Search This Blog

Monday, September 5, 2011

பொன்மொழிகள்



அறிவை விலை கூறும் அறிவாளிகள்?


 எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.

- கெம்பில்.

 அன்பைப் பகிர்ந்து கொள்வது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோசம்.

- ஸ்டேபிள்.

 சிறப்பான வழியைத் தேர்வு செய்யுங்கள். அது நீங்கள் பெற விரும்பியதைப் பெற்றுத் தரும்.

- ஷீல்லர்.

 பாமர மக்களின் நிலையே ஒரு சமுதாயத்தின் உண்மை நிலையாகும்.

- வில்லியம் தர்ஸ்டன்.

 உதவியின் மதிப்பு என்பது உதவுகின்றவன் மதிப்பளவே ஆகும்.

- டென்னிசன்.

 அநீதியானது மனிதர்களிடையே சச்சரவுகளை விளைவிக்கிறது. நீதியோ தோழமையை வளர்க்கிறது.

- பிளாட்டோ.

 அறிவுள்ளவன் தன் செல்வத்தை மூளையில் வைத்திருக்க வேண்டும். தன் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது.

- ஜோதைன்ஸ்வீப்ட்.

 உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமானால் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்.

- ராபர்ட் ஷீல்லர்.

 சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களே சட்டத்தை ஆட்சி செய்கின்றனர்.

- கோல்டுஸ்மித்.

 அறிவாளிகள் பணத்திற்கு அடிமையாக இருப்பதால் தம் அறிவை விலை கூறுகின்றனர்.

- வினோபாஜி.

 வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான்.

- பெர்ஸியஸ்.

 ஒருவனிடம் அச்சம் கொண்டால், அவனிடம் அன்பு கொள்ள முடியாது.

- அரிஸ்டாட்டில்.

 ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிப்பது போலாகும்.

- டெமாஸ்தனிஸ்.

 சோம்பலும் சோர்வு கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெருமுயற்சியோடு வாழ்வது மேலானது.

- புத்தர்.

 பொய்க்கல்வி பெருமை பேசும். உண்மை அறிவு தன்னடக்கம் சொல்லும்.

- ரஸ்கின்.

 கஷ்டத்தோடு போராடுபவனுக்கு நன்மை எது என்று தெரியாது.

- ஹாப்பர்டு.

 சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.

- அரோன்புர்.

 எழுதப்படும் சொல்லை விட பேசப்படும் சொல்லே வலிமையானது.

- ஹிட்லர்.

 வல்லமை அல்லாத நீதி ஆற்றல் அற்றது. நீதி இல்லாத வலிமை கொடுங்கோன்மை.

- பேஸ்டீஸ்.

 பண்போடு பொருந்தாத அனுதாபமெல்லாம் மறைமுகமான தன்னலமே.

- கால்ரிட்ஜ்.

தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.

No comments:

Post a Comment