Search This Blog

Tuesday, November 3, 2020

சிங்களப் பண்பாட்டிலிருந்து புத்தகம்


“சிங்களப் பண்பாட்டிலிருந்து…” புத்தகத்தை வாசித்து முடித்தேன்…
அதிலுள்ள 13 கட்டுரைகளிலும் முன்பு அறியாத பல விடயங்கள் இருந்தன… பல்கலைக்கழகங்களின் சமூகவியல் மற்றும் மானுடவியல் பீடங்கள் முன்னெடுக்க வேண்டிய ஆய்வுகளுக்கான தொடக்கங்கள் இதில் உள்ளன… சிங்களவரின் பண்பாடு, வரலாறு பற்றி இப்புத்தகம் பேசினாலும், தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றையும் அது தொட்டுச் செல்வது தவிர்க்க முடியாததே… கன்னித்தன்மையைப் பரிசோதித்தல் இலங்கைத் தமிழரிடையேயும் காணப்பட்டதாக வாசித்த ஞாபகமொன்று உள்ளது… வோல்ரர் லத்துவாஹெட்டி அவர்களது பேட்டி வெளிவந்த சமயத்தில் அதன் முக்கியத்துவம் எனக்கு அவ்வளவாகப் புரியவிலலை… ஆனால், இப்போது புரிகிறது…  ‘பெயருக்குள் ஒளிந்திருக்கும் சாதி’ என்பது சிங்களவருக்கு மாத்திரம் உரியதல்லவே! (இன்னும் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குப் பின்னர், இதை ஆராய்ந்துதான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்! ஆயினும், பிற்நத இடத்தை வைத்துச் சாதியைக் கண்டுபிடிப்பது இலங்கைத் தமிழரிடையே, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரிடையே இன்றும் உள்ள வழக்கம்!) போர்த்துக்கேய, டச்சு மற்றும் ஆங்கிலேயப் பெயர்கள் சிங்களப் பெயர்களாகவே மாறி, இன்றும் அவ்வாறே நிலைத்து நிற்கின்றன. “கூரே” என்ற பெயரைப் பற்றித் தேடிப் பார்த்தேன்; காணக்கிடைக்கவில்லை!
“தொன் டேவிட் ஹேவவித்தாரண”வைப்பற்றி (வேறு யாருமல்ல… அநகாரிக தர்மபாலதான்!) வாசித்தபோது ஆறுமுக நாவலரைப்பற்றிய எண்ணங்கள் தவிர்க்க முடியாதவை… (ஆறுமுக நாவலர் வள்ளலாருக்கு எதிராக வழக்கு வைத்ததாகவும் தகவலொன்று உண்டு!).
சரவணனின் முயற்சிகள் காத்திரமானவையும் பாராட்டுக்குரியவையும்… தொடரட்டும் அவர் பணி! Pathmanathan Mahadevah

Monday, November 2, 2020

தோழிமார் கதை.

.ஆத்தோரம் பூத்த மரம்

ஆனை அடங்குமரம்
கெளையெல்லாம் கூடுகட்டி
கிளியடையும் புங்கமரம்..
புங்கமரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா.?
சிறுக்கிமக பாவாடை
சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட..
பட்டுச் சிறுகயிறு
பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ
எண்ணைவெச்சே நெனவிருக்கா.?
கருவாட்டுப் பானையில
சிலுவாட்டுக் காசெடுத்து
கோணார் கடைதேடிக்
குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க
நீதிங்க நாங்கொடுக்க..
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்கலராக் கண்ணீர்விட.
பல்லால்கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனவிருக்கா.?
கண்ணாமூச்சி ஆடையில
கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு
சொல்லிசொல்லி நீஅழுக..
எங்காலுக் கொலுசெடுத்து
உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன்
ஏண்டீ நெனவிருக்கா?
வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில
பருவம் திறந்துவிட..
என்னமோ ஏதோன்னு
பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து
வீடுசேர்த்தே நெனவிருக்கா.?
ஒன்னா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்..
ஒரு புருஷன்கட்டி
ஒரு வீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா.?
ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது..
எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்.!
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நாம்போக..
தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட..
உம்புள்ள உம்புருசன்
உம்பொழப்பு உன்னோட..
நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு..
வயித்துல வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம்
ஆனையடங்கும் புங்கமரம்
போன வருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!
-- கவிப்பேரரசு வைரமுத்து.

HOW TO OVERCOME LONELINESS AND START LIVING AGAIN


There is hardly any individual in this world who has never felt lonely at some point in time, whatever the reason. Therefore the feeling of loneliness that pervades almost all of us occasionally is quite normal.
However, if the feelings of isolation or seclusion seem to drag on for far too long, they can keep you from leading a healthy and normal life. In this case, there is a possibility that you are suffering from clinical depression. So we all need to know the answer to an important question –how to overcome loneliness?

Loneliness typified by feelings of friendlessness, abandonment, rejection, forsakenness, and depression above all, can be self-defeating, preventing you from living the life you deserve and can achieve. Do not ignore your feelings of loneliness, but don’t accept the feeling either. Like any emotion, it got their through habits and conditioning, and you can reverse it the same way.
Since feeling abandoned or lonesome is more often than not subjective, each and every person has his or her unique way of dealing with the complex web of emotions.
Nevertheless, there are some common strategies of coping with loneliness, despair, and feelings of dejection that any individual can adopt alongside seeking medical intervention. Thanks John Halifax

வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இந்தப் புகைப்படம்


வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த  இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது 1945 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியாகும்.
அமெரிக்காவினால் ஜப்பானின் நாகசாகி நகரத்துக்கு அணுகுண்டுத்தாக்குதல் நடத்தி 7 நாட்களின் பின்னரே இந்தப் புகைப்படம் ஒரு அமெரிக்கப் படைவீரரினால் எடுக்கப்படுகிறது.
அமெரிக்கா அணுகுண்டுத்தாக்குதல் நடத்தியதன் பின்னர், ஜப்பானில் ஏற்பட்ட சேதங்களை ஆவணப்படுத்தும் பணி வழங்கப்பட்ட
Joe 0'Donnell என்ற அமெரிக்க ராணுவ வீரரினால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் குறித்து அவர் தனது நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
"10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தனது தோளில் ஒரு குழந்தையை கட்டிக் கொண்டு
நிற்கிறான்.
இப்படி சிறுவர்கள் தம்பி,தங்கைகளை தோளில்
சுமந்து கொண்டு விளையாடுவதை நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால் இந்தச் சிறுவன் விளையாடுவதற்காக தோளில் ஒரு குழந்தையை சுமந்து வரவில்லை. அவன் எதோ ஒன்றை
பெரிதாக சிந்தித்துக் கொண்டு
இருந்தான். அவனது காலில் செருப்புகூட இருக்கவில்லை.
அந்தச் சிறுவன் தனது தோளில் இருந்த குழந்தையை திரும்பிப் பார்த்தான், அப்போதுதான்
அவனது தோளில் இருந்த குழந்தை இறந்து இருப்பதை நான் கவனித்தேன். அந்தக் குழந்தையின் கழுத்து சரிந்து இருந்தது.
இறந்த குழந்தையை சுமந்து கொண்டு அந்த சிறுவன் பினங்களை எரிக்கும் இடத்திற்குச் சென்றான்.
அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன்
தனது உதடுகளை கடித்துக் கொண்டான்
அப்போது, அவனது வாயினால் இரத்தம் வழிந்துகொண்டு இருந்தது.
பின்னர் அவனது தோளில் சுமந்துவந்த, அவனது தங்கையின் உடலை தகனம்  செய்வதற்கு
கொடுக்கிறான், கொஞ்ச நேரத்தில் அந்தப் பிஞ்சு
உடல் தீயில் கருகிவிடுகிறது.
அந்த தீச்சுவாலையை பார்த்த வன்னமே அந்த சிறுவன் நடக்கத் தொடங்கினான்."
இந்த சம்பவம் நடந்து 72 வருடங்களின் பின்னர்
புனித பாப்பரசர் தனது புதுவருட வாழ்த்து அட்டையில் இந்த புகைப்படத்தை பிரசுரித்து
இப்படி ஒரு  குறிப்பையும் சேர்த்துவிடுகின்றார்.
"யுத்தத்தின் பிரதிபலன் இதுதான்"
நாம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதை
சட்டமாக்குவதா ? அல்லது கடந்த காலங்களில்
படித்த பாடங்களை வைத்து மனிதகுலத்தின்
விருத்திக்காக பாடுபடுவதா ?
இந்தச் சிறுவன் இரத்தம் வருமளவுக்கு தனது
உதடுகளை கடிப்பதை நினைக்கும் பொழுது
அந்தப் பிஞ்சு உள்ளத்தின் வேதனையின்
அளவை எம்மால் உணரமுடியும்." Thamks Pathmanathan Mahadevah

Anxiety disorder will impacts at all levels: mind, body, emotions, quality of life, relationships ...

The person suffering from an anxiety disorder will not see his life limited only by having problems with attention, memory and concentration. This psychological condition impacts at all levels: mind, body, emotions, quality of life, relationships ... It is a state that distorts everything and that makes us lose control of reality.
We know that anxiety and concentration problems are related, therefore to improve this situation the key must necessarily be to treat the original trigger. The most appropriate thing is to consult a specialized professional . The origin of this disorder is often in lifestyle, lack of coping strategies, or even unresolved trauma .
Gender is a significant determining factor in mental health and in how it is managed by healthcare services, according to recent studies conducted by this group and based on health questionnaires completed in the Basque Autonomous Community (2018) and in Spain (2017), and on the Spanish sample corresponding to the European Health Survey (2014). What stands out in the analysis of these three databases is the higher prevalence of poor mental health among women of all ages and across all social groups; in addition, there is a multiplier effect due to the accumulation of experiences of inequality. This reality also appears to be unequal in terms of the age and socioeconomic level of the patients.
Each person is a world and each mind needs particular strategies. However, on average, the following keys can help us:
  • Detect irrational and non-functional thoughts, especially those that fuel discomfort.
  • Rationalize emotions and leave space for them without blocking them. It's about understanding what they want to say, understanding their message to handle it much better.
  • Practice deep breathing and relaxation techniques .
  • Get some exercise on a day-to-day basis.
  • Establish routines and leave spaces for leisure and mental rest.
  • Accept that you cannot have control of everything that surrounds you and begin to assume that life is also made of uncertainties.
To conclude, these strategies will not pay off in a day or a week. We need time to re-educate the brain, to change the pattern of thoughts and the pressure of emotions. However, change and improvement is always possible. With commitment and psychological therapy, advances always come.
All phobia, whatever it may be, has its origin in anxiety. In this condition, irrational fears, distorted thoughts, uncontrolled emotions and behaviors that escape one's own control intermingle. Therefore, if the person with ailurophobia sees their daily life limited by this type of fear, it is advisable to seek specialized help.
The coping strategy usually starts from the following techniques:
  • The exposure therapy . In this case, it would imply bringing the person closer to those anxious stimuli (cats), to mediate cognitive and emotional reactions.
  • Cognitive-behavioral therapy is the most suitable to enable the person in the proper management of phobias. Thanks to it, we can detect maladaptive thoughts, regulate emotions and incorporate more adjusted behaviors.
  • Relaxation and breathing techniques are very suitable in these situations as well.
To conclude, although this phobia is not as common as the fear of dogs, it can also be very exhausting. After all, cats are those common tenants in many homes and on many of our streets. Treating this psychological condition will allow us to live much better.
The fear of cats is not as common as the phobia of dogs, but in certain cases, it can be very limiting. Let's know the characteristics and possible associated causes.
Mysterious, intelligent, vigilant, agile and always wrapped in that eternal aura between elegance and enigma. Felines have been the protagonists of legends and even terrifying tales, such as the now classic story by Edgar Allan Poe, The Black Cat . Be that as it may, the fear of cats is for some something justified and real, a very limiting type of phobia in a world that generally adores these creatures.
To speak of phobias is to enter a world that is as ordinary as it is singular at the same time . We are facing one of the most common psychiatric disorders, because who more and who less has their own irrational fear, that which may or may not hinder the performance of their daily life. Now, if there is one aspect that defines this condition, it is the clear difficulty in finding the origin of these fears.
In 1914, the American psychologist G. Stanley Hall published his now famous genetic study of fear in the American Journal of Psychology. In it, he identified 136 phobias, a list that is much more extensive today. For his part, the benchmark for the study of ailurophobia or fear of cats was the American neurologist Silas Weir Mitchell , who in 1902 began to collect as much information as possible to better understand this type of phobia.

continue reading on https://www.psychological-consulting.com/l/having-trouble-concentrating-lately/
Karl Peyton

'கொரோனா வைரஸுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளது, ஜப்பான் !'


"புதிய வாழ்க்கை முறையை" அறிவித்து, இந்த முறையை நீண்ட காலத்திற்குப் பின்பற்ற மக்கள் தயாராக வேண்டும் என்றும், கண்ணுக்குத் தெரியாமல்  பதுங்கியிருக்கும் வைரஸுடன் வாழவும் வேலை செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அந்நாடு அறிவித்துள்ளது.
இந்த புதிய வாழ்க்கை மாதிரியை உன்னிப்பாகப் பார்க்கும்போது - ​​பகுத்தறிவு, விஞ்ஞானம் மற்றும் இடர் மதிப்பீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு - ஜப்பானிய அரசாங்கம் இந்த நடைமுறை SOPகளை வகுத்துள்ளது.
"மோசமான" விஷயங்களை எல்லா நேரங்களிலும் கைவிட முடியாது என்பது ஜப்பானிய புரிதல். கொள்கையளவில் இடர் மதிப்பீட்டு மாதிரிகளைப் பயன்படுத்தி, மக்கள் தமது வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திசெல்ல பழகிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து.
கொரோனாவை தவிர்க்க மூன்று அடிப்படை அம்சங்கள் உள்ளன:
1. மக்களிடையே தேவையான இடைவெளியைப் பேணுதல்.
2. முகமூடி அணிதல்.
3. அடிக்கடி கைகளை கழுவுதல்.
மேலும்:
1. மக்கள் 2 மீட்டர் இடைவெளியை பேணல்
2. முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்தல்
3. மற்றவர்களுடன் நேருக்கு நேராகப் பேசுவதைத் தவிர்க்க முயற்சி செய்தல்
4. வீட்டிற்குச் சென்றதும் உடனடியாக முகத்தையும் துணிகளையும் கழுவுதல்
5. ஒருவரின் கையைத்தொட நேரிடின் அதனைக் கழுவுதல்
6. ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் எலக்ரோனிக் முறைகளை முடிந்தளவு பயன்ழடுத்தல்
7. சூப்பர்மார்க்கெட் ஷொப்பிங்குக்கு குடும்பத்தில் ஒருவரே செல்லல்
8. பொருட்களின் மாதிரிகளைத் தொடுவதைத் தவிர்த்தல்
9. பொது போக்குவரத்து பாவனையை முடிந்தளவு தவித்தல்.
10. பைக்கில் அல்லது கால்நடை யாக வேலைக்குச் செல்லுதல்.
11. மின்னணு வணிக அட்டைக ளைப் பயன்படுத்தல்
12. மீட்டிங், செமினார் போன்றவற்றுக்கு, ஸூம், டெலிவிஷனில் கொன்ஃபரன்ஸிங் முறைகளைப் பயன்படுத்தல்...
13. மண்டப வைபவங்களில், வருகையாளர்களின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்தல்,
14. வீட்டிலிருந்து வேலை செய்தல் அல்லது குறைந்தபட்ச நேரத்தில் வேலை செய்தல்.
15. வைரஸ் பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு, நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்தல்.
16. வணிக பயணங்களைக் கட்டுப்படுத்தல்.
17. தங்களுக்கு அறிகுறிகள் இருக்கும்போது, ​ சென்ற இடங்கள், சந்தித்த நபர்களை  நினைவில் வைத்திருத்தல்.
18. மற்றவர்களுடன் நேருக்கு நேர்  மற்றும்  அருகருகே அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்தல்.
19. உணவைப் பகிர்ந்து கொள்ள சிறிய பாத்திரங்களைப் பயன்படுத்தல்.
20. உணவில் அதிக காய்கறிகளை சேர்த்தல். சாப்பிடும்போது குறைவாக குறைவாகக் கதைத்தல்.
21. முடிந்தவரை ஒன்றாக உணவுக்கு விருந்தினர்களை அழைப்பதைக் குறைத்தல்
22. மூடிய இடங்கள், அடர்த்தியான கூட்டம், நெருக்கமான தொடர்பு ஆகியவற்றைத் தவிர்த்தல்.
23. சுகாதார வழிகாட்டலை வலுப்படுத்த தினமும் காலையில்  உடல் வெப்பநிலையை  சுய பரிசோதனை செய்தல்
24. கழிப்பறையை சுத்தப்படுத்தும் போது முகமூடியை அணிவதுடன், கொம்மோட்டினை மூடி வைத்தல்
25. ஒரு குறுகிய இடத்தில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்த்தல்.
26. நடைப்பயிற்சி மற்றும் ஓடும்போது, ​​ஒருவருக்கொருவர் சந்திக்கையில் மூலத்தைப் பேணுதலும், ​​மக்களின் எண்ணிக்கை சிறியதாக இருத்தலும்.
தடுப்பூசி முழுமையாக உருவாக்கப்பட்டு அதிகாரபூர்வ மாக பயன்பாட்டுக்கு வர குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்று ஜப்பானிய அரசாங்கக் குழுவின் தலைவர் ஷிகெரு ஓ கூறியுள்ளார்.
எதிரியை முற்றிலுமாக அகற்ற முடியாது என்பதால், வைரஸுடன் இணைந்து வாழக் கற்றுக் கொள்வது அவசியம்.
வாழ்க்கையில் புதிய விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நாம் நீண்ட நாட்கள் கொரோனா வைரஸுடன் நிம்மதியாக வாழ முடியும்.
உண்மையில், மேற்கூறிய பெரும் பாலான முறைகள் சீனாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இது ஒரு நீண்டகால யுத்தம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
(வட்ஸ்அப் பெட்டகத்திலிருந்து)

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்


"ராஜகுரு சேனாதிபதி .''
நான் பிறந்தது சிலாபம் மருதங்குளத்தில். அப்பா பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது எங்கள் குடும்பத்தின் பரம்பரை பெயர்.

ராஜாவுக்கு குருவாகவும், சேணைக்கு அதிபதியாகவும் இருப்பவர்கள் என்பதுதான் அதன் பொருள். மதுரங்குளம் முழுவதும் என் தாத்தாவுக்கு சொந்தமான இடம் தான். ஆனால் தாத்தாவுக்கு போகும் இடமெல்லாம் மனைவிகள் இருந்திருக்கிறார்கள். அதனால் அவர் அங்கெல்லாம் ஒரு வீட்டை கட்டி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். தாத்தாவின் அந்த வீடுகள் தாத்தாவுக்கு அந்தப்புரமாக இருந்திருக்கிறது. இப்போது அந்த இடங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் காணி தாத்தாவின் பெயரில் தான் இருக்கிறது.



“எங்கள் குடும்பத்தில் நான் ஏழாவது பிள்ளை. நான் பிறந்த வீட்டில் நாயக்கர் காலத்து தூண்கள் மாதிரி பெரிய பெரிய தூண்கள் இருக்கும். ஆனால் எனக்கு அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கக் கிடைக்கவில்லை. அப்பா அந்த வீட்டை அவரின் அண்ணணுக்கு எழுதி கொடுத்துவிட்டதால், நாங்கள் வேறு வீட்டிற்கு மாறி வந்து விட்டோம். ஆரம்பத்தில் என் பெயரை கனகரட்ணம் என்றுதான் எழுதி வந்தேன். ‘ராஜகுரு சேனாதிபதி என்று எழுதுவதை நான் விரும்பவில்லை.“எனக்கு சின்ன வயசிலேயே வானொலி என்றால் உயிர். அப்போ இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு வானொலி கிடையாது. எங்கேயோ ஒரு வீட்டில் தான் வானொலியைக் காண முடியும். ஒரு சில ஹோட்டல்களில் வானொலிகளை சத்தமாக போட்டிருப்பார்கள். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அந்த ஹோட்டல்களுக்கு அருகில் நின்று வானொலி ஒலிபரப்புகளை கேட்பேன். அப்போது என் குரலும் வானொலியில் ஒலிக்காதா என்ற ஆவல் எனக்குள் உருவாகி குதியாட்டம் போடும், நான் தனிமையில் இருக்கும்போது வானொலி அறிவிப்பாளர்கள் பேசுவது போல பேசி பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

இது இப்படி இருக்க அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் கருத்து முரண்பாடு வந்து கொண்டே தான் இருந்தது. அப்பா எனக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது என்று கூறி 'வீட்டை விட்டு வெளியே போ' என்று விரட்டினார். அப்போது வேறு ஒருவரின் உதவியுடன் வானொலிக்குள் பிரவேசம் செய்ய முயற்சி செய்தேன். வர்த்தமானியில் வெளியான அறிவிப்பாளர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு விண்ணப்பம் போட்டு விட்டு காத்திருந்தேன். பிறகு வரச் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வானேன். முதல் நாள் ஒலிபரப்பிற்காக மைக் முன்னால் அமர்ந்தபோது எனக்கு நடுக்கமாக இருந்தது. எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் என் குரலைக் கேட்கப் போகிறார்களே என்ற பயமும் பரபரப்பும் தான் அந்த நடுக்கத்திற்குக் காரணம். அப்போது நமது வானொலி தமிழகத்திலும் தெளிவாக ஒலிபரப்பாகி வந்தது. அதனால் அவர்களும் கேட்க கோடிக்கணக்கான மக்களை எமது குரல் சென்றடைந்த காலம் அது. இலங்கை வானொலியில் நிறைய நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். பொதிகை தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானே பெயரும் சூட்டினேன்.”
பாடல்: திருமலை மேலொருநாள்
பாடகர்கள்: ரி. கிருஷ்ணன், ஜெகதேவி விக்னேஷ்வரன்
இசை: எம். மோகன்ராஜ்
பாடல் வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
தயாரிப்பு: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழ்ச்சேவை


நீங்கள் வானொலி நட்சத்திரமானப் பின்னர் தங்களின் முதல் ரசிகை? முதல் காதல்?

“நான் வானொலி நட்சத்திரமானப் பிறகு எத்தனையோ பெண்களின் காதல் ரசம் சொட்டும் கடிதங்களைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அந்தக் காதல் கடிதங்களை மட்டும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பெண்ணும் என் மனசிலும் பதியவில்லை.

வாழ்க்கையிலும் துணையாகவில்லை. அது ஏனோ தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணிலும் பிடிப்பு ஏற்படவில்லை. என்னை எத்தனையோ பெண்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். என் மீது உள்ள காதலை நேரிடையாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னமோ தெரியவில்லை எனக்குதான் காதல் உணர்வே வரவில்லை. ஒரு முறை பெங்களூரிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தப் பெண் என்னைப் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவள் எனது தீவிர ரசிகை என்றும் அவள் என்னை விரும்புவதாகவும் சொல்லி கெஞ்சினாள்.

ஆனால் நான்தான் அவளோடு வந்த குடும்பத்தார்களிடம் கைகொடுத்து கும்பிட்டு அவளை அழைத்துச் செல்லும்படி சொன்னேன். இப்படியொரு மக்கனாக அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்தப்பெண்களின் சாபம் தானோ என்னவோ நான் இன்று தனிமையில் கஷ்டப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது போலும்.பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது ராஜகுரு சேனதிபதி என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள்
இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இளையநிலா என்ற தமிழ்த் திரைப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதியிருந்தார்

“ஒருமுறை நேரடியோ சிலோனில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்தபோது மறுபக்கத்தில் நந்தசேன என்பவர் ஒலிபரப்பிற்கு உதவியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் என்னை அழைத்த நந்தசேனை, மச்சான் உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? என்றார் நான் இல்லை என்றேன். தண்ணீ, பொண்ணு என்று கேட்க நான், இல்லவே இல்லை என்று மறுத்தேன்.

அப்போது நந்தசேன, நீயெல்லாம் ஏன்டா பூமியில பிறந்தாய்? என்று கேட்டார். நான் விக்கித்து நின்றேன்” என்று சொன்ன ராஜகுரு சேனாதிபதியிடம் அப்பாவிடம் அடிவாங்கி இருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“அப்பாவிற்கு என்னை பிடிக்காது. அதனால் எப்போதும் என்னை அடிப்பார். சில நேரங்களில் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திவிடுவார். நான் என் வீட்டுத் தோட்டத்திலுள்ள வாய்க்காலில் தென்னம் ஓலையை போட்டுப் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வருவேன். சில நாட்களில் மரத்தில் ஏறி அதன் உச்சியில் உள்ள கிளையில் அமர்ந்து அப்படியே தூங்கி விடுவேன்.

கீழே விழாமலிருக்க இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி மரத்தில் கட்டிவிட்டு தான் தூங்குவேன். ஒரு நாள் நானும் எனது நண்பர் பொன்னம்பலமும் மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிலாபத்திற்கு சென்று நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வரும்போது வழியில் நான் கீழே விழுந்து காலில் நல்ல அடிபட்டுவிட்டது. காயத்தோடு வீட்டுக்கு வந்தபோது அப்பா என்னை வீட்டிற்கு வெளியே நின்ற மரத்தில் கட்டி வைத்து அடித்தார். இன்றும் அந்த சம்பவம் என் மனதில் அப்படியே இருக்கிறது.”

தனிமை உங்களுக்கு கொடுமையாகத் தெரியவில்லையா?

“இல்லை. அது ஆண்டவன் கொடுத்த வரம். தனிமையை இனிமையானதாகவே கருதுகிறேன். நானே சமைத்து சாப்பிடுகிறேன். எனக்கு இதுவரையும் எந்த நோயும் வந்ததில்லை. கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நான் வானொலி, தொலைக்காட்சி கேட்பதும் பார்ப்பதும் கிடையாது. உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள திருச்சி வானொலியை மட்டும் தினமும் கேட்கிறேன்.”மறக்க முடியாத நபர்கள்?

நண்பர் நமசிவாயம், பெர்ணான்டோ, நெவில் ஜயவீர உள்ளிட்டோரை மறக்கவே முடியாது.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“எங்கள் வீட்டுக்கு முன்னாடி இருந்த மதுரங்குளம் குளத்தில கரனம் போட்டு குதித்து, நீந்தி விளையாடிய அந்த நாட்கள்... இன்று அந்தக் குளத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் ஏக்கமாக இருக்கும். என்ன செய் வது இப்போது என்னால் கரணம் போட்டு அந்த குளத்தில் குதிக்கவோ, நீந்தவோ முடியாது. வீட்டு குளியலறையில் தான் குளிக்கிறேன்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி உங்கள் புரிதல் என்ன?

“நாம் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை; கொண்டு போவதும் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட சில காலங்கள் இங்கே கொஞ்சம் தங்கியிருந்து விட்டு போகிறோம். அவ்வளவு தான். என்னைப் பொருத்தவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை இனிமையானது என்றுதான் சொல்வேன்” என்று முடித்தார் கனகரட்ணம்.சுவாரசியமான சம்பவங்கள். அவர் தனியாக வாழ்ந்தார் என்பது இப்போது தான் தெரிகிறது. தனிமை கொடுமை! முதுமையில் அதனினும் கொடுமை!!.அடக்கமான, ஆனால் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரான ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அரச வம்சத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குப் புதிய செய்தி. யார் இப்படிப் பெயர் வைத்திருப்பார்கள் என்று என் சிறிய வயதில் நான் நினைத்ததுண்டு. என் இளமைக்காலத்தில் அபிமான அறிவிப்பாளர்களில் அவரும் ஒருவர். ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 2014 சூலை 29 இல் தனது 79வது அகவையில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார். அவர் நினைவுகள் வாழ்க .நன்றி தமிழ் முரசு