Search This Blog

Wednesday, April 13, 2016

தானங்களில் சிறந்தது அன்ன தானம் ஓம் சாயி

முந்தை என்பது நீயறியாதது
உன்னோடு பிறந்தவன் 
உன் போல் இருப்பதில்லை
கொடுத்துச் சிவந்த கைகொண்ட கர்ணனுக்கு சொர்க்கம் இல்லை என்ற வரலாறு கூறுவதென்ன 
தானங்களில் சிறந்தது அன்ன தானம் 
அந்தத் தானத்தை அவன் செய்யவில்லை
எனினும் யாரிடமோ அன்னம்
வாங்கி இவன் அளித்த அன்னதானம்
இவனை சொர்க்கத்திற்கே செல்ல
வழி சமைத்தது
உனக்கு மனமில்லை மனிதா
படைத்தவனை ஏன் இழுக்கிறாய் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே
கல்லாயச் சமைந்த கடவுளை விடு
உன்னாலான உதவியைச் செய்
கடவுளைப் பற்றி கதைப்பதை விட்டு
மனிதரைப்பற்றி சிந்தி
மனிதம் மறைய புனிதம் குறைந்தது
பிட்சை ஏந்தும் சித்தன்
காட்டிய வழி
தர்மம் செய்
ஒரு பிடி சோறு தானமாய்
கொடு
மறுபடி பிறக்கின்ற பாரம்
குறையும்

ஓம் சாயி

ராதா மரியரத்தினம்

No comments:

Post a Comment