Search This Blog

Thursday, October 13, 2011

சக்தி தத்துவம் - சாக்தமதப்பிரிவு (2) இந்துமத வரலாற்று தொடர்



 
உடம்பும் நீயே!! உயிரும் நீயே!! அம்மா!!!!

தாய் தெய்வ வழிபாட்டில் என்ன மகத்துவம் இருக்கப்போகிறது.ஊர்தோரும் இருக்கும் அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் நெருப்பு மிதித்து சாக்கை ஊற்றுவது தான் அதன் மகத்துவமாக இருக்கலாம் என்று சிலர் கேலி பேசுவதும் உண்டு. அலகு குத்திஆடுகோழிகளை வெட்டி கொண்டாடும் வழிபாட்டில், தத்துவம் இருப்பது அதிசயம் அல்ல, விநோதம் என்றும் சிலர் பேசலாம். இவைகள் வெறும் கேலி மொழியாகவோ விதண்டாவாதமாகவோநாம் எடுத்து கொள்ளலாம். அப்படி எடுத்து கொண்டால் அது சரியானதாக கூடதோன்றும். ஆனால் உண்மை நிலையை அது பிரதி பலிப்பதாக இருக்காது.
நமது இந்தியாவில் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்றுவரும் உயிர்பலி சடங்குகளில் பல அன்னை வழிபாட்டின் பெயரிலேயே நடக்கிறது எனலாம். அழகான பாண்டங்களை செய்து வைத்த குயவனின் முன்னாலேயே, அந்த பாண்டங்களைஅடித்து உடைப்பது எப்படி மனிதாபிமானம் இல்லாத செயலோ, அப்படியே எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கின்ற அகிலாண்டேஷ்வரி அன்னை  முன்னால் உயிர்பலி  செய்வதும் ஆகும்.
எனவே தாய் தெய்வ வழிபாட்டில்உயிர்பலிகளும்கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களும் நிறைந்திருப்பதாகவேமேலோட்டமாக பார்க்கும்போது நமக்குதோன்றும். இது மட்டுமல்ல தனதுகுழந்தையின் இரத்தத்தை விரும்பி சுவைப்பவள் தாயாக இருக்க முடியுமா?அப்படி பட்டவளை உலக அன்னையாக வழிபடுவது சரிதானா?  என்ற எண்ணம் எழும்பினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

ஆதிகால மனிதன் வேட்டையாடி உயிர் கொலை செய்து தான் வாழ்கையை நடத்தினான். அப்படி வாழ்ந்த போது தனக்கு எது பிரியமானதோதனக்கு எது சுவையுடையதாக தெரிகிறதோ, அதையே தான் வணங்கும் தெய்வத்திற்கு சமர்பித்தான். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே போல தான் ஆரம்பகால பழக்கத்தை கைவிட்டுவிடதுணிச்சல் இல்லாமல் இன்று வரை பலியிட்டு வழிபடுவதை கடைபிடித்து வருகிறான்.  இதை நிறுத்திவிட்டால் தீங்கு ஏதாவது நடைபெற்று விடுமோ என்று அச்சப்படவும் செய்கிறான்
மேலும் பலிகொடுத்து வழிபடுவது என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான நடைமுறைஅல்லயூத மதத்திலும்இஸ்லாம் மதத்திலும் கூட இத்தகைய வழிபாட்டு முறை இருந்து வருகிறது. ஆனால் நமக்கு அம்மன் கோயில் திருவிழாவில் ஆடுகோழி பலியிடுவதுதான் காட்டுமிராண்டித்  தனமாக தெரிகிறதே தவிர,மொஹரம் பண்டிகையில் உயிர்பலி கொடுப்பது தவறுதலாக படவில்லை. காரணம் உலகிலேயே இந்து மதத்தார் மட்டும்தான் தன்னைதானே இழிவுபடுத்தி கொள்ளும் ஜாதிகளாகஇருக்கிறார்கள். அடுத்தவர்களின் குறை நிறையாக மட்டுமல்ல மேன்மை தங்கியதாகவும் நமக்கு படுகிறது.

முதலில் இந்த நிலையை நாம் மாற்றவேண்டும். வளர்ந்து விட்ட நாகரிக சமூகத்தில் கூட மிக தொன்மை வாய்ந்த பழக்கவழக்கங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறாது இதனால் பல நன்மைகளுக்கும்சாதத்தில் கல் இருப்பது போல சில தீமைகளும்இருக்கலாம். அதனால் அந்த தீமைகளைபடிப்படியாக தான் குறைக்க வேண்டுமே தவிர,ஒட்டுமொத்தமாக ஒழித்துகட்டிவிட முடியாது. உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களுமே அன்னை பராசக்தியின் குழந்தைகள் தான் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும்போது உயிர்பலி சடங்கு தானாக முடிந்துவிடும்.

 அடுத்தாக தீ மிதித்தல், அலகுகுத்துதல் போன்ற முரட்டுதனமான வழிபாட்டு முறையை விமர்சனம் செய்பவர்கள் இதுதான் அம்மன் வழிபாடு தந்த கொடை என்கிறார்கள். அவர்கள் ஒரு விசயத்தை மிக நன்றாக உணர வேண்டும். நெருப்பை வளர்த்து அதை தனியவிட்டு, அதனுள் இறங்கி மற்றவர்களை நடக்க வைத்து நான் மட்டும் அழகுபார்த்தேன் என்றால் அது தவறு மட்டுமல்ல மனிதாபிமானமற்ற செயலாகும். 


ஆனால் இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை நான்தான் வெறும் காலுடன் நெருப்பு குண்டத்தில் இறங்குகிறேன். அதன் சூடும்வெப்பமும் என்னை மட்டும் தான் தாக்குகிறது. அலகு குத்துவதும்அருவாள் மேல் நடப்பதும் ஏறகுறைய அப்படிதான் எந்த வகையிலாவது மனதை ஒருநிலைப் படுத்தி கடவுளின் மீது லயிக்கவேண்டுமென்று இந்து மதம் சொல்கிறது.நான் முரடன்மிக கடினமான உடல்வேலைகளை செய்து பழக்கப்பட்டவன் எனக்கு எதுவும் சுலபமாகசுகமாக இருந்தால் மனம் ஒட்டாது வியர்வை வழிய கண்கள் எரிய பாடுபட்டால் தான் மனம் ஒட்டும் அதனால் தான் இந்த இராட்சஷ வழிபாடு இதனால் யாருக்கும் தீங்குயில்லையே. அதனால் இதில் தவறு இல்லை.

இந்து மதத்தில் மட்டும்தான் இத்தகைய முரட்டு வழிப்பாட்டு முறை இருப்பதாக யாரும் கூற இயலாது.கல்வாரி மலைக்கு சிலுவையில் அறைவதற்காக இயேசுநாதர் அழைத்து செல்லப்பட்டபாதையில் இன்றும் ஏராளமான பக்தர்கள் தோளில் சிலுவையும், தலையில் முட்கீரிடமும் தாங்கி நடக்கிறார்கள். சாட்டையால் கூடஅடிவாங்கி கொள்கிறார்கள், ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாட்டு முஸ்லிம்கள் தங்கள் உடம்பில் காயம் ஏற்படும் அளவிற்கு கத்தியாலும் சங்கிலியாலும் அடித்து கொள்கிறார்கள். எனவே முரட்டு வழிபாடு என்பது உலகில் சகஜம் தான்என்பதை உணர்ந்து சக்தி வழிபாட்டின் மகத்துவத்தை உணர குருஜியின் அருளாசியுடன் பயணத்தை தொடர்வோம்.

No comments:

Post a Comment