Search This Blog

Monday, September 17, 2018

கவிதைகளை எழுதுவது கவிதையாகாது

ஒரு நாட்டுப்பாடல்
~ ஜிபிக்னியூ ஹெர்பெர்ட்
மொழியாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
உழவனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
விதைத்து அறுப்பது
என்றான் உழவன்.
தையல்காரனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கிழியாத, வெதுவெதுப்பான ஆடைகளைத் தயாரிப்பது
என்றான் தையல்காரன்
தளபதியின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கொரில்லாவுக்கு எதிராக பூர்ஷ்வா வர்க்கத்தின்
இராணுவத்தை
வழிநடத்திச் செல்வது என்றான் தளபதி
கவிஞனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
எனக்குத் தெரியாது என்றான் கவிஞன் -
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதையாகாது மகனே!
Kutti Revathi

No comments:

Post a Comment