Search This Blog

Tuesday, December 29, 2020

Does emotion terms have the same meaning across cultures?

By mapping the meanings of the words used to communicate emotions across more than one-third of the planet’s spoken languages, researchers found that there is significant variation in how emotions are expressed across cultures.


The authors examined nearly 2500 languages to determine the degree of similarity in linguistic networks of 24 emotion terms across cultures . There were low levels of similarity, and thus high variability, in the meaning of emotion terms across cultures.
Similarity of emotion terms could be predicted on the basis of the geographic proximity of the languages they originate from, their hedonic valence, and the physiological arousal they evoke.

Cultural variation in the meaning of emotions

The results of this latest research highlight both
biological and cultural processes that influence the way we think about and
experience emotions. The cross-cultural variation in the meaning of emotions
suggests that people around the world may experience emotions differently. For
example, while the concept of love was more related to happy in Indo-European
languages, it was more related to pity in Austronesian languages. And while the
concept of anxiety was more related to fear in Tai-Kadai languages, it was more
often paired with grief in Austroasiatic languages.


The colexification patterns of emotions depended on the
geographic proximity of the languages. Those language families that were closer
to each other tended to group emotion concepts more similarly than those
increased opportunities for contact between speakers of those languages—through
languages that were far apart. According to the researchers, this may be due to
their emotions.
trade, migration, or shared ancestry—which, in time, influenced the way they conceptualized

 Universal structure in the meaning of emotions

The study also found universals in the way people mapped
meaning to emotions across languages. For example, in almost all languages,
positively valenced (pleasant) emotions belonged to different colexification
communities than negatively valenced (unpleasant) emotions, and there was a
activation. In other words, “all humans appear to feel and express feelings of
similar separation between emotions that were high or low in physiological
author Joshua Conrad Jackson, since valence and arousal highlight biological
positivity versus negativity and feelings of arousal versus calm,” says lead
systems that help maintain homeostasis.  

https://science.sciencemag.org/content/366/6472/1517
http://sciencemission.com/site/index.php?page=news...

Link Between Religious Fundamentalism And Brain Damage

study published in the journal Neuropsychologia has shown that religious fundamentalism is, in part, the result of a functional impairment in a brain region known as the prefrontal cortex. The findings suggest that damage to particular areas of the prefrontal cortex indirectly promotes religious fundamentalism by diminishing cognitive flexibility and openness—a psychology term that describes a personality trait which involves dimensions like curiosity, creativity, and open-mindedness. 

“We need to understand how distinct religious beliefs are from moral, legal, political, and economic beliefs in their representations in the brain, the nature of conversion from one belief system to another, the difference between belief and agency, and the nature of the depth of knowledge that individuals use to access and report their beliefs.” – Grafman

This can't be true of all followers. That brain damage came first and then the fundamentalism. But could being raised or living in a family/community that puts great social pressure to conform to such beliefs shape the brain to a similar pattern? High use of the neural pathways in the belief system making a stronger neural path and unused paths for anything contradictory making it neurologically difficult to question authority? The brain can shape the belief but in an undamaged brain does the belief and frequent reinforcement shape the brain in a way that makes it difficult to question authority?
I know several people who were raised in such households and did give up their blind faiths when going out in the world showed them that many people do have other beliefs and often happier, more successful and have good integrity and character. They escaped the bonds of early imprinting.
For those who refuse to question or question and return to their core beliefs, could their brains have been shaped by exposure to the teachings, rituals, services, and come to resemble that of those who started with brain damage

https://www.patheos.com/
http://churchandstate.org.uk/

Julie Alexander
 

கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம்

 

கிராமபோன் மனிதர்! இ.சந்தானகிருஷ்ணன்

 


போனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone) என்பது 1877 இல் ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் தொமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த ஒரு கருவியாகும்.
அது பேப்பர் பண்டல் இல்ல... எல்லாமே கிராமபோன் இசைத்தட்டுகள். தமிழ், ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, துளுனு 30 ஆயிரத்துக்கு மேல இருக்கு..!’’ சிரிக்கிறார் இ.சந்தானகிருஷ்ணன். சென்னை திருநின்றவூரில் வசித்து வரும் இவர், செக்ரட்டேரியட்டில் ஜாயிண்ட் செக்ரட்டரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் வீட்டு மாடி அறையை முழுவதுமாக தன் சேகரிப்புக்காகவே ஒதுக்கியிருக்கிறார். கிராமபோன் ரெக்கார்ட்ஸ், கேசட்ஸ், பழைய சினிமா பத்திரிகைகள்... என அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.‘‘பூர்வீகம் இதே ஊர்தான். மூணு வயசுல அப்பா தவறிட்டார். அம்மாதான் வளர்த்தாங்க. மூணாவது படிக்கிறப்பவே சினிமா பைத்தியமாகிட்டேன்! எங்களூர்ல அப்ப டூரிங் டாக்கீஸ் கிடையாது.


வானொலில சினிமா பாட்டு வாரத்துக்கு ஒருமுறை வரும். இந்தச் சூழல்ல எங்க பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு தெய்வமா தெரிஞ்சார்! தினமும் கிராமபோன்ல சினிமா பாடல்களை ஓடவிடுவார். சத்தம் கேட்டதுமே அவர் வீட்டு திண்ணைல போய் உட்கார்ந்துப்பேன். அம்மாவுக்கு பயம் வர ஆரம்பிச்சது. இப்படியே போனா நான் கெட்டுடுவேன்னு என்னை வடசென்னைல இருந்த எங்க மாமா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அவர் ரொம்பவே கண்டிப்பானவர். எப்பவும் பாடப்புத்தகமும் கையுமா இருக்கணும். இல்லைனா தோலை உரிச்சுடுவார். திருநின்றவூர்ல இருந்தப்பவே சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பேன். அப்படியிருக்கிறப்ப வடசென்னை வந்த பிறகு சும்மா இருப்பேனா? மாமா வீட்டுக்கு எதிர்லயே டூரிங் டாக்கீஸ் இருந்தது. அங்கதான் தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் வெளியாச்சு. போதாதா? சினிமா மோகமும் வந்தது...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணன், இதன் பிறகே இந்தி, ஆங்கிலப் பாடல்களையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘மாமா வீட்டுக்குப் பக்கத்துல ஆங்கிலோ இந்தியர்கள் வசிச்சாங்க. அங்க என்னை மாதிரியே ஒரு பையன் ராக் அண்ட் ரோல் பாடலை கிராமபோன்ல கேட்பான்.

தினமும் அங்க போயிடுவேன். அதே மாதிரி ‘ஆவாரா’, ‘பர்சாத்’ இந்திப் படங்களை எல்லாம் டூரிங் டாக்கீஸ்ல திரையிடுவாங்க. ஒண்ணும் புரியாது. ஆனாலும் பாட்டுக்காகவே பார்ப்பேன். ஸ்கூல் முடிஞ்சதும் நேரா மார்க்கெட் போவேன். அது பழைய மார்க்கெட். ஒரு பெரிய கூடைல மொத்தமா ரெக்கார்ட்ஸை கொண்டு வந்து கடைகள்ல விநியோகம் செய்வாங்க. அதை வேடிக்கை பார்ப்பேன். அலுக்கவே அலுக்காது. இந்த பழைய மார்க்கெட் எரியற வரைக்கும் கிட்டத்தட்ட தினமும் அங்க போயிருக்கேன். புதுப்பிச்ச பிறகும் வேலைல இருந்து ஓய்வு பெறும் வரை மாலைல அங்க போயிடு வேன். கைல ஏதாவது ரெக்கார்ட் வாங்காம வீட்டுக்கு வந்ததே இல்ல! 1972 வரை கிராமபோன் ரெக்கார்ட்ஸ் புழக்கத்துல இருந்தது. அப்புறம் நிறுத்திட்டாங்க. ஆனா, எல்லா மாவட்டங்கள்லயும் புரோக்கர்ஸ் இருந்தாங்க. தூத்துக்குடி மணி, மதுரை பாலு, காரைக்குடி மகேஸ்வரன்னு பெரிய பட்டியலே உண்டு. அவங்க வழியா ரெக்கார்ட்ஸ் வாங்க ஆரம்பிச்சேன். வார இறுதியானா போதும்... ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு பஸ் ஏறிடுவேன். அங்க புரோக்கர்ஸ் எனக்காக கைல ரெக்கார்ட்ஸோட காத்திருப்பாங்க. தமிழ்ப் பாடல்களை இப்படி வாங்கினேன். இந்திப் பாடல்களை மும்பை, தில்லிக்கு பறந்தும்; தெலுங்குப் பாடல்களுக்கு ஆந்திரா போயும் வாங்குவேன்.

இப்படித்தான் ‘சுபோதயம்’ தெலுங்குப் பட ரெக்கார்ட் வாங்க திருப்பதி, விஜயவாடா, குண்டூர்னு அலைஞ்சேன். கே.வி.மகாதேவன் இசைல அந்தப் படத்துல எல்லா பாடல்களும் சூப்பரா இருக்கும். அதுவும் பி.சுசீலா பாடின ‘ஆசிந்த நீகேணடா...’வை நாளெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம். எங்க திரிஞ்சும் அந்தப் பட ரெக்கார்ட் கிடைக்கலை. ரொம்ப வெக்ஸ் ஆகிட்டேன். சரியா ஒரு மாசம் கழிச்சு பெங்களூர்ல இருந்து ராஜா என்கிற புரோக்கர் ஒரு பெட்டி நிறைய தெலுங்கு, கன்னட ரெக்கார்ட்ஸை கொண்டு வந்தார். அதை அப்படியே வாங்கி பிரிச்சுப் பார்க்காம வீட்ல வைச்சிருந்தேன்.

ஒரு மாசம் கழிச்சு பெட்டியைத் திறந்தா... முதல் கிராமபோன் ரெக்கார்டே ‘சுபோதயம்’! அந்த நொடில எனக்குள்ள பூத்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல! இப்படி நாம சின்சியரா தேடறது எதிர்பாராத வகைல கிடைக்கும்...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணனிடம் திரைப்படப் பாடல்கள் தவிர பெருந்தலைவர்களின் பேச்சுக்கள் கொண்ட ரெக்கார்ட்ஸும் இருக்கின்றன. ‘‘மதன்மோகன் மாளவியா, ரவீந்திரநாத் தாகூர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, ஜான் எஃப். கென்னடி... இப்படி பல தலைவர்களோட பதிவு செய்யப்பட்ட ரெக்கார்ட்ஸ் என் சேகரிப்புல இருக்கு.இதுல என்ன சிறப்புன்னா... அண்ணல் அம்பேத்கர் ஆர்கெஸ்ட்ரா அமைச்சுப் பாடின பாடல்கள், மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியின் ஜாஸ் இசை, எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆல்பம், இரண்டாம் உலகப் போர் காலத்துல பிரெஞ்சு டெலிகிராஃபிஸ்ட் பதிவு செஞ்ச அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேச்சு, ஹிரோஷிமால வெடிகுண்டு போடப்பட்டதும் ஏற்பட்ட சத்தம், அடால்ஃப் ஹிட்லர் போரை அறிவிச்சு ஆற்றிய உரை... இப்படி பல பொக்கிஷங்கள் இருக்கு...’’ என்று கண்கள் விரிய விவரித்த சந்தானகிருஷ்ணன், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன் சேகரிப்பையும் விரிவுபடுத்தியுள்ளார்.

‘‘கேசட்ஸ், விசிஆர், டிவிடினு என் தேடலும் சேகரிப்பும் நிற்கவே இல்ல. மவுனப்பட காலத்துல வெளியான படங்கள்ல சிலதும் என் சேகரிப்புல இருக்கு. அதேமாதிரி சினிமா பத்திரிகைகள். இப்ப பழைய புகைப்படங்களையும் ஃபிலிம் ரீல்ஸையும் டிஜிட்டலைஸ் செய்துட்டு வரேன். என்னை மாதிரியே என் சின்ன பெண்ணுக்கும் இதுல ஆர்வமிருக்கு. அதனால எனக்கு அப்புறம் அவங்க இதைப் பார்த்துப்பாங்க. இப்பவே ஆய்வுக்காக பலரும் என்னைத் தேடி வர்றாங்க. ஒரு டிரஸ்ட் அமைச்சு இதை எல்லாம் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தற மாதிரி செய்யணும்... பார்க்கலாம்என்கிறார் சந்தானகிருஷ்ணன். கும்குமம் இதழில் இருந்து பெறப்பட்டவை .
http://kungumam.co.in/

பைத்தியக்காரர்கள். கே. சச்சிதானந்தனின் கவிதை

 















பைத்தியக்காரர்களுக்கு

ஜாதியோ, மதமோ இல்லை.
பைத்தியக்காரிகளுக்கும்.
நம்முடைய பாலுறுப்புப் பிரிவினை
அவர்களுக்கு பாதகமல்ல.
அவர்கள் முன்முடிவுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
அவர்களின் பரிசுத்தம்
நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

பைத்தியங்களின் மொழி கனவுகளால் ஆனதல்ல.
வேறொரு யதார்த்தத்தினுடையது.
அவர்களின் சிநேகம் நிலவைப் போன்றது,
பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.
மேலே பார்க்கும்போது
அவர்கள் காண்பது நாம்
கேட்டேயறியாத தேவதைகளின் மொழியைத்தான்.
அவர்கள் சிலிர்ப்பதாய் நாம் நினைப்பது
சூன்யமான சிறகுகள் உதிரும்போதுதான்.
ஈக்களுக்கும் ஆத்மா உண்டென்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வெட்டுக்கிளியின் தேவன் பச்சை நிறத்தில்
நீண்ட கால்களுடன் குதித்து
நடக்கிறான் என்றும் கருதுகிறார்கள்.
சிலசமயம் மரங்களிலிருந்து
குருதி கொட்டுவதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் தெருவில் நின்று
சிங்கங்கள் கர்ஜிப்பதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் பூனையின் கண்களில்
சொர்க்கம் ஜொலிப்பதைக் காண்கிறார்கள்.
இந்த விஷயங்களில் அவர்களும் நம்மைப் போலத்தான்.

ஆனாலும் எறும்புகள் கூட்டம் சேர்ந்து பாடுவதை
அவர்களால் மட்டுமே கேட்க இயலும்.
அவர்கள் சூன்யத்தில் விரல் அசைக்கும்போது
நடுக்கடலிலே சுழற் காற்றினை
தன் வயப்படுத்துவது போலவும்,
கால் அழுத்தி உதைக்கும் போது
ஜப்பானின் எரிமலையை வெடித்துச்
சிதறாமல் காப்பது போலவும்,
நினைக்கிறார்கள்.

பைத்தியக்காரர்களின் நேரம் வேறு.
நம்முடைய ஒரு நூற்றாண்டு
அவர்களுக்கு ஒரு நொடி மட்டுமே.
இருபது நொடி போதும்,
அவர்கள் கிறிஸ்துவைச் சென்றடைய.
ஆறு நொடிதான்
புத்தனுக்குச் செல்ல.
ஒரு பகல் போதும்
வெடித்துச் சிதறிய
ஆதித்துகள்களை உணர.
பூமி கொதித்து உருகுவதால்தான்
அவர்கள் எங்கேயும் இருக்க முடியாமல்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள்
பைத்தியங்கள் அல்ல,
நம்மைப் போல.

 

தென்றல் உறங்கிய போதும்

 படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி 
 
 
 
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
 

நடிகை சௌந்தர்யா Dweepa (Kannada: The Island)

நடிகை சௌந்தர்யா 1992ஆம் ஆண்டு தமிழ்ப்படமான பொன்னுமணி திரைப்படம் மூலமாகத்தான் அறிமுகம் ஆகிறார்.இவருக்கு ஜோடியாக கார்த்திக்.இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் .படமும் Super hit.அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் busy ஆனார்.

 2002ஆம் ஆண்டு Dweepa எனும் கன்னடப் படத்தை தயாரித்து நடிக்கிறார்.படம் பல உலகத்திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறது.இரண்டு தேசிய விருதுகளைப் பெறுகிறது.நான்கு மாநில விருதுகளைப் பெறுகிறது.

இப்போ நான் கேட்பது இதுதான்.திரையுலகில் நுழைந்து வெறும் பத்து ஆண்டுகளுக்குள் சமூகக் கண்ணோட்டத்தோடு ஒரு படத்தை தயாரிக்க வேண்டுமென அந்தப் பெண்ணுக்கு தோன்றுகிறது.32வயதிற்குள் இப்படியொரு படத்தை தயாரித்து சினிமாவின் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை ஏற்படுகிறது.

Dweepa (Kannada: The Island) is a 2002 Indian Kannada language film by Girish Kasaravalli, based on the novel of the same name by Na D'Souza, and starring Soundarya and Avinash in lead roles. Dweepa deals with the raging issue of building dams and the displacement of natives.it won 2 National Film Awards, 4 Karnataka State Film Awards & 3 Filmfare Awards South.


Story
Located in the backwaters of a dam, Sita Parvata is an island slowly submerging due to the rains. The government succeeds in evacuating the residents by giving them compensation for the properties they own. The village temple priest Duggajja, his son Ganapa, and his daughter-in-law Nagi find it impossible to leave their homeland and make a living with the meagre compensation given by the government. They have but a small hut, which earns them a compensation of 25,000. In Ganapa's own words, the compensation can give them food and shelter, but cannot compensate for the love and respect of their people. On the island, they are important people, but outside, they would be one among hundreds of families struggling to make a living. Centered on this complex theme, the film narrates the struggles of the family and how ultimately in the end they manage to continue life on the island.

கே.பாலசந்தர்

 கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

பள்ளிப்பருவத்தில் கே.பாலசந்தர் படங்களை பார்ப்பவர்கள் அறிவுஜீவிகளாக கிராமங்களில் அறியப்பட்டிருந்தார்கள். அதனால் அப்போது வெளியான அபூர்வராகங்கள் படத்தை நண்பர்களோடு போய் பார்க்கப் போயிருந்தேன். பார்த்து விட்டு ஒன்றும் புரியவில்லை என்று பரபரக்க நண்பர்கள் விழித்துக் கொண்டிருக்கையில், உருப்படியாய் பொய் பேச வராதவனாக இருந்த போதிலும் துணிந்து எனக்கு இந்த படம் நன்றாக புரிகிறதே என்று ஒரு வார்த்தையை சொல்லவும், நண்பர்கள் என்னை பிரமிப்போடு பார்த்தது அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது.
அப்படியாக அறிமுகமான கே.பி சார் பின்னர் ஏதோ ஒரு வகையில் என்னோடு இணைவார் என்றோ, என் தலை தொட்டு காட் பிளஸ் யூ மை சன் என்று வாழ்த்துவார் என்றோ சத்தியமாக அப்போது எனக்கு தெரியவே தெரியாது.
நன்றி வஸந்த் சார்..
பின்னாளில் வஸந்த் சாரிடம் துணை இயக்குநராக பணியாற்றியபோது கே.பி சார் பற்றி பல விசயங்கள் தெரிந்து பரவசிக்கிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கே.பி சார் படப்பிடிப்பிற்கு செல்கிறபோது உதவி இயக்குநராகிய வஸந்த் பின்னால் உட்கார்ந்திருப்பார். கே.பி முன்இருக்கையில். அவர் எங்கோ பார்த்தபடி முணுமுணுப்பாய் ஏதோ சொல்வார். அதை உற்று கவனித்து வஸந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் அதை கச்சிதமாக நிறைவேற்றி தயாராக வைத்திருப்பார். படப்பிடிப்பு நடக்கும். அந்த அளவு தனதான படைப்புல பிரவேசிப்பிற்குள் கே.பி சார் மிதந்து கொண்டிருக்கிறபோது சிறிய பிசிறல்கூட கல்லெறி வட்டங்களாய் அவரின் சிந்தனை போக்கை சிதைத்துவிடக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டவராய், எந்தவித ஓசையும் அவருக்கும் செலுத்தாமல், அவரின் முணுமுணுப்புகளில் இருந்தே, அங்கே என்னஎன்ன தேவை என்பதை உள்ளுணர்வால் முழுமையாய் கிரகித்துக்கொண்டு அவற்றை நிறைவேற்றக்கூடிய துணை இயக்குநராய் இருந்திருக்கிற தருணங்களை மிகுந்த பரவசத்தோடு பகிர்ந்தபோது அந்த கணங்களுக்குள் நானும் காலம் கடந்துபோய் பயணித்து வாழ்ந்து வந்திருக்கிறேன்.
எப்படியோ கே.பி சாரின் சிஷ்யர் வஸந்த்திடம் வேலை செய்ததன் மூலமாக கே.பி சாரிடமே பணி செய்த ஒரு திருப்தி.
இப்படித்தான் ஒரு நாள் ஹோட்டல் சங்கீதாவில் இயக்குநர் வஸந்த்துடன் என்னவோ சாட் ஐட்டம் சாப்பிட்டபடி உலக இலக்கியமும், உலக சினிமாவும் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு சிறுகதை பற்றி திரும்பியது. என்னுடைய சொந்த வாழ்வில் நடந்த ஒரு அனுபவத்தை லவ் காட்டேஜ் என்கிற சிறுகதையாக எழுதியிருந்தேன். சென்னை மூலக்கடை பகுதியில் 1.5 கிரவுண்டில் நான் கட்டியிருந்த லவ் காட்டேஜ் என்கிற அந்த வீடு.. எதிர்பாராத காரணங்களால் உறவுகளின் திட்டமிடாத வழிநடத்தலினால் கை நழுவிப்போனது. பின்னர் ஒரு நாள் அந்த லவ் காட்டேஜை போய் பார்க்க நேர்ந்தபோது ஏற்பட்ட பரவச அனுபவத்தையே அந்த கதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. பார்த்திபன் சாருக்கும் இப்படியான ஒரு அனுபவம் நேர்ந்திருக்கிறதை அறிவேன். இதை வஸந்த்திடம் சொல்லிக் கொண்டிருக்கையில், சட்டென உணர்ச்சிவசப்பட்வராய், வா.. கொஞ்சம் நடக்கலாம் என்றார். இருளுக்குள் அந்த தெருக்களில் நடந்தபடி பேசிக்கொண்டிருந்தோம். சட்டென என்ன நினைத்தாரோ, வா.. உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று நேராக கே. பி முன் கொண்டுபோய் நிறுத்தி, என் உதவி இயக்குநன்.. இவனை வாழ்த்துங்க என்றார். உடனே தான் நான் மேற்சொன்ன அந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்படியே மனசின் நாடிநரம்புகள் அத்தனையும் சிலிர்ப்பில் கதகதத்துக் கொண்டுவிட்டது.
கே.பி சாரை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அனந்து சார் அவருக்கு இயக்குநர் இங்மர் பெர்க்மன் பற்றியும், அவரின் படங்கள் பற்றியும் ஆழமான அறிமுகங்களை தந்தவர். இப்படியான பல ஆளுமைகளின் அறிமுகங்களை தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். அதனாலேயே அனந்து சாரை அத்தனை சௌகர்யங்களோடு வைத்துக்கொண்டவர். திறமையாளர்களை தன்னோடு நிரந்தரமாய் வைத்துக்கொண்டு, அவர்களுக்கான உரிய மரியாதையை செய்யக்கூடிய அவரின் பாங்கில், நூறு படங்களை அநாயாசமாக இயக்கக்கூடிய வீரியம் ஒளிந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
கல்கி திரைப்படத்தின் ப்ரிவியூ இப்போதைய ஃபோர் ஃபிரேம்ஸ் அப்போதைய குட்லக் திரையரங்களில் நடக்கிறது. படம் முடிந்து வெளிவருகிற அனைவரிடமும் படம் எப்படியிருக்கிறது என்றும், அவரவர் அபிப்பிரயாங்கள் பற்றியும் ஒவ்வொருவர் கையாய் பிடித்து ஆர்வத்தோடு கேட்டறிகிறார். அந்த தேலும், பரவசமும், திரையூடகத்தோடான ப்ரேமையுமே அவரை அந்த உச்சம் நோக்கி நகர்த்தியிருக்கிறது.
கமல் தான் அவர் படத்தில் அதிகம் நடித்த நாயகன். அவர் புன்னகை மன்னன் திரைப்படத்தில் மாமாவுக்கு குடுமா..குடுமா.. பாடலில் இரண்டு கதாபாத்திரமாய் வந்து நகைச்சுவையாய் ஜமாய்த்திருப்பார். அந்த காட்சியை எப்படி எடுக்கலாம் என தனக்கு தோன்றியதை கமல் கே.பி சாரிடம் சொன்னவுடன், அது சட்டென கே.பி சாருக்கு பிடிபடவில்லை. ஆனால் என்னவோ இருப்பதாக உணர்ந்து, மறுநாள் படப்பிடிப்புக்கு அவர் வராமல் இருந்து கொண்டு, நிர்வாகிகளிடம் இந்த பாடல் காட்சியை உங்களையே எடுத்துவிடும்படி கே.பி சார் சொல்லச்சொன்னதாக சொல்லியிருக்கிறார்கள். உடனே ஒருவித அசட்டு துணிச்சலோடே கமல் அந்த பாடல் காட்சியை தான் நினைத்த மாதிரி எடுத்து முடித்ததாக அவரே சொல்லியிருக்கிறார். பின்னர் எடிட்டிங்கையும் கமல் சாரையே பண்ணிவிடும்படி சொல்ல, எடிட் செய்து தயக்கத்தோடே காட்டியிருக்கிறார். பார்த்துவிட்டு கே.பி சார் அப்படி பரவசித்திருக்கிறார். அது தான் கே. பி சார்..
பதினாறு வயதினிலே பார்த்துவிட்டு, அறிமுக இயக்குநர் என்றெல்லாம் பார்க்காமல், என்னாலும் இப்படியொரு படத்தை எடுக்க முடியாது என மனதார பாராட்டி இருக்கிறார்.
அவரை பற்றி எழுதுவதென்றால் ஒரு புத்தகம் போடும் அளவிற்கு எழுதிக்கொண்டே போகலாம். அது பின்னொரு சமயத்தில் நிகழக்கூடும்.
அவரின் இந்த வாழ்வின் நிறைவு வைபவத்திற்கு இயக்குநர் பார்த்திபன் சாரோடு போயிருந்தேன். அப்போது அவர் அங்கிருந்த ஈசிசேரில் அமர்ந்திருந்த காட்சி தன்னிச்சையாக நினைவில் வந்து ஊஞ்சல் ஆடியது. இப்போது தன்னந்தனியாக.

Kulashekar T

கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் (Arch T. Colwell Cooperative Engineering Medal)

 


அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பட்டம் பெற்றதுடன், 1982-83 காலப்பகுதியில், பேராதனைப் பல்கலைக்கழக கணிதபீடத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு SAE International என்ற மதிப்புமிக்க அனைத்துலக பொறியியலாளர் அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும், ஆர்ச் ரி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கம் (Arch T. Colwell Cooperative Engineering Medal) வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் இந்த விருது வழங்கப்படும். இந்த உலகளாவிய விருதை வழங்கும், SAE International அமைப்பு உலகெங்கும் உள்ள 138 ஆயிரம் பொறியியல் வல்லுனர்களை உறுப்பினராக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சின்னப்பா பரஞ்சோதி மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது அனலைதீவு மக்கள் எமக்கெல்லாம் பெருமகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

Monday, December 14, 2020

Indus Valley Civilization and consumption of milk, meat of animals

The Indus Valley Civilization (IVC) was a Bronze Age civilization in the northwestern regions of South Asia, lasting from 3300 BCE to 1300 BCE, and in its mature form from 2600 BCE to 1900 BCE.


 "An analysis of ceramic lipid residues from rural and urban sites of the Indus Civilization in northwest India provides chemical evidence for milk, meat of animals like pigs, cattle, buffalo, sheep and goat, and possible mixtures of products and/or plant consumption."


The people of the Indus Valley Civilization in northwest India were predominantly meat eaters, a study has revealed.
They consumed the meat of pigs, cattle, buffalo and sheep, along with dairy products, said the study published in Journal of Archaeological Science.
“High proportions of cattle bones were also found, which may suggest a “cultural preference for beef consumption” across Indus populations, the study, titled, Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India, said.
The research offers insights into the food patterns of ancient South Asia by using lipid residue analysis to investigate the kinds of food items that were used in ceramic vessels by people of the Indus Valley Civilisation settlements in northwest India. The region of study now lies in Haryana and Uttar Pradesh.
It was led by Akshyeta Suryanarayan as part of her PhD at the University of Cambridge.

Sunday, December 13, 2020

Kim Ki-Duk South Korean Director. கிம் கி-டக் உலகின் மிகச் சிறந்த சினிமா இயக்குநர்


"என்னுடைய வளர்ச்சியையும், மாற்றத்தையும் என் படங்களின் மூலமாகவே தெரிந்துக்கொள்கிறேன்.
கஷ்டமான சிக்கல்கள் ஒருவர் வாழ்வில் தொடர்ந்தபடி இருந்தால், மாய கற்பனைகளால் ஆன உலகில் வாழ்வது என்பது சிறிதளவாவது ஆறுதல் தரும்."
- Kim Ki Duk
கிம் கி-டக் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். திரைப்பட இயக்குநர் கிம் கி டக். 1960-ம் ஆண்டு பிறந்த அவர், 1996-ம் ஆண்டு க்ரோகடைல் என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.
 
இவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன. 
அவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் நாடு எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் சென்றடைந்தது. அவருடைய படங்களில் சமாரிட்டம் கேர்ள், 3 அயர்ன், அரிரேங், பியிடா, ஒன் ஆன் ஒன் ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் படமாக இருந்துவருகிறது. தென் கொரிய இயக்குநர்களிலேயே கிம் கி டக் மட்டும்தான், உலகின் மிகப் பெரிய விருதுகளான கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
உலகமே கடவுளைத் திறந்து காட்டிக் கொண்டிருந்த போது கடவுளுள் இருக்கும் சாத்தானை திறந்து காட்டி இதுவும் நிஜம் தான் என்று பொதுவெளியில்... எல்லாம் வல்ல மானுட மனத்தின் இருட்காலத்தை வெளிச்சமேற்றிய கலைஞன்.
"கிம் கி டுக்"ன் படங்களைக் காண்பது என்பது... தனித்து மலையேறுவது......அல்லது தனித்து மலை இறங்குவது......அல்லது தனித்த மலையாவது.
"கிம் கி டுக்"கின் கதை மாந்தர்கள்......அதிகமாய் பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் தனித்தே இருக்கிறார்கள்......அல்லது தவித்தே இருக்கிறார்கள்.....அல்லது தவிர்த்தே இருக்கிறார்கள். பெரும்பாலான படங்களில் பேச ஒன்றும் இருப்பதில்லை. இரண்டு பக்கம் வசனம் பேச வேண்டிய காட்சியை ஒரே ஒரு பிரேமில் காட்டி விடுகிறார். கரை கண்ட திரை சதுரம் வால் ஆட்டாத நாய்க்குட்டி தான் அவருக்கு. காட்சி மொழியில் அவர் திரை கனக்கச்சிதமாக கதை சொல்கிறது. அருகிலும் தூரத்திலும்.... ஒற்றை இறகை பறக்க விட்டு..... பார்த்துக் கொண்டே இருக்கும்... தூரத்து கடல் அலையின் ஆர்ப்பரிப்பு நம்மை சுற்றிலும் இயங்கிக் கொண்டே இருக்க செய்வது.... சித்து வேலை அல்ல. சித்தன் வேலை.
இருக்கும் என்பது இல்லாமலும் தான்....என்பதாகட்டும்...(3 iron) முகம் மாற்றித் திரியும்....அன்பின் புறக்கணிப்பாகட்டும்......(Time). அறுக்கப்பட்ட மகனின் உறுப்புக்காக பரிதவிக்கும்....தந்தையாகட்டும்........(Mobeus) சிறையில் இருக்கும் காதலனை காண சென்று ஒரு சிறுமியாக ஆடி களிப்பூட்டும் காதலாகட்டும்.....(breath) அசைந்தாடும் பிரிவும் அகம் தீண்டும் சோகமும் நேர்த்தியோடு மிக மெல்லிய இசையாகி விடுகிறது...அவர் சினிமாக்களில்.
"இந்த உலகத்தில் நாம் வாழ்வது என்பது நிஜமா கற்பனையா என்பதை அத்தனை எளிதில் சொல்லி விட முடியாது...." எனும் தத்துவார்த்த ஊடறுப்பு சதா நிகழ்ந்து கொண்டே இருக்கும்.. கதைக்களங்கள் இவருடையன. காட்சிக்கு காட்சி 'ரா'வான ரத்தின சுருக்கம்... திரைக்கதையாகி இருப்பது... தனி வடிவம். படத்தில்... படகில் தனக்கு தானே தண்டனை கொடுக்கும் பெண்ணின் தூண்டிலில்.... உலகமே கதறும் ஒரு காட்சி.... நிஜத்தை நேருக்கு நேர் காணுகையில்... நெஞ்சத்தில் நெருப்பூரும் என்பது.(the isle) எடுத்த இடத்தில் கிடைக்கும் தொலைத்தல்... தொலைந்த பிறகும் எடுக்கும் காலத்தின் ஜோடித் தத்துவம்.. நட்பெனவும் கொள்க. (samirtan girl) நினைத்த நாட்டுக்கு செல்ல கிடைத்த வழி... உடல் விற்பனை. உடலும் உடலும் சொல்லும் தத்துவத்தில்... என்னானது....பயணம். அலற வைக்கும்.... அரூப நடை அவருடையது.
(bow) ம் (bad guy) ம் நெருங்க முடியாத நிர்பந்தம். நெற்றியில் விலகும் நேர் கோட்டு சித்திரம். நீருக்குள் நிகழும் நின் கடன் மானுடம் சேர்ப்பது (crocodile). வன்முறையே நம்மை வழி நடத்துகிறது. அதற்கு தான் மாற்று பெயர்களை சுமந்து கொண்டு அலைகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த புரிதலில் அளவு வேண்டுமானால் மாறலாம். ஆனால் ஆழம் மாறாது. கொரியாக்களின் சண்டையை (the Net) தன் வலையை நகர்த்திக் கொண்டு காட்டியது. மானுட குயுக்தி வெளி வந்தது (human space time & Human) தினம் ஓர் உடல்... தினம்... தான் ஒரு கடல். என மறுபக்கத்தை போட்டுடைக்கும் கிம் கி டுக்.... அதிரூபன் இல்லை.... ஆனால்.... அந்நியனும் இல்லை.
இந்த மானுடத்தின் சாபமும்.. வரமும்.. அன்பு மட்டுமே. (pieta) அது இருக்கும் ஆயுதத்துக்கெல்லாம் உயர்ந்த ஆயுதம். அதைக் கொண்டு... எதிராளியின் மனதுக்குள் கூர் கத்தி ஒன்றை செய்து உள் நோக்கி மரணத்தை திருப்பி விட்டு விட முடியும். அடித்துக் கொண்டேயிருப்பது வன்முறை என்றால்.. அடி வாங்கிக் கொண்டே மீண்டும் மீண்டும் அடி என்று கூறுவது வன்முறையின் உச்சம். உச்சத்தின் முனையில் நின்று உலகுக்கு மௌனமாய் எடுத்து சொல்வது... அத்தனையும் இந்த மானுட வாழ்வின் ஆதி பரியந்தம் தான். வேதாளம் இடம் மாறும் நுட்பத்தைத் தான் மனிதன் கடவுளுக்கு பிரார்த்திக்கிறான்.
எதிர் வினையில் நின்ற வினைக்குள் எட்டிப் பார்க்கும் பொருளுக்கு பொருளற்று சேர்ந்து கொள்ளும்.... பொருள் ஒன்றில்...சொல்லப் படும் நிர்பந்தங்களைத்தான் இந்த மனித மனம் விரும்புகிறது. அந்த மனம் முழுக்க... அவனின் துயரத்தின் சுவடுகள்... மீள் பயத்தின் மிச்சமென...அவனால் விரும்பப் படுவது தனிமையின் இருள் சேர்ந்த சில காலங்களின் சாபங்கள் தான். வினோதம் மூச்சடைத்து சாவும் மணித்துளிகளை மனம் மீன் தொட்டியில் ரசித்துக் கொண்டிருக்கும். ஒழுக்கம் என்பது ஊர்களை பொருத்தது என்று ஒரு பாடல் வரி உண்டு. அதையும் தாண்டி... ஒழுக்கம் என்பது உள்ளத்தை பொறுத்தது என்று கூட யோசிக்க வைக்கும்.
உள்ளார்ந்த கசடு நிறைந்த மனித மிருகத்தின் மிச்சத்தை எடுத்துக் காட்டிய கலைஞன். அவர் ஊரில் பெரிதாக வெறுக்கப்பட்ட அதே நேரம் உலகலாவில் பெரிதாக விரும்பப்பட்ட... கதைக்க சொல்லி கிம் கி டுக் ஓர் உக்கிர தூதுவன்.
வலிமைக்கு வலிமை எளியவையும் ஆகும். அது மிகச் சாதாரணமாக கதவைத் தட்டி விட்டு கடந்து விடும். திறக்கையில் அன்போடு சிறகு முளைத்த தேவதை ஒருத்தி எந்த வயதிலும் நிற்கலாம்....ஒரு கூடை அன்பை சுமந்தோ...அல்லது ஒரே ஒரு காரணம் சுமந்தோ. அன்பை விட கொடிய ஆயுதம் ஒன்று உண்டோ....! என்று ஒவ்வொரு கதையிலும்... ஒவ்வொரு வடிவம் கொண்டு இருத்தல்......அழிக்கும் ஆக்கம்....திகைக்கும் பிரமிப்பு என்பதைத் தாண்டி தனி மனித சுத்திகரிப்பு... எனலாம்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரும் அவரவருக்கான செய்தியை சுமந்தலைவது விதி. இந்த தேகத்தின் வரம்பறியா நிலையில்.. மலைமீது புத்தனை சுமந்து செல்லும் சுய திருப்தி...(spring summer fall winter & spring) சுயம் அழித்தல்... அல்லது சுயம் மீட்டல்....என்று ஆன்மீக துவாரம் அதே அளவில் நீண்டு கொண்டு போவதை பேரன்பின் மௌனத்தோடு உணர்ந்திருக்கிறேன். "கிம் கி டுக்"கின் சினிமா எல்லாருக்கும் நெருக்கமான வாழ்வின் ஜன்னலை திறந்தே வைத்திருக்கிறது. அதன் வழியே ஒரு பெரும் வாழ்வின் திரை பதட்டத்தோடே விலகுகிறது.
தன்னை திறந்து திறந்து திறந்து கொண்டே சென்ற கலைஞன் சட்டென கண் மூடிக் கொண்டதை திரை தாண்டியும் வருத்தத்தோடு உணர்கிறேன். இசைக்க தெரியாத போது சத்தமிட்டு அழுது விட தோன்றும் சில நொடி பிதற்றல்களை "கிம் கி டுக்" என்ற மகா கலைஞனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மனிதன் தான் சாவான். கலைஞன் இல்லை.
கவிஜி
Kim Ki Duk க்கிட்ட வியந்த விஷயங்கள்.
Cinema is Visual Medium னு ஆழமா நம்புன ஒரு ஆள். பார்க்குற ஒவ்வொரு காட்சியும், கவிதையும், ஓவியமுமா இருந்துச்சு.
Sounding.
ஒரு படத்துல Sounding எப்படி Use பண்ணப்பட்டுருக்கு என்பதை பொருத்து தான், அவர் எப்பேர்ப்பட்ட Director னு நிர்ணயிப்பாங்கனு சொல்வாங்க.
Kim Ki Duk அதுல கில்லாடி.
வன்முறை, காமம், குரோதம்னு எல்லாத்தையும் படம்பிடிச்சிட்டு, அதோட உச்சபட்சத்தை Sounding ல சொல்லி இருப்பாரு.
சொல்லப்போன உட்சபட்ச எல்லா Emotions அயும், அவரு Sounding ல படம் பிடிச்சார்னு தான் சொல்லணும்.
அடுத்து Writing.
அவரோட எழுத்துக்கள் யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், உணர்ச்சிகளோட உச்சமாகவும், இயல்பாகவும் இருக்கும்.
நிச்சயம் நம்ம நினைச்சுக் கூட பார்க்காத Emotions அ எழுத்துக்கள்ல கொண்டு வந்துருப்பாரு.
வாழ்க்கையைப் பற்றிய புரிதல்.
காலநிலைகள் தொடர்ந்து மாறிக்கிட்டே இருந்தாலும், அது இயல்பாகவே நடக்கக்கூடிய, மாற்ற முடியாத இயற்கைக்கொத்த விஷயங்கள் தான்னு சொல்லி இருப்பாரு. (Spring, Summer, Fall, Winter and Spring).
நடைமுறைல இருக்குற எல்லா மனுஷங்களோட Rules அ Use பண்ணி, அதை Fail பண்ணி, Break பண்ணி, கற்பனைக்கெட்டாத மாய தோற்றங்களையும், உலகத்தையும் உருவாக்கி இருப்பாரு.
பலதரப்பட்ட, பல்வேறு உணர்ச்சிகளுடைய மனுஷங்களால நிறைஞ்சது தான் உலகம். அப்படிப்பட்ட உலகம், அவங்களாலயே அழிஞ்சு, புது உலகம் உருவானாலும், அதே வகைப்பட்ட வெவ்வேறு உணர்ச்சிகளுடைய மனுஷன் தான் உருவாகுவான் என்பதைக் காட்சிப்படுத்தி இருப்பாரு.
ஒரு தாய் மக்கள் நாம் என்பதை அவருக்கே உரிய Style ல வண்முறையோடயும், காமத்தோடயும், அழகியலோடயும் காட்சிப்படுத்தி இருப்பாரு.
இது எல்லாத்தையும் தாண்டி, வாழ்க்கை ஒரு மலையைப் போன்றது. Ups and Downs இருந்துகிட்டே தான் இருக்கும். அது தான், Life அ Balance ஆ வைக்கும்னு நம்புற ஒரு ஆள்.
Arirang (2011).
இது Kim Ki Duk உடைய Self Documentary. படத்தளத்துல (Dreams) ஏற்பட்ட விபத்துக் காரணமா 2008 - 2011 ல எதுவுமே செய்யாம வெறும் குடி, வாழ்க்கைனு ஓட்டிக்கிட்டு இருந்த Kim Ki Duk தன்னைத் தானே, Interview பண்ணி, Roast பண்ணி, மீளுருவாக்கம் பண்ணின Video.
என்னால படம் எடுக்க முடியாது. ஆனா, படம் இயக்கியே தீருவேன்னு தன்னை தானே Shoot பண்ண Video.
Filmmaking அ Passion ஆ வச்சுருக்குற அனைவரும் பார்க்க வேண்டிய Documentary.

2000-ம் ஆண்டு கிம் இயக்கிய த இஸ்லே படம் 2001-ம் ஆண்டு டோரென்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது, கிம் படங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. 2017-ம் ஆண்டு கிம் மீது அவருடைய படத்தில் நடித்த நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்வியாவுக்குச் சென்றார். அங்கே சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 
அதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Kim Ki-duk (Korean: 김기덕 [kimɡidʌk]; 20 December 1960 – 11 December 2020) was a South Korean film director, noted for his idiosyncratic art-house cinematic works. His films have received many distinctions in the festival circuit, rendering him one of the most important contemporary Asian film directors. His major festival awards include the Golden Lion at 69th Venice International Film Festival for Pietà, a Silver Lion for Best Director at 61st Venice International Film Festival for 3-Iron, a Silver bear for Best Director at 54th Berlin International Film Festival for Samaritan Girl, and the Un Certain Regard prize at 2011 Cannes Film Festival for Arirang. 

His most widely known feature is Spring, Summer, Fall, Winter... and Spring (2003), included in film critic Roger Ebert's Great Movies. Two of his films served as official submissions for the Academy Award for Best International Feature Film as South Korean entries. He gave scripts to several of his former assistant directors including Juhn Jai-hong (Beautiful and Poongsan) and Jang Hoon.

Kim was known as the bad boy of Asian art-house cinema and made his name with a series of visually stunning but extremely violent films, including The Isle (2000) and Bad Guy (2001). The Isle, which features gruesome scenes involving fish-hooks, was sanctioned by authorities in Britain for animal cruelty.  


Kim Ki-Duk Dies Of Covid-19: South Korean Director Won Prizes At Venice, Cannes, Berlin Was 59