Search This Blog

Wednesday, August 13, 2014

ஏழரைச் சனி என்ன செய்யும்?

ஏழரைச் சனி என்ன செய்யும்? காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப்பூர்வமாகப் பேச வைக்கிறது. இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்... உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம்.
சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்... எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் போட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்... எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக, குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் பிரச்னை பெரிதாகும். தேன்கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வயது வரையுள்ள ஏழரை சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்க வேண்டும். ஏட்டறிவு, எழுத்தறிவு, சொல்லறிவு எல்லாவற்றையும் தாண்டிய அனுபவ அறிவை ஏற்றி வைப்பார். தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளையை தடியெடுத்துத் திருத்தும் வாத்தியார்தான் சனி பகவான். ‘‘சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப் போடா’’ என்று அம்மா சொன்னால், ‘‘எங்கயோ இருக்கற சாமிக்கு என் பிரேயர்தான் முக்கியமா?’’ என்பார்கள். ஆனால், சிக்கலில் தவிக்கும்போது தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல், ‘‘சும்மா ஜாலிக்குத்தான் அப்படி பண்ணேன்’’ என்று ஏழரையில் பல வினைகளைக் கொண்டு வருவார்கள். ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும். இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி பகவான். சரி, இதற்கு என்னதான் செய்வது? குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட் என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்.
அடுத்ததாக இரண்டாவது சுற்று! இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘ஒண்ணுமே இல்லாத ஓட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் இப்படி எடுத்துக் கொள்கிறார்? யாரிடமிருந்து பறித்துக் கொள்வார்? ‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது. எனக்கு மிஞ்சி என்ன இருக்கு’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர், மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். எதுவும் இல்லாதபோது இருந்த வீரமெல்லாம், எல்லாமும் வந்த பிறகு போய்விடும். ‘‘நாலு பேர் என்ன நினைப்பாங்க’’ என்றே, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் தெரியாமல் ஓரமாக உட்கார்ந்து உள்ளுக்குள் அழ வைப்பார். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட், கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும், கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனா, ‘‘இந்த விஷயத்தைப் போய் நாம எப்படி சொல்றது? என்னை தப்பா நினைச்சிட்டா...’’ என்று தயங்குவீர்கள். பிறகு எப்படித்தான் இருக்க வேண்டும்? வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் குடிசை மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு, வாரி சுருட்டும்போது சனி பகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால், வேலை பார்த்த நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால், அதலபாதாளம்தான். தவறான வாய்ப்புகள் வந்தாலும், திசை மாறக் கூடாது. ‘‘சார்... நம்ம தொழிலுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும் கலந்து விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமில்லை. நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக மனதில் பதித்துக் கொள்ளுங்கள். ஏழரை சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர். இன்னொரு விஷயம்... நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும், அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளை குறைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் எது எதுவோ சாப்பிடும்போது, தயிர் சாதத்தோடு அமைதியாக இருங்கள். எல்லாவற்றிலும் எல்லை தாண்டக் கூடாது. எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று இருக்கக் கூடாது. சனி பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தர்றாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். பிரதிபலன் பாராமல் உதவிகள் செய்தால், பொங்கு சனி நல்ல பலன்களைக் கொடுக்கும்.
அடுத்து மூன்றாவது சுற்று. கிட்டத்தட்ட ஐம்பது வயதைத் தாண்டி வரும் ஏழரை சனி. இதுதான் உங்களுக்கு கடைசிச் சனி என்று யாராவது பயமுறுத்தினால் கலங்காதீர்கள். படபடப்பையும் பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களையும் மீறி ஒரு கட்டுப்பாடு உள்ளுக்குள் வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால், அதை மூன்றாக்கி, அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான்... அதீத இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தி, உயர்த்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போகத் தயாராக இருந்தால், பையை எடுத்துக்கொண்டு தான்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம். ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் வீட்டை அலுவலகமாக பார்க்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மா ஆகலாம். ஆசைகளைத் துறந்தால் புத்தன் ஆகலாம் என்பதை இந்த சுற்றில் மறக்காதீர்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரை சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல. சனி பகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள். தடுக்கி விழுந்த குழந்தையை தூக்கி விடுவதைப் போல, ஆங்காங்கு கோயில்களில் வீற்றிருக்கும் இறைவனே மனிதர்களைத் தூக்கி நிறுத்துகிறார். ‘‘என்னைப் பார்த்து பயப்படாதீர்கள். நான் எத்தனை கருணைமிக்கவன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்கிற விதமாக சனி பகவான் பல்வேறு தலங்களில் எழுந்தருளி இருக்கிறார். அப்படித்தான் திருநள்ளாறு தலத்திலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார். இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது என்று பாருங்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகளைத் தேடி வந்தோம். ‘முட்ட முட்டப் பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ’ என்கிறாள் ஔவை பாட்டி. ‘‘மிகவும் கடுமையான பஞ்சமாக இருந்தாலும், பிரச்னைகள் துரத்தினாலும், நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு ஈசனுடையது என்பதை நெஞ்சமே நீ மறக்காதே’’ என்கிறாள். எனவே, எத்தனை பிரச்னைகள் வந்தாலும் இறைவனை சரணாகதி செய்வோம் பணவசதி உள்ளவர்கள் தகுந்த ஹோம்மம் செய்து கொள்வதால் கடுமையை குறைககலாம். கண்னி துலராசி விருச்சிக ராசி மேலும் மீனம் கடக ராசிக் காரர்களுகுகு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை

துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிட அதிவேகமாக ஆக்சன் எடுக்கும் ஆக்சன் கிங்!!!
தன்னுடைய துப்பாக்கி சத்ததாலே தமிழகத்தை தன்பக்கம் திரும்பி பார்த்த ஒரு தைரியமான, எவருக்கும் பயப்படாத நேர்மையான அதிகாரி,
வீரமும், கோபமும் விளைந்து நிற்கும் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் பிறந்தவர்தான் இந்த வல்லவர்!!! தமிழக காவல்துறையில் அதி உயர் கல்வித் தகுதியுடையவர் இவர்.
எம்.ஏ. (சரித்திரம்) எம்.ஏ. (போலீஸ் நிர்வாகம்) என டபுள் எம்.ஏ.வுடன், பி.ஹெச்டி வரை முடித்த ஒரே தமிழக போலீஸ் அதிகாரி இவர்தான்
தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தபிறகு ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபரர் கலை கல்லூரியில் ப்ரோபோசராக பணியில் சேர்ந்தார், பின் மூன்று வருடம் பணியை தொடர்ந்து 1994ஆம் ஆண்டு எஸ்.ஐ தேர்வுக்கு சென்றார்,
அதன் காரணமாக 1997ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார், பின்னர் 1999 ஆம் ஆண்டு புதுகோட்டை, கீரனூர்-இல் உதவி ஆய்வாளராக பணியை தொடர்ந்தார்,
என்னுடைய முதல் என்கவுண்டர், திருச்சி லால்குடி கோர்ட் மாஜிதிரட் முன்னாடி கூண்டில் இருந்தவரை கழுத்தை அறுத்து கொன்றான் ரவுடியான கோசிஜன், அவன்தான் இவருடைய துப்பாக்கிக்கு கிடைத்த முதல் களை!!!
அப்போதும் அவருக்கு எந்த ஒரு பதட்டமும் இருந்தது இல்லை, அவருடைய பி.பி பரிசோதனை செய்த மருத்துவர் நார்மலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்தார், இப்பவும் அப்படியேதான் இருக்கிறார், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை ரோல் மாடலாக கொண்டிருப்பார்கள், அதுபோல இவருக்கும் ரோல் மாடல் ஆப்பிசர் உண்டு, அவர்கள் யாரென்றால் "திரிபாதி சார் மற்றும் வால்டர் தேவாரம்" அவர்கள்..... இவர்களை போல தன்னுடைய பாதையை அமைக்கவேண்டும் என்றே லட்சியம் கொண்டவர்,
இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், நெல்லுக்கு பக்கத்தில் களை வளரத்தான் செய்யும், அதை சமையம் பார்த்து புடுங்கி எறியவேண்டும், இல்லையென்றால் அது நெல்லையும் நாசமாக்கி விடும், வயலையும் நாசமாக்கி விடும், அது போலதான் இவருடைய ஆக்சனும், 1000 பேர் சந்தோசமாக இருக்கிறார்கள், அந்த 1000 பேரின் சந்தோசத்தை ஒருவன் கெடுக்கிறான் என்றால் அவனை கொள்வதில் தவறு இல்லை என்பதே இவரது எண்ணம்!!!
ரவுடிசத்தை ஒழிப்பது என்ற விஷயத்தில் முனைப்பான அதிகாரி என்று பெயரெடுத்த டி.எஸ்.பி. வெள்ளத்துரை தன்னுடைய கண்பார்வையிலேயே கண்ணீர் விடவைத்தவர், தமிழகத்தில் ரவுடிகளை வேர் அறுப்பதே இவருடைய லட்சியம்... எவருக்கும் பதறாமல் ஆழ்மனதில் தவறு என்று தெரிந்ததை தைரியமாக தட்டிகேட்கும் தளபதி!!!
மக்கள் பயபடமால் நடமாட ஆதரவாக இருக்கும் கண்ணியமிக்க கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய.திரு.வெள்ளத்துரை அவர்களுடைய பணிசிறக்க, பணி தொடர மனதார வாழ்த்துகிறோம்.... சல்யூட்....
என்றும் உங்களுடன்..........

"The Fossil Record"

People talk about "The Fossil Record" but no one ever has a record to show you. So I made a giant list. The reason we have mostly skulls is because they are made to handle impact and seem to last longer than any other part of the body. And many of these were found in places that no one had ever found anything. These people usually just go out to some place random country that someone else found something in and look around the desert or mountains, etc. Modern Humans are most notable for our teeth, which marks the true shift in to the modern type of humans. Eventually mummies became the best way for Archaeologists to get a "snapshot in time".








thanks http://finshaggy.blogspot.com.au/

Tuesday, August 12, 2014

Islamic Theology

Muslims do not only believe that God is just good and omnipotent. Muslims believe that part of God’s names and attributes include ‘the Just’, ‘the Severe in Punishment’, ‘the Wise’, ‘the Avenger’, and ‘the Compassionate’, amongst many others. Muslim does not reduce God to parts, rather God is seen as one and unique in context of all his names and attributes. So if God was just good and omnipotent, then there may be problem in reconciling suffering and evil in the world. However if you include attributes such as ‘the Severe in Punishment’ and ‘the Wise’, these problems would not exist. Because perceived evil and suffering in the world can be due to,
• God’s punishment as a result of our sins and bad actions.
• God’s wisdom, as there may be divine wisdom in permitting evil and suffering. Even if we can’t evaluate what the wisdom is, it doesn’t mean it is not there. To argue such a thing would be a logical fallacy, known as the argument from ignorance (argumentum ad ignorantiam). The story of Khidr which can be found in the 18th chapter of Qur’an from verses 60 to 82 is an eloquent account of how God’s wisdom, whether understood or not, has positive results and benefits for humanity.
God has justified reasons to permit suffering and evil in the world. The intellectual richness of Islamic Theology provides us with many reasons, some of which include:
1. The primary purpose of the human being is not happiness rather it is to know and worship God. This fulfillment of the divine purpose will result in everlasting bliss and happiness. So if this is our primary purpose other aspects of human experience our secondary. The Qur’an, the book of the Muslims states: “I did not create either jinn or man except to worship Me.” [5]
2. God also created us for a test, and part of this test is to be tested with suffering and evil. The Qur’an mentions “The One Who created death and life, so that He may put you to test, to find out which of you is best in deeds: He is the all-Almighty, the all-Forgiving” [6]
3. Having hardship and suffering enables us to realise and know God’s attributes such as ‘the Victorious’ and ‘the Healer’. For example without the pain and suffering of illness we would not appreciate the attribute of God being ‘the Healer’. Knowing God is a greater good, and worth the experience of suffering or pain as it will mean the fulfillment of our primary purpose.
4. Suffering allows 2nd order good. 1st order good is physical pleasure and happiness and 1st order evil is physical pain and sadness. 2nd order goodness is elevated goodness such as courage and can only happen if suffering or evil exist. [7]
5. People can also suffer from past, present or future sins. God has knowledge of everything which is not contingent on time. Please refer to the story of Khidr in the Qur’an where it mentions Khidr’s reply to Prophet Moses “All this was done as a mercy from your Lord. What I did was not done by my own will. That is the interpretation of those actions which you could not bear to watch with patience.”[8]
6. God has given us free will, and free will includes choosing evil acts. [9]

In the outskirt of Jehlum (Pakistan), real brother and sister got married with eatch other. Father went franzic, cried, and went to police to register a police case against both brother and sister for marrying each other. Police registered FIR under Pak Penal Code 365-B that deals with Kidnapping, abducting or inducing woman to compel for marriage etc.
According to Abrahamic religions, first couple of human being was Adam and Eve. Now, if this story is true, then daughters and sons of Adam and Eve had to have gone through physical relationships to increase human population. Many call it incest other call it need of the time.
Now a logical question arises that if brothers and sisters can have sexual relationship back then in Adam and Eve’s presence, then why to register a FIR against Neo-Son and Daughter of Adam and Eve when they got married in first place? And so far as the concern of Pakistan Penal Code act 1860, it does not ban a brother marrying his sister.


Old London Street Scenes (1903) | BFI

Codex Gigas, ‘the Devil’s Bible’) is the largest and probably one of the strangest manuscripts in the world.

 It is so large that it is said to have taken more than 160 animal skins to make it and takes at least two people to lift it. It measures approximately 1 metre in length. According to legend, the medieval manuscript was made out of a pact with the ‘devil’, which is why it is sometimes referred to as the Devil’s Bible.




It was written in Latin during the 13th century AD, and although the origin of the manuscript is unknown, a note in the manuscript states that it was pawned in the monastery at Sedlec in 1295. The story behind the making of Codex Gigas (“the giant codex”) is that it was the work of one monk who was sentenced to death by being walled up alive. Indeed, an analysis on the text does suggest that it was written by just one scribe due to the level of uniformity throughout. The legend says that the monk produced the manuscript in just one night… with the devil’s help. However, it is not known where this legend started and it is suspected that it was religiously propagated. Stories and legends say that the Codex Gigas brought disaster or illness on whoever possessed it during its history. Fortunately, the National Library in Stockholm, where it is currently housed, appears immune to the curse of the codex! Codex Gigas contains a complete vulgate Latin translation of the Bible as well as five other major texts. It begins with the Old Testament and continues with ‘Antiquities of the Jews’ by Flavius Josephus (1st century AD; ‘Encyclopedia Etymologiae’ by Isidore of Seville (6th century AD); a collection of medical works of Hippocrates, Theophilus and others; the New Testament; and ‘The Chronicle of Bohemia’ by Cosmas of Prague (1050 AD). Smaller texts are also included in the manuscript with the most famous ones including: text on exorcism, magic formulas, a picture of the Heavenly City, and a full page illustration of the Devil. The illustration is the reason why legend says the codex was written with the devil’s help. According to the National Geographic, it would take one person working continuously, day and night, for five years to recreate the contents of Codex Gigas by hand (excluding the illustrations). Therefore, realistically it would have taken at least 25 years for the scribe to create the codex from scratch. Yet, all this time, the writing retained an incredible uniformity from start to finish. This may be the source of the legend which says that the monk wrote it in just one day. The manuscript is currently displayed at the National Library in Stockholm where you can also view the digital pages of the Codex. Anyone in Sweden should pay a visit to the see Codex Gigas – and do not be afraid, it is quite safe to read the so-called Devil’s Bible!

Electroceuticals and Optogenetics

Features Electroceuticals and Optogenetics
The use of electroceuticals on the ion channels to trigger nerve signalling, the true potential of which will be reached when the community takes advantage of these drugs to control bioelectric signalling in non-neural cells, for transformative applications in regenerative medicine, cancer, and synthetic bioengineering,

Then there are attempts to go beyond pacemakers and other stimulating devices to control the action potentials in individual neurons. We have known for some time that nerves fine-tune a heartbeat, the rate of breathing or lower blood pressure. In the spleen, they can alter the activity of T-cells – immune cells – to halt the production of inflammatory substances, such as the tumour necrosis factor that accumulates in joints in rheumatoid arthritis. And there are nerves in the skin that can suppress infection.
The newly-emerging field of electroceuticals aims to extend this understanding of the body’s electrical grid and the language of nerve impulses to treat autoimmune diseases, asthma, diabetes and gastric conditions. The simplest opportunities lie in the peripheral nervous system – outside of the spinal cord and the brain. One notable target is the vagus nerve, a nerve superhighway that snakes its way from the head through the abdomen to link the brain with major organs.

கிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவரா? இனி டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை,

கிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவரா?

இனி டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை,

எந்த வகையான கேன்சராக இருந்தாலும், டாக்டர்களால் கை விடப்பட்ட நோயாளியா.? இங்கு பூரண குணம் அடைந்து தீர்வு காணப்படுகிறது

நோயாளிகள் நேரில் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை அவர்களை சார்ந்து மற்றொருவர் சென்றால் போதும்

பார்வை நாள் ;-
வியாழன், ஞாயிறு நாட்களில் மட்டும் .

வைத்தியர் மற்றும் மருந்தின் செலவு 100 மட்டுமே.

வைத்தியத்திற்கு செல்லும் ரயில் வழி
(கர்நாடக மாநிலம்)

பெங்களூர் to சிமோகா toஆனந்த புரம் to நரசிபுரா
ஈஸ்வர் குமார் 09840012852

WTH - Deadly Mobile Virus - Android Samsapo - அதி பயங்கர மொபைல் வயரஸ் ஆன்ட்ராயிட் "சம்ஸாபோ"

ஒரு அதிபயங்கர வயரஸ் ஒன்று இந்த இரண்டு நாட்களாய் ஆன்ட்ராயிட் ஃபோன்களை நோக்கி பயணிக்கிறது.

இதன் பெயர் ஆன்ட்ராயிட் சம்ஸாபோ.

இது வழக்கம் போல ஈமெயிலாக வராமல் உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் உள்ள ஆட்களிடம் இருந்து வரும் குறிஞ்செய்தி (SMS) வரும்.

இது "Это твои фото?" ("Is this your photo?") அல்லது ஆங்கிலத்திலே வருவதால் டக்கென்று ஒப்பன் செய்த சில வினாடிகளில் உங்கள் ஃபோனில் இருந்து அனைத்து ஹேக்கர்களின் வசம் அது போக ப்ரீமியம் சர்வீஸை ஆக்டிவேட் செய்து உங்களுக்கு தெரியாமல் நிமிஷத்துக்கு 300 ரூபாய் கால்களை அது செய்து கொண்டே இருக்கும் -

கேலன்டர் - டைம் ஜோன் எல்லாவற்றையும் மாற்றி விடும் ஆபத்து.

உங்கள் ஃபோனில் டவுன்லோட் செக்க்ஷனில் இந்த ஆப்ஸ் இருக்கிறதா என்று பார்க்கவும் (package name: com.android.tools.system v1.0) அல்லது டவுன்லோட் செக்க்ஷனில் இருந்தால் ரீபூட் இல்லைனா உங்க ஃபோன் பூட்டாகேஸ். போஸ்ட்பெயிட்னா பில்லும் பல்க்கா வரும்.

அடோப் ஆர் என்னும் வயரஸ் தாக்கி இங்கே நான்கு நாட்களுக்குள் இது அதை விட பெரிசு இந்த வாரத்தில் சாக்கிரதை - ஆங்கில ஜர்னல் படிக்க இங்கே - http://www.welivesecurity.com/2014/04/30/android-sms-malware-catches-unwary-users/

"அம்பட்டன்"

தாத்தா காலையிலேயே சவரப் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார் . மயிர் சிரைத்தல் பரம்பரை தொழில் . அடுத்தவன் மயிரை பிடிங்கித்தான் பிழைக்க வேண்டி இருந்தது தாத்தாவுக்கு . ஆனால் அவருக்கு அதில் சலிப்போன்றும் இருந்ததாக எனக்குத்  தெரியவில்லை . 

ஊர் சோறு எடுக்கப் போகும்பொழுது எப்போதாவது என்னையும் உடன் கூட்டிப் போவார் . "அம்மா நான் பரேரி வந்திருக்கன் ..." என்று வாசலில் இருந்து குரல் கொடுப்பார் . ஒரு கிண்ணத்தில் சோறு குழம்பு என எல்லாம் போட்டு கொண்டு வந்து கொட்டுவார்கள் . வாசலில் இருந்தே வாங்கிக் கொள்ள வேண்டும் . தாத்தா இப்படி ஊர் சோறு எடுப்பதை அப்பா எத்தனையோ முறை வேண்டாம் என்ற பொழுதும் "போகலன்னா கோச்சிப்பாங்கடா ...அப்புறம் கூப்டு வேலையும் கொடுக்கமாட்டாங்க "

உன்ன யாரு இப்பவும் வேலை செய்ய சொல்றது ? 

அடப் போடா ...இந்தக் கட்ட சாகுற வரைக்கும் ஒழைக்கும் . நீ உன் பொண்டாட்டி புள்ளைங்கள பாரு . எனக்குத் தெரியும் என்ன எப்படி பாத்துக்குறதுன்னு ...

ஆனா எங்களுகிள்ள மானம் போகுது ...என்று அப்பா சொல்லவும் அன்று தாத்தாவுக்கு கோவம் வந்துவிட்டது ..

மானம் போகுதா ? இந்த அம்பட்டன் பொழப்பு செஞ்சித்தான் உங்களுக்கு கஞ்சி ஊத்துனேன் , படிக்க வச்சேன் , கல்யாணம் பண்ணி வச்சேன் . அப்போலாம் போகாத மானம் இப்ப போகுதா . 

அப்பாவும் கோவத்தோடு வெளியே கிளம்பி போய்விட்டார் . 

தாத்தாவுக்கு இப்படி இருக்கத்தான் பிடித்திருந்தது . தன்னை தீண்டத்தகாதவன் என்று பிறர் சொல்வது பற்றிய எந்த ஒரு புகாரும் அவருக்கு சமூகத்தின் மீது இருந்ததில்லை . பரேரி என்று அழைக்கப் படும்பொழுது அவர் முகத்தில் ஒரு சலனத்தையும் நான் கண்டதில்லை . "உமக்கு அம்பட்டன் கிறுக்குயா " என்று  யார் சொன்னாலும் எனக்கு வருகிற கோவம் கூட என் தாத்தாவுக்கு வந்ததில்லை . "பொழப்பத்த அம்பட்டன் பொண்டாட்டி தலய செரைச்சானாம் " என ரெட்டியார் வீட்டு சுப்பிரமணி என் தாத்தாவை வசைப் பாடும்போதும் "நாளைக்கு கண்டிப்பா வந்திடறேன் சாமி " என துண்டெடுத்து கக்கத்தில் வைத்து பணிந்தே பதில் சொல்லுவார் . என் வயது தான்  மணிகண்டனுக்கு . என் தாத்தாவை பெயர் சொல்லி கூப்பிட்டு "எங்க அய்யா உன்ன முகச்சவரம் செய்ய கூட்டிவர சொன்னாரு " என ஒருமையில் பேசினாலும் தாத்தா இதோ வந்திடறேன் என சவரப் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார் .  இப்படியாக இருப்பது தான் நமக்கு விதிக்கப் பட்டிருக்கு என்பதை தாண்டி அதிகபட்சம் வேறொன்றை என் கேள்விகளுக்கு பதிலாக தாத்தா சொன்னதில்லை .

திருமணம் ஆன புதிதில் சட்டை போட்டு புது மனைவியோடு தெருவில் வந்த பொழுது உசந்த சாதி இளந்தாரிகள் ஆயாவின் கண்முன்னாலேயே தாத்தாவின் சட்டையை கழற்ற வைத்து அவமானப் படுத்திய நாளில் இருந்து சாகும் வரைக்கும் சட்டையே போட்டதில்லை . ஒரு வேட்டியும் துண்டுமே எப்போதும் அவருக்கான ஆடை .  ஏன் தாத்தாவுக்கு கோவமே வராதா இவர்கள் மீது என்ற என் கேள்வி விடயற்றே இருந்தது . 

ஏச்சுக்கும் பேச்சுக்கும் பணிந்து போவதும் , அதிகார சாட்டைக்கு குனிந்து போவதுமாக வாழ்ந்திருந்த தாத்தா என் ஒரு வீட்டில் இல்லை , எல்லா சேரிக்குள்ளும் எல்லா கீழைத்தெருக்களிலும் இருந்திருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொள்ள நான் கொஞ்சம் வயதில் வளரவேண்டி இருந்தது .

அப்பா சொல்லுவார் "பள்ளிக் கூடத்துல என்ன சாதின்னு யாராவது கேட்டா இசை வேளாளர்னு  சொல்லு ,அம்பட்டன்னு சொல்லி வைக்காத " . இசை வேளாளர் என அப்பாவின் சொல் படி யார் கேட்டாலும் சொல்லி வந்திருக்கிறேன் . என் தாத்தா மயிர் சிரைக்கிறவர் என நண்பர்களிடத்தில் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை . ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை , யார் கேட்டாலும் கணீர் குரலில் சொல்லிவிடுகிறேன் "நான் அம்பட்டன் " என்று . இது தான் என் சாதி என என்னை எந்தச் சமூகம் இழித்துப் பேசுமோ , அதே சாதியின் பெயரை பெருமையாக சொல்லிக் கொள்ள நான் எதற்கு வெட்கப் படவேண்டும் ? செய்யும் தொழில் வைத்து பட்டப் பெயர் சொல்லி பறையன் என்றும் அம்பட்டன் என்றும் சக்கிலியன் என்றும் ஏகாலி என்றும் பிரித்து வைக்கிற இவர்கள் அல்லவா வெட்கப்படவேண்டியவர்கள் . சில தேசங்களே ஒன்று சேர்ந்தாலும் , உடையவே உடையாது என நினைத்திருந்த பெர்லின் சுவர் உடைந்து தூள் தூளான போதும் எங்கள் நாட்டில் ஊரும் சேரியும் என்றைக்கும் ஒன்று சேரவே முடியாது என்றிருக்கையில் நான் ஏன் சாதிப் பெயரை பதுங்கிச் சொல்ல வேண்டும் ? உரக்கச் சொல்வேன் அம்பட்டன் என்று . நீ என்னை கீழ்மையானவனாக பார்க்கும் வரைக்கும் நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன் நான் முடிதிருத்தும் மகோன்னத மனிதர்களின் வழித் தோன்றல் என்று .

ஆமாம் என் தாத்தா பெயரை நான் சொல்லவே இல்லையே .....பெயர் சொல்லி என்ன ஆகப் போகிறது ? நீங்கள் என் தாத்தாவின் பெயரை "அம்பட்டன்" என்றே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . நான் அவரை அப்படியாகத் தான் பெருமையோடு நினைவு கூர்கிறேன் 
க.உதயகுமார்

எம்.ஜி.ஆர் மற்றும் மு.கருணாநிதிபற்றி கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்
என்பது பற்றியும் அப்போது தமக்கும்
கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான்
பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர்
கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால்
உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு
காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த
உரையாடலை எழுதியுள்ளார்.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான்
சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப்
பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள்
இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன்
செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார்.
எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும்
என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு,
செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள்.
கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும்.
அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,”
என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர்
கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து,
“இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது.
இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்”
என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே”
என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்”
என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது,
நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால்,
எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன்
மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத்
தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா”
என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன,
பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள்
பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண
காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும்
என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய
பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள
முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும்
கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில்
வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும்,
காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக்
கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில
மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்
கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய
அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’
கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால்
வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச்
செய்தி வந்தது.
ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன
இவள், எலெக்ஷன் நடத்தினால் நடத்தட்டும்,
இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார்.
அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக
இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள்
யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர்.
அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக
வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும்,
தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம்
எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது
எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய
ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில்
தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான்
அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக
முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும்
விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில்
ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர்
கருணாநிதிக்கு உண்டு.
கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக
ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட
பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும்
போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961
ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக
இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள்
மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக
இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான
தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக்
கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம்
காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத்
தொண்டர்களும்தான்.
ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப்
பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான
தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள்
தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள்.
எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும்
போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில்
ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக
நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம்
இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில்
எப்படி நாடு முழுவதிலும்
ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர்.
நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும்
எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப்
போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது.
ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும்,
நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப்
பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள்
வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள்
வேலை நிறுத்தம் செய்தார்கள்.
கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள்
வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற
ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம்
எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில்
பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது.
வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த
நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது
பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும்
கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர்
பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’
என்று காட்டவும் நண்பர்
கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம்
செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர்
பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித்
தொண்டர்களுக்கும் இருந்த பிரியம்
என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம்
நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில
காரியங்களை அவர் செய்திருக்கிறார்,
செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர்,
ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள்.
அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல
பெயரை அதுதான் போக்கடித்தது.
எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால்
நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும்
ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக்
காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர்
விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக்
கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான்
என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த
பிடிப்பின் காரணமாக, சில அரசியல்
தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக
விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம்
தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார்.
ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம்
தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு”
- என்றும் அவர் காட்டினார்.
அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும்
உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம்
வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள்.
அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம
வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட
முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட
இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார
பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால்
அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக்
கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர்
கெட்டிக்காரராக விளங்கினார்.
கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும்,
எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில்
கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில்
ஆகிவிட்டது.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத்
தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில்
கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும்,
சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன.
நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற
சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத்
தேர்தலுக்கு அவர் பட்டபாடு,
அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர்
செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில்
பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச்
சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத்
தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக்
கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக
வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப்
பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச்
சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான்
அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும்,
அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான்
கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த
திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த
மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த
ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும்
அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன.
அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால்
வளைக்க முடியும்.
முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும்
என்றால் அழ வைக்க முடியும். யாரைப்
பக்கத்திலே இழுக்க வேண்டும்
என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம்
பண்ணியாயவது வரவழைத்து விடுவார்,
உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட
ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம்
அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும்
உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.
எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத்
தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல்
சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட
அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில்
இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப்
பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய
குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று,
ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை.
இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும்
என்று அவர் கருதியதில்லை.
ஆனால் கருணாநிதியைப்
பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப்
போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா,
உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம்
ஏதாவது கிடைக்குமானால்
குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான்
மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப்
பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ,
கடை வீதியில் இறங்கினாலோ,
யாராவது பிச்சைக்காரர்கள்
வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற
எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப்
போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும்
10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-
மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும்
என்று அவர் கருதுவார்.
இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால்
கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த
காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப்
பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய்
கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின
என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

The ancient language of India, Sanskrit.

In 1786 Sir William Jones, the English Chief Justice in India, noticed similarities between Greek and the ancient language of India, Sanskrit. This observation led Jones to hypothesize that Greek and Sanskrit, as well as Latin, descended from a common linguistic ancestor, now lost, and further that this language was also the source of the Germanic and Celtic languages.
The Sanskrit tongue most probably entered the Indian subcontinent with an early migration of Indo-European people. As the Indo-Europeans moved into the Indian subcontinent, their language displaced that of the aboriginal Indians. The Dravidian languages, still widely spoken in southern India, are believed to be the modern descendants of the earlier linguistic layer.
Sanskrit is no longer a spoken language, but continues to be used in religious ritual, and its Classical form is still cultivated as a literary language. Sanskrit is divided into two general categories, the more ancient Vedic Sanskrit (assumed to have been spoken from approximately 1500-200 B.C.) and Classical Sanskrit (approximately 500 B.C.- 1000 A.D.). Classical Sanskrit was formalized in the fourth century B.C. and, although there is some overlap between the two periods, there are important differences between it and the Vedic form.
Vedic Sanskrit literature developed first in an oral form, and was first set down in writting after centuries of oral transmission. The gap between the composition of and the written recording of the literature makes dating difficult, but most of what survives can be assigned either to the Vedic or Classical period. Although the art of oral transmission in a pre-literate society required exact memorization, scholars cannot confidently say how close what was finally recorded in the third century B.C. is to the original composition.
The primary method of classifying the works by date is to take the subject matter and style of the work into consideration. The Vedic period is typified by an archaic style and religious subject matter. The Classical period is more secular in orientation and closer to the written style as it continued in the current era. The most important works of the Vedic period are the four Vedas (the word Veda meaning 'knowledge' in Sanskrit). The Rig-veda is the oldest, consisting primarily of religious hymns; the Sama-veda is the veda of chants, the Yajur-veda the veda of prayers; finally, the Atharva-veda contains the lore of the Atharvans.
In the Classical period Sanskrit was used much like Latin in Medieval Europe, as a literary language of an educated elite. Two major works of this period were the epic poems, the Mahabharata and the Ramayana. Classical Sanskrit also includes works of philosophy, astronomy, science, medicine and law.
Indian Languages Today
As the Latin language evolved into the Romance languages in Europe, Sanskrit gave rise to a variety of dialects that in time became separate languages. In modern India there are a number of languages that descend from Sanskrit, such as Sindhi, Marathi, Bengali, Punjabi, Hindi and Urdu. Romany, the dialect of the Gypsies in western Asia and Europe, is also descended from Sanskrit. The Dravidian languages, Tamil, Telugu, Kannada and Malayalam are also spoken in India, as are certain Iranian and Sino-Tibetan languages.
sanskrit writing sample

நெய்தல் நிலம் தழுவும் கடலாகப்போகின்றேன்

கரையோரம் களித்தாடும்
வெள்ளை  ஆம்பல்கள்
நெய்தல்  பெண்ணொருத்தி
வந்தெம்மை சூடாரோ 
என ஏங்கிக்காத்திருக்கும்...
காரிகை வந்திடாத
நாளிலெல்லாம்
முகம் தொங்கி பொலிவிழக்கும்... 
நெய்தல் நிலத்தின் மேல்
நானுமோர் ஆம்பலானால் என்ன ?

திமிலேறி கடல் புகுந்து
திசைத்தெரியா ஆழியின் மேல்
"பிரிந்துவந்த தலைவியின்
மேனியை போன்ற
உப்பு நாறும் ஆழியே
என் ஆருயிர் காதலை
காற்றனுப்பி சொல்வாயா
தனித்த தலைவிக்கு
தக்கதொரு துணையாய் அது இருக்கும் "
என்று  பாட்டிசைக்கும்
பரதவரின் மூங்கில் குழல் மீது
நானுமோர் துளையானால் என்ன ?

கடல் காயும் உப்பங்கழியில்
வெயிலோடு புணர்ந்தன்றோ
ஈன்றெடுத்தாய் உப்பினை
என
அழுவத்தை பகடி செய்து
அடும்பு மலர் சூடும்
உப்பறுக்கும்
உமணர் பெண்கள்
மேனியெங்கும் பூத்திருக்கும்
வெண்முத்து வேர்வையினில்
நானுமோர் துளியானால் என்ன ? 

அலவன் தன் கால்களினால்
கடற்கரையில் வரைந்து போகும்
நெய்தல் ஓவியங்கள்
திரை வந்து அழித்தபின்னும்
திரும்ப வந்து எழுதிடுமே
பின்னுமொரு ஓவியத்தை
ஈரமணலின்  மேல்
நானுமோர் நண்டானால் என்ன ?

இரை தேடி பறந்து சென்ற
கடல் நாரை தூங்கிற்று
குறிஞ்சி நிலம் சென்று
அந்நிலத் திணை பாடி 
பரிசிலோடு வந்த பரதவரும் துஞ்சுகின்றர்
மீன் பிடிக்க சென்றிருந்த
தலைவனுக்காய் காத்திருந்து
கருங்குவளை கண்கள் அயர்ந்த
பெண்டிரும் உறங்குகின்றார்
ஆயினும்
நீலத்திரை படர்த்தி
அலை அலையாய்
அசைந்தாடும்
வெண்மலர் போல் நுரைபூத்த 
நதிவிழுங்கும் கடல் மட்டும்
ஓங்கார சத்தமிட்டு விழித்தபடி இருக்கிறது 
நானுமொரு நாள்
கண்துஞ்சா கடலானால் என்ன ?


--க.உதயகுமார் 

Monday, August 11, 2014

The latest, and most realistic, artificial body parts.


கம்ப்யூட்டர் வாங்கும் போது டிரைவர் CD முக்கியமா?

முன்பெல்லாம் பிராண்டட் கம்ப்யூட்டர்களை விலைக்கு வாங்கும்பொழுது டிரைவர் CD ஒன்று அந்த கம்ப்யூட்டர் பேக்கிங் உடன் கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது கம்ப்யூட்டர் டிரைவர் CD அதன் பேக்கிங் உடன் வருவதில்லை. User Manual ல் அந்த பிராண்ட் கம்ப்யூட்டரின் இணைய தளம் முகவரியை மட்டுமே குறிப்பிட்டு இங்கு சென்று டிரைவரை அப்டேட் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். எனவே கம்ப்யூட்டர் டிரைவர்களை அப்டேட் செய்வதை பற்றி நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பிராண்ட் இணைய தளத்திலும் Support & Drivers என்ற பகுதிக்கு சென்றால் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் மாடலுக்கு தகுந்த ஆடியோ, வீடியோ மற்றும் அனைத்து விதமான டிரைவர்களையும் அங்கிருந்து டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

சரி பிராண்டட் கம்ப்யூட்டர் இல்லாமல் அசெம்பிள் கம்ப்யூட்டராக இருந்தால் நாம் எப்படி அதன் டிரைவரை இணையத்தில் இருந்து டவுண்லோடு செய்வது ?

பொதுவாக நாம் பிராண்டட் கம்ப்யூட்டர் பயண்படுத்தினாலும் அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும் அதில் Intel Chip set மற்றும் Intel Mother Board போன்றவையே பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் அசெம்பிள் கம்ப்யூடருக்கு அதன் டிரைவர்களை அப்டேட் செய்யவேண்டி இருந்தால் www.intel.com என்ற இணைய தளம் சென்றாலே போதும். இங்கு உங்கள் கம்ப்யூட்டரின் Mother Board மற்றும் Processor க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் கிடைக்கும்.

சரி நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள இந்த Intel Mother Board என்ன மாடல் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது ?

உங்கள் கம்ப்யூட்டரில் Start Menu வில் Run என்பதை கிளிக் செய்து msinfo32.exe என்று டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உடனே ஒரு தட்டு ஓப்பன் ஆகும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் என்ன மாடல் Mother Board இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு அந்த மாடலுக்கு தகுந்த மாதிரி Intel இணைய தளத்தில் நீங்கள் டிரைவர்களை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

இவை அனைத்தும் நீங்கள் புதிதாக ஒரு கம்ப்யூட்டரை பார்மெட் செய்து இண்ஸ்டால் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விசயங்கள் மட்டுமே.

ஆனால் பழைய கம்ப்யூட்டரை நீங்கள் பார்மெட் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும் என்றால் முதலில் நீங்கள் பார்மெட் செய்வதற்கு முன்னால் அந்த டிரைவர்களை காப்பி எடுக்கவேண்டும். அதாவது Driver Backup என்பது பழைய கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்கு முன்னால் மிக அவசியமான ஒன்றாகும்.

இந்த டிரைவரை பேக்கப் செய்வதற்கு இலவசமாக சில மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது. அதன் மூலம் நீங்கள் டிரைவரை பேக்கப் செய்துகொள்ளலாம்.

இந்த லிங்க் மூலம் நீங்கள் Driver Max என்ற மென்பொருளை டவுண்லோடு செய்து ஒரு USB Pen Drive ல் அதனை வைத்துக்கொள்ளுங்கள்.
Drive Max for Driver Backup

பழைய கம்ப்யூட்டர் எதுவானாலும் அதனை பார்மெட் செய்வதற்கு முன்னால் நீங்கள் இந்த Drive Max மென்பொருளை இண்ஸ்டால் செய்து இதன் மூலம் Drivers ஐ காப்பி செய்து அதனை அந்த USB Pen Drive ல் சேமித்துக்கொண்டு பிறகு பார்மெட் செய்யுங்கள். பிறகு விண்டோஸ் இன்ஸ்டால் செய்த பிறகு இந்த Drive Max ஐ மறுபடியும் இன்ஸ்டால் செய்து நீங்கள் காப்பி செய்து வைத்த Drivers ஐ Update செய்துகொள்ளுங்கள்.

பொன்மொழிகள்



நீ பற்றற்றிரு; மற்றவை சேவை செய்யட்டும்; மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்; ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே.ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய், ஆனால் உன்னைத் தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது. -சுவாமி விவேகானந்தர்

பந்தத்தின் காரணம்

பந்தத்திற்கு காரணம் காமம் மற்றும் பணத்தாசைதான், காமமும் பணத்தாசையுமே உலகியல். இவை இரண்டுமே நாம் இறைவனைக் காண்பதற்கு தடையாக உள்ளன. -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

இறைவன்

இறைவனுக்கு அருவமும் உண்மை, அதுபோல் உருவமும் உண்மை; இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள் -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

தவம் என்பது என்ன?

இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமென்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும். தவம் என்பது குறிக்கோளின்றி அங்குமிங்கும் அலைவதல்ல; நிலைதடுமாறாது. நாள் தவறாது செய்யப்படும் ஜபம், தியானம் மற்றும் புலனடக்கம் ஆகியவையே தவமாகும் -சுவாமி அபேதானந்தர்

உன் ஆன்மாவே உன் ஆசிரியர்

நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது. யாராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. உன் ஆன்மாவைத் தவிர வேறெந்த ஆசிரியரும் இல்லை -சுவாமி விவேகானந்தர்

ஆன்மாவே நாம்!

மரணமற்ற, சுதந்திரமான, இயல்பாகவே தூய்மையான ஆன்மாவே நாம். நாம் பாவம் செய்யமுடியுமா? முடியவே முடியாது. இத்தகைய நம்பிக்கைதான் வேண்டும். இத்தகைய நம்பிக்கையே நம்மை மனிதனாக்கும்; நம்மைத் தெய்வமாக்கும். -சுவாமி விவேகானந்தர்

கங்கை ஜாடியின் கதை

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர்.

சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார். எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் சசி மகராஜ் ஒரு படகை அமர்த்திக் கொண்டு கப்பலுக்கு அருகில் சென்றார். சுவாமிஜிக்காகத் தான் அன்புடன் கொண்டு சென்றிருந்த இனிப்புக்களையும் உணவு வகைகளையும் ஒரு கூடையில் வைத்தார். கூடை மேலே ஏற்றப்பட்டது. அதே கூடையில் கங்கை நீர் நிறைந்த பீங்கான் ஜாடி கீழே இறக்கப்பட்டது. அந்த ஜாடியை சுவாமிஜி ஒரு கயிற்றினால் அழுத்தமாகக் கட்டியிருந்தார்; அதை சசி மகராஜால் அவிழ்க்க முடியவில்லை. ஆகவே, சுவாமிஜி அதை அறுப்பதற்காக ஒரு கத்தியையும் கீழே போட்டார்.

திரும்புவதற்கு முன்னால் சசி மகராஜ் படகுக்காரனிடம் கப்பலை மூன்று முறை வலம் வருமாறு பணித்தார். இரண்டு பெரிய மகான்களின் பாதங்களை இன்று நம்மால் பணிய முடியவில்லை கப்பலை வலம் வந்தாவது நாம் திருப்தி அடைவோம் என்றார். சுவாமிஜி கொண்டுவந்தது என்பதற்காக அந்த ஜாடியையும் அவரது திருக்கரங்கள் பட்டது என்பதற்காக அந்தக் கத்தியையும் சசி மகராஜ் பூஜையறையில் வைத்து வழிபடத் தொடங்கினார். அவை இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

சப்தரிஷிகள்

கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகள்! (மற்றொரு விதமாகவும் சொல்வதுண்டு).

கச்யபர்: தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே மனித குலம்!

அத்ரி: இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும் அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம்.

பரத்வாஜர்: இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர் என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

விஸ்வாமித்திரர்: இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர். விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு.

கவுதமர்: அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

ஜமதக்னி: துஷ்டர்களை அடக்க அவதாரம் இஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

வசிஷ்டர்: இவரின் ஆன்மிகத் தகவல்கள் இன்றும் பயனுள்ளவையாகப் போற்றப்படுகின்றன. அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும் சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி! ஆவணி மாத வளர்பிறை 5-ம் நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.

How Does 3D Printing Work?

TECHNOLOGY INSIDER: How Does 3D Printing Work?

In the past few years we’ve heard much about “3D printing” and the many uses of this emerging technology. But how does 3D printing work? How is it different from other manufacturing processes?
 
In this post, I'm trying to explain these things. Don't forget to add your points via comment section.

ADDITIVE vs SUBTRACTIVE MANUFACTURING:

Making things usually involves a subtractive process: you start with a block of material — aluminium for instance — which you then machine (that is, remove material) until you get the shape and size you’re after.

But 3D printing, or additive manufacturing, does the process in reverse. Instead of removing material, the “printer” dispenses it. The technology gradually deposits the material via a controlled nozzle, layer by layer, building up to a fully formed product. The material used can either be plastic (usually ABS ), or a metal. The process is typically based on a computer-designed model of the object or machine part in question, and can produce relatively complex shapes.

Steps of 3D printing are shown in picture.