Search This Blog

Wednesday, May 7, 2014

ஒரு தோற்றுப் போன விடுதலைப் போராட்டம்

துப்பாக்கிகள்
இன்னமும்
இயங்கக்கூடிய
நிலையில்
இருகின்றன, 
அதை
இயக்கியவர்கள்
யாருமே இப்ப
இருப்பில்
இல்லை.....
மரண தேவதைகள்
இன்னமும்
சாட்சியங்களுடன்
இருக்குறார்கள்,
அதில்ப்
பேசித் தீர்க்கப்
பேச்சு வார்த்தை
தேடிய வாய்கள்
திறக்கப்படுமுன்னே
நிரந்தரமாகவே
மவுனிக்கப்பட்ட
மரண அடையாளங்கள்
ஒன்றுமே இப்ப
மனிதர்களிடம்
இல்லை.....
விடுதலையின்
தொடக்க நெருப்பு
இன்னமும்
அணையாமல் இருக்கு,
அதை
சாம்பல் மேடுகளில்
வன்னிக் காடுகளில்
சமுத்திரக் கரையில்
பொட்டல் வெளிகளில்
எரிய வைத்து
நடந்த சுவடுகள்
ஒன்றுமே இப்ப
இயற்கையிடம்
இல்லை....
இப்பவும்
வெற்றிகரமாகக்
கற்றுக் கொள்ள
எவளவோ
தந்து விட்டு
சென்றுள்ள
ஒரு
தோற்றுப் போன
விடுதலைப்
போராட்டம்
வரலாற்றில் மட்டும்
இருக்கு..........
நாவுக் அரசன்
ஒஸ்லோ 06.05.14

No comments:

Post a Comment