Search This Blog

Saturday, July 30, 2016

தீண்டத்தகாதவன்..


ஈழத்து தலித் சிறுகதைகள்
தொகுப்ப சுகன்..
நேற்றைக்கு படிக்க தொடங்கினேன்..
முன்னுரை படித்து முடித்து வெளியே
செல்ல நேர்ந்தது..
புத்தகத்தையும் எடுத்துகொண்டு வெளியே நடந்தேன்..
கதவைப் பூட்டும் சமயம் என்கண்ணில்
பட்ட காட்சி இது..
நான்கு காக்கைகள் ஒரு ஓணானை கடித்து
காலை இரையாக்கி கொண்டிருந்தது..
சில தூரத்தில் அருகிலே இன்னொரு ஓணான்
அதைப் பார்த்து கொண்டிருந்ததை
நானும்பார்த்துக்கொண்டேன்..
இடம்போய் சேர்ந்தபின்பு வாசிப்பை தொடர்ந்தேன்..
17கதைகள்..
வலிகள் கொடுக்கும் வார்த்தைகள்
பத்திகளாய்..
ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள்
ஓங்கி ஒலிப்பதில்லை..
குரல்வளைகள் நெரிக்கப்பட்டு ஊமையாக்கப்படும்..
முதல் கதையான தீண்டத்தகாதவன்
காலம் முழுவதும் ஒடுக்கப்பட்டவனாக வாழ்ந்தவன்
பொருளாதார நிலையில்உயர்ந்தவுடன் எப்படி நடத்தப்படுகிறான் அவன் மனநிலை எப்படிஇருக்கும் எனவலியோடு பதிவிடுகிறது..
நிலவிலே பேசுவோம் சிறுகதை எளியவர்களின்
குரலை பதிவிடுகிறது..
ஆற்றல் மிகுகரத்தால் சிறுகதை எப்போதும்மிதிபடுபவன் மீளும் கதைசொல்லி பயணப்படுகிறது..
களம் சிறுகதை நின்று சாதிக்கும் எளிய மனிதரின் கதையை சொல்கிறது..
காலத்தால் சாகாதது..
முடியும்போது சுருக்கென்று குத்தும்..
தாழ்த்தப்பட்டவனாக வாழ்தலை விடஅதைதிரும்ப திரும்ப சொல்லி காட்டி வாழ்தல் அசிங்கமானது எனஉணர்த்தும்..
தப்புக்கணக்கு..
மண்குடமாகினும் எளியவர் உடைத்தால் பொன்குடம் என்பதற்கிணங்க அவமானங்கள் அவர்களுக்கு எப்படியெல்லாம் வெகுமதியாய் கிடைக்கும் என்பதை பேசுகிறது..
கவரிமான்கள் சிறுகதை காதல் என்பது ஏந்தசாதிக்கு சொந்தம் என்றார் போல் கேள்வி கேட்கிறது..
நெல்லிமரப்பள்ளிக்கூடம் தொலைந்து போன ஒரு
பள்ளியை கண்ணில் தெரியவைக்கிறது..
வெளியில் எல்லாம்பேசலாம் சிறுகதை
நம்வெளியில் விரித்தாடும் சாதிக்கொடுமைகளை சாடுகிறது..
சாவிலும்சாதியை பற்றி இருக்கும் கதையைசொல்கிறது கோடாரிக்காம்புகதை..
அசல் சிறுகதை சாதியால் வேலை இழந்த ஓர் நல்ல வேலையாளனின் கதைபேசுகிறது..
கேள்விகள் சிறுகதை சாதிக்கு முன்னும் சாதிக்கு பின்னுமாக ஓர் உள்ளத்தின் மனநிலை..
ஊசி இருக்கும்இடம் கூட.. கதையில்
ஊசி இருக்கும் இடம் கூட உயர்வு தாழ்வென்று உண்டு எனமனதை குத்துகிறது..
கண்ணி கதை முடியும்போது கண்ணீர் வரவழைக்கும்..
ஒரு பனஞ்சோலை கிராமத்தின்எழுச்சி எனும் தன்
வரலாற்று நாவலிலிருந்து ஒருபாகம் இந்தபகுதி பெயரில் தொற்றி கொண்டிருக்கும் சாத்தியப்பாடுகள் பேசுகிறது..
பஞ்சமர் நாவலில் ஒரு பகுதி குடுமபத்தில் சாதி புகுந்தவலியை இறப்பில் சொல்லும்..
கடைசியாக வல்லமைதாராயோ.. பகுதி சிறுதெய்வத்தை சாதியால் பார்ப்பதும் அவன் கதறி அழுவதும் பாடலாய் நம்காதுகளில்..
புத்தகம் முடிந்தது.. வலிகளும் வேதனைகளும் எப்போது முடியும் அவர்களுக்கு என்ற கேள்வியை முன்வைக்கிறது..
முழுவதும் சிலோன் தமிழில் இந்நூல்.. வாசிக்கவாசிக்க நாம் அவர்களாக இருந்தால் இப்படித்தான் இருந்திருப்போம் என்றநினைப்பே மனதை பதைபதைக்கிறது..
முன்னாடிநான் பார்த்த காட்சியை இதோடு ஒப்பிடுகிறேன்.. காக்கைகள் உயர்சாதி ஓணான்கள் எளியவர்கள் கொன்று போட்டாலும் வெட்டிஎறிந்தாலும் பக்கத்தில் உள்ள ஓணான்களாகிய நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்..
ஈழம் என்பது வெறும் ஈரம் நிறைந்ததல்ல அது நம்சகோதரர்கள் கண்ணீர்.. சாதியும் தீண்டாமையும் வேர் பற்றி அழித்தி கொண்டிருக்கும் அவர்கள் நிலை நம்மை அடைய வெகுதூரமில்லை..
முழுவதும் சாதியம்காற்றில் கலப்பதற்குள் என்சரீரம் மடிய விரும்புகிறேன்.. அதுவரை போராடும் வல்லமைதாராயோ தமிழ் அன்னையே....
-அபிஜீ

No comments:

Post a Comment