Search This Blog

Tuesday, August 11, 2015

மலை

அடர்ந்த மரங்களுடன்
சட்டென கீழிறங்கும் அருவியுடன்
பள்ளத்தாக்குகள் நிறைந்த
மலை பார்த்து
அவள் பயங்கொள்வது இல்லை
தன்னுடைய ஈரத்தை
எதன் மீதும் பரவ விடுகிற
மலைபற்றிய பெருமிதத்தில்
திளைத்திருப்பவளாக இருப்பதினால்
பிரவாகமாகும் தோழமையில்
சிற்றருவிகளும்
காட்டோடைகளும்
அவளிடம் பெருக்கெடுக்கின்றன
உள்ளூரின்
வழக்குமொழியில் மலையிடம்
அவள் பேச
பிரபஞ்சத்தின் ஆதிமொழியில்
அவளை மொழி பெயர்க்கிற
மலையிடமிருந்து
கற்றுக்கொள்கிறாள்
தியானத்தின் நிதானத்தையும்
திடத்தையும்
அவளிடம் கடத்திக்கொண்டே இருக்கிற மலை
அவளின் குருவாகவும் இருக்கிறது .
Sakthi Jothi

No comments:

Post a Comment