Search This Blog

Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Sunday, November 4, 2018

Women’s empowerment to Vote

The women’s suffrage movement was a decades-long fight to win the right to vote for women in the United States. It took activists and reformers nearly 100 years to win that right, and the campaign was not easy: Disagreements over strategy threatened to cripple the movement more than once. But on August 26, 1920, the 19th Amendment to the Constitution was finally ratified, enfranchising all American women and declaring for the first time that they, like men, deserve all the rights and responsibilities of citizenship.


Starting in 1910, some states in the West began to extend the vote to women for the first time in almost 20 years. Idaho and Utah had given women the right to vote at the end of the 19th century.
Still, southern and eastern states resisted. In 1916, NAWSA president Carrie Chapman Catt unveiled what she called a “Winning Plan” to get the vote at last: a blitz campaign that mobilized state and local suffrage organizations all over the country, with special focus on those recalcitrant regions.
Meanwhile, a splinter group called the National Women’s Party focused on more radical, militant tactics—hunger strikes and White House pickets, for instance—aimed at winning dramatic publicity for their cause.
World War I slowed the suffragists’ campaign but helped them advance their argument nonetheless: Women’s work on behalf of the war effort, activists pointed out, proved that they were just as patriotic and deserving of citizenship as men.
Finally, on August 26, 1920, the 19th Amendment to the Constitution was ratified. And on November 2 of that year, more than 8 million women across the United States voted in elections for the first time.


Friday, October 26, 2018

Indian Freedom is written on Muslim's blood

Famous Writer Mr. Kushwant Singh Says; 

“Indian Freedom is written on Muslim's blood, their participation on freedom struggle were much more than their percentage” There are 95300 freedom fighters names are written in India Gate, Delhi out of that 61945 are Muslims with means 65% freedom fighters are Muslims. Muslims sacrifices for Indian freedom struggle were purposely hidden. 
We brought you few from Indian History for your knowledge! There are tons like this; Every Indian should know this; and teach our children the truth! Please read full and forward to Every Indian you know..... In fact first freedom struggle were by Hyder Ali, and his son Tipu Sultan on 1780s and 1790s Mysorean rockets were the first iron-cased rockets, successfully deployed for military use. Hyder Ali, and his son Tipu Sultan, used rockets and cannons effectively against the British invaders during the 1780s and 1790s. Every one knows Rani Janshi was fought to get kingdom for her adopted child; but how many of us knows Begum Hazrat Mahal; The unsung heroine of the first war of Independence, *She shot the British ruler Sir.Henry Lawrence and defeat British army in a decisive Battle at Chinhat on June 30, 1857. Do you know; Organizer and leader on “First Indian freedom struggle” was Moulavi Ahamadullah Shah. on the war many were killed among them 90% were Muslims! Ashfaqulla Khan was hanged first in a conspiracy against the British Raj on his 27 age Maulana Abul Kalam Azad was an Indian scholar and the senior Muslim leader of the Indian National Congress during the Indian independence movement. On Picketing of liquor shops struggle by Mahatma Gandhi, 10 of them were Muslims out of 19 participant! Last Mogul Emperor Badur Shah was who first strongly fought for Indian freedom which lead to 1857 indepence struggle Rajiv Gandhi wrote Bahadur Shah’s grave: “Although you (Bahadur Shah) do not have land in India, you have it here, your name is alive… I pay homage to the memory of the symbol and rallying point of India’s first war of independence….” M.K.M Ameer Hamza, donated multi million rupees for Indian National Army (INA), he head of Azad library reading propaganda of INA, now living poor in a rented house at Ramanadhapuram Tamil Nadu. Memon Abdul Habeeb Yusuf Marfani, donated almost his entire fortune of Rs 1 crore to the Indian National Army, a princely sum in those days by emptying his entire asset! to Netaji’s INA. Shah Nawaz Khan was an soldier, politician, Chief officer and commander, in the Indian National Army (INA), Netaji's ministry had 19 ministers 5 of them were Muslims Mother Beevimma; a Muslim lady donated over 30 lakhs rupees for Indian freedom struggle. Abul Kalam Azad, Jinnah, Nawab of Bihar are the three who made the plan of receiving independence how! Suraiya thiyabji (a Muslim lady) designed current Indian National Flag No one used holy places for freedom war but Muslims. Muslims used the Masjid for freedom struggle; when Imam was addressing about Indian freedom in Holy Masjid, Utar Pradesh, British Army shot all the Muslims in the Masjid; still you see the dried blood shed of the freedom fighters. Muslims ruled India over 800 years; they didn't steal anything from India as British, Dutch, French did; *Muslims lived there ruled there died there they developed India a civilized country; with tons of knowledge in literature, Architecture, judicial and political structure, government body and management structure, still India uses their management strategy! Tamil Nadu: Ismael Shaheb, Maruda Nayagam, fought against British for 7 continuous year made British a hell fear We all know V.O.C (kapalotiya Tamilzhan) The first Sailor sailed aginst West Indian Company on Indian freedom war; how many of know that Fakkir Muhammed Rawther, was the one who donated the ship!. When VOC was arrested; Muhammed Yaseen has been shot dead by British police on the demonstration to release VOC. Tiruppur Kumaran (“Kodi kata kumaran”) who participated in the Indian independence movement; With Kumaran 7 other participant were arrested; all were Muslims, Abdul Latheef, Akbar Ali, Mohideen Khan, Abdul Rahim, Vavu Shaheb, Abdul latheef and Sheikh baba shaheb <we can write books with 1000s of page on Muslim's sacrifice to Indian Freedom, unfortunately racist hindu dominations on History has hidden these truth and not tought in Indian History book

Thursday, October 25, 2018

ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!


பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன்.
நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை. கீழே வாசித்து பாருங்கள்.
* அவர்களுக்கு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பெருந்தோட்டங்களில் சுமார் 9.5 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

* கம்பனி உரிமையாளர்கள், தோட்ட உயர் அதிகாரிகள், தேயிலை ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களின் வீடுகளையும் தொழிலாளர்களுடைய வீடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
நாளாந்தம் 450 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கின்றது. உங்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது 450 ரூபாவால் என்ன செய்ய முடியும்?

* இலங்கையில் 40% சிறுவர் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களை சேர்ந்தவர்கள்.
* 14 310 தற்காலிக வீடுகள் இருக்கின்றன. 83 960 பேர் வீடுகள் எதும் இல்லாது வாழ்கிறார்கள் (உறவினர்கள் வீடுகளில்).
* பெருந்தோட்ட மாணவர்களில் 29% மாத்திரமே க.பொ.த.சாதாரண தரத்தில் 6 பாடங்கள் சித்தியடைகின்றார்கள். எவ்வித பயிற்சி, கல்வி தகைமை இல்லாமல் ஆண்டுக்கு 5000 - 6000 மாணவர்கள் தொழிற்சந்தைக்கு உள்வாங்கப்படுகின்றார்கள்.
* சாதாரணமாக நகரத்தில் வசிக்கும் குடும்பத்தினர் மாதாந்தம் 1.7kg கோதுமை மாவை உட்கொள்கின்றனர். கிராமங்களில் அது 1.8 kg ஆக இருக்கின்றது. ஆனால் பெருந்தோட்டங்களில் ஒரு குடும்பம் 12 kg கோதுமை மாவை உட்கொள்கின்றது. குறிப்பாக தேங்காய் இல்லாத ரொட்டியும் வெங்காய சம்பலையுமே உட்கொள்கின்றார்கள்.
* பெருந்தோட்டங்களில் பிறக்கும் குழந்தைகளில் 36% குறைந்த எடையுடனே பிறக்கின்றன.
* குறிப்பிட்ட வயதில் தேவையான உயரமோ எடையோ இல்லாமல் 25% வாழ்கின்றனர். 5 வயதுக்கு குறைவானோரில் 25% மானோருக்கு மந்தபோசனம் உள்ளது.
* கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 64% கணித பாடத்திலும் 74% ஆங்கில பாடத்திலும் 67% விஞ்ஞான பாடத்திலும் 34% தாய்மொழி தமிழிலும் சித்தியடைவதில்லை.
* நாடு முழுவதும் 28 900 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குகின்றபோதிலும் பெருந்தோட்டப்பகுதியை சேர்ந்தோர் 120-150 பேர் வரை மாத்திரமே உள்வாங்கப்படுகின்றனர். அவர்களில் 65% லயன்களில் வாழ்வோர் அல்லர்.
* இரத்தினபுரி மாவட்டத்தில் உயர் தரத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்ட ஒரு தமிழ் பாடசாலைக்கூட இல்லை.
* பெருந்தோட்ட மக்களின் கலை கலாசாரங்களை பேணக்கூடிய அல்லது பாதுகாக்கக்கூடிய வகையில் எந்தவொரு புத்துருவாக்கமும் இடம்பெறுவதில்லை. தமிழ் மக்கள் என்பதால் அல்லது சிறுபான்மை மக்கள் என்பதால் அரசாங்கம் இவற்றை முடக்குகின்றதா?
* கடந்த காலங்களில் தொண்டமானின் சுயநலத்திற்காக தனிப்பட்ட தேவைகளுக்காக பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திகள் எதுமே இடம்பெறவில்லை. தொண்டமான் பவுண்டேஷன் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அது எதற்காக? அது அரசாங்க நிறுவனமா? அரசாங்க அதிகார சபையா? அல்லது திணைக்களமா? அந்த நிறுவனத்தில் தொழில்புரிவோர் கட்சி நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனர். வருடாந்தம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது. கடந்த 9 வருடங்களில் ஒதுக்கப்பட் 1800 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது?இங்கே தொழிலாளி 450 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டு இருக்கும்போது, தொண்டமானால் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்மணிக்கு 3.5 இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது.
-இராமானுஜம் நிர்ஷன்-

Tuesday, October 9, 2018

சேகுவேரா நினைவுத் தினம் இன்று

‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. அவருடைய நினைவுத் தினம் இன்று .

கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.
‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்

‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.
‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான்.
“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.
“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த .
Chandran Veerasamy

Monday, October 8, 2018

கட்சிசார் அரசியல் இலங்கை தமிழர்களுக்கு அவசியமற்றது.......


இன்று எம்முன் இருக்கும் ஒரே தெரிவு. உரிமை அரசியலை வினைத்திறனுடனும் ராஜதந்திரவழியுனூடாக கொண்டு சென்று இலக்கை எட்டும் அரசியல் அனுபவசாலிகளை ஒருமுகபடுத்துவதே.
நல்லாட்சி அரசுக்கு த தே கூட்டமைப்பு கண்மூடித்தனமாக ஆதரவை வழங்கி இன்று அது தனது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீண்டு பொருளாதார சிக்கலை தவிர்த்துக்கொள்ள போராடுகிறது.
நெருக்கடியில் இருந்து மீண்டுவர உதவிய
த தே கூட்டமைப்பு. தீர்வும் இன்றி அபிவிருத்தியும் இன்றி. வெறுமை அடைந்த நிலையில் மக்களுக்கு எதை சொல்லி சாமாளிச்சு மீண்டும் கட்சிசார் வியாபார. அரசியலை முன்னேடுப்பது என்று அங்கலாய்ப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில் தனிப்பட்ட கட்சி நலன்சார்ந்து சிந்திப்பதை தவிர்த்து கூட்டாக சேர்ந்து குறிப்பாக கொள்கை அளவில் இணங்கி செல்வோர் ஒருமித்து செயல்படும் போதே தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறமுடியும். அதை விடுத்து ஆளுக்கொரு திசையில் பயணித்தால் மீண்டும் இஸ்லாமிய சிங்கள சகோதரர்களின் ஆதரவில் தமிழரசு கட்சி ஆட்சியை கைபற்றும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் அரசு தான் நினைக்கும் விடயங்களை இலகுவாக நிறைவேற்றும். இதை தடுப்பதற்கு கட்சிசார் அரசியல் ஆதாயங்களை மறந்து மக்கள் ஆதரவு இருக்கும் கட்சிகள் கொள்கைரீதியாக ஒன்றுபடவேண்டும்.
மாகாணசபையில் எதிர்கட்சியாக இருந்து எந்த பயனும் கிட்டாது.

T N A ,,,,, E P D P,,,, U N P,,,, கூட்டுச்சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பர். ஏனேனில் அவர்களுக்கும் கணிசமான வாங்கு வங்கியுள்ளது. இவற்றை எதிர்கொள்ள நாம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற வேண்டும். தனித் தனியாக பயணித்தால் அரசு ஆதரவுக் குழு ஆட்சி அமைக்கும்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ் மக்கள் கட்சிகளை சபிக்கும் நிலை ஏற்படும்.
எனவே த தே கூ எதிர்கொள்ள உங்களுக்குள் இருக்கும் வறட்டு கௌரவங்களை உதறிவிட்டு கொள்கைரீதியாக பயணிக்கும் அனைவரும் ஒரணியாகி திரண்டு தமிழ் மக்களின் தலைமை மாற்றத்துக்கு உதவுங்கள்.

நாம் ஒன்று பட்டால் போலிக்கூட்டை உடைத்தெறியலாம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

Thursday, September 6, 2018

தமிழ் அரசியலின் தப்புத்தாளங்கள்


Karunakaran Sivarasa
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான தேவைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசுவதில்லை. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “நாங்கள் கோருவது உரிமை அரசியலே தவிர, சலுகை அரசியல் இல்லை” என்பதுவாகும்.
இதைப்பற்றிய விவாதங்களும் விளக்களும் தாரளமாக நிகழ்ந்த பிறகும் இந்த வேதாளம் இன்னும் முருங்கையை விட்டு இறங்கவேயில்லை.
ஆனால், இதற்குப் பின்னே இருக்கிற விசயந்தான் சுவாரசியமானது. நமது கவனத்திற்குரியது.
உரிமையைத் தவிர, சலுகைகள் எதையும் பெறவே மாட்டோம் என்று சொல்கிற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், மலைய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்களின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கெஞ்சிக் கேட்டு சில வேலைகளைத் தங்கள் பகுதிகளில் செய்து விட்டு தங்களின் நெஞ்சை நிமித்திக் கொண்டு திரிகிறார்கள்.
இதற்காக இவர்கள் மலையக அமைச்சர்களைக் குளிர்விக்கப்படுகிறபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மலைய அமைச்சர்கள் வடக்குக் கிழக்குக்கு வந்து விட்டால் ஆராத்தி எடுப்பது முதற்கொண்டு கொழும்புக்குப் போகும்போது எடுத்துச் செல்லும் உபாகரப் பொருட்கள் வரையில்... ஸ்.. அப்பப்பா..
இது ஒரு பெரிய காவடி. (காமடி)
இந்தத் தகவலைச் சொல்லிச் சிரித்ததே மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைவர் ஒருவர்தான்.
அந்த அரசியல் தலைவர் சொன்னார், “இப்பிடி எங்ககிட்ட கேட்டு (கரைச்சல் தந்து) தங்களோட தேவைகளைப் பெறுவதை விட இவங்களே (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே) அரசாங்கத்திடம் நேரடியாக மக்களுக்கான நன்மைகளைப் பெறலாமே?!” என.
“இதை நீங்களே அவர்களிடம் சொல்லலாமே!” என்றேன்.
“நாங்க பல தடவை சொல்லீட்டம். ஆனா அவங்க கேக்கிற மாதிரித் தெரியேல்ல” என்றார் அவர்.
நான் அவருக்குச் சொன்னேன், “இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஏறக்குறைய 200 ஆண்டுகள்தான். ஆனால் அவர்கள் இன்று அரசியலில் பலமானதொரு தரப்பாக மாறியிருக்கிறார்கள். சில பல குறைபாடுகள், விமர்சனங்கள், மறுபார்வைகள் இருந்தாலும் இலங்கையின் யதார்த்த நிலை, பாராளுமன்ற அரசியல் முறைமை போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு பார்த்தால் மலையத் தரப்பின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பெரியது. ஆனால், வடக்குக் கிழக்கு நமது பாரம்பரியப் பிரதேசம், தமிழர்களே இலங்கையின் மூத்த குடிகள், ஆதியினர், ஆட்சிச் சிறப்புகள் ஆயிரத்தைக் கொண்டோர் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிற வடக்குக் கிழக்கு மக்களும் அவர்களுடைய தலைமைகளும் இன்று உங்களிடம் (மலையக சமூகத்தினரிடத்திலே) இரந்து வாழும் நிலையில்தான் உள்ளனர். இதற்குள் உலக மகா அரசியல் விளக்கங்கள் வேறு” என்று.
எழுந்து என்னுடைய கைகளை அவர் பற்றிப் பிடித்து கட்டி அணைத்தார்.
அவருக்கு மேலும் சொன்னேன், “உங்களை (அமைச்சர்களை) இப்பொழுது (அமைச்சர்களாக பதவியில் இருக்கும் வரையில்) அவர்கள் அங்கே அழைத்து மதிக்கிறார்கள். இங்கே கொழும்புக்கு வரும்போதும்கூட உங்களைக் கனம் பண்ணுகிறார்கள். ஆனால், இதே மதிப்பை மலைய மக்களுக்கோ வடக்குக் கிழக்கில் உள்ள இந்திய வம்சாவழியினருக்கோ இவர்கள் கொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய தந்திரோபாயம். தாங்கள் சுத்தவாளிகள் என்று காட்டிக் கொள்வது. அதேவேளை தந்திரமாகக் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வது. மறுபக்கத்தில் வேறுபாடுகளையும் நுட்பமாகப் பேணிக் கொள்வது...” என்று.
அவர் பேச்சற்றுச் சில கணங்கள் அப்படியே உறைந்து போயிருந்தார்.

Saturday, July 7, 2018

ரெட்டமலை சீனிவாசன் பற்றி..?

Chandran Veerasamy
கடந்த நூற்றாண்டிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தவர் ரெட்டமலை சீனிவாசன். 1891-ல் பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்தவர் இவர். இவரது தங்கையைத்தான் பேரறிஞர் அயோத்திதாச பண்டிதர் திருமணம் செய்தார். காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ரெட்டமலை சீனிவாசனும் அங்கு இருந்தார். இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. காந்திக்கு திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தவரும் தமிழ் சொல்லிக் கொடுத்தவரும் இவர்தான். 20 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்த இவர், பின்னர் தமிழகம் வந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். சென்னை சட்டசபையில் தொடர்ந்து இடம்பெற்றார். சாதியைக் காட்டி எவரையும் எந்த இடத்திலும் வரக் கூடாது என்று சொல்லக் கூடாது என்ற தீர்மானத்தை இவர் கொண்டு வந்தபிறகுதான் அது சட்டம் ஆனது. மதுவிலக்குக்கு ஆதரவாக நின்றவர். டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக சில தலித் தலைவர்களே செயல்பட்டபோது, அவருக்கு பக்கபலமாக இருந்தவர் ரெட்டமலை. அமைதியாக அதேநேரத்தில் ஆழமாக எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணம் ரெட்டமலை சீனிவாசன்.

Tuesday, June 19, 2018

ஆற்றாமை. இயலாமை. முயலாமை


ஆற்றாமை. இயலாமை. முயலாமை. இந்த மூன்று வார்த்தைகளும் முதல்வர் தவிர்ந்த மூவருக்கும் பொருந்தும்.!
திரு சுமந்திரன் அவர்கள் தனக்கிருக்கும் அறிவித்திறமையால் இலங்கை அரசை பாரிய சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளி பல் வகையான அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டு ( குறிப்பாக) காணி விடுவிப்பு. கைதிகள் பிரச்சனை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு இவை அனைத்தும் பெற்று கொள்ள வாய்பிருந்தது...!
ஆனால் அவர் என்றுமே தமிழ் மக்களுக்காக எதையும் செய்தது கிடையாது. தனது தாய்கட்சியான ஐ தே க வை ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் மக்களை சாதகமாக முன் நகர்த்துவதே அவரின் செயல்பாடாக இருந்ததை யாவரும் அறிவர்...! தமிழ் மக்களுக்காக அவர் இதயசுத்தியுடன் எதையும் செய்ய '' முயலவில்லை..!
இதுவரை.(முயலாமை...! என்ற வார்த்தை இவருக்குரியது.
திரு மாவை சேனாதிராசா இவர் வடிவேலு பானியில் சொல்வதானால் கட்சிக்கு தலைமை பதவியை வகுத்தாலும்! கட்சிக்குள் டம்மி பீஸ்சாகவே உள்ளார். மேயர் பதவியாகட்டும் முதல்வர் பதவியாகட்டும் யாவும் இவர் நினைப்பது போல் நடப்பதில்லை காரணம் பெறும் பதவியை அலங்கரிப்பது மட்டுமே இவர் செயல். அவரின் கடமையை செய்வது சுமந்திரனே.
இவரின் இயலாமையை இவர் உரையாற்றும் கூட்டங்களில் காணலாம். சம்மந்தமே இல்லாமல் முக்கால் மணிநேரம் வெற்றுக் கதிரைகளை பார்த்து உரையாற்றுவதே தனிச்சிறப்பு. விடுதலைக்காக உரிமைக்காக போராடும் சமூகத்தில் இவ்வாறனவர்களை எவ்வாறு வாக்களித்து மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள் என்ற குழப்பம் என்மனதில் அடிக்கடி எழும். இயலாமை இவருக்குரியது.
திரு சம்பந்தன் ஐயா இன்று எம்மத்தியில் வாழும் வயது முதிர்ந்த கற்றறிந்த அரசியல்வாதி மட்டுமல்ல சிறந்த ராஜதந்திரி இருந்தும் என்ன பயன்? தாம் வகிக்கும் பதவியை கூட ஆளும் அரசுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்தாத விசித்திரமான எதிர்க்கட்சி தலைவர். இத்தனை வருடகால் அரசியலில் இவர் தமிழ்மக்களுக்காக எதையும் சாதித்ததில்லை.
தனது சொந்த தொகுதியில் கூட அவர் நிகழும் அத்துமீறல்களை தடுத்தவருமில்லை. நல்லாட்சியை நிறுவியது தாங்களே என அடிக்கடி மார்தட்டும் இவர் அந்த நல்லாட்ச்சியை கொண்டு வந்த நோக்கத்தை நிறைவு செய்ய தவறியது மட்டுமல்லாது அரசுக்கு வரும் சர்வதேச அழுத்தங்களை வலுவிழக்க அவரும் துணைபோயுள்ளார்.
இந்த நிலையில் அங்கு இன்னும் பதவிக்காக ஒட்டியிருக்கும் திரு செல்வம் சித்தர் அவர்கள் ஒற்றுமை பற்றி வியாக்கீனம் செய்வது வேடிக்கை..! பல எண்ணற்ற போராளிகளை கொண்டிருந்த இயக்கத்தின் தலைவர்களான இவர்கள் தமக்கு கீழ் இருந்த போராளிகளை ஒருமுக படுத்தும் தகுதியை எப்பவே இழந்துவிட்டனர்.
இவர்கள் தலைமை பண்பை பெறுவதற்கு அருகதை அற்றவர்கள்.
இவ்வாறான நிலையில் காலம் காலமாக பேசி வந்த மாற்றணி உருவாகும் வேளையில் இவர்கள் ஒற்றுமை என்ற ஒற்றை வார்த்தையை பிரயோகித்து மீண்டும் தமது தலைமை பதவியை தக்க வைப்பது எதற்காக? தமிழ் மக்களின் நன்மை கருதியல்ல...!
தற்போது எமக்கு தேவையானது நேர்மையான பன்முகதன்மையுடைய தலைமையே...
நீக்கள் ஒற்றுமை பற்றி பேசுவதைவிட உங்கள் தமிழரசுக்கட்சியை முதல்வர் தலைமையில் அணிதிரளும் கட்சியுடன் தமிழ் மக்களின் நலன் கருதி இனைத்துவிடுங்கள்.
நீங்களும் உங்கள் அரசுக்கான ஆதரவை விலக்கிவிட்டு வகிக்கும் பதவிகளை துறந்து முதல்வர் ஆரம்பிக்க உத்தேசித்துள்ள கட்சியுடன் இனைந்துவிடுங்கள். அதுவே நீங்கள் தமிழ்மக்களுக்கு செய்யும் பெரும் உதவியாகும்.!
மாற்றமே விடிவை தரும். வெறுமையை போக்குவோம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

Tuesday, June 5, 2018

'பல் கலைக் கழகம்'-University


Rajeswary Balasubramaniam

18.5.18,முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று, நான் லண்டனிலிருக்கவில்லை. உலகத்தின் மிகப் புராதான தீவுகளில் ஒன்றான 'மால்ட்டா'வுக்குச் சென்றிருந்தேன்.
பத்தாயிரம் வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்ட அந்தத் தீவில் பிரயாணங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன்.

இன்று,'மனிதப் பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரலவத்தை அரங்கேற்றம் 'வல்லமை'தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு' என்ற ப.தெய்வீகனின் வார்த்தைகள் நெஞ்சில் நெருப்பாய்ச் சுட்டன. (தேனியில் வந்த கட்டுரை).

அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சிகளில் திருகோணமலை, மட்டக்களப்புப் பிராந்தியத்தைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது' என்ற கட்டளையும் அங்கு பிறப்பிக்கப் பட்டதான செய்திகளும் வந்து விழுந்தபோது எனக்கு வந்த அதிர்ச்சியையும் துயரையும் விளங்கப்படுத்த எந்த வார்த்தைகளும் கிடைக்கவில்லை.

முப்பதாண்டு போரில்,கிழக்குவாழ்; தமிழர்கள் உயிர், உடமைகளை இழக்கவில்லையா, ஆயிரக் கணக்கில் போராளிகளாக வீரமரணத்தைத் தழுவிக் கொள்ளவில்லையா?காணாமற்போன தங்கள் குழந்தைகளை, கணவன்மாரை, சகோதரங்களைத் தேடி அவர்கள் கதறுவது யாழ்ப்பாண மாணவர்களின் புலன்களை எட்டவில்லையா, கிழக்கிலுள்ள,(முக்கியமாக அம்பாரை மாவட்டத்திலுள்ள) 48;.000 விதவைகளின் அவல நிலை முள்ளியாவளை நினைவு நாளில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த கறுப்புச் சட்டை வீரர்களின் கருத்துக்களில் பதிந்திருக்கவில்லையா?

எனக்குள் வந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்குப் பதில்களை யாரிடம் எதிர்பார்ப்பது?
'பல் கலைக் கழகம்' என்பது ஒரு மாணவன் குறிவைத்துச் செல்லும் பாடத்தில் மட்டுமல்லாது பல உயர்நிலைக் கல்விகளின் ஒன்றுகூடலின் சங்கமத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டு பல்லறிவு பெறும் கழகம் என்பதுதான் எனது அனுபவம்.

1985ம் ஆண்டு,நான் லண்டன் திரைப்படக்கல்லுரி மாணவியாக,பலதரப்பட்ட மாணவர்களுடன் எனது வாழ்க்கையின் 'இரண்டாம்' கட்ட மேற்படிப்புக்குச் சென்றேன். ஏற்கனவே எனது வாழ்க்கையிற் பெரும்பாலான காலம் முற்போக்கு சிந்தனைகளால் சீரமைக்கப் பட்டிருந்ததால்,திரைப்படக் கல்லூரிக்குச் சென்றதும் அங்கு காணப்பட்ட'சமுதாய,திரைப்பட புரட்சிகர' சூழ்நிலை' என்னை ஆச்சரியப் படுத்தவில்லை.

நானும் எனது சக மாணவர்களும்;,80ம் ஆண்டுகளில் லண்டன் தெருக்களில் தென்னாபிரிக்க வெள்ளையாதிக்கத்துக்கு எதிராக மோதியலைந்த பல்லாயிரம் பிரித்தானியப் பொது மக்களுடன் எங்களையும் பிணைத்துக் கொண்டோம்;. எங்களது முதலாவது' டாக்குயமென்டரி' தென்ஆபிரிக்க வெள்ளையாதிக்கக் கொடுமையை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது.

அதைத் தொடர்ந்து,இலங்கைத் தமிழர் படும் அவலத்தை முன்னெடுத்து, 'எஸ்கேப் புறம் ஜெனசைட்' என்ற 'டாக்குயுமென்டரியைத்' தயார் செய்தேன்.
இலங்கையிலிருந்து உயிர் தப்பியோடிவரும் தமிழர்களுக்காக,' தமிழர் அகதி ஸ்தாபனம், தமிழர் அகதிகள் வீடமைப்பு' போன்ற ஸ்தாபனங்களை பிரித்தானிய தொழிற் கட்சியின் உதவியுடன் நிறுவி அதன் தலைவியாகவிருந்து என்னால் முடிந்த உதவிகளை எங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தேன். இந்தியா சென்று,இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களைப் பற்றிய புகைப்படக் கண்காட்சியை லண்டனில் நடத்தினேன். இவையத்தனையும் நான் மாணவியாக இருந்த காலத்தில் எனது சமுதாயத்திற்காகச் செய்த கடமைகள்.

அப்போது லண்டனுக்கு அகதிகளாக வந்த தமிழர்களில் நான் ஒரு கிழக்கிலக்கிங்கைத் தமிழரையும் சந்திக்கவில்லை. எனக்கு.வடக்கு கிழக்கு, என்ற பிராந்திய உணர்வு ஒரு நாளும் இருந்ததில்லை. மனித நேயம்தான் எனது தாரக மந்திரம்.

இன,மத,நிற,வர்க்க பேதமற்ற மாணவர்களில் ஒருத்தியாக பன் முகத் திறமைகள்; கொண்ட மாணவர்களுடன் லண்டனில் என்னைப் பிணைத்துக் கொண்டபோது, 1960ம்-70ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் முன்னெடுத்த பல முற்போக்கு சிந்தனைகள் என் மனதில் நிழலாடின.

1960-ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து,அமெரிக்கரின் கொடிய போர்த் தந்திரங்களால் வியட்நாமிய மக்கள் கொடுரமாக் கொலை செய்யப்படுவதை எதிர்த்து கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள மட்டுமல்லாது இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள்,பல்லாயிக் கணக்காகத் திரண்டு கொழும்புத் தெருவிலிறங்கிப் போராடியதால் போலிசாரின் தடியடிக்கு ஆளாகினார்கள்.

அதே கால கட்டத்தில் 1967ல் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகக் கோயில் திறக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த போராட்டத்தில், கொழும்பிலிருந்தும் கண்டி பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான முறபோக்கு,இடதுசாரி தமிழ்மமாணவர்கள், மாவிட்டபுரம் சென்று ஒடுக்கப் பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காகப் போரடினார்கள்.(எனது 'ஒருகோடை விடுமுறை'நாவல் வாசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்)

அக்கால கட்டத்தில்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மனித உரிமைப் போராட்டத்தில்,முற்போக்கு இலக்கியப் பாதையில்,சமூகவளர்ச்சி சிந்தனைகளில் தனது முத்திரையைப் பதித்துக் கொண்ட ஒரு பெரும் தகமையுடன் இலங்கையில் கௌரவம் பெற்றிருந்தது. அதற்குக் காரணம் அக்காலத்தில் அங்கு செயற் பட்ட வடபுலத்தின் தலைசிறந்த முற்போக்குவாதிகளில் ஒருத்தரான,திரு.மு. கார்த்திகேசு' மாஸ்டரின் மாணவன் கலாநிதி கைலாசபதி போன்றவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டிகளில் ஒருத்தராகவிருந்ததாகும்.

'பல் கலைக் கழகம்' என்ற 'பன்முறைத் தகமையின் ஆளுமையின்; தார்ப்பரியத்தைச் செயலிற் காட்டிய சிறந்த கல்விமான்களுடன் வளர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களா இன்று 'தமிழர்களுக்கான ஒரு பொது நினைவு நாளில்' இவ்வளவு கேவலமான பிராந்திய வெறியுடன் நடந்து கொண்டார்கள்?

இந்தச் செய்தியைச் சீரணிக்க முடியாமல் எனது நெஞ்சம் பதறுகிறது. இவர்களை இப்படி ஒரு குறுகிய வழியில் செயற் படுத்துபவர்கள்யார்?

இன்று இலங்கைத் தமிழ் மக்கள்,தமிழ் மக்களின் வாழ்வாதரத்தை மேன்படுத்தும், தமிழர் சமூகத்தை வளம் படுத்தும், இளம் தலைமுறையை நல்வழிக்கு இட்டுச் செல்லும் ஒரு நேர்மையான அரசியற் தலைமையின்றித் தவிக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் என்று தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு பதவிக்கு வருபவர்களுக்கு,' மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்றவாதியின் கடமைகள்' என்னவென்ற ஒரு கோட்பாட்டின் விளக்கம் தெரியாது.

1948ம் ஆண்டு தொடக்கம் 'தமிழ்ப் பிரச்சினை' என்ற ஒரு கருத்தை முன்வைத்து பதவிக்கு வரும் மேல்மட்டத் தலைவர்கள் சாதாரண தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், தமிழ் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும், அதன்பின் 'தமிழர் பிரச்சினை' சொல்லி பதவிக்கு வரமுடியாது என்ற தெரியும்.அதனால் தங்கள் வசதியான வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள எப்படியும் ஏதோ ஒரு வழியில் தமிழர் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்

அந்தப் பிரச்சினைகளைத் தொடர அவர்களின் பாவிப்பு ஆயுதங்களாக, சாதி, சமயம்,பிராந்திய ,இனவெறிகளைத் தூண்டிக் கொண்டேயிருப்பார்கள்.அவற்றைப் பாவித்துத் தங்கள் சொகுசு வாழ்க்கையை, தமிழ் மக்களின் எதிரி என்று அவர்களால்ச் சுட்டிக் காட்டப் படும் இலங்கை அரசின் பாதுகாப்புப் படையின் உதவியுடன் தொடர்ந்த கொண்டிருப்பார்கள்.

அதற்காக அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் யாரையும் எதையும் பாவிக்கத் தயங்க மாட்டார்கள்.இன்று அவர்களின் பகடைக்காய்களாக மாறிவிட்டிருப்பவர்கள் அப்பாவிப் பொது மக்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் என்று பேசிக்கொள்கிறார்கள்..

யூதர்களில் உள்ள இனவாதத்தால், ஹிட்லர் தனது வெறிபிடித்த கொள்கையால் தனது மக்களைத் தவறாக வழிநடத்தியதால் அதன் நீட்சியாக,இரண்டாம் உலகப்போர் வந்து உலகம் பல மோசமான அழிவுகளை முகம் கொடுக்க நேரிட்டது. கடைசியாக ஹிட்லரும் அழிந்து அவனின் நாடும் சிதைந்தது. அவனது மிகப் பெரும் பலமாக இருந்தவர்கள் மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று,பலநாடுகளில் பணபலத்தால் படடோபமாக வாழும் சில புலம் பெயர் தமிழர்கள், 'தமிழர்' பெயர் சொல்லி மேடையேறவும், பிரமுகர்களாக வலம் வரவும் அப்பாவி இலங்கைத் தமிழர்களைப் பணயம் வைத்து விளையாடுவதை இலங்கைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.
சில புலம் பெயர் தமிழர்கள்,தங்கள் பிள்ளைகளுக்கு உயர்படிப்பை வழங்கிக்கொண்டு, தாய்நாட்டில் வளரும் இளமனங்களில் விஷவிருட்சத்தை வளர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

புலம் பெயர் தமிழர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களில் உண்மையான அக்கறை வைத்தால், சிதைந்துபோன இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தவும், கல்வித்துறையில் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஈடாகப் போட்டிபோட்டு உலகதரத்தில் பெருமைபெற முடியும். ஆனால் சுயநலம் பிடித்த இலங்கைத் தமிழ்த் தலைவர்களும், மற்றவர்கள் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் சில புலம் பெயர் ;சாடிஸ்ட்' தமிழர்களும் சட்டென்று உணர்ச்சி வயப்படும் இளவயதினரைத் தங்கள் தேவைகளுக்குப் பாவித்து விட்டுத் தூக்கியெறிவார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக,மாணவர்களே தயவு செய்து உங்கள் பல்கலைக்கழகத்தின் பாராட்டுக்குரிய பழைய சரித்திரத்தை ஒரு தரம் புரட்டிப் பாருங்கள். இலங்கையில் முற் போக்குத் தமிழ் சிங்கள மாணவர்கள், அமெரிக்க-வியட்நாம் போருக்கும் யாழ்ப்பாணத்தில் சாதிக் கொடுமைக்கும் குரல் எழுப்பிய அதே காலகட்டத்தில்,1968ம் ஆண்டு பாரிசில் நடந்த மாணவர்களின் புரட்சியால் நடந்த பல முன்போக்கான மாற்றங்களைப் படியுங்கள்.

உங்களின் கல்வி பலம் மகத்தானது. இளம் வயதுச் சிந்தனை சக்தி மிகப் பிரமாண்டமானது. வளரும் வயதின் அறிவு ஆழம் தெரியாத கடல்போல் மிக மிக ஆழமானது,மனதை நெருடும் தென்றலைப்போல் தௌ;ளிய கருத்துக்களை உங்கள் இளம் மனதில் தாலாட்டக்கூடியது.

தங்கள் சுயநலத்தை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளுக்காக உங்களின் அபரிமிதமான ஆளுமையை மாசுபடுத்தாதிர்கள்.அவர்களுக்காக ஒத்துப் பாடும் குறுகிய அறிவுள்ள ஊடகங்களின் பதிவுகளை 'பல் கலைக் கழக மாணவர்கள்' என்ற பார்வையில் பன்முகத்துடன் அலசிப்பாருங்கள்.

'பல் கலைக் கழக' மாணவர்கள் எதிர்காலத்தின் சமூகக் காவலர்கள், சிந்தனையாளர்கள், சீர்திருத்தவரிகள்.அரசியல் வாதிகள்,ஆளுமையைக் கையிலெடுக்கப் போகிறவர்கள். உங்களின் கையில் பாடப்புத்தங்களையம் கருத்தில் மனித தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் எதிர்காலக் கருவிகளாகப் பாவிக்கப் பழகுங்கள். இடறுவது தற்செயல்,ஏறுவது முயற்சி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் சமுதாயத்தை முன்னேற்ற உங்கள் பணிகள் இன்றியமையாதது.இரண்டாம் உலக யுத்தத்தால் சிதிலமடைந்த ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் தலைநிமிர அந்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை எந்தவித பேதமுமின்றி ஒன்று சேர்த்து உழைத்தார்கள். ஓரு சொற்ப கால கட்டத்தில்; அவ்விருநாடுகளும்,தொழில் உற்பத்தி,விஞான விருத்திகளில் அபரிமிதமாக முன்னேறியதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

இலங்கைத் தமிழர்களை ஒன்று சேர்த்து எதிர்கால வளர்ச்சிக்கு அத்திவாரம்போடுவது இளம் தலைமுறையினர் கைகளிற்தானிருக்கிறது. அதை மறந்துவிட்டு,சாதி,மத.பிராந்திய,இன வெறியுடன் பொதுக்கடமைகளில் ஈடுபடுவது மாணவ வாழ்க்கையின் ஆக்க நோக்கைச் சீரழிக்கும். வெற்று வார்த்தைகள் எதையும் கட்டியமைக்கப் போவதில்லை.

பொருளாதாரத்தில்,கல்வியில், மனிதநேயக் கருத்துக்களில் வளர்ந்த மேற்கு நாடுகளில், தனி மனித திறமைக்கு மதிப்புண்டு. தேசியத்தின் வளர்ச்சிக்கு அது உதவுகிறது.வளர்ந்த நாடுகளின் சரித்திரத்தை ஒருதரம் புரட்டிப் பாருங்கள். மக்களின் ஒட்டுமொத்த ஓற்றுமை என்பது அவர்கள் வாழும் சமுதாயத்தின் வலிமையின் அடிப்படைத் தளமாகும். தமிழர்களின் பல்வேறுபட்ட திறமைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் இளம் மாணவர்களை குறுகிய வழிகாட்டித் தங்கள் தேவைகளுக்குப் பாவிக்கும் அரசியல் சூத்திரங்களுக்கு அடிபணிவது வலிமையற்ற மனவளர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.

Monday, March 5, 2018

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு கடந்த தேர்தலுக்கு முன்பே பலராலும் மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் கூட்டமைப்பின் விசுவாசிகளும் சில ஊடகவியலாளர்களும் இதை மறைப்பதற்கும் மறுப்பதற்கும் பாடாய்ப் பட்டனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு
தேர்தல் முடிவுகள் அதை நிரூபித்தன.
மக்களின் மன நிலையை நாடி பிடித்துப் பார்க்கத் தவறியவர்களை என்ன என்று சொல்வது?
கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணங்கள் ஒன்றல்ல. ஏராளமானவை.
அந்தக் காரணங்களும் பலரும் அறிந்தவை. இங்கே அவற்றைப் பட்டியல் போட்டு முடியாதது.
அவற்றையெல்லாம் பொறுப்போடு ஆராய்ந்து சீர் செய்வதற்குக் கூட்டமைப்புத் தயாரில்லை.
அப்படிச் சீர் செய்ய வேண்டுமாக இருந்தால், அடிப்படையிலிருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
அதாவது அதுவொரு“ குணாம்ச மாற்றமாகும்”.
ஆனால், அதற்கு கட்சியின் உயர் மட்டத்திலும் (தலைமையிலும்) தயாரில்லை. அடிமட்டத்திலும் தயாரில்லை.
யாருமே இதைப்பற்றிச் சிந்திக்கவுமில்லை.
“தலைமை கொழும்பில் பாய் போட்டுப்படுத்தே விட்டது”.
“வால்கள்” மட்டும் வன்னியிலும் (கிளிநொச்சி, முல்லைத்தீவு) யாழ்ப்பாணத்திலும் சிலவேளை மட்டக்களப்பிலும் மெல்ல ஆடிக் கொண்டிருக்கின்றன.
தலைமைக்கு நெருக்கடியைக் கொடுத்த கஜேந்திரகுமார் அணி, சுரேஸ் அணி போன்றவற்றை தூக்கி வெளியே வீசிய பிறகு எந்தப் பிரச்சினையும் இனி இல்லை என்ற நிம்மதியில் காலாட்டிக் கொண்டிருக்கிறது தலைமை.
மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கொழும்புடன் சமரசம் செய்து கொள்ளக் கூடியவை. கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் நிலைப்பாடு எடுக்க முடியாதவை.
ஆனால், கூட்டமைப்பை விட ஏனைய தரப்புகள் பல இடங்களிலும் எழுச்சியடைந்துள்ளன.
இதையும் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.
இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டமைப்பினர் பதறியடித்துக்கொண்டு ஊர் ஊராக இளைஞர்களையும் தங்களை விட்டு விலகியோரையும் தேடி, வலை விரித்து, காலில் விழுந்து, பணிந்து, கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். மன்னிப்புக் கேட்கிறார்கள். மன்றாடுகிறார்கள்.
உண்மையில் இப்படிச் செய்யவே வேண்டியதில்லை.
மாற்றங்களைச் செய்தால், மக்களுக்கு விசுவாசமாக இருந்தால், நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், உண்மையைப் பேசினால், கண்ணியமாக நடந்தால், விடுதலைக் கனவோடு வாழ்ந்தவர்களுக்கும் வீழ்ந்தவர்களுக்கும் உண்மையாகவே மரியாதை செய்தால் மக்கள் தாங்களாகவே ஆதரவைத் தருவார்கள்.
அப்படிச் செய்யாமல் ஆட்சேர்ப்பதற்கும் தேர்தலில் வெற்றியடைவதற்கும் மக்களைப் பயன்படுத்த முயற்சிப்பது தந்திரமாகும். இந்தத் தந்திரத்துக்கு மக்கள் மேலும் பாடம் படிப்பிப்பார்கள்.
இதுவே வரலாற்று உண்மை.
அதிலும் இளைய தலைமுறையினர் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
அவர்கள் விழிப்பும் போராட்டக் குணமும் நேர்மையும் புத்திக் கூர்மையும் உள்ள அணியினர்.
நாளைய வரலாற்றை சரியாக எழுதக் கூடியவர்கள்.
இதைக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்வது அவசியம்.
உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது பெரியதொரு ஆலமரமாகவே இருந்தது. இப்பொழுது அது சரிந்து விழத் தொடங்கி விட்டது.
சிறிய மரங்கள் சரிந்தால் அதைத் தடுப்பதற்கும் தாங்குவதற்கும் முட்டுக் கொடுக்கலாம்.
பெரிய மரம் (ஆலமரம்) சரிந்தால் எதுவும் செய்ய முடியாது.

தமிழர்களுடைய அரசியலை அடுத்த கட்டத்துக்கு - போருக்குப் பிந்திய அரசியலாக முன்னெடுத்துச் செல்வதற்கான சிந்தனையும் செயலூக்கமும் கொண்ட தரப்பினர் இன்னும் இல்லை.
இதை நோக்கிச் சிந்திப்பதற்கும் தமிழ்ச் சூழலில் யாரும் முன்வரவில்லை.
போருக்கு முந்திய, போர்க்கால அரசியலின் நிழற் பிரதியையே பலரும் தொடர்கின்றனர்.
அதற்கு புதிய வர்ணத்தைப்பூசிப் புதிதாகக் காண்பிக்கவே பலரும் விரும்புகின்றனர்.
இதனால்தான் அது சர்வதேசக் கவனிப்பையும் பெறவில்லை. புதிய அடிகளை முன்வைக்கவும் இல்லை. சிங்கள அதிகாரத்தரப்பை அசைக்கவும் இல்லை.
போருக்கு முந்திய, போர்க்கால அரசியலைப் போருக்குப் பிந்திய அரசியலின் தொடர்ச்சியாகக் கொள்ளவே முடியாது.
இது உலக அனுபவம்.
போருக்குப் பிந்திய சூழலில் தமிழர்களுக்கு அருமையான பல வாய்ப்புகள் கிடைத்திருந்தன.
ஆனால், அதை நோக்கி நகர்வதற்கான சிந்தனையும் உலக அனுபவமும் செயற்படுத்தத்தக்க ஆளுமைகளும் துணிச்சலும் கொண்டவர்கள் இல்லாது போயிற்று.
அப்படி அரும்பிய முளைகளையும் பழைய கண்ணோட்டத்தில் எதிர்த்து மடக்கியதும் விலக்கியதுமே நடந்தது.
இப்பொழுது மறுபடியும் பழைய பெருங்காயப் பானைக்குள்தான் கையை விட்டுத் தேடுகின்றன.
மீண்டும் பிரமுகர்களைச் சுற்றியும் தேடியுமே தமிழ் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.
இது 70 ஆண்டுகாலத் தோல்வியை நூற்றாண்டுத் தோல்வியாக்கும் முயற்சியே.

கருணாகரன் சிவராசா


Friday, February 23, 2018

கமல், கட்சி, கோட்பாடு, கொள்கை…


Kumaresan Asak

கருத்துகளில் மாறுபடலாம். ஆனால், காட்சிகளை மறுப்பதற்கில்லை. மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தினர், அதில் கணிசமாகத் தெரிந்த இளைஞர்கள், பெண்கள் என்ற காட்சிகள் மறைக்க முடியாதவை. அவர்களின் முகங்களில் வெளிப்பட்ட மாற்றத்துக்கான எதிர்பார்ப்பு, அதன் பின்னால் இருக்கும் நீண்ட காலக் காத்திருப்பு என்ற காட்சிகளிலும் கேள்விக்கு ஏதுமில்லை. ஆம், அய்யம் இன்றிச் சொல்லத்தக்க வகையில் திட்டவட்டமாக மய்யம் உருக்கொண்டுவிட்டது. பெயரில் மட்டுமல்லாமல், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, புதுவை ஆகிய தென் மாநிலங்களை அடையாளப்படுத்தும் ஆறு கைகள், அவற்றின் நடுவில் நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் என்ற விளக்கத்துடனான கொடி அமைப்பிலும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.
அகில இந்தியப் பொறுப்பாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், தனது செயற்களம் இந்த ஆறு மாநிலங்கள்தான் எனக் காட்டியிருப்பதோடு, அதன் மூலம் திராவிடம் என்ற அடையாளத்தையும் பதிவு செய்திருக்கிறார். திராவிட இயக்கத்திலிருந்து புறப்பட்ட கட்சிகளேகூடப் பெயரில் அந்தச் சொல் இருந்தாலும், நடைமுறையில் தமிழக எல்லைக்குள்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு, திராவிடம் என்ற பெயரைப் பயன்படுத்தாமலே இப்படியொரு அடையாளத்தைச் சூட்டியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. நடைமுறையில் இதுவும் தமிழகத்துக்குள் மட்டுமே இயங்கப்போகிறதா அல்லது இதர ஐந்து மாநிலங்களிலும் விரிவாகச் செயல்படப்போகிறதா என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இதே தமிழகத்தில், இதே மதுரைக்கு அருகில், தூத்துக்குடி நகரில் பிப்ரவரி 17 முதல் 20 வரையில் நடைபெற்ற, மதுரைக் கூட்டத்தில் கமல் பெருமிதத்துடன் தனக்குக் காணொளிப் பதிவு மூலம் வாழ்த்துத் தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 22ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தொடக்க விழா, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நிறைவு நாளில் காவல் துறையின் மூர்க்கத் தாக்குதலை எதிர்கொண்ட செம்படைப் பேரணி, பொதுக்கூட்டத்தில் புதிய செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உரைகள்... இவற்றுக்கு ஊடக நிறுவனங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தன? கமல் ராமேஸ்வரம் வந்தது முதல் மதுரை மேடையில் ஏறியது வரையில் ஒவ்வொரு நொடி நகர்வையும் செய்தியாகச் சொன்னவர்கள், முத்துநகர் மாநாட்டுச் செய்திகளை ஒரு தொகுப்பாக மட்டும் வெளியிட்டு முடித்துக்கொண்டார்கள். இதுபற்றி ஆதங்கத்தோடு பேசிய ஒரு தோழரிடம், “இந்த ஊடக அரசியல் புதிய அனுபவமா என்ன? அதை விமர்சித்துக்கொண்டே, அவர்களால் புறக்கணிக்க முடியாத, குறைத்துக்காட்ட முடியாத பெரும் மக்கள் சக்தியாக இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் செயல்முனைப்பைக் கூர்மைப்படுத்துங்கள்” என்று கூறினேன்.
இரு மேடைகள், இரு பண்பாடுகள்
------------------------------------------------------
இக்கட்டுரை அந்த ஊடகப் பாகுபாடு பற்றியதல்ல; தூத்துக்குடி மாநாட்டின் உள்ளரங்கம், தியாகிகள் நினைவுச் சின்னம், பொதுக்கூட்ட மேடைப் பின்னணி… இவை ஒவ்வொன்றிலும் தோழர்களின் வியர்வை இருந்தது. மக்களுக்காகப் போராடுவதில் பங்கேற்கிற உணர்வு கலந்த கலைப் படைப்பாக்கம் இருந்தது. சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பாக மாநாட்டு நிகழ்வுகள் தரப்பட்டதிலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள தோழர்களின் முயற்சி இருந்தது.
ஆனால், மதுரைக் கூட்டத்தின் மைதான வளாகம், பொதுக்கூட்ட மேடையின் ஒளிப்பட நுட்பங்கள், செய்தியாளர் சந்திப்புக்கான அரங்கம் என ஒவ்வொன்றிலும் பெரும் தனியார் நிறுவனத்தின் வடிவமைப்பு, அவர்களது தொழில்நுட்பத் திறன் ஆகியவைதான் முன்னால் நின்றன. கமல் பேசத் தொடங்கியதும் அவரது கருத்துகள்தான் முன்னுக்கு வந்தன என்பது உண்மையே. ஆனால், வரிக்கு வரி “நீங்கள்... நீங்கள்” என்று தொண்டர்களைக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பமும் கலைத்திறனும் கலந்த மேடையாக்கத்தில் அவர்களை எந்த அளவுக்கு ஈடுபடுத்தினார்? தொடக்கத்திலேயே அவர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டும் உட்கார வைத்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனத்திடம் மேடைப் பொறுப்பை ஒப்படைத்ததன் தொடர்ச்சியாகத்தான் இனி மய்யத்தின் நிகழ்ச்சி நிரல்களும், கொள்கை முடிவுகளும் அமையுமா? காலம் அதையும் கவனத்தில் கொள்ளும்.
பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். அது தொடர்பான சிந்தனை ஏதாவது வெளிப்படுகிறதா என்று கவனித்தால்... ஹூகும். கொடியில் அடையாளப்படுத்தப்படும் ஆறு மாநிலங்களின் மொழிகள் மீது மத்திய அரசால் தொடுக்கப்படும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் மய்யத்தின் பார்வை என்ன என்று சொல்வதற்கு, கட்சியைத் தொடங்கிடத் தேர்ந்தெடுத்த இந்தத் தேதி எவ்வளவு பொருத்தமானது. மேடையில் கமல் பேசியது போல, அவரது “நேரமின்மை” காரணமாக விடுபட்டவற்றில் இதுவும் ஒன்று என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மேலும், சொல்லாதது எது என்று தேடுவதை விட சொன்னது எப்படி என பார்ப்பதே முக்கியம்.
‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயர் ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் பெயர் போல இல்லாமல் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் (என்ஜிஓ) பெயர் போல இருக்கிறதே என்று சமூக ஊடகங்களில் சிலர் கேட்டிருக்கிறார்கள். கழகம், கட்சி என்று பெயரிலேயே அமைப்பை அடையாளப்படுத்திவந்துள்ள வழக்கத்திலிருந்தே இக்கேள்வி எழுகிறது. அடிப்படையில் கட்சி ஈடுபாடு என்பதே ஒரு தன்னார்வத் தொண்டுதான். மற்ற கட்சிகளைப் போலவே புதிய கட்சியும் இருக்க வேண்டிய தேவையில்லை என்பதால், அவற்றுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டுதான் புதிய கட்சி புறப்படுகிறது என்பதால், பெயரிலும் அந்த மாறுபாடு வெளிப்படுவதில் தவறில்லை. மக்கள் பக்குவமும், முன்போலப் பெயரிலேயே கட்சி என்ற சொல் இருந்தாக வேண்டும் என்ற நிலையைக் கடந்து வந்துவிட்டது. பெயரில் தெரிகிற மாற்றம் கட்சியின் செயல்களில் தெரிகிறதா என்றே மக்கள் உற்று நோக்குவார்கள்.
இடதுக்கும் வலதுக்கும் நடுவில்?
----------------------------------------------------
ஆனால், கட்சியின் சித்தாந்தம் (இஸம்) எப்படிப்பட்டதாக இருக்கும்? இடதா, வலதா என்று கேட்கிறார்கள் என்று தெரிவித்த கமல், “அதனால்தான் பெயரிலேயே மய்யம் என்று வைத்திருக்கிறோம்” என்று கூறினார். “கொள்கை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள், செயலில் இறங்குங்கள்” என்று ஆந்திர முதல்வரும், தனது முன்னுதாரணங்களில் ஒருவருமான சந்திரபாபு நாயுடு சொன்னதாகவும் கூறினார். கொள்கை பற்றிக் கவலைப்படாமல் செயல்படச் சொல்வது நல்ல முன்னுதாரணம்தானா? கேரள முதல்வர் அப்படிக் கொள்கையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்தானா?
கட்சியின் தொடக்க விழா சிறப்பு விருந்தினர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லியில் பாஜக, காங்கிரஸ் இரண்டையும் வீழ்த்திய தமது ஆம் ஆத்மி கட்சியின் சாதனையை, தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டையும் வீழ்த்துவதன் மூலம் மக்கள் நீதி மய்யம் பின்னுக்குத் தள்ள வேண்டும் என்று அவர் வாழ்த்தினார். அப்படியான ஒரு மாற்றுக்கு இங்கே உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கிற இயக்கங்களோடு கமல் கட்சி எப்படிப்பட்ட உறவுகளை வளர்த்துக்கொள்ளப் போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது. அதை விடவும், ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டபோது, இதே போன்ற கேள்வி கேட்கப்பட்டதும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் இங்கே நினைவுகூரப்பட வேண்டியவை.
அக்கட்சியின் இணையதளத்தில், “கட்சியின் சித்தாந்தம் பற்றிக் கேட்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி விஷயங்களில் வலதுசாரி, மக்கள் பிரச்னைகளில் இடதுசாரி என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்படும். முன்னுக்கு வருகிற பிரச்னையின் தன்மையைப் பொறுத்து அதை எப்படிக் கையாள்வது என்ற அணுகுமுறை வகுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் பிரச்னைகளே அடிப்படையில் வலதுசாரிக் கொள்கைகளால் ஏற்படுவதுதானே, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவது என்பதே அடிப்படையில் வலதுசாரிக் கொள்கைகளை எதிர்ப்பதுதானே?
அப்படியான கொள்கைத் தெளிவற்ற நிலையைத்தான் மையமாக இருப்பது என்கிறாரா கமல்? நட்சத்திரமாக இருந்து வந்த தன்னை இனி மக்கள் தங்கள் குடும்பங்களில் ஒரு விளக்காக வைத்துக் கொள்ளட்டும் என்று பேசிய கமல், தனது கட்சியின் இந்தக் கொள்கை இருட்டு மீது கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சுவது நல்லது. கட்சியின் உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல தரப்பினரும் அதில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இது பற்றிப் பேசி, எரியாமலிருக்கிற விளக்குத் திரியில் சிறு நெருப்பையேனும் பற்ற வைப்பார்களா அல்லது கமல் பேசுவதற்கு விளக்கமளிக்கும் தொண்டில் மட்டும் ஈடுபடுவார்களா?
‘பிக் பாஸ்’ விமர்சனங்களைத் தொடர்ந்தும், ரஜினிகாந்த் தனது அரசியல் நுழைவு பற்றி அறிவித்ததைத் தொடர்ந்தும், அரசியல் கருத்துகளை முன்னைக் காட்டிலும் திட்டவட்டமாகக் கூறத் தொடங்கினார் கமல். அப்போது, நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளை வரவேற்று ட்விட்டினார். ஆளுக்காள் பிடிபிடியெனப் பிடித்தார்கள். பின்னர் அவரே, தமது முந்தைய கருத்துகள் தவறு என வெளிப்படையாகவே அறிவித்தார். எந்தப் பிரச்னையிலும் கருத்தே சொல்லாத அரசியலை விடவும், ஏதோவொரு கருத்தைச் சொல்லிவிட்டுப் பின்னர் அதைத் திருத்திக்கொள்கிற அரசியல் நல்லதுதானே?
அதே வேளையில் பேட்டிகளிலும் பேச்சிலும் தமிழக அரசியல் நிலவரம் பற்றிய விமர்சனத்தைத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். மத்திய பாஜக அரசு மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கார்ப்பரேட் சேவை நடவடிக்கைகள், அதற்குக் கவசமாகப் பயன்படுத்துகிற மதவெறி சர்ச்சைகள் பற்றியெல்லாம் அவரிடமிருந்து குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் வெளிப்படவில்லை. கட்சியின் உயர்மட்டக் குழு முறைப்படி உட்கார்ந்து நடத்தக்கூடிய விவாதத்துக்குப் பிறகாவது இந்த அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள் முன்பாக வைக்கப்படுமா?
அடிப்படை பலம் எது?
----------------------------------
நாத்திகவாதியான தன் பின்னால் திரண்டுள்ளவர்கள் பல்வேறு இறை நம்பிக்கை உள்ளவர்கள்தான் என்று அங்கீகரித்துப் பேசிய கமல், தனக்குப் பிறகு அவர்கள்தான் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லப் போகிறார்கள் என்றும் அறிவித்த கமல், அவர்களைக் கொள்கை இருட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும். தான் என்ன பேசினாலும், தனது கட்சியில் யார் என்ன பேசினாலும் அது கட்சியின் அடிப்படைக் கொள்கை பலத்திலிருந்தே வருகிறது என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். உயர்மட்டக் குழுவைக் கூட்டி, தெளிவான கொள்கை அறிக்கையை உருவாக்கி வெளியிட்டாக வேண்டும். இதில் பினராயி விஜயனைப் பின்பற்றப்போகிறாரா அல்லது சந்திரபாபு நாயுடு அல்லது கேஜ்ரிவாலைப் படியெடுக்கப் போகிறாரா?
மதுரைக் கூட்டத்தில் கொள்கை என எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டதாகக் கூற முடியாது. எல்லோருக்கும் தரமான சிறந்த கல்வி கிடைக்கச் செய்தல் ஒரு கொள்கை என்று அறிவித்தார். இதில் வேறு எந்தக் கட்சியாவது மாறுபடுகிறதா? எந்தக் கட்சியாவது தரமற்ற, சிறப்பற்ற, எல்லோருக்கும் சமமாகக் கிடைக்காத கல்விதான் தனது கொள்கை என்று கூறியிருக்கிறதா? இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது கல்விக் கொள்கையாகுமா? பொதுப்பள்ளி, அருகமைப் பள்ளி, ஏற்றத்தாழ்வற்ற பாடத்திட்டம், சந்தை சக்திகளின் பிடியிலிருந்து கல்வி மீட்பு, தாய்மொழி வழிக் கல்வி, உயர் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி வழியில் பாடங்கள், கல்விச் சாலைகளில் சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டு நியாயங்களைத் தகுதி என்ற போர்வையில் மறுக்கும் நவீனப்படுத்தப்பட்ட மநுவாதம்... இவற்றைப் பற்றியெல்லாம் பகுத்தறிவாளர் கமல் என்ன நிலைப்பாடு மேற்கொள்ளப்போகிறார்?
அரசியலில் சாதி, மத விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று மேடையில் இன்னொரு கொள்கை அறிவிப்பையும் வெளியிட்டார். அவையிலிருந்து எழுந்த வலுத்த கரவொலி, சாதியவாத அரசியலுக்கும் மதவாத அரசியலுக்கும் எதிரான தமிழக மக்கள் மனநிலையின் எதிரொலிதான். இன்றைய இந்தியச் சமூகக் களத்தில் திட்டமிட்ட முறையில் மதவெறி அரசியல் எப்படி கோரத் தாண்டவமாடுகிறது என்ற கூர்மையான விமர்சனத்தை முன்வைப்பதிலிருந்தே மதவாத, சாதிய அரசியல் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி என்ற கொள்கை தெளிவுபெறும். தமிழகத்திலும் இதர ஐந்து மாநிலங்களிலும் மதவாத, சாதிய அரசியல் சக்திகள் ஊடுறுவ முயல்வது பற்றிய எச்சரிக்கை வெளிப்படையான அறைகூவலாக ஒலித்தால்தான் இந்தக் கொள்கை நம்பகமானதாக இருக்கும். சாதி ஆணவக்கொலைகளை வன்மையாக எதிர்ப்பது, மதப் பிரச்னைகளைக் கிளறிவிட்டு மக்களைக் கூறுபோட முயல்வதை ஆவேசத்தோடு சாடுவது, மக்கள் ஒற்றுமைக்காகக் களம் காணும் முற்போக்கு சக்திகளோடு கரம் கோப்பது என்று விரிவடைந்த செயல்பாட்டில்தான் இந்தக் கொள்கை பொலிவுபெறும்.
கட்சியை அறிவிப்பதில் இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிதானம், கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் இருக்கக் கூடாது. மக்களைத் தாக்குகிற அத்தனை பிரச்னைகளையும் அணுகுவதற்கான அடிப்படைக் கொள்கைத் தளம் தேவை. மய்யம் என்ற பெயரில் அந்தத் தளத்திலிருந்து விலகி நிற்பது, கட்சியின் பயணத்தில் பெரும் பள்ளமாகக் குறுக்கிடும். அதில் விழாமல் இருக்க இப்போதே மரபணு நீக்கப்படாத சித்தாந்த விதையை ஊன்றட்டும். கொள்கை உரத்தைச் சேர்க்கட்டும். ஆன்மிக அரசியல் என்ற விற்பனை முத்திரையோடு இன்னொருவர் கிளம்பவிருப்பதால், தனது பயணத்தில் நேச சக்திகள் யார் என்பது உள்ளிட்ட கோட்பாட்டுச் சுவரை மக்கள் நீதி மய்யம் வலுவாக எழுப்பட்டும்.
மதுரை கூட்டத்தில் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக ஒளிர்ந்த அந்த முகங்களுக்குச் செய்யப்படும் நியாயம் இதுவாகத்தான் இருக்க முடியும்.