Search This Blog

Thursday, July 25, 2019

'தில்லானா மோகனாம்பாள்'. குறித்து வெளிவந்த சுவாரசியமான செய்தி

Chandran Veerasamy
ஆனந்தவிகடனில் ஜெமினி கதை இலாகாவில் பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு கலைமணி என்ற பெயரில் எழுதி வெளியான தொடர்கதைதான் 'தில்லானா மோகனாம்பாள்'. அது திரைப்படமாகவும் வந்து மிகவும் பெரும் வெற்றி பெற்றது. இது குறித்து வெளிவந்த செய்தியொன்று சுவாரசியமானது.

'தில்லானா மோகனாம்பாளை' திரைப்படமாக எடுக்க விரும்பி பிரபல டைரக்டர் ஏ.பி.நாகராஜன் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் சென்று அனுமதி கேட்டார். அதற்கு வாசன் அவர்கள் தானே அதை எடுக்க விரும்பியதாகவும், பின்னர் சில காரணங்களால் எடுக்க முடியவில்லை என்றும், அதை ஏ.பி.நாகராஜன் எடுப்பதற்கு தனக்கு முழுச் சம்மதம் என்றும் தெரிவித்தார். உடனே ஏ.பி.நாகராஜன் ஒரு தொகையை வாசன் அவர்களிடம் கொடுத்தார். அவரும் அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வைத்தார்.
மறுநாள் ஏ.பி.நாகராஜன், வாசன் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டோம், அப்போது ஜெமினி கதை இலாகா எல்லாம் மூடப்பட்டுவிட்டது. கலைமணி என்கிற கொத்தமங்கலம் சுப்பு வீட்டில்தான் இருப்பார். அவரிடமும் ஒரு வார்த்தை மரியாதைக்காகச் சொல்லி அனுமதி வாங்க வேண்டுமென்று அவர் வீட்டுக்குச் சென்றார். அவரும் மகிழ்ச்சியோடு அனுமதி வழங்கி ஆசியும் வழங்கினார். அப்போது அவரிடமும் ஒரு தொகையைக் கொடுக்க ஏ.பி.நாகராஜன் முயன்றார். உடனே சுப்பு அவர்கள் அவர்களைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு உறையைக் கொண்டு வந்தார். அது என்ன என்று நாகராஜன் கேட்க, நீங்கள் இங்கு வருவதற்கு முன்னமேயே முதலாளி வாசன் அவர்கள் இந்தத் தொகையை நீங்கள் கொடுத்ததாக என்னிடம் கொடுத்தனுப்பி விட்டார் என்றார். ஏ.பி.நாகராஜனுக்கு வாசனைப் போற்றுவதா, கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை.
- நன்றி : பாரதி பயிலகம் வலைப்பூ

No comments:

Post a Comment