Search This Blog

Sunday, August 22, 2021

பொறியியல் சித்தர் போகர்!

 


படித்து பாருங்கள், வியந்து போவீர்கள்...
யார்யாரோ கப்பல் கண்டுபிடித்தார்கள் என்று நாம் படிக்கின்றோம். ஆனால் பல துறைகளைப்பற்றி ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ள போகர் கப்பல் செய்வது எப்படி என்றும், அதை செய்யும் முறையையும், போகர், தனது போகர் ஏழாயிரம் சத்தகாண்டம் என்ற நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி சசில முக்கிய குறிப்புகளை சித்தர்களின் குரல் வாயிலாக இன்று பகிர்கிறேன்......
''வாழவே யின்னுமொரு சூத்திரங் கேள்/
வையகத்தில் நாதாக்கள் செய்ய மாட்டார்/
நீழ்கவே கருவூரார் அனேகஞ் செய்தார்/
நிலையான வித்தையது அதீத வித்தை/
மூழ்கவே கண்ணபிரான் பள்ளி கொண்ட/
முனியான சித்தரிஷி தாமுங் கண்டேன்/
மாழ்கவே பாற்கடலின் மத்தி யத்தில்/
மகத்தான கப்பலொன்று செய்தேன் யானே.'' (போகர்- 7000/ 1926)
1926 ஆவது பாடலில் இருந்து 1943 ஆவது பாடல்கள் வரையில் கப்பல் செய்வதற்கான மரங்கள், பலகைகள், சட்டங்கள், ஆணிகள் என பலவித பொருட்கள் பற்றியும், கப்பல் செய்யும் முறையை பற்றியும் படிப்படியாக விளக்கி சொல்லுகின்ற போகர் சித்தர், தொடர்ந்து கப்பலில் சித்தர்களை ஏற்றிக்கொண்டு சீனாவுக்கு சென்றதையும், அங்கிருந்து இமயமலை பகுதிக்கு சென்றதையும் கூறுகின்றார்.
''ஆக்கமுடன் கப்பலொன்று நேமித்தே தான்/
அதின்மேலே வெகுசனங்கள் யேத்தி விட்டேன்/
பார்க்கமுடன் சித்தர்முனி ரிஷிகள் தம்மை/
பாங்குபெற மேலவரை யேத்தி விட்டேன்/
நோக்கமுடன் மேல்வரையில் தானிருந் தேன்/
நோட்டமுடன் சுக்கானை முடுக்கி விட்டு/
சேர்க்கமுடன் கடலேழுஞ் சுத்தி வந்து/
சூட்சமுடன் கப்பலதை நிறுத்தி னேனே.'' (போகர்- 7000/ 1944)
''நிறுத்தினேன் சீனபதி கடலோரந் தான்/
நேர்ப்புடனே சித்தர்முனி ரிஷிகள் தாமும்/
திருத்தமுடன் தானிறங்கி யாசீர் மத்தில்/
சிறப்பாக சென்றுவிட்டார் செனங்க ளெல்லாம்/
பெருத்தமுடன் சுக்கானை முடுக்கி யானும்/
பொங்கமுடன் சீனபதி கடலை விட்டு/
வருத்தமுட னிமையகிரி யோரப் பக்கம்/
வாகுடனே சென்றுமல்லோ நிறுத்தி னேனே.'' (போகர்- 7000/1945)
" பாற்கடலின் மத்திமத்தில் மகத்தான மரக்கப்பல் ஒன்று செய்தேன். ஆயிரம் பேர் பயணிக்க கூடிய அக் கப்பலை சீனபதி மக்கள் மிகவும் மெச்சினார்கள். அதன் நீளம் 800கஜம், அகலம் 100 கஜம். (1 கஜம் என்பது 3 அடி). நீள் சதுரமான அதை எப்படி பிசகில்லாமல் செய்து முடித்தேன் என்று சொல்கிறேன்.
வலுவான பலகைகள் எடுத்து வில்லாணி அடித்து நீளமான கட்டுமானம் செய்தேன். அதன் மத்தியில் பீடம் அமைத்து, அதை முழு உயரத்திற்கு கொண்டு சேர்த்தேன். கப்பலில் ஏழு தளங்கள் அமைத்தேன், ஒவ்வொன்றிலும் தொட்டிஎன்ற பீடம் வைத்து, உயரம் நூறு கஜம் உயரம் கொண்ட மண்டப தூண்கள் அமைத்தேன். கீழிருந்து முதல் மாடிக்கு செல்ல சாளரமும் கதவும் வைத்து வழி செய்து, எல்லா தளங்களையும் சேர்த்து மொத்தம் 64 வீடுகளை கட்டி கிழக்கு-மேற்காக 128 வாசலோடும், தெற்கு-வடக்கு முகமாய் உருதியாணி அடித்து கண்ணாடி சாளரங்கள் வைத்து, கப்பலின் சுவரோரம் கம்பிகள் வைத்து ஒரு பெரிய கோட்டையை பாங்குடன் அமைத்தேன்.
தளத்தின் ஒருபுறம் சுக்கான் அமைத்து, நால்புறமும் கதவு வைத்து, ஒவ்வொரு தளத்திலும் பரண் (deck) அமைத்து, வடம் வைத்து சங்கிலி கொண்டு சுக்கான் போட ஏதுவாக வழி செய்து, கப்பலின் மேலிருந்து கீழ்வரை இரும்பு குழாய் உருளை அமைத்து (pipes) வைத்தேன். தளத்தின் தலைபுரத்தில் அக்னிவைத்தேன், இடப்பக்கம் தண்ணீர் தொட்டி அமைத்து, (boiler) கொதிகலன் செய்து, (airtight) குழாய்கள் கசிவின்றி நீராவி கொண்டு செல்லும். கீழ்நிலையில் பொருத்திய சக்கரங்களை (turbine shaft) நீராவியின் உயர் அழுத்தம் கொண்டு திருப்ப, கப்பலும் நகரலாச்சு.
கடைசி முனையில் வசதியாய் நங்கூரம் மாட்டி, கப்பல் ஓடாமல் இருக்க அதை தட்டிப் போட்டேன். கீழ்நிலையில் கொதிபெரும் நீராவிக்கு வெப்பமூட்டும் அக்கினியின் புகை சூழாதிருக்க, வாட்டமுடன் எட்டங்கால் மேலே புகைபோக்கியும் (chimney) இரும்பினால் அமைத்தேன். நீராவியின் நிதானம் அறிந்து நேர்த்தியுடன் சூத்திரமுடன் ஓட்டினேன். வெகு ஜனகளையும், சித்தர் முனிகளையும் எற்றிபோனேன். மேல் அறையில் நானிருந்து சுக்கானை இடமும் வலமும் வளைத்து முடக்கிட்டேன். கடல் ஏழும் சுத்தி வந்து இமயகிரி பக்கத்தில் சீனபதி கடலோரம் கப்பலை வாகாக வந்து நிறுத்தினேன். என்மீது பட்சம் வைத்து என் நூதனமான வித்தைகளுக்கு அருள்புரிந்த திருமூலர்/ காலாங்கிநாதர் பாதங்களுக்கு என் அனந்தங்கள்".
இவ்வாறு போகர் தன சப்தகாண்டத்தில் சொல்லியுள்ளதை படித்தவுடன் பிரமித்து போனேன். ஆய்வின் படி சீனாவில் இவர் வந்து நிறுத்திய இடம் மவுண்ட் கிங்யாங் பகுதி என அறிந்து கொண்டேன். அன்றே அவர் Underwater telescope பொருத்தியுமிருந்தார். பரங்கியர் தேசத்தில் (சீனராக) 12000 வருடங்கள் வாழ்ந்தேன் என்று சொல்லியுள்ள போகர், துவாபரயுக பிறபகுதியில் (அ) கலியுகத்தின் முற்பகுதியில் இந்த பிரம்மாண்டமான டைடானிக் போன்ற கப்பல் கட்டுமான சாதனையை செய்திருப்பார் என்று நினைக்கிறன்.
சித்தர் போகர் பிரான் ஓர் அற்புத சித்தர் பொறியியல் துறையின் மிக சிறந்த சித்தர். சீன தேசத்தில் அவர் செய்த வித்தைகள்
பற்பல கோடி. தன் வித்தைகளை "வேடிக்கைச் சிமிட்டு வித்தை" என கண்சிமிட்டிச் சொல்லுவார் போகர்.
கவி பாடும் புலவர் என்பதால் அத்தனை செயல்களையும் அனுபவங்களையும் கண்டுபிடிப்புகளையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் சீன மொழியில்.
போகர் கட்டிய மரக் கப்பலும் தேவரதங்களும் வேறெந்த சித்தர்களும் சிந்திக்காதவை.
அவற்றை உருவாகிய விதத்தை
பாடம் போல் தன் பாடல்களில் பாங்காய் படைத்திருக்கிறார்.
2400 அடி நீளம்.
300 அடி அகலம்.
300 அடி உயரம்.
7 மாடிகள்.
64 வீடுகள்.
கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் !
2400 அடி நீளம்..
300 அடி அகலம்...
300 அடி உயரம்....
7 மாடிகள்.....
64 வீடுகள்.
இவை அரண்மனை ஜாடையில்....!
கிழக்கும் மேற்குமாய் வாயில்கள்.
தெற்கும் வடக்குமாக ஜன்னல்கள்.
ஒவ்வொரு மச்சும் ஆறுகால் மண்டபம். ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள்..
இத்தனை பிரமாண்டமும் எதன்மீது தெரியுமா ?
ஒரு மரக் கப்பலின் மீது.!!
டைட்டானிக் கப்பலே கிட்ட வர முடியாத அத்தனை அம்சங்கள்!
கப்பல் இயங்கும் தொழில்நுட்பம்.
போகர் கொண்ட மதிநுட்பம்.
அப்பப்பா...
என்ன ஆச்சரியம் ..!
அந்த கப்பல்
நீராவிக் கப்பலாம்.
கப்பலின் தலைவர்.. இயக்கிய மாலுமி
யார் தெரியுமா ?
போகர் தான்...
தன்னிகரில்லாத போகர் பிரான் தான்.
சீனாவில் இருந்தபோது
அமைத்த
அந்த கப்பலில்
சீன மக்களையும்
ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி
ஏழு கடல்களையும் காண்பித்தார்
சுற்றுலா பிரியரான பற்றிலா சித்தர்.
சுற்றுலா.
ஆன்மீக சுற்றுலா.
அவர் மக்களுக்கு சொன்ன
அகமகிழ் தத்துவம்.
கடல் வழிப் பயணத்திற்கு
மரக் கப்பல் படைத்தவர் விண்வெளிப் பயணத்தை
விட்டு வைப்பாரா என்ன !
வானூர்தியும் படைத்தார்.
கையை நீட்டி , சித்து புரிந்து மந்திரத்தால் மாங்காய் பறித்திடவில்லை சித்தர் பிரான்.
உயர் தொழில்நுட்பம்.
நுட்ப இயந்திர இயக்கம் அதன் சிறப்பம்சம்.
அந்த பறக்கும் விமானத்தின் பெயர் தேவரதம் .
விளையாட்டாய்
அதை காத்தாடி
என்று அழைப்பது
போகரின் வழக்கம்.
காத்தாடிக்குப்
பட்டம் என பெயர் உண்டு அல்லவா?
பறக்கும் பட்டமே காத்தாடி.
30 அடி நீளம்
30 அடி அகலம்
என சதுர பரப்பில் பட்டம் செய்தார்
போகர்.
ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து இன்றைய ஹெலிகாப்டர் மாதிரி பறக்க வைத்தார்.
காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளும் சித்தர் தொழில்நுட்பங்களும் கொண்டு காத்தாடி செய்து பறக்கவிட்டார் போகர்.
சீன மக்களை ஏற்றிக் கொண்டு முதலில் முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார்.
பின் உலகம் முழுதும் பல நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.
ஏற்கனவே ககன குளிகை கொண்டு தான் மட்டும் பறந்தவர்- பல்லாயிரம் மைல்கள் கடந்தவர். இப்போது சீன அன்பர்களுக்காக- சீன மக்களுக்காக காத்தாடியை அர்ப்பணித்திருக்கிறார்.
போகர் காத்தாடி துணை கொண்டு போன நாடுகள் பார்த்த சித்தர்கள் பெற்ற பாடங்கள் படைத்த பாடல்கள் அதிகம்.
போகர் சித்தர்களில் விவேகமானவர். விஞ்ஞானத்தில் விற்பனர்.
கற்க வேண்டியதைக் கற்பதும் கற்பிக்க வேண்டியதை பிறருக்குக் கற்பிப்பதுமே அவரது கல்விக்கொள்கை.
காத்தாடி தயாரிப்பதற்காகவே போகர்
அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.
அஸ்வினி மகரிஷியிடம் ஓர் ஆகாயப் புரவியிருந்ததாம்.
அது பஞ்சலோகத்தை உருக்கிச் செய்த உலோகப் புரவி .
அது பறப்பதைப் பார்க்கும் போது ஒளிபொருந்திய சிவரதம் போல் இருக்குமாம்.
அஸ்வினி சித்தரைச் சந்தித்து போகர் பிரான் தாள் பணிந்த போது போகரின் பெருமைகளை திறமைகளை
அம்மகரிஷி ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை வாழ்த்திப் போற்றியதோடு தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார் அசுவினி.
அதன்படி வானரதம் தயாரித்த போகர் பிரான் அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.
உண்மையில் முதன் முதலில் "உலகம் சுற்றிய வாலிபர்" போகர் தான்.
போகரின் உலக பயணம் அறிய அவர் வார்த்தைகளுடன் பயணித்தால் சுவாரசியம் கூடும்.
'தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்.
தக்காண எண்ணாயிரம் காதமப்பா...
"வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா."
"கோடி பேர் சமாதிநிலை
தன்னைக் கண்டேன் கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்"
இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம். கலைமிகு ரோமாபுரிப் பயணம். ரோமாபுரிக்கு
அடுத்து ஜெருசலேம் செல்கிறார்.
"பாலான குருபரனை வணங்கி யானும் பார்க்கவே ஜெருசலேம் போகவென்று மானான மாதாவைக் காணவென்று வணங்கினேன்
அவர் பாதம் தொழுதிட்டேனே!"
என்னவே இயேசுவின் தன் மகிமை மெத்த எடுத்துரைத்தார்.
"சீஷர் வர்க்க அநேகம் பேர்."
ஜெருசலேமில் மேரி மாதாவையும் இயேசு பிரானையும் தரிசனம் கண்டவர் அடுத்து சென்றது அரபு தேசம்.
அரபு நாட்டு பயணத்தின் நோக்கம் இணையற்ற இறைதூதர் நபிகள் நாயகத்தை தரிசிப்பது தான். அதை போகரே சொல்கிறார்.
"மன்னர் மெய்ச்சு மக்கவாம் புரியை
காண உவகையுடனே ரதம் திருப்பி."
"திண்பான முகமது மார்க்கத்தார்கள் சிறப்புடனே கண்டேனே கோடி பேரே!"
மெக்காவில் சமாதி நிலையிலிருந்த யாகோபுவைச் சந்தித்த போகர் அவரது ஞான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். அப்புறம் அவரது பயணம்
தென் அமெரிக்கா என்கிறது பிறதொரு குறிப்பு.
"போச்சா" என்பவர் தென் அமெரிக்கா வந்து
எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக -
கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக
எழுதி வைத்திருக்கிறார் சிலி நாட்டு வரலாற்றாசிரியர் மைகாஸ் ( Mucas ) என்பவர்.
அந்த போச்சா போகர் தான் என்கிறது ஓர் ஆய்வுக் குறிப்பு.
உலகம் சுற்றிய வாலிப சித்தர் பாரிஸ் நகரையும் விட்டுவைக்கவில்லை.
"பண்பான குளிகையது பூண்டு கொண்டேன்.
பாங்கான பாரிஸ் சபதியைக் கண்டேன்"
என வியக்க வைக்கிறார்.
உலகைச் சுற்றிய அனுபவம் ,
உமையவள் வழங்கிய ஞானம்
போகருக்கு மட்டுமல்ல உலகுக்கும்
பற்பல அறிவியல் நன்மைகளை வழங்கின.
நிலம் ஒரு பங்கு
நீர் மூன்று பங்கு
என்று புவிச்சூழல் அமைப்பை முதலில் சொன்னவர் போகர் பெருமானே.
கடல் பயணத்தின் போது கடும் பாறையை - பாயும் சுறாவைக் கண்டறிந்து விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.
இன்றைய பெரிஸ்கோப்... போகர் கண்டுபிடித்த அன்றைய போகர் ஸ்கோப் .
பீங்கானும் கண்ணாடியும் போகரின் கண்டுபிடிப்புகளே.
வெப்பக் காற்றை நிரப்பி உயரே பறக்கும்
பலூன் போகரின் கண்டுபிடிப்பே. அதற்கு அவர் வைத்த பெயர் "கூண்டு வித்தை"
பாராசூட்டிற்கு முன்னோடி போகரே. அதை "குடை வித்தை" என அறிமுகம் செய்தார் விஞ்ஞானி போகர்.
கடலுக்கடியில் பாதுகாப்போடு பயமின்றிப் பயணிக்க கவச உடையோடு சுவாசக்குழாய்
முதலான உபகரணங்களை பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தவர் போகர் பிரான்.
அன்று உருவாய் உலகைச் சுற்றிய போகர் பிரான் இன்று அருவாய் பழனி, மகேந்திரகிரி , காஞ்சிபுரம் பேரூர், சதுரகிரி ஆகிய தமிழகத் திருத்தலங்களிலும் , இலங்கையில் கதிர்காமத்திலும் சமாதி நிலையிலும் , இந்திய இமயமலைப் பகுதிகளில் அமர்நாத், கேதார்நாத் பத்ரிநாத். திபெத் - சீன பகுதியில் கைலாஷ்நாத்.
நேபாளத்தில் பசுபதிநாத் ஆகிய
ஐந்து தலங்களில் நிஷ்ட நிலையிலும்
அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

சித்தர்களின் குரல்

No comments:

Post a Comment