Search This Blog

Tuesday, September 13, 2011

'Trojan Horse' Particle Sneaks Chemotherapy in to Kill Ovarian Cancer Cells




Cancer cell (red and blue nucleus) that ingested two large microparticles (green). (Credit: Dr Davidson Ateh, BioMoti Limited)

Science Daily — A common chemotherapy drug has been successfully delivered to cancer cells inside tiny microparticles using a method inspired by our knowledge of how the human immune system works. The drug, delivered in this way, reduced ovarian cancer tumours in an animal model by 65 times more than using the standard method. This approach is now being developed for clinical use.












Dr Davidson Ateh, who worked on the research at Queen Mary, University of London and set up the start-up company, BioMoti, that will develop the technology for clinical use said "It's like we've made a re-enactment of the battle of Troy but on the tiniest scale. In Troy, the Greeks fooled the Trojans into accepting a hollow horse full of soldiers -- we've managed to trick cancer cells into accepting drug-filled microparticles."


The research was funded by, among others, the Biotechnology and Biological Sciences Research Council (BBSRC) Follow-on Fund -- funding for 'proof of concept' at the very early stage of turning research outputs into a commercial proposition -- and carried out at Queen Mary, University of London. The study will be published next week in the journal, Biomaterials.
Dr Ateh and colleagues found that by coating tiny microparticles of around a hundredth the diameter of a human hair with a special protein called CD95, they could in fact trigger cancer cells into ingesting these particles. Not only that, but the particles could deliver a dose of a common chemotherapy drug called paclitaxel.
The key to their success is that CD95 attaches to another protein called CD95L, which is found much more commonly on the surface of cancer cells than it is on normal healthy cells.
Once attached, the cancer cells ingest CD95 and the microparticle with it.
Inside the cell, the microparticle can unload its chemotherapy cargo, which kills the cell to reduce the size of the tumour.
Dr Ateh added "Other researchers had already noticed that cancer cells may use this CD95-CD95L arrangement to avoid being destroyed by the immune system, which is why they display more CD95L than normal cells. We've managed to turn this to our advantage and hijack the cancer cell's own trick-of-the-trade to get our 'Trojan Horse' through the gate."
Co-author and Professor of Gynecological Oncology at Queen Mary, University of London, Iain McNeish commented "Chemotherapy is still the main way that we treat ovarian cancer, which can be particularly aggressive and difficult to treat. Anything we can do to concentrate the treatment in tumour cells and at the same time protect healthy cells is a good thing. This is an elegant method and if it works in a clinical setting as well as we hope it will patients could experience a better treatment with fewer side effects."
Principal investigator and Professor of Pathology at Queen Mary, University of London, Joanne Martin added "There are lots of drugs that we would like to deliver into cells -- not just chemotherapies -- and this could work for those too. For example, there are new classes of drugs to treat tumours, such as biological therapies. If we could load biological therapies into the same CD95-coated particles, then there's no reason why they couldn't also be delivered in this way."
The researchers are now advancing these studies and BioMoti is seeking to attract larger and established pharmaceutical companies to partner the technology, dubbed OncoJanTM in reference to the earlier Trojan horse, for the clinical development of new treatments in specific types of cancer.
Professor Douglas Kell, Chief Executive, BBSRC said "BBSRC funds a great deal of work that is aimed at improving our fundamental understanding of biological processes. When there are opportunities to use this understanding to the benefit of people, it is vitally important to seize and make the most of them. This is a good example where research into the human immune system has led to a new technology that has the potential to underpin health and wellbeing into later life."


மலேசியத் தமிழ்ப்படைப்பிலக்கியங்களினூடாக வெளிப்படும் மலேசிய வரலாற்றுக் கூறுகள் என். செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்

ஒரு இனத்தின் நீடித்த வாழ்வுக்கு அவ்வினம் பயன்படுத்தும் மொழி அதிமுக்கியமான பங்கை வகிக்கின்றது. ஒரு இனம் தான் பயணித்துவந்த நீண்ட வரலாற்றுப்பாதையை அடுத்த தலைமுறைக்குக் காட்டிச்செல்ல அம்மொழியின் வழியான இலக்கியம் மிக முக்கியமானதாகும். தமிழ் இனத்தின் செழுமைமிக்க வரலாற்றை, அவ்வினம் காலாதிகாலமாகப் பயணித்து வந்த கடந்த கால வரலாற்றின் ஒவ்வொரு திருப்புமுனையினையும் தமிழ் இலக்கியங்கள் அவ்வப்போது பதிந்து வைத்ததால்தான் இன்று நாம் எமது இனத்தின் பெருமைமிக்க பண்பாட்டினை, எதிர்கண்ட அழிவுகளை, வசந்தகால நினைவுகளை சந்ததி சந்ததியாக அறிந்து சுவைக்கவும், பெருமிதம் கொள்ளவும் எதிர்காலத்தைத் திட்டமிடவும் முடிகின்றது.

அன்று முச்சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த எம் முன்னோருக்கு தமிழர் வரலாற்றை எழுத்தில் பதிந்து வைப்பதில் சிக்கனம் தேவைப்பட்டது. நாம் காணும் கல்வெட்டுகளிலும், ஏடுகளிலும், மரப்பட்டைகளிலும் பக்கம் பக்கமாக வரலாற்றை எழுத முடியாத நிலை அன்றிருந்தது. ஆதலினால் செய்யுள் இலக்கியம் நீண்டகாலம் நிலைத்திருந்தது. செவிவழியாக மனனஞ்செய்து தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்ட நாட்டாரியல் இலக்கியங்கள் கூட பாடல்களாகவே இருந்திருக்கின்றன. சுருங்கச்சொல்லி விளங்கவைக்கவேண்டிய தேவை பண்டைய தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கு இருந்துள்ளது. கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தும் வல்லமை படைத்ததாக நாம் கருதும் திருக்குறள் இதற்கு உதாரணமாகின்றது.

இந்நிலை பின்னாளில் பத்திரிக்கைத்தாளின் அறிமுகத்தின் பின்னர் முற்றாக மாறியது. உரைநடை இலக்கியம் வீறுகொண்டு எழுந்தது. கதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று விரிந்த நம் இலக்கியப் பரப்பில் உலகளாவிய நமது தமிழின் வரலாறும், அவனது காலத்தைய உலக வரலாறும் நன்கு பதியப்படலாயிற்று.

மலேசிய இலக்கிய பரப்பிலும் இத்தகைய வரலாற்றுப் படிமங்களை நாம் ஆங்காங்கே காணக்கூடியதாக உள்ளன. உலக வரலாற்றின் பாதையில் ஏற்பட்ட பல திருப்புமுனைகளை அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த தமிழன் எவ்வாறு கடந்தான் என்பதை அறிந்துகொள்ளச் சமகால மலேசியத் தமிழ் இலக்கியங்கள் சில எமக்கு உதவுகின்றன. மலாயாத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வரலாற்றுப் பதிவுகளைக்கொண்டு அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ள ஆக்க இலக்கிய படைப்புக்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகின்றது.

தமிழகத்திலிருந்து ஆங்கிலேயர்களால் மலாயாவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஏழைத் தமிழ்க் குடும்பம் ஒன்றின் வாரிசாக மலாயா ஜொகூர் மாநிலம், பத்துபகாட் நகரில் 27.05.1927-ல் பிறந்தவர் பிரிட்டிஷ் மலாயா சக்திமோகன் என்பவர். ஜொகூர் மாநிலத்தில் முதலாவது பொதுத் தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர் இவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோரின் திராவிட இயக்கக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மலாயாவில் திராவிடர் கழகத்தை முன்நின்று அமைத்தவர்களுள் இவரும் ஒருவர். 1946-ல் இவரது தீவிர ஊடகப்பணிகளால் வெகுண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் செயற்பட்டுத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மலாயா சாம்பசிவமும், தொழிற்சங்கப் போராட்டங்களால் பிரிட்டிஷ் அரசுக்குத் தலையிடி கொடுத்ததால் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களால் தூக்கிலிடப்பட்ட கணபதியும் வாழ்ந்திருந்தார்கள்.

மலாயா சக்திமோகன் கடல் கடந்த தமிழன் (மலேசியா : ராணி செந்தாமரை பதிப்பகம், கோலாலம்பூர், 1வது பதிப்பு, 2001. 172 பக்கம்) என்ற அரியதொரு ஆவணத்தை எழுதியுள்ளார். இந்நூலில் தனது அரசியல் பணிகளைப் பதிவு செய்வதுடன் தூக்கிலிடப்பட்ட தியாகி கணபதியின் போராட்ட வரலாற்றையும் இணைத்துத் தமது மனப்பதிவுகளைத் தொகுத்திருக்கின்றார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியதால் அன்றைய மலாயாவில் பிரிட்டிஷ் அரசினால் தூக்கிலிடப்பட்ட தொழிற்சங்கவாதி கணபதியின் இறுதிக்கட்டப் போராட்டத்தையும் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தடுத்திட இந்தியாவில் அறிஞர் அண்ணா முதலானோரினால் மேற்கொள்ளப்பட்ட ஊடக முயற்சிகளையும் இதில் ஆவணப்படுத்தியுள்ளார். மலாசியாவில் ஒரு தமிழ்ப் போராளியின் வாழ்வைக் கூறும் அரியதொரு வரலாற்று நூல் இதுவாகும்.

இந்நூலின் நான்காம் பக்கத்திலுள்ள எச்சரிக்கைக் குறிப்பு எனது கண்ணையும் கருத்தையும் இழுத்துப் பிடித்து நிறுத்தியது. “இந்த வரலாற்று நூலைப் படிப்பதற்கு முன், கவனம், எச்சரிக்கை நினைவிலிருக்கட்டும். இந்த வரலாற்று நூலைப் படிப்பதற்கு முன் கீழ்கண்ட எச்சரிக்கை வேண்டுகோளை உங்கள் மனதில் இறுக்கி பதிய வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இந்த வரலாற்று நூலில் பிரிட்டிஷ் மலாயாவில் நெருக்கடி காலத்தில் நிகழ்ந்த வரலாற்றைப் பற்றி விளங்கப்பட்டுள்ளது. இதற்கும் இன்றைய சுதந்திர ஐக்கிய சுதேசி மலாசியாவிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதை மனதில் இறுக்கி பதிய வைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்க கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்ற எச்சரிக்கைக் கூற்று இந்த நூலில் “சுதந்திர ஐக்கிய சுதேசி மலேசியாவில்” சொல்லப்படாததொரு செய்தியைக் கூறுவதாக அமைகின்றது.

கோலாலங்காட் ரெங்கசாமி 27.9.1930-ல் சிலாங்கூர் மாநிலத்தில் கோலாலங்கட் என்ற இடத்தில் பிறந்தவர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் 1950 முதல் ஓயாமல் எழுதி வரும் மலேசிய படைப்பாளி. சிறுகதைகள், நாவல்கள், மேடை, வானொலி நாடகங்கள் பலவற்றை இவர் எழுதியுள்ள போதிலும் இவரது புதியதோர் உலகம், லங்காட் நதிக்கரை, நினைவுச் சின்னம் ஆகிய மூன்று நூல்களுமே இவரைப் பற்றி புலம் பெயர்ந்த தமிழர் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் பேசவைத்துள்ளதெனலாம்.

புதியதோர் உலகம் என்ற இவரது நூல் ஒரு வரலாற்று நாவலாகும். (Selangor: A.Rangasamy, No.21, Jalan 6, Taman Telok, 42500, Telok Panglima Garang Kuala Langat, 1வது பதிப்பு, 1993. 300 பக்கம்). 1942-ல் ஜப்பானியர் ஆட்சியில் மலேசியர்களின் வாழ்வியலை இந்நாவல் படம்பிடித்துக் காட்டுகின்றது. இரண்டாவது உலகப்போரில் மலாயா நாட்டில் ஆங்கிலேயர்களால் அநாதைகளாகக் கைவிடப்பட்ட தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் பட்ட துன்பங்கள் எண்ணிலடங்காதவை. அந்த வரலாற்றினை இந்நாவல் மீள்தரிசனம் செய்கின்றது. ஜப்பானியரின் ஆட்சியின் போது மலாயாத் தோட்டப்புற மக்கள் பட்ட இன்னல்களையும், இங்கிருந்து சயாம் (தாய்லாந்து) நாட்டுக்கு ரயில்பாதை அமைக்கவென வலுக்கட்டாயமாக, ஆட்டுமந்தையைப் போல பார ஊர்திகளில் இட்டுச் செல்லப்பட்டு அந்த மரண ரயில்பாதையில், நிரந்தரமாகத் துயில்கொள்ளச் செய்த துயரச் சம்பவங்கள் இந்நாவலில் விரிவாக எடுத்துச்சொல்லப்பட்டுள்ளன.

தாய்லாந்து ரயில்பாதையில் தமிழனின் உடலும்தான் உரமாகியிருக்கின்றது என்ற செய்தி பலருக்கும் புதியதாகும். சயாம் மரண ரயில் பாதை அமைப்பின் வரலாற்றுச் சோகத்தை மற்றொரு கோணத்தில் சொல்வதாகவே இவரது நினைவுச் சின்னம் என்ற நாவலும் அமைந்துள்ளது.(சிலாங்கூர் டாருல் ஏசான்: A.Rengasamy, 21, Jln 6, Tmn Telok, 42500 Telok Panglima Garang, 1வது பதிப்பு 2005. 537 பக்கம்) மரண இரயில்வே என்று வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்பட்ட சயாம்-பர்மா இரயில் பாதை அமைப்பில் வலுக்கட்டாயமாக ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களால் ஈடுபடுத்தப்பட்டு, ஆதரவின்றி அநியாயமாய், அந்நிய மண்ணிலே அநாதைகளாகப் பலியாகி, சயாம் காடுகளில் ஆழ்துயில் கொண்டுவிட்ட ஆயிரமாயிரம் மலாயாத் தமிழர்களின் மறக்கப்பட்ட துயரம் தேய்ந்த வரலாறு இந்நாவலிலும் விரிகின்றது. இந்நாவலின் வரலாற்று நிகழ்வுகளை நேரில் அனுபவித்து இன்றும் உயிர் வாழ்ந்து வரும் எண்மரின் தகவல்களின் அடிப்படையில் இந்நாவல் உயிர் பெற்றுள்ளதை பின்னிணைப்பில் அறியமுடிகின்றது. இதனால் நாவலில் உயிரோட்டம் மிகுந்துள்ளது. மேலும் உலகத்தமிழர்களின் வாசிப்பினை இலகுவாக்கும் வகையில் வட்டாரச் சொற்களுக்கானதொரு சிறு அகராதியும் இந்த நாவலில் காணப்படுகின்றது. இதனால் பிரதேசப் பாகுபாடற்று அனைத்துத் தமிழ் வாசகர்களும் இந்நாவலுடன் ஐக்கியமாக இது உதவுகின்றது.

அ.ரெங்கசாமியின் அண்மைக்கால நாவலாக வெளிவந்துள்ளது லங்காட் நதிக்கரை (சிலாங்கூர்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். 73B, Jln SG3/10, Taman Sri Gombak, 68100, Batu Caves, 1வது பதிப்பு, நவம்பர் 2006. 112 பக்கம்) என்ற நாவலாகும். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதன்மைப் பரிசான பி.பி.நாராயணனன் விருது பெற்ற நாவல் இதுவாகும். மலேசியத் தமிழர்களின் வரலாற்றினைப் பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட இவரது நான்காவது நாவல் இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. மலாயாத் தமிழர்கள் ஆங்கிலேயர்களின் தோட்டங்களில் மட்டுமல்லாது கம்பம் எனப்படும் கிராமப்புறங்களிலும் கூடத் தனித்தனிக் கூட்டங்களாக ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதனை லங்காட் நதிக்கரை என்ற நாவல் பதிவு செய்கின்றது. மலாயா விடுதலைப்படை எனப்படும் கம்யூனிஸ்ட் படையின் இருவாரமே இடம்பெற்ற ஆட்சியில் அப்பாவிகளான மலாயாத் தமிழர்கள் சந்தித்த இக்கட்டானதும் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைமையை ஒத்ததுமான வாழ்க்கையை இக்கதை சுவையாக கூறுகின்றது.

தொடர்ந்து மலாயாக் கம்யூனிஸ்ட்களின் கலவரத்தில், அவசரகால சட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தின் பிடியில் சிக்குண்டு மலேசியத் தமிழர்கள் அனுபவித்த கட்டுப்பாடுகளையும் இடர்களையும் இயன்றவரை வரலாற்று உண்மைகளோடு இந்நாவலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த மண் மணம் பேச்சுவழக்கினூடே அழகாக இந்நாவலில் எடுத்தாளப்பட்டுள்ளன. இதை வாசித்து முடித்த போது 1987களில் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளுக்குள் சமாதானத் தூதுவர்களாக வந்திறங்கிய இந்திய இராணுவத்தின் இரும்புப் பிடியில் மூச்சுத்திணறிய எமது ஈழத்தமிழர்களின் இரு ஆண்டுகால உணர்வுகள் ஆங்காங்கே நினைவில் எழுந்து நீண்ட நேரம் நிலைத்திருந்தது. கோலாலங்காட் ரெங்கசாமியின் இமயத் தியாகம் என்ற நாவல் நேதாஜி என்ற விடுதலை வீரன் சுபாஷ் சந்திரபோசின் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான விடுதலைப்போர் பற்றிக் குறிப்பிடுகின்றது. (தமிழ்நாடு: இளங்கோ நூலகம், 4-பி, காந்தி சாலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2006. 376 பக்கம், ISBN:983-42587-2-0)

மலாயாத் தமிழர்கள் அனுபவித்த சோக வரலாறுகளினூடாக சில வீரவரலாறுகளையும் நாம் இனம்காணமுடிகின்றது. 1941-ல் நடந்தது காப்பார் கலகம் எனப்படும் தோட்டத் தொழிலாளர் புரட்சி. இப்புரட்சியில் துப்பாக்கி ஏந்திய காவல் ஏந்திய காவல்துறையயும் இராணுவத்தையும் முன்நிறுத்திக் கலவரத்தை அடக்க முனைந்தது ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு. இவ்வடக்குமுறையை தமிழர்கள் அஞ்சாது எதிர்த்து நின்று போராடினார்கள். பலர் உயிர்த் தியாகமும் செய்தனர் என்பது ஒரு வீர வரலாறு. 1943-ல் மாவீரர் நேதாஜியின் தலைமையில் இந்திய விடுதலைக்காய் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து இம்பால் வரை சென்று போராடி இருக்கின்றனர் தமிழ் மறவர்கள். இது இரண்டாவது வீர வரலாறு. இப்போர் பற்றிய நினைவு நூல்கள் ஒரு சிலவே வெளிவந்துள்ளபோதிலும், இந்நூல் வித்தியாசமான முறையில் நாவலாக அதை சுவாரஸ்யமாக்கியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தென்கிழக்காசிய வெற்றியில் தொடங்குகின்றது இந்த வரலாற்று நாவல். இந்தியச் சுதந்திரம் சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம், பர்மிய, இந்திய வடகிழக்குப் போர்முனை, தமிழ் போர் வீரர்களின் தியாகம், என வரலாற்றுப் பின்னனியில் ஏராளமான தகவல்களுடன் ஒரு தமிழனின் பார்வையில் விரிகிறது இந்நாவல். கடும் உழைப்பில் ஏராளமான முன்னாள் Indian National Army (I.N.A.) வீரர்களைச் சந்தித்தும் வரலாற்றுத் தரவுகளைத் திரட்டியும் இந்நூலை கலையமைதியுடன் உருவாக்கியுள்ளார் கோலலங்காட் ரெங்கசாமி. மலேசிய ரப்பர் தோட்டங்களில் வாழ்ந்திருந்த தமிழ்க்குல ஆண்களும், பெண்களும் சீருடை அணிந்து துப்பாக்கி ஏந்தி போர்முனைக்குச் சென்று போராடினார்கள். அதில் பலர் உயிர்த்த தியாகமும் செய்தனர். இதுவே இமயத் தியாகம் என்ற வரலாற்று நாவலாகக் கருக்கொண்டது.

இவ்வேளையில் சிங்கை மா.இளங்கண்ணன் என்ற படைப்பாளி சிங்கப்பூரிலிருந்து எழுதிய நாவலான வைகறைப் பூக்கள் பற்றியும் இங்கு குறிப்பிடப்படுவதும் பயனுள்ளதாகும். (சிங்கப்பூர்: நூல் வெளியீட்டுக் குழு, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1990.208 பக்கம்) சிங்கப்பூரின் தமிழ் தினசரியான தமிழ் முரசில் தொடராக வெளிவந்த இந்நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தை மீள்நினைவூட்டுகின்றது. இமயத் தியாகம் நாவல் குறிப்பிட்டது போன்றே, சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தின் செயல்கள் குறித்தும் இரண்டாம் உலகப்போர் குறித்தும் வரலாற்றுப் பின்னனியில் வைகறை பூக்கள் எழுத்ப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 1990 மார்ச் 25 முதல் ஏப்ரல் 21 வரை இந்தியர் பண்பாட்டு மாதம் கொண்டாடப்பட்டது. இது சிங்கப்பூரின் உருவாக்கத்தில் 25வது ஆண்டு நிறைவினையொட்டி நடத்தப்பட்டது. அவ்வேளையில் அதை நினைவு கூறும் முகமாக சிங்கப்பூரின் கலை இலக்கிய சமூகவியல் வரலாற்றை பதிவாக்கும் வகையில் 25 தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டன. வைகறைப் பூக்கள் அவற்றிலொன்று.

கோலலங்காட் ரெங்கசாமி போன்றே மற்றொரு மலேசிய எழுத்தாளரும் சயாம் மரண ஊயில்பாதை அமைப்புப் பற்றிய வரலாற்றுப் பதிவினை அடிப்படையாகக் கொண்ட நாவல் ஒன்றினை எழுதியுள்ளார். ஆர். சண்முகம் 6.7.1935-ல் பிறந்தவர். இவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர். 1950 முதல் எழுதிவரும் முன்னனி எழுத்தாளர். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 7 தொடர்க்கதைகள், மற்றும் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். மயில், சாந்தி, தினமுரசு இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். லண்டன் முரசு நடத்திய உலகச் சிறுகதைப் போட்டியிலும் முதற்பரிசினைப் பெற்றவர். சயாம் மரண ரயில் என்ற தலைப்பில் ஆர். சண்முகம் எழுதிய நாவல் ஜப்பானியர் காலத்து மலாயா வரலாற்றில் பதியப்பட்ட கொடூரமான, குருதிதோய்ந்த, அந்த இருண்ட காலக்கட்டத்தை இங்கு மீள்பதிவுக்குள்ளாக்குகின்றது. (கோலாலம்பூர் 51200: ஜெயபக்தி பதிப்பகம், 28&30 Wisma Jaya Bakti, Jln Cenderuh Dua, Batu 4, Jalan Ipoh, 1வது பதிப்பு, 1993. 436 பக்கம், ISBN: 967-900-454-6).

ஜப்பானியர் பர்மாவை சயாம் (தாய்லாந்து) வழியாக மலாயாவுடன் இணைக்கும் இரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஏராளமான மலேசியத் தமிழர்களை ஈடுபடுத்தினர். இந்த இரயில்பாதை அமைப்பில் 51000 போர்க்கைதிகளும் 100 000 ஆசிய கட்டாயத் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. பயங்கரக் காட்டின் நடுவே முடியாது தொடரும் இரயில் பாதைகளில் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்ட லட்சக்கணக்கான மக்களின் மரண ஓலம் இந்நாவலின் வரிகளுக்கிடையே இனத்தின் வலியாக இழையோடிக்கிடக்கின்றன. இதில் பலியானவர்களில் தமிழர்களே அதிகம். உணவு, மருந்து, இல்லாமல் இந்த இரயில்பாதை அமைப்பில் பலர் இறந்தனர். 1942 நவம்பர் முதல் 1943 அக்டோ பர் வரை நடந்த இந்தக் கொடுரத்தின் பதிவு இந்த நாவலாகும்.

மலேசியத் தமிழ் படைப்பிலக்கியங்களில், பிரித்தானிய ஆட்சிக்கு முன் காலத்தைய மன்னர் வரலாறுகளும் ஆங்காங்கே பதிவாகியுள்ளன. ஆடும் மஞ்சள் ஊஞ்சல் என்ற குறுநாவல், ப.சந்திரகாந்தம் அவர்களால் எழுதப்பட்டது. (கோலாலம்பூர்: கலை இலக்கிய பண்ணை, 1வது பதிப்பு அக்டோபர் 1985. 96 பக்கம்) இந்தக் குறுநாவலில் மலேசிய மாநிலங்களில் ஒன்றான மலாக்கா வரலாறு பின்னனியாகத் தரப்பட்டு, அக்கு ஆட்சி செய்த முதல் தமிழ் மன்னர் பரமேஸ்வரன் முதல் பின்னாளில் ஆட்சி செய்த சுல்தான் அஹ்மாட் ஷா வரை ஒன்பது சுல்தான்களைப் பற்றிய வரலாறு பேசப்படுகின்றது. பல வெற்றிகளைப் பெற்று மலாக்காவை விரிவுபடுத்தித் தானே எட்டாவது சுல்தானாக முடிசூட்டிக் கொண்ட சுல்தான் மஹ்மாட் ஷா இந்நூலில் கதாநாயகனாக கணிப்பு பெறுகின்றார். மேலும் நான்கு சுல்தான்களிடம் 42 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிய துன் பேரா, தளபதியாக விளங்கி நாட்டை விரிவுபடுத்திய வீரர் ஹங் துவா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களாகின்றனர்.

பெண்ணழகில் மயங்கும் சுல்தான் மஹ்மாட் ஷாவின் பலவீனமும் அதனால் விளையும் குழப்பங்கள், அரசியல் சூழ்ச்சிகள், கொள்ளைகள் என்பன சுவையாகக் கதையை நகர்த்துகின்றன. கி.பி.1511-ல் போர்த்துக்கேயர் மலாக்காவைக் கைப்பற்றுவதுடன் குறுநாவல் நிறைவுபெறுகின்றது. மலேசிய வரலாற்றில் மலாக்கா தமிழர்களுக்கு முக்கியமானதாகும். இன்றும் அங்கு நினைவுச் சின்னங்களாக மலாக்காச் செட்டிகளால் அமைக்கப்பட்டிருக்கும் பாக்குவெட்டி, வெற்றிலைத் தட்டம், கமுகம் குலை (பாக்கு) போன்றனவும் மலாக்காச் செட்டிகளால் பராமரிக்கப்பட்ட புராதன சைவ ஆலயமும், இன்று இஸ்லாமிய மதத்தவரைப் பெரும்பங்கினராகக் கொண்ட மலாயாப் பெருநிலப்பரப்பில் ஒரு காலத்தில் தமிழரின் ஆதிக்கமும் இருந்துள்ளமைக்குச் சான்றாக அமைகின்றன.

மலேசியப் படைப்பாளி ப.சந்திரகாந்தம் 28.2.1941-ல் பிறந்தவர். 1960 முதல் மலேசிய இலக்கியத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். 100க்கு மேற்பட்ட சிறுகதைகள், 9 தொடர்கதைகள், 600க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் என இவரது படைப்புகள் பட்டியலாக நீளும். மலேசிய சிங்கப்பூர் வானொலிகளில் இவரது நாடகங்கள் பல ஒலிபரப்பாகியுள்ளன. பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கைத் துணை ஆசிரியராகவும், வானொலி எழுத்தாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் இவர். ப.சந்திரகாந்தம் போன்றே பினாங்குத் தீவில் வாழும் சு.கமலாவும் குறிப்பிடத்தகுந்தவர். 14.1.1960-ல் பிறந்த இவர் 1982 முதல் எழுதிவருகிறார். உங்கள் குரல் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மலாய் மொழியிலும் பரிச்சயம் மிக்கவர். இவரது படைப்புக்கள் மலாய் மொழியிலும் வெளிவந்துள்ளன. தீ மலர் என்ற பெயரில் சு.கமலா எழுதிய நூலையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். (பினாங்கு10400 : அன்பானந்தன் இலக்கிய பரிசு வாரியம், 59, சியாம் ரோடு. 1வது பதிப்பு, 1987. 100 பக்கம்).

மலேசிய வரலாற்றில் நிகழ்ந்த குறிப்பாக மலாக்கா மன்னர்களின் (1403-1511) ஆட்சியில் நிகழ்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் குறுநாவல் இதுவாகும். இக்காலக்கட்டத்தில் மலாக்காவை ஆட்சிபுரிந்த மன்னன் மஹ்முட் ஷாவை நாயகனாகக்கொண்டு பின்னப்பட்ட கதை. சா.ஆ.அன்பானந்தான் இலக்கிய வாரியம் நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை இது.

மலேசியத் தமிழரின் நூற்றாண்டுகால வாழ்வின் சுவடுகளைப் பதிவு செய்துள்ள ஆக்க இலக்கியங்கள் பல இன்று மலேசிய இலக்கிய வெளியீடுகளுள் காணப்படுகின்றன. கட்டுரையின் நீட்சி கருதி இவை பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை. மலேசியத் தமிழர் பார்வையில் பதிவுசெய்யப்பட்ட குறிப்பிடத்தக்க நூல்களாக இங்கு நான் எடுத்துக்காட்டியவை தவிர்த்து பிற நூல்களும் அங்கு இருக்கக்கூடும். ஜனரஞ்சக இந்தியத் தமிழ் இலக்கியங்கள் கொண்டுவந்து குவிக்கப்படும் அளவுக்கு தரமான மலேசியத் தமிழ் இலக்கியங்கள் இலங்கையையும், தமிழர் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளையும் எட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குறிய செய்தியாகும். இந்த குறைப்பாட்டிற்கு மலேசிய தமிழ் படைப்பாளிகளும் ஓரளவு பொறுப்பானவர்களே. தமது படைப்புகள் தமது வேரோடிய தமிழகத்து மண்ணையும் அங்கு கொழுவீற்றிருக்கும் தமிழகத்தின் படைப்பிலக்கிய ஜாம்பவான்களையும் சென்றடைந்தாலே தமக்குப் பிறவிப்பெரும்பயன் கிட்டிவிட்டதாகக் கருதும் மலேசியப் படைப்பாளிகள் தமது படைப்புகள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளை அடையவேண்டும் என்று கருதுவதில்லை. தமது அண்டைநாடான இலங்கையின் சந்தை வாய்ப்பினை இதுவரை பெற்றுக்கொள்ள அவர்கள் முனையாததற்கான காரணம் அவர்களே அறிவர். இவர்களைக் கைதூக்கிவிடத் தமிழகம் தயாராயில்லை.

இந்நிலையில், மலேசியத் தமிழ்ப் படைப்புலகச் சூழலை விளங்கிக்கொள்ள எமக்கு இக்கட்டுரை ஓரளவாவது உதவும் என்று நம்பலாம்.

அவளும் சுதந்திரமும்... (விகடினில் வெளியான எனது சிறுகதை)


"இவங்க என் அம்மா"  என்று என் மகள் அர்ச்சனா, ரமேஷிடம் என்னை அறிமுகப்படுத்த, 'வணக்கம்' என்றேன். அவர் புன்னகைத்தார். 

எனக்கு அவரின் அந்த புன்னகை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அந்த உண்மை எனக்குள் பதிந்து எனது வெளிப்படுத்தாத பட்டியலில் வழக்கம்போல் மௌனமாக சென்றுசேர்ந்தது. 

"பெண்களும் சுதந்திரமும்" என்ற தலைப்பில் கல்லூரியின் பேச்சுப் போட்டியில் பேசி வெற்றி பெற்றவள் நானே இப்படி என்றால்..!

இன்னொரு பெண்ணோடு என் கணவருக்கு தொடர்பிருந்ததை அறிந்ததும், என்னை பார்க்கையில் அவருக்கு அவளைத் தான் ஞாபகம் வருகிறதென்று பலமுறை என்னிடம் சொன்ன பிறகும் நான் வேறென்ன செய்ய? 

அந்த நல்லவனுக்கு நிரந்தர சுதந்திரம் கொடுத்தேன். நல்லவேளை எனக்கு அரசு வேலை இருந்தது. ஆனால் என் மீது அனுதாபம் காட்டின சமூகம் என்னை ஆணவக்காரி என்று சொல்லாமல் விட்டதா? இல்லையே! 

மகளின் மீதுள்ள பாசத்தால் மறுமணமத்தை தவிர்த்த பல லட்சங்களில் நானும் ஒருத்தி. உணர்ச்சிகள் வெல்லும்போது அறிவை தோற்கடிக்கக் கூடாது என்ற கொள்கையை இறுதிவரை கடைபிடிக்க உறுதி எடுத்தவள் தான் நான்! 

என்றாலும், என்னையே நான் கரைத்து வருகிறேனோ என்று அவ்வப்போது என் மனதின் கேள்விக்கு பதிலின்றி நான் தவிக்கிறேன். எந்தன் இதயத்தின் கனத்த பாரம் கண்ணீராய் பரிணமிப்பதை என்னால் தடுக்க இயல்வதில்லை!

காலையில் சந்தித்த ரமேஷின் புன்னகை மனதில் ஒரு மின்னலைக் கொண்டு வந்தது. 

"அர்ச்சனா..! ஜயந்தியின் அப்பா ரமேஷ் என்ன செய்கிறார்? டாக்டரா? சீரியல் நடிகரா?"

"அம்மா, அவங்க அப்பா நல்ல அப்பா!" 

"அது சரி, அவருக்கு என்ன வேலைன்னு கேட்டேன். பி.ஏ படிக்கிறாயே, கேள்விக்கு சரியான பதில் சொல்லத் தெரியலையே," என்று சிரித்தேன். 

உடனே அர்ச்சனா, "அம்மா, அவர் ஒரு வக்கீல். ஆனால் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்". 

"ஆமாம் அர்ச்சனா, வக்கீல்களும் மருத்துவர்களும் சந்தோஷமானவர்களை சந்திப்பது மிகவும் குறைவு." 

ஆறு வருடங்களுக்கு முன்னர் இந்த வக்கீலை நான் சந்தித்திருப்பின் இவர் மூலமாகவே அந்த கடைசி கையெழுத்திட்டுருப்பேன் என்றதென் மனம். 

அப்போது ஜயந்தியின் அலைபேசி அழைப்பு.. "அர்ச்சனா இருக்காளா" என்றதொரு இனிமையான சத்தம். 

"அர்ச்சனாவை அழைக்கிறேன், சரி.. உங்க அம்மாவை எனக்கு அறிமுகப்படுத்தமாட்டாயா? அவங்க கிட்ட கொடும்மா ஜயந்தி!" 

"ஐயோ.. அம்மாவும் அப்பாவும் ஒரே சண்டை என்றும் போல் இன்றும்.." என்று ஒரு கவலையுமின்றி ஜயந்தி சாதாரணமாக சொன்னதை கேட்டு ஏனோ எனது மனதில் நிறைந்தது, கவலையின் இருண்ட மேகங்கள்.

இந்த நல்ல மனிதருக்கா!?

நல்ல பெண்ணுக்கு நல்ல ஒருவன் கணவனாக அமைவதும், நல்லவனுக்கு அன்பான மனைவி அமைவதும் மிகவும் அபூர்வம் என்றே தோன்றுகிறது. வித்தியசமான இருவரை இணைக்க இறைவன் ஆசைப்படுகிறாரோ? சரிப்படவில்லை என்றால் எவ்வளவு காலம் தான் தாம்பத்திய நாடகம் தொடர முடியும்? இருப்பினும் தற்கொலையை விட விவாகரத்து மேல்! 

அது சரி தான் என்றாலும், சமூகத்தில் விவாகரத்துக்கு பின்னர் நேரிட வேண்டின கொடுமையைப் பட்டியலிட்டால், அதை பத்து நாளானால் கூட சொல்லித் தீர்க்க முடியாது. விதவை என்றால் கூட ஓர் அனுதாபமாவது கிடைத்திருக்கும். என் தாய் தந்தையரின் தாம்பத்தியத்தில், ஆரம்பம் முதல், அவர்கள் வாழ்ந்த காலத்தின் முடிவு வரை, அவர்களில் இருந்த உண்மையான அன்பும் மனம் கனிந்த மன்னிப்பும் எவ்வளவு சிறப்பானது!

ஆண்களுக்கு ஆதரவாக இயற்கையும் இருக்கிறதே! 

பெண்களுக்கென்ற கஷ்டங்கள் இனி இல்லை என்ற காலத்தில் இந்த பூமி சுற்றுவதை அதிர்ச்சியுடன் ஒருவேளை நிறுத்திவிடுக்கூடும்.

இல்லை... இல்லை..! எனது முடிவில் தவறில்லை, பத்து வருடங்களுக்கு முன்னர் நான் எடுத்த விவாகரத்து முடிவு சரி தான்! 

எங்கிருந்து எனக்கு தைரியம் வந்ததோ... அன்று காலை நேரடியாக ரமேஷைக் காண அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன். 

"உங்களிடம் பேச வேண்டும்" என்றேன். 

என் கதையை கவலையோடு... அதிர்ச்சி, அனுதாபப் பார்வை ஏதுமில்லாமலும் பொறுமையுடன் கேட்டார்.

"ஏன் ஜயந்தியின் அம்மா, அது தான் உங்கள் மனைவி, தினமும் உங்களோடு சண்டை" என்ற கேள்வியை நான் கேட்டு முடிவதற்குள், "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாரங்கள், கவலைகள்" என்றார் ரமேஷ். 

அவர் மனதின் கவலையை அழிக்க முயறிசித்தது அவரின் புன்னகை.

"மற்றவர்களை தனது அதிகாரத்தால் மிரட்டி அடக்கியாளும் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை நான் திருமணத்துக்கு தேர்வு செய்தது, இல்லையில்லை... அவர்களின் தேர்ந்தெடுப்புக்கு எனது விருப்பம் தெரிவித்தது எனது தவறு தானே? வருடங்கள் இருபது முடிந்தும் மாற்றங்கள் ஏதுமில்லை. எப்படி வரும்? என் மனைவி வளர்ந்த சூழ்நிலைக்கேற்றபடி அவர்கள் உள்ளார்கள், அவ்வளவு தான்! ஆப்பிளின் விதை விதைத்தால் மாங்கனி கிடைக்காதே? ஏதோ ஒரு விபத்தில் கிடைத்த பாக்கியமாக எங்களுக்கு ஜயந்தி! 

இத்தனை வருடங்களில் இதெல்லாம் பழகிப்போயிற்று. நான் ஒரு சுதந்திரனாக இருப்பதும் தவறு தான் போலுள்ளது. கோடி ரூபாய் கொடுத்தால் கூட ஓர் அடிமையின் வேடமிட்டு நடிக்க என் மனம் சம்மதிக்காது. ஆனால், வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவனுக்கு மன நிம்மதி நிச்சயம் இருக்காது என்று தான் நினைக்கிறேன். எனக்கு மனநிம்மதி இல்லை என்பதை இனி எத்தனை காலம் தான் மறைத்து இப்படி சிரிப்பது என்றும் புரியவில்லை." என்று ரமேஷ் சொல்ல... 

நான்... "எல்லாவற்றுக்கும் ஆண்களை திட்டித் தள்ளும் அர்த்தமற்ற ஓர் பெண்ணியத்தில் எனக்கு ஈடுபாடில்லை. ஆண்களும் பெண்களும் சேர்ந்தது தானே இந்த உலகம்? நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கு தான் இல்லை? சரி, நல்லவர்கள் - கெட்டவர்கள் என்ற இந்த தலைப்பிற்கே எத்தனை முரண்பாடுகள்? இதற்கு என்ன அடிப்படைகள்? 

ஒரு மனிதனை, அவனுடைய செயல்களை சரி என்றும் தவறென்றும் தீர்மானிப்பது ஒவ்வொரு சமூகத்தின் வித்தியாசமான கட்டமைப்புகளும், மரபுகளும், சூழ்நிலைகளும் தான் எனினினும், பொதுவாக எனது சமூகத்தைப் பார்த்து நான் என்ன சொல்வேன் என்னெவென்றால், ஓரளவுக்கு மனிதமும் புரிதலும் இருப்பின் நல்லவன் அல்லது நல்லவள் என்ற அந்தஸ்தை கொடுக்கலாம். 

சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் வழியே பெண்கள் ஆண்களை வேட்டையாடுவது நிறுத்த வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இப்படி இவர்கள் செய்வது தவறு தான். ஆனால், இது போன்ற சட்டங்கள் கூட இல்லை என்றால் பெண்களின் நிலை?! 

அடிமைப்படுத்தும் மனநிலையோடு வாழும் கணவனும் மனைவியும் குற்றவாளிகளே. இருப்பினும் அதிகமாக பாதிப்பது பெண்கள் தான் என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் சட்டம் பெண்களுக்கு மட்டுமே அதிகமும் சாதகமாக இருப்பதும் என்னை யோசிக்க வைக்கிறது" - என்றேன். 

ரமேஷுக்கு என்னையும் எனது கருத்துக்களையும் பிடித்திருந்தது என்று புரிந்தது.

"ரமேஷ், இன்று மாலை என் வீட்டுக்கு வாங்க," என்று அழைத்தேன்.   அப்படி அழைக்க எனக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ...?

மல்லிகை பூக்களோடும் மகளுக்கு இனிப்புகளோடும் அன்று மாலையில் என் வீட்டுக்கு வந்தார் ரமேஷ். 

"வாங்க" எனறு புன்னகை வணக்கமிட்டு வரவேற்றேன். 

பெண் பார்க்க வரும் ஒருவரின் வெட்கம் போலெல்லாம் விவேகமற்ற சிந்தனையொன்று அவருக்கும் இல்லை, எனக்கும் இல்லை. சகஜமாக அருகருகே அமர்ந்தோம். 

பேசினோம். பேசினோம், பேசிக்கொண்டே இருந்தோம். 

டியூஷன் முடித்த பின்னர் எங்களோடு சேர்ந்து அர்ச்சனாவும் பேசிக்கொண்டிருந்தாள். 

"பிறகு சந்திப்போம்," என்று சொல்லி புறப்பட்டார் ரமேஷ்!

"தன்னை நேசிக்க ஓர் அன்பு மனம்; சென்று சேர ஓர் அன்பின் இல்லம்; கொஞ்சம் ஆசைகள்... இவைகள் இருப்பின் நான் வாழ்ந்திருப்பேன்"  என்றெழுதி இறந்துபோனார் ஓர் எழுத்தாளர் என்று காலையில் வாசித்த செய்தி ஞாபகத்திற்கு வந்தது. 

அந்த எழுத்தாளர் எவ்வளவு முட்டாளென்று அன்றிரவு நினைக்கையில் நான் வானத்தை பார்த்தேன். இரண்டு நட்சத்திரங்கள் அருகருகே இருந்தது.  அந்த இனிய காட்சியைக் கண்டதும்...

எனக்கு உன்னைத் தெரியாது
உனக்கு என்னையும் - ஆனால்
நமது கவலைகள் தங்கள் வலிகளை
நட்சத்திரங்களாய் அதோ
பகிர்ந்து கொண்டிருக்கின்றன... 

என்று காகிதம் ஒன்றில் நான் எழுதினதை, இல்லை - கிறுக்கினதை ரமேஷின் பார்வைக்கு நாளை மாலையில் சமர்ப்பணம் செய்ய காத்திருந்தது விடியலுக்கு காத்திருந்த பறவையைப் போல் என்னுள்ளம்!

சதை சார்ந்த ஈர்ப்பு அல்ல. மனம் சார்ந்த நேசம், நட்பு தான் எனினும் ரமேஷின் வீட்டுக்கு நான் ஏன் செல்ல தயங்குகிறேன்? ரமேஷ் என் வீடு வர நான் ஏன் எதிர்பார்க்கிறேன்? ஜயந்தியின் அம்மா எனது சுதந்திரத்துக்கு தடையா? அல்லது அவர்களுடைய வாழ்க்கையின் சுதந்திரத்துக்கு நான் தான் தடையா? ஒரு பெண்ணின் சுதந்திரத்துக்கு அதிகமும் தடை இன்னொரு பெண் தானோ? அல்லது அவளே தானோ? என்னிலிருந்து என் சமுதாயம் துவங்கிட நான் மாறாமல் இந்த சமூகத்தை சாடுவதில் என்ன பயன்? விடைகளைத் தேடி எனது வாழ்க்கையில் தான் இப்படி எத்தனை கேள்விகள்!

அத்தனைக் கேள்விகளும் என்னை சுற்றியிருக்க, ஓடி என்னருகே வந்து அர்ச்சனா சொன்னாள், "அம்மா, நாளை கல்லூரியில் ஒரு பேச்சுப்போட்டி...

ARUNAGIRNATHAR HD

Emotions Of Fingers: 'Art on Fingers'























கௌரவம்


கௌரவம்

Posted by: என். சொக்கன் 
ஜெயநகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கையேந்தி பவன். ஏகப்பட்ட கூட்டம்.காரில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுகிறவர்கள் அதிசயம் இல்லை. நான் ஆச்சர்யப்பட்டது, ஒரு ஸ்கூட்டரைப் பார்த்து.
சாதாரண ஸ்கூட்டர் இல்லை, செக்கச்செவேல் பின்னணியில் கொட்டை எழுத்தில் ‘பிட்ஸா கார்னர்’ என்று எழுதிய ஸ்கூட்டர். அதன்மேல் உட்கார்ந்திருந்தவனும் அதே வண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருந்தான். அலுமினியத் தட்டில் வாழை இலைத் துணுக்கை வைத்து சுவாரஸ்யமாக தோசையை மொசுக்கிக்கொண்டிருந்தான்.
அந்தப் பையனின் மாதச் சம்பளத்துக்குக் கையேந்தி பவன்தான் கட்டுப்படியாகும் என்பது புரிகிறது. ஆனால், ’பிட்ஸா கார்னர்’ டெலிவரி வண்டி கையேந்தி பவன் வாசலில் நின்றால், பிராண்ட் இமேஜ் கெட்டுப்போகாதோ? சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டுப் பத்தடி நடந்துவந்து சாப்பிடலாமே.
இப்படி யோசித்தபோது, திடீரென்று கேரளா ஞாபகம்.
அப்போது நாங்கள் கோட்டயத்தில் ‘மலையாள மனோரமா’ நிறுவனத்தின் இணைய தளத்தை வடிவமைக்கச் சென்றிருந்தோம். அங்கேயே ஒன்றிரண்டு வாரங்கள் தங்கி, பல்வேறு பிரிவினருடன் பேசி, அவர்களுடைய தேவைகளைப் பதிவு செய்யவேண்டியிருந்தது.
இடையில் ஒரு சனி, ஞாயிறு. ’சும்மா கெஸ்ட் ஹவுஸ்ல போரடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டாம், ஜாலியா ஒரு பிக்னிக் போய்ட்டு வாங்க’ என்று அவர்களே ஒரு காரை டிரைவருடன் அனுப்பிவைத்திருந்தார்கள்.
டிரைவருக்கு நடுத்தர வயது, அவருடைய வெள்ளை வெளேர் யூனிஃபார்ம்போலவே வண்டியும். முதுகுக் கண்ணாடியில் கொட்டை எழுத்தில் ‘மலையாள மனோரமா’ என்று எழுதியிருந்தது.
அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். கேரளாவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசுமை, கூடவே லேசான மழையும். சும்மா வண்டி ஓட்டிக்கொண்டு சாலையில் போவதே பிக்னிக்மாதிரிதான் இருந்தது.
என்னுடன் வந்திருந்த நண்பர்கள் இருவருக்கும், ’கேரளாவில் கள் விசேஷம்’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள்போல, அது எங்கே கிடைக்கும் என்று டிரைவரிடம் அசடு வழிய விசாரித்தார்கள்.
அந்த டிரைவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ‘நானே கூட்டிட்டுப் போறேன் சார்’ என்று காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டார், ‘இறங்குங்க’
‘ஏன்? கார் அங்கே போகாதா?’
‘போகும் ஸார், ஆனா, மலையாள மனோரமா வண்டி கள்ளுக்கடை முன்னாடி நிக்கக்கூடாது’ என்றார் அவர்.
***
என். சொக்கன் …

முப்பது செகண்ட் யுத்தம்


முப்பது செகண்ட் யுத்தம்

Posted by: என். சொக்கன் 
பிரதான சாலையிலிருந்து எங்கள் வீடு முன்னூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இதில் முதல் நூறு மீட்டர் பிரமாதமான தார்ச் சாலை. பின்னர் ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கினால் அதைவிடப் பிரமாதமான சிமென்ட் சாலை.
இந்த சிமென்ட் பாதையில் சுமார் ஐம்பது மீட்டர் நடந்தபிறகுதான், பிரச்னை தொடங்கும்.
பிரச்னை இல்லை, பிரச்னைகள்.
எங்கள் ஏரியாவில் குறைந்தபட்சம் நூற்றைம்பது நாய்கள் இருப்பதாக நான் ஒரு மனக் கணக்கு வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லா நிறத்திலும், எல்லா உயரத்திலும், எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்கமுடியும்.
பகல் நேரங்களில் இந்த நாய்கள் எங்கே போய் ஒளிந்துகொள்கின்றன என்று தெரியவில்லை. ராத்திரி ஒன்பதே முக்கால் மணிக்குமேல்தான் இவை பகிரங்கமாகத் தெருக்களில் திரியத் தொடங்கும்.
வெறுமனே திரிந்தால் ‘பருவாயில்லே’. போகிற, வருகிறவர்களைப் பார்த்துக் கோரப் பல் தெரிய உறுமினால்?
எனக்கு நாய் என்றால் ரொம்பப் பயம். சின்ன வயதிலிருந்து ஒரு நாய்க் குட்டியைக்கூட நான் தொட்டுப் பார்த்தது கிடையாது. நடுங்கிப்போய் ஓரமாக நின்றுவிடுவேன்.
ஹைதராபாதில் நான் வேலை செய்யத் தொடங்கிய காலத்தில், தெருநாய்ப் பிரச்னை அளவுக்கு அதிகமாக இருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரம், ஒரு ஏழு வயதுப் பையனை முப்பது வெறிநாய்கள் சூழ்ந்து கடித்துக் கொன்று தின்றுவிட்டன என்று பத்திரிகையில் செய்தி படித்துப் பதறினோம்.
அதன்பிறகு, நாங்கள் தெருவில் கவனமாக நடக்கத் தொடங்கினோம். ’நாயைக் கண்டால் தூர விலகு’ எனும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தோம்.
ஹைதராபாதில் நாங்கள் குடியிருந்த ஏரியாவின் மிகப் பெரிய குப்பைத் தொட்டி எங்கள் தெருவில்தான் இருந்தது. அதைக் கிளறி அகப்படுவதைத் தின்பதற்காகவே ஏகப்பட்ட நாய்கள் அங்கே சுற்றிக்கொண்டிருந்தன.
நல்லவேளையாக, அந்த நாய்களுக்குக் குப்பைத் தொட்டியிலேயே நல்ல தீனி தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆகவே அவை எங்களைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை.
பின்னர் பெங்களூர் வந்தபிறகு, நண்பர்களுடன் ஓர் அடுக்ககத்தில் தங்கியிருந்தேன். அங்கே கீழ் வீட்டில் ஒரு முரட்டு நாய் இருந்தது.
அந்த நாய் பார்ப்பதற்கு ஒரு பெரிய சைஸ் கன்றுக்குட்டிபோல் ஆஜானுபாகுவாக இருக்கும். எந்நேரமும் வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதால் அதன் பற்கள் ஒவ்வொன்றும் குட்டிக் குட்டிக் கத்திகள்போல பயமுறுத்தும்.
இத்தனைக்கும், அந்த நாயை அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகக் கட்டிப்போட்டுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும், மனோகரா படத்தில் வருவதுபோல் சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து கடித்துவிடுமோ என்று எனக்குப் பயம்.
சரி, அந்த நாய் இருக்கும் திசைக்கே போகவேண்டாம் என்று ஒதுங்கவும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், எங்கள் அடுக்ககத்தில் தபால் பெட்டி அந்த நாய் கட்டப்பட்டிருந்த தூணுக்கு மிக அருகே இருந்தது.
அப்போதுதான் நான் பத்திரிகைகளுக்கு நிறைய எழுதத் தொடங்கியிருந்த நேரம். தினந்தோறும் ஏதாவது ஒரு கதை நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வரும், பதினைந்து நாளைக்கு ஒருமுறை ஏதாவது கதை ஏற்கப்பட்டு இலவசப் பிரதி வரும், அதையெல்லாம் பார்த்து மனம் உடைவதற்கு அல்லது மகிழ்ச்சி அடைவதற்கு அந்தத் தபால் பெட்டிதான் எனக்கு ஆதாரம்.
இதனால், வேறு வழியில்லாமல் தினந்தோறும் பயந்து பயந்து அந்தப் பெட்டியை நெருங்குவேன். சத்தம் போடாமல் அதனைத் திறக்க முயற்சி செய்வேன்.
உங்களுக்கே தெரியும். உலகத்தில் எந்தத் தகரப் பெட்டியும் சத்தம் போடாமல் திறக்காது. நீங்கள் அதை எண்ணெயிலேயே குளிப்பாட்டினாலும் ஒரு சின்ன ‘க்ரீச்’சாவது வந்தே தீரும்.
ஆகவே ஒவ்வொருமுறையும் நான் அந்த நாயிடம் தவறாமல் மாட்டிக்கொள்வேன். அது தூணருகே நின்றபடி என்னைப் பார்த்துக் கண்டபடி குரைக்கும், பயமுறுத்தும்.
அப்போது நான் பயந்து நடுங்குவதை யாரேனும் பார்த்தால், அந்த அபார்ட்மென்டில் திருட வந்தவன், நாயிடம் மாட்டிக்கொண்டுவிட்டேன் என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு அந்த நாய் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தது.
ஏதோ என்னால் முடிந்தது, வேறு வீட்டுக்கு மாறியபிறகு அந்த நாயைப்பற்றி ஒரு சிறுகதை எழுதினேன். அதைக் குங்குமத்தில் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்துடன் அழகாகப் பிரசுரித்தார்கள்.
பெங்களூரில் நான் இரண்டாவதாகக் குடியேறிய வீட்டுப் பக்கம் நாய்த் தொந்தரவு இல்லை. மூன்றாவதாகச் சொந்த வீடு வாங்கிக்கொண்டு இடம் மாறியபோது, மறுபடியும் நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.
வழக்கமாக நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் இரவு ஏழு, ஏழே கால். அதற்குமேல் ஏதாவது முக்கிய வேலை வந்தால் பிரச்னையில்லை. வீட்டில் இணையம் இருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம்.
என்றைக்காவது அபூர்வமாக, ஒன்பதரை, பத்து மணிவரை அலுவலகத்தில் தங்க நேர்ந்துவிடும். அப்போதுதான் இந்த நாய்களின் பிரச்னை பூதாகரமாகிவிடும்.
ஒன்பதே முக்கால் மணியளவில் எங்கள் தெருவை ஆக்கிரமிக்கத் தொடங்கும் நாய்கள், அதன்பிறகு இரு திசைகளிலும் யாரும் அவைகளைக் கடந்து செல்வதை விரும்புவதில்லை. ஒரு முரட்டுத்தனமான உறுமலின்மூலம் அவை தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும்.
அதுபோன்ற தருணங்களில் நான் சற்றுத் தொலைவிலேயே தயங்கி நின்றுவிடுவேன். மேற்கொண்டு நடக்கலாமா, வேண்டாமா?
குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்வார்கள். அது நிஜமா, அல்லது சும்மா புருடாவா? எனக்கு இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகவே தைரியமாகத் தொடர்ந்து நடக்கும் துணிச்சல் வரவே வராது.
ஒருவேளை ஏதேனும் ஒரு நாய் என்னைக் கடிக்க வந்தால்? என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? சிமென்ட் ரோட்டில் கல்கூட இருக்காதே? எதை எடுத்து அந்த நாயை அடிப்பது?
என் தோளில் லாப்டாப் பை இருக்கிறது. லாப்டாப் 3 கிலோ, மற்ற புத்தகங்கள், நோட்டுகள் எல்லாம் சேர்ந்து இன்னொரு 2 கிலோ, ஆக மொத்தம் 5 கிலோ கனம் கொண்ட பையினால் நாயைத் தாக்கினால்? அது சுருண்டு விழுந்துவிடாதா?
விழும் என்று ஒரு மனது சொல்லும், இன்னொரு மனது, ‘நாய் கடிக்க வரும்போது நீ தோளில் இருந்து பையை எடுக்கக்கூட நேரம் இருக்காது’ என்று சிரிக்கும். அல்லது, ‘நீயாவது நாயைத் தாக்குவதாவது? போடா சர்த்தான்’ என்று கேலி செய்யும்.
இப்படியாக, நான் எனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு வேறு வழிகளில் யோசிக்கத் தொடங்குவேன். வீட்டுக்கு ஃபோன் செய்து, எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனைக் கையில் தடியுடன் வரச் சொல்லலாமா?
இதைவிட அபத்தமான ஒரு யோசனை இருக்கவே முடியாது. ஏனெனில், நான் நாய்க்குப் பயப்படுகிறேன் என்று தெரிந்தால் என் மனைவி விழுந்து விழுந்து சிரிப்பாரேதவிர வாட்ச்மேனையெல்லாம் அனுப்பிவைக்கவே மாட்டார்.
சரி, இந்த வம்பே வேண்டாம், திரும்பி நடந்து ரோட்டுக்குச் சென்று ஓர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விடலாமா?
இதுவும் சொதப்பல் யோசனைதான். கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த ஆட்டோக்காரர் வருவார்? அப்படியே வந்தாலும் ஐம்பது, நூறு என்று பிடுங்கிவிடமாட்டாரா?
இவ்வளவு வம்பு எதற்கு? தினமும் அலுவலகத்துக்கு பைக்கில் போய்விட்டால் என்ன?
அதுவும் சரிப்படாது. எங்கள் அலுவலகம் வீட்டிலிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரம். நடந்து சென்றால் ஐந்து அல்லது ஆறு நிமிடம், பைக்கில் சென்றால், போக்குவரத்து நெரிசலைத் தாண்டி எங்கேயோ யு டர்ன் எடுத்துத் திரும்பி வருவதற்குக் குறைந்தபட்சம் இருபது நிமிடம் ஆகும்.
சரி, தினமும் வேண்டாம். மாலை வீடு திரும்பத் தாமதமாகும் என்று தெரிந்தால், அன்றைக்குமட்டும் பைக் எடுத்துச் செல்லலாம் இல்லையா?
என்ன விளையாடுகிறீர்களா? இந்தத் துறையில் எப்போது திடீர் வேலை வரும், எப்போது வேலையில்லாமல் உட்கார்ந்து ப்ளாக் எழுதிக்கொண்டிருப்போம் என்று யாரால் சொல்லமுடியும்?
ஆக, என்னுடைய நாய்ப் பிரச்னைக்கு என்னதான் வழி?
ஜஸ்ட் நூற்றுச் சொச்ச மீட்டர்கள்தானே? மிரட்டும் நாய்களைக் கண்டுகொள்ளாமல் வீடு நோக்கி ஓடலாமா?
சுஜாதாவின் ஒரு நாவல் தலைப்பு: ‘பத்து செகண்ட் முத்தம்’. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தைப் பத்து விநாடிகளில் முடிக்கும் வெறியைப்பற்றிய கதை அது.
பத்து செகண்டில் முடியாவிட்டாலும், இந்த தூரத்தை என்னால் முப்பது அல்லது நாற்பது செகண்டில் ஓடிக் கடந்துவிடமுடியாதா? ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன?
நான் சந்தேகமாக அந்த நாயை(அல்லது நாய்களை)ப் பார்க்கிறேன். இது என்னைத் துரத்துமா? நூறு மீட்டரை இந்த நாய் எத்தனை விநாடிகளில் கடக்கும்? மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கிறது.
இப்படி யோசித்து யோசித்தே பத்து நிமிடம் கடந்துவிட்டது. இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நின்றுகொண்டிருப்பது? இந்த நாய்கள் தூங்கும்வரையா? பொதுவாக நாய்கள் ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்கும்? தேடுவதற்கு இங்கே கூகுள், விக்கிபீடியாகூட இல்லையே!
நான் முன்னே, பின்னே திரும்பிப் பார்க்கிறேன். தெரு முழுக்க வெறிச்சோடிக் கிடக்கிறது. துணிந்து நடக்கலாமா, வேண்டாமா? நாய்களுடன் யுத்தம் நடத்துவதைவிட, திரும்பிப் போய் ஆஃபீசிலேயே ராத்தூக்கத்தை முடித்துக்கொள்வது உத்தமம் என்று தோன்றுகிறது.
ஐந்து நிமிடம் கழித்து, இரண்டு பேர் பீடி வலித்தபடி நடந்து வருகிறார்கள். எனக்கு நிம்மதி திரும்புகிறது.
அவர்களும் நான் நடந்த அதே ரோட்டில்தான் நடக்கிறார்கள். ஆனால் நாய்களின் உறுமலைப் பொருட்படுத்துவதில்லை. பேசிக்கொண்டே அவற்றைச் சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள். அந்தத் தைரியமான வீரர்களின் நிழல்போல ஒட்டியபடி நான் பின்னாலேயே போகிறேன்.
ஒருவழியாக, நேற்றைய பிரச்னை முடிந்தது. இனி அடுத்தமுறை அலுவலகத்தில் தாமதமாக வேலை செய்ய நேரும்வரை கவலை இல்லை.
அப்போதும், என்னை நாய்களிடமிருந்து காப்பாற்ற யாராவது வருவார்கள். கடவுள் கருணையுள்ளவன்!
  • **
என். சொக்கன் …

ஆடை விளையாட்டு


ஆடை விளையாட்டு

Posted by: என். சொக்கன்

    ’அலை பாயுதே’வில் எல்லோருக்கும் பிடித்த ‘ரகசிய சிநேகிதனே’ பாட்டில் வைரமுத்து எழுதிய ஒரு வரி:
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
இந்தப் படம் வந்த அதே நேரத்தில் (அல்லது சில மாதங்கள் முன் பின்னாக) ‘மின்னலே’ என்ற  படத்தின் ஒலிநாடா வெளியானது. அதில் ஹாரிஸ் ஜெயராஜ் என்ற புதுமுகம் ‘தாமரை’யின் பாடல் வரிகளுக்கு இசையமைத்திருந்தார். அதிலும் ‘ரகசிய சிநேகிதனே’போல் ஒரு female-solo பாட்டு, ‘வசீகரா’ என்று தொடங்கிய அந்தப் பாடலிலும் இதேமாதிரி ஒரு வரி:
சில சமயம்,
விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
இதைக் கேட்டபோது ’வைரமுத்து, தாமரை இருவரில் யார் யாரைப்  பார்த்துக் காப்பி அடித்தார்கள்?’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். விளையாட்டாகதான்.
பல வருடம் கழித்து, இன்றைய #365paa வரிசைப் பாடலுக்காகப் ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள ‘பட்டினப் பாலை’யை முழுமையாகப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு பகுதி:
துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்து,
மட்டு நீக்கி மது மகிழ்ந்து,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்…
’பாலை’த் திணையின் இலக்கணம், பிரிதலும் பிரிதல் நிமித்தமும். ஆனால் தலைப்பிலேயே ‘பாலை’யை வைத்திருக்கும் ஒரு புத்தகத்தில் இப்படி ஒரு ‘குறிஞ்சி’க் காட்சியா என்று ஆச்சர்யமானேன். இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று என்னிடம் உள்ள உரைகளைப் புரட்டிப் பார்த்தபோது பல சுவாரஸ்யமான அலசல்கள் கிடைத்தன.
முதலில், கடைசி 2 வரிகள். மைந்தர் கண்ணி, அதாவது ஆண் கழுத்தில் உள்ள மாலையை, மகளிர் சூடவும், மகளிர் கோதை, அதாவது பெண் கழுத்தில் உள்ள மாலையை மைந்தர் சூடவும்… பள்ளியறைக்குள் மாலை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு. ஓகே.
அதற்கு முந்தைய வரி, ‘மட்டு நீக்கி மது மகிழ்ந்து’, இந்த வரிக்கும் பலவிதமான விளக்கங்கள் கிடைத்தன, அதில் மிகச் சுவாரஸ்யமானது என்று பார்த்தால் ‘கள் அருந்துவதை விடுத்து, காதல் இன்பத்தைச் சுவைத்தார்கள்’. இதுவும் ஓகே.
இப்போது முக்கியமான வரி, ‘பட்டு நீக்கித் துகில் உடுத்து’. இதற்கும் இரண்டுவிதமான விளக்கங்களைச் சொல்கிறார்கள்:
  • பெண்கள் பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, துகில் – மென்மையான பருத்தி ஆடையை அணிகிறார்கள் – சங்க கால Lingerie? Smile
  • பெண்கள் தங்களுடைய பட்டாடையைக் கழற்றிவிட்டு, விளையாட்டாகத் தங்களுடைய கணவரின் ஆடை (துகில்) அணிகிறார்கள் – அணிந்திருந்த மாலைகளை மாற்றிக்கொண்டதைப்போலவே
ஆக, ரகசிய சிநேகிதனையும் வசீகரனையும் பாடிய பெண்களுக்கு முன்னோடிகள் சங்க காலத்தில் இருக்கிறார்கள்!
இதைப் படித்தபோது கவிஞர் வாலி தனது சுயசரிதையாகிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இணையத்தில் அதைத் தேடிப் பிடித்தேன் (fromhttp://www.tfmpage.com/ppp/)
ஒரு சமயம், தாதாமிராசி இயக்கி எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையமைத்த ஒரு படத்தில் நான் ஒரு பாடலின் பல்லவியை நான் இப்படி எழுதினேன்:
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்
தூக்கமும் சாந்தமும் – நானாவேன்!
நான் எழுதிய இந்தப் பாடலுக்கு திரு. எஸ்.எம்.எஸ் அவர்கள் மிகச் சிறப்பாக இசையமைத்து விட்டார்கள். பாடல் ஓரிரு நாளில் ஒலிப்பதிவாக இருந்தது. அப்போது தாதாமிராசியின் உதவி டைரக்டர் ஒருவர் வந்து, எங்களிடம் -
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே! – அந்தத்
தூக்கமும் அமைதியும் – நானானால்..
என்று ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி “ஆலயமணி” படத்திற்காகப் போன வாரம் ஒலிப்பதிவாயிருக்கிறது என்று சொன்னார்.
இந்தச் செய்தியைக் கேட்டு நான் வியக்கவில்லை. ஆனால் தாதாமிராசி வியந்து போய் என்னிடம் “மிஸ்டர் வாலி! Great men think alike!.. உங்களுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரே மாதிரி கற்பனை உருவாகியிருக்கு. அவர் சொன்ன நினைத்ததை நீங்களும் நென்ச்ச்சிருக்கீங்க..இதுக்குப் பேர்தான் டெலிபதி!” என்றார்.
உடனே நான் அவரிடம் “சார்! இதுக்குக் காரணம் டெலிபதி இல்ல..அம்பிகாபதி” என்றேன். அவருக்குப் புரியும் படியாக விளக்கினேன்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில், நிலவொளியில் அமராவதியின் உப்பரிகைக்குக் கீழே நின்று கொண்டு அமராவதி
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்!
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்!…ஆஹா!
அந்தத் தூக்கமும் சாந்தமும் – நானானால்!
என்று தனக்குத் தானே விரகதாபத்தோடு பேசி பெருமூச்சு விடுவான். இது அந்தப் படத்திற்காக திரு. இளங்கோவன் எழுதிய வசனம். இந்த வசனம் கூட இளங்கோவனின் மொழிபெயர்ப்புத்தான். ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் வருகின்ற வசனத்தின் தமிழாக்கமே இது.
நானும் கண்ணதாசனும் சந்தர்ப்பம் வரும் போது இந்த வசனத்தை உபயோகிக்க முயற்சித்திருக்கோம்; அவ்வளவுதான்! மற்றபடி நாங்கள் இருவரும் எழுத நேர்ந்ததுக்குக் காரணம், டெலிபதி அல்ல; அம்பிகாபதிதான்.
***
என். சொக்கன் …