Search This Blog

Friday, September 3, 2021

சுந்தர ராமசாமி, (1931 - 2005)

வாழ்வில் எழுத்தால் அனைவரையும் வியக்க வைத்த வித்தகர்..

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.
இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார்.
பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.
மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கியது இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்).
இடைபட்ட காலத்தில் புத்தியலின் பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் திளைத்துள்ளார்..
தன் இளைய பருவத்தில், தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார்.
பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.
1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்து..
இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார்.
மேலும் மலையாள இலக்கியச்
சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான
ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது.
சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்
இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார்.
குமரன் ஆசான் நினைவு விருது
இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.
கதா சூடாமணி விருது (2004
படைப்புகள்
நாவல்
ஒரு புளியமரத்தின் கதை (1966)
ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)
சிறுகதைகள்
சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
காற்றில் கரைந்த பேரோசை
விரிவும் ஆழமும் தேடி
தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
இறந்த காலம் பெற்ற உயிர்
இதம் தந்த வரிகள் (2002)
இவை என் உரைகள் (2003)
வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
வாழ்க சந்தேகங்கள் (2004)
புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
மூன்று நாடகங்கள் (2006)
வாழும் கணங்கள் (2005)
கவிதை
சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)
மொழிபெயர்ப்பு
செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)
நினைவோடைகள்
க.நா.சுப்ரமண்யம் (2003)
சி.சு. செல்லப்பா (2003)
கிருஷ்ணன் நம்பி (2003)
ஜீவா (2003)
பிரமிள் (2005)
ஜி.நாகராஜன் (2006)
தி.ஜானகிராமன் (2006)
கு.அழகிரிசாமி.
சிறுகதைகள் பட்டியல்
1.முதலும் முடிவும்
2.தண்ணீர்
3.அக்கரை சீமையில்
4.பொறுக்கி வர்க்கம்
5.உணவும் உணர்வும்
6.கோவில் காளையும் உழவு மாடும்
7.கைக்குழந்தை
8.அகம்
9.அடைக்கலம்
10.செங்கமலமும் ஒரு சோப்பும்
11.பிரசாதம்
12.சன்னல்
13.லவ்வு
14.ஸ்டாம்பு ஆல்பம்
15.கிடாரி
16.சீதைமார்க் சீயக்காய்த்தூள்
17.ஒன்றும் புரியவில்லை
18.வாழ்வும் வசந்தமும்
19.ரயில் தண்டவாளத்தில் ஓடும்
20.மெய்க்காதல்
21.மெய்+பொய்=மெய்
22.எங்கள் டீச்சர்
23.பக்த துளசி
24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு
25.தயக்கம்
26.லீலை
27.தற்கொலை
28.முட்டைக்காரி
29.திரைகள் ஆயிரம்
30.இல்லாத ஒன்று
31.காலிப்பெட்டி
32.அழைப்பு
33.போதை
34.பல்லக்குத் தூக்கிகள்
35.வாசனை
36.அலைகள்
37.ரத்னாபாயின் ஆங்கிலம்
38.குரங்குகள்
39.ஓவியம்
40.பள்ளம்
41.கொந்தளிப்பு
42.ஆத்மாராம் சோயித்ராம்
43.மீறல்
44.இரண்டு முகங்கள்
45.வழி
46.கோலம்
47.பக்கத்தில் வந்த அப்பா
48.எதிர்கொள்ளல்
49.காணாமல் போனது
50.விகாசம்
51.காகங்கள்
52.மேல்பார்வை
53.பட்டுவாடா
54.நாடார் சார்
55.நெருக்கடி
56.இருக்கைகள்
57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை
58.மயில்
59.பையை வைத்துவிட்டு போன மாமி
60.தனுவும் நிஷாவும்
61.களிப்பு
62.நண்பர் ஜி.எம்
63.ஒரு ஸ்டோரியின் கதை
64.கூடி வந்த கணங்கள்
65.கதவுகளும் ஜன்னல்களும்
66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
67.அந்த ஐந்து நிமிடங்கள்
68.ஈசல்கள்
69.கிட்னி
70.பிள்ளை கெடுத்தாள் விளை
71.கொசு, மூட்டை, பேன்
72.ஜகதி
Thanks

Pathmanathan Mahadevah

No comments:

Post a Comment