Search This Blog

Saturday, November 9, 2013

இதை விட பகுத்தறிவை சிறப்பாக யார் போதித்து விட முடியும் ? அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே



உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்

உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்

உளனென விலனென விவைகுண முடைமையில்

உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.


(பிரபந்தம் - திருவாய் மொழி - நம்மாழ்வார் அருளியது )


இறைவன் உண்டு என்று சொல்பவர்களுக்கு இறைவன் இருப்பவனாகவே காட்சியளிக்கின்றான் , அப்படி கூறுபவர்களுக்கு எல்லா உருவங்களிலும் இருப்பவனாகவே உள்ளான் .

இறைவன் இல்லை என்று கூறுபவர்களுக்கு அவன் இல்லாதவனாகவே இருக்கிறான் , அப்படி கூறுபவர்களுக்கு அவன் அருவமாகவே இருக்கிறான் ....

இவ்வாறு உருவமாகவும் , அருவமாகவும் இரண்டு வகையாக இருப்பதே அவனது இயல்பான தன்மையாகி விடுகிறது ...

உருவமாகவோ , அருவமாகவோ , அவன் எங்கும் நீக்கமற பரந்தே விளங்குகிறான் என்கிறார் நம்மாழ்வார்

No comments:

Post a Comment