.



கந்தா என்ற சொல்லில் கருணை பூக்கின்றது
கடம்பா என்ற சொல்லில் கருமவினை கரைகின்றது
கதிர்வேலா என்ற சொல்லில் காமம் கலைகிறது
கார்த்திகேயா என்ற சொல்லில் கஷ்டம் அழிகின்றது
ஆறுமுகா என்ற சொல்லில் ஆனந்தம் பிறக்கின்றது
சரவணா என்ற சொல்லில் மனம் சாந்தி அடைகின்றது
குமரா என்ற சொல்லில் குறைகள் விலகுகிறது
குழந்தைவேலா என்ற சொல்லில் குதூகலம் பிறக்கின்றது
தண்டாயுதபாணி என்ற சொல்லில் தரித்திரம் தொலைகிறது
சண்முகா என்ற சொல்லில் சக்தி பிறக்கிறது
அழகன் என்ற சொல்லில் புது ஆனந்தம் பூக்கிறது
மயிலோன் என்ற சொல்லில் மகிழ்ச்சி பிறக்கிறது
விசாகன் என்ற சொல்லில் விடியல் பிறக்கிறது
வேலவா என்ற சொல்லில் வேகம் பிறக்கிறது
சேயோன் என்ற சொல்லில் அழகு பிறக்கிறது
செவ்வேல் என்ற சொல்லில் வசந்தம் பூக்கிறது
பாலமுருகா என்ற சொல்லில் பாவம் நீங்குகிறது
சுப்பிரமணியா என்ற சொல்லில் சுகம் பிறக்கிறது..
No comments:
Post a Comment