Search This Blog

Tuesday, December 29, 2020

பைத்தியக்காரர்கள். கே. சச்சிதானந்தனின் கவிதை

 















பைத்தியக்காரர்களுக்கு

ஜாதியோ, மதமோ இல்லை.
பைத்தியக்காரிகளுக்கும்.
நம்முடைய பாலுறுப்புப் பிரிவினை
அவர்களுக்கு பாதகமல்ல.
அவர்கள் முன்முடிவுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
அவர்களின் பரிசுத்தம்
நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

பைத்தியங்களின் மொழி கனவுகளால் ஆனதல்ல.
வேறொரு யதார்த்தத்தினுடையது.
அவர்களின் சிநேகம் நிலவைப் போன்றது,
பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.
மேலே பார்க்கும்போது
அவர்கள் காண்பது நாம்
கேட்டேயறியாத தேவதைகளின் மொழியைத்தான்.
அவர்கள் சிலிர்ப்பதாய் நாம் நினைப்பது
சூன்யமான சிறகுகள் உதிரும்போதுதான்.
ஈக்களுக்கும் ஆத்மா உண்டென்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வெட்டுக்கிளியின் தேவன் பச்சை நிறத்தில்
நீண்ட கால்களுடன் குதித்து
நடக்கிறான் என்றும் கருதுகிறார்கள்.
சிலசமயம் மரங்களிலிருந்து
குருதி கொட்டுவதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் தெருவில் நின்று
சிங்கங்கள் கர்ஜிப்பதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் பூனையின் கண்களில்
சொர்க்கம் ஜொலிப்பதைக் காண்கிறார்கள்.
இந்த விஷயங்களில் அவர்களும் நம்மைப் போலத்தான்.

ஆனாலும் எறும்புகள் கூட்டம் சேர்ந்து பாடுவதை
அவர்களால் மட்டுமே கேட்க இயலும்.
அவர்கள் சூன்யத்தில் விரல் அசைக்கும்போது
நடுக்கடலிலே சுழற் காற்றினை
தன் வயப்படுத்துவது போலவும்,
கால் அழுத்தி உதைக்கும் போது
ஜப்பானின் எரிமலையை வெடித்துச்
சிதறாமல் காப்பது போலவும்,
நினைக்கிறார்கள்.

பைத்தியக்காரர்களின் நேரம் வேறு.
நம்முடைய ஒரு நூற்றாண்டு
அவர்களுக்கு ஒரு நொடி மட்டுமே.
இருபது நொடி போதும்,
அவர்கள் கிறிஸ்துவைச் சென்றடைய.
ஆறு நொடிதான்
புத்தனுக்குச் செல்ல.
ஒரு பகல் போதும்
வெடித்துச் சிதறிய
ஆதித்துகள்களை உணர.
பூமி கொதித்து உருகுவதால்தான்
அவர்கள் எங்கேயும் இருக்க முடியாமல்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள்
பைத்தியங்கள் அல்ல,
நம்மைப் போல.

 

தென்றல் உறங்கிய போதும்

 படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி 
 
 
 
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
 

நடிகை சௌந்தர்யா Dweepa (Kannada: The Island)

நடிகை சௌந்தர்யா 1992ஆம் ஆண்டு தமிழ்ப்படமான பொன்னுமணி திரைப்படம் மூலமாகத்தான் அறிமுகம் ஆகிறார்.இவருக்கு ஜோடியாக கார்த்திக்.இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் .படமும் Super hit.அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் busy ஆனார்.

 2002ஆம் ஆண்டு Dweepa எனும் கன்னடப் படத்தை தயாரித்து நடிக்கிறார்.படம் பல உலகத்திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறது.இரண்டு தேசிய விருதுகளைப் பெறுகிறது.நான்கு மாநில விருதுகளைப் பெறுகிறது.

இப்போ நான் கேட்பது இதுதான்.திரையுலகில் நுழைந்து வெறும் பத்து ஆண்டுகளுக்குள் சமூகக் கண்ணோட்டத்தோடு ஒரு படத்தை தயாரிக்க வேண்டுமென அந்தப் பெண்ணுக்கு தோன்றுகிறது.32வயதிற்குள் இப்படியொரு படத்தை தயாரித்து சினிமாவின் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை ஏற்படுகிறது.

Dweepa (Kannada: The Island) is a 2002 Indian Kannada language film by Girish Kasaravalli, based on the novel of the same name by Na D'Souza, and starring Soundarya and Avinash in lead roles. Dweepa deals with the raging issue of building dams and the displacement of natives.it won 2 National Film Awards, 4 Karnataka State Film Awards & 3 Filmfare Awards South.


Story
Located in the backwaters of a dam, Sita Parvata is an island slowly submerging due to the rains. The government succeeds in evacuating the residents by giving them compensation for the properties they own. The village temple priest Duggajja, his son Ganapa, and his daughter-in-law Nagi find it impossible to leave their homeland and make a living with the meagre compensation given by the government. They have but a small hut, which earns them a compensation of 25,000. In Ganapa's own words, the compensation can give them food and shelter, but cannot compensate for the love and respect of their people. On the island, they are important people, but outside, they would be one among hundreds of families struggling to make a living. Centered on this complex theme, the film narrates the struggles of the family and how ultimately in the end they manage to continue life on the island.

கே.பாலசந்தர்

 கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

பள்ளிப்பருவத்தில் கே.பாலசந்தர் படங்களை பார்ப்பவர்கள் அறிவுஜீவிகளாக கிராமங்களில் அறியப்பட்டிருந்தார்கள். அதனால் அப்போது வெளியான அபூர்வராகங்கள் படத்தை நண்பர்களோடு போய் பார்க்கப் போயிருந்தேன். பார்த்து விட்டு ஒன்றும் புரியவில்லை என்று பரபரக்க நண்பர்கள் விழித்துக் கொண்டிருக்கையில், உருப்படியாய் பொய் பேச வராதவனாக இருந்த போதிலும் துணிந்து எனக்கு இந்த படம் நன்றாக புரிகிறதே என்று ஒரு வார்த்தையை சொல்லவும், நண்பர்கள் என்னை பிரமிப்போடு பார்த்தது அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது.
அப்படியாக அறிமுகமான கே.பி சார் பின்னர் ஏதோ ஒரு வகையில் என்னோடு இணைவார் என்றோ, என் தலை தொட்டு காட் பிளஸ் யூ மை சன் என்று வாழ்த்துவார் என்றோ சத்தியமாக அப்போது எனக்கு தெரியவே தெரியாது.
நன்றி வஸந்த் சார்..
பின்னாளில் வஸந்த் சாரிடம் துணை இயக்குநராக பணியாற்றியபோது கே.பி சார் பற்றி பல விசயங்கள் தெரிந்து பரவசிக்கிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கே.பி சார் படப்பிடிப்பிற்கு செல்கிறபோது உதவி இயக்குநராகிய வஸந்த் பின்னால் உட்கார்ந்திருப்பார். கே.பி முன்இருக்கையில். அவர் எங்கோ பார்த்தபடி முணுமுணுப்பாய் ஏதோ சொல்வார். அதை உற்று கவனித்து வஸந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் அதை கச்சிதமாக நிறைவேற்றி தயாராக வைத்திருப்பார். படப்பிடிப்பு நடக்கும். அந்த அளவு தனதான படைப்புல பிரவேசிப்பிற்குள் கே.பி சார் மிதந்து கொண்டிருக்கிறபோது சிறிய பிசிறல்கூட கல்லெறி வட்டங்களாய் அவரின் சிந்தனை போக்கை சிதைத்துவிடக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டவராய், எந்தவித ஓசையும் அவருக்கும் செலுத்தாமல், அவரின் முணுமுணுப்புகளில் இருந்தே, அங்கே என்னஎன்ன தேவை என்பதை உள்ளுணர்வால் முழுமையாய் கிரகித்துக்கொண்டு அவற்றை நிறைவேற்றக்கூடிய துணை இயக்குநராய் இருந்திருக்கிற தருணங்களை மிகுந்த பரவசத்தோடு பகிர்ந்தபோது அந்த கணங்களுக்குள் நானும் காலம் கடந்துபோய் பயணித்து வாழ்ந்து வந்திருக்கிறேன்.
எப்படியோ கே.பி சாரின் சிஷ்யர் வஸந்த்திடம் வேலை செய்ததன் மூலமாக கே.பி சாரிடமே பணி செய்த ஒரு திருப்தி.
இப்படித்தான் ஒரு நாள் ஹோட்டல் சங்கீதாவில் இயக்குநர் வஸந்த்துடன் என்னவோ சாட் ஐட்டம் சாப்பிட்டபடி உலக இலக்கியமும், உலக சினிமாவும் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு சிறுகதை பற்றி திரும்பியது. என்னுடைய சொந்த வாழ்வில் நடந்த ஒரு அனுபவத்தை லவ் காட்டேஜ் என்கிற சிறுகதையாக எழுதியிருந்தேன். சென்னை மூலக்கடை பகுதியில் 1.5 கிரவுண்டில் நான் கட்டியிருந்த லவ் காட்டேஜ் என்கிற அந்த வீடு.. எதிர்பாராத காரணங்களால் உறவுகளின் திட்டமிடாத வழிநடத்தலினால் கை நழுவிப்போனது. பின்னர் ஒரு நாள் அந்த லவ் காட்டேஜை போய் பார்க்க நேர்ந்தபோது ஏற்பட்ட பரவச அனுபவத்தையே அந்த கதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. பார்த்திபன் சாருக்கும் இப்படியான ஒரு அனுபவம் நேர்ந்திருக்கிறதை அறிவேன். இதை வஸந்த்திடம் சொல்லிக் கொண்டிருக்கையில், சட்டென உணர்ச்சிவசப்பட்வராய், வா.. கொஞ்சம் நடக்கலாம் என்றார். இருளுக்குள் அந்த தெருக்களில் நடந்தபடி பேசிக்கொண்டிருந்தோம். சட்டென என்ன நினைத்தாரோ, வா.. உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று நேராக கே. பி முன் கொண்டுபோய் நிறுத்தி, என் உதவி இயக்குநன்.. இவனை வாழ்த்துங்க என்றார். உடனே தான் நான் மேற்சொன்ன அந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்படியே மனசின் நாடிநரம்புகள் அத்தனையும் சிலிர்ப்பில் கதகதத்துக் கொண்டுவிட்டது.
கே.பி சாரை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அனந்து சார் அவருக்கு இயக்குநர் இங்மர் பெர்க்மன் பற்றியும், அவரின் படங்கள் பற்றியும் ஆழமான அறிமுகங்களை தந்தவர். இப்படியான பல ஆளுமைகளின் அறிமுகங்களை தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். அதனாலேயே அனந்து சாரை அத்தனை சௌகர்யங்களோடு வைத்துக்கொண்டவர். திறமையாளர்களை தன்னோடு நிரந்தரமாய் வைத்துக்கொண்டு, அவர்களுக்கான உரிய மரியாதையை செய்யக்கூடிய அவரின் பாங்கில், நூறு படங்களை அநாயாசமாக இயக்கக்கூடிய வீரியம் ஒளிந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
கல்கி திரைப்படத்தின் ப்ரிவியூ இப்போதைய ஃபோர் ஃபிரேம்ஸ் அப்போதைய குட்லக் திரையரங்களில் நடக்கிறது. படம் முடிந்து வெளிவருகிற அனைவரிடமும் படம் எப்படியிருக்கிறது என்றும், அவரவர் அபிப்பிரயாங்கள் பற்றியும் ஒவ்வொருவர் கையாய் பிடித்து ஆர்வத்தோடு கேட்டறிகிறார். அந்த தேலும், பரவசமும், திரையூடகத்தோடான ப்ரேமையுமே அவரை அந்த உச்சம் நோக்கி நகர்த்தியிருக்கிறது.
கமல் தான் அவர் படத்தில் அதிகம் நடித்த நாயகன். அவர் புன்னகை மன்னன் திரைப்படத்தில் மாமாவுக்கு குடுமா..குடுமா.. பாடலில் இரண்டு கதாபாத்திரமாய் வந்து நகைச்சுவையாய் ஜமாய்த்திருப்பார். அந்த காட்சியை எப்படி எடுக்கலாம் என தனக்கு தோன்றியதை கமல் கே.பி சாரிடம் சொன்னவுடன், அது சட்டென கே.பி சாருக்கு பிடிபடவில்லை. ஆனால் என்னவோ இருப்பதாக உணர்ந்து, மறுநாள் படப்பிடிப்புக்கு அவர் வராமல் இருந்து கொண்டு, நிர்வாகிகளிடம் இந்த பாடல் காட்சியை உங்களையே எடுத்துவிடும்படி கே.பி சார் சொல்லச்சொன்னதாக சொல்லியிருக்கிறார்கள். உடனே ஒருவித அசட்டு துணிச்சலோடே கமல் அந்த பாடல் காட்சியை தான் நினைத்த மாதிரி எடுத்து முடித்ததாக அவரே சொல்லியிருக்கிறார். பின்னர் எடிட்டிங்கையும் கமல் சாரையே பண்ணிவிடும்படி சொல்ல, எடிட் செய்து தயக்கத்தோடே காட்டியிருக்கிறார். பார்த்துவிட்டு கே.பி சார் அப்படி பரவசித்திருக்கிறார். அது தான் கே. பி சார்..
பதினாறு வயதினிலே பார்த்துவிட்டு, அறிமுக இயக்குநர் என்றெல்லாம் பார்க்காமல், என்னாலும் இப்படியொரு படத்தை எடுக்க முடியாது என மனதார பாராட்டி இருக்கிறார்.
அவரை பற்றி எழுதுவதென்றால் ஒரு புத்தகம் போடும் அளவிற்கு எழுதிக்கொண்டே போகலாம். அது பின்னொரு சமயத்தில் நிகழக்கூடும்.
அவரின் இந்த வாழ்வின் நிறைவு வைபவத்திற்கு இயக்குநர் பார்த்திபன் சாரோடு போயிருந்தேன். அப்போது அவர் அங்கிருந்த ஈசிசேரில் அமர்ந்திருந்த காட்சி தன்னிச்சையாக நினைவில் வந்து ஊஞ்சல் ஆடியது. இப்போது தன்னந்தனியாக.

Kulashekar T

கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் (Arch T. Colwell Cooperative Engineering Medal)

 


அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பட்டம் பெற்றதுடன், 1982-83 காலப்பகுதியில், பேராதனைப் பல்கலைக்கழக கணிதபீடத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு SAE International என்ற மதிப்புமிக்க அனைத்துலக பொறியியலாளர் அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும், ஆர்ச் ரி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கம் (Arch T. Colwell Cooperative Engineering Medal) வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் இந்த விருது வழங்கப்படும். இந்த உலகளாவிய விருதை வழங்கும், SAE International அமைப்பு உலகெங்கும் உள்ள 138 ஆயிரம் பொறியியல் வல்லுனர்களை உறுப்பினராக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சின்னப்பா பரஞ்சோதி மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது அனலைதீவு மக்கள் எமக்கெல்லாம் பெருமகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

Monday, December 14, 2020

Indus Valley Civilization and consumption of milk, meat of animals

The Indus Valley Civilization (IVC) was a Bronze Age civilization in the northwestern regions of South Asia, lasting from 3300 BCE to 1300 BCE, and in its mature form from 2600 BCE to 1900 BCE.


 "An analysis of ceramic lipid residues from rural and urban sites of the Indus Civilization in northwest India provides chemical evidence for milk, meat of animals like pigs, cattle, buffalo, sheep and goat, and possible mixtures of products and/or plant consumption."


The people of the Indus Valley Civilization in northwest India were predominantly meat eaters, a study has revealed.
They consumed the meat of pigs, cattle, buffalo and sheep, along with dairy products, said the study published in Journal of Archaeological Science.
“High proportions of cattle bones were also found, which may suggest a “cultural preference for beef consumption” across Indus populations, the study, titled, Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India, said.
The research offers insights into the food patterns of ancient South Asia by using lipid residue analysis to investigate the kinds of food items that were used in ceramic vessels by people of the Indus Valley Civilisation settlements in northwest India. The region of study now lies in Haryana and Uttar Pradesh.
It was led by Akshyeta Suryanarayan as part of her PhD at the University of Cambridge.

Sunday, December 13, 2020

Kim Ki-Duk South Korean Director. கிம் கி-டக் உலகின் மிகச் சிறந்த சினிமா இயக்குநர்


"என்னுடைய வளர்ச்சியையும், மாற்றத்தையும் என் படங்களின் மூலமாகவே தெரிந்துக்கொள்கிறேன்.
கஷ்டமான சிக்கல்கள் ஒருவர் வாழ்வில் தொடர்ந்தபடி இருந்தால், மாய கற்பனைகளால் ஆன உலகில் வாழ்வது என்பது சிறிதளவாவது ஆறுதல் தரும்."
- Kim Ki Duk
கிம் கி-டக் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். திரைப்பட இயக்குநர் கிம் கி டக். 1960-ம் ஆண்டு பிறந்த அவர், 1996-ம் ஆண்டு க்ரோகடைல் என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.
 
இவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன. 
அவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் நாடு எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் சென்றடைந்தது. அவருடைய படங்களில் சமாரிட்டம் கேர்ள், 3 அயர்ன், அரிரேங், பியிடா, ஒன் ஆன் ஒன் ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் படமாக இருந்துவருகிறது. தென் கொரிய இயக்குநர்களிலேயே கிம் கி டக் மட்டும்தான், உலகின் மிகப் பெரிய விருதுகளான கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
உலகமே கடவுளைத் திறந்து காட்டிக் கொண்டிருந்த போது கடவுளுள் இருக்கும் சாத்தானை திறந்து காட்டி இதுவும் நிஜம் தான் என்று பொதுவெளியில்... எல்லாம் வல்ல மானுட மனத்தின் இருட்காலத்தை வெளிச்சமேற்றிய கலைஞன்.
"கிம் கி டுக்"ன் படங்களைக் காண்பது என்பது... தனித்து மலையேறுவது......அல்லது தனித்து மலை இறங்குவது......அல்லது தனித்த மலையாவது.
"கிம் கி டுக்"கின் கதை மாந்தர்கள்......அதிகமாய் பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் தனித்தே இருக்கிறார்கள்......அல்லது தவித்தே இருக்கிறார்கள்.....அல்லது தவிர்த்தே இருக்கிறார்கள். பெரும்பாலான படங்களில் பேச ஒன்றும் இருப்பதில்லை. இரண்டு பக்கம் வசனம் பேச வேண்டிய காட்சியை ஒரே ஒரு பிரேமில் காட்டி விடுகிறார். கரை கண்ட திரை சதுரம் வால் ஆட்டாத நாய்க்குட்டி தான் அவருக்கு. காட்சி மொழியில் அவர் திரை கனக்கச்சிதமாக கதை சொல்கிறது. அருகிலும் தூரத்திலும்.... ஒற்றை இறகை பறக்க விட்டு..... பார்த்துக் கொண்டே இருக்கும்... தூரத்து கடல் அலையின் ஆர்ப்பரிப்பு நம்மை சுற்றிலும் இயங்கிக் கொண்டே இருக்க செய்வது.... சித்து வேலை அல்ல. சித்தன் வேலை.
இருக்கும் என்பது இல்லாமலும் தான்....என்பதாகட்டும்...(3 iron) முகம் மாற்றித் திரியும்....அன்பின் புறக்கணிப்பாகட்டும்......(Time). அறுக்கப்பட்ட மகனின் உறுப்புக்காக பரிதவிக்கும்....தந்தையாகட்டும்........(Mobeus) சிறையில் இருக்கும் காதலனை காண சென்று ஒரு சிறுமியாக ஆடி களிப்பூட்டும் காதலாகட்டும்.....(breath) அசைந்தாடும் பிரிவும் அகம் தீண்டும் சோகமும் நேர்த்தியோடு மிக மெல்லிய இசையாகி விடுகிறது...அவர் சினிமாக்களில்.
"இந்த உலகத்தில் நாம் வாழ்வது என்பது நிஜமா கற்பனையா என்பதை அத்தனை எளிதில் சொல்லி விட முடியாது...." எனும் தத்துவார்த்த ஊடறுப்பு சதா நிகழ்ந்து கொண்டே இருக்கும்.. கதைக்களங்கள் இவருடையன. காட்சிக்கு காட்சி 'ரா'வான ரத்தின சுருக்கம்... திரைக்கதையாகி இருப்பது... தனி வடிவம். படத்தில்... படகில் தனக்கு தானே தண்டனை கொடுக்கும் பெண்ணின் தூண்டிலில்.... உலகமே கதறும் ஒரு காட்சி.... நிஜத்தை நேருக்கு நேர் காணுகையில்... நெஞ்சத்தில் நெருப்பூரும் என்பது.(the isle) எடுத்த இடத்தில் கிடைக்கும் தொலைத்தல்... தொலைந்த பிறகும் எடுக்கும் காலத்தின் ஜோடித் தத்துவம்.. நட்பெனவும் கொள்க. (samirtan girl) நினைத்த நாட்டுக்கு செல்ல கிடைத்த வழி... உடல் விற்பனை. உடலும் உடலும் சொல்லும் தத்துவத்தில்... என்னானது....பயணம். அலற வைக்கும்.... அரூப நடை அவருடையது.
(bow) ம் (bad guy) ம் நெருங்க முடியாத நிர்பந்தம். நெற்றியில் விலகும் நேர் கோட்டு சித்திரம். நீருக்குள் நிகழும் நின் கடன் மானுடம் சேர்ப்பது (crocodile). வன்முறையே நம்மை வழி நடத்துகிறது. அதற்கு தான் மாற்று பெயர்களை சுமந்து கொண்டு அலைகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த புரிதலில் அளவு வேண்டுமானால் மாறலாம். ஆனால் ஆழம் மாறாது. கொரியாக்களின் சண்டையை (the Net) தன் வலையை நகர்த்திக் கொண்டு காட்டியது. மானுட குயுக்தி வெளி வந்தது (human space time & Human) தினம் ஓர் உடல்... தினம்... தான் ஒரு கடல். என மறுபக்கத்தை போட்டுடைக்கும் கிம் கி டுக்.... அதிரூபன் இல்லை.... ஆனால்.... அந்நியனும் இல்லை.
இந்த மானுடத்தின் சாபமும்.. வரமும்.. அன்பு மட்டுமே. (pieta) அது இருக்கும் ஆயுதத்துக்கெல்லாம் உயர்ந்த ஆயுதம். அதைக் கொண்டு... எதிராளியின் மனதுக்குள் கூர் கத்தி ஒன்றை செய்து உள் நோக்கி மரணத்தை திருப்பி விட்டு விட முடியும். அடித்துக் கொண்டேயிருப்பது வன்முறை என்றால்.. அடி வாங்கிக் கொண்டே மீண்டும் மீண்டும் அடி என்று கூறுவது வன்முறையின் உச்சம். உச்சத்தின் முனையில் நின்று உலகுக்கு மௌனமாய் எடுத்து சொல்வது... அத்தனையும் இந்த மானுட வாழ்வின் ஆதி பரியந்தம் தான். வேதாளம் இடம் மாறும் நுட்பத்தைத் தான் மனிதன் கடவுளுக்கு பிரார்த்திக்கிறான்.
எதிர் வினையில் நின்ற வினைக்குள் எட்டிப் பார்க்கும் பொருளுக்கு பொருளற்று சேர்ந்து கொள்ளும்.... பொருள் ஒன்றில்...சொல்லப் படும் நிர்பந்தங்களைத்தான் இந்த மனித மனம் விரும்புகிறது. அந்த மனம் முழுக்க... அவனின் துயரத்தின் சுவடுகள்... மீள் பயத்தின் மிச்சமென...அவனால் விரும்பப் படுவது தனிமையின் இருள் சேர்ந்த சில காலங்களின் சாபங்கள் தான். வினோதம் மூச்சடைத்து சாவும் மணித்துளிகளை மனம் மீன் தொட்டியில் ரசித்துக் கொண்டிருக்கும். ஒழுக்கம் என்பது ஊர்களை பொருத்தது என்று ஒரு பாடல் வரி உண்டு. அதையும் தாண்டி... ஒழுக்கம் என்பது உள்ளத்தை பொறுத்தது என்று கூட யோசிக்க வைக்கும்.
உள்ளார்ந்த கசடு நிறைந்த மனித மிருகத்தின் மிச்சத்தை எடுத்துக் காட்டிய கலைஞன். அவர் ஊரில் பெரிதாக வெறுக்கப்பட்ட அதே நேரம் உலகலாவில் பெரிதாக விரும்பப்பட்ட... கதைக்க சொல்லி கிம் கி டுக் ஓர் உக்கிர தூதுவன்.
வலிமைக்கு வலிமை எளியவையும் ஆகும். அது மிகச் சாதாரணமாக கதவைத் தட்டி விட்டு கடந்து விடும். திறக்கையில் அன்போடு சிறகு முளைத்த தேவதை ஒருத்தி எந்த வயதிலும் நிற்கலாம்....ஒரு கூடை அன்பை சுமந்தோ...அல்லது ஒரே ஒரு காரணம் சுமந்தோ. அன்பை விட கொடிய ஆயுதம் ஒன்று உண்டோ....! என்று ஒவ்வொரு கதையிலும்... ஒவ்வொரு வடிவம் கொண்டு இருத்தல்......அழிக்கும் ஆக்கம்....திகைக்கும் பிரமிப்பு என்பதைத் தாண்டி தனி மனித சுத்திகரிப்பு... எனலாம்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரும் அவரவருக்கான செய்தியை சுமந்தலைவது விதி. இந்த தேகத்தின் வரம்பறியா நிலையில்.. மலைமீது புத்தனை சுமந்து செல்லும் சுய திருப்தி...(spring summer fall winter & spring) சுயம் அழித்தல்... அல்லது சுயம் மீட்டல்....என்று ஆன்மீக துவாரம் அதே அளவில் நீண்டு கொண்டு போவதை பேரன்பின் மௌனத்தோடு உணர்ந்திருக்கிறேன். "கிம் கி டுக்"கின் சினிமா எல்லாருக்கும் நெருக்கமான வாழ்வின் ஜன்னலை திறந்தே வைத்திருக்கிறது. அதன் வழியே ஒரு பெரும் வாழ்வின் திரை பதட்டத்தோடே விலகுகிறது.
தன்னை திறந்து திறந்து திறந்து கொண்டே சென்ற கலைஞன் சட்டென கண் மூடிக் கொண்டதை திரை தாண்டியும் வருத்தத்தோடு உணர்கிறேன். இசைக்க தெரியாத போது சத்தமிட்டு அழுது விட தோன்றும் சில நொடி பிதற்றல்களை "கிம் கி டுக்" என்ற மகா கலைஞனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மனிதன் தான் சாவான். கலைஞன் இல்லை.
கவிஜி
Kim Ki Duk க்கிட்ட வியந்த விஷயங்கள்.
Cinema is Visual Medium னு ஆழமா நம்புன ஒரு ஆள். பார்க்குற ஒவ்வொரு காட்சியும், கவிதையும், ஓவியமுமா இருந்துச்சு.
Sounding.
ஒரு படத்துல Sounding எப்படி Use பண்ணப்பட்டுருக்கு என்பதை பொருத்து தான், அவர் எப்பேர்ப்பட்ட Director னு நிர்ணயிப்பாங்கனு சொல்வாங்க.
Kim Ki Duk அதுல கில்லாடி.
வன்முறை, காமம், குரோதம்னு எல்லாத்தையும் படம்பிடிச்சிட்டு, அதோட உச்சபட்சத்தை Sounding ல சொல்லி இருப்பாரு.
சொல்லப்போன உட்சபட்ச எல்லா Emotions அயும், அவரு Sounding ல படம் பிடிச்சார்னு தான் சொல்லணும்.
அடுத்து Writing.
அவரோட எழுத்துக்கள் யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், உணர்ச்சிகளோட உச்சமாகவும், இயல்பாகவும் இருக்கும்.
நிச்சயம் நம்ம நினைச்சுக் கூட பார்க்காத Emotions அ எழுத்துக்கள்ல கொண்டு வந்துருப்பாரு.
வாழ்க்கையைப் பற்றிய புரிதல்.
காலநிலைகள் தொடர்ந்து மாறிக்கிட்டே இருந்தாலும், அது இயல்பாகவே நடக்கக்கூடிய, மாற்ற முடியாத இயற்கைக்கொத்த விஷயங்கள் தான்னு சொல்லி இருப்பாரு. (Spring, Summer, Fall, Winter and Spring).
நடைமுறைல இருக்குற எல்லா மனுஷங்களோட Rules அ Use பண்ணி, அதை Fail பண்ணி, Break பண்ணி, கற்பனைக்கெட்டாத மாய தோற்றங்களையும், உலகத்தையும் உருவாக்கி இருப்பாரு.
பலதரப்பட்ட, பல்வேறு உணர்ச்சிகளுடைய மனுஷங்களால நிறைஞ்சது தான் உலகம். அப்படிப்பட்ட உலகம், அவங்களாலயே அழிஞ்சு, புது உலகம் உருவானாலும், அதே வகைப்பட்ட வெவ்வேறு உணர்ச்சிகளுடைய மனுஷன் தான் உருவாகுவான் என்பதைக் காட்சிப்படுத்தி இருப்பாரு.
ஒரு தாய் மக்கள் நாம் என்பதை அவருக்கே உரிய Style ல வண்முறையோடயும், காமத்தோடயும், அழகியலோடயும் காட்சிப்படுத்தி இருப்பாரு.
இது எல்லாத்தையும் தாண்டி, வாழ்க்கை ஒரு மலையைப் போன்றது. Ups and Downs இருந்துகிட்டே தான் இருக்கும். அது தான், Life அ Balance ஆ வைக்கும்னு நம்புற ஒரு ஆள்.
Arirang (2011).
இது Kim Ki Duk உடைய Self Documentary. படத்தளத்துல (Dreams) ஏற்பட்ட விபத்துக் காரணமா 2008 - 2011 ல எதுவுமே செய்யாம வெறும் குடி, வாழ்க்கைனு ஓட்டிக்கிட்டு இருந்த Kim Ki Duk தன்னைத் தானே, Interview பண்ணி, Roast பண்ணி, மீளுருவாக்கம் பண்ணின Video.
என்னால படம் எடுக்க முடியாது. ஆனா, படம் இயக்கியே தீருவேன்னு தன்னை தானே Shoot பண்ண Video.
Filmmaking அ Passion ஆ வச்சுருக்குற அனைவரும் பார்க்க வேண்டிய Documentary.

2000-ம் ஆண்டு கிம் இயக்கிய த இஸ்லே படம் 2001-ம் ஆண்டு டோரென்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது, கிம் படங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. 2017-ம் ஆண்டு கிம் மீது அவருடைய படத்தில் நடித்த நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்வியாவுக்குச் சென்றார். அங்கே சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 
அதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Kim Ki-duk (Korean: 김기덕 [kimɡidʌk]; 20 December 1960 – 11 December 2020) was a South Korean film director, noted for his idiosyncratic art-house cinematic works. His films have received many distinctions in the festival circuit, rendering him one of the most important contemporary Asian film directors. His major festival awards include the Golden Lion at 69th Venice International Film Festival for Pietà, a Silver Lion for Best Director at 61st Venice International Film Festival for 3-Iron, a Silver bear for Best Director at 54th Berlin International Film Festival for Samaritan Girl, and the Un Certain Regard prize at 2011 Cannes Film Festival for Arirang. 

His most widely known feature is Spring, Summer, Fall, Winter... and Spring (2003), included in film critic Roger Ebert's Great Movies. Two of his films served as official submissions for the Academy Award for Best International Feature Film as South Korean entries. He gave scripts to several of his former assistant directors including Juhn Jai-hong (Beautiful and Poongsan) and Jang Hoon.

Kim was known as the bad boy of Asian art-house cinema and made his name with a series of visually stunning but extremely violent films, including The Isle (2000) and Bad Guy (2001). The Isle, which features gruesome scenes involving fish-hooks, was sanctioned by authorities in Britain for animal cruelty.  


Kim Ki-Duk Dies Of Covid-19: South Korean Director Won Prizes At Venice, Cannes, Berlin Was 59

Thursday, December 10, 2020

Children of Heaven Movie Review

Synopsis

  • Ali takes his little sister Zahra's shoes to the shoemaker to be repaired, but loses them on the way home. The siblings decide to keep the predicament a secret from their parents, knowing that there is no money to buy a replacement pair and fearing that they will be punished. They devise a scheme to share Ali's sneakers: Zahra will wear them to school in the morning and hand them off to Ali at midday so he can attend afternoon classes. This uncomfortable arrangement leads to one adventure after another as they attempt to hide the plan from their parents and teachers, attend to their schoolwork and errands, and acquire a new pair of shoes for Zahra. Zahra sees the shoes on a schoolmate's feet, and follows her home, but the two soon become friends.

    Ali enters a high-profile children's footrace in the hope of receiving the third prize of a new pair of sneakers. He accidentally places first and wins another prize instead. The film ends with Zahra finding out that she will not get a new pair of shoes, but there is a quick shot of their father's bicycle at the end of the movie that shows what appears to be the red shoes Zahra had been focusing on earlier and another pair of white sneakers, presumably for Ali, whose old sneakers were torn from so much use. The film ends with the final shot showing blisters on Ali's feet. Some versions include an epilogue revealing that Ali eventually achieves the larger-scale success of having a racing career.


"Children of Heaven'' is very nearly a perfect movie for children, and of course that means adults will like it, too. It lacks the cynicism and smart-mouth attitudes of so much American entertainment for kids and glows with a kind of good-hearted purity. To see this movie is to be reminded of a time when the children in movies were children and not miniature stand-up comics.

The movie is from Iran. Immediately you think kids would not be interested in such a movie. It has subtitles. Good lord! Kids will have to read them! But its subtitles are easy for 8- or 9-year-olds, who can whisper them to their siblings, and maybe this is their perfect introduction to subtitles. As for Iran: The theme of this movie is so universal there is not a child who will not be wide-eyed with interest and suspense.

The film is about a boy who loses his sister's shoes. He takes them to the cobbler for repairs, and on the way home, when he stops to pick up vegetables for his mother, a blind trash collector accidentally carries them away. Of course, the boy, named Ali, is afraid to tell his parents. Of course, his sister, named Zahra, wants to know how she is supposed to go to school without shoes. The children feverishly write notes to each other, right under their parent's noses.

The answer is simple: Zahra will wear Ali's sneakers to school every morning, and then run home so that Ali can put them on for his school in the afternoon. But Zahra cannot always run fast enough, and Ali, who is a good student, gets in trouble for being late to class. And there is a heartbreaking scene where Zahra solemnly regards her own precious lost shoes, now on the feet of the ragpicker's daughter.

I submit that this situation is scarier and more absorbing for children than a movie about Godzilla or other manufactured entertainments. Even when you're a kid, you know you're not likely to be squished by a giant lizard, but losing something that has been entrusted to you? And getting in trouble at school? That's big time.

Majid Majidi's film has a wonderful scene where Ali and his father bicycle from the almost medieval streets and alleys of the old town to the high-rises and luxury homes where the rich people live. The father hopes for work as a gardener, but he is intimidated by the challenge of speaking into the intercoms on the gates of the wealthy. His son jumps in, with offers of pruning, weeding, spraying and trimming. It is a great triumph.

And then there is a footrace for the poor children of the quarter. The winner gets two weeks in a summer camp and other prizes. Ali doesn't care. He wants to place third, because the prize is a new pair of sneakers, which he can give to his sister. My guess is that the race and its outcome will be as exciting for many kids as anything they've seen at the movies.

"Children of Heaven'' is about a home without unhappiness. About a brother and sister who love one another, instead of fighting. About situations any child can identify with. In this film from Iran, I found a sweetness and innocence that shames the land of Mutant Turtles, Power Rangers and violent video games. Why do we teach our kids to see through things, before they even learn to see them?

Roger Ebert

Roger Ebert was the film critic of the Chicago Sun-Times from 1967 until his death in 2013. In 1975, he won the Pulitzer Prize for distinguished criticism.



Children of Heaven -சினிமா ஒரு பார்வை - கவிஜி
*******************************************************************
ஈரான் சினிமாக்கள் உலக சினிமாக்களில் தனி இடம் பிடித்திருப்பவை. ஈரான் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு....... இருக்கும் வரையறைக்குள்....... கதை சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதுவே பிறகு நேர்த்தியாகி விட்டிருக்கிறது. இப்படியும் படம் எடுக்க முடியுமா என்று நம் போன்ற நாடுகள் கற்றுக் கொள்ளும் உதாரணம் இந்த படம். ஈரானில் உள்ள குறிப்பிட்ட சில இயக்குனர்களில் 'மஜீத் மஜிதி' மிக முக்கியமானவர். வறுமையின் கோரப் பிடியில் பூத்திருக்கும் பூக்களை உதிர விடாமல் கூட்டிச் செல்லும் வாழ்க்கையைக் கொண்டு இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார்.
"சில்ரன் ஆப் ஹெவன்" செருப்பைக் கொண்டும் இலக்கியம் படைக்க முடியும் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டிய சினிமா.
றோஸ் நிற செருப்பை தைப்பதில்தான் படம் ஆரம்பிக்கிறது.
பின்னால் தூரத்தில் கடவுளின் கீதம் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தைத்த செருப்பை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கொஞ்சம் ரொட்டியும் வாங்கி செல்லும் நம் கதை நாயகன் அலிக்கு வயது எட்டிலிருந்து பத்து இருக்கலாம். உருளைக் கிழங்கு வாங்குவதற்காக சற்று முன் தைத்த செருப்பையும் வாங்கிய ரொட்டியையும் வெளியே இருக்கும் பழக்கூடை சந்தில் வைத்து விட்டு உள்ளே செல்கிறான். அந்த சமயத்தில் குப்பை எடுப்பவர் அவ்வழியே வந்து........எடுக்கும் குப்பையோடு குப்பையாக....... அந்த செருப்பையும் எடுத்து போய் விடுகிறார். உருளைக்கிழங்கு வாங்கி விட்டு வெளியே வரும் அலிக்கு செருப்பு காணாமல் போனது அதிர்ச்சியாகிறது.
"தங்கச்சியோடு செருப்பு......இங்கதான் வெச்சேன்...... காணோம்......" - எவ்ளோ சொல்லியும் கடைக்காரர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விரட்டி விடுகிறார்.
வீட்டில் இந்த விஷயம் தங்கைக்கு தெரிய வருகிறது. வார்த்தைகளற்ற மவுனத்தில் 'நான் எப்படி பள்ளிக்கு செல்வது...!' என்று அப்பா அம்மாவுக்கு தெரியக் கூடாது என்பதற்காக நோட்டில் எழுதிக் காட்டி கேட்கிறாள். சக்கரைத் துண்டு உடைக்கும் அப்பாவும்.... உடல் நோயாளியான அம்மாவும் வறுமையின் வரைபடத்துக்குள் பேசிக் கொண்டிருக்கும் பின்னணியில் இவர்கள் செருப்பு தொலைந்ததற்கும் அதற்கு மாற்று என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதி எழுதி பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே வீட்டில் இருக்கும் கஷ்டத்துக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தது அப்பாவுக்கு தெரிந்தால்... கதை முடிந்தது.
அடுத்த காட்சியில் தங்கை சாரா பள்ளி விட்டு வருவதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறான் அலி. அவள் வந்தால் தான் அவள் அணிந்திருக்கும் தன் ஷூவை வாங்கி தான் அணிந்து கொண்டு இரண்டாவது ஷிஃப்ட் அதாவது மதியத்துக்கு மேல் நடக்கும் தன் வகுப்புக்கு செல்ல முடியும். ஷூ இல்லாமல் போனால் பள்ளிக்குள் விட மாட்டார்கள்.
வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரையும் 'ஷூ போட்ருக்காங்களா' என்று டீச்சர் சோதனை செய்து கொண்டிருக்கையில்.....அண்ணனின் பழைய நைந்து போன ஷூவைப் போட்டுக் கொண்டு தயங்கி தயங்கி பம்மி நிற்கும் அந்த சிறுமியின் கால்களில் சிறுகுகள் முடங்கிக் கிடப்பதைக் காண்கிறோம். குடும்ப வறுமையின் தீவிரம் பிள்ளைகளின் மேல் விழுவதை உணர்த்தும் காட்சி இது.
'இந்த ஷூ ரெம்ப அழுக்கா இருக்கு... போட்டுட்டு போறதுக்கே கஷ்டமாருக்கு' என்று சொல்கிறாள் தங்கை சாரா. அலி ஷூவை சோப்பு போட்டு கழுவி துவைக்கிறான். பார்த்த மாத்திரத்தில் பொசுக்கென்று நீர் பூக்கும் புன்னகை அவளிடம் அப்போது பிறக்கிறது. துவைக்கையில்..... சோப்பு நுரையில் முட்டைகள் செய்து காற்றில் விட்டு.... ஒருவரோடு ஒருவர் விளையாடியபடி அவர்களின் காலம் புன்னகை சிந்துகிறது. அப்போதைக்கான ஆசுவாசத்தை பளிச்சென்று காயும் அந்த ஜோடி ஷூ தருவதாக இருக்க.....அடுத்த நாளிலிருந்து அவர்களின் உலகம் இரட்டைக் கால்களால் சுழல ஆரம்பிக்கிறது.
ஒரே ஜோடி ஷூவை வைத்துக் கொண்டு அண்ணனும் தங்கையும் காலையில் அவளும் மதியம் அவனுமாக மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு பள்ளி போகும் போது பார்த்த விழிகளில் பரிதவிக்கும் கண்ணீர் பொருள் சூழ்ந்து கொட்டும். ஒவ்வொரு நாளும் தாமதமாக பள்ளி நுழைந்து ஹெட்மாஸ்டர்க்கு பயந்து பயந்து வகுப்புக்குள் செல்லும் அவனை பின் தொடருதல் மிக மிக துயரமானது. அவன் கண்களில் எப்போதும் தயாராக இருக்கும் கண்ணீரின் சூடு தாங்கவே முடியாதது.
ஒரு நாள் ஹெட் மாஸ்டரிடம் மாட்டிக் கொள்கிறான்.
"போ..... போய் உங்க அப்பாவை கூட்டிட்டு வா" என்று ஹெட்மாஸ்டர் திட்டும் போது.....கண்களில் நீர் திரள "அவர் வேலைக்கு போய்ட்டார்..... " என்று சொல்வான். "நாளைக்கு கூட்டிட்டு வா" என்று மீண்டும் அவர் சொல்ல... "நாளைக்கும் அவர் வேலைக்கு போவார்" என்று சொல்வான். " சரி அம்மாவையாவது அழைத்து வா" என்கையில்..."அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை" என சொல்லி கண்ணீர் விடும் அவன் பாதங்களில் யாரிடமும் பகிர முடியாத சுமை ஒன்று எப்போதும் இருப்பதை அப்போதும் நாம் உணர்கிறோம்.
நாட்கள் நகர... ஒரு நாள்.... பள்ளி முடிந்ததும்...வேகமாக ஓடி வருகையில் தொள தொளவென இருப்பதால்...சாராவின் காலில் இருந்து ஒரு ஷூ படக்கென்று கழன்று ஓடும் சாக்கடையில் விழுந்து விடுகிறது. சாக்கடை நீர் ஓட..... அதில் ஷூ மிதந்து போய்க் கொண்டிருக்க.....அதை விரட்டிக் கொண்டே சாக்கடையின் இருபக்கமும் மாறி மாறி ஓடும் ஒற்றை ஷூ அணிந்த அந்த பிஞ்சுக் கால்கள் படும் பாடு... ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு அடி தரும் உலகத்தின் கோர பக்கங்களை பறை சாட்டுபவை. உலக பொருளாதாரம் ....... உலகமயமாக்கல்........ தாராளமயக்கொள்கை.....என்று ஒரு வெங்காயமும் வேலைக்காகாது. ஒரு செருப்பின் விலை தான் அந்த ஊரில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது......என்று உலக கதவுகளை எட்டி உதைத்து சொல்கிறது காட்சி. ஓடி ஓடி குனிந்து குனிந்து செருப்பை எப்படியாவது பிடித்து விட முயற்சிக்கும் சிறுமியின் முகத்தில் ஏறி இறங்கி தவிக்கும் பரிதவிப்பில் நிரம்பும் பெருமூச்சு.... சொல்லொணாத் துயரம். சொன்னாலும் துயரம்.
ஒரு வழியாக சாக்கடையில் கிடக்கும் குப்பைகளுக்குள் சிக்கி ஷூ ஓரிடத்தில் தேங்கி விட.......வழிப்போக்கர் ஒருவர் உதவியோடு.... சாக்கடை அள்ளுபவர் அலாக்காக தூக்கி கொடுப்பார். கடவுள் போல. ஆனால் உள்ளே பதபதைக்கும் அண்ணனின் காத்திருப்பு இன்னும் மூச்சு வாங்க ஓட வைக்கும். நம்மையும் கூட மூச்சு வாங்க பின் தொடர வைக்கும்.
இதற்கிடையில் சாரா பள்ளியில் யாராவது தன் செருப்பை திருடி விட்டார்களா என அவ்வப்போது ஒவ்வொரு காலாக பார்த்துக் கொண்டே இருக்கிறாள். மாய சுமையை மனதில் இருந்து இறக்கி வைக்க தேடும் பார்வையைக் கொண்டிருக்கும் அந்த தேடலின் நுட்பம். அதே போல அவர்களின் பள்ளியில் அவளையொத்த ஒரு ஜோடி கால்களில் அவளின் றோஸ் செருப்பு... ஒளிந்திருக்கிறது. அந்த சிறுமி இலந்தைப்பழம் மாதிரி ஒன்றை தின்றபடி நின்றிருப்பாள். அருகில் நின்று அவளையே அவளின் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கும் சாராவின் கண்களில் வழி தெரியாத துக்கத்தின் பாதை மறந்த பாதங்களை நாம் உணர்வோம். கோபம்... தடுமாற்றம்.. தவிப்பு... இயலாமை எல்லாம் கலந்து அவளைப் பின் தொடர்ந்து வீட்டையும் கண்டு பிடித்து விட்டு அடுத்த காட்சியில் தன் அண்ணனோடு வீ ட்டு வாசலில் நிற்பாள்.
ஓடி ஓடி விளையாடியபடியே நடக்கும் அவளை பரிதவிப்போடு ஓடி பின் தொடரும் சாரா - இந்த காட்சி தரும் தாக்கம் சினிமாக்களில் எப்போதேனும் நிகழும் அபூர்வம்.
வார்த்தைகளற்ற பாவனையில் இருவரும் மிக நெருக்கமான......தேவையான ஒரு உண்மையை விவரிக்கும் இடத்தில் ஒளிந்து நிற்கிறார்கள்.
சரி போய் கேக்கலாம் என்பது போல...வீட்டை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க.... அதே நேரம் வீட்டின் கதவு திறக்கப்பட.... வேகமாய் பின்னால் ஓடி வந்து மறுபடியும் ஒளிந்து கொண்டு பார்க்கிறார்கள். அந்த சிறுமி விளையாடியபடியே வெளியே வர அவளைத் தொடர்ந்து கண்ணில்லாத அவளின் அப்பா வெளியே வந்து அவளைத் தூக்கி கொஞ்சுகிறார். கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இப்போது வீட்டுக்குள் இருந்து அந்த சிறுமியின் அம்மா வருகிறாள். விற்பனைக்கான தொங்கும் பெட்டியை கண்ணில்லாத கணவன் கழுத்தில் மாட்டி விட்டு வழி அனுப்பிகிறாள். சிறுமி கண்ணில்லாத தன் அப்பாவை கை பிடித்து கூட்டிக்கொண்டு செல்கிறாள். கண்கள் நடுங்க பார்த்துக் கொண்டிருக்கும் இவர்கள்...அவர்கள் நம்மை விட ஏழைகள் என்று புரிந்து கொள்கிறார்கள். அர்த்தத்தோடு அவர்களைப் பார்த்துக் கொண்டே பேசமுடியாத ஈரான் வீதி வளைவுகளில்.....அண்ணனும் தங்கையும் உயர்ந்த மனிதர்களாக வீடு திரும்புகிறார்கள். அதே கடவுள் கீதம் பின்னால் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும். மானுட நேயத்தின் மிகப்பெரிய காட்சியை மிக எளிமையாக நகர விட்டிருப்பார் இயக்குனர். அங்கே நிலவும் மௌனங்களில் உலகில் உள்ள அத்தனை அணுகுண்டுகளும் செயல் இழந்த மாதிரி இருந்தது.
அதன் பிறகு அண்ணனும் தங்கையும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். காலையில் அவளும்... மதியத்தில் அவனும்.... நீண்டு கொண்டே செல்லும் அவர்களின் முடிவுறாத பாதையில் ஓடி ஓடியே நாட்களை கடத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும்....ஓட்டங்களின் உவமை தான் அவர்களுக்கு.
இந்த சமயத்தில்...சிறுவர்களுக்கான ஓட்ட பந்தய போட்டி ஒன்று நடக்க இருப்பது தெரிந்து அதில் கலந்து கொள்ள போவதைப் பற்றி தங்கையிடம் கால்கள் மலர சொல்கிறான். காரணம் இரண்டாவது பரிசு ஒரு ஜோடி ஷூ.
"ஒரு வேளை முதலாவதாக வந்து விட்டால் என்ன செய்வது...?" என்று கேட்கிறாள் தங்கை.
"அவர்களிடம் முதல் பரிசை கொடுத்து இரண்டாம் பரிசை வாங்கி கொள்ளலாம்... " என்று சொல்லும் களங்கமற்ற முகத்தில்... கண்களின் ஒட்டத்தைக் காண முடியும். அங்கிருந்தே அவன் பாதங்கள் ஓட ஆரம்பித்து விட்டதை உணர முடியும். அதன் பிறகு போட்டியில் கலந்து கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். அவன் ஓடிக் கொண்டிருக்கும் அந்த பத்து நிமிடங்கள்....... அவன் காலடி சத்தங்களின் செய்வதறியாத ஒலி....... நம் இதயத்துக்குள்....... மிக மிக வலிமை வாய்ந்த சத்தமாக பிரபஞ்சத்தின் மீது பட்டு பட்டு எதிரொலிக்கும். கால்களே செருப்பாக இருக்கும் எத்தனையோ பாத சுவடுகளின் துயர தூரங்களை அவன் மூச்சிரைக்க கடந்து கொண்டிருப்பான்.
"தினமும் லேட்.....பழைய பிஞ்சு போன ஷூ....... அழுக்கான ஷூ...... இனி இதை நான் போட மாட்டேன்...." என்று தங்கை சொல்வது காதில் கேட்கிறது. வியர்த்து ஒழுகும் அண்ணன்..... உடல் இரைக்க.......தப் தப்.......தப் தப்...... தப் தப் என்று ஓடிக் கொண்டே இருக்கிறான். ஓடுகிறான். தனக்கு முன்னால் ஒருவனைத்தான் விட வேண்டும். இரண்டாம் இடத்தை தக்க வைத்தபடியே ஓட வேண்டும். அந்த கணக்கில் அவன் முன்னும் பின்னும் பார்த்து பார்த்து ஓடுவது நம்மை ஓடாமலும்
மூச்சிரைக்க செய்யும். எல்லாரும் முதல் இடத்துக்கு ஓடிக் கொண்டிருக்க...... இரண்டாம் இடத்துக்கு ஓடிக் கொண்டிருக்கும் அவனை காலம் மிக உணர்வு பூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும்.
செருப்பு சொன்ன பாடத்தில் உணர்வுகளில் பூத்துக் கிடந்த கொப்புளங்கள்.........உலக வறுமையை செருப்பால் அடித்தே சொன்னது. ஒரு பிஞ்சுக் கால்கள் இன்னொரு பிஞ்சுக் கால்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.
இறுதியில்.... ஓடிக் களைத்து பிய்ந்து நைந்து போன ஷூவை கழற்றி விட்டு புண்ணாகி கொப்பளித்து விட்ட கால்களை நீர்த்தொட்டிக்குள் இறக்குகிறான் அலி. நீரின் மிதமிதப்பில் ஆசுவாசம் தேடுகின்றன அந்த பாதங்கள். சில நொடி அமைதிக்கு பின் உள்ளிருந்து நீந்திக் கொண்டே வரும் தங்க மீன்கள் அவன் கால்களை முத்தமிட ஆரம்பிக்கின்றன. செருப்புக்கு ஓடிய கால்களுக்கு அந்த மீன்களின் குறுகுறுப்பு பேரமைதியை வர வைக்கிறது. செய்வதறியாது.... அந்த தொட்டியின் அருகே அவன் அமர்ந்திருக்கும் காட்சி கால சித்திரமாக மாறி விடுகிறது.
ஆனால் தூரத்தில் எங்கோ அவனின் காலடி சத்தங்கள் மட்டும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
Film: Children of Heaven
Director: Majid Majidi
Language: Persian
Year: 1997 ‧ Drama/Family
கவிஜி