Search This Blog

Tuesday, November 5, 2013

ஆதி சங்கரர்.


 அத்வைதம் காட்டித் தந்த ஆதி சங்கரர்.

அத்வைதத்தின் அடிப்படையில் ‘அறுவகைச் சமய நெறி’களை சங்கரர்
அறிமுகப் படுத்தினார்.
அவையே, ‘சைவம், வைணவம், சாக்தம்,
கொமாரம், காணாபத்யம், சொரம்’
எனப்படுகின்றன. முறையே சிவ
பெருமான், திருமால், பராசக்தி,
முருகக் கடவுள், விநாயகர்,
சூரியன்
ஆகியோரை முழு முதற்கடவுளராக
அறுவகைச் சமயப் பிரிவுகள்
வரையறுக்கின்றன.

அந்த வகையில் ‘ஷண்மதம்’ எனப்படும்
ஆறு வித வழிபாட்டு நெறிகள்
மிகவும் அழகானவை.
ஒவ்வொருவரின் ரசனையும்
ஒவ்வொரு வகைப்படும். அதனால், ‘இவர்
மட்டுமே உனக்குக் கடவுள்’
என்று எந்தவொரு இநதுவையும்
கட்டாயப்படுத்தாமல், ‘இந்த
அறுவரில் எவர் உன் மனதைக்
கவர்கின்றாரோ,
அவரையே முழு முதற் கடவுளாக நீ
போற்றலாம்’
என்று வழி காட்டுகிறது அத்வைதம்.
அது மட்டுமின்றி, ‘உன்னுடைய இஷ்ட
தெய்வமே மற்ற கடவுளராகவும்
வடிவம் தாங்கி நிற்கின்றது என்ற
உண்மையையும் இந்தச் சித்தாந்தம்
சொல்லித் தருகிறது.
இதனால் ஒரே மதத்தில்
இருந்து கொண்டு, அதே மதத்திலுள்ள
இன்னொரு கடவுளை இழித்துரைக்கும்
பாவத்தையும் தடுக்கிறது.
ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக்
காட்டித் தந்த ஆதி சங்கரர், அந்தந்தத்
தெய்வங்களைப் போற்றுவதற்கான
துதிகளையும் தானே இயற்றித்
தந்தார்.
அவர் பாடாத
கடவுளரே இல்லை எனலாம்.
-Subha Saravanakumar.

No comments:

Post a Comment