Search This Blog

Thursday, May 5, 2011

கண்ணதாசனின் நகைச்சுவைகள்

 கண்ணதாசனின் நகைச்சுவைகள்
"நன்கொடை என்பது என்ன?"
"வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None  ஆக ஆக்குவது."
*********
"ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை"
"ஏன்?"
"ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை"
*********
"கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான்"

"அதுவென்ன மற்றுமொரு கருத்து?"

"நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்"
*********
"காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?"

"கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்."
*********
"பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில்..."

"எப்படி பைத்தியமானார்கள்?"

"சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்"

No comments:

Post a Comment