Search This Blog

Wednesday, December 4, 2013

The Lonely Wife / Charulata (English) Satyajit Ray. India. 1964


இந்திய திரையுலகத்தின் தலைமகன் சத்யஜித் ரே இயக்கிய காவியம். 1964ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. நான் பார்த்த ரேயின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான். கதை கூறும் முறை, படமாக்கப்பட்டிருக்கும் விதம், படம் முழுக்க நிறைந்திருக்கும் ஒரு கவித்துவத் தன்மை, கலைஞர்களின் பங்களிப்பு, குறைவான வசனங்களையும் ஆழமான முக வெளிப்பாடுகளையும் கொண்டு கதைக்கு உயிர்ப்பு தந்த தொழில் நேர்த்தி – இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘சாருலதா’வை ஒரு உயர்ந்த பீடத்தில் அமரச் செய்தன.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘நாஸ்டாநிர் (The Broken Nest) என்ற புதினம்தான் இந்தப் படத்திற்கு அடிப்படை. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்கத்தாவில் நடைபெறும் கதை.

No comments:

Post a Comment