Search This Blog

Wednesday, November 11, 2015

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?


காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்னதோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார்.


முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார்.
அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.
‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.
அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.
நித்ய ஆனந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|
ப்ராலேய அசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (1)

அனுதினமும் ஆனந்தம் அளிப்பவளே! அபய வரத கரங்கள் உடையவளே! அழகின் ரத்தினக் கடலே!
எம் பாவத் தொகுப்பை நாசம் செய்பவளே! காட்சிதந்து அருளும் மாஹேஸ்வரியே!
மலையரசன் ஹிமவானின் வம்சத்தைத் தூய்மையாக்குபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

நானா ரத்ன விசித்ர பூஷணகரீ ஹேம அம்பர ஆடம்பரீ|
முக்தா ஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ|
காச்மீரா கருவாஸிதா ருசிகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (2)

நாலாவித விசித்திர ரத்ன ஆபரணங்கள் அணிந்தவளே! தங்கப் பட்டாடை அணிந்தவளே!
முத்துமாலை மார்பின் நடுவே ஆடும்படி அலங்கரிக்கப் பட்டவளே!
காஷ்மீர அகில் தூபம் சூழ, நறுமணம் நிரம்பப் பெற்றவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

யோக ஆனந்தகரீ ரிபு க்ஷயகரீ தர்மைக நிஷ்டாகரீ|
சந்த்ர அர்க அனலபா ஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ|
ஸர்வ ஐச்வர்யகரீ தப: பலகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (3)

யோகானந்தத்தை அருள்பவளே! தர்மத்தின் மீதிலேயே சிந்தையைச் செலுத்த வைப்பவளே!
சந்திரன் சூரியன் அக்னிக்கு ஈடான ஒளியோடு திகழ்பவளே! மூவுலகையும் காப்பவளே!
அனைத்து விதமான செல்வங்களையும் தருபவளே! தவப் பலனைத் தரும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

கைலாச அசல கந்தராலயகரீ கௌரீ ஹ்யுமாசங்கரீ|
கௌமாரீ நிகமார்த்த கோசரகரீ ஹ்யோங்கார பீஜ அக்ஷரீ|
மோக்ஷ த்வார கவாடபாட நகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (4)

கயிலாச மலைக் குகையை வீடாகக் கொண்டவளே! பொன்னிறத்தில் ஒளிரும் உமாதேவியே! சங்கரன் துணைவியே!
இளமை பொருந்தியவளே! வேதப் பொருளை அறியச் செய்பவளே! ஓங்காரத்தை பீஜாட்சரமாகக் கொண்டவளே!
மோட்ச வாசலைத் திறந்தருளும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரம்மாண்ட பாண்டோதரீ|
லீலா நாடக ஸூத்ர கேலனகரீ விக்ஞான தீபாங்குரீ|
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (5)

இக-பர சுகம் பெறக் காரணமாக இருப்பவளே! பிரமாண்டத்தை வயிற்றில் தாங்கியவளே!
உலகியல் நாடகத்தை நடத்தும் நாயகியே! அனுபவ ஞான விளக்கின் சுடராய் ஒளிர்பவளே!
மகேச்வரனின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி பாவாகரீ|
காச்மீரா த்ரிபுரேச்வரீ த்ரிநயனீ விச்வேச்வரீ சர்வரீ|
ஸ்வர்க த்வார கவாட பாடனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (6)

எல்லா எழுத்துகளுக்கும் காரணமாய் இருப்பவளே! முத்தொழில்களின் தோற்றத்துக்கும் மூலகாரணப் பொருளே!
மங்கலக் குங்குமம் தரித்தவளே! முப்புரம் எரித்த முக்கண் முதல்வனின் பத்தினியே! உலக நாயகியே! எங்கும் இருப்பவளே!
சுவர்க்க உலகத்தின் வாசல் கதவைத் திறந்து அருளும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

உர்வீ ஸர்வ ஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ|
வேணி நீல ஸமான குந்தலதரீ நித்ய அன்னதானேச்வரீ|
ஸாக்ஷான் மோக்ஷகரீ ஸதா சுபகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (7)

பூமி உருவாக இருப்பவளே! அனைத்து மக்களுக்கும் ஈச்வரியே! வெற்றியைத் தரும் வித்தகியே! கருணைக் கடலே!
அழகுப் பின்னலுடன் கருங்குழல் கொண்டவளே! தினம்தினமும் அன்னதானம் அளிக்கும் அன்னையே!
மோட்சம் அருள்பவளே! மங்கலம் தருபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷாயணி ஸுந்தரீ|
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸௌபாக்ய மாஹேச்வரீ|
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸுபகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (8)

அனைத்து அபூர்வ ரத்தினங்களாலும் ஒளிர்பவளே! தாட்சாயணி தாயே! அழகு மிகுந்த அன்னையே!
ஈசனில் பாதியாய் இடப்புறம் கொண்டு ஈசன் விரும்பும் இனியதைச் செய்பவளே! சௌபாக்கியம் கொண்ட மகேசன் மனைவியே!
பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றித் தருபவளே! என்றும் சுபமானதைச் செய்பவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

சந்த்ர அர்க அனல கோடி கோடி ஸத்ருசீ சந்த்ராம்சு பிம்பாதரீ|
சந்த்ர அர்க அக்னி சமான குண்டலதரீ சந்த்ர அர்க வர்ணேச்வரீ|
மாலா புஸ்தக பாச அங்குசதரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (9)

கோடிக்கணக்கான சந்திர சூரிய அக்னியருக்கு ஒப்பானவளே! பிறைச் சந்திரன் போல் கோவைப்பழ வதனம் கொண்டவளே!
சந்திர சூரிய அக்னியர்போல் ஒளிவீசும் குண்டலங்கள் அணிந்தவளே! சந்திர அக்னியின் ஒளி நிறத்தவளே!
மாலை புத்தகம் பாசம் அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

க்ஷத்ர த்ராணகரீ மஹாபயகரீ மாதா க்ருபா ஸாகரீ|
ஸர்வ ஆனந்தகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ|
தக்ஷா க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (10)

சத்திரியரைப் போல் சாமானியரைக் காப்பவளே! பயத்தைப் போக்கி அருள்பவளே! கருணைக் கடலான தாயே!
அனைவருக்கும் ஆனந்தத்தையே அருள்பவளே! சதாசிவன் துணை லோகநாயகியே! முப்போதும் மங்கலமே தருபவளே!
வாட்டும் பிணியை ஓட்டுபவளே! நோயற்ற வாழ்வு அளிப்பவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||

அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே! சங்கரனின் பிராண நாயகியே!
மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இட்டு அருள்வாய்!

மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||

எனக்குத் தாய் - பார்வதீ தேவீ! தந்தை - மகேஸ்வரன்!
சொந்தங்கள் - சிவபக்தர்கள்! என் தேசம் - மூவுலகமுமே!
தமிழாக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

Diabetes drug reduces risk of heart failure and may prevent it

In the trial, patients with type 2 diabetes and risk factors for heart disease were randomized to receive once-daily doses of either the glucose-lowering drug empagliflozin (10 mg or 25 mg doses), or a placebo. The drug or placebo was given in addition to standard care.
At the end of the trial period, investigators found that patients treated with the drug experienced reductions in blood sugar and blood pressure, as well as weight loss, compared to those on placebo.

Secret Underground City of Ellora Caves - Ancient Aliens In India?



We are at Ellora caves in India, and I am going to show you some solid evidence about a secret underground area that is hidden under these caves. As you can see, there is a rectangular tunnel about 1 foot wide that is vertically going down, and is not open for public access. I asked the security guards if I could take a closer look and they told me that visitors are not allowed but they also told me that, this tunnel is over 40 feet deep and then it takes a right angle turn to proceed underground. Nobody knows what's inside after that because the tunnel becomes too narrow for human beings to get through it. 
Here is another one that is hiding in plain sight. You can see a channel on the ground and there is a small rectangular opening at the end of this passage that would drain the water to the other side of the temple. But, I went to the other side of this rock but guess what? It is a solid stone!! So, there is no other way, except that this rectangular opening leads to the underground. Notice that the rectangular opening is only large enough for a 10 year old to go in? Since adult human beings can't access it, was it designed for human beings at all? 

This is another hidden passage in Ellora caves that I tried to get through, but after 10 feet, it becomes so narrow that I can't go any further. Where do these mysterious tunnels lead? Who could have used such narrow passages? The other important question is: how can you carve such narrow passages if human beings cannot even get through them? Was it carved by humans at all? Were these carved for extraterrestrials that are smaller than human beings?

Notice how this entrance is clearly going underground, in this cave temple. These are underground areas hiding in plain sight. The security guards told me that there are several underground tunnels in Ellora caves which gradually become too narrow for human beings to access them, and all of them are locked. From these old doors, we can assume that these tunnels have been closed from public access at least 30 to 40 years ago. 

These underground tunnels are not found in the same area, but are scattered over many different caves in Ellora, which stretches across a few miles. Is it possible that there could be a vast underground city like Derinkuyu in Turkey? Derinkuyu is an enormous underground city with advanced technical features that could accommodate more than 20,000 people, which was hidden for centuries only to be discovered in 1965. 

If it is true that there is a vast underground city in Ellora, shouldn't there be ventilation shafts that would allow air from the ground to reach below. In Derinkuyu, there are thousands of holes drilled from the ground that act as ventilation shafts to the underground city. Look at this long ventilation shaft in Ellora caves that is drilled secretly in a dark chamber. It is about 4 inches wide, but it is so deep that we can't even see the other end. Could this be a ventilation shaft that reaches the underground city?

How about this ventilation shaft, which is also going underground? You can also see hundreds of holes like this drilled on the rock floor. Some of them are unfinished, and only few inches deep, but notice how the other holes have been closed with concrete recently. I asked why some of these holes have been closed and my tour guide told me that someone dropped their car keys into one of them, but these holes are so deep that they couldn't retrieve it. So, they just covered these holes by putting concrete over them.

What else could be the purpose of these deep holes on the floor, if they are not ventilation shafts? Why would hundreds of holes be drilled on these rock floors with painstaking efforts without any reason? Now, this is one of the abandoned, bat infested places and let's take a look at what's inside. This seems like a very old sanctum holding a lingam, which is a Hindu god. Centuries ago, plenty of water would be poured on this lingam everyday as part of religious worship, and it would drain through this channel. Notice that this water drain has been closed recently with some rocks. Where would the water go? Let's see...It would go vertically down through this tunnel. 

Unless there is an area underground, this would be pointless because the water would just overflow all over the place! All over Ellora caves, there are hundreds of idols which would require thousands of gallons of water poured on them every day. Was this a technique to get clean water underground that could be used for different purposes? 

தீபவம்ஸ, மஹாவம்ஸவும், முன்னைய ஆராய்வாளர்களும்



தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற பாளி நூல்களில் கூறப்பட்டுள்ளவைகளை, 1500ஆம் ஆண்டுகளிலிருந்து, ஐரோப்பிய, இந்திய, இலங்கை, மற்றும் ஆராய்வாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர், இன்றும் ஆராய்கின்றனர், நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும், ஆய்வு நூல்களும் இவை பற்றி எழுதப்பட்டுள்ளன. இவர்களுள், போர்த்துக்கேய, ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களுக்குப் பிற்பட்ட ஐரோப்பிய ஆராய்வாளர்களான George Turnour, Hermann Oldenberg, R.O. Franke, Rhys David, V. A. Smith, H. C. Norman, J. F. Fleet, Kern, Wilhelm Geiger என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அன்று ஜேர்மனிய ஆராய்வாளர்களே, இந்நூல்களை ஆராய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
ஐரோப்பிய ஆராய்வாளர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களில் கூறப்பட்டுள்ள கதைகளுக்கும், கிரேக்க, இலத்தீன மொழிகளின் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையை ஆராய்ந்து, ஒப்பிட்டு உள்ளனர், சில கேள்விகளையும் எழுப்பியிருந்துள்ளனர். உதாரணமாக: விஜயனதும், 700 தோழர்களதும் இலங்கை அடைவையும், அதைத்தொடர்ந்து குவேனியால் செய்யப்பட்டவைகளையும், ஐரோப்பிய ஆராய்வாளர்கள், கிரேக்க Homer இன் இலக்கியங்களில் Circe தீவில் Ulysses இறங்கிய துடனும், அதன்பின்னர் நடைபெற்றவைகளுடனும் ஒப்பிட்டுள்ளனர்.
தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை அன்று ஆராய்ந்த ஐரோப்பியர்கள், தமக்குத் தெரிந்திருந்த கிரேக்க, இலத்தீன இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும், இலங்கையின் பாளி மொழி நூல்களில் கூறப்பட்டிருந்தவைகளுக்குமிடையில் காணப்பட்ட மிக நெருங்கிய ஒற்றுமைகளை அடையாளங் கண்டனர். அந்த ஒற்றுமை எப்படி உருவாகியிருக்கமுடியும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.
ஆனால், அதற்கான விடைகளை, அவர்களால் ஆதாரபூர்வமாகக் காணமுடியாதே போனது. அவர்கள் குறிப்பிட்டமைபோல், இந்த ஒற்றுமை தற்செயலாக நடைபெற்றிருக்க முடியாது என்றே எவரையும் அவை கருதவைக்கும். ஆனால், இது எப்படி நடைபெற்றிருக்க முடியும் என்பதற்கான விடையை அறிவதைப் பொறுத்தமட்டில், அங்கு மூன்றே நடைபெற்றிருக்கமுடியும். அவையாவன:
1) இலங்கையில் பாளி மொழியில் இந்த நூல்களை எழுதியவர், அன்று, கிரேக்க நாட்டிற்கு, அல்லது “கொன்ஸ்தாந்திநோப்பிள்” (Constantinople) இற்குச் சென்றிருந்த நிலையில், அவர் கிரேக்க பண்டைய இலக்கியங்களையும், நூல்களையும் இயற்றியிருக்க முடியும், அல்லது, அவரின் சிந்தனைகளைக் கேட்டு, கிரேக்கர் ஒருவர் இலக்கியங்களை இயற்றியிருக்கமுடியும்;
2) இலங்கையில் பாளி மொழியில் இந்த நூல்களை இயற்றியிருந்தவர், கிரேக்க நாட்டிற்கு, அல்லது கொன்ஸ்தாந்திநோப்பிள் இற்குச் சென்றிருந்த நிலையில், ஹோமரின் இலக்கியங்களையும், ஏனைய இலக்கியங்களையும் அறிய வந்து, நாடு திரும்பி இயற்றியிருந்த இந்த நூல்களில், கிரேக்க இலக்கியங்களிலிருந்து அறிந்தவைகளைப் புகுத்தியிருக்கமுடியும்;
3) கிரேக்க தேசத்திலிருந்து, அல்லது “கொன்ஸ்தாந்திநோப்பிள்” இல் இருந்து இலங்கை வந்திருந்த ஒருவரூடாக அறிந்தவைகளை, இலங்கைப் புலவன் ஒருவன் இந்த நூல்களில் புகுத்தியிருக்கமுடியும்.
இவைகள், ஹோமர் (Homer) பற்றியும், ஹோமரின் காலம் பற்றியும், தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களின் காலங்கள் பற்றியும் ஆராய நிர்ப்பந்திக்கின்றன.
மேலும், தமிழ், இந்திய இலக்கியங்களிலும், இப்படியான ஒற்றுமைகள் உள்ளனவா என்பதை ஆராய, இவை நிர்ப்பந்திக்கின்றன.
எதுவிதத்திலும், மேலே குறிப்பிட்ட மூன்றினுள், முதலிரண்டிலொன்று நடைபெற்றிருந்தால், பூமியின் பல்வேறு மொழிகளைத் தெரிந்திருந்தவொரு பேரறிஞன் ஒருவன், அன்று இலங்கையில் இருந்துள்ளான் என்பதை அது வலியுறுத்தும்.
இந்தநிலையில், இந்த அறிஞன் பூமியின் பல்வேறு மொழிகளை ஒப்பிட்டு ஆராயவும் முற்பட்டேயிருந்திருப்பான். இந்த நிலையில், இலங்கையின் புலவன் எவனாவது, பூமியின் பல் வேறு மொழிகளை அறிந்திருந்தானா என்பதை இலங்கையின் இலக்கியங்களுடாகவும், இலக்கண நூல்களுடாகவும், கல்வெட்டுக்கள், ஏனையவைகளுடாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது; அவன் யார், அவனது காலம் என்ன என்பவைகள் ஆராய்ந்தறியப்பட வேண்டியுள்ளன.
மறுபுறத்தில், மேலே குறிப்பிடப்பட்டவைகளுள் முதல் இரண்டிலொன்று நடைபெற்று, ஆராய்வாளர்கள் கூறுவது போல், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகள் கி. பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டிருந்தால், அக்காலப் பகுதிகளுக்கு முன்னரே, கிரேக்கர்கள் இலங்கை மொழிகளைப் பற்றியும், தமிழ், சமஸ்கிருத, பாளி மொழிகளைப் பற்றியும் அறிந்திருந்திருப்பர்.
இது, கிரேக்கர்கள் தமது இலக்கியங்கள், மற்றும் மொழியாராய்வு, இலக்கண நூல்களில், கி;.பி.4ஆம் நூற்றாண்டு வரையில,தமிழ், சிங்களம், பாளி, சமஸ்கிருதம் என்ற பிற மொழிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கிறது.
இந்தநிலையில், கிரேக்க, இலத்தீன் மொழியாராய்வு நூல்களையும், பிறமொழிகளின் இலக்கண நூல்களையும் ஆராயவேண்டியுள்ளது; அவற்றில் இலங்கை, இந்திய மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பது அறியப்படவேண்டும்.
கிரேக்க, இலத்தீன மொழியாராய்வு நூல்களிலும், இலக்கண நூல்களிலும் இலங்கை, இந்திய மொழிகள் குறிப்பிடப்படாது, இலங்கை, இந்திய மொழியாராய்வு, இலக்கண நூல்கள், கல்வெட்டுக்கள், ஏனையவைகளில் ஐரோப்பிய மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தால், மேற்குறிப்பிட்டவைகளுள் முதலிரண்டில் ஒன்று நடைபெற்றிருக்கவே சந்தர்ப்பங்கள் உண்டு.
துரதிஷ்டவசமாக, தமிழ், சிங்கள, பாளி, சமஸ்கிருத இலக்கண, மொழியாராய்வு நூல்களில், பிற மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதா; எக்காலத்தில், யாரால் அவை குறிப்பிடப்பட்டுள்ளன என்பவைபற்றி, இலங்கை, இந்திய ஆராய்வாளர்கள் ஆராய்ந்து குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது, இலங்கையின் இந்தப் பாளி மொழி நூல்களைப் பற்றிச் சரியாக அறிவதாயின், இலங்கை, இந்திய, ஐரோப்பிய பண்டைய இலக்கண, மொழியாராய்வு நூல்களையும் ஆராய நிர்ப்பந்திக்கிறது.
இந்திய ஆராய்வாளர்களுள், A. L. Basham, Bimala Churn Law, K. A. நீலகண்டசாஸ்த்ரி, மற்றும் ஒருசிலரே, இலங்கையின் இந்த நூல்களை ஆராய்வதில் ஈடுபட்டு இருந்தனர்.
சிங்களவர்களுள், James de Alwis, G. P. Malala sēkara, E. W. Adikāram, S. Paranavitāna, G. C. Mendis, Walpola Rāhula> K. M. D. Silva,மற்றும் சிலர், இந்தப் பாளி மொழி நூல்களை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்னைய காலங்களிலிருந்து ஆராய்ந்து, ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வந்துள்ளனர்.
ஜேர்மனியின் Bavāria மாநிலத்தின் தலைநகரான Munichஇல், இலங்கையின் இந்தப் பாளி மொழி நூல்களுள் மஹாவம்ஸ என்பதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான Dr. Wilhelm Geigeஇன் வழிகாட்டலில் தனது உயர் பட்டப்படிப்பினை 1927 – 1930வரை மேற்கொண்டவரான G. C. Mendis என்பவர், “An Historical Criticism of the Mahāvamsa” என்ற பெரும் ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார்.
இவர்கள், இந்த நூல்கள் யாரால், எப்பொழுது இயற்றப்பட்டவை; இவைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை என்பவைகளையெல்லாம் ஆராய்ந்திருந்தனர். G. C. Mendis, தனது “The Pāli Chronicles of Ceylon “ (1946) என்ற ஆய்வுக் கட்டுரையிலும் “Problems of Ceylon History” (1967) என்ற ஆய்வு நூலிலும், இந்தப் பாளி மொழி நூல்களைப்பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர் இந்தப் பாளி மொழி நூலில் கூறப்பட்டுள்ளவைக்கும், சமஸ்கிருத மொழி இலக்கியங்கள் சிலவற்றில் கூறப்பட்டிருப்பவை களுக்கும் இடையிலுள்ள சில ஒற்றுமைகளை எடுத்துக்காட்டியுள்ளார்.
இலங்கை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளவைக்கும், வட இந்தியச் சமஸ்கிருத மொழி இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும் இடையில் காணப்பட்ட சில ஒற்றுமைகளும், கிரேக்க மொழி இலக்கியங்களுக்கும், இலங்கையின் பாளி மொழி இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்குமிடையில் காணப்பட்ட ஒற்றுமையும், 1930ஆம் ஆண்டுகளில், சிங்களவருக்கும் ஆரியன் இனத்தவர்களுக்குமிடையில் ஒருவித இணைப்பை வலியுறுத்திக்கூற, சிங்கள பௌத்தர்களுக்கு மேலும் உதவியாக அமைந்தன.
இவர்களது ஆய்வுகளும், முடிவுகளும், பின்னைய ஆராய்வாளர்களால் எழுதப்பட்டுவரும் நூல்களிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுவரும் போதிலும், இவர்களது ஆய்வுகளும், முடிவுக்கு வரும் முறையும், விஞ்ஞானத் தன்மையற்றதாகவே காணப்படு;கின்றன. இவை தொடர்பாக அவர்கள் கூறுபவைகள் கற்பனைகளாகவே உள்ளன.
தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களில் கூறப்பட்டுள்ள பல் வேறு முக்கிய விடயங்களுக்கும், கிரேக்க, சமஸ்கிருத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சிலவற்றிற்குமிடையில்தான் ஒற்றுமைகள் காணப்படுகின்றன என்பதற்கில்லை.
இலங்கையின் பாளி மொழி நூல்களில் கூறப்பட்டுள்ளவைகளுக்கும், கிரேக்க, சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களில் கூறப்பட் டுள்ளவைகளை விட, தமிழ் புலவர்களுக்கும், அவர்களால் இயற்றப்பட்டதாகக் கூறப்பட்டுவரும் தமிழ் இலக்கியங்கள், விஞ்ஞான நூல்களுக்குமிடையில்தான் மிகப் பெரிய அளவிலும், மிக நெருங்கியதுமான தொடர்புகள் காணப்படுகின்றன.
துரதிஷ்டவசமாக, அன்றைய, இன்றைய சிங்களவர்களும், ஐரோப்பியர்களும், ஏனையோர்களும், இந்தத் தொடர்புகளை அறியுமளவிற்குத் தமது தமிழ் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளமுடியாதநிலை இருந்துள்ள போதும், தமிழக, இலங்கைத் தமிழ் இலக்கிய, வரலாற்;றுப் பேராசிரியர்களும், ஆராய்வாளர்களும்கூட, இன்றுவரை, இவற்றை ஆராய்ந்தறியாத நிலைதான் தொடர்கிறது.
இதற்கு முக்கிய காரணம், மஹாவம்ஸ, தீபவம்ஸ என்ற நூல்கள் பாளி மொழியில் எழுதப்பட்டிருந்த நிலையிலும், சிங்களம், சிங்களவர் என்பவைகளை முன்னைய ஆராய்வாளர்கள் “ஆரியன்,” சமஸ்கிருதம் என்பவைகளுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் தொடர்புபடுத்தி வந்த நிலையிலும், தமிழ் என்றால், திராவிடன், சைவம், “இந்து” என்பவைகளுடனுமே தொடர்புகள் இருக்கமுடியும் என்ற முடிவு முன்னைய ஆராய் வாளர்கள் மத்தியில் மிகவும் உறுதியாக இருந்து வந்த நிலையிலும், தமிழ் இலக்கியங்களுக்கும், இலங்கையின் பௌத்த வரலாற்றினைக் கூறும் நூல்களாகக் கருதப்பட்ட தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களுக்குமிடையில் எந்வித தொடர்புகளும் இருக்கமுடியாது என்ற ஆணித்தரமான முடிவுக்கு, அவர்கள், ஒப்பிடுகையைச் செய்யாதே, வந்திருந்தமையாகும்.
இன்று கூட, மிகச்சிறு பகுதித் தமிழ் ஆராய்வாளர்களும், மக்களுமே, தமிழருக்கும், பௌத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது எனக் கருதுகின்றனர்.
ஆனால், இதற்கான விஞ்ஞானரீதியிலான போதிய ஆதாரங்களை இலக்கிய, தொல்பொருள் ஆய்வுகளுடாக அறியமுடியாத நிலையில்தான் ஆராய்வாளர்கள் இருந்து வருகின்றனர்.
இவை, எமது முன்னைய ஆராய்வாளர்களது ஆராயும் தன்மை, வல்லமை பற்றிச் சிந்திக்கவைக்கிறது; எமது அரசியல்வாதிகளின் அறிவு டைமை பற்றிச் சிந்திக்கவைக்கிறது.
இப்படிக் கூறும்போது, ஒருபுறத்தில், சிலர் மிகவும் அவசர அவசரமாக, 1963ஆம் ஆண்டில், S. J. குணசேகரம் என்பவர் “The Vijayan Legend and the Āryan Myth – A Commentary on Dr. G. C. Mendis’ Mahābhārata Legends in th Mahāvamsa “ என்ற ஆய்வு நூலையும்; “The Sinhalese of Ceylon and the Āryan Theory – Letters of a Tamil Father to his son” என்ற ஆய்வு நூலை, Samuel Livinstone என்பவரும் எழுதியிருந்தனர் எனவும்; அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர் சி. க. சிற்றம்பலம், ஏனையோர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை ஆராய்ந்து, அவைகள் கட்டுக் கதைகளைக் கூறுகின்றன என நிராகரித்துள்ளனர் என்றும் கூற முற்படமுடியும்.
ஆனால், இவர்களது ஆய்வுகள் எதுவும், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளை, விஞ்ஞான ரீதியாக ஆராயவே யில்லை; அவர்களது நிராகரிப்புகளுக்கான நியாயப்படுத்தல் கள், விஞ்ஞானத் தன்மையான ஆதாரங்களைக் கொண்டதாகவும் இல்லை. மேலும், முன்னையோர்களது ஆய்வுகள், விஜய, சிங்களவர் என்பவற்றை “ஆரியன்” அல்ல என நிறுவும் நோக்கத்தினைக் கொண்டே இருந்துள்ளனவன்றி, தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களை, இலக்கிய ஆய்வு என்பதற்கு உட்படுத்தவுமில்லை; தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளில் கூறப்பட்டிருப்பவைகள் வரலாற்று உண்மைகளா, இல்லையா என்பதை இலக்கியங்களுடாக உறுதிப்படுத்தவுமில்லை!
மறுபுறத்தில், மற்றொருசாரார், தமிழுக்கும், பௌத்தத்திற் கும் இடையிலிருந்து வந்த தொடர்புகளை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 1940களிலேயே ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதியிருந்தார் என்றும்; பல பேராசிரியர்களும், ஆராய்வாளர்களும் தமிழ் நாட்டின் பௌத்தம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள் “Buddhism in Tamil Nadu” என்ற பெயரின்கீழ் 1998ஆம் ஆண்டில் Institute of Asian Studies சென்னையினால் வெளியிடப்பட்டிருந்தது எனவும்; வேறு பல ஆய்வு நூல்கள் பல ஆராய்வாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறமுடியும்.
ஆனால், துரதிஷ்டவசமாக, தமிழ் - பௌத்தம் - தமிழ் நாடு என்றவுடன் சகலரும் குறிப்பிடும் மணிமேகலை காப்பியத்தினைக்கூட, இந்த ஆராய்வாளர்களும், பேராசிரியர்களும் விஞ்ஞானரீதியாக ஆராயவில்லை என்பதுதான் கசப்பான, மறுக்கப்படமுடியாத உண்மையாகும்!
இப்படி, இலக்கியங்களைப் பாடசாலை, பல்கலைக் கழகக் கல்விகளில் கற்றிராதவர்களும்; வேறு துறைகளைச் சார்ந்தவர்களும்; இலக்கிய, வரலாற்று ஆராய்வுகளை எப்படிச் செய்வது என்பதைப் பல்கலைக்கழக, உயர் படிப்புக்களில் கற்காதவர்களுமான நாங்கள் கூறுவதை, பெரும்பான்மையான வாசகர்கள் ஏற்பதற்குக் கடினமாகவே இருக்கும். இது, ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என ஏற்கப்பட்டு வந்தவர்கள் பிரச்சனையிலிருந்து நழுவிக்கொள்ளப் பெரும் உதவியாகவுமிருக்கும்.
இப்படியான சூழ்நிலைகளில், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என ஏற்கப்பட்டு வந்தவர்கள் மௌனம் சாதித்துக் கொள்வதையும் காணமுடியும். முறைமையாக்கல் கல்விக்குப் பழக்கப்பட்டவர்களது நிலை, இப்படியேதான் இருக்கமுடியும். இதில் வியப்படைய எதுவுமில்லை.
ஆனால், இந்த முகநூலில் இனிச் செய்யப்படும் ஆய்வுகளையும், வரப்படும் முடிவுகளையும் படித்து, ஆராயும் ஒருவர், தமிழ் பேசும் மக்களின் பரிதாபநிலையை நன்கு உணரமுடியும்.
தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களுக்கும், தமிழிலக்கியங்;கள், விஞ்ஞான நூல்களுக்குமிடையில் காணப்படும் நெருங்கிய தொடர்புகளை முழுமையாக ஆராய்வது, பரந்துபட்டவொரு ஆய்வாகும். இந்தநிலையில், வாசகர்கள் சுய ஆராய்வில் ஈடுபட இடமிளிக்கும் நோக்கிலும், இந்த ஆய்வுகளின் பக்கங்களின் எண்ணிக்கையை தேவையற்ற விதத்தில் அதிகரிக்காது பார்த்துக்;கொள்ளவும், இங்கு தெரிந்தெடுக்கப்பட்ட விதத்திலே, சில மிகமுக்கிய விடயங்கள் மாத்திரம் ஒப்பிடப்பட்டு, ஆராயப்படவேண்டியுள்ளது, ஏனையவைகளை, வாசகர்கள் சுயமாக ஆராய்ந்தறிய விடவேண்டியுள்ளது.
எதுவிதத்திலும், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியில் மாத்திரம்தான் இன்று கிடைக்கப்பெறுவது, தமிழ் மொழியை மாத்திரம் தெரிந்திருப்பவர்கள், இவற்றினை ஆராய முடியாது செய்துள்ளது. மஹாவம்ஸ நூலைச் சங்கரன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்திருந்த போதும், அந்த மொழி பெயர்ப்பு நூலானது, யாழ் பல்கலைக் கழக நூலகம் தவிர்ந்த ஏயை நூலகங்கள் எதிலும் கிடைக்கக்கூடியதாக இன்றில்லை.
தீபவம்ஸ நூலானது, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இது, தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களின் ஆராய்வானது, தவிர்க்கமுடியாதபடி, ஆங்கிலம் தெரிந்தோரால் மாத்திரமே ஆய்வு செய்யப்படக் கூடிய நிலை பெருமளவில் காணப்படுகிறது.
அறிவியலைப் பொறுத்தமட்டில், இது, தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை ஆராய்வதூடாகத் தமிழ் மாணவர்கள் தமது அறிவையும், ஆராயும் தன்மையையும் வளர்த்துக் கொள்வதற்குப் பெரும் தடையாகவுள்ளது. இப் பிரச்சனையையும், ஏனைய பிரச்சனைகளையும் சுலபமாகத் தீர்க்க, எமது மாணவர்கள், தமது ஆங்கில அறிவை உயர்த்திக்கொள்வதே புத்திசாதுரியமானது.
பூமியின் ஒரு மொழியையல்ல, பல முக்கிய மொழிகளையும் கற்றுக் கொள்வது, ஒருவருக்குப் பலவகையிலும் உதவும்; அவரின் சமூகத்திற்கும் உதவும். ஆனால், பிறவொரு மொழியைக் கற்பவர் அந்த மொழியைத் தலைமுறை, தலைமுறைகளாகப் பேசிவந்த சமூகத்தவரே தானும் எனக் கருதாவிடில், அவர் புத்திசாதுரியமானவராக இருப்பார்.
இந்தநிலையில்,விளக்கங்களை முழுமையாக ஏற்படுத்திக் கொள்ளப் போதுமானவை எனக் கருதப்படும் அளவில், மிகக் குறைந்த ஆய்வுகளே இங்கு செய்யப்படுகின்றன. மேலும், விளக்கங்களைத் தொடர்ச்சியாகவும், சுலபமாகவும் ஏற்படுத்த உதவும் விதத்தில், ஒருவித ஆய்வுத்தொடர்ச்சி இருக்கும் விதத்திலேயே, ஆய்வு விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
சில நூல்கள் யாழ் குடாவிலும், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சாதாரண பொது நூலகங்களில் கிடைப்பது கடினமான நிலை காணப்படுவதால், நூல்களில் இருந்து பெற்றுத்தரப்படும் ஆய்வுகளுக்குத் தேவையான பகுதிகள், முழுமையாகத் தரப்படுகின்றன.
எதுவிதத்திலும், இன்று இணையத்தளங்களில் பண்டைய தமிழ் நுல்களை ஒருவர் முழுமையாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதால், அந்த இனையத்தள விபரங்களும் ஆங்காங்கு தரப்படுகின்றன.
ஆங்கில மொழி நூல்களிலிருந்து தரப்பட்டிருப்பவைகளுக்குத் தமிழாக்கம் தரப்படவில்லை.
எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாம் ஆய்வுகளைச் செய்யத் தெரிந்தவர்களேயன்றி, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அல்ல என்றே கருதுகின்றனர். இந்தநிலையில், தமிழாக்க மானது சிலவேளைகளில் கருத்துக்கள் மாற வழிவகுத்துவிடுமாகையால், அவை ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன.
இங்கு செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும், வரப்பட்டு உள்ள முடிவுகளையும் வாதிக்காது விடுவது, இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு இறுதித்தீர்வுகான எந்தவிதத்திலும் உதவ மாட்டாது. மாறாக, அது இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு இறுதியான ஒரு தீர்வுகாணப்படாது, பிரச்சனை தொடரவே வழியமைக்கும். இது புத்திக்கொவ்வாத செயற்பாடாகவே அமையும்.
கடந்த காலங்களில் நடைபெற்றுவந்ததுபோல், இன்றும் நாம் தவறுகளைத் தொடர்ந்து விடவும் முடியாது, தவறுகள் விடப்படுவதைத் தொடர்ந்து அனுமதிக்கவும் முடியாது. அப்படித் தவறுகள் விடப்படுவதின் தாக்கங்கள், தமிழ் பேசும் சமூகத்தினை மாத்திரமல்ல, இலங்கையின் சகல சமூகங்களையும், மீள்வதற்கு மிகவும் கடினமான நிலையினுள் நிரந்தரமாகத் தள்ளிவிடும்.
Thanks 
Vettivelu Thanam

Ectropion ::


Ectropion is a medical condition in which the lower eyelid turns outwards. It is also known as Out Turning of the Eyelid. In severe ectropion, the entire length of the eyelid is turned out. When ectropion is less severe, only one segment of the eyelid sags away from the eye. Artificial tears can help relieve the symptoms caused by ectropion until you can have surgery to correct the condition.
Causes
The primary cause of ectropion is the muscle weakness or tissue relaxation that occurs as part of the normal aging process. Other are :
1. Stroke
2. Skin cancer
3. Injury
4. Scar tissue from injuries or burns
5. Facial palsy
6. Birth defects due to genetic disorders like Down syndrome
7. Prior surgery or radiation treatment of the eyelids
8. Rapid weight loss
Signs and Symptoms
- Excess tearing of the eye (epiphora)
- Dry, painful eyes
- Eyelid turns outward
- Long-term (chronic) conjunctivitis
- Keratitis
- Redness of the lid and white part of the eye
- Irritation of eye.

Augmented Reality for Architectural Visualization


ஒரு பெண்

ஒரு பெண்
தன்னுடைய துயரத்தின் சாயல்
மகள்மீது படிவதை
ஒருபோதும் விரும்புவதில்லை

மகளின் விருப்பங்களைச்
சாத்தியப்படுத்தவே
ஒவ்வொன்றையும்
தேடிக்கண்டடைகிறாள்
முந்தின பருவத்தில்
அவளின் உள்ளிருந்து தெறித்துப்
பரவிய வெளிச்சத்தை
புதிய நிறத்தில்
மகளிடம்
உணர்த்திவிட விழைகிறாள்
அதனாலேயே
கதகதப்பை உணர்ந்தபடி உறங்குகிற
மகளின் கையை விலக்கி
பணியிடம் கிளம்புகிறாள் பெண்.
Courtesy - painting: Rajesh Shah
Sakthi Jothi

The three step plan for creative success

We live in a century of immense change. Yesterday's answers do not resolve the complex problems we face every day. At almost every level and at almost any position we have to invent new solutions or formulate things anew. But creativity is important not only to improve work performance but it is increasingly essential in solving every-day problems of our increasingly complex lives.Creativity improves the quality of life overall. However, enhancing creativity or achieve any mental change is not a quick fix, but the result of a long term, focused process. Creativity is a lifestyle.

Understanding the nature and operation of the mind is the first step to achieve meaningful mental change. Although arbitrary creative ideas happen to anybody, it takes systematic preparation to achieve mental excellence, which is essential to achieve long term creative success. There are three crucial elements to achieve creativity.

(1)  Understand the problem. Without knowing the crux of the contradiction or failings of the problem, creating or finding a solution is not possible. However, detailed understanding is not required! In fact, too many details are confusing and misleading.

(2)  Accept the place where you are. Creativity is not a linear progress. Most often creative solutions come to those, who are not positioned well in the organization or even come from outside. The lower you find yourself compared to your expectation, the better you are positioned for a breakthrough.

(3)  Be immersed in the problem. All creative people have a hundred percent mental commitment. They cannot be disturbed! Whereas environmental disturbances disrupt most people, creative minds thrive on stressful situations, which further sharpen their resolve toward the goal.

This last point is important. Mental commitment is not a forceful and rigid concentration; in fact, creative people do not seem to work on the problem at all! Einstein often received creative inspiration while chatting with friends, or engaged in other mundane activity. Mozart was known to enjoy light hearted partying with friends, but he is said to 'see' a whole symphony in a flash of creative moment. Creativity visits a clear, playful mind: live with a clear conscience. This allows a mental openness toward others and the world. Do not weigh down your mind with worries, lies, remorse. Get rid of grudges, hurts of any kind as soon as you have them. This is an emotionally difficult, and meticulous task, but well worth the effort! You will have to develop a personal method that you can regularly follow. Go for a walk; focus on a mantra, or meditation, with which to liberate your mind from negative mindset. Very often mental house cleaning will immediately create space for a creative solution. Follow up and work on your idea. Ideas are only as good as the diligent, persistent work that follows them. Do not get discouraged, if you receive unworkable, faulty answer at first. If you are persistent and remain optimistic, creative solutions will visit you.

Have a note book in which to collect your unedited thoughts. Some people have a journal at their bedside, to immediately write down ideas as they have them. If you write regularly, your creative potential will accumulate and form as an interconnected whole.

For more information please visit: thescienceofconsciousness.com

Noval derivation of pi links quantum physics and pure math

"I find it fascinating that a purely mathematical formula from the 17th century characterises a physical system that was discovered 300 years later," said one of the lead researchers, Tamar Friedmann, a mathematician at the University of Rochester in the US. Seriously, wow.
The discovery was made when Carl Hagen, a particle physicist at the University of Rochester, was teaching a class on quantum mechanics and explaining to his students how to use a quantum mechanical technique known as the 'variation principle' to approximate the energy states of a hydrogen atom.
While comparing these values to conventional calculations, he noticed an unusual trend in the ratios. He asked Friedmann to help him work out this trend, and they quickly realised that it was actually a manifestation of the Wallis formula for pi – the first time it had even been derived from physics.
"We weren't looking for the Wallis formula for pi. It just fell into our laps," said Hagen. "It was a complete surprise," added Friedmann. "I jumped up and down when we got the Wallis formula out of equations for the hydrogen atom."
Since 1655 there have been plenty of proofs of Wallis's formula, but all have come from the world of mathematics, and the new results have people freaking out. The results have been published in the Journal of Mathematical Physics.
"In quantum mechanics, a technique called the variational approach can be used to approximate the energy states of quantum systems, like molecules, that can't be solved exactly. Hagen was teaching the technique to his students when he decided to apply it to a real-world object: the hydrogen atom. The hydrogen atom is actually one of the rare quantum mechanical systems whose energy levels can be solved exactly, but by applying the variational approach and then comparing the result to the exact solution, students could calculate the error in the approximation."

"That a formula for π is hidden inside the quantum mechanics of the hydrogen atom is surprising and delightful."

Tuesday, November 10, 2015

தன்வந்திரி தோன்றிய நாள் - தீபாவளி!


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றியவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். அவர் தோன்றிய நாளே தீபாவளி. ஈசனின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தாள் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருக்கின்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்கின்றனர்.
தன்வந்திரி பகவானுக்கு என்று தனிக்கோவில் வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ளது. இங்கு தன் வந்திரி பகவானுடன் வாழ்வியல் முறைகளை விளக்கும் விதமாக மூலிகை ஆராய்ச்சி, வானிலை ஆராய்ச்சி, ஜோதிட ஆராய்ச்சி, வேத ஆகமங்கள் ஆராய்ச்சி, அறிவியல், சமூகம், கலை, பண்பாடு, சமயம், பாரம்பரிய சம்பிரதாயங்களை பலரும் அறிந்து கொள்ளும் விதத்திலும் தெரிந்து பயன்பெறும் விதத்திலும், வாழ்வியல் முறையில் பல உண்மைகளை தெரிந்து கொள்ளும் விதத்திலும் அமையப்பெற்றுள்ளது. 

இக்கோவில் உலக வாழ்வியல் மையம் என்று அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்காக ஐ.எஸ்.ஓ. 14001, ஐ.எஸ்.ஓ. 9001-2008 ஆகிய உலக   தரச்சான்றிதழ் பெற்ற பெருமையும் இந்த பீடத்திற்கு உண்டு. 

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் முரளிதர சுவாமிகள். இவர் தன் தாய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தன்வந்திரி பீடத்தை உருவாக்கினார். இவர் கடந்த 1995-ம் ஆண்டு ஸ்ரீமாருதியின் உதவிக்கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கினார். 

தன்வந்திரி பீடம்............... இந்த அமைப்பின் அங்கமே ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஆகும். கும்பாபிஷேகத்திற்கு முன்னர் தன்வந்திரி பகவானை கரிக்கோல ஊர்வலமாக இந்தியா முழுவதும் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வைணவ, சைவ கோவில்களிலும் திருமண மண்டபங்கள், பொது இடங்கள், சமூக கூடங்களில் உலக மக்கள் பங்கு பெறும் வகையில் வைத்து 147 ஹோமங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 67 வைணவ கோவில்களில் சிறப்பு ஆராதனை நடந்தது. 

கும்பாபிஷேகம்.......... ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 15.12.2004-ம் தேதி தன்வந்திரி பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து ஜீவராசிகளையும் நோய், நொடி இல்லாமலும் சிறந்த மனநலத்துடன் காக்கும் தன்வந்திரி பகவான் அமிர்தகலசம், கையில் சீந்தல் கொடியுடன் ஸ்டெதாஸ்கோப் அணிந்து 6 அடியில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

நான் என்னும் அகந்தையை விட்டுவிட்டு என்னிடம் நேரிடையாக வந்து சரணடையும் பக்தர்களை கைவிடமாட்டேன். அவர்கள் வாழ்வில் நல்ல உடல்நலமும், மனநலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வைப்பேன் என்று கூறி தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை போக்கிவருகிறார் தன்   வந்திரி பகவான். 

பீடத்திற்கு வரும் ஆண் பக்தர்கள் சட்டை, பனியன் அணியாமல் செல்ல வேண்டும். ஏனென்றால் தன்வந்திரி பகவானின் நேரடி கடைக்கண் பார்வைபட வேண்டும் என்றும் ஹோமங்களின் பயன்களை பெறும் விதத்திலும் அங்கு அமைந்துள்ள சிலைகளின் கீழ் பக்தர்களால் எழுதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மந்திரங்களின் ஒலி கதிர்களை பெறும் வகையிலும் மூலிகைகளின் காற்றுபட்டு உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதற்காக சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்பது பீடத்தின் கட்டுப்பாடு. கட்டுப்பாடான வாழ்க்கை ஒருவரை வாழ்வில் உயர்த்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம். 

அணையா ஹோமகுண்டம்............. இந்த பீடத்தில் தனிநபர் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை என்று எதுவும் இல்லை. மூலவரான தன்வந்திரி பகவான் முன்பு அமைதியாக உட்கார்ந்து அவரிடம் நம் குறைகளை ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும். பின்னர் அவரின் திவ்ய பேரழகை கண் குளிர கண்டு மனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்யலாம். 

அவ்வாறு செய்யும் போது நம்முடைய மனபாரம் குறைகிறது. மனம் லேசாகிறது. உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது என்பதை வருகை புரியும் பக்தர்கள் அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்துள்ளது சான்றாக உள்ளது. இங்கு உலக நலன் கருதி நித்ய ஆராதனை நடக்கிறது. 365 நாட்களும் 356 யாகம் நடக்கிறது. 

தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் நடக்கிறது. பக்தர்களுக்கு பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. உலகிலேயே எங்கும் பார்க்க முடியாத அணையா ஹோம குண்டம் இங்கு உள்ளது. 

அங்கு எப்போதும் அக்னி பகவான் வாசம் செய்து கொண்டிருப்பார், பக்தர்களும் தங்களால் இயன்ற யாகப் பொருட்களை இந்த ஹோம குண்டத்தில்போடலாம். இந்த பீடத்தில் பிரதானமாக செய்வது மந்திரங்களுடன் கூடிய ஹோமங்கள் தான். 

விசேஷ ஹோமங்கள்............... ஆரோக்கிய பீடம் என்பது பெயரளவில் இருக்க கூடாது என்பதால் உடல் நலம், மனநலம் அளிக்கும் ஹோமங்கள் தினந்தோறும் நடத்தப்படுகிறது. குழந்தைவரம் இல்லையா, திருமண தடையா, கடன் பிரச்சினையா, அனைத்திற்கும் இங்கு ஹோமங்கள் நடைபெறுகிறது. இவை மட்டுமல்லாது. 

அச்வாரூடா, வாஞ்ச கல்பதா கணபதி, ஸ்ரீசூலினி துர்கா, 1008 திருஷ்டி துர்காஹோமம், சர்பசாந்தி ஹோமம், நவசண்டி ஹோமம், மஹாருத்ர ஹோமம், ஸ்ரீவித்யா நிவாரண பூஜை என விசேஷ ஹோமங்களும் நடக்கிறது. 

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒரே கல்லில் வினை தீர்க்கும் விநாயகர், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவான் காட்சி அளிக்கின்றனர். இவர்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே எண்ணை அபிஷேகம் செய்கின்றனர். 

ஆரோக்கிய லட்சுமி.............. மகாலட்சுமியின் சொரூபமான ஆரோக்கியலட்சுமி இங்கு தாயாராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆரோக்கியலட்சுமி ஸ்டெதாஸ்கோப்பும், கைகெடிகாரமும் அணிந்து கைகளில் அமிர்தகலசம், சீந்தல்கொடி, அட் டைப்பூச்சி சகிதம் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். 

தன்வந்திரி பகவானுக்கும் ஆரோக்கிய லட்சுமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இங்கு பஞ்ச திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மகிஷாசுரமர்த்தினி 18 திருக்கரங்களுடன் மகிஷனை வதம் செய்து முடித்த திருக்கோலத்தில் மலர்ந்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். 

அம்மன் சன்னதியில் அமாவாசை நாட்களில் நெய், மிளகாய் போன்ற திரவியங்களுடன் சூலினியாகம் மற்றும் மரணபயம் போக்கும் ம்ருத்யுஞ்ச யாகமும் நடக்கிறது. மாங்கல்ய பலம் பெறுவதற்காகவும், திருமண தடைகள் நீங்கவும், சவுபாக்கியங்கள் பெறவும் பெண்களுக்கு இந்த சன்னதியில் மாங்கல்ய சரடும், எலுமிச்சை பழமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

மகிஷாசுரமர்த்தினி சிலைக்கு 1008 சுமங்கலிகள் அபிஷேகம் செய்து 10 கோடி மந்திரங்கள் பீடத்தின் அடியில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகிஷாசுரமர்த்தினி விக்கிரகம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கரிக்கோல பயணமாக வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

468 சிவலிங்கங்கள்............ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 468 சித்தர்களின் நினைவாக 468 சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 300 ஜீவசமாதிகளுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் சென்று அங்கிருந்து எடுத்து வந்த மண்வைத்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். 

இங்கு பிரதோஷம், பவுர்ணமி பூஜையும் சிறப்பாக செய்யப்படுகிறது. தினந்தோறும் வரும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சிவலிங்கங்களுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து பலனடைகின்றனர். பீடத்தில் சிறப்பம்சமாக காலச்சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. காலச்சக்கரத்தில் நட்சத்திரங்கள், ராசிகளுக்குரிய விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

பற்சக்கர வடிவில் கால சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. காலச்சக்கரத்தை சுற்றி வரும் பொழுது காலச்சக்கரத்தில் வளர்ந்துள்ள மருத்துவ குணமுள்ள விருட்சங்களின் காற்று நமக்கு நோய் நிவாரணத்தை ஏற்படுத்துகிறது. காலச்சக்கரத்தில் உள்ள மூலிகைகள் யாகத்தில் சேர்க்கப்பட்டு பஸ்பமாக பக்தர்களுக்கு விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

சன்னதிகள்............. பீடத்தில் அய்யப்பன், மகாவீரர், ராமர், சீதை, லட்சுமணன், அன்னபூரணேஸ்வரி, கூர்மலட்சுமி நரசிம்மர், பாலரங்கநாதர், காயத்திரிதேவி, தத்தாத்ரேயர், ஹயக்கிரீவர், மேதா தட்சிணாமூர்த்தி, நவகன்னியர்கள் கிருஷ்ணர், கருடாழ்வார், ராகவேந்திரர், தங்கபாபா, சூட்சமபாபா, வள்ளலார், சங்கராச்சாரியார், ரமண மகரிஷி, வேதாந்த தேசிகர், சுவாமி குழந்தையானந்தா, கிரியாயோகி மகா அவதார பாபாஜி, சுதர்சன ஆழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு தனி சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மஹாமேரு, ஸ்ரீபாதபீடம் அத்ரிபாதம், துளசி மாடம் ஆகியவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தன்வந்தரி பகவானை தரிசித்து நல்ல உடல் நலமும், நல்ல மன நலமும் பெறுவோம். 

அமைவிடம்............. தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நடை காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி திறந்திருக்கும். வாலாஜா பஸ் நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் வேலூரில் இருந்து 28 கி.மீ. தூரத்திலும் இந்த பீடம் அமைந்துள்ளது. வேலூர்-சென்னை மார்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா நகரம் உள்ளது. 

கார்த்தவீர்யார்ஜூனர்............. மகரிஷி ஜமதக்கனியின் புதல்வரும், குரு தத்தாத்ரேயரின் பிரதம சீடருமான கார்த்தவீர்யார்ஜூனருக்கு தனி சன்னதி உள்ளது. இவருக்கு ஆயிரம் கையுடையான் என்ற பெயரும் உண்டு, இவரை முழுமையாக நம்பி நம்முடைய குறைகளை கூறினால் வியாபார நஷ்டத்திலிருந்து நம்மை காப்பார் என்பதும், திருட்டு போன பொருட்களை திரும்ப கிடைக்க செய்வார் என்பதும் ஐதீகம். 

கார்த்தவீர்யார்ஜூனர் மகாவிஷ்μவின் அம்சமாகவும், தலைசிறந்த அரசராகவும், நம்பிக்கைக்குரிய காவல் தெய்வமாகவும், ஆயுதங்களைக் காவலுக்குரிய கொண்டு பச்சைக்கல்லில் பரவசமடையச் செய்கிறார். 

-எஸ்.கே.எம்.மோகன், வேலூர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல்நலத்துடன் திகழ இந்த போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ
அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
14. ஓம் அழிவற்றவரே போற்றி
15. ஓம் அழகுடையோனே போற்றி
16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி
31. ஓம் உலக ரட்சகரே போற்றி
32. ஓம் உலக நாதனே போற்றி
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
34. ஓம் உலகாள்பவரே போற்றி
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
37. ஓம் உயிர் தருபவரே போற்றி
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
39. ஓம் உண்மை சாதுவே போற்றி
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
42. ஓம் எழிலனே போற்றி
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி
46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
51. ஓம் கருணைக் கடலே போற்றி
52. ஓம் கருணை அமுதமே போற்றி
53. ஓம் கருணா கரனே போற்றி
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
58. ஓம் குருவே போற்றி
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி
61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
75. ஓம் சித்தமருந்தே போற்றி
76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
81. ஓம் தசாவதாரமே போற்றி
82. ஓம் தீரரே போற்றி
83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
86. ஓம் தேவாதி தேவரே போற்றி
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
88. ஓம் தேவாமிர்தமே போற்றி
89. ஓம் தேனாமிர்தமே போற்றி
90. ஓம் பகலவனே போற்றி
91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
92. ஓம் பக்திமயமானவரே போற்றி
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
103. ஓம் மகா பண்டிதரே போற்றி
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
107. ஓம் சக்தி தருபவரே போற்றி
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!

Gyeongbokgung, also known as Gyeongbokgung Palace or Gyeongbok Palace

Gyeongbokgung, also known as Gyeongbokgung Palace or Gyeongbok Palace, was the main royal palace of the Joseon dynasty. Built in 1395, it is located in northern Seoul, South Korea









 Geonchunmun Gate
 Geunjeongjeon Hall, Important state functions were held in the compound of Geunjeongjeon, the Throne Hall, such as court officials' audiences with the king and receptions for foreign envoys.

 The throne inside Geunjeongjeon Hall.