Search This Blog

Saturday, September 11, 2021

விநாயக சதுர்த்தி தகவல்கள்!


21 பத்திரங்கள் / இலைகள்
------------------------------------------------
01. அருகம்புல்
02. முல்லை
03. கரிசலாங்கண்ணி
04. வில்வம்
05. இலந்தை
06. வன்னி
07. ஊமத்தை
08. கண்டங்கத்திரி
09. செவ்வரளி
10. எருக்க
11. மருத
12. மாதுளை
13. விஷ்ணுகிராந்தி
14. அகத்திக்கீரை
15. தவனம்
16. தேவதாரு
17. மரிக்கொழுந்து
18. ஜாதிமல்லி
19. நாயுருவி
20. அரச
21. தாழை
21 புஷ்பங்கள்
-------------------------
01. புண்ணை
02. மந்தாரை
03. மகிழம்பூ
04. பாதிரி
05. தும்பை
06. முல்லை
07. ஊமத்தை
08. கண்டங்கத்திரி
09. செவ்வரளி
10. எருக்க
11. செங்கழநீர்
12. மாதுளை
13. வில்வம் பூ
14. குருந்தை
15. சம்மங்கி
16. பவழமல்லி
17. செண்பகம்
18. ஜாதிமல்லி
19. மாம்பூ
20. கொன்றை
21. தாழை
விநாயகர் அர்ச்சனைக்கு உகந்த இலைகள்
-----------------------------------------------------------------------------
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை இந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.
முல்லை,
ஜாதி மல்லிகை,
அரளி,
எருக்கம்பூ,
அகத்தி பூ
மற்ற புஷ்பங்கள்
எருக்கு இலை,
கரிசலாங்கண்ணி,
மருத இலை,
வில்வம்,
விஷ்ணு கிரந்தி,
ஊமத்தை,
மாதுளை,
இலந்தை,
தேவதாரு,
வெள்ளை அருகம்புல்,
மருவு,
வன்னி,
அரசு,
நாயுருவி,
கண்டங்கத்தரி,
அகத்தி
- இவற்றின் இலைகளை கொண்டும் அர்ச்சிக்கலாம்.
பிள்ளையார் சதுர்த்திக்கு 21 நைவேத்தியங்கள்
------------------------------------------------------------------------------------
சாதம்,
நெய் மிளகுப் பொங்கல்,
சர்க்கரைப் பொங்கல்,
கற்கண்டு பொங்கல்,
பால்பொங்கல்,
பால்சாதம்,
அக்கார வடிசில்,
சம்பா சாதம்,
தயிர்சாதம்,
புளிசாதம்,
எலுமிச்சை சாதம்,
தேங்காய் சாதம்,
தானியப்பொடி சாதம்,
மருந்துக்குழம்பு சாதம்,
சாம்பார் சாதம்,
நாரத்தங்காய் சாதம்,
மாங்காய்சாதம்,
துவையல் சாதம்,
அரிசி உப்புமா,
ரவா உப்புமா,
மாவுக்கனி
மற்றும், கொழக்கட்டை வகையறாக்கள், வடை, அப்பம், சுண்டல்.
பழங்கள். நாவல் பழம், விளாம்பழம், பிரப்பம்பழம், கரும்பு, கொய்யா பழம், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்.
தாம்பூலம், கற்பூரம், சாம்பிராணி வகையறாக்கள்.
ஆகிய 21 வகை நைவேத்தியங்களை விநாயகருக்குப் படைத்து வழிபடலாம்.
விநாயகரின் துதி பாடலில் சித்தர்கள் சொன்ன மூலிகைகளின் காயகல்ப ரகசியம் - Vinayagar Song Kayakalpa
secret
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
இது யோகத்தின் தலைவி தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிய விநாயகர் துதிப் பாடல் ஆகும். இப் பாடல் வரிகளை சாதாரணமாய் காணும் போது விநாயகப் பெருமானை தினமும் துதித்து, அவர் பாதம் சரணடைபவர்க்கு நல்ல வாக்கு வன்மையும், திடமான மனோ பலமும், மகா லட்சுமி கடாட்சமும், உடல் பலமும் கிட்டும் என்ற பொருள் விளக்கம் தோன்றும்.
ஆனால்...
இந்த பாடலின் உண்மை விளக்கம் அதுவல்ல, இப்பாடலை வடித்த ஔவையார் நரை, திரை, மூப்பு என்ற மூன்றும் உடலில் தோன்ற விடாமல் காக்கும் காயகல்ப மருந்து முறை இரகசியத்தை சூட்சுமமாய் வடித்துள்ளார். அந்த ரகசியத்தை சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்.....
சித்தர் பாடல்களில் உள்ள பரிபஷைகளின் விளக்கம் அறிந்தவர்களுக்கு இப்பாடலில் உள்ள சூட்சுமம் மிக எளிதாய் புரியும்.
மேற்கண்ட பாடல் வரிகளில்:-
(1) மாமலராள் பூக்கொண்டு என்பது -
தாமரைப்பூ
(2) மேனி என்பது - குப்பைமேனி
(3) திருமேனி என்பது - வல்லாரை
(4) தும்பி என்பது - தும்பை
(5) கையான் என்பது - கையான்தகரை
[கரிசலாங்கண்ணி]
(6) பாதம் என்பது - செருப்படை....
மொத்தத்தில்,
தாமரைப் பூவில் - செம்புச் சத்து
குப்பைமேனியில் - தங்கச் சத்து
வல்லாரையில் - இரும்புச் சத்து
தும்பையில் - நாகச் சத்து
கரிசலாங்கண்ணியில் - இரும்புச் சத்து
செருப்படையில் - ஈயச் சத்து
உடலுக்கு மிகவும் அவசியத் தேவையான இந்த ஆறுவித உலோகச்சத்துக்கள் இந்த மூலிகைகளில் அடங்கியுள்ளன. இந்த
மூலிகை உலோகச் சத்துக்களினால் உடல் மிகவும் ஆரோக்கியமாகவும்,தேக
பலத்துடனும், நோயெதிர்ப்பு சக்தியுடன்
என்பது முற்றிலும் உண்மை.
இறை வழிபாடும், உடல் நலமும் இரண்டும் ஒன்றாய் அமைந்த அற்புத பாடல் இது.....
செயல்முறை விளக்கம்:-
-----------------------------------------
தாமரைப்பூ, குப்பைமேனி, வல்லாரை, தும்பை, கரிசலாங்கண்ணி, செருப்படை இந்த ஆறு வகை மூலிகைகளையும் சேகரித்து மேற்கண்ட....
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்" என்ற பாடல் வரிகளால் விநாயகப்பெருமானை அர்ச்சனை செய்து பூஜித்து பின்பு எடுத்து இவைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து நன்கு காய்ந்தவுடன் இடித்து தூள் செய்யவும். [ஆறு மூலிகையும் சம அளவு ]அல்லது மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
இது ஒரு காயகல்ப மூலிகை சூரணமாகும். இதனை காலை,மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 200-மிலி பசும்பாலில் கலந்து பனங்கற்கண்டு சிறிது சேர்த்து அருந்தவும்.
ஒரு மண்டலம் தொடர்ந்து உண்ண உடலில் உள்ள அனைத்து நோய்களும்
நீங்கும். ஆரோக்கியம் மிளிரும், தேகம்
திடப்படும், மேலும் மேற்கண்ட பாடலில் உள்ள அனைத்து நற்பலன்களும் கிட்டும்.
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar
- சித்தர்களின் குரல்.

No comments:

Post a Comment