Search This Blog

Sunday, October 2, 2011

மது குடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தும் மாத்திரை கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் மது போதைக்கு ஏராளமானவர்கள் அடிமைகளாக உள்ளனர். அவர்களை மது குடிப்பதில் இருந்து கட்டுப்படுத்த தற்போது புதிய மாத்திரையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்த மாத்திரை சாப்பிட்டவுடன் மது குடித்தால் ஏற்படும் போதை உணர்வு முகத்தில் உண்டாகும். அதை தொடர்ந்து அதிக அளவு மது குடிப்பது கட்டுப்படுத்தப்படும். இந்த மாத்திரை சாப்பிடுவதால் வேறு எந்த பக்க விளைவு பாதிப்பு ஏற்படாது. இந்த மாத்திரைகள் முதலில் எலிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. அது வெற்றிகரமாக முடிந்தது. எனவே அந்த மாத்திரைகளை போதை அடிமைகளாக இருக்கும் மனிதர்களுக்கும் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த மாத்திரைகள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment