Search This Blog

Monday, June 7, 2021

Which parts of the brain are activated by music?

When a person listens to music or practices music, their brain is activated in unique ways. For listeners, music activates the brain by setting off “fireworks”; quickly decoding each element of a piece (melody, rhythm, etc.) and combining it again to hear the song unified. But studies have shown that for music players, the activity in the brain when playing or practicing is much more intricate – equivalent to a full body workout.

Music has the power to motivate and soothe, no doubt about it. But how and why does it affect us? Why do certain songs trigger excitement or make us grin? Why do others bring relaxation, tears, or send shivers down our spines?

These are questions some scientists are asking in their laboratories. They are studying how our brains process music and learning why we respond in the ways we do. They are using new technologies to explore why music—whether it’s reggae, rap, rock, or Rachmaninoff—is celebrated in every human culture.

Exploring how our brains work is one of the most exciting areas of modern-day science. Magnetic resonance imaging (MRI) and other high-tech scanners let researchers see which parts of our brains tackle different tasks. With MRIs, a person is slid inside a tube-shaped tank. Then the machine finds where his or her brain “lights up” when undertaking certain activities, such as reading or doing math problems. The scan can also spot what parts of the brain go to work as the person sees pictures, hears sounds, or feels sensations.


How the brain processes music is an exciting area of this research. Researchers have discovered that the brain does not have one special place to analyze music. Instead, different parts of the brain handle different aspects of a song, like rhythm (the beat) and tone (pitch and loudness). And one of the most mind-blowing discoveries is that the parts of the brain that deal with emotions also fire up in response to music. In other words, music is wired directly into our feelings.

The Brain

Once the nerves deliver musical signals inside the skull, the brain goes to work. Researchers now realize music is not just processed in one part of the brain. Performing and listening to music gives big chunks of your brain a workout.

Use the labeled images in the slide player (below) to locate the parts of the brain highlighted in the text. Once you've found them, see if you can locate them on the unlabeled images!

Rhythm 

The belt and parabelt are located on the right side of the brain. They are mainly responsible for figuring out a song’s rhythm. When creating rhythm by tapping toes or beating a drum, the motor cortex and cerebellum get involved.

Pitch and Tone 

The recognition and understanding of pitch and tone are mainly handled by the auditory cortex. This part of the brain also does a lot of the work to analyze a song’s melody and harmony. Some research shows that the cerebellum and prefrontal cortex contribute, too.

Anticipation 

Research shows our brains create expectations when listening to a song. For example, it would figure out if a beat is steady or the melody makes sense. But we especially like it when songs surprise us with smart, quirky changes. This analysis takes place in the brain’s prefrontal cortex.

Memory 

People have an amazing ability to remember music. Chances are you can recognize your favorite song after hearing just a fragment. These memories are stored in the hippocampus.

Performance 

Musical acts like reading music, playing an instrument, and dancing fires up the cerebellummotor cortexsensory cortex, and visual cortex.

Emotion 

Music has the power to trigger feelings in listeners. Three main areas of the brain are responsible for these emotional responses: nucleus accumbensamygdala, and the cerebellum.

https://www.kennedy-center.org/

https://news.mit.edu/

Mhttps://www.creativesoulmusic.com/usic and feelings have always gone together. 

Wednesday, June 2, 2021

250 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் அதிசயிக்கத்தக்க விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில் உருவான ஒரு படைப்பு

 250 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின்

அதிசயிக்கத்தக்க விஞ்ஞானத் தொழில்
நுட்பத்தில் உருவான ஒரு படைப்பைத்தான்
படத்தில் பார்க்கிறீர்கள்.

ஒரு செப்புக் கிண்ணத்தில் பகவான் கிருஷ்ணனின் சிலை உள்ளது.அந்தக் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றினால்
முதலில் துளிநீர் கூட வெளியேறாத நிலையில் அந்தக் கிண்ணம் முழவதும்
நீரை நிரப்ப நீரின் மட்டம் கிருஷ்ணனின்
பாதங்களைத் தொட்டதும் கிண்ணத்தில் இருக்கும் நீர் கீழிருந்து வெளியேற
ஆரம்பிக்கிறது.
சொட்டு நீர்கூடக் கிண்ணத்தில் தங்காமல் முற்றிலும் வெளியேறிவிடுகிறது.இது என்ன தொழில் நுட்பம் என்று தெரியாமல் விழிக்கிறது உலகம்.

நாக லோகத்துடன் தொடர்புடைய கோயில்.



பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் நமது பூமி 7 லோகங்களை கொண்டது என்றார்கள். அந்த 7- லோகத்தில் நாகலோகமும் ஒன்று. இது எந்தளவுக்கு உண்மை என நாம் நினைத்தாலும் அறிவியல் வளர்ச்சியில் வளர்ந்துவிட்ட மனிதனுக்கு கூட சில விசயங்கள் புரிபடவில்லை (விமானங்கள் காணாமல் போகுதல் உட்பட) என்பது உண்மையாகும்.
நம் தமிழகத்தில் நாகத்திற்கு என பல கோயில்கள் இருந்தாலும் அதைவிட அதிக சக்தி வாய்ந்த கோயில், இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் நயினார் தீவில் அமைந்துள்ள "நாகபூசணி அம்மன்" கோயில் கிட்டத்தட்ட 14,000 வருங்கள் பழமையானது ஆகும்.
இந்த கோயில் நாகர்களால் கட்டப்பட்டது. நாகர்கள் என்பவர்கள் பண்டைய தமிழர்களின் ஒரு பிரிவினர்தான் என வரலாற்று ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோயில் பல அற்புத ரகசியங்களை உள்ளடக்கியது அணுவில் இருந்து தோன்றி பரிமாண வளர்ச்சி அடைந்த முதல் இனம் தமிழனம் என சான்றுகள் கூறுகின்றன. இந்த கோயில் அமையும்போது நாகலோகத்து நாகர்களும் கூட இருந்து தமிழர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார்களாம்.
எத்தனையோ ரகசியங்களையும், வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோயிலில் "நாகபூசணி அம்மனை வழிபட்டால் நாக தோசங்கள், கடுமையான "ராகு&கேது தோஷங்கள்" முற்றிலும் விலகும்.
தோல் வியாதிகள், விஷக்கடிகள், திருமணத்தடைகள், புத்திர தோஷங்கள் அனைத்தும் விலகி இன்பம் கிடைக்கும். ஆன்மிக அன்பர்கள் நேரமும், வாய்ப்பும் இருந்தால் அவசியம் "நயினார் தீவு நாக பூசணி அம்மனை" வணங்கிவிட்டு வாருங்கள் உங்கள் துன்பமெல்லாம் மறைந்து இன்பம் கிடைக்கும்...
கடவுள் நம்பிக்கையற்றவர்க்கும் கடவுள் நம்பிக்கை வரவைக்கும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் அதிசயங்கள் ஓர் சிறப்புப் பார்வை!
1. நாகங்கள் அதிகம் உள்ள இடத்தில் நாகப்பாம்பு தென்படுவது எல்லாம் அதிசயமா என்றால் வருடத்தில் 365 நாட்களில் திருவிழா நடைபெறப் போகும் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மற்றவர் கண்களில் இதுபோன்ற நாகங்கள் தென்படுவதில்லை ஏன்?
2. பரந்துபட்ட ஆலய வீதியிலோ ஏனைய பல இடங்களில் தென்படாத நாகங்கள் அம்மனின் புனித இடங்களான மூலஸ்தானம் மற்றும் இராஜ கோபுரம் தீர்த்தகேணி இதில் மட்டும் அடியவர்கள் கண்ணில் தெரிவது எப்படி.....?
3.கேணியில் நீர் குடிக்க வந்திருக்கும் என்ற சிலபேரின் கூற்றுப்படி பார்த்தால்
பாம்பு வருடத்தில் ஒரு தடவை மட்டுமா நீர் அருந்தும்
நீர் அருந்த நயினாதீவில் வேறு இடம் இல்லையா?
4. மனிதர்கள் நடமாடும் இடங்களில் பாம்பு தென்படாது என்பார்கள்
ஆலய வீதியில் எந்த எந்நேரமும் துப்பரவு பணியில் ஈடுபடுபவர்கள்
கண்ணில் தென்படாத நாகம்
முக்கியமான சில தினங்களில் தென்படுவதெப்படி?
5. தற்போதைய நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் கட்டிட அமைப்பின் படி பாம்புகள் உள் நுழைவது அவ்வளவு எளிதான விடயமல்ல
எவ்வாறு உள்ளே பாம்புகள் தென்படுகின்றன
6. நாகம் பூக்கொண்டு வந்து வழிபட்டதாக வரலாற்றை நினைவுபடுத்தும் பாம்பு வடிவில் இருக்கும் பாம்புசுத்திக்கல் இதுவரை எந்த கடல் சீற்றங்களுக்கோ அல்லது இயற்கை அனர்த்தங்களுக்கோ முற்றாக சேதமடையாமல் நிலைத்திருப்பது எப்படி....?????
7. பல சந்ததிகளுக்கே தெரியாத வன்னிமரத்தின் தோற்றம் இன்றுவரை நிலைத்திருப்பது எப்படி......?
8. மகோற்சவத்தில் 11ம் திருவிழாவான கருட சர்ப்பத்திருவிழாவில் பாம்புசுத்திக்கல் மற்றும் கருடக்கல்லுக்கு பூசையிடும் போது மட்டும் கருடன் அவ்விடத்தில் காட்சி கொடுத்து வட்டமிடுவது எப்படி....?
ஏனைய நாட்களில் அவை போன்ற காட்சி இடம் பெறுவதில்லை
ஏன்?
இவற்றுக்கு விடையில்லாத புதிரான புதிர் நயினாதீவு நாகபூசணி அம்மன் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.....!

Monday, May 31, 2021

சந்திரலேகா படம் 9 ஏப்ரல் 1948 அன்று வெளிவந்தபோது !


சென்னையில் ஜெமினி எஸ். எஸ். வாசனின் சந்திரலேகா படம் 9 ஏப்ரல் 1948 அன்று வெளிவந்தபோது !

சந்திரலேகா 1948 ஆம் ஆண்டு வெளியான இந்திய வரலாற்று சாகசத் திரைப்படம். இப்படத்தை எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் டி.ராஜகுமாரி, எம்.கே.ராதா மற்றும் ரஞ்சன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு சகோதரர்களை (வீரசிம்மன் மற்றும் சசங்கன்) பின்தொடர்கிறது. அவர்கள் தந்தையின் ராஜ்யத்தை கைப்பற்றவும், கிராம நடன கலைஞரான சந்திரலேகாவை திருமணம் செய்யவும் போராடுகிறார்கள்.

இதன் வளர்ச்சி 1940-இன் முற்பகுதியில் தொடங்கியது. இரண்டு தொடர்ச்சியான பாக்ஸ் ஆஃபீஸின் வெற்றிகளுக்கு பிறகு, வாசன் தனது அடுத்த படத்திற்கு சந்திரலேகா என பெயரிடுவதாக அறிவித்திருந்தார். இருப்பினும், தயாரிப்பாளர் படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை ஆரம்பித்த போது, அவர் நிராகரித்த ஜெமினி ஸ்டுடியோஸ் கதைகளத்திலிருந்து கதாநாயகியின் பெயர் மட்டுமே இருந்தது. ஜார்ஜ் டபுள்யூ எம்.ரெனால்ட்ஸின் நாவலான ராபர்ட் மக்கேர்: அல்லது தி பிரெஞ்ச் பண்டிட் இன் இங்கிலாந்த் இன் அத்தியாயத்தின் அடிப்படையில் ஒரு கதையை வேப்பத்தூர் கிட்டு உருவாக்கினார். இப்படத்தின் அசல் இயக்குனரான டி.ஜி.ராகவாச்சாரி, வாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தை பாதியிலே விட்டுவிட்டார்.

முதலில் தமிழிலும் பின்னர் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்ட சந்திரலேகா தனது தயாரிப்பை ஐந்து ஆண்டுகளாக செலவிட்டது (1943-1948). இப்படம் பல ஸ்கிரிப்டிங், படப்பிடிப்பு மற்றும் நடிகர்களின் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இது அந்த நேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக விலை உயந்த படம் ஆகும். வாசன் தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து, தனது நகைகளையும் விற்று படத்தை முடித்தார். இதன் ஒளிப்பதிவாளர்கள் கமல் கோஷ் மற்றும் கே.ராம்நாத் ஆவர். இந்திய மற்றும் மேற்கத்திய கிளாசிக்கல் இசையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இப்படத்தின் இசையை எஸ்.ராஜேஸ்வர ராவ் மற்றும் எம்.டி.பார்த்தசாரதி ஆகியோர் பாபநாசம் சிவன் மற்றும் கொத்தமங்கலம் சுப்புவின் பாடல் வரிகளுடன் இசையமைத்தனர்.

சந்திரலேகா ஏப்ரல் 9, 1948 இல் வெளியிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்ச்சனங்களை பெற்றிருந்தாலும், அதன் தயாரிப்பு செலவுகளை அது ஈடுசெய்யவில்லை. சில ரீ-ஷாட் காட்சிகள், சற்று மாற்றப்பட்ட நடிகர்கள் மற்றும் ஆகா ஜானி காஷ்மீரி மற்றும் பண்டிட் இந்திரனின் ஹிந்தி  வசனங்கள் உள்ளிட்ட சில மாற்றங்களுடன் இப்படத்தின் இந்தி பதிப்பை வாசன் இயக்கினார். இந்தி பதிப்பு அதே ஆண்டில் டிசம்பர் 24 அன்று வெளியிடப்பட்டது. இது பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றியை பெற்றது. இப்படம் வெளியானதன் மூலம், தென்னிந்திய சினிமா இந்தியா முழுவதும் முக்கியத்துவம் பெற்றது. மேலும் இது தென்னிந்திய தயாரிப்பாளர்களுக்கு வட இந்தியாவில் தங்கள் இந்தி படங்களை சந்தைப்படுத்த ஊக்கமளித்தது. ஆங்கிலம், ஜப்பானிய, டேனிஷ் மற்றும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இது இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

கதை 

வீரசிம்மனும் சசங்கனும் ஒரு ராஜாவின் மகன்கள். வீரசிம்மன் ஒரு கிராமத்தின் வழியாக செல்லும் போது, சந்திரலேகா என்ற உள்ளூர் நடனக் கலைஞரை சந்திக்கிறார். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அரண்மனையில் வீரசிம்மனுக்கு ஆதரவாக மன்னன் தனது சிம்மாசனத்தை கைவிட முடிவு செய்கிறார். இது திருட்டு கும்பலை உருவாக்கும் வீரசிம்மனின் தம்பியான சசங்கனை கோபப்படுத்துகிறது. அவர்கள் ஒரு குற்றத்தை தொடங்குகிறார்கள். அடுத்தடுத்த குழப்பத்தால் சந்திரலேகாவின் தந்தை காயமடைந்து, விரைவில் இறந்து விடுகிறார். அனாதையான சந்திரலேகா ஒரு பயண இசை கலைஞர்களின் குழுவில் இணைகிறாள். அதன் கேரவன் சசங்கன் கும்பலால் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

சசங்கன், சந்திரலேகாவை அவருக்காக நடனம் ஆடுமாறு வற்புறுத்துகிறார். ஆனால் அவள் விரைவில் தப்பிக்கிறாள். பின்னர் அவர் வீரசிம்மனை பதுக்கி வைத்து கைதியாக அழைத்து செல்கிறான். சசங்கனின் ஆட்கள் வீரசிம்மனை ஒரு குகையில் சிறை வைத்திருப்பதையும், அதன் நுழைவு வாயிலை ஒரு கற்பாறையால் மூடி விடுவதையும் சந்திரலேகா கண்காணிக்கிறாள். ஒரு சர்க்கஸ் குழுவிலிருந்து யானையின் உதவியுடன் அவள் அவனை மீட்கிறாள். வீரசிம்மனும் சந்திரலேகாவும், சசங்கனின் ஆட்களிடமிருந்து மறைவாக இருக்க ஒரு சர்க்கஸ் குழுவில் இணைகிறார்கள். சசங்கன் அரண்மனைக்கு திரும்பும்போது, அவன் பெற்றோரை சிறையில் அடைத்து, தன்னை அரசனாக அறிவித்து சந்திரலேகாவை கண்டுபிடிக்க ஒரு உளவாளியை அனுப்புகிறான்.

அந்த உளவாளி சந்திரலேகா சர்க்கஸில் நடிப்பதை கண்டு, அவளை பிடிக்க முயற்சிக்கிறான். வீரசிம்மன் அவளை காப்பாற்றுகிறான். அவர்கள் தப்பித்து ஒரு நாடோடிகள் கூட்டத்தில் சேர்கிறார்கள். வீரசிம்மன் உதவி தேட செல்லும் போது, சசங்கனின் ஆட்கள் சந்திரலேகாவை பிடித்து அரண்மனைக்கு அழைத்து வருகிறார்கள். சசங்கன் சந்திரலேகாவை கவர முயற்சிக்கும் போது, அவன் அவளை நெருங்க முயற்சிக்கும் போது அவள் மயக்கம் வருவது போல் நடிக்கிறாள். அவரது சர்க்கஸ் நண்பர்களில் ஒருவர் ஜிப்சி குணப்படுத்துவராக வேடமிட்டு சசங்கனின் இருப்பிடத்திற்கு வந்து, சந்திரலேகாவை அவரது நோயிலிருந்து குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பூட்டிய கதவுக்கு பின்னால், இரண்டு பெண்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். சந்திரலேகா குணமடைந்து, அவரை தனது கணவராக ஏற்று கொள்ள தயாராக இருப்பதை கண்டு சசங்கன் மகிழ்ச்சியடைகிறான். அதற்கு பதிலாக, அவர் அரச திருமணத்தில் டிரம் நடனம் ஆட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று கொள்கிறார்.   

அரண்மனைக்கு முன்னால் வரிசையில், பெரிய டிரம்ஸ் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. டிரம்ஸில் நடனம் ஆடும் நடன கலைஞர்களுடன் சந்திரலேகா இணைகிறாள். சந்திரலேகாவின் நடிப்பால் சசங்கன் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அவருக்கு தெரியாமல் வீரசிம்மனின் ஆட்கள் அக்குழுவில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நடனம் முடிந்தவுடன் அவர்கள் வெளியே ஓடி வந்து, சசங்கனின் ஆட்களை தாக்குகிறார்கள். வீரசிம்மன் சசங்கனை எதிர்கொள்கிறான். அவர்களின் வாள் சண்டை சசங்கனின் தோல்வி மற்றும் சிறைவாசத்துடன் முடிவடைகிறது. வீரசிம்மன் தன் பெற்றோரை விடுவித்து புதிய அரசனாகிறான். சந்திரலேகா அவரது ராணியாக இருக்கிறாள்.

தயாரிப்பு 

வளர்ச்சி 

பால நாகம்மா(1942) மற்றும் மங்கம்மா சபதம்(1943) ஆகியவற்றின் பாக்ஸ் ஆஃபீஸின் வெற்றிக்கு பிறகு, ஜெமினி ஸ்டுடியோஸின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் தனது அடுத்த படம் எந்த வித பட்ஜெட் தடையும் இல்லாமல் மிக பெரிய அளவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் கதைத்துறையை சேர்ந்த கே.ஜே.மகாதேவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு, நைனா மற்றும் வேப்பத்தூர் கிட்டு ஆகியோரிடம் திரைக்கதையை எழுத்துமாறு கேட்டார். மங்கம்மா சபதம் மற்றும் பால நாகமம்மா ஆகிய கதைகளை கதாநாயகி சார்ந்த கதைகள் என்று பார்த்தார்கள். இதே போன்ற கதைகளை அவர்கள் பரிந்துரைத்தனர். இந்த கதை சந்திரலேகா என்ற பெண்ணின் கதையை சொன்னது. "ஒரு தீய கொள்ளைக்காரனை விஞ்சி, மூக்கைக் குறைப்பதன் மூலம் இறுதி அவமானத்தை அளிக்கிறது, மேலும் ஒரு முடித்த தொடுப்பாக, இரத்தம் தோய்ந்த இடைவெளியை சூடான, சிவப்பு மிளகாய் தூள் நிரப்புகிறது". கதையின் கொடூரத்தையும் மோசமான தன்மையையும் வாசன் விரும்பவில்லை; அவர் அதை நிராகரித்தார், ஆனால் கதாநாயகி பெயரை மட்டும்  வைத்திருந்தார்.

ஒரு முழு கதைக்காக காத்திருக்காமல், வாசன் தனது அடுத்த படைப்பிற்கு சந்திரலேகா என பெயரிடப்போவதாக அதை மிக பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார். ஜெமினி எழுத்தாளர்களின் கடின உழைப்பு இருந்த போதிலும், மூன்று மாதங்கள் கழித்தும் கதை தயாராக இல்லை. வாசன் தனது பொறுமையை இழந்து, சந்திரலேகாவை அவ்வையார்(1953) க்கு ஆதரவாக நிறுத்துவதாக கூறினார். அவர் இன்னும் ஒரு வாரம் அவகாசம் அளித்த பிறகு, ஜார்ஜ் டபுள்யூ எம்.ரெனால்ட்ஸ் நாவலான ராபர்ட் மக்கேர் அல்லது தி பிரெஞ்ச் பண்டிட் இன் இங்கிலாந்த் உள்ள கதையை கிட்டு கண்டுபிடித்தார். அதன் முதல் அத்தியாயத்தில் அவர்,

கிராமப்புற இங்கிலாந்தில் ஒரு இருண்ட இரவு மற்றும் குதிரைகளால் வரையப்பட்ட ஒரு மெயில் கோச் கான்வாய் ஒரு வெறிச்சோடிய இலை நெடுஞ்சாலையில் திடீரென செல்லும் போது, ​​ராபர்ட் மக்கேர், கடுமையான கொள்ளைக்காரன் மற்றும் அவரது உதவியாளர்கள் சுற்றியுள்ள இருளில் இருந்து வெளிவந்து கான்வாயை கொள்ளையடிக்கிறார்கள். ஒரு இருக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் ஒரு இளம் பெண் கடுமையான, மகிழ்ச்சியற்ற வீட்டிலிருந்து தப்பி ஓடுகிறாள். அவர் ஒரு நடனக் கலைஞர், அவர் நடனமாட மறுக்கும் போது கொள்ளைக்காரர் அவளை அடிபணியச் செய்கிறார். 

கிட்டு இந்த அத்தியாயத்தை அடிப்படையாக கொண்டு ஒரு கதையை சொன்னபோது, வாசன் கவரப்பட்டார். படத்தை தொடர முடிவு செய்த அவர், கதாநாயகிக்கு சந்திரலேகா என பெயரிட்டார். இக்கதையை கிட்டு உருவாக்கியிருந்தாலும், இதன் புகழ் முழுவதும் ஜெமினி கதை துறையிடம் சேர்ந்தது. இப்படத்திற்கு டி.ஜி.ராகவாச்சாரி இயக்குனராக பணியமர்த்தப்பட்டார். 

நடிகர்கள் 

இக்கதையின் ஸ்கிரிப்ட்டில் இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்கள் இருந்தன: ஒரு ராஜ்யத்தின் இரண்டு இளவரசர்கள், அவர்களில் மூத்தவர் கதாநாயகன் மற்றும் இளையவன்  வில்லன். எம்.கே.ராதாவுக்கு இளைய இளவரசரான சசங்கனின் பாத்திரம் வழங்கப்பட்டது. அவர் அப்போது வீர வேடங்களில் அறியப்பட்டதால், ராதா ஒரு வில்லனாக நடிக்க விரும்பவில்லை, அதற்கு பதிலாக அவர் வயதான இளவரசர் வீரசிம்மனாக நடிக்க ஒப்புக்கொண்டார். ராதாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, அவரது மனைவி ஞானம்பாள் வாசனை வற்புறுத்தினார்.  கே.ஜே.மகாதேவனை (ஜெமினியின் கதைத் துறையின் உறுப்பினர்) சசங்கனாக நடிக்க வைக்க வாசன் தேர்ந்தெடுத்தார். மகாதேவனின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட போதிலும், அவரது நடிப்பு "மிகவும் மென்மையாக" கருதப்பட்டது, மேலும் அவர் விலக்கப்பட்டார். அவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர் மற்றும் உதவி இயக்குநராக திட்டத்தில் இருந்தார். ராகவாச்சாரி ரஞ்சனை சசங்கன் என்று பரிந்துரைத்தபோது, ​​வாசன் தயக்கம் காட்டினார். தயாரிப்பாளர் ஆரம்பத்தில் நடிகரை "எஃகு-கடின வில்லன்" ஆக நடிக்கக் கூடாது என்று கருதினாலும், வாசன் இறுதியில் மனம் வருந்தினார். பி.என்.ராவின் சாலிவாஹனனுக்கு (1945) ரஞ்சன் உறுதியளித்திருந்தார், ஆனால் கிட்டூ அவரை சந்திரலேகாவை சோதிக்க தூண்டினார், ராவ் நடிகருக்கு சில நாட்கள் விடுமுறை அளித்தார். திரை சோதனை வெற்றிகரமாக அமைந்து, ரஞ்சன் நடித்தார்.

டி.ஆர்.ராஜகுமாரி, வாசனின் முதல் தேர்வான கே.எல்.வி.வசந்தாவுக்கு பதிலாக சந்திரலேகாவாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். நவீன வரலாற்றாசிரியர்களுக்காக ஜெமினி ஸ்டுடியோவை விட்டு வெளியேறியதால் வாசன் வசந்தாவை விட ராஜகுமாரியைத் தேர்ந்தெடுத்ததாக திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டர் கை நம்பினார். ஏப்ரல் 1947 இல், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டனை பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் மேல்முறையீட்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வாசன் அவரையும் டி.ஏ.மதுரமையும் சசங்கனிலிருந்து சந்திரலேகாவை மீட்பதற்கு வீரசிம்மனுக்கு உதவும் சர்க்கஸ் கலைஞர்களாக நடிக்க நியமிக்கப்பட்டார். காமிக் இரட்டையரைக் காண்பிப்பதற்காக காட்சிகள் சேர்க்கப்பட்டு ஸ்கிரிப்ட் மீண்டும் எழுதப்பட்டது. ஜெமினியின் மங்கம்மா சபதத்தில் வேங்கடாச்சலம் கதாபாத்திரத்தில் நடித்த பி.ஏ.சுப்பையா பிள்ளை, சுப்பையா பிள்ளை என வரவு வைக்கப்பட்டு சந்திரலேகாவின் தந்தையாக நடித்தார். மதுரை ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் எஸ்.என்.லட்சுமி ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். நாயுடு குதிரை வீரராக மதிப்பிடப்படாத பாத்திரத்தை கொண்டிருந்தார், மற்றும் க்ளைமாக்டிக் டிரம்-டான்ஸ் காட்சியில் லட்சுமி ஒரு நடனக் கலைஞராக இருந்தார்.

சந்திரலேகாவில் ஒரு பாத்திரத்திற்காக கிட்டுவை பல முறை தொடர்பு கொண்ட போராட்ட மேடை நடிகர் வி.சி.கணேஷமூர்த்தி (பின்னர் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்), வீரசிம்மனின் மெய்க்காப்பாளராக ஒரு சிறிய பாத்திரத்தில் ஆர்வம் காட்டினார் மற்றும் அவரது தலைமுடியை நீளமாக வளர்த்தார். கிட்டு இறுதியில் கணேஷமூர்த்தியை வாசனிடம் அழைத்து வந்து, அவர் மேடையில் நடிப்பதைக் கண்டார். வாசன் நடிகரை நிராகரித்தார், அவரை "படங்களுக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்" என்று அழைத்து வேறு தொழிலைத் தேர்வு செய்யச் சொன்னார். இந்த சம்பவம் வாசனுக்கும் கணேஷமூர்த்திக்கும் இடையில் ஒரு நிரந்தர பிளவை உருவாக்கியது. மெய்க்காப்பாளரின் பங்கு இறுதியில் என்.சீதாராமனுக்கு வழங்கப்பட்டது, அவர் பின்னர் ஜவர் சீதாராமன் என்று அறியப்பட்டார். கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி சுந்தரி பாய், சந்திரலேகா சசங்கனிலிருந்து தப்பிக்க உதவும் ஒரு சர்க்கஸ் கலைஞராக நடித்தார்.

டி.ஏ.ஜெயலட்சுமி, தனது ஆரம்பகால திரைப்பட வேடங்களில், ஒரு காட்சியில் சுருக்கமாக ஒரு நடனக் கலைஞராக தோன்றினார். எல்.நாராயண ராவ் சர்க்கஸ் மேலாளராக நடித்தார். டி.இ.கிருஷ்ணமாச்சாரி ராஜாவாகவும், வி.என்.ஜானகி ஜிப்சி நடனக் கலைஞராகவும் நடித்தனர், அவர் சந்திரலேகா மற்றும் வீரசிம்மன் ஆகியோருக்கு காட்டில் தங்குமிடம் அளிக்கிறார். கோகனாடா ராஜரத்னம் ராணியாக நடித்துள்ளார். வேப்பத்தூர் கிட்டு சசங்கனின் உளவாளியாக நடித்தார் மற்றும் உதவி இயக்குநராகவும் இருந்தார். பொட்டாய் கிருஷ்ணமூர்த்தி "நாட்டியக் குதிரை" பாடலில் தோன்றினார். சேஷகிரி பகவதர், அப்பண்ணா ஐயங்கார், டி.வி.கல்யாணி, சுரபி கமலா, என்.ராமமூர்த்தி, ராமகிருஷ்ண ராவ், சுந்தர ராவ், சுஷிலா, வரலட்சுமி, வேலாயுதம் மற்றும் "100 ஜெமினி இளைஞர்கள் மற்றும் 500 ஜெமினி பெண்கள்" ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் வழிப்போக்கர்கள் சர்க்கஸ் காட்சிகளில் பார்வையாளர்களை விளையாடுவதற்கு கூடுதல் நபர்களாக நியமிக்கப்பட்டனர், மற்றும் வாசன் தனது சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது சந்திரலேகாவின் குரலை ஓவரில் அறிமுகப்படுத்தினார்.

படப்பிடிப்பு 

சந்திரலேகாவின் படப்பிடிப்பு 1943 இல் தொடங்கப்பட்டது. ராகவாச்சாரி இப்படத்தை பாதிக்கு மேல் இயக்கினார். ஆனால், ஆளுநர் தோட்டத்தில் (ராஜ்பவன், கிண்டி) படப்பிடிப்பின் போது வாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் இத்திட்டத்தில் இருந்து விலகினார். வாசன் இயக்குனராக அறிமுகமானார்.

படத்தில் முதலில் சர்க்கஸ் காட்சிகள் இல்லை. வாசன் அதை பாதியில் சேர்க்க முடிவு செய்தார். திரைக்கதையும் மாற்றப்பட்டது. வீரசிம்மனை யானைகளால் ஒரு குகையிலிருந்து விடுவிக்கும் காட்சிக்கு, நூற்றுக்கணக்கான சர்க்கஸ் யானைகள் பயன்படுத்தப்பட்டன. கமலா சர்க்கஸ் நிறுவனம் மற்றும் பரசுராம் லயன் சர்க்கஸ் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, கிட்டு தென்னிந்தியா மற்றும் சிலோன் முழுவதும் பயணம் செய்தார். வாசன் ஒரு மாதம் கமலாவை பணிக்கு அமர்த்தினார். சர்க்கஸ் காட்சிகளை கே.ராம்நோத் படமாக்கினார். கிட்டு ஒளிப்பதிவாளரின் பணியை நினைவுப்படுத்தினார்.

அந்த காலங்களில் அவர்களிடம் ஜூம் லென்ஸ்கள் இல்லை, இருப்பினும் ராம்னோத் அதை செய்தார். ஒரு இரவு, சந்திரலேகா பறக்கும் ட்ரேபீஸில் நிகழ்த்தும் போது, முன் வரிசையில் வில்லனின் ஆட்களை கவனிக்கிறாள். அவள் பெர்ச்சில் உயரமாக இருக்கிறாள். அவன் ஒரு வளைய நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். அதிர்ச்சி அவளை தாக்க, அது கேமிராவில் பெரிதாக காட்டப்படுகிறது. இன்று, வேகமான ஜூம் ஷாட்கள் மூலம் இதை எளிதாக செய்ய முடியும். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற லென்ஸ் இல்லை. ராம்னோத் அதை கிரேன் பயன்படுத்தி செய்தார். அவர் அதை நீண்ட நேரம் ஷாட் ஒத்திகை பார்த்தார். அவர் ஷாட்டை 20 முறை எடுத்த பிறகு சிறந்த டேக்கை தேர்வு செய்தார். 

ராகவாச்சாரி படத்திலிருந்து வெளியேறிய பிறகு, அவர் இயக்கிய டிரம்-டான்ஸ் காட்சி படத்தில் நீடித்தது. இந்த காட்சியில் 400 நடனக் கலைஞர்களுக்கு ஆறு மாத தினசரி ஒத்திகை இடம்பெற்றன. இதை தலைமை கலை இயக்குனர் ஏ.கே.சேகர் வடிவமைத்தார், ஜெயசங்கர் நடனம் அமைத்தார் மற்றும் கமல் கோஷால் நான்கு கேமராக்களால் படமாக்கப்பட்டது. காட்சிக்கு 500,000 (1948 இல் சுமார் 105,000 அமெரிக்க டாலர்) செலவாகும் என்று ரேண்டர் கை மதிப்பிட்டார். அவரது  2015 ஆம் ஆண்டு புத்தகமான மெட்ராஸ் ஸ்டுடியோஸ்: கதை, வகை மற்றும் தமிழ் சினிமாவில் உள்ள கருத்தியல், ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளை இந்த காட்சிக்கு அந்தக் காலத்தின் ஒரு பொதுவான தமிழ் திரைப்படத்தின் முழு பட்ஜெட்டுக்கு 200,000 டாலர் செலவாகும் என்று மதிப்பிட்டார். இந்த காட்சியில் கதகளி மற்றும் பரதநாட்டியம் கிளாசிக்கல் நடனங்கள் மற்றும் இலங்கை கண்டியன் நடனம் ஆகியவை அடங்கும். ஏ.வின்சென்ட், பின்னர் மலையாள சினிமாவில் நிறுவப்பட்ட ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் ஆனார், இந்த படத்தில் கோஷுக்கு உதவினார். 

இப்படத்தின் தயாரிப்பிற்கு பின்பு, ​​சந்திரலேகாவை சசங்கனிடமிருந்து மீட்பதற்காக நூற்றுக்கணக்கான வீரசிம்மனின் வீரர்கள் அரண்மனையைத் தாக்கியபோது, ​​அந்த காட்சி குறித்து ராம்னோத்திடம் வாசன் கேட்டார். காட்சியின் புகைப்படம் எடுத்தல், காட்சிகள் மற்றும் செயல் ஆகியவை ஏகமனதாக மற்றவர்களால் பாராட்டப்பட்டிருந்தாலும், காட்சி வெட்டப்படாமல் காட்டப்பட்டால் சஸ்பென்ஸ் அழிக்கப்படலாம் என்று சொல்வதற்கு முன்பு ராம்னோத் அமைதியாக இருந்தார். இது ஒரு விவாதத்தைத் தூண்டியது; ராம்னோத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப திருத்துமாறு வாசன் ஆசிரியர் சாண்ட்ருவுக்கு அறிவுறுத்தினார், இதன் விளைவாக அவர் ஈர்க்கப்பட்டார். சி.ஈ.பிக்ஸ் படத்தின் ஆடியோ பொறியாளராக இருந்தார்.

சந்திரலேகா ஐந்து ஆண்டுகளாக (1943-1948) தயாரிப்பில் இருந்தது, அதன் கதை, நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பில் மாற்றங்களுடன் கணிசமான நேரத்தையும் செலவுகளையும் மீறியது. இந்த படம் இறுதியில் 3 மில்லியன் (1948 இல் சுமார் 600,000) செலவாகியது, இது அந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்திய திரைப்படமாகும். வாசன் தனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்தார், தி இந்து ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனிடமிருந்து நிதி உதவி பெற்றார் மற்றும் படத்தை முடிக்க தனது நகைகளை விற்றார். பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்டாலும், சந்திரலேகாவுக்கு 2010 இல் 28 மில்லியன் செலவானது. வரலாற்றாசிரியர் எஸ். முத்தியாவின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் இலவச-மிதக்கும் மாற்று விகிதம் நடைமுறையில் இருந்ததால், இது அமெரிக்காவிற்கு வெளியே ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் பட்ஜெட்டைக் கொண்ட முதல் படம் ஆகும்.

சந்தைப்படுத்துதல் 

சந்திரலேகாவுக்கான முதல் விளம்பரம் தாசி அபரஞ்சி (1944) படத்திற்கான பாடல் புத்தகத்தின் பின்புற அட்டையில் தோன்றியது. விளம்பரத்தில், ராஜகுமாரிக்கு பதிலாக வசந்தா கதாநாயகியாக காட்டப்பட்டார். சந்திரலேகாவுடன், ஜெமினி இந்தியா முழுவதும் ஒரு திரைப்படத்தை விநியோகிக்க முயன்ற முதல் தமிழ் ஸ்டுடியோ ஆகும். திரைப்பட அறிஞர் பி.கே.நாயர் கருத்துப்படி, இது ஒரு முழு பக்க செய்தித்தாள் விளம்பரத்துடன் வெளிவந்த முதல் இந்திய படம் ஆகும். 2010 மும்பை மிரர் கட்டுரையில், விஸ்வாஸ் குல்கர்னி படத்தின் செய்தித்தாள் விளம்பரத்திற்காக 574,500 மற்றும் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகளுக்கு 642,300 செலவிட்டதாக எழுதினார்.  அந்த நேரத்தில் ஒரு இந்திய படத்திற்கு சந்திரலேகாவின் விளம்பர பிரச்சாரம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஒரு பொதுவான இந்திய திரைப்படத்திற்கான விளம்பர பட்ஜெட் சுமார் 25,000 ஆகும், மேலும் ஒரு "சிறந்த இந்திய திரைப்படத்திற்கான" விளம்பரம் 1950 களில் 100,000 க்கு மேல் செலவாகவில்லை. கை படி, படத்தின் விளம்பர பிரச்சாரம் "தேசத்தை உட்கார்ந்து கவனிக்க வைத்தது".

ஏ.கே.சேகர் விளம்பரப் பொருளை வடிவமைத்தார், அதில் சுவரொட்டிகள், சிறு புத்தகங்கள் மற்றும் முழு பக்க செய்தித்தாள் விளம்பரங்கள் ஆகியவை அடங்கும். அமெரிக்க சினிமாவால் ஈர்க்கப்பட்ட ஜெமினி ஸ்டுடியோஸ், கண்காட்சியாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விநியோகிப்பதற்கான விளம்பர சிற்றேட்டை உருவாக்கியது. இந்த படத்தின் சுருக்கம், முக்கிய சதி புள்ளிகளின் சித்திரக் கணக்கு மற்றும் உள்ளூர் திரையரங்குகளின் பயன்பாட்டிற்கான உரை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த கையேட்டில் பெண்கள் பக்கங்களுக்கான தளவமைப்புகள், பரிந்துரைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளின் சித்திரக் கணக்கு ("ஒரு இந்திய புடவையை எப்படி உருவாக்குவது: தியேட்டர் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பெரிய சமநிலையைக் கொண்டுள்ளன" போன்றவை) மற்றும் படத்தின் உடைகள் பற்றிய தகவல்களும் இருந்தன. ஆடைகள் பட்டு மற்றும் தங்கத்தால் கையால் நெய்யப்பட்டன. ஒரு தங்க-எம்பிராய்டரி சவாரி ஜாக்கெட் "ஒரு இயக்கப் படத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட மிகவும் விலையுயர்ந்த ஆடை" என்று கருதப்பட்டது.

Thanks

http://www.moolai.com/

Saturday, May 29, 2021

மறக்கப்பட்ட கவிஞர் மாயவநாதன்

 கவிஞர்.மாயவநாதன்பெயரைக் கேட்டதும் இந்தப் பெயரில் கவிஞர் ஒருவரா? தெரியாதே, யாரவர்? என்று கூடப் பலருக்கும் கேட்கத் தோன்றும். அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் விழிகள் வியப்பினால் விரியக் கூடும் ஓ! வென வாயைத் திறக்கக் கூடும்.

விளம்பர வெளிச்சம் இல்லாமல் இருட்டுக்குள்ளே மறைந்து அல்லது மறைக்கப்பட்டு, அடையாளம் இல்லாமல் அடங்கிப் போன ஏராளமான திறனாளர், நடிகர், அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கலைஞர், மேதையர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததுண்டு. அப்பட்டியலில் மாயவநாதன் என்ற இந்த ஏழை அப்பாவிக் கவிஞனும் ஒருவன் என்பதுதான் வேதனையான உண்மை.
பணம் ஒன்றே குறிக்கோள் என்று நினைக்காத காரணத்தால், கொண்ட கொள்கையில் மாறாத பிடிவாதத்தால் அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடங்கி நடக்க, நடிக்க, கூழைக் கும்பிடு போட, முகஸ்துதி பாட மறுத்தவர்,எவருக்கும் பணியாத வணங்காமுடிக் கவிஞர் இவர். உடன் பிறந்தது சுயகௌரவம். எப்படியாவது பொருளீட்ட வேண்டும் என்றால்தானே மனசாட்சி மறுத்த போதிலும், பொருளல்லவரைப் பொருளாக்கிப் பாட வேண்டிய அவசியம் ஏற்படும். இவர்தான் பணத்தை ஒரு பொருட்டாக நினைக்கவில்லையே.
அவ்வையிடம், பொருள் நிறைந்த செல்வன் ஒருவன், பொன் கொடுத்துத் தன்னைப் புகழ்ந்து ஒரே ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்டபோது, “உன்னிடம் பொருள் ஏராளம் இருக்கிறது. ஆனால புகழ்ந்து பாடும் அளவிற்கு நீ ஒரு பொருள் இல்லை. நீ அள்ளிக்கொடுத்த வள்ளலா? அமரில் மாவீரனா? இல்லாதோர் காவலனா? இசைபாடும் நாவலானா?. தமிழ்பால் மாறாக் காதலனா?. நீ ஒரு பாடு பொருளாக இருக்க முடியாது.எதை வைத்து உன்னைப் பாடுவது?”. என்று கேட்டாளாம்.புலவர்கள், ஒன்றும் இல்லாதவர்களை ஒரு பொருட்டாக ஒரு போதும் கருதுவதில்லை.
சிறுவயதிலேயே ஏராளமான திறமைகளைச் சுமந்துகொண்டு சென்னை நோக்கிப் பயணம் செய்த மாயவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்தது சந்திரகாந்தா நாடகக் கம்பெனி.

மாயவநாதன் மிகச்சிறந்த காளி பக்தர். மகாகவி காளிதாசன் போல, அன்னை காளிக்கு மட்டுமே தன்னை அடிமைப்படுத்திக் கொண்டவர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர் போன்ற உயர்ந்தோர் நட்பு இவருக்கு உண்டு. அதனால் பொருளாசை இல்லாமல் இறைவனுக்கு மட்டுமே தன்னை அடிமை செய்து, மனிதருக்கு அடிமை செய்யாமல் வாழ்ந்து விட்டாரோ என்னவோ?
மருதமலைக் கோவிலைச் சீரமைத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் திரு.சாண்டோ சின்னப்பா தேவர், மருதமலைக் கோவில் மலையில் முருகன் புகழைப் பாடல் வடிவத்தில் கல்வெட்டுகளாக எழுதி வடித்து வைக்க ஆசைப்பட்டார். அந்தப் பாடல்களை எல்லாம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்தான். என்றென்றும் மாயவநாதனின் புகழை நிலைத்து நிற்கச் செய்யும் அக்கல்வெட்டுகளை முருகன் துதிப் பாடல்களாக நிலைத்து நிற்பதை இன்றும் மருதமலையில் காணலாம்.
1936 ஆம் ஆண்டு இன்றைய தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் மாயவநாதன்.1971 ஆம் ஆண்டு சென்னையில் திடீரென மறைந்தவர். 35 வயது மட்டுமே பூவுலகில் வாழும் பேறு பெற்று தன் பாடல்களால் நம்மை மயக்கி விட்டு,மறைந்து மாயமாகி போனவர் மாயவநாதன் . திரையுலகில் சில காலமே வலம் வந்தாலும் அழியாப் புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர்.
இவரது பாடல்களை இன்றும் தொலைக்காட்சிகளில் வானொலிகளில் கேட்பார், அவையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்று தவறாக நினைப்பார்கள் யாரும் எடுத்துச் சொல்லும் வரை இந்தக் குழப்பம் இருக்கும். நான் கூட பலமுறை இந்தத் தடுமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறேன். அந்த அளவிற்கு கவியரசர் கண்ணதாசனைப் போலவே சிறப்பாகச் சிந்திக்கும் ஆற்றல் கவிதையை மழையாகக் கொட்டும் ஆற்றல் மாயவநாதனுக்கு உண்டு. அவர்களெல்லாம் வர கவிஞர்கள் அமர கவிஞர்கள்… காளமேகங்கள்..
அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவி மக்கள் ஓலைக்குடிசை ஒன்றில் வாழும் அளவிற்குத்தான் வசதி இருந்தது. இன்னும் அவருடைய பிள்ளைகள் பேரக் குழந்தைகள் மிகச் சாதாரணமான வேலை செய்து, விவசாயக் கூலிகளாகக் குடும்பம் நடத்துகிறார்கள். சொந்த ஊரில் அவருடைய உடல் எரியூட்டம் நடந்த இடம் கூட கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதைப் பார்க்க நேரும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு பெரிய பாரம் ஏறிவிடும். கவி கரியான இடம்….
படித்தால் மட்டும் போதுமா, என்ற திரைப்படத்தில் இடம்பெறும், தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள். இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்… என்ற பாடல் எவ்வளவு இதமான இனிமையான பாடல். விண்ணளந்த மனம் இருக்க. மண்ணளந்த நடை எடுக்க பொன் அளந்த உடல் நடுங்க வந்தாள்…. ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்… இந்தப் பாடலில் என்ன இல்லை? அழகியல் இல்லையா? உணர்ச்சி இல்லையா? வடிவம் இல்லையா? கருத்து இல்லையா? எல்லாமே அதிகப்படியாய்த் தான் உள்ளன…….அந்த ஒரு பாடல் அப்படத்தில் வரும் மற்ற அனைத்து (பிற கவிஞர்கள் எழுதிய)நல்ல பாடல்களையும் மறக்கச் செய்துவிடும் அளவிற்கு சிறப்பாக இருக்கும்.

பந்த பாசம் என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய, நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ? கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?. என்ற பாடலில்,
இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலைமை எதிரில் வந்து கடமை என்றது காதல் என்னும் உதிர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது.. என்று கூறுவார். . இளமை உணர்வு ஒருபுறம் காதல் காதல் என்று கூறுகிறது. ஆனால் குடும்ப நிலைமை மனதில் எழுந்து வந்து நம் காதலால் குடும்பம் அழிய நேரிடும் என்ற உண்மையை உணர்த்தும் போது காதலைத் தியாகம் செய்கிறான் அவன். இவ்வாறு குடும்பக் கடமை வென்றது; காதல் தோற்றது. அதைக் காதல் எனும் பூ உலர்ந்து கடமை வென்றது. என்று கூறும் இடம்…ஆகா அருமை அருமை என்ன உணர்ச்சி என்ன ஆழமான கருத்து.. காதலை ஒரு பூவாக உருவகம் செய்தது. அருமையான வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த பாடல் என்று சிலாகிக்கத் தோன்றுகிறது.

பூமாலை எனும் திரைப்படத்தில் கயவன் ஒருவனால் தன் கற்பிழந்த பெண் பாடுவதாக அமைந்த பாடல்..
கற்பூர காட்டினிலே கனல் விழுந்துவிட்டதம்மா…உவமை.. பாருங்கள்.. அவள் நிலை.. கற்பூரத்தால் அமைந்த ஒரு காட்டில் ஒரு சிறு கனல் விழுந்தால் என்னவாகும்? கண்மூடித் திறக்குமுன் யாரும் அணைக்க முடியாமல் முற்றிலும் எரிந்து காற்றில் கரைந்து காணாமல் தானே போகும்.

பந்தபாசம் படத்தில் கவலைகள்  கிடக்கட்டும் மறந்துவிடு . என்ற இவரது 

பாடலைக் கேட்டால் எந்தக் கவலையும் படாமல்.. காரியம் நடக்கட்டும் என்று குறைந்தபட்சம் ஒருநாள் நம்மால் இருக்க முடியும். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை தரும் ஒரு பாடல்.

பாலும் பழமும் படத்தில் பழுத்துவிட்ட பழம் அல்ல… உதிர்வதற்கு…. என்னும் பாடலைக் கேட்டுப்பாருங்கள். அந்த இளம் மனைவி திடீரென இறந்து போன செய்தியைக் கேட்ட கணவனின் நிலையை நாம் உணரக்கூடும். இதயத்தில் ஒரு கனம் ஏற்பட்டு எல்லோ கண்களும் கலங்குவது நிச்சயம்.

“என்னதான் முடிவு?” என்று ஒரு திரைப்படம். அதில் இடம்பெறும் ஒரு பாடல், இந்தப் பாடலைச் சிறு வயதில் முதன் முதலாகக் கேட்கும்போது, என்னை அறியாமலேயே ஏதோ ஒரு உணர்வு, இன்னும் சொல்லப்போனால் சிறு பய உணர்வு கூட ஏற்பட்டது. இன்றுவரை ஏன் என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் இப்பாடலை எழுதியவர் யார் என்பதெல்லாம் தெரியாது. பாடல் இதுதான்.

'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே. செய்த பாவம் தீரும் முன்னே இறக்க வைக்காதே'. இந்தப் பாடல் என்ன முயற்சி செய்தாலும் வேறு எவரும் எழுதியிருக்க முடியாது என்றுதான் இன்றும் தோன்றுகிறது. இப்படி எழுதுவதற்கு அசாதாரணமான தைரியமும் வேண்டும். இப்பாடலில் ஓரிடத்தில் வஞ்சகர்க்குச் சாபம் இடுவார்...வஞ்சகரின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ... வாய் நிறைந்த பொய்யருக்குச் சூலம் வரவேண்டாமோ.. காலழுகி, கையழுகிக் காடு செல்ல வேண்டாமோ? காதகனைக் கண்டு மக்கள் காறித் துப்ப வேண்டாமோ? வஞ்சனை செய்யும் மனிதருக்கு வாதநோய் வரவேண்டும்.. பிறரைப் பற்றி பொய்யான வார்த்தை சொல்லி, புறம் பேசித் திரியும் மனிதருக்கு, பொய் சொல்லி ஒருவனுக்கு துன்பம் உண்டாகும் மனிதருக்கு மரணம் வரவேண்டும் என்று கேட்கிறார்... பாடலின் பல்லவியில் நான் ஒரு பாவி என்னை மீண்டும் ஒரு முறை இந்த உலகில் பிறக்க விட்டுவிடாதே... இறைவனிடம் இப்படி விண்ணப்பிக்கிறார்.. நிறைய பாவம் செய்து இருக்கிறேன் அதற்கெல்லாம் தண்டனையை இங்கேயே அனுபவிக்க வேண்டும். கோடி வகை நோய் கொடையா சாகும்வரை அழவிடையா.. நான் இறந்தால் மீண்டும் பிறந்தாலும் இதே பாவத்தை மீண்டும் மீண்டும் செய்வேன் அதனால் எனக்கு இன்னொரு பிறவி வேண்டாம் என்பது பாடலின் கருத்து.

பூம்புகார் திரைப்படத்தில் மாதவியிடம் இருந்து நீண்ட காலம் கழித்து நல்ல புத்தியோடு திரும்பி, கண்ணகியிடம் கோவலன் வருகின்றபோது, பின்னணியில் கே.பி சுந்தராம்பாள் குரலில் கணீரென்று ஒலிக்கும் ஒரு பாடல்…தப்பித்து வந்தானம்மா தன்னந்தனியாக நின்றானம்மா…. காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல் தப்பித்து வந்தானமமா… ஆகா என்ன அருமையான வரிகள். காலம் தவறு செய்யும் எல்லோருக்கும், ஒரு பாடம் கற்பிக்கும் அது மாபெரும் அடியாக இருக்கும்… அந்த அடியைத் தாங்க முடியாது… அப்போது தப்பித்து ஓடத் தான் தோன்றும்.

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே புதையல் படத்தில் இடம்பெற்ற பாடல் கூட இவரது பாடல் என்று கூறப்படுகிறது. இப்பாடல் பற்றி வேறு கருத்துகளும் உள்ளன அது விவாதப் பொருள். நமக்கு வேண்டாம்.

என்ன கொடுப்பாய்? என்ற தொழிலாளி படப் பாடல், ஒரு ஜாலியான காதல் பாடல், இன்னொரு படத்தில் சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ? கற்பனை நிறைந்த மென்மையான ஒரு காதல் பாடல்.இப்படிப் பல அருமையான பாடல் எல்லாம் இவர் எழுதியவை. இவர் இயற்றிய பாடல்கள் எவை என முழுமையாக அறிந்து கொள்ளக் கூட இன்று இயலவில்லை.

மறக்க முடியுமா எனும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகச் சென்றார் மாயவநாதன். சற்று தாமதம் ஆகிவிட்டது. வழக்கமாக அமைத்த இசைக்கு தத்தகாரம் போட்டுக் காட்டுவார்கள் இசையமைப்பாளர்கள். ஆனால் அன்று பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்,
டி.கே.ராமமூர்த்தி, வேடிக்கையாக, தத்தகாரம் சொல்லாமல் கவிஞரின் பெயரையே அவர் உருவாக்கிய இசைக்கு வரிகளாக பாடிக் காட்ட… மாயவநாதன் ….மாயவநாதன்…. மாயவநாதன்….. என்று.. உடனே கவிகளுக்கே உரிய கவி கோபம் இவருக்கு வந்துவிட ,”பாட்டு எழுத முடியாது”. என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்… பின்னர் அப்படத்திற்குக் கதை வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்களே அப்பாடலை, காகித ஓடம் கடலலை மேலே போவதைப்போல மூவரும் போவோம் என்று எழுதினார். இப்படி கோபித்துச் சென்றது கவிஞர்களின் இயல்பு. வித்யா கர்வம் என்றுஅதைச் சொல்வார்கள்.
‘கவியரசர் கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞர் மாயவநாதன்’ என்று, கவிஞர் நா.காமராசன் தன்னுடைய நூல் ஒன்றில் மாயவநாதனைக் குறிப்பிடுகிறார் . அந்த அளவிற்கு, படிக்காத இந்த பாமர விவசாயி தனக்குள்ளே, கவித்துவம் நிறைந்தவனாக இருந்தான்.
கவிஞர் கண்ணதாசன் ஒருவரே கவிஞர் என்று அறியப்பட்ட காலம் அது. அவரது பாடல்களுக்கு ஈடும் இணையும் இல்லை. எவரும் அவரைப் போல எழுதி இனிமேல் சாதிக்க முடியாது என்று இருந்த காலம் அது. கவியரசர் பாடலை தவிர வேறு எவருடைய பாடலும் அங்கீகரிக்கப்படாத காலம் மாயவநாதன் வாழ்ந்த காலம். அந்தக் காலகட்டத்தில் அழியாத பாடல்களை தந்தவர்.
கவிஞர் மாயவநாதன் பிறந்த ஊரான பூலாங்குளம் என் சொந்த ஊரின் பக்கத்து ஊர்தான். என் தங்கை கூட அவ்வூரில் தான் வாழ்க்கை நடத்துகிறாள். அவர் என் உறவினர் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை எப்போதும் உண்டு. அதே நேரத்தில் கொண்ட கொள்கையினால் இவ்வுலக வாழ்க்கையைப் பொருள் இன்றி வாழ முடியாது என்பதைப் புரிந்து கொள்ளாமலே, தன் இனிய
குடும்பத்திற்கு வறுமையைச் சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போய் விட்டாரே, என்ற வருத்தமும் உண்டு. இருந்தாலும் அவரது பாடலே நமக்கு மருந்தாக….

“கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு..

Thanks

முதுகலை பட்டதாரி ஆசிரியர் க.முத்துமணி

https://www.seithisaral.in/

கவிஞர் மாயவநாதன் பாடல் நயம்

1.வேல்தேடி- - -எறிகின்ற- - -வீரமுண்டு
நூல்தேடி- - - -தருகின்ற- - -ஞானமுண்டு


இவ்வரிகளின் மூலம்,தமிழனுக்கு வீரமுமுண்டு, விவேகமுமுண்டு எனநயம்படச்சொல்கிறார்.

2.எங்கிருந்து- - - - - -வந்தவரோ
நெஞ்சில்நின்ற- - பாவலரோ


நம் நெஞ்சில் நின்ற இப்பாவலனை புகழுவதற்குகூட,சொற்களை விட்டுச்சென்ற வித்தகனிவன்.

3.முத்துநகைப்- - - பெட்டகமோ
முன்கதவு- - - - - ரத்தினமோ


முத்துப்பற்களின் புன்சிரிப்பு வாய் என்ற
பெட்டகத்திலிருந்து வருவதாகவும்,அந்த
பெட்டகத்திற்கு, ரத்தின நிறமமைந்த இதழ்கள்
கதவுகளாகவும், உள்ளதாகவும் உவமையழகில்உருவாக்கிய வரிகளிவை.


4.மணமகனுக்கு 21 வயதும்,மணமகளுக்கு 18
வயதும் நிறைவுற்றிருந்தால் மட்டுமே,
அரசு வழங்கும் திருமண உதவி பெறமுடியும்
என்பது சட்டம்.நம் கவிஞனும் இதைத்தான்
வலியுறுத்துகின்றானோ?


ஆண்:-இவளொரு..அழகிய....பூஞ்சிட்டு_வயது
..........ஈரொம்.......போது.......பதினெட்டு
பெண்:-இவருக்கு..வயசு........மூவெட்டு_பொங்கி
..........இளமை......சதிராடும்..உடற்கட்டு

 

 



படம் . . . . . . இசையமைப்பாளர்
பாடல். . . . . . பாடகர்கள்


படித்தால் மட்டும் போதுமா-1962
. . . . . . . . . . . . . . .விஸ்வநாதன்-ராமமூர்த்தி
1.தன்னிலவு தேனிரைக்க - P.சுசீலா

பந்தபாசம் - 1962 - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
2.நித்தம் நித்தம் மாறுகின்ற - சீர்காழி கோவிந்தராஜன்
3.இதழ் மொட்டு - P.B.ஸ்ரீனிவாஸ்,P.சுசீலா
4.கவலைகள் கிடக்கட்டும்
. . . . . . . . . T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ்
5.எப்போ வச்சுக்கலாம் - J.P.சந்திரபாபு

தென்றல் வீசும் - 1962
. . . . . . . . . . . . . . விஸ்வநாதன்-ராமமூர்த்தி
6.ஏ மாமா கோவமா
. . . . . . . . .G.K.வெங்கடேஷ், L.R.ஈஸ்வரி
7.அழகான மலரே - P.B.ஸ்ரீனிவாஸ்
8.சந்தனத்தில் நிறமெடுத்து - S.ஜானகி
9.ஆசையில் பிறப்பது - P.சுசீலா
10.ஆசையில் பிறப்பது - L.R.ஏஸ்வரி

இதயத்தில் நீ - 1963 - M.S.விஸ்வநாதன்
11.சித்திரப்பூவிழி வாசலிலே - P.சுசீலா,L.R.ஈஸ்வரி

தொழிலாளி - 1964 - K.V.மகாதேவன்
12.வருக வருக திருமகளின்
. . . . . . . . . . . . .T.M.சௌந்தரராஜன்,P.சுசீலா
13.என்ன கொடுப்பாய்
. . . . . . . . . . . . . T.M.சௌந்தரராஜன்,P.சுசீலா
14.அழகன் அழகன் - P.S.சுசீலா,ஜானகி

பூம்புகார் - 1964 - R.சுதர்ஸனம்
15.தமிழ் எங்கள் உயிரானது - P.சுசீலா
16.காவிரிப்பெண்ணே - T.M.S. ,S.ஜானகி
17.தொட்டவுடன்(குறும் பாடல்)
. . . . . . . . . . . . . . . . . . . . . .K.P.சுந்தராம்பாள்
18.(பவளமணி மாளிகையில்)தப்பித்து வந்தானம்மா
. . . . . . . . . . . . . . . . . . . . . . K.P.சுந்தராம்பாள்
19.(துன்பமெலாம்)உறவாடும்பண்புதனை
. . . . . . . . . . . . . . . . . . . . . . K.P.சுந்தராம்பாள்
20.(நீதியேநீஇன்னும்)அன்றுகொல்லும்
. . . . . . . . . . . . . . . . . . . . . . K.P.சுந்தராம்பாள்

தாயின் கருணை - 1965 -G.K.வெங்கடேஷ்
21.பூந்தென்றல் இசைபாட - P.B.ஸ்ரீனிவாஸ்
22.ஒருகோடி பாடலுக்கு - சீர்காழி கோவிந்தராஜன்
23.சின்ன சின்ன கோயில் - S.ஜானகி,A.P.கோமளா
24.எங்கிருந்து வந்தவரோ - L.R.ஈஸ்வரி

பூமாலை - 1965 - R.சுதர்ஸனம்
25.(கற்பூரக் காட்டினிலே)பெண்ணே உன்கதி
. . . . . . . . . . . . . . . . . . . . . . .C.S.ஜெயராமன்
26.(உலகமே எதிர்த்தாலும்)பெண்ணே உன்கதி
. . . . . . . . . . . . . . . . . . . . . . .C.S.ஜெயராமன்

என்னதான் முடிவு - 1965 - R.சுதர்ஸனம்
27.(நீண்டமதிற்சுவரும்)பாவிஎன்னைமறுபடியும்-T.M.S.
28.உன்னைப் பாத்து மயிலக்காளை - P.சுசீலா

காதல் படுத்தும் பாடு - 1966 - T.R.பாப்பா
29.இவளொரு அழகிய பூஞ்சிட்டு - T.M.S.,P.சுசீலா
30.மேலாடை காற்றாட - P.சுசீலா
31.(பெற்றெடுத்த தாயும்)காவலும் இல்லாமல் - T.M.S.

மறக்க முடியுமா - 1966 - ராமமூர்த்தி
32.வானும் நிலமும் வீடு - A.L.ராகவன்

வாலிப விருந்து - 1967 - R.சுதர்ஸனம்
33.அவன் காதலித்தான் - L.R.ஈஸ்வரி

கற்பூரம் - 1967 - T.P.ராமச்சந்திரன்
34.அழகுரதம் பொறக்கும்-தாராபுரம்சுந்தரராஜன்- P.சுசீலா

காதல் வாகனம் - 1968 - K.V.மகாதேவன்
35.வா பொன்னுக்கு பூவைக்கவா - T.M.S.,P.சுசீலா

தெய்வீக உறவு - 1968 - K.V.மகாதேவன்
36.முத்து நகைப் பெட்டகமோ -T.M.S.
37.சிந்தாமசிரிப்பாசிங்காரபாப்பா-M.S.ராஜேஸ்வரி

தேர்த் திருவிழா - 1968 - K.V.மகாதேவன்
38.அடிக்கட்டுமா முரசு - T.M.S.,P.சுசீலா

காவல் தெய்வம் - 1969 - தேவராசன்
39.அய்யனாரு நெறஞ்சவாழ்வு
. . . . . . . . . . . .தாராபுரம் சுந்தரராஜன்,P.சுசீலா

மகிழம்பூ - 1969 - T.P.ராமச்சந்திரன்
40.தனக்கு தனக்கு என்று
. . . . . . . . . . T.M.S.,சீர்காழி கோவிந்தராஜன்
41.ஆலோலம் ஆலோலம் - L.R.ஈஸ்வரி,A.P.கோமளா
42.மாம்பூ மகிழம்பூ - L.R.ஈஸ்வரி

தாலாட்டு - 1969 - M.L.ஸ்ரீகாந்த்
43.மல்லிகை பூப்போட்டு கண்ணனுக்கு
. . . . . . T.M.S.,சூலமங்கலம் ராஜலட்சுமி

மனைவி - 1969 - K.V.மகாதேவன்
44.(பழுத்த நிலவெரிக்க)அண்ணியவள் தாகத்துக்கு
. . . . . . P.சுசீலா,L.R.ஈஸ்வரி

கெட்டிக்காரன் - 1971 - சங்கர்-கணேஷ்
45.வா வா இது ஒரு ரகசிய - L.R.ஈஸ்வரி

தேரோட்டம் - 1971 - S.M.சுப்பையா நாயுடு
46.கந்தனின் தேரோட்டம் - சூலமங்கலம் ராஜலட்சுமி
47.அட மாமா இப்படி - S.ரங்கராஜன், L.R.ஈஸ்வரி

திருவருள் - 1975 - வைத்தியநாதன்
48.(வேல் வேல்)எங்கும் திரிந்து வரும்
. . . . . . . . . . . . . . . . . . . . .T.M.S.,குழுவினர்
49.(முத்துத் திருப்புகழை) - மலைகளிலே சிறந்த மலை
. . . . . . . . . . . . . . சீர்காழி கோவிந்தராஜன்
50.(கன்னித் தமிழுக்கு) - மருத மலைக்கு நீங்க
. . . . . . . . . . . . . . . . . . . . . T.M.S.,குழுவினர்


Thanks

 பொன்.செல்லமுத்து

Saturday, May 22, 2021

சித்த மருத்துவம் மதிப்பு இழக்கக் காரணம் என்ன?

சித்த மருத்துவத்தின் ஆரம்பம்

இந்தியாவில் சித்த மருத்துவமானது மிகப்பழைமையான மருத்துவ முறையாகும். சித்தா என்பது மருத்துவத்தில் துறவிகளான சித்தர்கள் முயன்று, ஆராய்ந்து செயல்படுத்தி வெற்றி பெற்றதால் ‘சித்தா’ எனப்பெயர் பெற்றது. பதினெட்டு சித்தர்கள் இந்த சித்தமருத்துவத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தார்கள். சித்த இலக்கியம், அதிகமாக தமிழ்பேசும் இடங்களான இந்திய நாட்டிலும், வெளிநாடுகளிலும், நடைமுறையில் உள்ளது. சித்த முறையானது இயற்கையான மருத்துவ முறையை சார்ந்தது.

சித்தாவின் வரலாறு

மனித இனம், கிழக்கிலே குறிப்பாக இந்தியாவிலே மிகவும் வளம் நிறைந்த இடத்திலே தோன்றியது. இங்கு மனித இனத்தின் கலாசாரம் பண்பாடு உருவானது. இதன் மூலமாக மனித கலாசாரம், நாகரீகம் முதலானவை இந்தியாவில் இருந்து பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்திய வரலாற்று கூற்று படி ஆரியர்கள் வருவதற்கு முன்பே திராவிடர்கள் இந்தியாவில் இருந்தார்கள். அதிலும் தமிழர்கள் அதிகம் காணப்பட்டார்கள். தமிழர்களின் கலாச்சாரம் மற்றெல்லா கலாசாரத்தை விட மிக வேகமாக வளர்ந்தோங்கியது. இந்தியாவின் மொழிகள் இரண்டு பிரிவுகளாக இருந்தது. வடக்கே சமஸ்கிருதமும், தெற்கே திராவிட மொழிகளும் பிரதான மொழிகளாக இருந்தது. மருத்துவ அறிவியல் மனிதனின் நீடித்த சுக வாழ்விற்கு அடிப்படை கூறாக நாகரீகத்துடன் ஒன்றியிருந்தது. இதனால் மருத்துவ முறைகளும் மனிதன் தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது.


சித்த முறைகள் தெற்கேயும், ஆயுர்வேதம் வடக்கேயும் வளர்ச்சி பெற்றது. இந்த மருத்துவ முறைகளுக்கு தனி மனிதனின் பெயரை சூட்டாமல், மனித குலத்தை தோற்றுவித்தவரின் பெயரையே வைத்தனர். பாரம்பரிய கூற்றுகளின் படி சித்த முறைகள் முதற்கடவுளான சிவனிடம் இருந்து பார்வதிக்கும், பின்பு நந்தி தேவருக்கும், பின்பு சித்தர்களுக்கும் கைமாறியது. ஆதி காலத்தில் சித்தர்கள் பெரும் அறிவியல் ஆராய்ச்சியளர்களாக திகழ்ந்தார்கள்.

பாரம்பரிய வழிமுறைபடி, சித்த மருத்துவ முறையானது அகத்தியர் என்னும் சித்தரின் வழி தோன்றலே ஆகும். இன்றும் பல புத்தகங்களில் அகத்தியரின் மருத்துவ முறைகள் காணப்படுகிறது,அது இன்றைய மருத்துவர்களால் பயன்படுத்தபடுகின்றது.

சித்தாவின் அடிப்படை

சித்த கோட்பாடுகள் மற்றும் முறைகள் ஆயுர்வேத முறைகளை ஒத்திருக்கும். வேதியல் கூற்றுபடி, நமது உடற் கூறுகள் இயற்கையை சார்ந்து இருக்கும். ஆயுர்வேதாவில் ஏற்றுகொள்ளப்பட்டது போல், உடலானது ஐந்து அடிப்படை தாதுக்களால் ஆனது. அவை நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகும். அதுபோல் உடல் எடுத்து கொள்ளும் மருந்தும், உணவும் மேற்சொல்லப்பட்ட ஐந்து அடிப்படை கூறுகளால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த ஐந்து கூறுகளின் கலவைகளின் அளவுகள் வேறுபட்டு மருத்துவ ரீதியாக பலனளிக்கும். ஆயுர்வேதாவின் மருத்துவ கருத்துகளைப் போல, சித்த முறையிலும் பல பிரிவுகள் உள்ளதாக கருதப்படுகிறது. ஏழு அடிப்படை உடல் மூலக்கூறுகள், மற்றும் கழிவு பொருட்களாகிய மலம், சிறுநீர், வியர்வை ஆகும். மனிதனுக்கு அடிப்படையான ஆதாரம், உணவு ஆகும் இதுவே உடல் கூறுகளில் திசுக்களை வளர்க்கும். ஆகாத கழிவு பொருட்களாகவும் உருமாறும். மேற்கன்ட செயல்பாடுகளில் உண்டான சமநிலை உடலின் நலத்தை குறிக்கிறது. இந்த சமநிலை குறைந்தால், தவறினால், சமமற்ற நிலையால் உடலில் நோய்கள் உருவாகும். இந்த முறையானது,வாழ்க்கையில் இழந்த நிலை மீட்க சமநிலை ஆரோக்கியத்தை பேண வேண்டும்.இந்த சம நிலையை, ஆரோக்கியத்தை பேண வேண்டும். இந்த சமநிலையை அடைவதற்கு மருத்துவமும்-தியானமும் துணை செய்கிறது.

சித்தாவின் பலம்

ஆபத்தான அவசர நல பிரச்சனைகளுக்கு உடனடி சிகிச்சை சேவையைத் தவிர, மற்ற எல்லாவிதமான வியாதிகளையும் சித்த மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடிகிறது. சோரியாசிஸ், சிறுநீரக தொல்லைகள், தோல் வியாதிகள், கல்லீரல் மற்றும் வயிறு பிரச்சனைகள், பொதுவான தன்மை, ஒவ்வாமை, சாதாரண காய்ச்சல் முதலியவைகளுக்கு தேவையான அளவு மருத்துவ வசதி பயன்பாட்டில் உள்ளது.

சித்த மருத்துவம் மதிப்பு இழக்கக் காரணம்


01. இதில் தயாரிக்கப்படும் 70 % மருந்துகள் மூலிகைள். இவை கிராமம் சார்ந்த மக்களுக்குத் தெரிந்தவை.
02. மக்கள் தெரிந்த பேசும் மொழியான தமிழில் இருப்பது. படித்தவர்களுக்கு பாமரன் மருத்துவ அறிவு பெற்றிருப்பதால் சைக்காலாஜிக்களான ஆப்டிமிஸ்ட் மன எதிர்ப்பு நிலை.
03. பற்பம் செந்தூரம் தவிர மற்றவை அனைவராலும் செய்து தயாரித்து உண்ண முடியும். நோயிலிருந்து பயமின்றி ஓரளவிற்கு குணமாக முடியும் என்பதால், எளிய மக்களை இழிவாகப் பார்க்க கற்றுக்கொடுத்த சமஸ்கிருதமயமாக்கம், மேலைச்சிந்தனையாக்கம் கொண்டவர்கள் திட்டமிட்ட எதிர் பரப்புரை.
04. சித்த மருத்துவம் படித்த மருத்துவர்கள் மக்கள் மருத்துவத்தை படித்தவர்கள் என்பதை மறந்து பாரம்பரிய மருத்துவர்களை போலி மருத்துவர்கள் எனச்சகட்டு மேனிக்கு ஒரே நேர்க்கோட்டில் வைத்து எதிர் கட்சி போல் பேசியும் எழுதியும் வருவது. இதுவே அவர்கள் தலையில் அவர்கள் வைத்த அணையா தீ.
05. பிரிட்டிஷ் ஆட்சியை விட விடுதலை இந்தியாவில் பல் நெடுங்காலம் அங்கீகாரம் மறுத்து இழிவு படுத்தியது.
06. மூட நம்பிக்கை போல "அறிவியல் நம்பிக்கை" உருவாக்கம் பெற பகுத்தறிவு, விஞ்ஞான கட்சிகள் தொடர் பரப்புரை செய்து வருவது.
07. அறுவை சிகிக்சை, பல் மாற்றுதல் போன்ற துறைகள் இல்லாத சித்த மருத்துவத்தை ஒப்பீடு செய்து அதிலுள்ள அறிவியலைப் புறம் தள்ளுவது.
10. சித்த மருந்துவத்தில் பற்பம், செந்தூரம் செய்திட தேவையான பல மருந்துகளைத் தடை செய்தது.
11. விலங்குகள், மூலிகைகள் கிடைக்கா வண்ணம் வனச்சட்டம் மூலம் பிரிட்டீஷ் ஆட்சி முதல் கொண்டு தடுத்து வருவது.
12. கடந்த காலங்களில் ஆன்மீக தளங்கள், மடங்களில் மருத்துவம் பார்க்கப்பட்டதால் மருத்துவத்தை ஆன்மீகமாகப் பார்ப்பதும், பகுத்தறியாது தொடர்ந்து எதிர் பரப்புரைத்தல்,
13. பாம்பினைக் கண்டு ஒதுங்க, விரட்ட, அடிக்க, பிடிக்கக்கூட அறிவை இழந்த கல்வியை கற்ற ம்மால் பாம்பினை லாவகமாக உயிருடன் பிடித்துக் காட்டுக்குள் விடும் வித்தையை பழக மறுத்து பாம்பு பிடிப்பவனை இழிவாகப்பார்த்தல்.
14. கருநாடகம், ஆந்திரம், கேரளம் உள்பட இந்தியா முழுவதும் ஆயுள் வேதம் இருக்க தமிழகத்தில் மட்டுமே தனி அறிவுடன் சித்த மருத்துவம் என்ற ஒன்று இருப்பது வெளிப்படையாக பேசாத பிறமொழிக்குழுக்களுக்குத் தமிழ் மொழியின் அறிவியல் பெருமையான சித்த மருத்துவம் மீது இனம் புரியாத வெறுப்பும் அழிக்கவேண்டும் என்ற துடிப்புடன் பிறருடன் கூட்டு வைக்கிறார்கள்.
எல்லாப்புகழும் சித்தமருத்துவத்திற்கே!

Thanks Kutti Revathi, https://ta.vikaspedia.in/,தோழர் Muthunagu Nagu