Search This Blog

Wednesday, August 10, 2016

குறிஞ்சி மலர் :


குறிஞ்சி மலர் என்னிடம் தோற்றுவிட்டது
கொஞ்சம் வருத்தம்தான்
எப்படியும் குறிஞ்சிமலர்கள்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்
ஒரே ஒருமுறை பூப்பவள் நான்

எப்பொழுது மலர்ந்தேன் என்பது
ஒருவருக்கும் தெரியாது
அம்மாவின் கணக்கு வேறு
அப்பாவுக்கோ கணக்கே தெரியாது
இன்னும்
இன்னும்
இன்னும்
பலருக்கும் மலர்தல் என்றால் என்னவென்றே தெரியாது
அந்த இரகசியத்தை அறிந்த ஒரே ஒருவன் உண்டு

நான் மலர்ந்தத் தருணத்தை
அவனிடம் சொல்லும் முன்பு
நான் செத்து விடலாம்

அப்படிச் சாவேன்.

நன்றி குங்குமம்

Sakthi Jothi

No comments:

Post a Comment