Search This Blog

Tuesday, May 10, 2016

ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது


ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது
வலி மறுத்துப் போயிருந்தது
என் பயமெல்லாம் மூலையில் சாய்ந்திருந்த
இரும்புத் தடியின் மீதே குவியலாய்…
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது
வெட்கமிட்டு அணிந்த உள்ளாடைகளின் நாட்கள்
கவனத்தில் வந்து போயிருக்க வேண்டியதில்லை
ஆனாலும் மங்கலாய்…
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது
நிருபயாவின் கதறல் உடைந்து உருகுலைந்து
ஈனஸ்வரத்தில் மூளைக்குள் கேட்கத் துவங்கியது
இனி ஜிசாவின் முனகலும்…
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது
கொஞ்சம் உயிர் மிச்சமிருக்க வேண்டினாலும்
இவர்களை அடையாளம் காட்டி
தையல் எந்திரம் வாங்கிக் கொடுக்க நான் யார் என்றே
மார் இன்னும் இருமுறை திமிரி அடங்கியது
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது
இனி நடுவிரல் தூக்கி போராடுவதை விட
குறி அறுத்து பலியிடுவோம்… குரல் எழுப்புங்கள்
பெண்டீரே என கத்தத் தோன்றியது
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது
சப்போர்ட் பார் நிசா என்று போராடும்
இன்ஸ்டெண்ட் போராளிகளை நினைத்து அறுந்த கோழியின்
கழுத்தைப் போல் இதயம் துடித்தது
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது
என்ன சலித்து விட்டதா
ஏழு முறை ஏழாமவன் என்ற வரியையே கடக்க எரிச்சல் என்றால்
என் வலியின் எரிச்சலை நினையுங்கள்
ஆனால்
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது
எனக்கு வலிக்கவேயில்லை
கழுத்தில் குருதியோடு உயிர் குடித்த சிங்கம் இழுத்துச் சென்ற
மானைப் போல் உடல் மேலும் கீழும்
இடமும் வலமும்
இன்னும் இன்னுமும் தரையில் சிதறிக் கொண்டே இருந்தது…

No comments:

Post a Comment