Search This Blog

Tuesday, December 29, 2020

தென்றல் உறங்கிய போதும்

 படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி 
 
 
 
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
 

No comments:

Post a Comment