Search This Blog

Saturday, November 21, 2020

அ. முத்துலிங்கம் கொக்குவில் தந்திருக்கும் கொடை

 1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.

 

இலக்கியப் பணிகள்

. முத்துலிங்கம், பேராசிரியர் .கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு .கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்.

நாவல்களை விரும்பிப் படிக்கும் பலரும் சிறுகதைகளை விரும்புவதில்லை. இலக்கை நோக்கிய பயணத்தைவிடவும் இலக்கின்றிய பயணங்கள் சுவாரஸ்யமானவை. எனவேதான் ஒற்றை முடிச்சைக் கொண்டு நகரும் சிறுகதைகளை பலரும் விரும்பிப் படிப்பதில்லை. ஆனால் அ.முத்துலிங்கத்தின் கதைகள் இதற்கு மாறானவை. அவர் கதைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமானவை. எனவே யாரும் அவர் கதைகளை விரும்பிப் படிக்க முடியும். கல்கி, சுஜாதா இருவருக்குப் பிறகு வாசிப்பை சுவாரஸ்யமாக்கியவர் அ.முத்துலிங்கமே என்று ஜெயமோகன் குறிப்பிடுவது அதனால்தான். 

கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது

 

நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று .முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் .முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

 ஏன் எழுதுகிறீர்கள்?

"முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை பெற்றால் அது சாதாரண விசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும், இசையமைப்பாளர் புதிய இசையை உருவாக்குவதும் இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அதைப் படிக்கும் வாசகருக்கும் கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது தவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்கு ஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்!"

இவரது நூல்கள்

புதினம்

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - உயிர்மை பதிப்பகம் (2008)

கடவுள் தொடங்கிய இடம்

சிறுகதை தொகுப்பு

அக்கா (1964)

திகடசக்கரம் (1995)

வம்சவிருத்தி (1996)

வடக்கு வீதி (1998)

மகாராஜாவின் ரயில் வண்டி (2001)

.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)

ஒலிப்புத்தகம் - (சிறுகதைகள் தொகுப்பு - 2008)

அமெரிக்கக்காரி (2009)

Inauspicious Times - 2008 - (Short stories by Appadurai Muttulingam - translation by Padma Narayanan - available at Amazon.com)

குதிரைக்காரன் - (2012)

கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) - (2013) - காலச்சுவடு பதிப்பகம் - தொகுப்பு ஆசிரியர் .மோகனரங்கன்

பிள்ளை கடத்தல்காரன் (2015)

ஆட்டுப்பால் புட்டு (2016)

After Yesterday - Translated from Tamil – Short stories – 2017

.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்புஇரண்டு பாகம்- 2016

கட்டுரைத் தொகுப்பு

அங்கே இப்ப என்ன நேரம்? (2005)

பூமியின் பாதி வயது - உயிர்மை பதிப்பகம் (2007)

கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு - 2006)

வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) - காலச்சுவடு பதிப்பகம் (2006)

அமெரிக்க உளவாளி - கிழக்கு பதிப்பகம் (2010)

ஒன்றுக்கும் உதவாதவன் - உயிர்மை பதிப்பகம் (2011)

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லைநேர்காணல்கள்  (2013)

தோற்றவர் வரலாறு (2016)

.முத்துலிங்கம் கட்டுரைகள்முழுத்தொகுப்புஇரண்டு பாகம்

No comments:

Post a Comment