| ஆராய்சி செய்தி |
| 3500 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய் தோன்றியது: ஆய்வில் தகவல் |
சிடி ஸ்கேன் எனப்படும் மனித குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஆய்வு செய்த போது மம்மியாக புதைக்கப்பட்டிருந்த இளவரசிக்கு இதய நோய் இருப்பது தெரியவந்தது. இதய ஸ்கேனில் இளவரசிக்கு இதயம், மூளை, வயிறு மற்றும் கால்பகுதிகளுக்கு செல்லும் ரத்தக்குழாய் பகுதிகளில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எகிப்து இளவரசி இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கூறினர். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைகழக நிபுணர்களுடன் அமெரிக்க இதய மருத்துவ நிபுணர்கள் 52 மம்மி உடல்களை ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் போது எகிப்து இளவரசிக்கு உள்ள நோய் விவரங்கள் தெரியவந்தன. எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேசிய பழங்கால அருங்காட்சியகம் உள்ளது. அங்கு மம்மிக்கள் மீது முழு ஸ்கேன் செய்து நிபுணர்கள் பழங்காலத்திலேயே இதய நோய்த் தாக்கம் இருப்பதை உணர்த்தி உள்ளனர். ஆய்வு செய்த மம்மிக்களில் பாதி பேருக்கு இதய ரத்தக் குழாய்கள் தடித்து இருப்பது தெரியவந்தது. இளவரசி அக்மோஸ் கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகள் முன்பாக வாழ்ந்தவர். இந்த இளவரசி தனது 40 வயதில் மரணம் அடைந்துள்ளார். மிக சொகுசான வாழ்க்கை நடத்திய அந்த இளவரசி மிக சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தார். அந்த இளவரசி பழம், காய்கறிகள், மீன் வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு இருப்பார் என கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வாளர் மருத்துவர் கிரிகோரி தாமஸ் கூறினார். |
Search This Blog
Thursday, May 19, 2011
3500 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய் தோன்றியது: ஆய்வில் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment