Search This Blog

Wednesday, September 16, 2015

Very high-calorie diets show how overeating may lead to diabetes



The research involved six healthy men who were either of normal weight or overweight. The research team asked the men to consume 6,000 calories of a typical American diet every day for one week.

That's a huge boost in food intake: According to the Institute of Medicine, a healthy diet for the average sedentary male aged 30 to 50 years should average around 2,200 calories per day.

The six men were monitored closely in a hospital as they engaged in the high-calorie diet. The men were also not allowed to engage in any physical activity during this time.

Reporting in Science Translational Medicine, the research team said that all of the men gained an average of about eight pounds in just a week.

In addition, in as little as two days after starting the diet, all of the men reached a metabolic state known as insulin resistance—often a precursor to diabetes. Insulin resistance occurs when the body produces the hormone, but cannot use it efficiently. What exactly is happening?

The new study suggests that the oxidative stress on cells—stemming from eating excessive amounts of food—may be the missing link. Oxidative stress involves the overproduction of oxygen byproducts that are toxic to cells, the researchers explained in a university news release.

After analyzing the men's urine and fat tissue, the researchers spotted a rise in proteins associated with oxidative stress.

Oxidative stress appeared to trigger changes to a glucose transporter protein, known as GLUT4. These changes may have affected the protein's ability take up glucose in response to insulin, leading to insulin resistance, the team theorized.

According to the researchers, the findings suggest an antioxidant treatment, or a therapy designed to target GLUT4, might someday help control obesity-linked insulin resistance.

While the study was small and relatively brief, it certainly does reinforce recommendations for folks to be mindful about their intake of calories and to exercise more.

http://stm.sciencemag.org/content/7/304/304re7

Three New Studies Converge on Promising New Target for Addiction Treatment

Metabotropic glutamate receptors, which include the subtypes mGluR2 and mGluR3, have been known targets for addiction treatment. Unfortunately, mGluR2/3 agonists studied to date have shown important limitations, including development of tolerance and decreasing food intake along with drug intake.
Recent issue of Biological Psychiatry presents the results of three studies implicating metabotropic glutamate receptor 2 (mGluR2) as a new molecular target for the treatment of addiction.
The first study investigated whether non-neuronal glial cells regulate the activity of brain circuits that mediate relapse to cocaine. They used a molecular switch called Gq-DREADD to activate glial release of the chemical messenger glutamate in a key reward center of the brain, the nucleus accumbens.
The authors found that activating glutamate release prevented relapse to cocaine use in rodents who previously self-administered this drug. They also found that the effect of glial activation was mediated by stimulating mGluR2 and mGluR3.
The second and third studies reported encouraging anti-addiction effects of AZD8529, an AstraZeneca drug, which works by selectively enhancing the stimulation of mGluR2.
2nd study reported that AZD8529 reduced nicotine self-administration and prevented relapse to nicotine seeking following withdrawal in squirrel monkeys. They also showed that this drug decreases the ability of nicotine to stimulate dopamine release in brain regions implicated in reward in rodents.
A different research team discovered that AZD8529 reduced cravings to self-administer methamphetamine in rodents following voluntary abstinence.
Dr. John Krystal, Editor of Biological Psychiatry, summarized, "It is unusual to have three papers supporting a new treatment mechanism emerge at the same time. Enhancing mGluR2 function may hold promise for the treatment of addiction."

Tuesday, September 15, 2015

Ten Ways to Become a More Confident Person


"பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படைகோயில் "ராமசாமி கோயில்”

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.
தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.
பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் 

பஞ்சவன் மாதேவிச்சரம் வரலாறு !!!!!
சோழப் பெருமன்னர்கள் வரிசையில் திலகமென திகழ்ந்த முதலாம் ராஜராஜனின் மனைவியே இந்த பஞ்சவன்மாதேவி.இவர் சேரர் குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள்.திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவுரே இவரின் ஊராகும்.பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி “அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்” என்று கூறுகிறது.திருப்புகலூர் கல்வெட்டால் இத்தேவியின் மற்றொரு பெயர் “நக்கன் தில்லையழகி” என அறிய முடிகிறது.
கோவிலின் முன் தோற்றம்
கோவிலின் முன் தோற்றம்
பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.
IMG_20141102_121909
தேவியின் ஆடல் திறனை விளக்கும் சிற்பம்
பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகளும்,சாதனைகளும் பலவாகும்.நினைவு கூறத்தக்க வகையில் புகழ் மிகுந்து திகழ்ந்ததால் சோழ நாட்டில் ஓர் ஊருக்கே இவர் பெயரால் “பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்களம்” என பெயர் மாற்றம் ஏற்பட்டது.
IMG_20141102_121918
போர்த்திறனை விளக்கும் சிற்பம்
பஞ்சவன் மாதேவிச்சரம் என்பது ராஜராஜனின் தேவி பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றனைகாக எடுக்கப்பட்ட நினைவாலயம்.இத்திருகோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இதனை “பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்” என்று குறிப்பிடுகிறது. இதே கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் தளபதி அருண்மொழியான உத்தம சோழ பிரம்மராயன் பற்றியும், சைவ மடங்களுள் ஒன்றான லகுலிசமடம் பற்றியும் அதன் தலைவர் லகுலிச பண்டிதர் பற்றியும் பல வரலாற்று தகவலை சுமந்து நிற்கிறது.

பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்
பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்
இக்கோவில் திருச்சுற்றில் உள்ள விநாயகர்,பிச்சை தேவர்,ஆலமரச் செல்வர்,லிங்கோத்பவர், பிரம்மன்,துர்க்கை போன்ற சிற்பங்கள் ராஜேந்திர சோழனின் தனி முத்திரையாகும்.இரண்டு சிவபெருமானின் கோல நிலைகளில் பல்லவர்களின் கலைமனம் கமழ்கிறது. இவை கி.பி. 710-715 வரை ஆண்ட இரண்டாம் நந்தவர்ம பல்லவனின் காலத்தில் அவனது கோநகரான பழையாறையில் இடம் பெற்று இருந்த சிலைகளாய் இருக்கலாம்.
IMG_20141102_122433
பல்லவர் கால சிவபெருமான் சிற்பம்
கருவறையின் அர்த்தமண்டபத்தில் உள்ள நந்தியும் கல்தூணும் பழுவேட்டரையர்களின் கலைப்படைபாகும்.இதே போன்ற நந்தியும் தூணும் பழுவுரிலும் காணபடுகிறது. பழுவேட்டரையரின் மகள் என்பதால் இத்தேவி பிறந்த மண்ணின் கலைமனம் கருவறையில் வீசுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற நந்தி
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற நந்தி
IMG_20141102_122306
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற லிங்கம்
சோழ பெருமன்னர்களின் தலைநகராகவும்,சோழ அரச குடும்பத்தினர் இறுதிவரை வாழ்ந்த இடம் என்ற பெருமையை உடைய பழையாறை மாநகரில் ஒரு பகுதியாக திகழ்ந்த பட்டீச்சரம் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது இந்த பஞ்சவன் மாதேவிச்சரம். பட்டீச்சரம் தேனுபுரிச்சரர் திருகோவிலில் இருந்து அரை கி மீ துரத்தில் உள்ளது இந்த பள்ளிப்படை ஆலயம். தற்பொழுது இந்த கோவில் ராமநாதன் கோவில் என்று அழைக்கபடுகிறது.
IMG_20141102_121951
மேற்கூரிய தகவல்கள் குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவின் குடவாயில் கட்டுரைகள் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. பலர் பார்த்து படித்து பஞ்சவன் மாதேவியின் வரலாற்றை தெரிந்துகொள்ள போகும் படி எங்களின் Natives OF Thanjavur Public Welfare Trust அறக்கட்டளை சார்பில் இந்த வரலாற்றை அந்த கோவில் வைத்துள்ளோம், இந்த வரலாற்றை படித்து அதை தொகுத்து எழுதும் பாக்கியத்தை அடியேனுக்கு வழங்கிய எங்கள் Natives OF Thanjavur Public Welfare Trust அறக்கட்டளை நண்பர்களுக்கு என் சிரந்தாழ்த்த நன்றிகள், நான் படித்து பரவசமடைந்த பஞ்சவன் மாதேவி வராலாற்றை இன்று பலரும் பார்க்கும் வண்ணம் அங்கே நிறுவியுள்ளோம், அதை என் கையால் எழுதி கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது என்பதை நினைக்கும் பொழுது வரும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எல்லாம் பஞ்சவன் மாதேவியின் அருள்.
IMG_20141102_122029


Thanks-Thiruganansambandham chandru

DAD Lovely Video


Robotic Limbs Get a Sense of Touch

Advanced prosthetics have for the past few years begun tapping into brain signals to provide amputees with impressive new levels of control. Patients think, and a limb moves. But getting a robotic arm or hand to sense what it’s touching, and send that feeling back to the brain, has been a harder task.

The U.S. Defense Department’s research division last week claimed a breakthrough in this area, issuing a press release touting a 28-year-oldparalyzed person’s ability to “feel” physical sensations through a prosthetic hand. Researchers have directly connected the artificial appendage to his brain, giving him the ability to even identify which mechanical finger is being gently touched, according to the Defense Advanced Research Projects Agency (DARPA). In 2013, other scientists at Case Western Reserve University also gave touch to amputees, giving patients precise-enough feeling of pressure in their fingertips to allow them to twist the stems off cherries.
The government isn’t providing much detail at this time about its achievement other than to say that researchers ran wires from arrays connected to the volunteer’s sensory and motor cortices—which identify tactile sensations and control body movements, respectively—to a mechanical hand developed by the Applied Physics Laboratory (APL) at Johns Hopkins University. The APL hand’s torque sensors can convert pressure applied to any of its fingers into electrical signals routed back to the volunteer’s brain.

ஆந்தையாக மாறிய தேவதை . ஆலன் கார்னர் (Alan Garner)

ஆலன் கார்னர் (Alan Garner) - என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார்.

வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். 'உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல் வயப்பட்டு அவனை திருமணம் செய்து, ஒரு நாள் வாழ்ந்தாலும், அடுத்த நாளே பொன்னிறமான இறக்கையுள்ள தேவதையான நீ அழகில்லாத ஆந்தையாக மாறிவிடுவாய்'.
இப்படி எச்சரிக்கை செய்யப்பட்ட தேவதை, பூமிக்கு வந்தாள். வானுலகத்தில் இல்லாத பல துயரமான விஷயங்கள் பூமியில் இருப்பதைப் பார்த்து வருந்தினாள். ஆனால், இங்கு வாழும் மனிதர்களின் காதலும், அதில் வரும் தடைகளும் அவளுக்கு மிகவும் ரசனையாகத் தோன்றிவிட்டன. அதை நேரடியாக அனுபவிக்க தேவதை ஆசைப்பட்டுவிட்டாள். ஓர் இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.
பிறகு அந்தச் சுகத்திலிருந்து மீளமுடியாமல் அவனைத் திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது அவளுக்கு வானுலகத்தின் எச்சரிக்கை மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டது.
ஒரே ஒரு நாள் பூமியில் உள்ள இளைஞனுக்கு மனைவியாக வாழ்ந்து, அந்தச் சுகத்தை அனுபவித்துவிட்டுப் பிறகு அடுத்த நாளிலிருந்து காலம் முழுவதும் ஆந்தையாகத் துயரப்படுவதா அல்லது காதலைத் தியாகம் செய்துவிட்டு, சிறகடித்து வானுலகத்துக்கு அழகிய தேவதையாகப் பறந்து செல்வதா?
தீர்க்கமாக யோசனை செய்தாள். பிறகு உறுதியான ஒரு முடிவுக்கு வந்தாள். காதலனோடு ஒருநாள் வாழ்ந்தால்கூட போதும். அதற்குப் பிறகு என்ன ஆனாலும் பரவாயில்லை.
இந்த விஷயத்தைத் தன் காதலனிடம் சொன்னால் சம்மதிக்க மாட்டான் என்று கருதி தனது வானுலக சாப விஷயங்களை மறைத்து அவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். ஒருநாள் முழுவதும் இமைப்பொழுதும் பிரியாமல் அர்த்தமுள்ள முழு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தாள். அடுத்த நாள், அவள் உருவம் மெல்ல மெல்ல மாறியது. ஆந்தை ஆனாள்.
காதலின் உன்னதத்தை விளக்கவே, ஆலன் கார்னர் The Owl Service (1967) என்ற இந்தக் கதையை எழுதினார்.
சாதாரணமாக, ஆலன் கார்னர் கதை எழுதும்போது, அடித்துத் திருத்தி நிறைய மாற்றங்கள் செய்வார். 'தேவதை' கதை எழுதும்போது அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் கதையின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தங்கு தடையின்றி எழுதி முடித்தார். அதைப் பார்த்த அவரது உதவியாளர்கள், 'எப்படி இவ்வளவு சுத்தமாக இந்தக் கதையை எழுதினீர்கள்?' என்று கேட்டார்கள்.
'இந்தக் கதையை நான் எழுதவில்லை. இதில் வரும் கதாநாயகியான தேவதையே எழுதியதால்தான் அடித்தல் இல்லாமல் இருக்கிறது' - ஆலன் கார்னர் சிரித்துக்கொண்டே சொன்னார். விளையாட்டாக அப்படிக் கூறியதில் இருந்த ஓர் அதிசய உண்மையை அவர் அப்போது உணரவில்லை. அதுதான்
சில நாட்களில் அவர் எழுதிய கதை மிகவும் பிரசித்தி பெற்றது. அதை டிவியில் தொடர் நாடகமாக எடுக்க விரும்பினார்கள். ஆலன் கார்னர் மேற்ப்பார்வையில் டிவி படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடந்தன.
தேவதை ஒரே ஒருநாள் காதலனுடன் வாழ்ந்ததாகக் கதையில் சொல்லப்படும் வீட்டைப் போல, பொருத்தமான ஒரு வீட்டை ஆலன் கார்னர் தேடினார்.
வேல்ஸ் என்ற இடத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையடிவாரம் அவர் மனதுக்கு ரம்மியமாகப்பட்டது. அங்கே போனார். அந்த சூழ்நிலையில் எங்காவது ஒரு வீடு படப்பிடிப்புக்குக் கிடைக்குமா என்று தேடினார். தூரத்தில் மலையடிவாரத்தில் மரங்கள், செடிகள் அடர்ந்த சோலை மாதிரி இருந்த இடத்தின் நடுவில் ஒரு வீட்டைப் பார்த்தார். அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள், படப்பிடிப்புக்கு அனுமதி தருவார்களா என்று விசாரிக்கச் சென்றார். அருகே சென்று அந்த வீட்டின் அமைப்பைப் பார்த்ததுமே அதிர்ச்சியடைந்தார்.
தன்னுடைய தேவதைக் கதையில் வருணித்த மாதிரியே ஒவ்வொரு அமைப்பும் இருந்தது. கதவில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள்கூட அச்சுபிசகாமல் அப்படியே இருந்தன.
அந்த வீட்டில் யாரும் குடியிருப்பதற்கான அறிகுறியே இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தார். அந்த வீட்டின் சாவி, வேறு ஒருவரிடம் இருந்தது. அவர் வந்து திறந்து காட்டினார். உள்ளே போன ஆலன் கார்னருக்கு தலைசுற்றி மயக்கமே வந்துவிட்டது. படுக்கை அறை, சமையற்கட்டு, ரிசப்ஷன் ஹால், ஜன்னல்கள்கூட அவர் கற்பனையாக கதையில் வர்ணித்தபடியே இருந்தன.
எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? ஆலன் கார்னருக்கு ஒன்றுமே புரியவில்லை.
'இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்! அவர்கள் எங்கே?' - விசாரித்தார்.
'இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு பைத்தியம். அவன் எப்போதாவதுதான் வருவான். அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் விரும்பினால் இங்கேயே படப்பிடிப்பை நடத்துங்கள்' என்றார் வீட்டின் சாவியை வைத்திருப்பவர்.
ஆலன் கார்னர், இவ்வளவு பொருத்தமான வீடு கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் அங்கே படப்பிடிப்பை ஆரம்பித்தார். முதல் நாள் படப்பிடிப்பு முடியும்போது ஒரு பெரிய ஆந்தை, ஆலன் கார்னரின் தலைக்கு மேல் பறந்துவிட்டுப் போனது. அடுத்த பத்து நாட்கள் தொடர்ந்து அந்த வீட்டின் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் அந்த ஆந்தை வரவில்லை.
கடைசி நாள் கிளைமாக்ஸ். ஆலன் கார்னர் கதைப்படி (தேவதை ஆந்தையாக மாறும் காட்சியை) அந்த வீட்டின் பெட்ரூமில் காலை பத்து மணிக்கு எடுக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்த ஆந்தை அறைக்குள் பறந்து வந்துவிட்டது. படப்பிடிப்புக் குழுவினர் எவ்வளவு விரட்டியும் அந்த ஆந்தை அந்த அறையை விட்டுப் போகவில்லை. ஆலன் கார்னர் அதை விரட்ட வேண்டாம் என்று கூறிவிட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து முடித்தார்.
அதற்குப் பிறகே அந்த ஆந்தை அறையைவிட்டுப் பறந்து சென்றது.
அந்த ஆந்தைக்கும் தன் தேவதைக் கதைக்கும் எதோ, நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆலன் கார்னர் நம்ப ஆரம்பித்தார். ஆனால் ஆந்தை படப்பிடிப்பின்போது வந்தது தற்செயலான நிகழ்ச்சி என்றுதான் மற்றவர்கள் கூறினார்கள். ஆலன் கார்னர், அதை ஒப்புக்கொள்ளவில்லை.
அவருக்கு ஒரு யோசனை உதித்தது. அந்த வீட்டின் சொந்தக்காரன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடித்து அவனை விசாரித்தால், இந்த வீட்டைப் பற்றி ஏதாவது புதிய விஷயங்கள் கிடைக்கும் என்று நினைத்து அவனைப் பற்றி பல இடங்களில் விசாரித்தார்.
வீட்டின் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பலர் பலவிதமாக அவனைப் பற்றிக் கூறினார்கள். சிலர் அவனைப் பைத்தியம் என்றனர். இன்னும் சிலர், அவன் பகல் முழுவதும் எங்காவது அடர்ந்த காட்டில் மரங்களுக்கு அடியில் தூங்குவான் என்றும், இரவு நேரங்களில் காடுகளில் சுற்றித் திரிவான் என்றனர். அந்த மலையடிவாரத்தில் வேட்டையாடும் சிலர், தாடி மீசையோடு இரவு நேரங்களில் அவன், ஆவி மாதிரி சுற்றித் திரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.
ஆலன் கார்னர் அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். வேட்டையாடும் ஒரு கோஷ்டியுடன் இரவில் காட்டுக்குப் போனார். நடுநிசி வரை தேடித் பார்த்தும் யாரும் அந்தக் காட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.
அப்போது தூரத்தில் ஆந்தையின் சத்தம். பலமுறை விட்டு விட்டுக் கத்தியது, ஆலன் கார்னர் தனது படப்பிடிப்பின்போது வந்து கத்திய ஆந்தையின் சத்தம் போலவே உணர்ந்தார். ஆனால், ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகளின் சத்தங்களில் அப்படியொன்றும் அதிக வித்தியாசம் இருக்காது என்று வேட்டையாட வந்தவர்கள் கூறினர், மேற்கொண்டு அந்த பைத்தியமாகத் திரியும் வீட்டுக்காரனைத் தேட இன்னும் சற்று தூரம் போக முயன்றனர்.
ஆனால் விடாமல் சிக்னல் மாதிரி அந்த ஆந்தை கத்தியது. அந்தச் சத்தம், ஆலன் கார்னரை அழைத்த மாதிரியே இருந்தது. அந்த ஆந்தை சத்தமிடும் இடத்துக்குப்போகலாம் என்றார் ஆலன் கார்னர்.
பாதை மிகவும் மோசமாக புதர்கள் மண்டிக் கிடந்தது. உடன் வந்தவர்கள் அங்கே போகத் தயங்கினார்கள். ஆலன் கார்னர் ஒரு டார்ச்சை மட்டும் வாங்கிக் கொண்டு அந்த இடத்துக்குப் போனார்.
ஆந்தை கத்திய மரத்தடியில் ஒரு மிருகம் அசைவது இருட்டில் அரைகுறையாகத் தெரிந்தது. டார்ச் அடித்துப் பார்த்தார். அது மிருகம் இல்லை. ஆனால் கூன் விழுந்து வயது முதிர்ந்த ஓர் உருவம் தாடி மீசை நீளமாக வளர்ந்த நிலையில் நின்றிருந்தது. அந்த ஆள்தான் வீட்டுக்காரனாக இருக்கலாம் என்று நெருங்கி அவனருகில் போனார். அந்த உருவம் காட்டில் பறித்த கனிகளைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஆந்தையையே பார்த்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் மரத்தின் மேலிருந்து அந்த ஆந்தை சிறகடித்துப் பறந்து கிழே வந்தது. ஆலன் கார்னர் டார்ச் வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்தார். படப்பிடிப்பில் வந்த ஆந்தை தான் அது என்று அதன் உருவ அமைப்பிலிருந்து தெரிந்து கொண்டார்.
அந்த ஆந்தை பறந்து வந்து ஆலன் தலைக்குமேல் ஒரு வட்டமடித்து விட்டு பிறகு, தாடி வைத்த அந்த வயதான மனிதனின் தோளில் போய் அமர்ந்தது. அந்த ஆள், தன் கையிலிருந்த பழங்களை அதனிடம் நீட்டினான். அந்த ஆந்தையும் அந்தப் பழங்களைக் கொத்திக் கொண்டு மீண்டும் மரத்தை நோக்கிப் பறந்து சென்றது. எல்லாவற்றையும் பார்த்த ஆலன் கார்னர் வியப்பில் ஆழ்ந்தார். அந்த மனிதனின் அருகில் போனார்.
'உங்கள் பெயர் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?' என்று கேட்டார்.
அந்த வயதானவர் அப்போதுதான் ஆலன் கார்னரைத் திரும்பிப் பார்த்தார். ஆனால், பதில் பேசவில்லை.
'எதற்க்காக நீங்கள் இந்தக் காட்டில் இரவு நேரத்தில் இப்படிச் சுற்றிக்கொன்டிருக்கிறிர்கள்?'
அதற்கும் அந்த வயதானவர் பதில் சொல்லவில்லை.
'பழங்களை எதற்க்காக ஆந்தைக்குக் கொடுக்...'
ஆலன் கார்னர் பேசி முடிக்கும் முன் அந்த வயதான ஆள் 'உஷ்' என்று வாயில் விரலை வைத்து சைகை காட்டினார்.
'ஆந்தை இல்லை... அது தேவதை!' - என்று மரத்தின் உச்சியை, ஆந்தை பறந்துபோன திசையைச் சுட்டிக் காட்டினார். ஆலன் கார்னர் உணர்ச்சி மேலீட்டால் அப்படியே ஸ்தம்பித்துப் போனார்.
ஆனால் எதையும் லட்சியம் செய்யாமல் அந்த வயதானவர் அந்த அடர்ந்த காட்டின் இருட்டில் மெதுவாக நடந்து போனார். மரத்தின் உச்சியில் ஆந்தையாக இருந்த அந்த உருமாறிய தேவதை அவர் போன திசையில் பறந்து போனது.
இந்தக் காட்சிகளைப் பார்த்த ஆலன் கார்னருக்கு பல விஷயங்கள் புரிந்தன. தேவதை என்று, தான் எழுதிய கதை, கற்பனை அல்ல. அது ஆந்தையாக உருமாறிய தேவதையே, தன்னை எழுத தூண்டிய உண்மைக் கதைதான். அத தேவதையின் காதலன்தான் அவள் ஆந்தையாக உருமாறிய பிறகு இப்படிக் காட்டில் அலைந்து திரிகின்றான். நம்ப முடியாத அதிசயத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியுடன் அந்த கானகத்தை விட்டு வெளியேறினார்.

Monday, September 14, 2015

தஞ்சாவூரிலுள்ள தஞ்சை பெருங்கோயில் பிருகதீசுவரம்

சோழப்பேரரசின் தலைநகரம் தஞ்சாவூரிலுள்ள தஞ்சை பெருங்கோயில்
காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில் இராஜராஜனை மிகவும் கவர்ந்ததால் அதே போல் ஒரு கோவிலை கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினான்.
இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.










இக்கோயில் கட்டப்பட்ட போதிலிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடையின்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது.
பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது.

Officer Trainee(Grade-III Class-III)National savings bank(NSB)


New Species Of Human Discovered In South Africa changes what we know about human evolution

Behavior like the intentional repetitive placement of dead bodies (burial) is something Berger described on the press call as something we didn't think any hominin species "even contemplated before 300,000 years ago."

Brace yourself: this discovery is huge. So huge that its profound implications will shake up our very own family tree. The University of Witwatersrand, in collaboration with National Geographic, is proud to announce a remarkable story of human heritage. The discovery of an early human ancestor that sits beautifully within our own genus of Homo. I ecstatically present to you, Homo naledi.
This incredible fossil find comes from the richest single hominin assemblage so far discovered in Africa. A gift that keeps on giving, the species not only enlightens us on the origins and diversity of man, but also seems to display a behavior long believed to be unique to humans, even perhaps a defining feature of our species: deliberately disposing of its dead in an isolated chamber. The discovery has been published in two papers in the open access journal eLife.



A textbook-worthy accident, H. naledi was first stumbled upon two years ago by amateur cavers during an exploration of a cave system known as Rising Star, located within South Africa’s famous Cradle of Humankind World Heritage Site. From this, the Rising Star Expedition was born, starting in November 2013 with a 21 day exploration involving a team of 60 scientists and volunteer cavers. Expecting to recover a single skeleton, just three days in they realized they had much more than that, “something different and extraordinary,” research leader Lee Berger said at a press event IFLScience attended.
That something different turned out to be not several, but 15 individuals from a single hominin species, represented by more than 1,500 fossil elements found within a single chamber in total darkness some 90 meters (295 feet) from the entrance. Named in tribute to the chamber, naledi means “star” in the South African language Sesotho. And sure, 1,500 sounds like a lot, is a lot, but the team believes that there are thousands and thousands of remains still untouched. “The floor is practically made of bones of these individuals,” Berger added.
In fact, so many have been recovered that almost every skeletal element of the body is represented multiple times throughout different age groups, from infants to teens, to young adults and the elderly. And the species seems to be a wonderful pick and mix of both primitive and human-like features. An exceptionally tall hominid, the bipedal H. naledi stood at around 150 centimeters (5 feet) and was distinctively slender, with powerful, well-muscled joints. Its skinny human proportions and long legs likely relate to the fact that it didn’t have to support much bodyweight, weighing in at around 45 kilograms (100 pounds).
Tall this species may have been, but members had an astonishingly tiny head. So tiny that their brains were as small as that of the smallest australopith – a group of extinct early hominins – with the females’ brains only being slightly larger than a chimpanzee’s at around 450-550 cubic centimeters (27-34 cubic inches). There was only a very small discrepancy between males and females, not just in terms of brain size but throughout the entire body. In fact, all of the individuals were remarkably similar, more so than if you were looking at sets of identical human twins, Berger said. Consequently, it is believed the individuals were likely closely related, perhaps a multi-generational family.






What is also remarkable is how the species seems to transition in its featuresfrom primitive to modern, as you move down the limbs. The top of the limbs – the pelvis and shoulders – are primitive, like its cone-shaped core, but they culminate in astonishingly human-like extremities. The hand is almost entirely human-like, except for the highly curved fingers: perfect if they’re trying to grip things. But their shoulders were able to rotate more than ours, suggesting they engaged in climbing. And the feet were virtually indistinguishable from ours, making contact with the ground in a similar way.
So how did this collection of individuals arrive in this dark, isolated and extremely difficult to access cave? And difficult is not an understatement: one of the narrowest cracks was a mere 17.5 centimeters wide, and as far as the group can tell, there were no other entrances to the tiny chamber. So unwelcoming that no other species were found here, aside from a few rodent and bird bones.
After ruling all of the probable scenarios, such as mass death, transport by water and predation, the team was left with the improbable: this species was deliberately, repeatedly disposing of its dead in a protected area, away from the external environment. Before now, we thought that was a characteristic specific to modern humans.
“What does that mean for us?” ponders Berger. “Did we inherit it, has it always been there in our lineage, or did they invent it?” And for a species with such a tiny brain, the latter possibility is mind-boggling.
Of course, the questions do not end there. The chamber was in total darkness. How did the individuals navigate their way round these slender, jagged tunnels with death-drops around multiple corners?
“Is it a coincidence that the earliest evidence of controlled fire is only 800 meters away?” asked Berger, referring to the nearby National Heritage Site of Swartkrans. “It’s speculation… But animals don’t go into the dark.”
Aside from the evidence of ritualistic burial, what else do we know about their behavior? “Nothing,” Berger chuckled to IFLScience. “We can infer from their bodies that they are long-distance walkers, again that’s something almost unique to humans. And it’s pretty clear from those fingers that they’re climbing, but we don’t know what they’re climbing. That’s not a tree climbing hand.”
As it stands, we don’t know how old the fossils are, nor do we know for how long the species existed. But we know it’s a minimum of 2 million years old, perhaps even close to 3 million, and at the very least a candidate for the base of our genus, says Berger. 
And if you want to see and encounter this historic find for yourself, the fossils will be on display for an entire month in the Cradle of Humankind's official visitor center, Maropeng. 

Cancer patient receives 3D-printed ribcage in world first surgery

From organs to prosthetic body parts, 3D-printing has become a powerful tool for medicine.
And now, for the first time ever, doctors have implanted a 3D-printed titanium sternum and ribs inside a 54-year-old cancer patient in Spain.
The man suffered from chest wall sarcoma, which is a cancerous tumor that grows around the chest wall. Part of the patient’s skeleton had to be removed to get the tumor completely out, so the doctors at Salamanca University Hospital turned to 3D printing to replace the missing part of the skeleton.
The medical team worked with Australia’s Commonwealth Scientific and Industrial Research Organization (CSIRO) and Anatomics, an Australian medical device company to create the sternum implant.
High-resolution CT scans of the patient’s chest enabled Anatomics to design a replica of the patient’s missing sternum and ribcage. Anatomics turned to CSIRO, which has a specialized printing laboratory, to print the device.
According to CSIRO's blog, surgeons typically use a flat and plate implants for the chest, but these can loosen over time and cause complications. The 3D-printed ribcage was proposed as a better option by the surgeons. 
It's been almost two weeks since the procedure and the patient is recovering well, according to the blog post. 
How the implant fit into the patient's chest.
While 3D printing has carved out a niche in the medical world, it's beginning to find traction in other industries as well. 

தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய Google Input Tool

நம்மில் பலருக்கு தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் இதற்காக தமிழ் டைபிங் கற்றுக்கொள்ள தேவையில்லை.
இணையத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது.
Google Input Tool download link http://www.google.co.in/inputtools/windows/
Google Input Tool ய் பயன்படுத்தும் விதம் பற்றிய பயனுள்ள காணொளி தமிழில்.
காணோளியை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக


1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.
அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.
அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.
ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.
அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.
விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.
லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி.
நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.
எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.
நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்?
பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்.
கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.
‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
11) விளக்கை தானாக மலையேற விடக்கூடாது,
ஊதியும் அமர்த்தக்கூடாது.
புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது.
அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்?
அப்படி கேளுங்க….
தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.
12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது.
அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
16) எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.
கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.
அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
27) இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்.
வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.
பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.
கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.
அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது.
ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
48) தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும்.
லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

இரசாயனம்...


பருவங்கள் முளைத்து
பழக்கப்பட்டு சிலாகரித்த
காதல் சிநேகமா?
வெறுமைக் கோட்பாடாக
திரிவுபடுகிறது.?
பல்லாயிரம் நிமிஷங்களில்
நிசப்தப்பட்ட
பொழுதுத் தொழுவல்களால்
பிரபஞ்ச வெளியை
உன் ஞாபகங்களால்
தாண்டிப் போனேன்.
யுகங்களின் வளர்ச்சிக்குள்ளே
உன் குரல் மட்டும்
தொலைபேசி ஒலிப்பரப்பாய்
தொடுகை பட
என்னாத்மா
ஆகர்சணமாய் மோகிக்கிறது.
தாயின் பாலில்
ஆரோக்கியப்பட்ட தேகம்
உன் நிலவரத்தின்
ஏக்கங்களால்
நிலையான கவலைகள்
கண்ணீரில் சமூத்திரமாயின
பூக்களின் மீது
மகரந்த தேன் வழிந்த
உன் விழிகள்
இரசாயனப் பார்வைகளை
வீசி படர விடுகின்றதே ..?
துப்பாக்கி ரவைகள்
என்
மார்பைக் கிழித்து
இதயத்தை அழித்தாலும்
உன்
நாமழுத்தம் தான்
மாற்றமாகி விடுமா?
ஏழிசை ராகங்களாய்
உன்
ஒரு வாய்ச் சொல்
வடிகாலாய்
என்
இளமையி இழையோடுகிறது.
நீ
பிரிவைப் பிய்த்துப்
போனதும் மறுபடியும்
உன்
சிரிப்பையும்
நாணத்தையும்
மழை பூமியோடு
சங்கமித்து
நினைவு நாழிகையாகிறது .
உன்
மௌனங்கள்
அமிர்த விஷம்
அதனால் மரணிக்க மாட்டேன்
என்
மரணத்தின் இருப்பிடம்
உன் இதயமல்லவா ?
கவிமொழி

Saturday, September 12, 2015

வாழ்த்தலாம் வாங்க

மாற்றம் தேடி.... இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்....
கடையநல்லூர் காவல் நிலையம்.... அங்கு ஆய்வாளராக பணிபுரிபவர் சாம்சன்....

என்ன செய்தார் இவர்....?
* காவல் நிலைய ஆய்வாளராக வந்த பின் ஆக்கிரமிப்பு கடைகள் சாலைகளில் இருந்த இடையூறுகளை அகற்றினார்.
* பல இடங்களில் புதிதாக மரங்கள் பல நட்டுள்ளார்.
* காவல் நிலையத்தில் பல மாற்றங்களை செய்துள்ளார்.
* இயற்கை மேல் கொண்ட பாசத்தால் மரங்களில் ஆணி அடித்து செய்யப்பட்ட விளம்பரங்களை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றியதோடு விளம்பரம் செய்ய வேண்டுமா அதற்கும் வழி தருகிறேன் என சிட்டுக்குருவிக்கு கூடுகள் செய்து அந்த கூட்டில் விளம்பரம் செய்து மாட்டுங்கள் அதனால் சிட்டுக்குருவிகள் பெருகும் என அறிவுறுத்துகிறார்.
* சிரட்டைகளில் கூண்டுகள் செய்து அதனை மரங்களிலும் கூடு தேடும் இடங்களிலும் பொருத்தி வருவதோடு இதை செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்.
* கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்க இவரே சுவரொட்டி ஒட்ட போர்டுகள் பொருத்தி வருகிறார்.
* அவர் போகும் வழியில் ஏதேனும் பள்ளி தென்பட்டால் வாகனத்தை நிறுத்தி பாலிதீன் கவர்கள் குப்பைகள் அகற்றவேண்டிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதோடு தனது வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் குப்பைதொட்டியில் குப்பைகளை பாலிதீன் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தி சாக்லெட் பரிசு வழங்குகிறார்.
* சென்று கொண்டிருக்கும் போதே வெற்றிடமிருந்தால் அங்கு மரக்கன்றுகள் வாகனத்தை நிறுத்தி. நட்டு செல்கிறார்.
* கழிவு சாக்க்குகள் கழிவு கேஸ் டியூப்கள் போன்ற பொருட்களை கொண்டே குப்பை சேகரிக்க பைகள் செய்ய கற்றுத்தருகிறார்.
* இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாலிதீன் பைகள் ஒலிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் தானே டிசைன் செய்து ஒரு பையை வடிவமைத்து அதனை அதிகமாக தயாரிக்க செய்து விற்பனையும் செய்கிறார் மிகவும் மலிவான விலையில் ஒரு மணி பர்சை போன்ற இந்த பை தேவைக்கு ஒரு பிக்சாப்பர் பையாக மாறுகிறது இந்த பையாக இருந்தால் கண்டிப்பாக கடைக்கு செல்லும் போது பாலிதீன் பையாக தேவைப்படாது அதைப்பார்த்தவுடன் 100 ரூபாய்க்கு ஒரு பை வாங்கினேன் இனி வாழ்வில் எங்கும் எந்த இடத்திலும் பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என முடிவெடுக்க வைத்தது அந்த பை.
* ஆடம்பரமாக விழா கொண்டாட்டம் அனுமதி கேட்பவர்களிடம் கனிவாய் கல்வி உபகரணங்களை தங்கள் பகுதி மாணவர்களுக்கு வழ்ங்கவும் அறிவுறுத்துகிறார் கனிவாக.
* காவல் நிலையத்தில் பசுமை விரும்பி பல ஜாடிகளில் பசுமை செடிகள் காவல் நிலையத்தில் அதிகம் குப்பைத்தொட்டி என வைத்துள்ளார்.
* ஒரு அட்டைப்பெட்டியும் இருந்தது அதில் மாணவர்களுக்கான சீருடையும் இருந்தது எதற்கு என விசாரித்த போது தான் தெரிந்தது அது வறுமையில் உள்ள மாணவர்களுக்கு சீருடை வழ்ங்கிட அவரது சொந்த முயற்சியில் வரவழைத்து. என தெரிந்தது
* மேலும் இவர் இதுவரை 25 முறைக்கு மேல் இரத்த தானம் கொடுத்துள்ளார்.
இவரை பாராட்ட நினைத்தால் ஒரு ஷேர் செய்யவும்.