Search This Blog

Wednesday, April 20, 2011

பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல்

பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல்

பார்வை இழப்பை தடுக்க இனி ஒரே ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதுபற்றி லண்டனில் கண் சிகிச்சை நிபுணரும், விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றவருமான ஆலிவர் பேக்ஹவுஸ் கூறியதாவது: ஒரே ஒரு ஊசி மூலம் பார்வையிழப்பை தடுக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம்.
அந்த ஊசி மூலம் ஸ்டீராய்டை கண்களுக்கு பின்னால் இடம்பெறச் செய்யலாம். பார்வையிழப்பை ஏற்படுத்தக்கூடிய கண் நரம்புகள் அடைப்பை அது தடுக்கும். அதனால் திடீர் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் விழித்திரை அருகே எரிச்சலுக்கு எதிரான மருந்தை அந்த ஊசி வெளியிடும். எனவே கண் எரிச்சலால் ஏற்படும் பார்வைக் குறைவு தடுக்கப்படும். இந்த ஊசியை எதிர்கால பார்வையிழப்பைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். ஏற்கனவே பார்வைக் குறைபாடு ஏற்பட்டவர்களும் பார்வையை மீட்க பயன்படுத்த முடியும்.
இது தவிர பலவிதமான கண் நோய்களை குணப்படுத்தவும் இந்த ஊசி உதவும். நீரிழிவு நோய் மற்றும் வயது காரணமாக ஏற்படும் பார்வைக் குறைபாடுகளையும் தவிர்க்க முடியும். இந்த சிகிச்சைக்கு ரூ.1.44 லட்சம் செலவாகும் என ஆலிவர் தெரிவித்தார்.
பிராட்போர்டில் உள்ள யாக்ஷயர் கண் மருத்துவமனையின் சிகிச்சை நிபுணர் ஷபீக் ரகுமான் கூறுகையில்,"இந்த ஆராய்ச்சி முடிவு பிரமிக்க வைக்கிறது. பல்வேறு பார்வைக் கோளாறுகளை தவிர்க்க இந்த ஊசி சிகிச்சையை பயன்படுத்தலாம். அதன் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன" என்றார்.

No comments:

Post a Comment