Search This Blog

Wednesday, September 6, 2017

ஈழத்தில் ஒரு கீழடி





 Balasingam Sugumar

ஈழத் தமிழர்கள் புராதன நாகரிகத்துக்கு சொந்தக் காரர்கள்.ஈழதேசத்தின் கிழக்கின் தொல்லியல் களஞ்சியமாய் விளங்கும் கொட்டியாரம் நம் முன்னோர்கள் வழி ...வரலாற்றை பறை சாற்றும் பல ஆதி கால சான்றுகள் நிறைந்து காணப்படுகிறது.
சேனையூர்,கட்டைபறிச்சான்,சம்பூர்,பள்ளிக்குடியிருப்பு,நல்லூர்,மல்லிகைத்தீவு,மூதூர்,இலங்கைத்துறை,கிளிவெட்டி,ஈச்சலம்பற்று,மேங்காமம்,கங்குவேலி ,வெருகல் என விரிந்திருக்கும் கிராமங்கள் தோறும் வரலாற்றுத் தடங்கள் விரவிக் கிடக்கின்றன.
சிந்து சமவெளி நாகரிகமாக மொகஞ்சதாரோ ஹரப்பா தமிழர் முது நாகரிகத்தை சொல்கிறது.தென்னக வைகைக் கரையில் நாம் சங்க இலக்கியத்தில் படித்த நாகரிகம் மிக்க தமிழர் வாழ்வை அண்மைக்கால கீழடி ஆய்வுகள் நிருபிக்கின்றன.



ஈழத் தமிழர் தொன்மை வாழ்வு மாவலி நதிக்கரையில் செழிப்போடு இருந்ததற்கான சான்றுகள் நமக்கு திருக்கரசை திருமங்கலாயில் ஆழப் புதைந்த பதிவுகள் கட்டிட இடிபாடுகளாய் நம் கண் முன் திருக்கரசை புராணம் இலக்கியமாய் ஈழத் தமிழர் தொன்மை நாகரிகத்தை எடுத்தியம்பும்.
இன்று கல் வெட்டுகளும் அடித்தள கட்டு மானங்களும் திருக்கரசையில் புதைந்து கிடக்கும் அந்த நாகரிகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
ஒரு பெரும் பழந்தமிழர் நகரமே இங்கு புதைந்து கிடக்கிறது இலங்கையில் பொலநறுவையும்,அனுராதபுரமும் புராதன நகரங்களாக கொண்டாடப் படுகின்றனவோ திருக்கரசை நகரும் கொண்டாடப்பட வேண்டும்.
ஒரு செழிப்பு மிகு நாகரிகம் இங்கு இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்பிருந்தே தொடர்கிறது என்பதை ஆரம்ப ஆய்வுகள் நிருபிக்கின்றன.இன்னும் நாம் மேலும் மேலும் அகழ்வாய்வுகளை மேற்கொள்கிற போது நம் நாகரிகத்தின் பழமையயை ஆணித்தரமாக உறுதிப் படுத்த முடியும்.
உலக வரலாறு நதிக்கரைகளையும் ஆற்று படுக்கைகளையும் அண்டியே வளர்ந்திருக்கிறது.திருக்கரசை பெரும் கங்கை சமவெளியாய் நீண்டு கிடக்கிறது மணல் படுக்கைகளாய் உறைந்து கிடக்கும் பெரு நகரம் ஒன்று மறைந்து கிடக்கும் திருக்கரசையின் பண்டைப் பண்பாட்டை நாம் மீட்டெடுக்க வேண்டும்.


புற்று நோய்


  • -------------
    இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.

    மக...்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.
  • எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
    கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு வகையான பூஞ்சை காளான் நோயாகும்.
    சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.
    அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.
    இதன் பின் தான் இதற்கான மருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,
    அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார். இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.
    வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
    விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.
    பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
    நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
    பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !
    – அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17
    கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான் என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்
    இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.
    நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.
    அதன் பின் இந்த உப்பை நன்றாக பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,
    நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.
    அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.
    இல்லை என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.
    இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) ) தான் என்றார்.
    நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்
    உடனடியாக அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.
    அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,
    இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள் என்றார் அவர்.
    அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.
    2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார்.
    *இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*
    பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.
    ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம் இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை சென்றடைந்துள்ளது.
    மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
    வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
    இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில் இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும். முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.
    இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.
    நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
    எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.
    வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
    நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
    இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
    இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.
  • கட்செவி : சித்த மருத்துவம்

  • குரு பெயர்ச்சி பலன்கள் Guru peyarchi predictions in Tamil 2017- 2018

    மேஷம்:
    தைரியம், வீரம், வீடு, மனை, நிலம் மற்றும் உடன்பிறப்புகளுக்கு காரகரான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை ருண ரோக சத்ரு பாவமான 6 ஆம் இடத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும். பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் மகிழ்ச்சியடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொழில் தொடர்புகள் நல்ல வருமானத்தைத் தரும். சொகுசு மிகுந்த வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புதிதாக வீடு, மனை, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். மாணவ மாணவிகளின் கல்வி நிலை மேன்மையடையும். தொழில் வியாபாரம் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். தொழிலில் தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். உங்கள் தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்களிடையே நல்லுறவு நிலவும். கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்படையும். சமுதாயத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். குழந்தைகளினால் சந்தோஷம் அதிகரிக்கும்.
    குருவின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் மூத்த சகோதரர்களின் பொருளாதார நிலை சிறப்படையும். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குரு ஏழாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் பொதுவாக சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும். குரு மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் உண்டாகும்.
    ரிஷபம் :
    களத்திரத்திற்கு காரகரான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான குணமும், பிறர் மனதை கவர்ந்து நீங்கள் நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும் ரிஷபம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு அஷ்டம மற்றும் இலாப பாவாதிபதியான குரு இதுநாள்வரை தங்களின் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் இருந்து ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கப் போகிறார் இந்த காலத்தில் உங்களுக்கு குரு ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டப்படும் சூழ்நிலை உண்டாகும். . தேவையற்ற கடன்கள் வாங்கி, அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களினால் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். எதிரிகளின் பலம் கூடும். அதனால் உங்கள் மனம் பாதிப்படையும் குழந்தைகளால் வருமானம் அதிகரிக்கும் மனைவியால் விரயங்கள் ஏற்படும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் தொழிலில் விரிவாக்கங்கள் செய்யும் சூழ்நிலை உண்டாகலாம். மனைவியின் செயல்படுகள் சிறந்து, செயல்கள் எல்லாவற்றிலும் கை கொடுப்பார். தந்தை வகையில் தனவரவு உண்டாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரய பாவத்தை பார்வை இடுவதால் வீட்டில் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுக்காக செலவுகள் செய்வீர்கள் வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்படும். மூத்த சகோதரர்களால் பண வரவு உண்டாகும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில் பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குரும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
    .
    மிதுனம்:
    கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்க்கும் வியாபாரா சிந்தனைகளுக்கும் காரகரான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு களத்திர மற்றும் ஜீவன பாவத்துக்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்து புத்திர, பூர்வ புண்ணிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார். தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கொடுத்தாலும் சில கஷ்டங்கள் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். நீங்கள் எதிர்பார்த்த செல்வம் சேரும். முகத்தில் அழகும் பொலிவும் கூடும், புத்திதெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கலாம். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்க்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும் அதன் மூலம் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதைகளும் அதிகரிக்கும். தந்தையின் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கடவுள் அருள் உண்டாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு லாப பாவத்தைப் பார்வை செய்வதால் தொழிலில் தங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான இலாபங்கள் கிடைக்கும். அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரரின் பொருளாதாரம் சிறப்படையும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியை பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
    கடகம்: நல்ல மன நிலைக்கும் தாய்க்கும் காரகரான சந்திரனை அதிபதியாகக் கொண்ட நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவருமான கடகம் ராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி பலன்களைப் பார்ப்போம். உங்கள் இராசிக்கு ருண, ரோக, சத்ரு பாவதிபதி மற்றும் பாக்கியாதிபதியான குரு தைரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானமான துலாத்திற்கு மாறுகிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ராசிக்கு நான்கில் வந்த போது தான் தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி சொத்துக்களை இழந்து வனவாசம் சென்றார். அதுபோல் இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். எனவே நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது. பண இழப்பு உண்டாகலாம், குடும்பத்தில் நிம்மதி குறையும் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும். தொழில் உத்தியோகத்தில் சிக்கல்களும், வருமானக் குறைவும் ஏற்படும். குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள் வெற்றி அடையும். மன கஷ்டங்கள் மன அழுத்தங்கள் மறையும். பயம் விலகி மன பலம் உண்டாகும். இது வரை இருந்து வந்த. தடைகள் விலகி மண மேடையில் உலாவரும் பாக்கியம் ஏற்படும். குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக முடங்கிய தொழில்கள் மேன்மை நிலையை அடையும். தொழில் உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும். பதவி உயர்வு கிடைக்கும் வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். சுகமான நித்திரைக்கு எவ்விதக் குறையும் இருக்காது. கோர்ட், கேஸ் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வெற்றி கிடைக்கும்.
    சிம்மம்: அப்பாவுக்கும் ஆத்மாவுக்கும் தொழில் உத்தியோகத்திற்கும் காரகரான சூரியனை அதிபதியாகக் கொண்ட தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவர்களும் ,தன்னம்பிக்கை மிக்கவர்களுமான சிம்மம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருபெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு புத்திர பாவாதிபதி மற்றும் ஆயுள்ஸ்தானாதிபதியுமான குரு தன பாவத்திலிருந்து தைரிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார் இது நாள் வரை தனபாவத்தில் இருந்து வந்த குரு பகவான் பொதுவாக நற்பலன்களை அள்ளி வழங்கினார். இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும்.பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே நல்லது உடன் பிறப்புகளால் குடும்ப ஒற்றுமை குறையும். நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும். அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வில் தடை, தாமதங்கள் உண்டாகும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையும் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தை பார்வையிடுவதால்,திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன உறவுகள் ஒன்று கூடுவர். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தாய் மாமனின் பொருளாதார நிலை உயரும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதியஇடமாற்றங்கள் ஏற்படலாம். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் குடும்பத்துடன் புனித யாத்திரைகள் செல்லும் நிலை உண்டாகும் அப்பாவின் ஆரோக்கியம் சிறப்படையும். கடவுள் அருள் அதிகரிக்கும். குரு 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு இலாப பாவத்தைப் பார்ப்பதால் இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நிறைவேறும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம்ஏற்படும்.
    கன்னி:
    புத்தி காரகரான புதனை அதிபதியாகக் கொண்ட நற்குணமும் இரக்க குணமும் கொண்ட கன்னிராசி அன்பர்களே! உங்கள் இராசிக்கு குரு பெயரச்சி தரும்பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு சுகம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுமான குரு ஜென்ம ராசியிலிருந்து தன, குடும்ப ஸ்தானமான துலாம் இராசிக்கு மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் சிறப்பான காலம் ஆரம்பமாகிவிட்டது. வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் விரயங்கள் ஏற்படும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் உண்டாகும். தொழில் உத்தியோகம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் சீரான முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும் தரும். குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நோய் நொடிகள் குறைந்து ஆரோக்கியம் மேன்மையடையும் அம்மாவின் உடன் பிறப்புக்களுக்கு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும். தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து, கோர்ட் அலைச்சல்களும் குறையும். கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள் உயரும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆயுள் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும். நீண்ட நாட்களாக இருந்துவந்த நோய்கள் நிரந்தரமாக சரியாகும். மணவிழாக்கள் மனம் போல் சிறப்பாக நடக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஜீவன பாவத்தைப் பார்க்கிறார். அதன் காரணமாக வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும். சிறப்பாக பணி புரிபவர்களுக்கு, பணிகளைப் பாராட்டி பதக்கங்களும், பரிசுகளும் கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.
    துலாம்: அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட வெளிப்படையான பேச்சும், உண்மை பேச்சும், வாசனை பிரியரும், ஜாலியான குணமுள்ளவர்களான துலாம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சிதரும் பலன்களைப் பார்ப்போம். துலாம் ராசிக்கு தைரிய வீரிய, ருண ரோக பாவங்களுக்கு அதிபதியான குரு தங்கள் ஜன்ம இராசியில் சஞ்சரிக்கவிருக்கிறார். துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு என அலைந்து திரிய நேரிடும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வேண்டிய அளவுக்கு பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். பெண்களால் அவப் பெயர் ஏற்படலாம். செலவுகளினால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. அடிக்கடி மன குழப்பங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை உண்டாகும் தூக்கமின்மையின் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி ஏற்படும். சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ஆன்மீகப் பெரியோர்களை சந்தித்து, அவர்களின் அருளாசி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர பாவத்தை பார்வை செய்வதால் மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ வைக்கும். தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய் நொடியின் பாதிப்புகள் குறையும். சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும். குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தைப் பார்வை செய்வதால், தொழில் கூட்டாளிகளிடையே நல்லுறவு சிறப்படையும். கணவன், மனைவி இடையே அன்னியோன்னிய உறவு ஏற்படும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் கோவில் திருப்பணிகள், தர்ம காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவீர்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை உயரும். பூர்வீகத் தொழில்கள் மேம்பாடு அடையும். இலாபமும் அதிகரிக்கும்.
    விருச்சிகம்: தைரியம் வீரம் ஆகியவற்றுக்கு காரகரான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். விருச்சிகம் இராசிக்கு தன, புத்திர பாவாதிபதியான குரு விரய பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே முடிக்க முடியும். எவ்வளவு பண வரவு வந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். .சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகள செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தொலை தூரப் பயணங்கள் காரணமாக செலவுகள் தவிர்க்க முடியாததாகும்.தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். .சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில் தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும். உழைப்பினால் எந்தவிதப் பயனும் இருக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும். தொழிலில் தேவையற்ற பகை உண்டாகும். மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும். சிலர் பதவி இழக்க நேரும். தொழில் உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நிலம் வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வீடுகட்டுவீர்கள் புதிய கல்வி கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயார், வீடு, சுகம் போன்ற 4 ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள் ஏற்படும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6 ஆம் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகளின் எதிர்ப்புகள் விலகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நோய் பாதிப்புகளின் தாக்கமும், வேகமும் குறையும். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி மூலமான விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும். குரு 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக வம்பு வழக்குகள் குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தந்தையால் செலவுகள் அதிகரிக்கும். அஆன்மீகப் பயணங்களால் பணவிரயங்கள் அதிகரிக்கும். கோர்ட் வழக்குகள் வெற்றி அடையும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண வைபவங்கள் நடைபெறும். கடன் உதவிகள் கிடைக்கும்.
    தனுசு: தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், தனவான் என போற்றப்படும் நாணயமும், நியாயமும் மிக்க தனுசு ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். உங்கள் ஜென்ம இராசிக்கும் , சுக பாவத்திற்கு அதிபதியான தேவகுரு இலாப பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார் அதிகாரப் பதவி, அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். நவீன வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும் பணம் பல வழிகளிலும் சேரும். கையில் பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இது வரை தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஒற்றுமையுடன் பழகுவார்கள் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும் அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்கள் சேரும். வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். செல்வ நிலையை உயரும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி பெறும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால் கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். உயர் கல்வியில் மாணவர்களின் அறிவு விருத்தியாகும். . சகோதர வகையில் முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும். தந்தைக்குப் புதிய ஒப்பந்தங்களும், குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார்.அதன் காரணமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சந்ததி விருத்தி ஏற்படும்.பொன் ஆபரண, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். தாய்வழியில் பண வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சந்தோஷம் நிலவும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக தம்பதிகளிடையே சந்தோஷம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டுத் தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபார சம்பந்தமான வெளிநாட்டு பிராயாணங்கள் ஏற்படும்.
    மகரம்: ஆயுளுக்கும் ஜீவனத்திற்கும் காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட அனைவருக்கும் உதவுபவர்களுமான மகரராசிஅன்பர்களே! உங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான குரு ஜீவன பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக அனைத்துக் காரியங்களுக்கும் பிறர் தயவையே நாடவேண்டியிருக்கும். சிலருக்கு இதுவரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இது வரை வகித்துவந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மாசினும் எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள்விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல்சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. வியாபாரம்,தொழில் புரிபவர்களுக்கு, போட்டிகள் அதிகமாகி உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது. வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை ஆதலால் இல்லத்தில் சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். மாணவர்கள் கல்வியில் மேன்மை நிலை அடைவார்கள். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக நீண்ட நாட்களாக இருந்துவந்த நோய்கள் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.
    கும்பம்: ஆயுள் மற்றும் தொழிலுக்கு காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத்தில் நாட்டமுடையவருமான கும்பராசி அன்பர்களே! உங்கள்இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு தனம் மற்றும் இலாப பாவத்திற்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து உங்கள் இராசியை 5ம் பார்வையாக பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள்சமயோசித புத்தியால் சரியாகிவிடும். நல்ல யோகமான காலமாதலால்அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுவவீர்கள், சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இது வரை இருந்து வந்த சிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் மறையும். கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் எதிர் பார்த்திருந்த உயர் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும் அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எல்லாவகையிலும் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். அந்தஸ்து உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.சமூகத்தில் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்து தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் பெயரும் புகழும் அதிகரிக்கும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள் அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். தொழில் உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வேலையின்றி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவசதி அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்பார்த்திருந்த செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு புத்திர பாவத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக குடும்பத்துடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.குழந்தைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் சிறக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு உண்டாகும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும். வீட்டில் சுப மங்கள காரியங்கள் நிறைவேறும்.
    மீனம்: தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான்,கெட்டிக்காரர், இரக்கமுள்ள, மீனம் ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். உங்கள் ஜென்ம இராசிக்கும் ஜீவன பாவத்திற்கும் அதிபதியான குரு உங்கள் ராசிக்கு 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும்.பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள். தொழில்துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கைசந்தோஷமாகக் கழிந்திருக்கும். குருவின் தற்போதைய இட மாற்றத்தால் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். மனக் கஷ்டங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.. காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். பொருளாதாரச் சிக்கல்கள் உண்டாகும். சிலர் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தைப் பார்ப்பதால்,செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும். தன வரவு அதிகரிக்கும். பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாக்க் கிடைக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் உண்டாகும் வீடு கட்டும் ஆசை நிறைவேறும்.

    எந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த மாதிரியான திறமைகளைக் கொண்டிருப்பார்கள்

    ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணநலன்கள் மற்றும் உங்களின் திறமைகளை அறிந்து கொள்ள முடியும். வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளன. ஏழு நாட்களுக்கும் ஏழு கிழமைகள் உள்ளன. எந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த மாதிரியான திறமைகளைக் கொண்டிருப்பார்கள் என்று பார்ப்போம்.
    ஞாயிறு :
    ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் மிக எளிதாகவும், திறமையாகவும் செய்து முடித்து சாதனைப் படைப்பார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்வார்கள். மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.
    திங்கள் :
    திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் அனைவரும் விரும்பும்படியான அமைதியான மனம் படைத்தவர்களாகவும், உதவும் உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவார்கள். தர்மம், நியாயங்களைக் கடைபிடிப்பதில் உறுதி உள்ளவர்கள். நல்ல கற்பனைவளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சொந்தத் தொழில் கைக்கொடுக்கும்.
    செவ்வாய் :
    செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எதிலும் வெற்றியைக் காண்பவர்கள். இவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் நினைப்பதே சரி என்கிற மனப்போக்கு கொண்டவர்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் திகழ்வார்கள். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. நியாயம் மற்றும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.
    புதன் :
    புதன் கிழமையில் பிறந்தவர்கள் பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாக விளங்குவார்கள். சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால், அதை வாழ்நாள் முழுவதும் காப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். எந்நேரமும் சாந்தமாக இருப்பார்கள்.
    வியாழன் :
    வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு பாடுபடுவார்கள். உற்றார், உறவினர்களுக்கு உதவிபுரியும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள்.
    வெள்ளி :
    வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களை தன் வயப்படுத்தும் திறமை கொண்டவர்கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும், பாசத்திலும் மூழ்கித் திளைப்பார்கள். இவர்கள் சொல்வதை கேட்காதவர்களை இவர்கள் புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பு+ர்த்தி செய்வார்கள்.
    சனி :
    சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். தன்னம்பிக்கை மிக்கவர்கள். இவர்கள் ஒரு வேலையைத் தொடங்கினால், அந்த வேலையை முடித்தப் பிறகே அடுத்த வேலையைச் செய்யத் துவங்குவார்கள். இவர்கள் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சான்றோரிடமும், ஆன்றோரிடமும் மிகுந்த பக்தியுடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என இருப்பார்கள்.

    Tuesday, September 5, 2017

    A way to build an honest and transparent brand an example

    Finding the right way to anchor and authentically express your brand is like setting off on a road-trip to an undetermined destination. No-one in the car has been there before, the road markings seem unfamiliar, but somehow, you’ll know it’s the right place when you find it.

    Monday, September 4, 2017

    If you don't believe in aliens watch this collection!

    Humans have always wondered about life beyond the stars. The curiosity doesn't only stem from popular culture and the advent of film and television, but even before then. Books, oral stories and painting depicted "evidence" of aliens. People have always thought about extraterrestrial life, what aliens would look like, and if the creatures would come in peace, if they exist. But what are the nation's scientists and researchers saying about the potential existence of aliens? 
    NASA's administrator believes we are not alone. In 2015, Charles Bolden, who has been the administrator of NASA since 2009, said, "I do believe that we will someday find other forms of life or a form of life, if not in our solar system then in some of the other solar systems — the billions of solar systems in the universe," according to the Telegraph. 

    Jason Wright 

    If life arose naturally on Earth, it must be possible for it to arise on other, similar planets, said Wright, a professor of astronomy at Penn State.
    "The primary argument is that life exists here, and has existed here for billions of years," Wright said in an email. "That is, life on Earth presumably arose via natural processes, those natural processes are universal and the requirements for life (rocky planets, water, carbon, etc.) appear to be widespread in the galaxy."
    "Since it happened here on Earth relatively quickly after the Earth formed and cooled, it must be possible for it to happen elsewhere. Even if the probability of it happening is very low, there are billions of planets in our galaxy alone that should have conditions similar to early Earth, so it stands to reason that some fraction of them also have life."

    Saturday, September 2, 2017

    திருநள்ளாறு சனீசுவர பகவான் Thirunallar saneeswarabagavan

    திருநள்ளாறு இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், காரைக்கால் அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்குள்ளே அமைந்துள்ளது. இந்த நகரத்தை சாலை மூலம் சென்றடையலாம். சிவனின் வடிவமான சனீசுவர பகவானுக்கு என்று திருநள்ளாறில் ஒரு கோவில் உள்ளது. சனி பெயர்ச்சி அன்று தர்ப்பாரண்யேசுவரர் கோயிலுக்கு லட்ச கணக்கான பக்தர்கள் இங்கு வருவர்.

    தர்ப்பாரண்யேசுவரர் கோயில்

    முதன்மைக் கட்டுரை: திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
    திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும்.




    Sunday, August 27, 2017

    புகழ் இழந்தால் என்ன நடக்கும் ?


    தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை
    நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.
    ...
    ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்
    நாட்கள் நகர்ந்தன ...
    பதவி போனது ..
    புகழ் போனது ..
    சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது
    ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"
    மனமுடைந்த அர்னால்ட்,
    தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்
    இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்
    "நாம் பதிவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்"
    "எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,
    நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"
    "எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"
    "உங்கள் புகழை,
    உங்கள் பதவியை,
    உங்கள் அதிகாரத்தை,
    உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்"
    "இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

    Saturday, August 19, 2017

    Ismat Chughtai இஸ்மத் சுக்தாய் - யார் இவர் ?

    Govindarajan Vijaya Padma

    உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் மரபு சாரா ஆண் - பெண் உறவு முறைகளின் இடையில் பொதிந்து இருக்கும் நுட்பமான உடலரசியல் இவரது தனித்தன்மை எனலாம் 1938 இல் ஃபஸாதி என்ற நாடகம் எழுதி உருது இலக்கிய உலகிற்கு அறிமுகமானார் இஸ்மத் சுக்தாய் . முஸ்லீம் சமூகத்தில் இருந்து ஒரு பெண் எழுத்தாளராக அங்கீகரிக்கப் படுவதே சவாலான அந்த கால கட்டத்தில் (1942) அவர் எழுதிய லெஸ்பியன் உறவு பற்றிய "லீஹாப்” என்ற சிறுகதைதான் அவரை உருது இலக்கிய உலகில் தனிப்பெரும் ஆளுமையாக அடையாளப்படுத்தியது இந்த சிறுகதையினால் அவர் பெரும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருந்தது. சுக்தாயின் கதைக்களம் முற்றிலும் புதியதொரு சிந்தனையை முன்வைத்தே அமைந்திருந்தது. எழுபது வயதான பெண் ஒருத்தி இருபத்தைந்து வயது இளைஞனைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நஈ துல்ஹன் என்னும் கதையில் எழுதியிருக்கிறார்.இது இந்திய இலக்கியங்களில் இல்லாத பெண்ணின் ஆழமன உளவியல் பதிவு இஸ்மத் சுக்தாய் மற்ற பெண் எழுத்தாளர்கள் தொடாமல் இருந்த பெண்கள் தொடர்பான பாலியல் சிக்கல்களை தன்கதைகளில் அழுத்தமாக பதிவு செய்தார் .அது அவரது துணிச்சலை வெளிப்படுத்திய அதே நேரத்தில் அவருக்கு சமூகத்தில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியது அதிலும் முக்கியமாக சுக்தாயின் பிமர், சோடி அபா, கைந்தா முதலான கதைகள் இளம் வயதுப் பெண்கள் காம இச்சையில் மன அமைதி இழப்பதை சித்திரிக்கின்றன.பாலியல் அணுகுமுறையின் களங்களை மையமாக கொண்டு அவர் எழுதிய சிறுகதைகளில் ‘தோ ஹாத்’ (இரண்டு கைகள்) மிக முக்கியமான ஒரு கதையாகும் . இதில் ஒரு பெண், மிகவும் எதார்த்தமாக பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதை மிகவும் சாதாரண விசயமாக விவரித்து இருப்பார். அதற்கு இவர் சொல்லும் அழுத்தமான காரணம் ஒரு ஏழை இளம் பெண்ணிற்கு உணவிற்கான தேடலின் ஒரு வழி தான் அவளது பாலியல் தொடர்புகள் என்று குறிப்பிட்டு இருப்பார் சுக்தாயின் லீஹாப் (கனத்த போர்வை), கூன்கட் (முகத்திரை), அமரபேல் (அமரவல்லி) ஆகிய கதைகள் பொருத்தமற்ற திருமணத்தைப் பற்றியும் அதனால் பெண்களுக்கு ஏற்படும் மன சிக்கல்களையும் பாலியல் தேடல்களையும் பதிவு செய்து இருப்பார் வரதட்சனை என்பது பெண் ,ஆண் இரு குடும்பத்திற்கும் சிக்கலுக்குரியதாகவே இருக்கிறது என்பதைத் தனது (தோ ஹாத்) கதையில் பதிவு செய்திருப்பது சுக்தாயின் சமூகம் குறித்த நடுநிலைமை பார்வையை விளக்குகிறது இவை தவிர வேர்கள் என்ற கதையில் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி, தனது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார் சுக்தாய். பதினொரு புதினங்களையும் ககஜி ஹை பைரஹன் என்ற தன்வரலாற்று நூல் ஒன்றினையும் எழுதியுள்ள இஸ்மத் சுக்தாய் ஒன்பது நாடகங்களையும் நான்கு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார் இவரது புகழ் பெற்ற கட்டுரை தொகுப்பு மேரா தோஸ்த் மேரா துஷ்மன், ஹம் லோக் மற்றும் இவரது “ கரம் ஹவா” எனும் சிறுகதை திரைப்படமாகவும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.இஸ்மத் சுக்தாய் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். அவை இதுவரை எட்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள் ஏக்பாத், தோ ஹாத் என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் புகழ்பெற்ற படைப்புகளாகக் கருதப் பெறுகின்றன.. கரம் ஹவா என்ற திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான குடியரசுத் தலைவர் விருதும் (1973), சிறந்த இலக்கியப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (1976), தன்ஹாய் கா ஜஹர் என்ற நாடகத்திற்கு காலிஃப் விருதும் (1977), ஆந்திரப் பிரதேச உருது அகாதமியின் மக்தூம் இலக்கிய விருதும் (1979) இஸ்மத் சுக்தாய் பெற்றுள்ளார். இஸ்மத் சுக்தாய்க்கு சோவியத் குடியரசு 1982 ஆம் ஆண்டு சோவியத் லேண்டு நேரு விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது. இத்தனை பெரிய இடத்தை தனியொரு பெண்மணியாக உருது இலக்கிய உலகில் தக்க வைத்துக் கொண்டிருந்த சுக்தாயின் இளமைக் காலம் மிக சுவாரசியமானது . தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்தையும் இவர் கடின சவால்களை சந்தித்து எதிர்த்து தான் முன்னேற வேண்டி இருந்தது . சுபாவத்திலேயே இவருக்கு இருந்த போர்க்குணமும் , மன தைரியமும் தான் இவரை வெற்றி பெறச் செய்தது என்றால் மிகையாகாது .உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 பிறந்த இஸ்மத் சுக்தாய், தனக்கு 13 வயதில் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து புத்திசாலித்தனமாக வெளியில் வந்து படிப்பில் கவனம் செலுத்தினார் .சுக்தாயின் படிப்புக்குப் பெற்றோர்கள் தடை விதித்தபொழுது அந்தத் தடைகளையெல்லாம் களைந்து கல்வி பயின்ற சுக்தாய் இளங்கலை பட்டத்தை லக்னோவில் உள்ள இஸபெல்லா துருபன் கல்லூரியில் 1933 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டம் படிப்பதற்கு எந்தப் பெண்களும் முன்வராத நிலையில் ஆண்களுடன் சேர்ந்து படித்தார். வகுப்பறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கும். பெண்கள் அந்தத் திரைக்குப் பின்னால் இருந்துதான் பாடம் கேட்க வேண்டும். ஆனால் சுக்தாய் இதனைப் பின்பற்றாமல் ஆண்கள் பகுதியில் அமர்ந்தே பாடம் கேட்டார். தன சிறுவயதில் இருந்தே பர்தா போடுவதை எதிர்த்து தானும் பர்தா போடாமலே வாழ்ந்தார் சுக்தாய்
    வீட்டில் நிச்சயம் செய்த திருமணத்தை மறுத்த இஸ்மத் சுக்தாய் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஹாகித் லத்தீப் என்பவரை 1942 இல் வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு முன்பே எழுத ஆரம்பித்த சுக்தாய், தமது ஆசிரியத் தொழிலை விடுத்து மும்பையில் நிரந்தரமாகக் குடியேறி முழு நேர எழுத்தாளராக மாறினார்
    சுக்தாய் 1991 இல் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தமது 76ஆவது அகவையில் மும்பையில் காலமானார்.


    ISMAT Chughtai (1915-1991), one of Urdu’s most accomplished fiction writers, epitomised the 20th-century women writers of Urdu: enlightened, bold, iconoclastic, progressive and feminist.
    Chughtai penned her early pieces in the late 1930s but was not much known in the literary circles until 1942, the year ‘Lihaaf’ was published. Urdu literature of that era showed a marked tendency towards Marxism and Realism. The idea of feminism in its true sense and spirit had not quite arrived in the subcontinent in the 1940s, but much of what she wrote, with a touch of progressivism, was about the social, psychological and sexual problems faced by women. Traditional feminine sensibility of the 18th and 19th centuries demanded women to be virtuous, modest and obedient. Chughtai stressed that real feminine emotions and sensitivities are hardly ever understood in an orthodox, male-dominated society such as India’s. Never before in the history of Urdu fiction were such thoughts expressed so articulately and vividly as did Chughtai in her writings.
    In 1942 she emerged on the literary scene with a bang as her short story ‘Lihaaf’ appeared in Adab-i-Latif, a literary magazine published from Lahore. Its central theme was female homosexuality. Themes related to sensuality have never been a rarity in Urdu literature, especially in classical poetry, and a few Urdu masnavis (longish poems, often narrating a romance) are known for being too explicit. Male homosexuality had not been a taboo subject in Urdu poetry but somehow female homosexuality was not approved of, except for rekhti, a genre of classical Urdu poetry that depicted female homosexuality, mostly in implicit and symbolic terms. In the subcontinent’s conservative society these covert and occasionally overt expressions of sensuality were thought to be offensive but were quietly smiled upon.
    ‘Lihaaf’ sent tremors across the subcontinent and Chughtai had to bear with scathing criticism for it. ‘Lihaaf’ is about two women, one of whom is deprived of her husband’s love and the other is the maid servant. It is strange that ‘Chai ki pyali’, Muhammad Hasan Askari’s short story that had covert gestures to female homosexuality, published in the January 1942 issue of Adabi Duniya (Lahore), and later included in the collection of his short stories titled Jazeeray, did not invoke as much criticism as did ‘Lihaaf’; neither did rekhtis written by the male poets. In fact, Askari’s story was not taken much notice of, for reasons not known. On the contrary, Chughtai’s story was considered more offensive, perhaps because of her gender. ‘Lihaaf’ brought Chughtai much notoriety and she was even summoned by a court for the alleged ‘obscenity’. Ironically, it was exactly this kind of attitude of a male-dominated society that Chughtai used to scoff at.

    Many of Chughtai’s short stories revolve around the odds faced by women. Oppressed women fighting it out on their own fascinated Chughtai. In most of her short stories she points a finger at society for unjust treatment of women. Though she did write about the problems of women from underprivileged classes too, it was women from middle-class families she was truly interested in portraying. Describing UP’s middle or lower middle-class Muslim women and homes in a parlance peculiar to the milieu was her forte. Here, Chughtai excelled, since it was the environment she was brought up in and had personal experience of.
    But Chughtai’s exposure to trade unionism and political activism, unlike Rashid Jahan, a progressive female writer and a contemporary of Chughtai’s, was rather limited. She could possibly not have been as well-versed in Marxist philosophy either, as some of her contemporary progressives were. This is one of the reasons why she, at times, sounds shallow when she tries her hand at depicting economic issues at length. Considering her leftist leanings and close association with the Progressive Writers Association, her short stories, based purely on class conflict and Marxist themes, are not as many as one would have expected.
    Chughtai’s flowing and spontaneous style, occasionally peppered with satirical or witty remarks, makes reading a delight. Writing idiomatic and colloquial Urdu in a seemingly effortless manner is something she is known for. Her mastery over presenting women’s parlance or expressions peculiar to native speakers of Urdu, especially women from UP, is a domain in which Chughtai is unrivalled by any male or female fiction writer. In this regard, only Qurratulain Hyder is a close second, but that too only occasionally.
    This indeed can be traced to the locale in which Chughtai grew up. She was born on Aug 21, 1915, in Badaun, UP, but Agra was her ancestral hometown (her date of birth is often quoted as Aug 15 and place of birth as Agra, but, according to some researchers, Aug 21 and Badaun are more likely to be correct). She was brought up in Jodhpur, Agra and Aligarh since her father, a civil servant, was posted at different places and the family had to move quite often. From among her nine siblings, wrote Chughtai in Naqoosh (Lahore) describing her early life, her elder sisters got married when Chughtai was quite young and she spent more time in her childhood playing in the company of her brothers. This, according to her own account, turned her into a girl fond of playing hockey, football and gilli danda. In other words, she had become a tomboy, which was quite shocking to some women of Agra where the family had moved after her father’s retirement. It was equally embarrassing for her mother, wrote Chughtai, but the “culprits were my brothers”. This formative phase played a role in carving out her personality, which was marked with boldness, courage and outspokenness.
    Despite fierce resistance from some of her relatives, Chughtai did her BA in 1938 from Isabella Thoburn College, Lucknow, and obtained a degree in teacher training from Aligarh the next year. In 1941, she was appointed the superintendent of Municipal Girls School, Bombay (now Mumbai). She married Shahid Lateef, a film director and scriptwriter from Mumbai, in 1942. By the time Chughtai began writing, her brother Mirza Azeem Baig Chughtai (1895-1941) had become an established novelist and humorist of Urdu. Though her brother had an influence on her, she was most inspired by Rashid Jahan and Saadat Hasan Manto. The other influence was, of course, some Western writers such as Sigmund Freud, G.B. Shaw and D.H. Lawrence. Later, she settled in Bombay and wrote dialogues for movies as well as scripts for movies in collaboration with her husband.
    With a number of collections of short stories to her credit, such as ‘Kalyaan’, ‘Choten’, ‘Do haath’, ‘Aik baat’ ‘Chhui mui’ and ‘Thori si pagal’, Chughtai is ranked among Urdu’s most influential short-story writers of the latter half of the 20th century but she was not as successful in novels. Her novel Terhi Lakeer is, indeed, counted among the best Urdu novels, but her other novels, such as Ziddi, Masooma, Saudai and Dil Ki Dunya, could not impress the critics much, though they are not without their own merits.
    Some of her other books, such as Dauzakh, are collections of plays, short stories and essays. In plays, too, Chughtai could not make her mark and her plays can pose some difficulties to those who want to stage them. According to Patras Bokhari, the famous humorist who was a fine connoisseur of drama too, she simply did not know how to separate scenes and acts. Yahan Se Wahan Tak includes miscellany, such as her brief memoirs, an account of her journey to Pakistan in 1976, and a few short stories. But Dauzkhi, her pen-sketch of her brother Azeem Baig, written a few days after his death, is one of the best pen-sketches ever written in Urdu. It is humorous and saddening, sentimental and analytical, all at the same time.
    Chughtai died in Mumbai on Oct 24, 1991. But controversy chased the writer even after her death: she was cremated, which, according to some relatives of hers, was her will. But some contradicted this and it remains a mystery what her real will was. Chughtai is relevant even today. No study of the Urdu short story, feminism in Urdu literature or Progressive philosophy in Urdu literature can truly be called complete unless her works are taken into account.
    Dream is the Royal road to the Unconsious" - Sigmund Freud
    நாவலோ , சிறுகதையோ படித்த பின் சில மணி நேரம் , ஏன் சில நாவல்கள் சில நாட்கள் கூட மனதை போட்டு பிராண்டி , வேறு வேலையே செய்ய விடாமல் ஸ்தம்பிக்க வைத்து விடும் . அப்படி பட்ட ஒரு எழுத்துக்கு சொந்தக்காரர்தான் இஸ்மத் சுக்தாய் இவர் உருது இலக்கியத்தின் ஆளுமை . மரபு சாரா ஆண் - பெண் உறவு முறைகளின் இடையில் பொதிந்து இருக்கும் நுட்பமான உடலரசியல் இவரது தனித்தன்மை எனலாம்
    இஸ்மத்தின் கதை யதார்த்த வாழ்வில் உள்ள பெண்களின் பாலியல் தேடல்களை அவர்களின் ஆழ் மன உளவியலை அலசி வெளிக் கொணர்ந்து படைப்பாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்பதை ஒருவராலும் மறுக்க இயலாது . அதிரடியாக வாழ்வை அணுகும் தீவிர பெண்ணிய எழுத்தாளர்களால் இப்படி ப்பட்ட பாசாங்கற்ற யதார்த்த வாழ்வின் இயலபான பெண்மையின் பன்முகங்களை ,அவர்களின் பாலியல் விருப்பங்களை பதிவு செய்து விட முடியுமா என்று தெரியவில்லை இவரது கதைகளை முழுவதுமாக தமிழில் எதிர் வெளியீட்டிற்காக மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன் . வரும் புதிய ஆண்டில் புத்த திருவிழாவில் வெளிவரும் என் பெருமை மிகு படைப்பு இது என்று ஆனந்த கூத்தாடி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் .கடந்த சில மாதங்களாக இந்த வேலையின் தீவிரத்தால் தான் நான் வெளியுறவு தொடர்பை முற்றிலுமாக துண்டித்து கொண்டு , இஸ்மத்துடன் பயணித்தேன் . கதைகள் எல்லாவற்றையும் முடித்து அனுப்பி விட்டு என்னுரை என்ன எழுதுவது என்று கடந்த ஒரு வாரமாக மனதில் யோசித்து கொண்டே இருந்தேன் . நேற்று கனவில் இஸ்மத் வந்தார் , என்னுடன் பேசினார் . கனவில் அவர் என்னுடன் என்ன பேசினாரோ அதையே என்னுரையில் எழுதி முடித்து விடலாம் என மிகுந்த பரவசத்துடன் பாதி இரவில் (இரண்டு மணி ) கனவில் இருந்து கண் விழித்து அதிகாலை மூன்று மணிக்குள் என்னுரையை முடித்து விட்டு மீண்டும் தூங்கி விட்டேன் . காலையில் எழுந்து நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று படித்து பார்த்து பதிப்பாளர் அனுஸுக்கு அனுப்பி விட்டு , அம்மாவிடம் பேசினேன் . அவர் கூறினார் இன்று அக்டொபர் 24 எனக்கு பல் டாக்டர் கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் இருக்குன்னு . சரி என்று சொல்லி விட்டு இஸ் மத் பற்றிய குறிப்புகளை எழுதலாம் என்று அவற்றை படிக்க துவங்கினேன் . ஆச்சரியமாக இருந்தது "சுக்தாய் 1991 இல் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தமது 76ஆவது அகவையில் மும்பையில் காலமானார்." என்று அந்த குறிப்பில் இருந்தது . ஆழ் மன உணர்வுகள் தான் கனவாக வெளிப்படுகிறது என்று சிக்மண்ட்ஃ பிராயடு கூறியது உண்மை என்றே தோன்றுகிறது .என் கனவில் இஸ்மத் வந்ததும் அக்டோபர் 24,2017
    உலகில் மரணம் ஒரு சம்பவம் மட்டுமே ... இஸ்மத் சுக்தாய் போன்றவர்கள் மரணிப்பதே இல்லை
    மேலும் அதிக விவரம் இஸ்மத் சுக்தாய் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவார்கள் மேலும் தொடர்ந்து படிக்கலாம் . வரும் புத்தக திருவிழாவில் இந்த அருமையான நூலை வாங்கி பயனடையுங்கள் .
    1938 இல் இஸ்மத் சுக்தாய் எழுதிய முதல் படைப்பு ஃபஸாதி என்ற நாடகம் என்றாலும், அவரை உருது இலக்கிய உலகில் தனிப்பெரும் ஆளுமையாக அடையாளப்படுத்தியது 1942இல் வெளிவந்த ‘லீஹாப்”(The Quilt) என்ற சிறுகதைதான் இஸ்மத் சுக்தாய் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். அவை இதுவரை எட்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள் ஏக்பாத், தோ ஹாத் என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் புகழ்பெற்ற படைப்புகளாகக் கருதப் பெறுகின்றன..சுக்தாயின் கதைக்களம் முற்றிலும் புதியதொரு சிந்தனையை முன்வைத்தே அமைந்திருந்தது. எழுபது வயதான பெண் ஒருத்தி இருபத்தைந்து வயது இளைஞனைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நஈ துல்ஹன் என்னும் கதையில் எழுதியிருக்கிறார்.இது இந்திய இலக்கியங்களில் இல்லாத பெண்ணின் ஆழமன உளவியல் பதிவு
    இஸ்மத் சுக்தாய் மற்ற பெண் எழுத்தாளர்கள் தொடாமல் இருந்த பெண்கள் தொடர்பான பாலியல் சிக்கல்களை தன்கதைகளில் அழுத்தமாக பதிவு செய்தார் .அது அவரது துணிச்சலை வெளிப்படுத்திய அதே நேரத்தில் அவருக்கு சமூகத்தில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியது அதிலும் முக்கியமாக சுக்தாயின் பிமர், சோடி அபா, கைந்தா முதலான கதைகள் இளம் வயதுப் பெண்கள் காம இச்சையில் மன அமைதி இழந்து நிராதரவாக விடப்பட்டு வாழ்வை இழப்பதை சித்தரிக்கின்றன.
    பதினொரு புதினங்களையும் ககஜி ஹை பைரஹன் என்ற தன்வரலாற்று நூல் ஒன்றினையும் எழுதியுள்ள இஸ்மத் சுக்தாய் ஒன்பது நாடகங்களையும் நான்கு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார் இவரது புகழ் பெற்ற கட்டுரை தொகுப்பு மேரா தோஸ்த் மேரா துஷ்மன், ஹம் லோக் மற்றும் இவரது “ கரம் ஹவா” எனும் சிறுகதை திரைப்படமாகவும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    கரம் ஹவா என்ற திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான குடியரசுத் தலைவர் விருதும் (1973), சிறந்த இலக்கியப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (1976), தன்ஹாய் கா ஜஹர் என்ற நாடகத்திற்கு காலிஃப் விருதும் (1977), ஆந்திரப் பிரதேச உருது அகாதமியின் மக்தூம் இலக்கிய விருதும் (1979) இஸ்மத் சுக்தாய் பெற்றுள்ளார். இஸ்மத் சுக்தாய்க்கு சோவியத் குடியரசு 1982 ஆம் ஆண்டு சோவியத் லேண்டு நேரு விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.
    உருது இலக்கியத்தின் சிறந்த ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய் என்றால் மிகையாகாது