Search This Blog

Thursday, December 31, 2020

சுகமாய் வாழ சுந்தர காண்டம்!


ராமாயணத்தில் எந்த பகுதியை படித்தால் உடனடியாக ராமனின் அருள் கிடைக்கும்
ராமனின் அருள் கிடைக்க ராமாயணத்தை படித்தே ஆகவேண்டும் என்று அவசியமில்லை மனப்பூர்வமாக ராமனை நினைத்தாலே அவனது அருள் பரிபூரணமாக கிடைக்கும் மிக சிறந்த ராம பக்தர்களான அனுமனும் சபரியும் ராமாயணத்தை படித்தா அருள் பெற்றார்கள் ராமனை நினைத்தாலே பக்தியின் ஊற்றுக்கண் தானாக திறக்கும்
இருந்தாலும் நமது பெரியவர்கள் ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தை படிப்பதனால் வாழ்வில் பல நலன்களையும் பல வளங்களையும் பெறலாம் என்று சொல்கிறார்கள் அப்படி பெற்ற சிலரையும் நான் சந்தித்து இருக்கிறேன் சுந்தர காண்டம் முழுக்க முழுக்க ஒரு ராம பக்தனின் அதாவது அனுமனின் புகழ்பாடும் பகுதியாக இருந்தாலும் ராம சிந்தனையானது எவ்வளவு உயர்ந்த மகோன்னதமான நற்பேறை தரும் என்பதை தத்துவார்த்த அடிப்படையில் விளக்குகிறது கம்ப இராமாயண சுந்தர காண்டபகுதியாக இருந்தாலும் சரி வால்மிகியின் சுந்தர காண்ட பகுதியாக இருந்தாலும் சரி அது நமக்கு ராமனை பரிபூரணமாக உணர்த்துகிறது எனவே எல்லா காண்டங்களையும் படிப்பது சிறப்பு என்றாலும் சுந்தர காண்டம் படிப்பது வாழ்க்கை துக்கங்களை முடிவுக்கு கொண்டுவரும் .

No comments:

Post a Comment