Search This Blog

Sunday, July 23, 2017

Singapore watercolor paintings by Marvin Chew



Marvin Chew is a full-time professional watercolour artist and the current Vice-President of Singapore Watercolour Society. He is actively involved in many exhibitions and competitions both locally and internationally.



He loves to paint outdoors and is often seen sketching and painting on location, en plein air. He also teaches art and specialises in landscape as well as street scenes watercolour paintings.


He usually paints in semi-realistic, impressionist style, using transparent watercolours that highlight the play of lights and shades, using spontaneous, bold brushstrokes in many of his works, which imbues the energy of Chinese calligraphy.




AFFILIATIONS AND ART SOCIETY APPOINTMENTS



Since 2004

- Member of Singapore Watercolour Society (SWS)


2005–2007

- Treasurer of SWS


2007–2009

- Secretary General of SWS


2009–present

- Vice-President of SWS



SOLO EXHIBITIONS



2012        

- Held first solo exhibition “In Living Colours” at GalerieSogan & Art, Singapore.


2014 

- Held second solo exhibition “Eat • Drink • Paint” at Utterly Art Gallery, Singapore


2016  

- Held third solo exhibition “My Watercolour Story” at ArtSafe Pte Ltd, Singapore



WORKSHOPS, DEMOS, EDUCATIONAL TALKS & OTHER PROJECTS


2009

- Performed Watercolour painting demo at SWS 40th Annual Exhibition



2011

- Performed Watercolour painting demo at Cliftons, Singapore



2011-2012

- Drawing & Watercolour Painting Workshop for Beginners at NUS Museum, Singapore



2012

- Art Instructor at Mouth & Foot Painting Artists Workshop at Suntec City, Singapore

- Performed Watercolour painting demo at first solo exhibition “In Living Colours”

- Performed Watercolour painting demo at Loy Chye Chuan & Students Watercolour Exhibition



2012 - 2013

- Watercolour Painting Workshops at Galerie Sogan & Art, Singapore

- Instructor for Urban Sketching workshop at Singapore University of Technology and Design (SUTD)



2013

- Talk on “History of Watercolours in Singapore” at Affordable Art Fair, Singapore



2013 - 2016

- Outdoor / Plein Air Watercolour Painting Workshops for school art teachers held in April & October, at Singapore Teachers’ Academy for the aRts (STAR)



2013 - 2014

- Supplied framed watercolour paintings to Ministry of Foreign Affairs (MFA) as overseas trip gifts



2014

- Participated in “Re-Interpretation” International Watercolour Exhibition 2014, Suzhou, China.

- Participated in “National Day Calligraphy and Painting Exhibition 2014”, Singapore.

- Participated in “Langkawi Art Biennale 2014”, Langkawi, Malaysia

- Panel of judges for “Tampines Celebrates SG50 Art Competition”, Singapore

- Watercolour painting demo at Affordable Art Fair Singapore

- Watercolour painting demo and workshop at “World Art Convention”, Kuching, Malaysia

- Watercolour painting commissioned by Port Authority of Singapore (PSA)



2015

- Participated in Singapore Art Society’s 65th Anniversary Art Exhibition, Singapore

- Selected and participated as one of the 50 artists in “A Brush with Singapore Art Society”, at Raffles City, Singapore

- Juried into the 38th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA.

- Juried into 2015 Watercolour Missouri International Exhibition, USA

- Juried into the 45th Louisiana Watercolour Society (LWS) International Exhibition, USA

- Painted 6 acrylic artworks for Radin Mas Comminunity Centre SG50 Celebration Project

- ‘Live’ watercolour painting to accompany classical music concert “Parisian Chevaliers” by Tee Khoon Tang and Elias Reyes



2015-2016

- Watercolour painting demo/ workshop at “Tanjong Goodman” Open Studio at Goodman Arts Centre, Singapore



2016

- Participated and painted on a street piano for the Singapore edition of “Play Me I’m Yours”



SELECTED GROUP EXHIBITIONS, AWARDS AND ACHIEVEMENTS


2003

- Merit Award: Project Search, Discover South East Painting Competition, Singapore


2004–2015

- Participated in SWS 35th to 46th Annual Exhibitions, Singapore


2005

- Juried into the 28th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA

- Participated in the 17th Asia International Watercolour 2005, Singapore


2006 & 2008

- Participated in the Singapore Chinese Cultural Festival Grand Art Exhibition, Singapore


2006

- Participated in Penang-Singapore Watercolour Exhibition 2006 in Penang, Malaysia


2007

- Participated in Sarawak Cultural Arts & Craft Festival 2007 in Kuching, Sarawak, Malaysia


2008

- Participated in Telok Kurau Studios - Commemorating A Decade Exhibition, Singapore

- Participated in Folk Art Forum exhibition held in conjunction with Rainforest World Music Festival in Kuching, Sarawak, Malaysia

- Telok Kurau Studios Annual Exhibition 2008 - Mountains As Non-Mountain, Singapore


2009

- Participated in Singapore Art Show 2009, “The Call of Tradition”, Black Earth Art Museum, Singapore

- Participated in Singapore Hainanese Association Art Exhibition 2009, Singapore


2010

- Participated in National Day Calligraphy and Painting Exhibition 2010, Singapore.

- Juried into the National Watercolour Society 90th international Annual Exhibition 2010, USA


2011

- Participated in Tiong Bahru Revisited Exhibition, White Canvas Gallery, Singapore

- Participated in the first group exhibition of Urban Sketchers Singapore (USk-SG) and its book launch at URA Centre, Singapore


2012        

- Participated in Mini Paintings Exhibition organised by Federation of Art Societies, Singapore

- Participated in $uper $ingapore $ale Art Exhibition at ION Orchard Gallery, Singapore

- Participated in “Our Journey” Watercolour Exhibition with Loy Chye Chuan & Students, Singapore


2013

- Juried into the 36th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA

- Juried into and won the “Christopher J. Doré Memorial Award” - 43rd Louisiana Watercolour Society (LWS) International Exhibition, USA

- Participated in “Unity-In-Diversity” 7-man Group Exhibition, National Library Board, Singapore.

- Participated in “Artist’s Favourite II” Group Exhibition, Penang State Museum, Malaysia

- Represented Singapore in “China-ASEAN Youth Artists Exchange & Workshop” in Beijing, China

- Six artworks permanently collected by the Ministry of Culture of the People’s Republic of China


2014

- Participated in “A Changed World” exhibition jointly organised by Urban Sketchers Singapore and National Museum of Singapore

- Juried into the 37th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA

- Participated in “Re-Interpretation” International Watercolour Exhibition 2014, Suzhou, China

- Participated in “National Day Calligraphy and Painting Exhibition 2014”, Singapore

- Participated in “Langkawi Art Biennale 2014”, Langkawi, Malaysia

- Participated in “World Hainanese Art and Calligraphy Exhibition”, Singapore


2015

- Participated in Singapore Art Society’s 65th Anniversary Art Exhibition, Singapore

- Selected and Participated as one of the 50 artists in “A Brush with Singapore Art Society”, at Raffles City, Singapore

- Juried into the 38th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA

- Juried into 2015 Watercolour Missouri International Exhibition, USA

- Juried into the 45th Louisiana Watercolour Society (LWS) International Exhibition, USA

- Participated in World Artists Alliance Art Exhibition in Penang, Malaysia and Hualien, Taiwan

- Participated in “National Day Calligraphy and Painting Exhibition 2015”, Singapore

- Juried into the National Watercolour Society 95th International Annual Exhibition 2015, USA

- Participated in Dr Tan Tsze Chor Art Exhibition, organised by Singapore Art Society

- Participated in “50 Cultural Landscapes of Singapore” Watercolour Exhibition by jointly hosted by Lianhe Zaobao and SWS in conjunction with Singapore’s SG50 jubilee celebration

- Participated in “A Journey to Hue” Watercolour painting tour and exhibition organised by Thua Thien Hue Fine Arts Association and Fine Arts museum of Hue City, Vietnam


2016

- Participated in the National Watercolour Society Invitational Plein Air Painting Exhibition to be held Muckenthaler Cultural Centre, Los Angeles, USA

- Participated in the International Festival of Watercolour Artists for the 234th anniversary of Rattanakosin (Bangkok), Thailand

- Participated in “Memoirs of City Port Scenes” exhibition jointly organised by Maritime Port Authority and Singapore Watercolour Society, held at Visual Arts Centre, Singapore

Guidelines on Behavior Guidance for the Pediatric Dental Patient

Sumdili 
Safe and effective treatment of dental diseases often requires modifying the child’s behaviour. Behaviour guidance is a continuum of interaction involving the dentist and the dental team, the patient, and the parent directed toward communication and education.

Recommendations for Basic behavior guidance

Communication and communicative guidance
Communicative management and appropriate use of commands are used universally in paediatric dentistry. Communicative management comprises a host of techniques which include, tell-show-do, voice control, nonverbal communication, positive reinforcement, and distraction. The dentist should consider the cognitive development of the patient, as well as the presence of other communication deficits (eg, hearing disorder), when choosing specific communicative management techniques.
1.Tell-show-do
A technique of behaviour shaping used by many paediatric professionals. The technique involves verbal explanations of procedures in phrases  appropriate to the developmental level of the patient (tell); demonstrations for the patient of the visual, auditory,  olfactory, and tactile aspects of the procedure in a carefully defined, nonthreatening setting (show); and then, without deviating from the explanation and demonstration, completion of the procedure (do).
2. Voice control
Voice     control  is             a              controlled           alteration            of            voice         volume, tone, or pace to influence and direct the patient’s     behaviour. Parents unfamiliar with this possibly aversive technique may benefit from an explanation prior to its use to      prevent misunderstanding.                       
3. Nonverbal communication
Reinforcement     and guidance of behaviour through appropriate contact, posture, facial expression, and body language.
4.  Positive reinforcement
In            the         process of            establishing        desirable             patient     behaviour, it is essential to give appropriate feedback. Positive     reinforcement is an effective technique to reward desired     behaviours and, thus, strengthen the recurrence of those behaviours. Social reinforces include positive voice modulation, facial expression, verbal praise, and appropriate physical    demonstrations of affection by all members of the dental team. Non-social reinforces include tokens and toys.                               
5. Distraction
It is the technique           of            diverting              the         patient’s attention from what may be perceived as an unpleasant procedure. Giving the patient a short break during a stressful procedure can be an effective use of distraction prior to considering more advanced behaviour guidance techniques.
Parental presence/absence

The        presence             or            absence               of            the         parent  sometimes can be used to gain cooperation for treatment. Parents’ desire to be present during their child’s treatment does not mean they intellectually distrust the dentist. It might mean they are uncomfortable if they visually cannot verify their child’s safety.  It is important to understand the changing emotional needs of parents because of the growth of a latent but natural sense to be protective of their children. Practitioners should become receptive to the involvement of parents and welcome the questions and concerns for their children.

Nitrous oxide/oxygen inhalation
Safe       and        effective technique to reduce anxiety and enhance effective communication. Its onset of action is rapid, the effects easily are titrated and reversible, and recovery is rapid and complete. Additionally, nitrous oxide/oxygen inhalation mediates a variable degree of analgesia, amnesia, and gag reflex reduction.

Adopted from the guidelines of AMERICAN ACADEMY OF PEDIATRIC DENTISTRY
Thanks  https://dentistryandmedicine.blogspot.com.au

காலம் கடந்தபின் !


ஹேமா


வெந்து வெடித்துக்கொண்டிருந்தான் அகிலன்.
ச்ச....எவ்வளவு பெரிய அவமானம்.அசிங்கம்.நினைக்க நினைக்க அழுகை ஆத்திரம் .... தன்னில் ஒரு அருவருப்பும் கூட அவனுக்கு.

அப்படி...என்னதான் கேட்டுவிட்டேன்.மனதில் உள்ளதை அப்படியே கேட்டேன்.உலகத்தில் யாரும் கேட்கக்கூடாத ஏதாவதா கேட்டேன்.



இதுக்கெல்லாம் காரணம் ஜெயந்தி.அழகின் கர்வத்தோடு அறிவும் கூடியவள்.இத்தனையும் ஒருமித்த உருவத்துள் கண்டது பிடித்துப்போனது அகிலனுக்கு.கலைக்கல்லூரியில் படிக்கும்போதே தன் மனதை அறிவிக்க விரும்பாத அகிலன்,அவளோடு கற்பனைக் காதலில் தவித்துக்கொண்டிருந்தாலும் தனக்கான ஒரு தொழில் கிடைக்கும்வரை காத்திருந்தான்.

எப்போதாவது இருவரும் சந்திக்கும் நேரங்களில்மட்டும் நட்போடு பேசிக்கொள்வார்கள்.அது சினிமா தொடங்கி சின்னத்திரை தொட்டு புதுதாய் வந்த தொலைபேசிவரை வந்து போகும்.

மேற்படிப்பைத் தொடர்ந்தபடியே ஒரு அரசாங்க உத்தியோகமும் தேடிக்கொண்டிருந்தான்.அதன் பிறகுதான் தன் எண்ணத்தைச் சொல்லும் துணிவும் வந்தது அவனுக்கு.இன்னும் தாமதிக்க விரும்பாதவன் ஜெயந்தியைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பொன்றை எதிர்பார்த்திருந்தவன்.....அன்று ஜெயந்தி தனிமையாக கோவிலுக்குப் போவதை அறிந்திருந்தான்.

கோவிலில் சந்தித்த அகிலன் தயங்கித் தயங்கி "ஜெயந்தி...கனநாளா உங்களிட்ட ஒன்று சொல்ல ஆசை."...என்று சொல்லத் தொடங்க..

"சொல்லுங்கோ அகிலன்..."என்றபடி நட்போடு மெல்லிய சிரிப்போடு கண்கள் விரித்து ஆவலைத் தெரிவித்தபடி காத்திருந்தாள் ஜெயந்தி.

மெல்லியதாய் மௌனித்து குரலை இழுத்தவன்..."ஜெயந்தி எனக்குப் படிக்கிற காலத்திலயிருந்தே உங்களை எனக்கு நிறையப் பிடிக்கும்.காலம் வரட்டும்.என்ர காலிலேயே நிக்கிற தகுதிவரைக்கும் காத்திருந்தன்.இப்ப எல்லாம் சரி.அதுதான் இண்டைக்கு உங்களிட்ட நேரவே கேக்கிற ஆசை வந்திருக்கு.நான் உங்களைக் கல்யாணம் செய்ய விரும்புறன் ஜெயந்தி.உங்களுக்கு விருப்பம் என்றால் நான் வீட்டில அம்மாவோட கதைப்பன் இதுபற்றி"...என்றான் தயக்கம் நிறைந்த குரலுடன்.

ஒரே ஒரு கணம்தான்.முகத்தில் அத்தனை கோபம்.அந்த அழகான முகமே மாறிப்போனது ஜெயந்திக்கு.

"என்ன...உமக்கு எவ்வளவு தைரியம் வேணும் இந்தமாதிரி என்னோட கதைக்க.உன்ர மனசில என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறாய் அகிலன்.பேரைப்போலவே உலகத்தை ஆள்கிற எண்ணமோ உனக்கு?"

"என்ர சாதியென்ன....உன்ர சாதியென்ன யோசிச்சுப் பாத்தியோ.எங்கட பணம் என்ன பெருமை என்ன.நீ..எனக்கு மாப்பிள்ளையோ.நீயும் நானும் பிள்ளை பெறுகிறதோ.நல்லவேளை என்ர வீட்டாக்களோட நீ இதைக் கதைக்கேல்ல.செருப்புப் பிய்ஞ்சிருக்கும்.இருட்டடி வாங்கியிருப்பாய்.பிச்சையெடுக்கிற உனக்கு பணக்கார நல்ல சாதிக்காரப் பொம்பிளை தேவைப்படுதோ..."என்றாள் நக்கலாக.நெருப்பாய் வார்த்தைகளைக் கக்கியவள் விறுவிறுவென நடந்து மறைந்துவிட்டாள்.

அவளின் சத்தம் கேட்ட கோவிலுக்குள் இருந்தவர்கள் எட்டிப் பார்க்க அவமானத்தால் குறுகிப்போனான் அகிலன்.

வீடு வந்து எப்படித்தான் மறக்க முயற்சித்தும் அந்தச் சம்பவம் திரும்பத் திரும்ப மனக்கண்ணில் வந்து அகிலனை கஸ்டப்படுத்திக்கொண்டே இருந்தது.

நாளடைவில் யோசித்த அவனுக்குள் ஒரு தெளிவு."ம்ம்....ஜெயந்தி சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.என்னிடம் என்னதான் தகுதியிருக்கிறது.அவள் கேட்ட எதுவுமே என்னிடமில்லை.எனக்கேற்றபடிதானே என் வாழ்வுக்கு நான் ஆசைப்படவேண்டும்" என்று தன்னைத் தானே சமாதனப்படுத்திக்கொண்டான்.

என்றாலும் ஊர் உறவு எல்லாருக்குமே இந்தச் செய்தி பரவ அகிலன் இன்னும் உடைந்துபோனான்.எனவே ஊரிலிருக்கப் பிடிக்காதவனாய் அரபு நாடொன்றுக்குப் பயணமானான் அகிலன்.

`````

வருடங்கள் கடந்தோடி 15 ஆகிவிட்டிருந்தது.ஜெயந்தி இப்போதும் அதே அழகின் கர்வத்தோடு ஆனால் கல்யாணம் ஆகாமல்.....

பெரிய பெரிய பதவிகள்,பணம்,புகழ் என்று மாப்பிள்ளை தேடித் தேடியே ஏதாவது ஒன்று பொருந்தி ஒன்று பொருந்தாமல் எல்லாமே தள்ளிப்போய் காலமும் முதிர்கன்னியாய் ஜெயந்தியைத் தள்ளி வந்துவிட்டது.

இன்னும் தோஷமும் சாதகமும் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் அம்மா.அம்மாவின் ஆறுதலுக்காக கோவில் வந்திருந்தாள் ஜெயந்தி.

கண்மூடிக் கும்பிட்டு நிமிர்ந்தவள் முன்னால் அகிலன்.

"ஜெயந்தி...."என்று நட்பின் அதே புன்னகையோடு அழைத்தவன் "எப்பிடியிருக்கிறீங்கள்" என்றான்.

"நான் நல்ல சுகமாயிருக்கிறன் அகிலன்.நீங்கள் எப்பிடி..."என்றாள் பதிலுக்கு.

அகிலன் இன்னும் புன்னகைத்தவாறே...."இவர்கள்தான் என்ர மனைவியும் மகளும்..." என்றான்.தோள் உயரத்தில் உரஞ்சியபடி நின்ற மகளை அணைத்தபடி அறிமுகப்படுத்தினான் அகிலன்.

ஆச்சரியப்பட்டபடியே "ஓஓ...இவ்வளவு பெரிய மகளா உங்களுக்கு..."என்றாள் ஜெய்ந்தி கணகளை அகலமாக்கியபடி.

"இவள் என்ர அப்பாபோல ஆள்தான் உயரம்.ஆனால் 13 வயசுதான்.நான் வெளிநாடுபோய் 15 வருஷமாகுதெல்லோ.நான் போய் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப்பிறகு என்ர சொந்தத்திலேயே அம்மா பார்த்துத் தந்த பெண்ணைத்தான் அங்க கூப்பிட்டுக் கல்யாணம் செய்துகொண்டன்...."என்று சொல்லி முடித்தான் ஒரே மூச்சில்.

"ஜெயந்தி ...நாங்கள் இன்னும் ஒரு மாதம் இங்கதான் இருப்பம்.நேரம் கிடைக்கேக்க வீட்டுப்பக்கம் வாங்கோவன்..."என்று அழைப்பொன்றை விட்டபடி மனைவியையும் மகளையும் தோளில் கைபோட்டு அணைத்தபடி நடந்துகொண்டிருந்தான் அகிலன்.விழியசைக்காமல் சிலையாய் நின்றிருந்தாள் ஜெயந்தி.

15 வருடங்களாகத் தனக்காக தன் தகுதிக்கேற்ற துணையைத் தேடிக் காத்திருந்த அவளுக்குத் தன் இழப்பு என்னவென்பது இப்போது புரிந்தது.தன் தந்தையின் கைபிடித்து நடந்துகொண்டிருந்த அகிலனின் மகள் மீண்டும் திரும்பிப் பார்த்துக் கையசைத்துவிட்டு நடந்துகொண்டிருந்தாள்.ஜெயந்தி அந்த இடத்திலேயே உறைந்து நின்றிருந்தாள்

இப்போதும் கோவிலுக்குள் இருந்தவர்கள் எட்டிப்பார்த்து எதையோ சொல்லிக்கொண்டுதானிருந்தார்கள்......!
thanks 
http://santhyilnaam.blogspot.com/

கமலஹாசன்தன் வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பகிர்ந்துகொண்ட பேட்டி

பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடனுக்கு கமலஹாசன் மிக நீண்ட பேட்டி ஒன்றை அளித்தார். தன் வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பகிர்ந்துகொண்ட அந்தப் பேட்டியிலிருந்து சில கேள்வி பதில்கள்...
“பொதுவாகவே நீங்க ரொம்ப கால்குலேட்டிவ், எதையும் குள்ளநரித் தனத்தோட செய்யற Opportunist-ன்னு சினிமா ஃபீல்டிலே ஒரு பெயர் உண்டே...?”
“அப்படிப் பார்த்தால் யார் சந்தர்ப்பவாதி இல்லை? பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நான், நீங்கள்... யார்தான் ஒவ்வொரு விதத்தில் சந்தர்ப்பவாதி இல்லை? எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி அடைய, பிரச்னைகளைச் சமாளிக்க யோசனை செய்கிறார்கள்... திட்டம் போடுகிறார்கள்... நான் சற்று அதிகமாக யோசிப்பேன்... திட்டமிடுவேன்... சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பேன்... அது குள்ளநரித்தனமா? எனக்குக் குள்ளநரித்தனமிருந்தா, 1986-ல் பணச்சிக்கல் வந்திருக்காது. இன்னிக்கும்கூட வருமானம் தரக்கூடிய சொத்துக்களோ, வருமானமோ எனக்குக் கிடையாது. வீடு கூட இப்பதான் கட்டி முடிச்சேன். என் பர்சனல் லைஃப்ல எனக்குச் சிக்கல் வந்தப்ப எனக்கு நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னே தெரியலை. In Fact ஒருத்தர்கிட்ட நான் போன் பண்ணியே கேட்டேன். ‘ப்ளீஸ்... நீங்க எனக்கு ஃப்ரெண்டா, எதிரியான்னு சொல்லிடுங்க. நண்பனா இருந்தா மன்னிச்சுடறேன். எதிரியா இருந்தா என்னை நான் பாதுகாத்துப்பேன்’னு வெளிப்படையாவே கேட்டேன்!”
“உங்க ஆரம்ப நாட்கள்ல, உங்களுக்கு ஒரு ‘ப்ளே பாய்’ இமேஜ் இருந்தது. உங்களுடைய பேட்டிகளும் பகிரங்கமா இருக்கும். இதெல்லாம் திட்டமிட்டு நீங்களே ஏற்படுத்திக்கிட்ட 'இமேஜ்'தானே?”
“அதைக்கூட 'திட்டமிட்டு'ன்னு சொல்ல மாட்டேன். ஒருவித காம்ப்ளெக்ஸ்ல பண்ணினதுன்னுகூடச் சொல்லலாம். அப்ப நான் பரதநாட்டியம் கத்துக்கிட்டவன். என்னுடைய நடன அரங்கேற்றம் ஆர்.ஆர். சபாவில நடந்தது. விழாவுக்கு டி.கே. சண்முகம் வந்திருந்தார். அவர் பேசும்போது ‘ஆண், நாட்டியம் கத்துக்கும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். பெண்மைக்குண்டான நளினம் உடம்பில தங்கிடற வாய்ப்புண்டு’ன்னு சொன்னார். நான் சினிமாவில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சப்போ, டான்ஸ் தெரியும்கிறதனால ‘பொட்டை’ மாதிரி இருக்கான்னு சொல்லிடக் கூடாதுங்கிறதுக்காக, பெரிய மீசை, நிறைய தலைமுடி வெச்சுக்கிட்டேன். நிறைய பெண்களோடு தொடர்பு இருக்கிற மாதிரி நானே நிறைய சத்தம் போட்டேன். என்னுடைய அபரிமிதமான கற்பனைக்கு நானே நிஜ உருவம் கொடுக்க ஆரம்பிச்சேன். நான் ஏற்படுத்திக்கிட்ட ‘காஸனோவா’ இமேஜ்படி பார்த்தா, நான் தாசி வீடே கதின்னு இருந்திருக்கணும். ஆனால், இதுவரை அந்த மாதிரி போனதில்லை. நானும் எல்லாவித சலனங்களுக்கும் உட்பட்ட, தவறுகள் செய்த சராசரி மனிதன்தான். என் நண்பர் ஒருவர்கூட எங்கிட்ட கேட்டார். ‘கமல், உங்களுக்கு செக்ஸுங்கிறது பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டிபன், டின்னர் மாதிரிதானே?’ன்னார். நடக்கிற காரியமா இது?
“இன்னமும் நீங்க, நாத்திகர்தானா?”
“கோயிலை இடிக்கணும்னு சொல்ற நாஸ்திகனுமில்லே... எல்லாத்துக்கும் கடவுளை இழுக்கிற ஆஸ்திகனுமில்லே. என்னால பக்தி விஷயத்துல உடன்பட முடியலே. அதுக்காக மத்தவங்க சென்டிமெண்ட்ஸ்ல நான் தலையிடறதும் இல்லே...”
“உங்க குழந்தையுடைய பர்த் சர்டிபிகேட்ல மதம்கிற இடத்தில ‘Nil’னு போட்டதாகச் சொல்லியிருந்த ஞாபகம்...”
“ஆமாம்! நான் இந்தியன். அவ்வளவுதான். I don't believe in religion. என் இரண்டாவது மகளுக்கும் அப்படித்தான். எந்தக் காலகட்டத்திலேயும் என் குழந்தைகள் இந்த மதம்தான்னு சொல்லி குறுக்க மாட்டேன்.”
“நீங்கள் நிறைய படிக்கிறீர்கள்... ஆகவே இந்தக் கேள்வி... யாருமில்லாத தீவில் ஒரு மாதம் கழிக்க வேண்டுமென்றால், உங்களுடன் என்ன புத்தகங்கள் எடுத்துச் செல்வீர்கள்?”
“மார்க்ஸின் Das Kapital புத்தகம் வாங்கிப் பல வருஷங்கள் ஆகின்றன. தீவிலேயாவது படிக்கலாமென்று எடுத்துச் செல்வேன்.
ரசிகர் மன்றங்கள் பற்றிப் பேச்சு திரும்பியது.
“இப்போது என் பெயரில் ரசிகர் மன்றங்கள் கிடையாது. அவை நற்பணி இயக்கங்கள்தான். 1973-லிருந்து 1980 வரை நானும் ரசிகர் மன்றங்கள் இல்லாமத்தான் இருந்தேன். ஆனால், நாம வேண்டாம்னாலும் என் ரசிகர்கள் ரிலீஸ் அன்னிக்கு தியேட்டர் வாசல்ல போய், தோரணங்கள் கட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அவன் சொந்தக் காசைப் போட்டு தியேட்டர்ல கொடி கட்டப் போகும்போது, மற்ற நடிகர்களுடைய மன்றங்களோட மோதல்! நாம அவங்களை அங்கீகரிக்காட்டாலும் கமல் ரசிகர்கள் கலாட்டான்னுதான் பெயர் வரும். அதை ஒழுங்குபடுத்தத்தான் ரசிகர் மன்றங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்களோட நெருங்கிப் பழக ஆரம்பிச்சேன். எவ்வளவு Man power வேஸ்டா போகுதுன்னு உணர முடிஞ்சுது. ஆனால், அந்த மன்றங்களும் முதல் நாள் டிக்கெட் பிளாக்ல விக்கற அளவுக்குத்தான் இருந்தது. மேலும் ஒரு ஸ்டேஜுக்கு மேல, அதுக்குத் தலைமை தாங்கறவங்க அதை ‘மிஸ்யூஸ்’ பண்ண ஆரம்பிச்சாங்க. என்னையே பிளாக் மெயில் பண்ற அளவுக்கு வளர்ந்தது. ‘நாங்க கைதட்டி, விசில் அடிக்கலைன்னா உங்க படம் ஓடிடுமா?’ன்னு என்னையே கேக்க ஆரம்பிச்சாங்க. அப்படிப் பார்த்தா என்னுடைய எல்லாப் படங்களுமே சூப்பர் ஹிட்டாயிருக்கணுமே! இந்த பிளாக்மெயிலுக்கெல்லாம் பணியக்கூடாதுன்னு மன்றங்களைக் கலைச்சேன்.
அதே சமயம், அந்த இளைஞர்களுடைய பலத்தைச் சரியா பயன்படுத்த நினைச்சேன். நானே தலைமை ஏற்று, நற்பணி இயக்கங்கள் ஆரம்பிச்சேன். இதுக்கு சினிமா கலர் மட்டும் இருக்கக்கூடாதுன்னு பல அறிஞர்களை எங்கள் விழாவுக்குக் கூப்பிட ஆரம்பிச்சோம். முதல்ல சினிமா ரசிகர்கள் கூட்டம்னா வர்றத்துக்கே தயக்கம் காட்ட ஆரம்பிச்சவங்க, இப்ப எங்களுடைய பணிகளைப் பாத்து புரிஞ்சுக்கிட்டு வர ஆரம்பிச்சிருக்காங்க. ரத்த தானம், கண் தானமெல்லாம் பண்றோம். இதுவரைக்கும் பதினைந்தாயிரம் பேர் கண்தானம் பண்ணியிருக்காங்க. அதேமாதிரி ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலேயும் லைப்ரரி ஆரம்பிக்கப் போறோம்.”
“நீங்கள் செயல்படுத்தும் விதம் ஆக்கப்பூர்வமா இருக்கலாம். ஆனால், ரசிகர் மன்றங்கள் ஆரோக்கியமான விஷயமா?”
“தமிழ்நாட்டுல அது தவிர்க்க முடியாத விஷயமாயிட்டுது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேருந்து இது தொடருது. அதுவும் இதன் மூலமா எம்.ஜி.ஆர். முதலமைச்சராவே ஆயிட்டார். அதனால ஒவ்வொரு நடிகருக்கும் இந்த மன்றங்கள் கூட்டத்தைப் பார்த்தவுடனே, உள்ளுக்குள்ளே நாமும் கோட்டையில போய் உட்கார மாட்டோமான்னு ஒரு ஆசை இருக்கு! கூட்டத்துக்குப் போனா ‘வருங்கால முதல்வரே’ன்னாங்க. 'தலைவரே'ன்னாங்க. அதெல்லாம் பார்த்தபோது, எனக்கேகூட ஆரம்பத்துல ஒரு ஒண்ணரை மாசம் அந்த மயக்கம் இருந்தது உண்மை! அதை எளிதில் தவிர்க்க முடியாது...”
“அப்ப எதிர்காலத்துல இந்த ரசிகர் மன்றங்களுடைய நிலைமை?”
“அதுக்கு முதல்ல, நடிகர்களைப் பார்த்து ‘தலைவா’ன்னு சொல்றது போகணும். இந்த ‘தலைவா’ கலாசாரம் அரசியல்லேருந்து வந்தது. எம்.ஜி.ஆரை, சிவாஜியை அப்படிச் சொன்னதுக்குக் காரணம் - அவங்களுக்குப் பலத்த அரசியல் பின்னணி இருந்தது. சிவாஜி சார் தி.மு.க-வுக்கு நிதி சேர்க்கத் தெரு முனையில நின்னு ‘பராசக்தி’ வசனம் பேசினாரு. அப்புறம் பகுத்தறிவோட உடன்படாம ஒதுங்கி, திருப்பதிக்குப் போயிட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் தீவிரக் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தாரு. அவங்களை மாதிரியே நாமும் என்று நினைச்சுக்கிட்டிருக்கற Myth போகணும்...”
“இந்த இளைஞர் சக்தியை வைத்துக்கொண்டு நீங்கள் அரசியலில் இறங்கலாமே?”
“நிச்சயமா என்னால முடியாது. ‘அரசியலுக்குப் போனா நான் கொலைகாரனா ஆயிடுவேன்'னு ரஜினி சொன்னது ரொம்பவும் உண்மை. அவர் சொன்னதுக்குக் காரணம், அவர் Temperament! எனக்கும் அதே மனநிலைதான். இறங்கினா ‘மெஷின் கன்’னை எடுத்துக்கிட்டுப் போய், எல்லாரையும் சுடற எண்ணம் வந்தா ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம்! நான் ஒரு False Messiah-வாகத்தான் இருப்பேன். என்னால முடியாது...”
- விகடன் .

Tuesday, July 18, 2017

வாலியின் நினைவு தினம்

கவிஞர் வாலி

(இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிறப்பும் வளர்ப்பும்

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது திருப்பராய்துறையில், வளர்ந்தது திருவரங்கத்தில். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.

வாலி இறப்பு

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.

வாலி பெயர்க்காரணம்

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

எழுதிய நூல்கள்

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


இவற்றையும் பார்க்கவும்

1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.
சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.
தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!

குறிப்பிடத்தக்க பாடல்களில் சில

பாடல்படம்வருடம்
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... "ஆயிரத்தில் ஒருவன்1968
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... "தீர்க்க சுமங்கலி1974
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... "இரு மலர்கள்1967
நான் ஆணையிட்டால்எங்க வீட்டு பிள்ளை(1965)
காற்று வாங்க போனேன் -கலங்கரை விளக்கம்(1965)
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ-சந்திரோதயம்(1966)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா -எதிர்நீச்சல்(1968)
இறைவா உன் மாளிகையில்-ஒளிவிளக்கு(1968)
அந்த நாள் ஞாபகம் -உயர்ந்த மனிதன்(1968)
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்-இருகோடுகள்(1969)
ஆண்டுக்கு தேதிசுபதினம்(1969)
மதுரையில் பறந்த மீன்கொடியை-பூவா தலையா(1969)

விருதுகள்

  • பத்மஸ்ரீ விருது-2007
  • 1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.
  • 1970 – எங்கள் தங்கம்
  • 1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
  • 1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள்
  • 1990 – கேளடி கண்மணி
  • 2008 – தசாவதாரம்

குவைத் பெண் கவிஞர் ஸுஆத் ஸுபாஹ் கவிதைகள்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நான் குவைத்தின் மகள்...
மணலுக்கு மேல் தூங்கும்
இந்தக் கரையின் மகள்
அழகிய மான் போல...
என் கண்களில்
இரவின் நட்சத்திரங்கள் வெளியாகி
சந்திக்கின்றன

பேரீச்ச மரங்களும்..
இங்கிருந்து தான்...

என் பாட்டன்மார்கள் அனைவரும்
கடலுக்குப் போனார்கள்...
அசாத்தியமானவற்றைச் சுமந்து
திரும்பி வந்தார்கள்

நான் குவைத்தின் மகள்...
என் உள்ளம் காய்ந்ததாயிருப்பது
சாத்தியமானது தானா..

மரத்தினாலான குதிரை போல?...
உணர்ச்சியற்று...
மரத்தினாலான குதிரை போல?

என் வளர்ச்சியை அழித்து விடுவது
அரபியருக்கு சாத்தியமானதா?

அரபிக்கடலிலிருந்து குடித்த
பேரீச்சமரம் என் உடல்...
என் சுயத்தின் பக்கத்தின் மீது
வடிவம் கொண்டது

எல்லாத் தவறுகளும்
கவலைகளும்
அரபியரின் நம்பிக்கைகளும்"
(...)

"என் நண்பனாகி விடு...
என் நண்பனாகி விடு...
அமைதியின் துறைமுகத்திடம்
தேவையானவள் நான்

காதல் கதைகளாலும்
வேதனைச் செய்திகளாலும்
சோர்வடைந்தவள் நான்...

பெண்ணை கொலுமண்டபத்தின்
சிலையெனக் கருதும் இந்தக் காலத்தினால்
சோர்வடைந்தவள் நான்...

எனவே என்னைச் சந்திக்கும் போது நீ பேசு...
என்னைச் சந்திக்கும் போது நீ பேசு...

கீழைத்தேய ஆண்
ஒரு பெண்ணைச் சந்திக்கும் போது
ஏன் பாதிப் பேச்சை மறந்து விடுகிறான்?

அல்வாத் துண்டையோ புறாக்குஞ்சுகளையோ தவிர
அவளிடம் வேறெதையும்
ஏன் பார்க்க மறுக்கிறான்?

அவளின் மரங்களில்
ஆப்பிளைப் பறித்து விட்டு
ஏன் தூங்கிப் போகிறான்?"
(...)
"என் கவிதையால்
கண்ணியத்தின் சுவற்றை
உடைத்து விட்டேன் என்று கூறுகிறார்கள்...
ஆண்கள் தான் கவிஞர்கள்

இந்தக் கூட்டத்தில் இனி எப்படி
கவிதாயினி தோன்றுவாள்?!...
சிரிக்கவும் செய்கிறேன்...
சிரிக்கவும் செய்கிறேன்

அர்த்தமற்ற இந்த அனைத்தையும்...
நட்சத்திரங்களின் போர்க்காலத்தில்
பெண்களை உயிரோடு புதைக்க
விரும்பிக் கொண்டிருப்போரை
கேலி செய்கிறேன்

என் சுயத்தைக் கேட்கிறேன்...
ஆண்களின் பாடல் ஹலால்
ஆவது எதற்காக

பெண்களின் குரல்
கீழ்த்தரமானதாகி விட்டதா?

ஆச்சரியமான இந்தச் சுவர்களை
ஏன் நிறுத்தி வைக்கிறார்கள்...
வயல்களுக்கும் மரத்திற்குமிடையில்...
மேகங்களுக்கும் மழைக்குமிடையில்

பெண்மானுக்கும் ஆணுக்குமிடையில்
இருப்பது தான் என்ன?"

மொழியாக்கம்: Musthafa Qasimil
"إنني بنت الكويت ... بنت هذا الشاطئ النائم فوق الرمل
كالظبي الجميل ... في عيوني تتلاقى أنجم الليل
وأشجار النخيل .. من هنا...
أبحر أجدادي جميعاً ... ثم عادوا يحملون المستحيل
إنني بنت الكويت ... هل من الممكن أن يصبح قلبي يابساً ..
مثل حصان من خشب ؟ ... بارداً... مثل حصان من خشب ؟
هل من الممكن إلغاء انتمائي للعرب ؟
إن جسمي نخلة تشرب من بحر العرب ... و على صفحة نفسي ارتسمت
كل أخطاء ، و أحزان ، و آمـال العرب."
(...)
"كن صديقي... كن صديقي ... فأنا محتاجةٌ جداً لميناء سلام
وأنا متعبةٌ... من قصص العشق وأخبار الغرام
وأنا متعبةٌ... من ذلك العصر الذي يعتبر المرأة تمثال رخام
فتكلم حين تلقاني... تكلم حين تلقاني...
لماذا الرجل الشرقي ينسى حين يلقى امرأة نصف الكلام؟
ولماذا لا يرى فيها سوى قطعة حلوى وزغاليل حمام؟
ولماذا يقطف التفاح من أشجارها ثم ينام؟"
(...)
"يقولون أني كسرت بشعري جدار الفضيلة ... وأن الرجال هم الشعراء
فكيف ستولد شاعرة في القبيلة؟! ... وأضحك... وأضحك
من كل هذا الهراء ... وأسخر ممن يريدون في عصر حرب الكواكب، وأد النساء!
وأسأل نفسي... لماذا يكون غناء الذكور حلالاً
ويصبح صوت النساء رذيلة؟
لماذا يقيمون هذا الجدار الخرافي ... بين الحقول وبين الشجر ... وبين الغيوم وبين المطر
وما بين أنثى الغزال وبين الذكر؟"

Thanks 
Kutti Revathi

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும் Old Song

படம்: மாணவன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு: பீ.சுசீலா
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1970
நடிப்பு : ஜெய்சங்கர்,லக்ஷ்மி
ஆஹா ஹா ஹாஹா
லலலா லலலா லலலா
ஹே ஒஹோ ஹோ
லலலா லலலா ஆஹா ஹாஹா
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
நாணம் என்ற காலெடுத்து
முன்னால் வர
நூறு வகை சீதனமும் பின்னால் வர
நாள்.. மணநாள்.. தேடினால்
தா.. சுகம்.. தா நாடி வா
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
வா....
பக்கம் வா..
நெருங்கி வா...
தா...
தொட்டுத்தா...
தொடர்ந்து தா...
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

ஷ்ரிடி சாய் பாபா தகவல்கள்

மதிப்பிற்குரிய முஸ்லிம் பெரியவர் !
சாய் பாபா பற்றி பல்வேறு தவறான தகவல்களால் அவரை நிந்திக்கும் ஒரு சிலர் இருக்கின்றனர் . உண்மையில் அவர் யார் என்பதை ஆராய்ந்தால் பிரமிக்க வைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன . அதில் ஒரு சில விசயங்களை இங்கு கொடுக்கிறேன் .
சாய்பாபாவின் பிறப்பு யாரும் அறியாதது .பதினாறு இருக்கலாம் என்று உத்தேசமாக சொல்லகூடிய வயதில் ஒரு சிறுவன் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷ்ரிடி என்ற ஊரின் எல்லையில் உள்ள வேப்ப மரத்தடியில் யோக நிலையில் கண்மூடி அமர்ந்திருப்பதை அந்த ஊரில் உள்ள மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள் . எந்த வித அசைவும் இல்லாமல் வருட க்கணக்கில் அச்சிறுவன் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க , அது பின்தங்கிய கிராமம் என்பதால் அந்த ஊரின் மக்களுக்கு அச்சிறுவன் வித்தியாசமாக தோன்றுகிறான் . அவனை நெருங்கி பேசினாலும் கூட அவன் கண் திறக்கவில்லை . காற்று மழை குளிர் எதையும் பொருட் படுத்தாது , உணவு கூட எடுத்து கொள்ளாமல் அசைவின்றி இருப்பது கண்டு ஊர் மக்கள் ஆச்சரியம் கொண்டு அவன் ஏதோ தெய்வ அவதாரம் என்று அச்சிறுவனுக்கு முன் உணவினை வைக்கிறார்கள் . அதைஅவன் தொடக்கூட இல்லை .அந்தக் காலத்தில் அந்த எல்லையை சுற்றி காடு இருந்தது . பல துஷ்ட மிருகங்கள் வரலாம் என்றாலும் அது குறித்த எந்த வித அச்சத்தையும் வெளிப்படுத்தாது அச்சிறுவன் வருடக் கணக்கில் தவத்தில் இருந்தது ஒரு சிலருக்கு வியப்பாக இருந்தாலும், அவனுடைய உடையமைப்பு காணும் போது அவன் முஸ்லீம் போன்ற தோற்றம் இருந்ததால் , அவ்வூரில் இருந்த இந்துக்கள் இவன் யாரோ முஸ்லிம் சாமியார் இவனை துரத்த வேண்டும் என்று தவக்கோலத்தில் இருக்கும் சிறுவனை கற்களால் அடிக்கத் துவங்குகின்றனர் .. ஒரு வருடமாக தவத்தில் இருப்பவன் சாதாரண மனிதன் அல்ல என்று அவனை துன்புறுத்த துவங்கும் போது அவன் எதுவும் மறுப்பு சொல்லாமல் கண்ணை திறந்து எல்லோரையும் பார்த்து விட்டு அந்த ஊரை விட்டு போய் விடுகிறான் .
மீண்டும் 1858 ல் அச்சிறுவன் வளர்ந்த வாலிபனாக ஷ்ர்டி க்கு திரும்பி வருகிறான். அப்பொழுது ஷீரடியில் உள்ள கண்டோபா ஆலயத்திற்கு வருகிறார் .அந்த ஆலய குருக்கள் " ஆவோ சாய் " என்று அவரை அழைக்கிறார் . சாய் என்பதற்கு " ஏழை பக்கிரி " என்பது பொருள் . அப்பொழுது sai அவர்களின் உடை ஒரு "சூபி " சாது வினுடைய உடை போலவே இருந்ததால் அப்படி அழைக்கப் பட்டார். வருடங்கள் கடந்து வயோதிகம் வரும்போது கிராம மக்கள் அவரை " ஆன்மிக பெரியவர் " என்ற அர்த்தம் வருமாறு " சாய் பாபா " என்றழைத்தனர் .

வாழ்நாள் முழுவதும் ,""Sabka Malik Ek" ("One God governs all")," என்று சொல்லிக்கொண்டே இருந்தார். திருக்குர்ரானை தினமும் தபேலா இசையுடன் படித்து மக்களுக்கு சொல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார் . தான் தங்கியிருந்த மசூதியில் இந்துக்கள் பூக்களால் அலங்காரம் செய்து ஹிந்து வழக்கப்படி ஆராதனை செய்வதை வரவேற்றார். வாழும் முஸ்லீமாக இருந்தாலும் , ஹிந்து தத்துவங்களைப் பேசுவதுமாக இருந்த பாபா தன்னை நோக்கி ஏதாவது குறை என்று வந்தால் அவர்களுக்கு , தன் இருப்பிடத்தில் என்றும் எரிந்து கொண்டு இருக்கும் விறகிலிருந்து வரும் சாம்பலை கொடுப்பது வழக்கம் .
Zoroastrianism என்ற பார்சிய மதத்தை சார்ந்தவர்கள் எரியும் நெருப்பை கடவுளாக வணங்குவர் . பாபாவும் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு எதிராக தானே சென்று காடுகளில் விறகு பொறுக்கி வந்து நெருப்பை உருவாக்கி அதை வழிபடுவதை வழக்கமாக வைத்து இருந்தார். அவர் இறக்கும் வரையிலும் இந்த நெருப்பு அணையவில்லை . பாபா என்ற மனிதர் பிரிட்டிஷ் இந்திய அதிகாரத்தில் அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியாக மதங்களை கையில் எடுத்து ஆங்காங்கே மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தினார்கள் . அந்த சமயங்களில் ஷீரடியில் மட்டும் எங்குமே மதக்கலவரம் ஏற்படாமல் பாபா ஆட்கொண்டார் . இந்தியாவின் மிகப்பெரிய கொடிய தாது வருடப் பஞ்சக்காலங்களில் , ஷ்ரிடி பாபா தானே உணவு சமைத்து அக்கிராம மக்களுக்கு வழங்கி உள்ளார். தன்னைத் தேடி வரும் பணக்காரர்களிடம் கறாராக காசு, உணவு தானியங்களை வாங்கி அதை தானே சமைத்து அனைத்து உயிர்களுக்கும் ஒரே உணவை வழங்கி உள்ளார். தன் வாழ்நாளில் இரண்டு தடவை உடலை விட்டு 72 மணி நேரம் வெளியேறி பின் மீண்டும் உடலுக்கு திரும்பி உள்ளார். இது யோக நிலையில் கரை தேர்ந்தவர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று .
அன்பான முஸ்லிம் பெரியவரான பாபா , குர்ரான் சொன்ன அத்தனை விசயங்களையும் தன் வாழ்நாளில் கடைப்பிடித்து வாழ்ந்தவர் . அல்லா மாலிக் என்று அல்லாவின் பெயர் சொல்லி வாழ்ந்தவர் . அனைத்து மதங்களும் ஒன்றே. இறைவன் ஒருவனே .. அவனே பெரியவன் " என்று சொன்னவர். இவருடைய தத்துவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ..." உன்னைத் தேடி வரும் ஒரு உயிர் ..அது இறைவனால் அனுப்ப பட்டது . அதனுடைய தேவைகளை நீ பூர்த்தி செய் . முடியாவிட்டால் கோபபட்டு துரத்தாதே .. அது இறைவனை நிந்திப்பதாகும் . யாரும் யாரையும் எந்த வித முன் காரணமும் இல்லாமல் சந்திப்பதேயில்லை . யாருக்கு கொடுத்தாலும் அது இறைவனுக்கு செய்வது . இறைவன் உனக்கு அதன் பலனை இரண்டு மடங்காக கொடுப்பான். " என்ற விசயம்தான் . இன்றைக்கு முகநூலில் என்னிடம் மிக நெருக்கமான நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் எனக்கும் கூட ஏதோ முன் ஜென்ம தொடர்பு இருந்திருக்குமோ என்னமோ ..? அல்லா மாலிக் .சாய்பாபா என்ற மனிதர் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.அவர் இறந்த பிறகு அவருடன் இருந்தவர்களை துரத்திவிட்டு ஹிந்துக்கள் ஷ்ரடி கோவிலை கட்டி விட்டார்கள்.அது மசூதி என்பதால்தான் பாபா சிலையின் காலடியில் சமாதி இருக்கும்.தயவு செய்து அன்றைய காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒருவரை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அவரை கடவுளாக்கி மூட நம்பிக்கைகளின் மொத்த இருப்பிடமாக மாற்றியது சில பிராமணர்கள். அவர்களின் பெயரும் சத்சரிதத்தி ல் கூறப்பட்டுள்ளது.பாபா வரலாறு கூட யார் யாரோ எழுதிய துதான்.இன்றைக்கும் அங்குள்ள வயது முதிர்ந்தவர்கள் தெளிவாக அவர் விவரங்களை கூறுகிறார்கள்.1917ல்தான் பாபா மரணமடைந்தார்.
Govindarajan Vijaya Padma

Monday, July 17, 2017

தமிழ் தாய் வாழ்த்து வரலாறு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.லார்டு லிட்டன் என்பவர் எழுதிய தி சீக்ரெட் வே (The secret way) என்ற நாடக நூலை தமிழில் 1891ல் மொழிபெயர்த்தார் பெ. சுந்தரம் பிள்ளை . அந்த நாடக நூலின் பெயர் "மனோன்மணியம் " 1879ம் ஆண்டு பெ.சுந்தரம் பிள்ளை இந்த மொழிபெயர்ப்பு நூலை துவங்கி 1891 ம் ஆண்டு தான் வெளியிட்டார். இந்நூலை அவர் எழுதி முடிக்க சுமார் 13 வருடங்கள் பிடித்தன . யாப்பு வடிவிலும், கதைமாந்தர் பேசும் முறையிலும் கதை சென்றாலும், இதை வாசிப்பவர்க்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றதொரு நூலை நாம் படிக்கிறோம் என்ற எண்ணமே உண்டாகும்.இது ஒரு மொழி பெயர்ப்பு என்று தோன்றாத வகையில் இந்நூலின் ஆக்கம் இருக்கும் . நூலின் முகப்பில் கடவுள் வாழ்த்து எழுதும் எழுத்தாளர்களின் வழக்கம் போல , இவர் "தமிழ் தாய் வாழ்த்து " எழுதினார். அந்த வாழ்த்து பாடல் 1970ம் வருடம் ஜூன் மாதம் தமிழக அரசால் அங்கீகரிக்கப் பட்டு தமிழகத்தின் தமிழ் தாய் வாழ்த்தாக அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் அரசாணை இயற்ற பட்டு அறிவிப்பு வெளியானது . நம் தமிழ் தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் .தமிழ் தாய் வாழ்த்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் , கலைஞர் கருணாநிதி அவர்களின் மேற்பார்வையில் , பாடல் சுருக்க பட்டு , தேவையில்லாத சில வார்த்தைகள் குறைக்கப்பட்டே தமிழக அரசால் வெளியிடப் பட்டது



பெ. சுந்தரம் பிள்ளையின் (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் நாடக நூல் பெரும் புகழ் பெறவே அவர் பெயரின் அடை மொழியாக நூலின் பெயர் இணைத்து அவர் அழைக்க பட்டார் .இவர் பயின்றது தத்துவம் என்பதால் புகழ்பெற்ற பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குகந்த மாணவரானார். புகழ்பெற்ற சமூகவியலாளர் ஸ்பென்சரைப் போற்றுபவர்களில் ஒருவராக இருந்தார். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர். சிறுவயது முதலாகவே தேவாரம் திருவாசகம் முதலிய பக்தி இலக்கியங்களைத் தம் தந்தையாரின் வழிகாட்டுதலில் பயின்றவர். திரு வனந்தபுரத்திலும், சட்டாம்பி சுவாமிகள், தைக்காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் 1897இல் (30-01-1897, Madras Standard).ல் இவர் எழுதியிருக்கிறார்: “India south of the Vindhyas, the Peninsular India, still continues to be India proper” அதாவது மெய்யான இந்தியா என்பதே விந்தியத்திற்குத் தெற்கிலுள்ள பகுதிதான் அதாவது தென்னிந்தியா என்பது சுந்தரம் பிள்ளையின் கருத்து.
சுந்தரனார் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ இருபது நூல்களுக்கு மேல் எழுதியதாகச் சொல்வார்கள். எழுதிய நூல்களில் முக்கியமானவை நூற்றொகை விளக்கம், மனோன்மணீயம், திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள் (Some Milestones in the History of Tamil Literature) ஆகியவை.பத்துப்பாட்டு பற்றிப் பொதுவாக எழுதப்பட்ட நூல் The Ten Tamil Idylls (பத்து வாழ்க்கைச் சித்திரங்கள்) என்பது. இதைத் தவிர, கிறித்துவக் கல்லூரி இதழ்களில் ஹாப்ஸ் பற்றியும், பெந்தாம் பற்றியும், நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதியிருக்கிறார்.The Ten Tamil Idylls என்ற நூலில், பத்துப் பாட்டில் மூன்று பாடல்களை-திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரை
க்காஞ்சி- நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தி
ருக்கிறார். 1889இல் பத்துப்பாட்டின் பதிப்பு, உ. வே. சாமிநாதையரால் வெளியிடப்ப ட்டவுடனே 1891இல் இவற்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நாற்பத்திரண்டு வயதுக்குள், கல்வெட்டாராய்ச்சி, தர்க்கமுறை, அறிவியல்முறை ஆய்வுகள், நூற்பகுப்பு முறைகள், இலக்கிய ஆய்வு எனப் பலவற்றிலும் தோய்ந்து அவற்றை முறையாக வெளிப்படுத்தியவர் சுந்தரனார். தமிழ், ஆங்கிலம், தத்துவம் ஆகிய முத்துறைகளில் வல்லுநர். ஒருபுறம் சைவப் பற்றும், அக்கறையும் இருந்தாலும், ஸ்பென்சர், ஹாப்ஸ் என அவர் போற்றிய அறிஞர்களின் கொள்கைகள் சுந்தரனாரின் இன்னொரு முகத்தையும் காட்டவல்லவை. தன்னுடைய 42 வது வயதிலேயே மரணமெய்தினார் சுந்தரனார் .இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் மிக அரிய படைப்புகள் இவரால் தமிழுலகிற்கு மட்டுமல்ல கேரளத்திற்கும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்...

சீராரும் வதனமென திகழ் பாரத கண்டமிதில்...

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும்...

தக்கசிறு பிறை நுதலும் தறிதனரும் திலகமுமே...

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற...

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!!!
தமிழணங்கே!!!

உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!!
வாழ்த்துதுமே!!!
வாழ்த்துதுமே!!!

##############################################
(Oh Tamil Country!) you are beautifully clad in the wavy rivers and seas;

Your chiseled face shines amidst the famous Barath sub-continent;

You are the elite Dravidian country in the Deccan;

Your small forehead shines like the crescent with a distinct "thilagam";

Like the fragrance of the "thilagam" rejoiced by the entire world,

Your great name and fame is known in all directions;

Oh Tamil Angel! Oh Tamil Angel!

Your majestic, youthful industriousness makes us spell bound and wish all the best for you, all the best! all the best!
Govindarajan Vijaya Padma

“Non-invasive self diagnosis of silent heart attack”.மெளனமாக ஏற்படும் மாரடைப்பை கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை


A teenager has developed a technique to detect so-called "silent" heart attacks. 
Akash Manoj, who is thought to be 15 or 16 years old, is a student in Tamil Nadu and discovered a method of analysing a specific protein in the blood that can determine if a patient is at risk.
The schoolboy said he was inspired after his grandfather suffered a heart attack and it is thought the advance could save many lives."Silent heart attacks are extremely deadly and alarmingly common these days. In these cases, almost no symptoms are evident and thus people look so healthy to us," Akash told the India Times. "My grandfather also looked healthy but one day he collapsed following a sudden heart attack."
The technique involves analysing the presence of a protein, FABP3, in the blood, without puncturing the skin.As FAB3 has a negative charge it attracts to positive charges, a property Akash utilised in the detection process. 
UV light is passed through the skin and a sensor detects the amount of protein present.
Akash has been honoured for his discovery and has been invited to partake in the "Innovation Scholars In-Residence Programme".
தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது ஆகாஷ் மனோஜ், மெளனமாக ஏற்படும் மாரடைப்பை கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். சைலண்ட் ஹார்ட் அட்டாக் பலருக்கு ஏற்படுவதா...
ல் அதைப் பற்றி தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டால் பலரது உயிர் காக்கப்படும், அதன் முதல் அடியே ஆகாஷ் கண்டுபிடித்துள்ள கருவி.பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு மார் வலி, மூச்சுத்திணறல் போன்ற சில அறிகுறிகள் ஏற்படும். ஆனால் சைலண்ட் ஹார்ட் அடாக் ஏற்படுவோருக்கு இதுபோன்று எதுவும் வருவதில்லை. அதுபோன்ற சமயத்தில் பலரும் அதை சாதரண ஜுரம், உடல்வலி என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். வரவிருக்கும் ஆபத்தை உணராமல் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக பலரும் ஏமாந்து போகின்றனர்.
ஆகாஷின் தாத்தாவிற்கு இதுபோன்று ஒருமுறை சைலண்ட் மாரடைப்பு ஏற்பட்டது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இதை கண்டுபிடிக்க ஒரு கருவி தேவை என யோசித்த ஆகாஷ் ஆய்வில் இறங்கினார்.


“என் தாத்தா ஒரு சர்க்கரை நோயாளி, அதிக ரத்த அழுத்தமும் உடையவர். ஆனால் ஆரோக்கியமாக இருந்தார். ஒருமுறை உள்ளுக்குள்ளே ஏற்பட்ட மாரடைப்பில் நிலைகுலைந்து இறந்து போனார்,”
என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கூறினார் ஆகாஷ். ஆகாஷுக்கு மருத்துவ ஆய்வுகள் என்றால் அதீத ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே மருத்துவம் சம்மந்தமான ஆராய்ச்சிகளை படிப்பார். பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் மையத்தின் நூலகத்துக்கு சென்று அவ்வப்போது படித்து தன் அறிவை பெருக்கிக் கொள்வார் ஆகாஷ். ஹோசூரில் வாழும் ஆகாஷுக்கு அந்த மையம் ஒரு மணி நேர தூரத்தில் இருப்பதால் அந்த நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆய்வுக் கட்டுரைகள் எடுத்து படிக்க அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. அதனால் நூலகங்கள் சென்று படிக்கத்தொடங்கினார் ஆகாஷ்.
நான் படித்துள்ள ஆய்வுகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டி இருந்தால் அது கோடிகளை தாண்டி இருக்கும் என்கிறார். மருத்துவ அறிவியலில் ஆர்வம் மிகுதியால் அது சம்மந்த ஜர்னல்களை எடுத்து படிப்பது எனக்கு பிடிக்கும் என்கிறார்.
துளையில்லா தொழில்நுட்ப முறையைக் கொண்டு ஆகாஷ் இந்த கருவியை உருவாக்கினார். இது ரத்தத்தில் ப்ரோடீன், FABP3 இருப்பதை கண்டுபிடிக்கும். ஒருவரின் மணிக்கட்டு அல்லது காதுப் பகுதியில் பின்னால் பொருத்திடவேண்டும். ஹஃப்பிங்க்டன் போஸ்ட் பேட்டியில் கூறிய ஆகாஷ்,
“ப்ரோடீன் வகைகளில் மிகச்சிறிய வகை FABP3 ஆகும். ரத்தத்தில் இருக்கும் இது பொதுவாக நெகட்டிவாக சார்ஜ் ஆகியிருக்கும். அதனால் பாசிட்டிவ் சார்ஜ் நோக்கி இது ஈர்க்கப்படும். இந்த தன்மையை நான் என் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தினேன்,” என்றார்.
அண்மையில் ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தலைவர் ப்ரனாப் முகர்ஜி, ஆகாஷை தனது விருந்தினராக அழைத்து பாராட்டினார். Innovation Scholars In-Residence திட்டத்தின் கீழ் அவர் அழைக்கப்பட்டார். தனது கருவி பல உயிர்களை காக்க உதவும் குறிப்பாக ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கையாக உள்ளார் ஆகாஷ். இக்கருவிக்கான காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். பொது மக்களின் நலனுக்காக இந்த கருவியை இந்திய அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் கார்டியாலஜி துறையில் படிக்க விழைகிறார். டெல்லி ஏய்ம்ஸ் கல்லூரியில் படிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறார் இவர். இந்த இளம் வயதில் தனது ஆர்வத்தை ஒரு பயனுக்காக பயன்படுத்தி எல்லாருடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த முனையும் இச்சிறுவன் நன் நாட்டிற்கு கிடைத்துள்ள பொக்கிஷம். இவருக்கு நமது வாழ்த்துக்கள்.