Search This Blog

Thursday, May 5, 2011

முதல் தொழில் அரசியல்!

முதல் தொழில் அரசியல்!

ஒரு பாதிரியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது.
"மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழமையானது!" என்றார் பாதிரியார்.
"சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் படைப்பதற்காக ஆணின் உடம்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்தார். அதுவே முதல் செயல். எனது தொழில்தான் மிகப் பழமையான தொழில். கடவுள் பெண்ணைப் படைப்பதற்கு முன்பு உலகில் வெறும் கலவரம் மட்டும்தான் இருந்தது!" என்றார் டாக்டர்.
"சரியாகச் சொன்னீர்கள் டாக்டர்! உங்கள் வாதப்படி எனது தொழில்தான் பழமையான தொழில்" என்றார் அரசியல்வாதி.
"எப்படி?"
"கடவுளின் அறுவை சிகிச்சைக்கு முன்பு உலகில் வெறும் கலவரம்தான் இருந்தது என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அந்தக் கலவரத்தை என்னைப் போன்ற அரசியல்வாதி தவிர, வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்? எனவே, என் தொழில்தான் மிகப் பழமையானது." என்றார் அரசியல்வாதி.
-ஓஷோ ரஜ்னீஷ் சொன்ன குட்டிக்கதை

No comments:

Post a Comment