Search This Blog

Friday, January 29, 2021

ஆணின் ஐவகைக் குற்றவுணர்வு

உயிரழுத்தம் கூடிக்கொண்டது
ஒருத்தி என்ற சொல்லை
ஐந்திணை மண்ணோடு பிசைந்து பார்க்கிறேன்
ஐவகை குற்றவுணர்வுகளோடு
ஆண் வர்க்கம் பெருமையுடன்
உருக்கொள்கிறது
ஏகாதிபத்தியத்தை பெண் யானை மீது
விட்டு விரட்டி தன் கூட்டத்தையே அழித்து
வனத்தில் சமத்துவத்தை சீர்குலைக்கும்
ஆண் யானை
கருணையோ கண்ணுக்கு எட்டும் நிம்மதி
அதனை
சிலம்பன்களின் கூட்டில் மணிக்குயில்
உயிர்கொள்ளும் போதும்
காட்டுப் பூனைகள் சிச்சிலம்பு ஒலியில்
வால் முறுக்கி ஆடும் போதும்
பெருகுவதைக் கண்டிருக்கிறேன்
அன்பே ஆக்கும் கலை
காமத்தில் கலைவது கலையாகாது
காமத்தின் சூழ்ச்சியே
எங்கும் வியாபித்திருக்கிறது
காமத்தால் அடிமையாக்கப்பட்டதே தாயகம் ( தாய் அகமும்)
தாயின் காமத்தின் மீது பூசப்பட்டதே வர்ணம்
காமத்தால் அனுசரிக்கப்பட்டதே தேசம்
காமத்தால் துண்டாடப்படுவதே வர்க்கம்
காமத்தால் வரையப்பட்டதே எல்லைக் கோடுகள்
காமத்தால் வீழ்த்தப்படுவதே வரலாறு
காமமே அரசாட்சியின் மனக்கண்ணாடி
காமத்தால் ஒடுக்கப்பட்டதே கிராமங்கள்
காமத்தால் பிரிக்கப்பட்டதே நாடுகள்
காமத்தால் விரிவாக்கப்பட்டதே சாதிகள்
காமம் குற்றவுணர்வுகளின் குரூரத் தகப்பன்
காமத்தின் படிக்கட்டுகளே ஞானத்திற்கான வழி
காமம் கண்ணின் விதி
மனதின் எதிர்நிலை
வீழ்த்தமுடியாத சுயநிலை
உறவுகளின் எமநாவு
நீதிக்கு நேர்நஞ்சு
பெண்ணிடம் வலுவாய் வலிந்து  திணிக்கப்பட்ட முடிவில்லா போர்
ஆணின் ஐவகைக் குற்றவுணர்வு
- Composed by Thenmozhi Das

டொமினிக் ஜீவா எனும் பேராளுமை

டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.

இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் டொமினிக் என்பதாகும். பெற்றோர்கள் சிகை அலங்கார தொழிலாளர் பரம்பரையை சேர்ந்தவர்களாவர். அதன் காரணமாக இவர் பல சமூக குறைபாடுகளை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இளமைப் பருவத்தில் இவர் யாழ். சென். மேரிஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் இவரைப் பார்த்து சாதியின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் மனம் நொந்து ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சாலியானார்.

அவ்வாறு வெளியேறியவர் தான் இன்று உலக அரங்கில் அனைவராலும் அங்கீகரிக்கப்படும் ஒரு இலக்கிய கர்த்தாவாக மாறியிருந்தார்



"ஈழத்து இலக்கிய உலகின் எழுத்துப் போராளியாய் இறுதி மூச்சு வரை சமரசமில்லா முற்போக்கு முகம் கொண்ட மல்லிகை மன்னனாய் எல்லோராலும் கொண்டாடப் பட்ட மல்லிகை ஜீவா தன் வாழ்வுப் பயணத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி துயரத்தை சுமந்து நிற்கிறது.
யாருக்கும் தலை வணங்கா எங்கும் தன் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்த சமத்துவ சகோதரன் அவர்.
1977ஆம் ஆண்டு யாழ் பல்கலைக் கழகத்தில் ஒரு புத்தகப் பையோடு சந்தித்த அதே ஜீவாவை நான் அதே கோலத்திலெயே கடைசியாகவும் சந்தித்தேன் தன்னிலை மாறா கொள்கையாளன் 
ஈழத்து இலக்கிய உலகம் இனி இவர் போல் ஒருவரை காண முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே சரியான பதில்.ஓர்மம் மிக்க படைப்பாளி.
யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு முறைப்படி இலக்கிய கலாநிதி பட்டம் கொடுத்திருக்க வேண்டும் அப்படி இருக்க பேருக்கு ஏதோ ஒரு உப்புச் சப்பு இல்லாத பட்டத்தை கொடுக்கப்  பரிந்துரைத்த போது அதனை மிகத் துணிச்சலுடன் நிராகரித்து தன் மதிப்பை மேலும் உயர்த்திக் கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்த சமூக நீதிக் குரலாய் ஒலித்த சோசலிச யதார்த்தவாதி ஜீவா.
ஜீவா எனும் பெயரை ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்திலிருந்து நீக்கிப் பார்த்தால் அது வறுமைப் பட்டுப் போகும் .
மல்லிகை அவர் நடமாடும் வரை நடமாடிய இலக்கியத் தொடர் அது ஒரு முற்போக்கு சுடர் அணையாத சுடர் வருங்காலம் முழுவதுக்குமான வரலாறாய் நம்முள்.
என்றும் வாழும் ஜீவா
என் செவ்வணக்கத்துடனான அஞ்சலிகள்" Balasingam Sugumar

Tuesday, January 26, 2021

The neural correlates of empathy

Empathy is characterized by the ability to understand and share an emotional experience with another person and is closely tied to compassion and concern for others. Consequently, this increased emotional awareness and sensitivity may also be related to increased anxiety.
The link is to a commentary on research, which identified the neural circuits involved when mice feel another mouse's pain (empathize with them).  This will allow us to identify variations in the noted circuitry that result in lower or higher empathy.  In the future, it will also allow us to identify the developmental genes that create these neural correlates of empathy.  I judge the chances that these same neural correlates of empathy are found in humans as very high.
Finding those genes in mice will allow us to use simple genetic screens to determine if people with low empathy have learned that less-than-socially-desired behavior or if they have inherited a suite of genes that makes them more susceptible to expressing low empathy.  Perhaps those "susceptibility" genes have "crossed paths" with a particular environmental cue that essentially triggered them to reframe these neural correlates of empathy.

https://science.sciencemag.org/content/371/6525/122?fbclid=IwAR04tq_R92sbtLjgWdTbY76P5rEOSvCLOmfHSsp-QIk41ZJ4Jxp9W4oXies https://www.frontiersin.org/articles/10.3389/fnhum.2019.00094/full

Thursday, January 21, 2021

மனம் என்பது மாஸ்டர் அல்ல (Kutti Revathi)


மனித உளவியல் எப்பொழுதுமே எனக்குப் பிடித்தமான ஒரு துறை. முறையாகப் பயில்வதுடன் சமூகக்களத்திலும் அதை இணைத்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. முறையாகப் பயில்வதற்கு இந்த உலகடங்கல் காலம் ஒத்துழைத்தது, வாய்ப்பும் நல்கியது.
என் உளவியல் ஆசிரியரை, மாஸ்டர் என்று தான் குறிப்பிடப்போகிறேன்.  நீண்ட வகுப்புகள், சுயப்பரிசோதனை முயற்சிகள், கேள்வி - பதில் முறைகள், நாடக முறைகள் என்று  அசத்திவிட்டார். ஒரு மனிதன் வேறு எந்தத் துறையிலும் நிபுணராக இருப்பதில் அர்த்தமில்லை. உளவியல் என்பதில் ஒருவர் முழுமையான அறிவும், திறனும் கொண்டிருக்கவேண்டும். இல்லையென்றால் வாழ்வதில் அர்த்தமில்லை என்கிறார்.
உளவியலில் நிறைய முறைகள் இருந்தாலும், நீங்கள் அவற்றை செயல்படுத்தவில்லையென்றால் அதனால் எந்தப்பொருளுமில்லை. ACT Therapy முறை. இதைப்பற்றி விரிவாக எழுதும் திட்டம் இருக்கிறது. ஆனால், சில முக்கியமான விடயங்கள் நம்மை பெரிதுமாக முன்செலுத்தக்கூடியவை.
தன்னுடைய மனம் என்பது ஒருவருக்கு மாஸ்டர் அல்ல. அது நினைப்பதை, சொல்வதை எல்லாம் நாம் கேட்கக்கூடாது. எண்ணங்கள் அதுபாட்டுக்கு மேகங்கள் போல நம்மைக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும், அவ்வளவே. அதற்கு மேல் ஒருவருக்கு ஒரு நாள் ஏற்படும் நான்காயிரம் ஐந்தாயிரம் எண்ணங்களுக்கு எந்த அர்த்தமுமில்லை என்கிறார்.
நம்மிடையே பெரிய அளவில் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்கள் உண்டு. பெர்சனாலிட்டி வேறு, அவற்றின் டிஸ்ஆர்டர்கள் வேறு. டிஸ்ஆர்டர்களை பெர்சனாலிட்டியாகக் கொண்டாடிக்கொண்டாடிக் கொண்டிருப்பதால் இவ்வளவு வன்முறை நம் உலகில் என்கிறார். நம்மில் நூற்றுக்கு இருபத்து நான்கு பேருக்கு இந்த டிஸ்ஆர்டர் இருப்பதை நாம் சிறப்பியல்பு என்று கொண்டிருக்கிறோம் என்கிறார்.
நாம் மற்றவர்களைப் பற்றி அவர் இப்படி நினைப்பார், அப்படி நினைக்கிறார் என்றெல்லாம் கற்பனை செய்துகொள்வதில் தான் நம் சிந்தனைப்பாதைகள் தவறான திசைக்குச் செல்கின்றன. உண்மையில் அவர் சிந்திக்க அவர் மண்டைக்குள் நம்மையும் தாண்டி நிறைய விடயங்கள் உள்ளன,  என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அம்மாதிரியான முன்முடிவுகளைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்.
கோபம், பயம், சோகம் இவை மூன்றுமே அழுத்தங்களைத் தரக்கூடிய உணர்வுகள். இவற்றின் அளவு மிகுந்து தான் நாம் மனச்சிதைவுக்கு ஆளாகிறோம் என்கிறார்.
‘அமைதி’, என்ற உணர்வின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்லுதலுக்கு நல்ல உபயோகமாக நம் சூழலைத் தூய்மைப்படுத்தும் பணியைச் சொல்கிறார்.
எனக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, நான் இப்படித்தான் என்பதன் வழியாகவே மனஅழுத்தத்தின் காரணிகளை நாமே உண்டாக்கிவைத்துக்கொள்கிறோமே தவிர பிறர் காரணம் இல்லை என்கிறார்.
என்ன தான் சிலம்பம் அறிந்திருந்தாலும், பொருளாதார விடுதலை இருந்தாலும், ஊக்கமுடைய பெண்ணாக இருந்தாலும் தன் மனதிற்குத் தான் ஊட்டி வளர்த்த வரையறைகளால் தாம் தன்னையே தான் கடக்கமுடியாமல் போகிறது என்கிறார்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதற்கு உங்களின் கூரிய உணர்வுகளை சரியாக இருபத்து நான்கு மணி நேரம் கழித்து வெளிப்படுத்தவேண்டும் என்று எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். எழுதி வைத்துக்கொள்வது, அதை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுவோமே என்ற சந்தேகத்தைக் கையாளத்தான். இருபத்து நான்குமணி நேரத்தில் அந்தக் கோபத்திற்கான காரணம் என்னவென்று உங்களுக்கே தெரிந்துவிடும். பெரும்பாலும் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்கிறார்.  அந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய அருமையான விடயங்களை உங்கள் முன் கோபம் தடுத்துவிட்டது என்பதை உங்கள் வாழ்விற்கும் உணர்ந்தவர்களாவீர்கள் என்கிறார்.
இன்னும் நுட்பமாகச் சென்று எழுத விரும்புகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தத்துறையில் நான் கற்றவை பற்றி எழுத விரும்புகிறேன். ‘மாஸ்டரிடம்’ கற்றதை இன்னும் ஒருவருக்கேனும் கற்றுத்தருவேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். ஆகவே, எழுதுவேன்.
இதை வாசிப்பவர்களும் தங்கள் மனத்தைப்பற்றி அறிந்து கொள்ள இது உதவும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வெளிப்படையான உரையாடல்கள் நம் இடைவெளிகளையும் தூரங்களையும் குறைக்கின்றன என்பதை உணர்கிறேன். நான் முன்பே சொன்னது போல, சோகம், பயம், கோபம் மட்டுமே மனிதனுக்கு இருக்கும் அடிப்படையான உணர்வுகள். அதிலும், இவை விலங்குகளுக்கு இருக்கும் உள்ளுணர்வுகளிலிருந்து மாறுபட்டு, மனிதர்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்வதற்காகவும், தற்காத்துக்கொள்வதற்காகவுமே உண்டானவை. இந்த உணர்வுகளைத் தவிர, மற்ற எந்தப் புதிய உணர்வுகளானாலும், அதாவது வலி, வெறுப்பு, வன்மம், வன்முறை, மகிழ்ச்சி, தவிப்பு, பதட்டம்,  காமம், காதல், தனிமை எல்லாமே வலிந்து மனிதன் வடிவமைத்துக்கொண்ட உணர்வுகள் தாம். கெளதம புத்தர், ‘வலி’, என்ற உணர்வு எப்படி வலிந்து மனித குலத்தினூடே உருவாக்கப்பட்ட ஒன்று என்பதைப் பற்றித் தீவிரமாகச் சொல்லியிருக்கிறார். சோகம், பயம், கோபம் இந்த உணர்வுகளைக் கூட ஒரு கோப்பையில் அளந்து பார்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாகக் கணிசமாகக் குறைத்துவிட முடியும். தினப்படிப் பயிற்சி அவசியம்.
‘உளவியல் கல்வி’,யைப் பற்றி நட்பு வட்டாரத்தில் பரிந்துரைத்தபோது பெரும்பாலோனோர் மறுத்தார்கள். ‘எனக்கே இதைப்பற்றியெல்லாம் நன்றாகத் தெரியும்’, என்று சொன்னார்கள். உண்மையில், அதைத் தன் மன உலகத்திற்குள் நுழைவதற்கான தயக்கமும் அச்சமும் கலந்த இறுக்கம் என்றே சொல்வேன். நவீன வாழ்வியலில் ‘மன வடிவாக்கம்’, என்பது நிறைய பழம்மரபுகளைக் கொண்டிருக்கிறது. அந்த ஒவ்வொரு மரபையும் ஊசியால் குத்திக் களைவது போல களைந்தெறிய வேண்டியிருக்கிறது. விலங்கிலிருந்து மேன்மையடைய நம் மேல் மூளையினை ஒட்டியிருக்கும் ‘கார்டெக்ஸ்’, தேவைப்பட்டது. அது வளர்ந்தது மனிதப்பரிணாம வளர்ச்சியில் முக்கியமான ஒன்று. இதைப்பற்றி நாம் தனி அத்தியாயத்தில் உரையாட வேண்டியிருக்கும். ஆக, மனம் என்பது மூளையின் செயல்பாடுகளுடன் பொருந்திப்போகும் ஒன்றென்பதால், ஆவியான ஒரு வெளியாக, காற்று வெளியிடையாக “மனதை” நாம் உணர்வது நம் வாழ்வின் அமைதியைத் தின்னக்கூடியது.
வெற்றி-தோல்வி, சரி-தவறு என்பவை என்று எதுவும் இல்லை. மகிழ்ச்சி - வேதனை என்ற இரு பக்கங்களில் எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான் முக்கியம். உலகச்சந்தையின் நுகர்வுப்பண்பாடு நம்மை எல்லாம் போட்டிக்கும் ஓட்டப்பந்தயங்களுக்கும் விரட்டியதில் தான் நாம் அன்றாட வாழ்வில் வெற்றி, தோல்வி என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினோம். ஒருவர் வெற்றி என்பதை நம்புகிறார் என்றால், அது மனமயக்கத்தின் உருவகமே. அப்படி ஒன்று இல்லவே இல்லை என்கிறார் என் மாஸ்டர். ஏனெனில், எல்லோரும் வெவ்வேறு. ஒவ்வொருவரும் இந்தப்பூமியில் தனித்த பயணத்தினை ஏற்பவர்கள், தனித்தே பயணிப்பவர்கள். ஒருவருக்கும் உடன் வாழும் உறவுக்கும் கூட எந்தத்தொடர்பும் இல்லை. ஆனால், போட்டியாக, பொறாமையாகப் பார்க்கத்தொடங்கிவிட்டால், ‘மனம்’, என்பதை விபரீதமான ஊடகமாக மாற்றி விடுகிறோம். பின், அது அபாயத்தின் எந்த எல்லைக்கு அழைத்துச்செல்லும் என்பதை அறியாத சறுக்கலுக்குத் தான் தயாராகிவிட்டார் என்றே அர்த்தம்.
இந்தப்பதிவில், முக்கியமாக நான் சொல்ல விரும்புவது, ABC கோட்பாடு பற்றி. எல்லீஸ் என்ற அறிஞர் நம் எண்ணங்கள் இயங்கும் திசைகளிலிருந்து கண்டறிந்தது.
A - என்பது ஒரு ‘சூழ்நிலை’ என்று வைத்துக்கொள்வோம். நாம் ஒருவரை ஃபோனில் அழைக்கிறோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
B - என்பதை நம் ‘சிந்தனை’ என்று கொள்வோம். நம் சிந்தனை உடனே எங்கே போகிறது என்று பார்ப்போம். அதாவது, அவர் நம் மீது கோபத்தில் இருக்கிறார் அல்லது அவருக்கு நெருக்கமாக இருக்கும் நமக்கு வேண்டாதவர் அவரிடம் எதையோ சொல்லிவிட்டார் என்று நாம் தவறாக, எதிராகச் சிந்திக்கத் தொடங்குகிறோம்.
C - என்பதை நம் ‘உணர்ச்சிகள்’ என்று கொள்வோம். உடனே நமக்குள்ளேயே உணர்ச்சிகள் கொந்தளித்து அவசர அவசரமாக முகநூலில் ஒரு தவறான, எரிச்சலான பதிவை இடுக்கிறோம். இல்லை, எப்படி அவருக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடமுடியுமோ அவற்றை எல்லம் செய்வோம்.
ஆக, மேல் சொன்னதை யோசித்தால், C - என்ற முடிவிற்கு A - என்ற சூழ்நிலை காரணமேயில்லை. B - என்ற தன்னுடைய சிந்தனை தான் காரணம். எப்படி என்றால், ஒரு கணம் நின்று நிதானமாகி, B - என்ற சிந்தனையை நேராக்கலாம். அதாவது, ஃபோன் எடுக்கமுடியாத மோசமான சூழலில் அந்த நண்பர் இருந்திருக்கலாம்,  நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது எந்த ஃபோனையும் ஏற்கமுடியாத சிக்கலில் கூட அவர் இருக்கலாம் என்று எண்ணத்தொடங்கினால், C - உணர்ச்சிகரமான செயல்பாட்டு நிலை உருவாகாது.  தன் தவறான சிந்தனையின் விளைவான கழிவே C யே தவிர, அந்த A - காரணமேயில்லை. அந்த விளைவிற்குத்தானே முழுமுதற்காரணம் என்பதை என் மாஸ்டர் அழகாகச் சொல்வார்.
உளவியலின் வெவ்வேறு கோட்பாடுகளை விளக்க மேற்கண்ட, இந்த உதாரணத்தை என் மாஸ்டர் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருப்பார். ஆக, ABC கோட்பாடு நம் அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது சுவாரசியமானது, மனமகிழ்ச்சி தரக்கூடியது. சிக்கல்கள் அற்றது. நீங்களும் ABC என்ற அடிப்படையான மனக் கோட்பாட்டின் நிபுணர் ஆகிவிடுவீர்கள். அவரவர் மனம் அவரவர்க்கு பூந்தோட்டமாக இருக்கவேண்டும், இல்லையா?

பெண்களுக்கென்று தனியான ஒரு ரகசிய எழுத்து மொழி : ' 'நுஷு'. nüshu, a script that is only used by women in China

Nüshu is considered to be the world’s only writing system that is created and used exclusively by women. Originating in China’s Jiangyong county in the nineteenth century, it gave rise, over time, to a traditional female culture, which is endangered today. The country’s local and national authorities are working to revive it.

By Chen Xiaorong





Indran Rajendran



சீனாவில் பெண்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பதை ஆண்கள் மறுத்தார்கள். இந்த இழிநிலையை சீனத்துப் பெண்கள் புதுவழியில் மீறினார்கள்.ஆண்களுக்குத் தெரியாத ரகசிய எழுத்து வரிவடிவம் ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு எழுத்தை உருவாக்கினார்கள்.அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள்.
நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.
இதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.. 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடும் கிறுக்கியது போல் இருக்கும். விசிறிகளிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள். பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள். ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.
தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண். பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

Wednesday, January 20, 2021

The Great Indian Kitchen

ஒரு சில திரைப்படங்களை பார்த்தவுடனே
நம்ம மட்டும் பார்த்தா போதாது...
நமக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் பார்க்கனும்...
அதனால எல்லார்கிட்டையும் அந்த படத்தை பற்றி பெருமையாக பேசுவோம்.
அப்படியான திரைப்படம் தான் the great indian kitchen.
எப்படி இந்த மாதிரியான கதைகளை உருவாக்குகிறார்கள், தொடர்ந்து மலையாள சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் புதிது புதிதாக யோசிப்பதும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை திரைப்படமாக எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்...



A slap on patriarchal society...
படம் ஆரம்பிக்கறதே Thanks Scienceனு தான்...thank godங்கற வழமையிலிருந்து விலகி நிற்கிறார் இயக்குனர் Jeo Baby.
*Spoiler alert*
//நிமிஷாவும் சுராஜும் புதுமணத் தம்பதியராய் ஆரம்பிக்கறது கதை. மாமியாரும் மருமகளும் சமைக்க ஆரம்பிக்க வீட்டு ஆண்கள் ரிலாக்ஸ்டாக இருப்பதும், டூத் ப்ரஷ் பேஸ்ட் மாமனாருக்கு மாமியார் கையில் கொண்டு வந்து தருவதுமென அந்த வீட்டின் இயல்பு காட்சிகளில் விரிகிறது.
நிமிஷா சுராஜுடன் அவர்கள் வீட்டு சமையலறையும் ஒரு கதாபாத்திமாக வாழ்ந்திருக்கிறது படத்தில். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை விட, காய் நறுக்குவதும் சமைப்பதும் பாத்திரம் கழுவுவதும் கூட்டுவதும் துடைப்பதும் துவைப்பதும் என அதிகமாய் வளையலிட்ட கைகள் ஆயிரம் கதை பேசுகிறது.
காலை சமையல் முடித்து ஆண்களுக்கு பரிமாறி, பாத்திரம் கழுவி மதியம் சமையலுக்கு காய்கறி வெட்டி சமைத்து பரிமாறி பாத்திரம் கழுவி...என திரும்ப திரும்ப இந்த காட்சிபடுத்தலில் பெண்கள் படும் அயர்ச்சியை அட்டகாசமாய் காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர். எடிட்டிங் அருமை.
இரவானால் உணர்வே இல்லாத புணர்ச்சி...ஃபோர்பிளே என்ற வார்த்தை தெரிந்ததற்கே ஏளனமாய் பேசும் கணவன்...
ஆண்கள் சாப்பிடும் பொழுது வேஸ்ட்லாம் வைக்கும் தட்டில் போடாமல் டேபிள் முழுக்க பரப்பி வைப்பதும், அதே பெண்கள் சாப்பிட்டு முடித்ததும் வேஸ்ட்லாம் அதற்குரிய தட்டில் இருப்பதும் அழகாய் காட்சிகளில் வசனமேயின்றி உணர்த்தப்படுகிறது. இதே ஹோட்டலில் சாப்பிடும்பொழுது கணவன் தனித்தட்டில் வேஸ்ட்லாம் எடுத்து வைப்பதை மனைவி சொல்லும் போது அவர் ஈகோவில் குத்தித் தைப்பதை சுராஜ் அருமையாய் வெளிப்படுத்துகிறார்.
அம்மிக்கல்லில் சட்னி, குக்கரில் வைக்காமல் விறகடுப்பில் வேக வைத்த சாப்பாடு, வாஷிங் மெஷினில் போடாமல் கைகளில் துவைக்கச்சொல்லும் மாமனாரின் தேவைகள்...ஒழுகும் கிச்சன் சின்க் சரி செய்ய கணவன் எந்த முனைப்பும் காட்டாதது...பீரியட்ஸ் வரும் நாளில் எதையும் தொடாமல் தனி ரூமில் பாயில் படுப்பதும்....என இயல்பாய் மருமகளின் தோளில் ஏறும் சுமைகளை திரைக்கதை இயல்பாய் எடுத்துச் செல்கிறது.
அத்தனை அழுத்தங்களும் சேர, சின்க் அடியில் சேர்ந்த அழுக்கு  நீரை கணவன் மாமனார் முகத்தில் தூக்கி எறியும் காட்சி மனதிற்கு மிகத் திருப்தியாய் இருந்தது.
கதாபாத்திரங்களுக்கு பெயரே இடப்படவில்லை என்பதே கதைப்போக்கில் தெரியவில்லை என்பது ஆச்சர்யம்.
கடைசிக் காட்சியில் அதகளமான இசையுடன் கூடிய நடனம் துவங்கும் போது உடல் சிலிர்த்துப் போகிறது...//
மனதிற்கு மிக நெருக்கமான கதைக்களம்...பெண்கள் மீதான வன்முறை எந்தவொரு அடிதடி காரசாரமான வார்த்தைகளின்றி, புன்னகையுடன் இயல்பாய் ஆண்கள் சிரித்துகொண்டே வன்முறையை பெண்கள் மேல் ஏற்றுவதை அட்டகாசமாய் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர். அதை நிமிஷா பரிபூரணமாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
Please do watch the movie... Thanks Hema Chandrasekar

Tuesday, January 19, 2021

How the brain is built


From birth to age 5, a child’s brain develops more than at any other time in life. And early brain development has a lasting impact on a child’s ability to learn and succeed in school and life. The quality of a child’s experiences in the first few years of life – positive or negative – helps shape how their brain develops. An excellent, open access review on the common mechanisms used to development the framework for both seeing and hearing.  It's obviously "heavy on neuroscience," but most readers interested in how the brain is built will learn a lot.
You will learn that the brain is not...repeat, NOT!...a "blank slate," from which individual experience then carves the specialized circuits that make humans a uniquely intelligent creature.  Instead, an inherited network of developmental genes ensures that hundreds or perhaps even thousands of specialized neurons are directed to specialized brain regions (e.g., sent to the visual cortex).  Because of where they are directed plus their unique properties, these neurons form synapses.  That is, they connect with one another to form the circuits (i.e. "wiring diagrams") that give us vision and hearing.
That fundamental, gene-directed circuitry constitutes a framework, which thereafter is modified via two types of plasticity: organizational and activational plasticity.  Organizational plasticity ensures massive movement of circuits; connections are broken and new ones made elsewhere.  This type of plasticity is experienced by the congenitally blind.  For these people, something (many possibilities exist) has gone wrong so that the "genetically intended" framework is replaced by something quite different.
The other type of plasticity, activational plasticity, is also under genetic guidance.  Many genes controlling neuronal function in brain regions controlling sensory functions have evolved to "listen" for certain environmental signals (e.g., not enough growth factors, called neurotrophins).  If they receive the signal, the fundamental framework is slightly altered.  If they receive a different signal (or scarcity of neurotrophins), the framework is slightly altered.  All of this happens because of individual experience.
This review studies only vision and hearing, two sensory regions, but the mechanisms are the same for brain regions that give us thinking, planning, and thoughts of the future: the nonsensory neocortex.
The neocortex's circuitry is framed by inherited developmental genes, and those environmental signals that result in plasticity (probably; work is ongoing) work through the brain's specialized immune system (microglia) to carve circuits that give us things like universal grammar, ease of language learning, theory of mind, intuitive supernatural agency, and various instinctive knowledge of physical laws.  Those are not learned, but rather are under genetic control in the same manner as the circuits discussed above.
Finally, so many development genes are involved in the above mechanisms it is inevitable that we all differ in our "suite" of such genes (our genotypes vary).  In fact, our DNA has "hotspots" that have evolved to mutate more often so that a greater variety of "brain building genes" results.  Natural selection requires such variety in order to become more and more "fit" (a specialized, evolutionary term with a specific meaning; don't think "fit" as in suited for the gym).  Thus, we all inherit some slight (or, in some cases like schizophrenia and autism, significant) differences in the framework that our individual experiences have to work with.  As you can imagine, if the framework is different, then the same signal received by two people will result in a slightly (or greatly) modified post-experience brain circuit.  Thus, we all behave differently...in some part...because we inherited different genes.

Tuesday, January 12, 2021

அப்பா......*மனச தொட்ட கதை*


🙏🙏🙏🙏🙏🙏
கணேசன் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார்.
பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.
மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.
இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் கணேசன்.
வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.
அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.
அந்த சமயத்தில் ஒருவர் கணேசனின் பக்கத்தில்
வந்து அமர்ந்தார்.
"மிஸ்டர் கணேசன்!
நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).
ஆச்சரியப்பட்டார் கணேசன்.
யோசித்தார்.
பிறகு பேசினார்.
""கடவுளே! என் அப்பாவை நான் பார்க்க வேண்டும். அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?""
என்று கேட்டார் கணேசன்..
""மிஸ்டர் கணேசன்! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.
''கடவுளே! ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் கணேசன்..
‘அப்படியா!' என்றார் கடவுள்.
''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் கணேசன்.
''அதெல்லாம் சரி! உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?'''
என்று கேட்டார் கடவுள்.
‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் கணேசன்..
''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்
''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.
அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.
நான் என் மகனை அவனது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உருவாக்குவேன்.
ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?''
என்று கேட்டார் கணேசன்.
அமைதியானார் கடவுள்.
மீண்டும் கணேசன் பேசினார்.
''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை விட்டார் தசரதன்,
இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன்,
பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.
இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம். அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.
ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன். ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை. அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் கணேசன்.
ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.
'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.
''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.
அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.
அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன். வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.
அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.
அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.
வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் கணேசன்..
''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.
சிரித்தார் கணேசன்.
‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.
அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.
அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.
எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் கணேசன்..
கடவுள் சிரித்தார்.
‘கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்
அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் கணேசன்.
':அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.
‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று. அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது கணேசனின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.
‘மிஸ்டர் கணேசன் ! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.
இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.
கணேசன் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.
''மகனே! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?
என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.
மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் கணேசன்.
அப்பா பேசினார்.
''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?
அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.
அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.
‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் கணேசன்.
‘அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.
கணேசன் அழத்தொடங்கினார்.
‘என்ன மிஸ்டர் கணேசன்! போதுமா? நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.
‘கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.
நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.
அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....
அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.
கணேசன் மீண்டும் பேசினார்.
‘கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் கணேசன்..
( கணேசனுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)
ஆகவே அப்பா.............. இருந்தால்.................... மதியுங்கள்....................
அப்பா........................ இல்லையேல்....... ..........
நினையுங்கள்..... ............