Search This Blog

Sunday, March 9, 2014

விஷம் இறங்க...

விஷம் இறங்க...

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி விஷம் உள்பட எந்த விஷ கடியானாலும் விஷம் இறங்கும்.

பெண்கள் இடுப்பில் புண் குணமாக...

பெண்கள் இடுப்பில் புடவை கட்டும் இடத்தில் இறுக்கி கட்டுவதால் ஏற்படும் புண் கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்.

குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு நீங்க...

முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைசங்கு ஊற்றினால், வயிற்று உப்பிசம், மலக்கட்டு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

வெட்டுக்காயம் குணமாக...

இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

ஆரம்ப கர்ப்ப சிதைவை தடுக்க...

கர்ப்ப தாய்மார்கள் அத்திபழம், தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உண்டு வந்தால் ஆரம்ப கர்ப்ப சிதைவிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment