Search This Blog

Monday, February 11, 2013

Saibaba Aarti

சிவலிங்கம் [ அருவுருவ நிலை ]

சிவலிங்கம் [ அருவுருவ நிலை ]
*******************************
இந்த சிவத் திருவுருவம் சாதாக்கிய தத்துவத்தில் (மூர்த்தி தத்துவம்) போற்றிப் புகழப்படுவது. இதை "சகள நிட்கள சிவம்' என்றும் கூறுவர்.

இது வடிவுடையதும் வடிவில்லாததுமாகிய இரு தன்மையும் கூடி நிற்பது;

ஞானசக்தியும் கிரியாசக்தியும் சமஅளவில் பொருந்தி தியானிப்பது.
இதை போக சிவம் என்றும் அழைப்பர்.
இந்த சகள நிட்கள சிவமே சிவலிங்க வடிவமாகும்.
சிவலிங்கம் "அசவலிங்கம்' என அழைக்கப் பெறும்.

அசவம் என்பது போக்கு வரவு இல்லாதது எனப் பொருள்படும். மூலஸ்தானத்தில் உள்ளது.

சிவலிங்கத்தில் காணக்கூடிய அந்த உருவம்- சகளம்;
இன்னது என கூற முடியாதது.
உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம்.
நிட்களத்திற்கு உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை.

இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனி.

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதை விட, லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரத்தில் கூறி இருக்கிறார்.

லிங்கம் என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் மங்கலத்தைத் தரும் பரம்பொருள் எனவும், அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும், மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன.

ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம்.
இல்லங்களில் வைத்து பூஜிக்கும் லிங்கம் சலம்.
ஈசன் தன் கருணை பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம்.

கிழக்கில் தத்புருஷம்,
மேற்கில் சத்யோசாதம்,
மந்தகத்தில் ஈசானம்,
தெற்கே அகோரம்,
வடக்கே வாமதேவம்
என்பது ஐந்துமுக லிங்கவிவரம்,

ஆட்யலிங்கம் என்பது சிரம் பிறைச் சந்திர வடிவமாக உள்ளது.

அநாட்ய லிங்கம் என்பது சிரம் வெள்ளரிப்பழ வடிவம் கொண்டது.

சர்வ சமலிங்கமானது குடை போன்ற சிரத்தையுடையது.

சுரேட்யலிங்கம் எனப்படுவது உச்சியில் கோழி முட்டை வடிவம் கொண்டது என நான்கு லிங்க வடிவங்கள் சரசிவாகத்தில் கூறப்பட்டுள்ளது.

மகேஸ்வர வடிவம்

மகேஸ்வர வடிவம் 25 பேதங்களை உடையது.
*********************
இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று.

1) சந்திரசேகரர்
2) உமாமகேஸ்வரர்
3) இடபாரூடர்
4) சபாபதி
5) கல்யாணசுந்தரர்
6) பிட்சாடனர்
7) காமாரி
8) காலாரி
9) திரிபுராரி
10) சுவந்தராரி
11) மாதங்காலி
12) வீரபத்திரர்
13) அரியர்த்தர்
14) அர்த்தநாரீசுவரர்
15) கிராதர்
16) கங்காளர்
17) சண்டேசானுக்கிரகர்
18) நீலகண்டர்
19) சக்கரப்பிரதானர்
20) கஜமுகானுக்கிரகர்
21) சோமாஸ்கந்தர்
22) ஏகபாதர்
23) சுகாசீனர்
24) தட்சிணாமூர்த்தி
25) லிங்கோத்பவர் என 25ரும் மகேஸ்வர மூர்த்தியாவர்.

இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக
சரபமூர்த்தி,
வாகமூர்த்தி,
க்ஷேத்திரபாலகமூர்த்தி,
ஏகபாததிரிமூர்த்தி
முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன. இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தியின் சதாசிவ மூர்த்தியின்
1) ஈசானம்
2) சத்தியோஜாதம்
3) வாமதேவம்
4) அகோரம்
5) தற்புருடம்
என்னும் 5 முகங்களின் அம்சத்தையும்
அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியாகவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

பாம்பு கடித்துவிட்டால்

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

மாமதுரை / மதுரை பெயர்க்காரணம்



மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும்.

"மதுரை"

இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில..

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.

பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்புறங்களில் குலதெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகும்.

குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.
மாமதுரை /
மதுரை பெயர்க்காரணம் :

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும். 

"மதுரை"

இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில..

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.

பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்புறங்களில் குலதெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகும். 

குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.

Thursday, February 7, 2013

The greatness of Veena



For centuries over, veena is considered as a divine instrument and playing veena is considered to be a yoga. Yagjavalkya Maharishi observed that:

Veena vadana tatvagjah Srutijaati Visarathah |

Talagjascha prayatnena mokshamargam sa gachchati ||

( salvation or liberation can be attained effortlessly by playing veena).

Darsana sparsane chasya bhoga svargapavargade |

Punito viprahatyadi patakaih patitam janam ||

Danda sambhuruma tantri kakubhah kamalapatih |

Indra patrika brahma tumbam nabhih sarasvati ||

Dorako vasukirjiva sudhamsuh sarika ravih |

Sarvadevamayi tasmad veeneyam sarvamangala ||

(That is, by seeing and touching the veena, one attains the sacred religion and liberation. It purifies the sinner, who is been guilty of killing a Brahmin. The danda, made of wood or Bamboo, is Siva, the string is Devi Uma, the shoulder is Vishnu, the bridge is Lakshmi, the gourd is Brahma, the navel is Sarasvati, the connecting wires are vasuki, the jiva is the moon and the pegs are the sun. The veena thus represents nearly all the Gods and Goddesses, and is, therefore, capable of bestowing all kinds of divine blessings, benediction and auspiciousness).

Article source : Tripura Arnavam

-KS Balasingam-
The greatness of Veena

For centuries over, veena is considered as a divine instrument and playing veena is considered to be a yoga. Yagjavalkya Maharishi observed that:

Veena vadana tatvagjah Srutijaati Visarathah |

Talagjascha prayatnena mokshamargam sa gachchati ||

( salvation or liberation can be attained effortlessly by playing veena).

Darsana sparsane chasya bhoga svargapavargade |

Punito viprahatyadi patakaih patitam janam ||

Danda sambhuruma tantri kakubhah kamalapatih |

Indra patrika brahma tumbam nabhih sarasvati ||

Dorako vasukirjiva sudhamsuh sarika ravih |

Sarvadevamayi tasmad veeneyam sarvamangala ||

(That is, by seeing and touching the veena, one attains the sacred religion and liberation. It purifies the sinner, who is been guilty of killing a Brahmin. The danda, made of wood or Bamboo, is Siva, the string is Devi Uma, the shoulder is Vishnu, the bridge is Lakshmi, the gourd is Brahma, the navel is Sarasvati, the connecting wires are vasuki, the jiva is the moon and the pegs are the sun. The veena thus represents nearly all the Gods and Goddesses, and is, therefore, capable of bestowing all kinds of divine blessings, benediction and auspiciousness).

Article source : Tripura Arnavam

-KS Balasingam-

Another version of Maha Ganapathy's birth:


Once upon a time, to amuse Herself, Parvati molded the form of an elephant-headed child, using sandal paste mixed with Her perspiration, then She brought it to the Ganga. As soon as the waters submerged the child, He became a resplendent Being. He was Dvaimatura (one of the names ih His Assossthiram), the son born-from-two-mothers, because Parvati and Ganga too, believed that He was their child.

from the Mushika Vahana Stostram:

Umasutham namasyami,
Ganga puthraya they nama,
Omkaraya vashat kara,
Swahakaraya they nama.

Salutations to the Son of Uma,
Salutations to the son of Ganga,
Salutations to one who says,
“Om”, “vashat” and “swaha”.

-KS Balasingam-
Another version of Maha Ganapathy's birth:

Once upon a time, to amuse Herself, Parvati molded the form of an elephant-headed child, using sandal paste mixed with Her perspiration, then She brought it to the Ganga. As soon as the waters submerged the child, He became a resplendent Being. He was Dvaimatura (one of the names ih His Assossthiram), the son born-from-two-mothers, because Parvati and Ganga too, believed that He was their child.

from the Mushika Vahana Stostram:

Umasutham namasyami,
Ganga puthraya they nama,
Omkaraya vashat kara,
Swahakaraya they nama.

Salutations to the Son of Uma,
Salutations to the son of Ganga,
Salutations to one who says,
“Om”, “vashat” and “swaha”.

-KS Balasingam-

Shirdi Sai Ki Archna by Vishal Shah

Wednesday, February 6, 2013

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு


சேலம்:""காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.

இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. வாழ்க்கையில் பெயர் சொல்லும் வகையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.சில ஆண்டுக்கு முன், 25 மூலிகைகளை கொண்டு கூந்தல் பவுடர் தயார் செய்தேன். பின்னர், வேகத்தடையை தாண்டி வாகனங்கள் செல்லும் போது, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்தேன்.தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.

என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Bob Marley பாப் மார்லி எனும் இசைப் போராளி



Some Quotes from Bob Marley :

# “One good thing about music, when it hits you, you feel no pain.” 

#“The truth is, everyone is going to hurt you. You just got to find the ones worth suffering for.” 

#“love the life you live, live the life you love.” 

#“Better to die fighting for freedom then be a prisoner all the days of your life.” 

#“Get up, stand up, Stand up for your rights. Get up, stand up, Don't give up the fight.” 

#Who are you to judge the life I live? I know I'm not perfect & I don't live to be. But before you start pointing fingers, make sure your hands are clean 
பாப் மார்லியின் அப்பா ஆங்கிலேயர்; அம்மா ஜமைக்கா பகுதியில் வாழ்ந்த ஆப்பிரிக்கர். உலகம் முழுக்க அப்பா சுற்றிக்கொண்டே இருந்தவர். அவரை அரிதிலும் அரிதாகத்தான் பார்த்தார்; பத்து வயதாகும் பொழுது தந்தை இறந்தே போனார். அம்மா எவ்வளவோ கடினப்பட்டு படிக்க வைத்தார். இவரின் நாட்டமோ இசை மீது போனது.

ஜமைக்காவில் கறுப்பின மக்கள் சரியாக நடத்தப்படாத காலம் அது; ரப்பர் தோட்டங்களில் மிகவும் இன்னல்களுக்கு வெள்ளையர்களால் உள்ளாக்கபட்டார்கள். மார்லி தெருவோரம், கடைநிலை மக்கள் வாழும் இடங்களில் ஒலித்த ரெகே இசையை விரும்பி கற்றார். தன் இசையால் பிரபலம் ஆனார்; ஆனால் ராயல்டி தராமல் ஏமாற்றிய பொழுது ப்ளாக்வெல் எனும் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டார்; ஒழுங்காக பணம் வர ஆரம்பித்தது. அவரின் இசை மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் குரலாக ஒலித்தது.

ரப்பர் தொழிலாளிகளின் கண்ணீரை வடித்தார்; எளிய மக்களின் இசையாக பார்க்கப்பட்ட ரெகே இசை இவரால் உலகம் முழுக்க பிரபலம் ஆனது. இவரின் இசைக்கோர்வைகள் மூன்றாம் உலக நாடுகளின் முதல் பாப் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை இவருக்கு வழங்கியது. அன்பினால் ஒரே உலகம் செய்வோம் என்கிற தொனிப்பொருளில் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டன.

இவர் அமெரிக்கா போனபொழுது இசை நிகழ்வை ஒரு நாடகத்தோடு நடத்த கூப்பிட்டவர்கள் இவரின் இசை நிகழ்வு நாடகத்தை விட ஹிட் ஆனதால் பாதியிலேயே வெளியேற்றினார்கள். காசில்லாமல் நடுத்தெருவில் நின்றவர் தப்பித்து நாடுவந்து சேர்ந்தார். போரிட்டுக்கொண்டு இருந்த ஜமைக்காவின் குழுக்களுக்கு இடையே அமைதியை உண்டு செய்ய ஸ்மைல் ஜமைக்கா எனும் இசை நிகழ்வை நடத்தப்போக அது உயிருக்கே ஆபத்தானது.

விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய குழு இவரையும் மனைவியையும் தாக்க இசை நிகழ்வு நடக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டோடு வந்தார் மனிதர்; பாடினார். 80,000 பேர் திரண்டார்கள்.

36 வயதில் கேன்சரால் இறந்து போனார். பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவர்; பலநாள் தன் வளர்ந்த அழுக்கு நிறைந்த சாலையில் படுத்து இதுதான் ஏகாந்தம் என பூரிப்பார். அவரின் மறைவுக்குபின் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதை அமெரிக்கா வழங்கியது; டைம் இதழ் அவரின் பாடல் மற்றும் ஆல்பங்கள் நூற்றாண்டின் மில்லினியத்தின் சிறந்த இசைக்கொர்வைகளாக வெள்ளையர்களின் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகின்றன .

ஸ்மைல் ஜமைக்கா இசை நிகழ்வின் பொழுது "நீங்கள் உயிருக்கு பயப்படவில்லையா?" எனக்கேட்ட பொழுது "உலகத்துக்கு தீமை செய்பவர்களே பயப்படாத பொழுது இந்த உலகை அன்பால் நிறைக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும்?" எனக் கேட்டார்.

அதுதான் மார்லி!

- பூ.கொ.சரவணன்

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.

SAI CHALISA by Gurujiforpuja

Tuesday, February 5, 2013

உலக புற்றுநோய் தினம்



புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் முன் காப்போம் என்று நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே இந்த தினத்தை நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட்ட மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு இருந்தால் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

புற்றுநோய் என்பது எம்மால் தினந்தோறும் பேசப்படும் ஒரு விசயமல்ல என்ற போதும், எமக்கு நெருங்கியவர்கள் யாரையாவது நிச்சயம் இதனால்
இழந்திருப்போம்.

கமல்ஹாசன் புற்றுநோயால் உயிரிழந்த திரைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் புற்றுநோய்க்கு எதிராக போராடிய போது, பேஸ்புக்கில் நூற்றுக்கான செய்திகள் பரிமாறிக்கொண்டோம்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் உயிரிழந்தார் என கேள்விப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான அஞ்சலிகளை பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு தானா, அவற்றுடன் புற்றுநோயை மறந்துவிடப்போகிறோமா?

புற்றுநோய் என்பது வலியை விட கொடியது, தலைமுடி உதிரும், உடல் பலவீனமடையும், உடலில் புள்ளிகள் உண்டாகும் என பலரும் நினைக்கலாம். உண்மையில் அவர்கள் பயப்படுவதும், கோபப்படுவதும், இந்த பிரச்சினைகளுக்காகவா அல்லது புற்றுநோய் விரைவில் அவர்களின் உயிரை பறிக்க போகிறது என்பதற்காகவா?

இங்கு கவனிக்கப்பட வேண்டியது புற்றுநோயுடன் வாழ்பவருக்காக பரிதாப்படுவது அல்ல. அவர்களுக்கு உங்கள் பரிதாபம் தேவையில்லை. மாறாக உங்கள் அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் நோயாளிகளாக முழுவதும் மாறிவிடப்போவதில்லை.

அவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்களை முழுமையானதாக திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

நீங்கள் அப்படிப்பட்ட ஒருவர் மீது காட்ட நினைக்கும் பரிதாபமும், அனுதாபமும் அவர்களை மேலும் பயத்திற்குள் தள்ளிவிடுகிறது. மாறாக, அவர்களை உற்சாக படுத்துங்கள். அவர்களது பயத்தை தோற்கடியுங்கள். உங்களை போன்ற சக மனிதராக பாருங்கள். உலகின் புற்றுநோய் 47% வீதம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்படுகிறது. 55% வீதமானோர் அங்கு தான் புற்றுநோயால் உயிரிழந்து போகின்றனர்.

ஆனால் வளரும் நாடுகள் அலட்சியமாக இருந்தால், 2030 இல் புற்றுநோய் 81% வீதம் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது. 2030 இல் வருடத்திற்கு 21.4 மில்லியன் புற்றுநோயாளிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இணங்காணப்படலாம் என எதிர்வு கூறியுள்ளது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்.

விமானப்பயணத்தில் உங்களுக்கு விமான பணிப்பெண்கள் ஒரு விசயம் சொல்வார்கள். 'மற்றவர்களுக்கு உதவும் முன்னர் நீங்கள் ஒட்சிசன் முகமூடிகளை போட்டுக்கொள்ளுங்கள்'.

இது தான் புற்றுநோய் தொடர்பிலும் சொல்லக்கூடியது. ஆல்ககோல், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பருமன் அதிகரித்தல், உடற்பயிற்சி இன்மை இப்படி எதுவுமே புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

ஒவ்வொரு வருடமும் உலகில் 22 % வீதமான புற்றுநோய் தாக்கம் புகையிலை மூலமே வருகிறது என்கிறது ஒரு ஆய்வுத்தகவல். புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம் சிறுநீர் பை, கணையம் மற்றும் வயிறு மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் புற்று என்று இத்தனை வகை புற்றுநோய் உருவாகிறது. புகைபிடிக்கும் பழக்கம் என்பது, அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்போருக்கும் பாதிப்பை தருகிறது.

இன்றைய புற்றுநோய் தினத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய நான்கு நம்பிக்கைகளும், உண்மைகளும் இவை.

1. நம்பிகை : புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விசயம் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

2.நம்பிக்கை : புற்றுநோய் என்பது நன்கு ஆரோக்கியமான, முதிர்ந்த, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மாத்திரமே ஏற்படுகிறது என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : புற்றுநோய் உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது.

3.நம்பிக்கை : புற்றுநோய் என்பது ஒரு மரண தண்டனை என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்.

4. நம்பிக்கை : புற்றுநோய் என்பது என் விதி என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும்.

எனவே இவற்றை கருத்தில் கொள்ளுங்கள். புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடி தெளிவடைந்து கொள்ளுங்கள். புற்றுநோயை தடுப்பதற்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையும், உங்களை சுற்றியுள்ள சுற்றத்தாரின் ஆதரவும் நிச்சயம் தேவை.

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்..!




பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்?

எல்லோருக்கும் வணக்கம், மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்
என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்க்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்

நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நல்ல எண்ணத்தில் (?) எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.

உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.

அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் நண்பர்களே மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.

ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை காரணம் பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை. கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம் என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த (Slim) தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.

மெனோபாஸ் துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.

தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகிறது. முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் (Walking) இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.

நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். தொப்பையை குறைப்பதற்கு என்று பார்த்தோமானால் மிகச் சிறந்த பலன் தரும் யோகாசனங்களாக தனுராசனம், சலபாசனம், சர்பாசனம், மற்றும் நல்காசனம் ஆகிய யோகாசனங்களை குறிப்பிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும். தொப்பை விழுந்த பின் கடும் முயற்சி செய்து அவற்றை குறைப்பதைக் காட்டிலும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி வரும்முன் தடுப்பதே சிறந்ததாகும்

Ports

Horsetail Fall in California












Sai Ram Sai Shyam - Sai Baba Devotional Song

Underwater Creatures inhabiting the White Sea















Colorful and Poisonous Frogs