M: மலரே குறிஞ்சி மலரே .....
F: மலரே குறிஞ்சி மலரே....
M; தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
M: மலரே குறிஞ்சி மலரே...
F: யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ....
M: கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் தேடும்
மலரே நீ பெண்ணல்லவோ ...
M: நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்..
F: தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
M: தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே....
F: பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன் ..
M: பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு
நல்வாழ்த்து கூறுங்களேன் ...
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
F; மலரே குறிஞ்சி மலரே....
M: மலரே குறிஞ்சி மலரே....
ஒருதளத்தில் எல்லாமே அறியாமைக்கு விருத்து
ReplyDelete