Search This Blog

Thursday, June 9, 2011

விட்ட இடத்திலேயே.


 
Join Only-for-tamil
ஆயிரம் பேர் கொண்ட சபையில்

அர்த்தமாய்த் தெரிபவன் நீ மட்டுமே...
நிழலாய் எப்போதும் என்னுள்
நினைவாகவே நிற்கின்றாய் ....

நீ
படிக்கிறாய் என்றே
கவிதை எழுதுவேன்...
என்னை படித்த அளவு
நீ
கவிதை படித்ததில்லை!
Join Only-for-tamil
உள்ளங்கசிந்து நினைந்துருகி
கவிதைகள் பல புனைந்தாலும்
எடுத்துச் செல்லவும்
கொடுத்துச் செல்லவும்
உன்னைவிட இங்கு
யாரும் இருந்திடவில்லை

உடையும் நீர்க்குமிழியின்
காற்றைப் போல
நான் உடைந்தாலும்
உள்ளிருப்பது நீயல்லவா..
கவிதை உனக்கு பெரிதல்ல
உன்னை விட
வேறெதுவும் எனக்கு
பெரிதல்ல..

மௌனங்களின் இடைவெளியை
கடக்க வழிகள் பல இருந்தும்
மீண்டும் இணைகின்றோம்
விட்ட இடத்திலேயே......
Join Only-for-tamil
சலனமேயில்லாமல்
என் தனிமையைக் கண்டு
ரசிப்பவர்களுக்கு மத்தியில்
என் நினைவில்
புதைந்திருக்கும் துயரங்களை
புறந்தள்ளி உன் நினைவுகளை
உள்ளத்தினுள் பொருத்தி
மீண்டும் பொருமுகிறேன்...

எத்தனை முறை
புரட்டிப் பார்த்தாலும்
கிழிந்து போகாத
உன் ஞாபகப் பக்கங்களை
எனது காலத்தின் சிறகுகளோடு
கட்டிவைக்கின்றேன்...
Join Only-for-tamil

No comments:

Post a Comment