Search This Blog

Saturday, May 22, 2021

சித்த மருத்துவம் மதிப்பு இழக்கக் காரணம் என்ன?

சித்த மருத்துவத்தின் ஆரம்பம்

இந்தியாவில் சித்த மருத்துவமானது மிகப்பழைமையான மருத்துவ முறையாகும். சித்தா என்பது மருத்துவத்தில் துறவிகளான சித்தர்கள் முயன்று, ஆராய்ந்து செயல்படுத்தி வெற்றி பெற்றதால் ‘சித்தா’ எனப்பெயர் பெற்றது. பதினெட்டு சித்தர்கள் இந்த சித்தமருத்துவத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தார்கள். சித்த இலக்கியம், அதிகமாக தமிழ்பேசும் இடங்களான இந்திய நாட்டிலும், வெளிநாடுகளிலும், நடைமுறையில் உள்ளது. சித்த முறையானது இயற்கையான மருத்துவ முறையை சார்ந்தது.

சித்தாவின் வரலாறு

மனித இனம், கிழக்கிலே குறிப்பாக இந்தியாவிலே மிகவும் வளம் நிறைந்த இடத்திலே தோன்றியது. இங்கு மனித இனத்தின் கலாசாரம் பண்பாடு உருவானது. இதன் மூலமாக மனித கலாசாரம், நாகரீகம் முதலானவை இந்தியாவில் இருந்து பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்திய வரலாற்று கூற்று படி ஆரியர்கள் வருவதற்கு முன்பே திராவிடர்கள் இந்தியாவில் இருந்தார்கள். அதிலும் தமிழர்கள் அதிகம் காணப்பட்டார்கள். தமிழர்களின் கலாச்சாரம் மற்றெல்லா கலாசாரத்தை விட மிக வேகமாக வளர்ந்தோங்கியது. இந்தியாவின் மொழிகள் இரண்டு பிரிவுகளாக இருந்தது. வடக்கே சமஸ்கிருதமும், தெற்கே திராவிட மொழிகளும் பிரதான மொழிகளாக இருந்தது. மருத்துவ அறிவியல் மனிதனின் நீடித்த சுக வாழ்விற்கு அடிப்படை கூறாக நாகரீகத்துடன் ஒன்றியிருந்தது. இதனால் மருத்துவ முறைகளும் மனிதன் தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது.


சித்த முறைகள் தெற்கேயும், ஆயுர்வேதம் வடக்கேயும் வளர்ச்சி பெற்றது. இந்த மருத்துவ முறைகளுக்கு தனி மனிதனின் பெயரை சூட்டாமல், மனித குலத்தை தோற்றுவித்தவரின் பெயரையே வைத்தனர். பாரம்பரிய கூற்றுகளின் படி சித்த முறைகள் முதற்கடவுளான சிவனிடம் இருந்து பார்வதிக்கும், பின்பு நந்தி தேவருக்கும், பின்பு சித்தர்களுக்கும் கைமாறியது. ஆதி காலத்தில் சித்தர்கள் பெரும் அறிவியல் ஆராய்ச்சியளர்களாக திகழ்ந்தார்கள்.

பாரம்பரிய வழிமுறைபடி, சித்த மருத்துவ முறையானது அகத்தியர் என்னும் சித்தரின் வழி தோன்றலே ஆகும். இன்றும் பல புத்தகங்களில் அகத்தியரின் மருத்துவ முறைகள் காணப்படுகிறது,அது இன்றைய மருத்துவர்களால் பயன்படுத்தபடுகின்றது.

சித்தாவின் அடிப்படை

சித்த கோட்பாடுகள் மற்றும் முறைகள் ஆயுர்வேத முறைகளை ஒத்திருக்கும். வேதியல் கூற்றுபடி, நமது உடற் கூறுகள் இயற்கையை சார்ந்து இருக்கும். ஆயுர்வேதாவில் ஏற்றுகொள்ளப்பட்டது போல், உடலானது ஐந்து அடிப்படை தாதுக்களால் ஆனது. அவை நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகும். அதுபோல் உடல் எடுத்து கொள்ளும் மருந்தும், உணவும் மேற்சொல்லப்பட்ட ஐந்து அடிப்படை கூறுகளால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த ஐந்து கூறுகளின் கலவைகளின் அளவுகள் வேறுபட்டு மருத்துவ ரீதியாக பலனளிக்கும். ஆயுர்வேதாவின் மருத்துவ கருத்துகளைப் போல, சித்த முறையிலும் பல பிரிவுகள் உள்ளதாக கருதப்படுகிறது. ஏழு அடிப்படை உடல் மூலக்கூறுகள், மற்றும் கழிவு பொருட்களாகிய மலம், சிறுநீர், வியர்வை ஆகும். மனிதனுக்கு அடிப்படையான ஆதாரம், உணவு ஆகும் இதுவே உடல் கூறுகளில் திசுக்களை வளர்க்கும். ஆகாத கழிவு பொருட்களாகவும் உருமாறும். மேற்கன்ட செயல்பாடுகளில் உண்டான சமநிலை உடலின் நலத்தை குறிக்கிறது. இந்த சமநிலை குறைந்தால், தவறினால், சமமற்ற நிலையால் உடலில் நோய்கள் உருவாகும். இந்த முறையானது,வாழ்க்கையில் இழந்த நிலை மீட்க சமநிலை ஆரோக்கியத்தை பேண வேண்டும்.இந்த சம நிலையை, ஆரோக்கியத்தை பேண வேண்டும். இந்த சமநிலையை அடைவதற்கு மருத்துவமும்-தியானமும் துணை செய்கிறது.

சித்தாவின் பலம்

ஆபத்தான அவசர நல பிரச்சனைகளுக்கு உடனடி சிகிச்சை சேவையைத் தவிர, மற்ற எல்லாவிதமான வியாதிகளையும் சித்த மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடிகிறது. சோரியாசிஸ், சிறுநீரக தொல்லைகள், தோல் வியாதிகள், கல்லீரல் மற்றும் வயிறு பிரச்சனைகள், பொதுவான தன்மை, ஒவ்வாமை, சாதாரண காய்ச்சல் முதலியவைகளுக்கு தேவையான அளவு மருத்துவ வசதி பயன்பாட்டில் உள்ளது.

சித்த மருத்துவம் மதிப்பு இழக்கக் காரணம்


01. இதில் தயாரிக்கப்படும் 70 % மருந்துகள் மூலிகைள். இவை கிராமம் சார்ந்த மக்களுக்குத் தெரிந்தவை.
02. மக்கள் தெரிந்த பேசும் மொழியான தமிழில் இருப்பது. படித்தவர்களுக்கு பாமரன் மருத்துவ அறிவு பெற்றிருப்பதால் சைக்காலாஜிக்களான ஆப்டிமிஸ்ட் மன எதிர்ப்பு நிலை.
03. பற்பம் செந்தூரம் தவிர மற்றவை அனைவராலும் செய்து தயாரித்து உண்ண முடியும். நோயிலிருந்து பயமின்றி ஓரளவிற்கு குணமாக முடியும் என்பதால், எளிய மக்களை இழிவாகப் பார்க்க கற்றுக்கொடுத்த சமஸ்கிருதமயமாக்கம், மேலைச்சிந்தனையாக்கம் கொண்டவர்கள் திட்டமிட்ட எதிர் பரப்புரை.
04. சித்த மருத்துவம் படித்த மருத்துவர்கள் மக்கள் மருத்துவத்தை படித்தவர்கள் என்பதை மறந்து பாரம்பரிய மருத்துவர்களை போலி மருத்துவர்கள் எனச்சகட்டு மேனிக்கு ஒரே நேர்க்கோட்டில் வைத்து எதிர் கட்சி போல் பேசியும் எழுதியும் வருவது. இதுவே அவர்கள் தலையில் அவர்கள் வைத்த அணையா தீ.
05. பிரிட்டிஷ் ஆட்சியை விட விடுதலை இந்தியாவில் பல் நெடுங்காலம் அங்கீகாரம் மறுத்து இழிவு படுத்தியது.
06. மூட நம்பிக்கை போல "அறிவியல் நம்பிக்கை" உருவாக்கம் பெற பகுத்தறிவு, விஞ்ஞான கட்சிகள் தொடர் பரப்புரை செய்து வருவது.
07. அறுவை சிகிக்சை, பல் மாற்றுதல் போன்ற துறைகள் இல்லாத சித்த மருத்துவத்தை ஒப்பீடு செய்து அதிலுள்ள அறிவியலைப் புறம் தள்ளுவது.
10. சித்த மருந்துவத்தில் பற்பம், செந்தூரம் செய்திட தேவையான பல மருந்துகளைத் தடை செய்தது.
11. விலங்குகள், மூலிகைகள் கிடைக்கா வண்ணம் வனச்சட்டம் மூலம் பிரிட்டீஷ் ஆட்சி முதல் கொண்டு தடுத்து வருவது.
12. கடந்த காலங்களில் ஆன்மீக தளங்கள், மடங்களில் மருத்துவம் பார்க்கப்பட்டதால் மருத்துவத்தை ஆன்மீகமாகப் பார்ப்பதும், பகுத்தறியாது தொடர்ந்து எதிர் பரப்புரைத்தல்,
13. பாம்பினைக் கண்டு ஒதுங்க, விரட்ட, அடிக்க, பிடிக்கக்கூட அறிவை இழந்த கல்வியை கற்ற ம்மால் பாம்பினை லாவகமாக உயிருடன் பிடித்துக் காட்டுக்குள் விடும் வித்தையை பழக மறுத்து பாம்பு பிடிப்பவனை இழிவாகப்பார்த்தல்.
14. கருநாடகம், ஆந்திரம், கேரளம் உள்பட இந்தியா முழுவதும் ஆயுள் வேதம் இருக்க தமிழகத்தில் மட்டுமே தனி அறிவுடன் சித்த மருத்துவம் என்ற ஒன்று இருப்பது வெளிப்படையாக பேசாத பிறமொழிக்குழுக்களுக்குத் தமிழ் மொழியின் அறிவியல் பெருமையான சித்த மருத்துவம் மீது இனம் புரியாத வெறுப்பும் அழிக்கவேண்டும் என்ற துடிப்புடன் பிறருடன் கூட்டு வைக்கிறார்கள்.
எல்லாப்புகழும் சித்தமருத்துவத்திற்கே!

Thanks Kutti Revathi, https://ta.vikaspedia.in/,தோழர் Muthunagu Nagu

No comments:

Post a Comment