Search This Blog

Saturday, September 11, 2021

மஹாலக்ஷ்மிவிரத பூஜை


மஹாலக்ஷ்மிவிரத பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று மஹாலக்ஷ்மி யை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
1. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம்மஹாலக்ஷ்மி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.
2. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மஹாலக்ஷ்மி நித்தியவாசம் புரிகிறாள்.
3. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
4. மஹாலக்ஷ்மி வில்வத்தால் அர்ச்சித்து பூஜிக்கலாம்.
5. மஹாலக்ஷ்மி யை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.
6. வில்வமரத்தை வலம் செய்வது மஹாலக்ஷ்மியை வலம் வருவதற்கு சமம்.
7. வாமன புராணத்தில் மஹாலக்ஷ்மி யின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
8. வில்வ மரத்தின் சொரூபம், வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப் படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மஹாலக்ஷ்மி சொரூபமாக விளங்குகிறது.
9. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மஹாலக்ஷ்மி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.
10. துளசி செடியிலும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.
11. மஹாலக்ஷ்மிபூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று மஹாலக்ஷ்மி யை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
12. மஹாலக்ஷ்மிவிரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள்.
13. மஹாலக்ஷ்மி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
14. மஹாலக்ஷ்மிவிரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
15. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் மஹாலக்ஷ்மி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மஹாலக்ஷ்மி யை போற்றி மஹாலக்ஷ்மி விரதத்தை மேற்கொள்கின்றனர்.
16. மஹாலக்ஷ்மி க்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.
17. பூஜை செய்யும் போது மஹாலக்ஷ்மி க்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
18. வீடுகளில் மஹாலக்ஷ்மி படம் வைத்து வெள்ளிக் கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் மஹாலக்ஷ்மி க்கு மிகவும் பிடிக்கும்.
19. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே மஹாலக்ஷ்மி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
20. மஹாலக்ஷ்மிநித்திய சுமங்கலி என்றழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் மஹாலக்ஷ்மி விரதம் மேற் கொள்கிறார்கள்.
21. மஹாலக்ஷ்மிவிரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
22. மஹாலக்ஷ்மிகணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக மஹாலக்ஷ்மி விரதம் கருதப்படுகிறது.
23. மஹாலக்ஷ்மி க்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதி கம்.
24.மஹாலக்ஷ்மி அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
25. மஹாலக்ஷ்மிபூஜை செய்யும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு,கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
26. மஹாலக்ஷ்மி வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.
27. மஹாலக்ஷ்மிபூஜைக்கு பயன் படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன் படுத்தலாம்.
28. மஹாலக்ஷ்மி விரதம் இருந்து பூஜை செய்பவர்கள், அந்த பூஜைக்கு வரும் ஏழைகளை கடவுளாகவே பாவித்து நடந்து கொள்ள வேண்டும்.
29. மஹாலக்ஷ்மி யை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.
30. மஹாலக்ஷ்மிபூஜை செய்யும் தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயாசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment