Search This Blog

Monday, September 21, 2020

நெடுமரங்கட்கு ஓர் அஞ்சலி


புற்களை விரும்பிக் கால்கள் பதிப்பீர்
குட்டைச் செடி களை உதைத்து மிதிப்பீர்
நிமிர்ந்த நெடுமரம் வணங்க மறுக்கும்
கொடுவாள் ஏந்தி வெட்டிச் சரிப்பீர்
விதைகளினின்றும் வேர்களினின்றும் மரங்கள் விளையும் விந்தை அறியா மூடர் நீவிர்
கையில் ஏந்திய ஆயுதங் கனத்து
இரும்பு நெகிழ்ந்து கயிறாய்த் திரிந்து
கையைப் பிணைத்துங் கழுத்தை நெரிக்கையில்
விழுந்த மரங்கள் வனமெனச் சூழும்
-பேராசிரியர் சிவசேகரம்
‘தேவி எழுந்தாள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

No comments:

Post a Comment