவுகளில்

    பாட்டிகளின்
    மரபில்
    வந்து போன இளவரசனாய்

    ஏழு குதிரைகளில்
    நீ
    வருகையில்

    சூர்யகாந்தியாய்
    மலர்கிறேன்

    நிலா ஒளிரும் பொழுதிலும் .

    Sakthi Jothi

    Monday, June 22, 2020

    மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வேர்!



    உங்க வீட்டை வீட்டு மகாலட்சுமி வெளியே செல்லாமல் இருக்க, இந்த வேரை தண்ணீரில் போட்டு வைத்தாலே போதும்.!!*_

    ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதற்காக நாம் பல பூஜைகளை செய்து வருகின்றோம். பல குறிப்புகளை பின்பற்றுகின்றோம். பணவரவிற்கு எத்தனையோ தந்திர, மந்திர வழிகளை எல்லாம் செய்கின்றோம். இருந்தும் சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிப்பதில்லை. எல்லோருக்கும் பலன் அளிக்கும் படியான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

    இயற்கையான நல்ல வாசம் தரக்கூடிய ஒரு வேர், இந்த வேர். நம் வீட்டில் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான். வாசம் நிறைந்த இடம் என்றாலே அந்த இடத்தில் கட்டாயம் மகாலட்சுமி இருப்பாள் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த வேரை முறையாக எப்படி பயன்படுத்தினால், நம் வீட்டில் சுபிட்சம் நிலைத்து நிற்கும் என்பதை பற்றியும், மகாலட்சுமியின் அம்சம் கொண்ட அந்த வேர் எது? என்பதைப் பற்றியும், அந்த வேரை நல்ல முறையில் நம் வீட்டில் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் அந்த வேர், வெட்டி வேர். இந்த வேர், சாதாரணமாக எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி எப்போதுமே வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சை பழத்தையும் போட்டு, இந்த வேரையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அந்த வாசத்திற்கு நம்முடைய வீடு மிகவும் மங்களகரமாக இருக்கும். இந்த வாசத்தில் தான் மகா லட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். எலுமிச்சை பழத்தையும் மாற்ற வேண்டும். தண்ணீரில் இருக்கும் வேர் கெட்டுப் போக வாய்ப்பில்லை. மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

    இதே போல் எந்த ஒரு கெட்ட சக்தியும், இந்த வேரிடம் நெருங்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. சிறிதளவு வெட்டிவேரை எடுத்து, ஒரு சிறிய மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் கட்டி வைத்தாலே போதும். உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாமல் இருக்கும்.

    இந்த வெட்டிவேரை சிறிதளவு எடுத்து நன்றாக காயவைத்து அதன் பின்பு மிக்ஸியில் நன்றாக பொடி செய்து, சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிதளவு வேப்பங் கொழுந்தையும், நன்றாக உலர வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன்பின்பு, இந்த தூளை நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியோடு கலந்து விடுங்கள். தினந்தோறும் அந்த விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டு, வெளியே செல்லும் பட்சத்தில் நீங்கள் செல்லும் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அது வெற்றியில் முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதோடு மட்டுமல்லாமல் கண் திருஷ்டியாக இருந்தாலும், எந்த ஒரு கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது என்பதும் உண்மை.

    வெட்டிவேரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்து அதன் பின்பு, அந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும், எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக வெட்டிவேரை சரியான முறையில் பயன்படுத்தும் பட்சத்தில், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை...

    - சித்தர்களின் குரல் shiva shangar

    https://m.dailyhunt.in/

    Thursday, June 18, 2020

    Pranic Healing can cure Cancer

    "A time will come when science will make tremendous advances, not because of better instruments for discovering things, but because a few people will have at their command great spiritual powers, which at the present are seldom used. Within a few centuries, the art of spiritual healing will be increasingly developed and universally used."
    Astronomer, Man, Mind, and the Universe.
    -Gustaf Stromberg, Mt. Wilson


    Pranic Healing is a simple and efficient system of removing diseased energy and providing new regenerated energy, facilitating the patient's self-healing mechanism. Master Choa Kok Sui, its discoverer, observed that the human body is surrounded by a health aura, which in the case of deceased persons was depleted, ragged, unclean or unequally distributed around the physical body. This energy body, also known as the health aura, is directly connected to the physical body.
    It is the physical body's insulation. It is only when it is in disarray, due to a multitude of reasons, that disease enters the physical body. Hence, Master Choa Kok Sui's system of Pranic Healing enables the reconstruction of the energy body for the betterment of the physical body. So that Prana, life, can flow in the human body without making room for disease.
    Energy can be transformed



    Science explains to us that energy can neither be created nor destroyed but can be transformed from one form to another. Think about what this could mean to you? If you can understand how to work with energy, it can help transform all the negative results in your life into positive results – sickness into well-being, lack into abundance, stress into the peace of mind and failing relationships into healthy, strong bonds.  


    So since Pranic Healing uses energy, there is a lot more to it than just the healing part. It not only makes you aware of the aura around the human body – the ‘chakras’ (energy centres) and their effects on our health but also teaches us how to feel or scan the aura and determine which parts of the chakras may be affected. By learning about energy, we become more conscious about its ubiquitous presence, be it in people, buildings or even objects.

    The Essence of Prana

    What is the fundamental difference between a living and a dead person? Both people have a body, a set of organs and billions of cells. What differentiates them is an ‘unseen’ force that gives one person the awareness and consciousness to experience living while causing the other person or to experience a permanent black-out.  

    Call it Breath of Life or Vitality of the Soul, Prana is the life-sustaining force found within the body of every living thing. Without Prana, we cease to exist as “living beings”.  

    Grand Master Choa Kok Sui explains: “Life Energy or Prana is all around us. It is pervasive; we are actually in an ocean of Life Energy”

    Principles Behind Pranic Science

    The fundamental principles of Pranic Healing are

    • Principle of Self- Recovery – The innate ability of every living being to heal itself
    • Principle of Life Force – Healing process can be accelerated by increasing the pranic life force of the individual

    How does it work?

    Pranic Healing corrects imbalances in the body’s energy field and transfers life force to the patient. This life force can also be characterized as universal energy; it is not the healer’s energy. Trained Pranic Healers access and transmit universal energy to the patient using specific frequencies and techniques for specific diseases and conditions
    Pranic Healing is done without touching.

    Pranic Healing is a three-step process that substantially accelerates the body’s innate ability to heal at all levels: physical, emotional, mental and spiritual.


    • Checking - Scanning for energy abnormalities
    • Cleansing - Removing energy abnormalities: used to remove dirty or diseased energy in the body and to eradicate blockages in the energy channels
    • Replenishing and revitalizing with life force- Energizing: the transference of fresh ‘prana’ or life energy to the body and is applied once the cleansing process is completed. To give an example, when we cut our fingers or bruise our legs, our body automatically takes the necessary steps to prevent blood loss and repair the damaged tissues. Our bodies are constantly exposed to a variety of toxins, chemicals and pollutants from the environments we live in but our ‘in-built’ defence system fights of all these germs and protects us.   When we are healthy and happy, we feel all charged up and are full of energy. When we are sick or upset, we feel down or drained out. In other words, a healthy body has an abundance of prana while a sick or diseased body is low on prana. The healing process of an individual is accelerated by increasing the prana life force in them which is readily available from the sun, air and earth.

    Some Benefits of Pranic Healing


    • In cases of fever, parents can bring down the temperature of their children in just a few hours
    • Coughs and colds can usually be alleviated in a day
    • Major illnesses such as eye, liver, kidney, and heart problems can be partially or substantially relieved in a few sessions
    • Improved health and increased stamina
    • Inner peace and happiness
    • Better memory and concentration
    • Rapid spiritual growth
    • Reduced stress
    • Better interpersonal skills
    • Greater self-esteem
    • Attain the ability to attract good luck and become more prosperous

    https://www.worldpranichealing.com/

    Research

    Objectives: The objective was to explore the effect of a Japanese energy healing method known as Johrei on the viability and proliferation of cultured human cancer cells in vitro.
    Design: A randomly selected 96-well plate or a culture dish of various types of human cancer cell lines in culture were exposed to Johrei treatment. For comparison purpose, an equal number of untreated or volunteer-treated cultures were chosen as the control group. Johrei treatment was repeatedly performed at appropriate time intervals over the course of the experiments. Cell viability was examined by a colourimetric assay with a Cell Counting kit. Morphological changes were analyzed by phase-contrast and time-lapse microscopy. Cell proliferation and early and late stages of cell death were also determined with the use of a bromodeoxyuridine (BrdU) cell proliferation assay kit and an Annexin V-FLUOS Staining kit, respectively.
    Outcome measures: Quantitative data were presented as means±standard deviation. The outcome measures were the differences in viable cell numbers that remained under healing practice versus control conditions, and the statistical significance of differences in their mean values was assessed.
    Results: The viability loss of cultured human cancer cells in the Johrei group was significantly higher than that of either of the control groups, despite the fact that the responsiveness to Johrei varied with different cancer cell types. The proliferation rate of gastric cancer cells exposed to Johrei treatments for 72 hours was more significantly decreased compared with that of the untreated cells, whereas the extent of dying and/or dead cells in the Johrei group was more profound than that of the untreated cells.
    Conclusions: These results provide evidence that Johrei treatment induces the viability loss of various cancer cells in vitro, mainly due to the increased cell death and the decreased proliferation.
    A natural energy healing technique called Reiki (Japanese Healing Method) and Mexican healing (ancient Egyptian healing method) used to heal stage 4 liver cancer patient
    The efforts put in my healer was just 36 hours to heal the patient and destroy the cancer cells. The total duration of the healing was 2 months.
    I will be discussing the below topics
    • Challenges faced during the healing
    • How energy healing works to heal cancer naturally
    • Healing Methods used to heal the cancer
    • Products/Procedures used to heal the cancer
    • Recovery of the patient during the healing period.

    Biography:

    Vivek Kamath is a software engineer by profession worked as a freelancer in many international banks across the globe. Vivek has executed many large International banking Information Technology projects in UK, USA, GERMANY, SINGAPORE, BAHRAIN, AUSTRALIA, JAPAN AND INDIA.
    Vivek is a Reiki Master cum practitioner from the last 8 years and also alternative therapy experts in Mexican healing, Melchizedek healing, crystal healing and past life regression therapy.
    Vivek Kamath has healed 3 Stage 4 cancer (throat, liver and breast cancer) till date. He has also healed Diabetes TYPE1, TYPE2, TYPE 3/LADA, removed heart blocks, kidney diseases, glaucoma, removed womb cysts, kidney stones, sciatica pain healing, lumbar l5 pain healing, rheumatoid arthritis, obesity disorders, knee transplant pain, migraine, sinusitis, constipation, depression, schizophrenia. Phobia, addiction cases, learning disability in kids, thyroid problems, kidney dialysis, irregular periods in women, asthma, cholesterol, high and low blood pressure, erectile dysfunction in men.
    https://magnusconferences.com/

    Sunday, June 7, 2020

    The zoonotic origins of pandemics

    The disease emergence model above provides a construct for how pathogens emerge from animals and illustrates the continuum of animal pathogen infectivity in the human population. However, relatively little is known about the factors that mediate transition from one stage to the next as a pathogen of animal origin scales the stages of this paradigm Figure1, ever increasing its ability to reside in the human population and be transmitted throughout it. What is known, however, is that the interface between humans and animals is of paramount importance in the process. As we increase our interactions with animals through hunting, the trading of animal foods, animal husbandry practices, wet markets, and the domestication of animals or exotic pets, the probability of cross-species transmission dramatically increases.

    Zoonotic disease emergence model outlining the 5 stages of pathogen emergence from animals to humans.