Search This Blog

Showing posts with label Old gold tamil songs. Show all posts
Showing posts with label Old gold tamil songs. Show all posts

Tuesday, January 12, 2021

சந்திரபாபு...

 


தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர். தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
ஜோசப் பிச்சை” என்னும் இயற்பெயர் கொண்ட சந்திரபாபு, 1927-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி தூத்துக்குடியில் பிறந்தார். பெற்றோர் ஜே.பி.ரோட்டரிக்ஸ் - ரோசரின்.
இவருடைய குடும்பம் சுதந்திரப் போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது.
சிறிது காலத்துக்கு பிறகு அவருடைய குடும்பம் மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது
மெட்ராஸ் பாஷையை அவரைப்போல் எவரும் தத்ரூபமாகப் பேசவே முடியாது. சபாஷ் மீனா படத்தில் மெட்ராஸ் பாஷையில் பேசி அசத்துவார்
சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர்.
சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்:
ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
விளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
கண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )
கோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
புத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
பம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
ஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
ஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )
எப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )
என்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தனியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
கவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
பிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
குங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )
தடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
தில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
சரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
நான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
சந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
அச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )
சொல்லுறதை சொல்லிப்புட்டேன் ( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
நீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )
மனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )
பாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன்

சொந்த வாழ்க்கை

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர். அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு, ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் என்பதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார். இதனால், சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் அவரைச் சூழ்ந்தே இருந்தன. மேலும் குடிபழக்கம் அதிகம் உள்ளவராகவும், பெத்தடின் என்னும் போதைப்பொருளுக்கு அடிமையானவராகவும் இருந்தார்.

இறப்பு

சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

உண்மையை சொல்லப்போனால், சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

Tuesday, December 29, 2020

தென்றல் உறங்கிய போதும்

 படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி 
 
 
 
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
 

Wednesday, April 15, 2020

இரவுப் பாடகன் P .B .ஸ்ரீநிவாஸ்

P .B .ஸ்ரீநிவாஸ் 1947இல் மிஸ்.மாலினியில் தன் முதல் பாடலைப் பாடிய போது நான் பிறந்திருக்கவில்லை. சிறு வயதில் அவர் என் விருப்பத்துக்குரிய பாடகருமல்ல.
அந்தப் பருவத்தில் என் ஆர்வம் வீர, தீர,சாகஸப் படங்களில் மையம் கொண்டிருந்தது. குறிப்பிட்ட வயது வரை எம்.ஜி.ஆர்.தான் என் ஆதர்ஸ நாயகன். டி .எம் .சௌந்தரராஜனை மிஞ்சிய பாடகன் எவருமில்லை .1961 இல் நான் பார்த்த முதலாவது எம்.ஜி.ஆர். படமான 'அரசிளங்குமரி'யில் வரும் 'சின்னப் பயலே,சின்னப் பயலே சேதி கேளடா !' என்ற பாடல் மூலம் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டவர் அவர்.
'நான் ஆணையிட்டால்' என்று சவுக்கை சொடுக்கிய போதும், 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' எனக் கப்பல் கம்பத்தில் தொங்கிய படி கை வீசிய போதும் கதாநாயகனையும் பாடகனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 'குரல் வழி நடிகனான ' சொந்தரராஜனின் உரத்த தொனியும், தெளிவான உச்சரிப்பும் ,பாவமும் உற்சாகத்தைத் தூண்டிய காலம் அது. மீசை அரும்பி ,எம்.ஜி.ஆரின். 'குகை'யிலிருந்து நான் வெளியேறத் தொடங்கிய காலத்தில் இரண்டு குரல்களைப் 'புற்கள் மறைத்த பூக்கள் ' போல் கண்டு கொண்டேன் .
இனிமையும்,குளிர்மையும்,மென்மையும் ,குழைவும் கொண்ட ஏ.எம்.ராஜா, P .B .ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் அந்த இரண்டு குரல்களும் ஒரு காலத்து என் ஆதர்ஸ நாயகன் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு பொருந்தி வராதவை . நடிப்பில் உரத்த தொனியை வெளிப் படுத்திக் கொண்டிருந்த சிவாஜிக்கும் கூட இந்த இருவரும் சரிவரப் பொருந்தவில்லை.
இந்த இருவருடைய குரல்களும் பெரும்பாலும் ஜெமினிக்கு அளவெடுத்துத் தைத்த சட்டைகள் போன்ற பிரமையைத் தந்தன .
இரைச்சல் என்பதைத் தன்னியல்பாகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் மிகையுணர்ச்சி நடிப்பை மட்டுப் படுத்தி ,தணிவான நடிப்பை வெளிப்படுத்திய ஜெமினி கணேசனும் , மென்மையான குரல்களைக் கொண்ட ஏ.எம்.ராஜாவும் , P .B .ஸ்ரீநிவாசும் ஒரு கோட்டில் இணைந்து கொண்டமையில் வியப்பில்லை. ரசிகர்களும் அதை வரவேற்றார்கள் .
டி.ஏ.மோதி (காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா / 'இதை யாரோடும் எவரோடும் நீ சொல்லக் கூடாது -அம்மா / 'ஓ மோஹனச் செந்தாமரை-மகுடம் காத்த மங்கை' ) ,ரகுநாத் பாணிக்ரஹி ('நான் தேடும்போது நீ ஓடலாமோ'-அவள் யார் ) ,புருஷோத்தமன் (தென்றலே நீ செல்வாய் -மந்திரவாதி ) போன்றே பி.பி.ஶ்ரீனிவாஸுடையதும் மிகவும் மிருதுவான குரல் . ரசிகனை அவர் பட்டுப் பாதையின் வழியாக அழைத்துச் செல்கிறார். ‘டிங்கிரி டிங்காலே’, ‘அடி என்னடி ராக்கம்மா ‘ போன்ற உரத்த துள்ளல்களை அவரிடம் எதிர் பார்க்க முடியாது . ஆனால் அவரிடமிருந்து அபூர்வமாக வெளிப்பட்ட ‘பதுமைதானா’ , ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ ,’நல்லவன் எனக்கு நானே நல்லவன் ‘ போன்ற உற்சாகப் பாடல்களிலும் நிதானம் கெடாத ஓர் அழகிருக்கும். அவருடைய சோகப் பாடல்களும் மாரிலடித்துக் கொண்டு எழும் ஒப்பாரி ரகங்கள் அல்ல. ரசிகனின் மனதில் மெல்லெனப் பரவும் மௌனமான சோகம் அது. அந்த நுட்பத்தை அறிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே ‘ ,‘உடலுக்கு உயிர் காவல்’ , ‘மயக்கமா கலக்கமா’ ,’நெஞ்சம் மறப்பதில்லை ‘, போன்ற பாடல்களைக் கேட்க வேண்டும்.
P .B .ஸ்ரீநிவாஸ் அவர்கள் பல வகைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் என் கணிப்பில் அவர் தன் குரலில் காதலைக் கசிய விட்ட ஓர் 'இரவுப் பாடகர்'. காதல்தான் அவருடைய பெரும் பாலான பாடல்களின் மையம். சோகம் ,ஆற்றாமை, தன்னம்பிக்கை , உயிர்த்தெழல் என்ற கிளை நதிகள் அங்கிருந்து ஊற்றெடுத்துத்தான் அவருடைய பாடல்களில் பரவிச் செல்லுகின்றன.
மென்மையான சோகத்தைப் பரவ விடும் அவருடைய பாடல்கள் பலவற்றைக் கேட்ட படி நான் தூங்கிய நாட்கள் இருக்கின்றன.
ஊரடங்கிய இந்த நாட்களிலும் அவர்தான் இரவென்ற ஆற்றைக் கடக்க வைக்கும் படகோட்டி. அவர் பாட ஆரம்பித்ததும் நான் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க ஆரம்பிக்கிறேன் . மேகங்களுக்குள் ஒளிந்த நிலவை அவர் மீட்டெடுக்கிறார் . நட்சத்திரங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன .இரவு ஆற்றில் படகு நகர்ந்து கொண்டிருக்கிறது . .
(எனக்குப் பிடித்த அவருடைய பாடல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.)
1958- நெஞ்சம் அலை மோதுதே (மணமாலை )
1959- மலரோடு விளையாடும் (தெய்வபலம்)
1959- பதுமைதானா (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை)
1959- கனிந்த காதல் இன்பம் (அழகர் மலைக் கள்ளன்)
1959- அழகே...அமுதே – (ராஜா மலையசிம்மன்)
1960- பண்ணோடு பிறந்தது (விடிவெள்ளி)
1960- மாலையில் மலர் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- சிட்டுக் குருவி பாடுது (பாதை தெரியுது பார் )
1960- இன்ப எல்லை காணும் (இவன் அவனேதான்)
1960- கண்ணாலே பேசிக் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- தேடிடுதே (உத்தமி பெற்ற ரத்தினம்)
1960- அன்பு மனம் கனிந்த (ஆளுக்கொரு வீடு )
1960- ஏன் சிரித்தாய் ( பொன்னித் திருநாள் )
1960- நீயா நானா (மன்னாதி மன்னன்)
1961- என்றும் சொந்தமில்லை (புனர் ஜென்மம்)
1961- காற்று வெளியிடை (கப்பலோட்டிய தமிழன்)
1961- ஒரே கேள்வி – (பனித்திரை )
1961- என்னருகே நீ இருந்தால் (திருடாதே )
1961- காலங்களில் அவள் வசந்தம் (பாவமன்னிப்பு)
1961- பார்த்துப் பார்த்து நின்றதிலே- (மணப்பந்தல்)
1961- உடலுக்கு உயிர் காவல் (மணப்பந்தல் )
1981- யார் யார் யார் (பாசமலர்)
1962- சின்னச் சின்ன ரோஜா(அழகு நிலா )
1962- என்னைப் பார்த்தா (செங்கமலத் தீவு)
1962- ஒருத்தி ஒருவனை (சாரதா)
1962- அழகிய மிதிலை (அன்னை )
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம்)
1962- இந்த மன்றத்தில் (போலீஸ் காரன் மகள் )
1962- பொன்னென்பேன் (போலீஸ் காரன் மகள் )
1962- நிலவுக்கு என் மேல் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆண்டொன்று போனால் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆதி மனிதன் (பலே பாண்டியா )
1962- அத்திக்காய் காய் (பலே பாண்டியா
1962- அழகான மலரே (தென்றல் வீசும்)
1962- காற்று வந்தால் (காத்திருந்த கண்கள்)
1962- துள்ளித் திரிந்த (காத்திருந்த கண்கள் )
1962- வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
1962- கண் படுமே பிறர் (காத்திருந்த கண்கள்)
1962- கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்)
1962- மாலையும் இரவும் (பாசம்)
1962- பால் வண்ணம் (பாசம்)
1962- மயக்கமா ,கலக்கமா (சுமைதாங்கி)
1962- மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
1962- எந்தன் பருவத்தின் கேள்விக்கு (சுமைதாங்கி)
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம் )
1962- ரோஜா மலரே (வீரத்திருமகன் )
1962- பாடாத பாட்டெல்லாம் ( வீரத்திருமகன் )
1962- பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
1962- பூஜைக்கு வந்த (பாத காணிக்கை]
1963- எந்த ஊர் என்றவளே (காட்டு ரோஜா)
1963- நினைப்பதற்கு - (நினைப்பதற்கு நேரமில்லை )
1963- அவள் பறந்து (பார் மகளே பார்)
1963- மதுரா நகரில் (பார் மகளே பார்)
1963- என்னைத் தொட்டு (பார் மகளே பார் )
1963- நெஞ்சம் மறப்பதில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
1963- அழகுக்கும் மலருக்கும் (நெஞ்சம் மறப்பதில்லை )
1963- பூ வரையும் பூங் கொடியே (இதயத்தில் நீ )
1963- யார் சிரித்தால் என்ன (இதயத்தில் நீ )
1964- நாளாம் நாளாம் (காதலிக்க நேரமில்லை )
1964- அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை )
1964- போகப் போகத் தெரியும்- ( சர்வர் சுந்தரம் )
1964- கண்ணிரண்டும் மின்ன (பச்சை விளக்கு )
1964- நான் பாடிய பாடலை (வாழ்க்கை வாழ்வதற்கே )
1965- நீ போகுமிடமெல்லாம் (இதயக்கமலம்)
1965- தோள் கண்டேன். (இதயக்கமலம்)
1965- இரவு முடிந்து விடும் (அன்புக்கரங்கள்)
1965- செந்தூர் முருகன் கோயிலிலே (சாந்தி)
1965- சித்திரமே சொல்லடி – (வெண்ணிற ஆடை)
1965- காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- இளமைக் கொலுவிருக்கும் (ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- மையேந்தும் விழியாட [பூஜைக்கு வந்த மலர்]
1965- நேற்று வரை நீ யாரோ- [வாழ்க்கைப் படகு]
1965- சின்னச் சின்னக் கண்ணனுக்கு- (வாழ்க்கைப் படகு)
1965- பூத்திருக்கும் விழி எடுத்து(கல்யாண மண்டபம்)
1965- பார்த்தேன் சிரித்தேன் (வீர அபிமன்யூ )
1965- போவோம் புது உலகம் (வீர அபிமன்யூ )
1965- இரவின் மடியில் (சரசா B A )
1966- நீயே சொல்லு [குமரிப்பெண் ]
1966- காத்திருந்த கண்களே (மோட்டோர் சுந்தரம்பிள்ளை )
1966- மௌனமே பார்வையால் ( கொடிமலர் )
1966- நிலவே என்னிடம் [ராமு]
1967- கனவில் நடந்ததோ (அனுபவம் புதுமை )
1968- உன் அழகை கண்டு கொண்டால் (பூவும் பொட்டும்)
1968- தாமரைக் கன்னங்கள் ( எதிர் நீச்சல் )
1969- எங்கேயோ பார்த்த முகம் (நில் கவனி காதலி)
1969- ஆசை வைத்தால் அது மோசம்
1969- தேவி ஸ்ரீதேவி (தேவி)
-உமா வரதராஜன்


Tuesday, July 18, 2017

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும் Old Song

படம்: மாணவன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு: பீ.சுசீலா
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1970
நடிப்பு : ஜெய்சங்கர்,லக்ஷ்மி
ஆஹா ஹா ஹாஹா
லலலா லலலா லலலா
ஹே ஒஹோ ஹோ
லலலா லலலா ஆஹா ஹாஹா
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
நாணம் என்ற காலெடுத்து
முன்னால் வர
நூறு வகை சீதனமும் பின்னால் வர
நாள்.. மணநாள்.. தேடினால்
தா.. சுகம்.. தா நாடி வா
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
வா....
பக்கம் வா..
நெருங்கி வா...
தா...
தொட்டுத்தா...
தொடர்ந்து தா...
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

Friday, August 12, 2016

P SUSEELA'S FIRST SONG--Ethukku azhaithaai ethukku(vMv)--PETRA THAAI 1953


தமிழ் திரை இசைக்கு இனிய நாள்...
*********************************************************
17, 695 பாடல்கள் பாடி பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.

1952ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பெற்ற தாய்’ திரைப்படத்தில் ‘ஏதுக்கு அழைத்தாய்'… என்ற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து முதன்முதலாக பாடினார். பிறகு சுமார் 30 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா உள்ளிட்ட பல மொழிகளில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சினிமா பாடல் மட்டுமல்லாது ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.

1960ல் தொடங்கி 2016 வரை, தனியாக (சோலோ) 17 ஆயிரத்து 965 பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி என்ற சாதனைக்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்... இதற்கான சான்றிதழை கின்னஸ் அமைப்பு சுசீலா அவர்களிடம் வழங்கியுள்ளது...

என்றும் தொடரட்டும் தமிழ் திரை இசையின் வரலாற்று சாதனைப் பயணம்...

17, 695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்த பி சுசீலா அவர்களின்
'என்றும் இனிக்கும் முதல் பாடல்'...
****************************************************************************************************
"ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு"
படம் : பெற்ற தாய் (1953)
பாடியவர் : ஏ எம் ராஜா & பி சுசீலா
இசை : பெண்டியாலா
பாடல் : எம் எஸ் சுப்ரமணியம்
நடிப்பு : MN நம்பியார் & TD வசந்தா


Thursday, May 5, 2016

பார்த்த ஞாபகம் இல்லையோ Paartha Nyabagam Illayo

இன்றும் புதிய பறவையிளிருந்து விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் சேர்ந்திசையுடன் (CHORUS) கூடிய பாடல்களில் ஒன்றை பார்ப்போம். மற்ற முக்கிய இசைக் கருவிகள், அக்கார்டியன், வயலின்கள், பாங்கோஸ், காங்கோ ட்ரம் போன்றவை.
"பார்த்த ஞாபகம் இல்லையோ" ஆனால் சுசீலாவின் குரலில் பலமுறை கேட்ட ஞாபகம் பசுமரத்தாணிபோல் இன்னும் மனதில் பதிந்துள்ளது.
முதலில் ஆர்ப்பாட்டமான பான்கோசின் தாள ஒலி, பின் மேற்கத்திய முறையில் ஒரு அக்கார்டியன் இசை, மறுபடியும் பான்கோசும் அககார்டியன் இசையும் திரும்ப வாசிக்கப்படும்.பிறகு சுசிலாவின் குரலில்
"பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
பல்லவியில் பாங்கோஸ் முக்கியப் பக்க வாத்தியமாகவும், கூடவே தும் தும் என்று காங்கோ ட்ரம்மின் அதிர்வும் கேட்பவர்களுக்கு ஒரு கிளப்பில் நடனக்காட்சியை காணும் உணர்வை ஏற்படுத்தும்.
முதல் சரணத்திற்கு முன் அக்கார்டியன், ட்ரம்பெட், ஜாஸ் ஆகியவற்றின் கூட்டு இசை, பிறகு வயலின்களின் இசை, பின் அக்கார்டியனின் ஒரு சிறு இசை
"அந்த நீல நதிக் கரையோரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
(இங்கு ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ என்ற சேர்ந்திசை)
நான் பாடி வந்தேன் புது ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
இரண்டாம் சரணத்திற்கு முன் வயோலா, பாங்கோஸ், அக்கார்டியன், ட்ரம்பெட், ஜாஸ் ஆகியவற்றின் கூட்டு இசை, பிறகு வயலின்களின் இசை
இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
(இங்கும ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ என்ற சேர்ந்திசை)
உந்தன் மனதை கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
பிறகு அக்கார்டியன், ட்ரம்பெட், ஜாஸ் ஆகியவற்றின் கூட்டு இசை, பிறகு வயலின்களின் இசை
"அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை
இப்போது சேர்ந்திசையுடன்
"பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
என்று பாடி முடித்ததும் ஒரு அக்கார்டியன் சிறு இசை
பின் பான்கோசின் தாளத்தில் ஒரு தீர்மானத்துடன் பாடல் நிறைவுறும். சிவாஜியைப் போலவே நாமும் பிரமிப்பிலிருந்து மீள வெகு நேரமாகும் . சௌகார் ஜானகியின் நளினமான நடன அசைவுகள், அவரது எழில் கொஞ்சும் முக பாவங்கள், சிவாஜியின் ஸ்டைலான நடிப்பு, குழுவினரின் நேர்த்தியான நடனம், இசைக்குழுவினரின் ஆர்ப்பரிக்கும் இசை எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு இன்ப உலகத்துக்கே அழைத்துச சென்று விடும்.


Saturday, April 30, 2016

Thaaikku Pin Thaaram | Manusana Manusan | மனுஷன மனுஷன்





"ஹேய்"
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
மானம் பொழியுது பூமி விளையுது தம்பிப் பயலே,
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே;
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே;
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே;
இது தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியலே;
அதாலே;
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
"ஹோய், ஹ, ஹ், ஹா, கிக், கிக்,"
என்னடா நெளிஞ்சுகிட்டு போற,
நேரா போடா டேய்;
தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு,
தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு;
அது போல்,
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டுலே,
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே;
அதாலே;
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை;
"ஹ, ஹாய், ஹா, கிக், கிக், பா "
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே,
எதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே;
பூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே,
உன்னை புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பிப் பயலே;
"டேய் "
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே,
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை..

திரைப்படம் : தாய்க்குப் பின் தாரம்,
பாடல் : அ.மருதகாசி அவர்கள்,
பாடியவர் : டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள்,
இசை : கே.வி.மஹாதேவன் அவர்கள்,
இயக்கம் : எம்.ஏ.திருமுகம் அவர்கள்,
வெளியான ஆண்டு : 1956.

Friday, March 4, 2016

Ponnaana Manam - பொன்னான மனம் எங்கு போகின்றது

Ponnenrum Pooventrum - பொன்னென்றும் பூவென்றும்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
ஆ….ஆஹா ஹா ஹாஹா

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

ஆண் : மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

ஆண் : கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று
ஓடும் பருவங்கள் கணநேரம் இன்று
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று

ஆண் : கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரைச்சொல்லி
இன்பம் அவளென்னும் அறியாத கல்வி
இன்பம் அவளென்னும் அறியாத கல்வி

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Mmmm… mmmm…
Aa aahaa haa haahaa

Male : Ponnendrum poovendrum
Thaenendrum solvaeno…

Male : Ponnendrum poovendrum
Thaenendrum solvaeno
Pennai paarthaal solla thondrum
Innum nooraayiram… innum nooraayiram

Male : Moondru kani chaaru ondraaga pizhindhu
Moga rasam konjam alavodu kalandhu
Moondru kani chaaru ondraaga pizhindhu
Moga rasam konjam alavodu kalandhu
Bodhai madhuvaaga pon maeni malarndhu
Poovai vandhaal pennaaga pirandhu
Poovai vandhaal pennaaga pirandhu

Male : Ponnendrum poovendrum
Thaenendrum solvaeno
Pennai paarthaal solla thondrum
Innum nooraayiram… innum nooraayiram

Male : Kodai vasanthangal kulir kaalam endru
Odum paruvangal kana neram nindru
Kaadhal kavi paadum aval maeni kandu
Kaana kan vendum oru kodu indru
Kaana kan vendum oru kodu indru

Male : Kanni ilam koondhal kalyaana palli
Kangal oli veesum adhikaalai velli
Kanni ilam koondhal kalyaana palli
Kangal oli veesum adhikaalai velli
Thendral vilaiyaadum aval paerai cholli
Inbam aval innum ariyaadha kalvi
Inbam aval innum ariyaadha kalvi

Male : Ponnendrum poovendrum
Thaenendrum solvaeno
Pennai paarthaal solla thondrum
Innum nooraayiram… innum nooraayiram

Thendralukku Endrum - தென்றலுக்கு என்றும் வயது

60's to 70's era golden songs

Gangai nathiyoram - Varaprasadam

Monday, November 9, 2015

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ NILAVU ORU PENNAAKI...... from Film: Ulagam Sutrum Vaaliban (1973)...


நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீர் அலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு களமாக போர்தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்த கன்னத்தில் 
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள்தானோ
பவளமென விரல்நகமும் பசும்தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கிவரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாகா வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளிஎடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண் உடலை என்னவென்பேன்
மடல் வாழை துடை இருக்க மச்சமொன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமையெல்லாம் முழுமைபெற்ற அழகியென்பேன்
நன்றி: வாலி

Wednesday, August 20, 2014

இளவேனில் மலைவானில் 1976ஆம் ஆண்டு வெளியான "கோமாளிகள்" திரைப்படத்திலே இடம்பெற்ற பாடல்

ஈழத்து பாடல்கள் வரிசையில் கோமாளிகள், ஏமாளிகள், வாடைக் காற்று, அனுராகம், புதிய காற்று படங்களின் பாடல்கள் மறக்கமுடியாதவை.இந்தப் பாடல் 1976ஆம் ஆண்டு வெளியான "கோமாளிகள்" திரைப்படத்திலே இடம்பெற்ற பாடல்...எழதியவர் "சிலையூர்" செலவராஜன்...
இலங்கையின் ஊர்களின் பெயர்களையும் நதிகளின் பெயர்களையும் இணைத்து ஒரு பெண்ணை வர்ணிப்பதுபோல்எழுதியிருந்தார்....
இசையமைத்தவகள் கண்ணன்-நேசம் (தியாகராஜா) இரட்டையர்கள் இந்தப் பாடல் மிகவும் அற்புதமான பாடல். கவிஞர் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இக்காட்சியில் தோன்றி நடித்துள்ளார்கள்.
இது எமது அடையாளச் சின்னங்கள். இன்று நவீன தொழில்நுட்பம் இலங்கையில் இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி எத்தனை பாடல்கள் வந்தாலும் இப்பாடலுக்கு நிகராக எந்தப் பாடலும் இல்லை என்றுதான் சொல்லலாம்.எமது நாட்டு இயற்கை வளங்களை
வர்ணித்த அழகியபாடல்
''மலைநாடு பால்ஆறுமொழிகிறது
மகாவலியாக மூதூரில் இப்படி கவிஞரின்
எண்ணம்
இளவேனில் மலைவானில் எதிர்கால மகாராணியே
இனிய காதலை கிள்ளும் பாடலாகவும் எமது மண்ணின் இயற்கை
வளங்களை ரசித்த பாடலாகவும் அமரராகிவிட்ட "சில்லையூர்"அண்ணன் எழுதியபாடல்,படத்தில் அவரே நடித்தும் இருந்தார்.ஜோடியாக நடித்தவர் அவரது துணைவியார் கமலினி.

Friday, July 11, 2014

பட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே Aarambam Aavadhu Pennukkullae - Thangap Padhumai (1959)





( நீங்கள் கொலைகாரனா கொற்றவனை கொன்றீர்களா?
கூறுங்கள் அத்தான் கூறுங்கள்..)

வீடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தை கொன்றவன் நான்
வாழ தகுந்தவளை வாழாமல் வைத்து விட்டு
பாழும் பரத்தையினால் பண்பு தனை கொன்றவன் நான்
அந்த கொலைகளுக்கே ஆளாகி இருந்துவிட்டேன்
இனி எந்த கொலை செய்தாலும் என்னடி என் ஞானபெண்ணே….
என்னடி என் ஞானபெண்ணே…என்னடி என் ஞானபெண்ணே

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சிக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

(அத்தான்…. அத்தான்…. உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்.
என் மீது உண்மையான அன்பிருந்தால் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
ம்ம்.. யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அதான்..)

அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே…..
அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தை கட்டி சுமக்க துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானபெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானபெண்ணே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

( அத்தான் உண்மையை கூறமுடியாதபடி அவ்வளவு பெரிய தவறு
என்ன செய்து விட்டீர்கள்? )

தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானபெண்ணே…….
தவறுக்கும் தவறான தவறாஇ புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே..தனிப்பட்டுப்போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே..

(ஆ….ஆ…. அத்தான்…அத்தான்… இது என்ன அத்தான்.. இது என்னா?
உங்கள் கண்கள் எங்கே அத்தான்… உங்கள் கண்கள் எங்கே..? )

கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ

( கருணையே வடிவமான தெய்வம உங்கள் கண்களை பறித்தது? )

எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ

( நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையை கூறுங்கள்… உங்கள் மனைவி கேட்கிறாள்..
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறதத்தான்… )

சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்.. சம்சாரம் ஏதுக்கடி..
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி………
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி தங்கம் … மன்னிக்க கோடாதடி..
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி