Search This Blog

Wednesday, April 1, 2020

கொரோனாவுக்கு கபசுரக்குடிநீர் Kabasura Kudineer

டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு குடிநீரும், ஹெச் 1 என் 1 வைரஸ் தொற்றால் பன்றி காய்ச்சல் தீவிரமாக பரவிவந்தது. அப்போது இதை கட்டுப்படுத்த கைகொடுத்தது சித்தமருத்துவம் தான்.

நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு என உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய மூலிகை நீர் அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் அலோபதி மருத்துவ துறை மருந்துகளை கண்டறிவதில் வேகம் காட்டிவருகிறது.

இந்நிலையில் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களிடம் வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய சித்தமருத்துவர்கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்தார்கள்.அதே நேரத்தில் இவை கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று நினைத்திட வேண்டாம். இவை கொரோனாவாக இருக்கலாம் என்று தனிமைப்படுத்தியவர்களுக்கும், அறிகுறிகள் இலேசாக இருக்கும் போது சிகிச்சை அளிப்பவர்களுக்கும் கபசுரகுடிநீரை கொடுக்கலாம். மேலும் அலோபதி சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்த குடிநீரை கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.



தற்போது அரசு சித்தமருத்துவமனைகளில் மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம். யூகி முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகை காய்ச்சலாக பிரித்திருக்கிறார். அதில் கபசுரகுடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறார்.


மூலிகை பொருள்களை கலந்து தயாரிக்கும் கபசுரக்குடிநீரை வீட்டில் தயாரிப்பது கடினமானது. இதில் சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் கலக்கிறார்கள். அதோடு இதை சுத்தம் செய்வதும் கடினம். அதனால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும் கபசுர பொடியாக வாங்கி பயன்படுத்தலாம்.


ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி கால் தம்ளர் குடித்து வரவும். ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.


சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை வடிகட்டி அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மருத்துவரை கலந்தாலோசித்து கொடுப்பது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கபசுரகுடிநீரை தவிர்ப்பது தான் நல்லது.


கொரோனா அச்சத்தால் இயன்றவரை கூட்டம் கூடாமல் தனித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இப்போது கூட்டத்தில் போக வேண்டாம் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் தயாரித்து குடிக்கலாம். 
சுக்கு, ஆடாதோடை, கற்பூரவல்லி, நிலவேம்பு, இலவங்கம், திப்பிலி இவையுடன் வேறு கபசுரகுடிநீர் செய்ய பயன்படும் மூலிகை பொருள்களில் எது உங்களுக்கு எளிதாக கிடைக்கிறதோ அதை சிறிதளவு எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

கபசுரக்குடிநீர் குடிப்பதால்கொரோனா வைரஸ் பரவாது. வந்தாலும் குண்மாகிவிடுமா என்று கேட்கலாம். ஆனால் சித்தமருத்துவர்கள் பரவிவரும் கொரோனா வைரஸ்க்கு கபசுரகுடிநீரை மருந்தாக பரிந்துரைக்கவில்லை. ஆனால் வைரஸ் போன்ற தொற்றுகளை பரவாமல் தடுக்க உதவும் கபசுர குடிநீர் கோரொனாவுக்கான மருந்தாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை. எனினும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள். இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்பதால் கபசுர குடிநீர் எப்போதும் உடலுக்கு நன்மையை தரும் என்றே சொல்லலாம்.
சித்த மருத்துவமும் கொரொனாவும் பித்தசுரக் குடிநீர்
Balamurali Balasingam 
தற்சமயம் முழுஉலகையுமே ஆட்கொண்டுள்ள உயிர்கொள்ளி நோயாகிய கொவொயிட் 19 என்ற நோயினால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் உள்ளது, பல வல்லரசுகளும் இப்பேரிடரிலிருந்து மீழ்வதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன, எனினும் அவை பெரியஅளவில் வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மாற்று மருத்துவத்தின் மூலம் இதற்கான தீர்வைத் தேடத் தொடங்கியுள்ளனர் அந்த வகையில் சித்த மருத்துவத்தில் கொரொனாவிற்கான சிகீட்சை முறைகள் சொல்லப்பட்டுள்ளனவா என்பதை அறிவதற்காக பலரும் சித்த மருத்துவத்தின் பக்கம் நாடுகின்றனர். இன்நிலையை சிலர் சாதகமாகப் பயன்படுத்தி எமது சித்த மருத்துவ ஏடுகளின் புகைப்படங்களில் கணனித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில மாற்றங்களைச் செய்து எம்மிடம் இதற்கான மருந்துகள் உண்டு நாம் இப்பிணியை முற்றிலும் குணமடையச்செய்வோம் என மக்களை நம்பவைத்து தாம் பிரபல்யம் அடைவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் முயற்சிக்கின்றார்கள், இவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
அப்படியானால் இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தால் எதுவும் செய்யமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம் அதற்குரிய பதிவாகவே இப்பதிவிடப்படுகின்றது.
சித்த மருத்துவத்தில் பலவகையான ரோகங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும் மிகவும் திருத்தமாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளன ஆனாலும் எனது அறிவிற்கெட்டிய வரை கொரொனா பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை, மாறாக பல வகையான சுரங்கள் தொடர்பாகவும் அவற்றிற்கான குணங்குறிகள் பரிகாரங்கள் தொடர்பாகவும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் பித்தசுரம் எனப்படும் ஒரு பிணிநிலையின் ரோகலட்சணங்கள் தற்போதய கொவொயிட் 19 என்ற நோயின் குணங்குறிகளுடன் ஓரளவிற்கு ஒத்துப்போவதாகவுள்ளது அதற்காக பித்தசுரம் தான் கொவொயிட் 19 என்ற முடிவிற்கும் உடனடியாக வரமுடியாது.
அந்தவகையில் பித்தசுரத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சித்த மருந்துகளில் முக்கியமானது பித்தசுரக் குடிநீராகும் இக்குடிநீரானது 15 மூலிகைகளைக் (இவற்றுள் பல கிடைத்தற்கரிய அரிய வகை மூலிகைகள்) கொண்டு முறைப்படி தயாரிக்கப்பட வேண்டிய ஒரு மருந்தாகும், இதனுடன் வேறும் சில மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் பித்தசுரத்தினையும் இதனால் ஏற்படக்கூடிய உபத்திரவங்களையும் தணிக்க முடியும். எனினும் இந் நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந் நோய்நிலை ஏற்படுவதற்கு முன்னர் இம்மருந்துகளை தடுப்பு மருந்துகளாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
இருப்பினும் இவ்வகையான மருந்துகளைப் பயன்படுத்துவதனால் எந்தவிதமான பாதகமான விழைவுகளும் ஏற்படாது தானே எதற்கும் நாமும் ஒருமுறை பாவித்துப் பார்ப்போம் என நீங்கள் எண்ணலாம் அது மிகவும் தவறான எண்ணமாகும். முதலாவதாக மூலிகை மருந்துகளிற்கு பக்கவிழைவுகள் இல்லை என்பது மிகவும் தவறான கருத்தாகும், இம் மருந்துகளும் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனையின்றிப் பாவித்தால் பாரிய விழைவுகளை ஏற்படுத்தும். அடுத்ததாக இந்த கபசுரக் குடிநீரில் சேரும் 15 வகையான மருத்துவ மூலிகைப் பொருட்களில் பல கிடைத்தற்கரிய அரிய மூலிகை வகைகள் இவற்றுள் சில முழு இலங்கையிலுமே ஒரு சில கிலோ அளவிலேயே கையிருப்பில் இருக்கும் அவற்றையும் நாம் நோய் ஏற்படுவதற்கு முன்னர் முடித்துவிட்டோமானால் உண்மையில் தேவைப்படும் நோயாளரிற்கு என்ன செய்வது? ஒரு சில செக்கன்களில் உற்பத்தி செய்யக்கூடிய சத்திர சிகீட்கை முகக்கவசங்களிற்கே இவ்வளவு தட்டுப்பாடு ஏற்படும் போது உற்பத்தி செய்வதற்கு பல மாதங்கள் எடுக்கும் மூலிகைப் பொருட்கள் பற்றி சொல்லத் தேவையில்லை இந்நிலையில் மூலிகைப் பொருட்களிற்கான கேள்வி பல மடங்கு அதிகரிக்கும் போது போலியான மூலிகைகள் சந்தைக்கு விடப்படும் இந் நிலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.
அடுத்ததாக நோய்த்தொற்று ஏற்பட்டு நோய்க்கான குணங்குறிகள் தென்படுவதற்கு முன்னதாக இம்மருந்துகளைப் பயன்படுத்துவதால் நோய்க்கான குணங்குறிகள் தோன்றாது போகலாம் அதனால் அவர்கள் நோயாளராக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் இவர்கள் மூலமாக பலருக்கும் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கின்றது.
தற்சமயம் இலங்கை உலக சுகாதார தாபனத்தின் கொவொயிட் 19 தரப்படுத்தலிற்கமைவாக நிலை 3ஏ யில் இருந்து நிலை 3பி யை அடைகின்றது மிகவிரைவில் நிலை 4ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிக்றது இந்நிலையில் எமது வீடுகளிலும் பல சித்த ஆயர்வேத மருத்துவமனைகளிலும் உபத்திரவங்கள் ஏற்படாத கொவொயிட் 19 நோயாளர்களை வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலைகள் ஏற்படலாம் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சித்த மருந்துகள் எமக்கு உபத்திரவங்களைத் தடுப்பதற்காக கைகொடுக்கலாம் எனவே தற்போதய சூல்நிலையில் குறித்த மருந்துகளை வீண்விரயமாக்காமல் அவற்றை முறையாகத் தயாரித்து சேமித்து வைத்து அடுத்துவரும் கிழமைகளில் அவற்றின் தேவை ஏற்படும்போது சரியாகப் பயன்படுத்துவது சித்த மருத்துவத்துறை சாரந்த அனைவரதும் கடமையாகும்.


No comments:

Post a Comment