Search This Blog

Tuesday, September 13, 2011

அவளும் சுதந்திரமும்... (விகடினில் வெளியான எனது சிறுகதை)


"இவங்க என் அம்மா"  என்று என் மகள் அர்ச்சனா, ரமேஷிடம் என்னை அறிமுகப்படுத்த, 'வணக்கம்' என்றேன். அவர் புன்னகைத்தார். 

எனக்கு அவரின் அந்த புன்னகை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அந்த உண்மை எனக்குள் பதிந்து எனது வெளிப்படுத்தாத பட்டியலில் வழக்கம்போல் மௌனமாக சென்றுசேர்ந்தது. 

"பெண்களும் சுதந்திரமும்" என்ற தலைப்பில் கல்லூரியின் பேச்சுப் போட்டியில் பேசி வெற்றி பெற்றவள் நானே இப்படி என்றால்..!

இன்னொரு பெண்ணோடு என் கணவருக்கு தொடர்பிருந்ததை அறிந்ததும், என்னை பார்க்கையில் அவருக்கு அவளைத் தான் ஞாபகம் வருகிறதென்று பலமுறை என்னிடம் சொன்ன பிறகும் நான் வேறென்ன செய்ய? 

அந்த நல்லவனுக்கு நிரந்தர சுதந்திரம் கொடுத்தேன். நல்லவேளை எனக்கு அரசு வேலை இருந்தது. ஆனால் என் மீது அனுதாபம் காட்டின சமூகம் என்னை ஆணவக்காரி என்று சொல்லாமல் விட்டதா? இல்லையே! 

மகளின் மீதுள்ள பாசத்தால் மறுமணமத்தை தவிர்த்த பல லட்சங்களில் நானும் ஒருத்தி. உணர்ச்சிகள் வெல்லும்போது அறிவை தோற்கடிக்கக் கூடாது என்ற கொள்கையை இறுதிவரை கடைபிடிக்க உறுதி எடுத்தவள் தான் நான்! 

என்றாலும், என்னையே நான் கரைத்து வருகிறேனோ என்று அவ்வப்போது என் மனதின் கேள்விக்கு பதிலின்றி நான் தவிக்கிறேன். எந்தன் இதயத்தின் கனத்த பாரம் கண்ணீராய் பரிணமிப்பதை என்னால் தடுக்க இயல்வதில்லை!

காலையில் சந்தித்த ரமேஷின் புன்னகை மனதில் ஒரு மின்னலைக் கொண்டு வந்தது. 

"அர்ச்சனா..! ஜயந்தியின் அப்பா ரமேஷ் என்ன செய்கிறார்? டாக்டரா? சீரியல் நடிகரா?"

"அம்மா, அவங்க அப்பா நல்ல அப்பா!" 

"அது சரி, அவருக்கு என்ன வேலைன்னு கேட்டேன். பி.ஏ படிக்கிறாயே, கேள்விக்கு சரியான பதில் சொல்லத் தெரியலையே," என்று சிரித்தேன். 

உடனே அர்ச்சனா, "அம்மா, அவர் ஒரு வக்கீல். ஆனால் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்". 

"ஆமாம் அர்ச்சனா, வக்கீல்களும் மருத்துவர்களும் சந்தோஷமானவர்களை சந்திப்பது மிகவும் குறைவு." 

ஆறு வருடங்களுக்கு முன்னர் இந்த வக்கீலை நான் சந்தித்திருப்பின் இவர் மூலமாகவே அந்த கடைசி கையெழுத்திட்டுருப்பேன் என்றதென் மனம். 

அப்போது ஜயந்தியின் அலைபேசி அழைப்பு.. "அர்ச்சனா இருக்காளா" என்றதொரு இனிமையான சத்தம். 

"அர்ச்சனாவை அழைக்கிறேன், சரி.. உங்க அம்மாவை எனக்கு அறிமுகப்படுத்தமாட்டாயா? அவங்க கிட்ட கொடும்மா ஜயந்தி!" 

"ஐயோ.. அம்மாவும் அப்பாவும் ஒரே சண்டை என்றும் போல் இன்றும்.." என்று ஒரு கவலையுமின்றி ஜயந்தி சாதாரணமாக சொன்னதை கேட்டு ஏனோ எனது மனதில் நிறைந்தது, கவலையின் இருண்ட மேகங்கள்.

இந்த நல்ல மனிதருக்கா!?

நல்ல பெண்ணுக்கு நல்ல ஒருவன் கணவனாக அமைவதும், நல்லவனுக்கு அன்பான மனைவி அமைவதும் மிகவும் அபூர்வம் என்றே தோன்றுகிறது. வித்தியசமான இருவரை இணைக்க இறைவன் ஆசைப்படுகிறாரோ? சரிப்படவில்லை என்றால் எவ்வளவு காலம் தான் தாம்பத்திய நாடகம் தொடர முடியும்? இருப்பினும் தற்கொலையை விட விவாகரத்து மேல்! 

அது சரி தான் என்றாலும், சமூகத்தில் விவாகரத்துக்கு பின்னர் நேரிட வேண்டின கொடுமையைப் பட்டியலிட்டால், அதை பத்து நாளானால் கூட சொல்லித் தீர்க்க முடியாது. விதவை என்றால் கூட ஓர் அனுதாபமாவது கிடைத்திருக்கும். என் தாய் தந்தையரின் தாம்பத்தியத்தில், ஆரம்பம் முதல், அவர்கள் வாழ்ந்த காலத்தின் முடிவு வரை, அவர்களில் இருந்த உண்மையான அன்பும் மனம் கனிந்த மன்னிப்பும் எவ்வளவு சிறப்பானது!

ஆண்களுக்கு ஆதரவாக இயற்கையும் இருக்கிறதே! 

பெண்களுக்கென்ற கஷ்டங்கள் இனி இல்லை என்ற காலத்தில் இந்த பூமி சுற்றுவதை அதிர்ச்சியுடன் ஒருவேளை நிறுத்திவிடுக்கூடும்.

இல்லை... இல்லை..! எனது முடிவில் தவறில்லை, பத்து வருடங்களுக்கு முன்னர் நான் எடுத்த விவாகரத்து முடிவு சரி தான்! 

எங்கிருந்து எனக்கு தைரியம் வந்ததோ... அன்று காலை நேரடியாக ரமேஷைக் காண அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன். 

"உங்களிடம் பேச வேண்டும்" என்றேன். 

என் கதையை கவலையோடு... அதிர்ச்சி, அனுதாபப் பார்வை ஏதுமில்லாமலும் பொறுமையுடன் கேட்டார்.

"ஏன் ஜயந்தியின் அம்மா, அது தான் உங்கள் மனைவி, தினமும் உங்களோடு சண்டை" என்ற கேள்வியை நான் கேட்டு முடிவதற்குள், "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாரங்கள், கவலைகள்" என்றார் ரமேஷ். 

அவர் மனதின் கவலையை அழிக்க முயறிசித்தது அவரின் புன்னகை.

"மற்றவர்களை தனது அதிகாரத்தால் மிரட்டி அடக்கியாளும் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை நான் திருமணத்துக்கு தேர்வு செய்தது, இல்லையில்லை... அவர்களின் தேர்ந்தெடுப்புக்கு எனது விருப்பம் தெரிவித்தது எனது தவறு தானே? வருடங்கள் இருபது முடிந்தும் மாற்றங்கள் ஏதுமில்லை. எப்படி வரும்? என் மனைவி வளர்ந்த சூழ்நிலைக்கேற்றபடி அவர்கள் உள்ளார்கள், அவ்வளவு தான்! ஆப்பிளின் விதை விதைத்தால் மாங்கனி கிடைக்காதே? ஏதோ ஒரு விபத்தில் கிடைத்த பாக்கியமாக எங்களுக்கு ஜயந்தி! 

இத்தனை வருடங்களில் இதெல்லாம் பழகிப்போயிற்று. நான் ஒரு சுதந்திரனாக இருப்பதும் தவறு தான் போலுள்ளது. கோடி ரூபாய் கொடுத்தால் கூட ஓர் அடிமையின் வேடமிட்டு நடிக்க என் மனம் சம்மதிக்காது. ஆனால், வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவனுக்கு மன நிம்மதி நிச்சயம் இருக்காது என்று தான் நினைக்கிறேன். எனக்கு மனநிம்மதி இல்லை என்பதை இனி எத்தனை காலம் தான் மறைத்து இப்படி சிரிப்பது என்றும் புரியவில்லை." என்று ரமேஷ் சொல்ல... 

நான்... "எல்லாவற்றுக்கும் ஆண்களை திட்டித் தள்ளும் அர்த்தமற்ற ஓர் பெண்ணியத்தில் எனக்கு ஈடுபாடில்லை. ஆண்களும் பெண்களும் சேர்ந்தது தானே இந்த உலகம்? நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கு தான் இல்லை? சரி, நல்லவர்கள் - கெட்டவர்கள் என்ற இந்த தலைப்பிற்கே எத்தனை முரண்பாடுகள்? இதற்கு என்ன அடிப்படைகள்? 

ஒரு மனிதனை, அவனுடைய செயல்களை சரி என்றும் தவறென்றும் தீர்மானிப்பது ஒவ்வொரு சமூகத்தின் வித்தியாசமான கட்டமைப்புகளும், மரபுகளும், சூழ்நிலைகளும் தான் எனினினும், பொதுவாக எனது சமூகத்தைப் பார்த்து நான் என்ன சொல்வேன் என்னெவென்றால், ஓரளவுக்கு மனிதமும் புரிதலும் இருப்பின் நல்லவன் அல்லது நல்லவள் என்ற அந்தஸ்தை கொடுக்கலாம். 

சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் வழியே பெண்கள் ஆண்களை வேட்டையாடுவது நிறுத்த வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இப்படி இவர்கள் செய்வது தவறு தான். ஆனால், இது போன்ற சட்டங்கள் கூட இல்லை என்றால் பெண்களின் நிலை?! 

அடிமைப்படுத்தும் மனநிலையோடு வாழும் கணவனும் மனைவியும் குற்றவாளிகளே. இருப்பினும் அதிகமாக பாதிப்பது பெண்கள் தான் என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் சட்டம் பெண்களுக்கு மட்டுமே அதிகமும் சாதகமாக இருப்பதும் என்னை யோசிக்க வைக்கிறது" - என்றேன். 

ரமேஷுக்கு என்னையும் எனது கருத்துக்களையும் பிடித்திருந்தது என்று புரிந்தது.

"ரமேஷ், இன்று மாலை என் வீட்டுக்கு வாங்க," என்று அழைத்தேன்.   அப்படி அழைக்க எனக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ...?

மல்லிகை பூக்களோடும் மகளுக்கு இனிப்புகளோடும் அன்று மாலையில் என் வீட்டுக்கு வந்தார் ரமேஷ். 

"வாங்க" எனறு புன்னகை வணக்கமிட்டு வரவேற்றேன். 

பெண் பார்க்க வரும் ஒருவரின் வெட்கம் போலெல்லாம் விவேகமற்ற சிந்தனையொன்று அவருக்கும் இல்லை, எனக்கும் இல்லை. சகஜமாக அருகருகே அமர்ந்தோம். 

பேசினோம். பேசினோம், பேசிக்கொண்டே இருந்தோம். 

டியூஷன் முடித்த பின்னர் எங்களோடு சேர்ந்து அர்ச்சனாவும் பேசிக்கொண்டிருந்தாள். 

"பிறகு சந்திப்போம்," என்று சொல்லி புறப்பட்டார் ரமேஷ்!

"தன்னை நேசிக்க ஓர் அன்பு மனம்; சென்று சேர ஓர் அன்பின் இல்லம்; கொஞ்சம் ஆசைகள்... இவைகள் இருப்பின் நான் வாழ்ந்திருப்பேன்"  என்றெழுதி இறந்துபோனார் ஓர் எழுத்தாளர் என்று காலையில் வாசித்த செய்தி ஞாபகத்திற்கு வந்தது. 

அந்த எழுத்தாளர் எவ்வளவு முட்டாளென்று அன்றிரவு நினைக்கையில் நான் வானத்தை பார்த்தேன். இரண்டு நட்சத்திரங்கள் அருகருகே இருந்தது.  அந்த இனிய காட்சியைக் கண்டதும்...

எனக்கு உன்னைத் தெரியாது
உனக்கு என்னையும் - ஆனால்
நமது கவலைகள் தங்கள் வலிகளை
நட்சத்திரங்களாய் அதோ
பகிர்ந்து கொண்டிருக்கின்றன... 

என்று காகிதம் ஒன்றில் நான் எழுதினதை, இல்லை - கிறுக்கினதை ரமேஷின் பார்வைக்கு நாளை மாலையில் சமர்ப்பணம் செய்ய காத்திருந்தது விடியலுக்கு காத்திருந்த பறவையைப் போல் என்னுள்ளம்!

சதை சார்ந்த ஈர்ப்பு அல்ல. மனம் சார்ந்த நேசம், நட்பு தான் எனினும் ரமேஷின் வீட்டுக்கு நான் ஏன் செல்ல தயங்குகிறேன்? ரமேஷ் என் வீடு வர நான் ஏன் எதிர்பார்க்கிறேன்? ஜயந்தியின் அம்மா எனது சுதந்திரத்துக்கு தடையா? அல்லது அவர்களுடைய வாழ்க்கையின் சுதந்திரத்துக்கு நான் தான் தடையா? ஒரு பெண்ணின் சுதந்திரத்துக்கு அதிகமும் தடை இன்னொரு பெண் தானோ? அல்லது அவளே தானோ? என்னிலிருந்து என் சமுதாயம் துவங்கிட நான் மாறாமல் இந்த சமூகத்தை சாடுவதில் என்ன பயன்? விடைகளைத் தேடி எனது வாழ்க்கையில் தான் இப்படி எத்தனை கேள்விகள்!

அத்தனைக் கேள்விகளும் என்னை சுற்றியிருக்க, ஓடி என்னருகே வந்து அர்ச்சனா சொன்னாள், "அம்மா, நாளை கல்லூரியில் ஒரு பேச்சுப்போட்டி...

ARUNAGIRNATHAR HD

Emotions Of Fingers: 'Art on Fingers'























கௌரவம்


கௌரவம்

Posted by: என். சொக்கன் 
ஜெயநகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கையேந்தி பவன். ஏகப்பட்ட கூட்டம்.காரில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுகிறவர்கள் அதிசயம் இல்லை. நான் ஆச்சர்யப்பட்டது, ஒரு ஸ்கூட்டரைப் பார்த்து.
சாதாரண ஸ்கூட்டர் இல்லை, செக்கச்செவேல் பின்னணியில் கொட்டை எழுத்தில் ‘பிட்ஸா கார்னர்’ என்று எழுதிய ஸ்கூட்டர். அதன்மேல் உட்கார்ந்திருந்தவனும் அதே வண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருந்தான். அலுமினியத் தட்டில் வாழை இலைத் துணுக்கை வைத்து சுவாரஸ்யமாக தோசையை மொசுக்கிக்கொண்டிருந்தான்.
அந்தப் பையனின் மாதச் சம்பளத்துக்குக் கையேந்தி பவன்தான் கட்டுப்படியாகும் என்பது புரிகிறது. ஆனால், ’பிட்ஸா கார்னர்’ டெலிவரி வண்டி கையேந்தி பவன் வாசலில் நின்றால், பிராண்ட் இமேஜ் கெட்டுப்போகாதோ? சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டுப் பத்தடி நடந்துவந்து சாப்பிடலாமே.
இப்படி யோசித்தபோது, திடீரென்று கேரளா ஞாபகம்.
அப்போது நாங்கள் கோட்டயத்தில் ‘மலையாள மனோரமா’ நிறுவனத்தின் இணைய தளத்தை வடிவமைக்கச் சென்றிருந்தோம். அங்கேயே ஒன்றிரண்டு வாரங்கள் தங்கி, பல்வேறு பிரிவினருடன் பேசி, அவர்களுடைய தேவைகளைப் பதிவு செய்யவேண்டியிருந்தது.
இடையில் ஒரு சனி, ஞாயிறு. ’சும்மா கெஸ்ட் ஹவுஸ்ல போரடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டாம், ஜாலியா ஒரு பிக்னிக் போய்ட்டு வாங்க’ என்று அவர்களே ஒரு காரை டிரைவருடன் அனுப்பிவைத்திருந்தார்கள்.
டிரைவருக்கு நடுத்தர வயது, அவருடைய வெள்ளை வெளேர் யூனிஃபார்ம்போலவே வண்டியும். முதுகுக் கண்ணாடியில் கொட்டை எழுத்தில் ‘மலையாள மனோரமா’ என்று எழுதியிருந்தது.
அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். கேரளாவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசுமை, கூடவே லேசான மழையும். சும்மா வண்டி ஓட்டிக்கொண்டு சாலையில் போவதே பிக்னிக்மாதிரிதான் இருந்தது.
என்னுடன் வந்திருந்த நண்பர்கள் இருவருக்கும், ’கேரளாவில் கள் விசேஷம்’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள்போல, அது எங்கே கிடைக்கும் என்று டிரைவரிடம் அசடு வழிய விசாரித்தார்கள்.
அந்த டிரைவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ‘நானே கூட்டிட்டுப் போறேன் சார்’ என்று காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டார், ‘இறங்குங்க’
‘ஏன்? கார் அங்கே போகாதா?’
‘போகும் ஸார், ஆனா, மலையாள மனோரமா வண்டி கள்ளுக்கடை முன்னாடி நிக்கக்கூடாது’ என்றார் அவர்.
***
என். சொக்கன் …

முப்பது செகண்ட் யுத்தம்


முப்பது செகண்ட் யுத்தம்

Posted by: என். சொக்கன் 
பிரதான சாலையிலிருந்து எங்கள் வீடு முன்னூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இதில் முதல் நூறு மீட்டர் பிரமாதமான தார்ச் சாலை. பின்னர் ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கினால் அதைவிடப் பிரமாதமான சிமென்ட் சாலை.
இந்த சிமென்ட் பாதையில் சுமார் ஐம்பது மீட்டர் நடந்தபிறகுதான், பிரச்னை தொடங்கும்.
பிரச்னை இல்லை, பிரச்னைகள்.
எங்கள் ஏரியாவில் குறைந்தபட்சம் நூற்றைம்பது நாய்கள் இருப்பதாக நான் ஒரு மனக் கணக்கு வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லா நிறத்திலும், எல்லா உயரத்திலும், எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்கமுடியும்.
பகல் நேரங்களில் இந்த நாய்கள் எங்கே போய் ஒளிந்துகொள்கின்றன என்று தெரியவில்லை. ராத்திரி ஒன்பதே முக்கால் மணிக்குமேல்தான் இவை பகிரங்கமாகத் தெருக்களில் திரியத் தொடங்கும்.
வெறுமனே திரிந்தால் ‘பருவாயில்லே’. போகிற, வருகிறவர்களைப் பார்த்துக் கோரப் பல் தெரிய உறுமினால்?
எனக்கு நாய் என்றால் ரொம்பப் பயம். சின்ன வயதிலிருந்து ஒரு நாய்க் குட்டியைக்கூட நான் தொட்டுப் பார்த்தது கிடையாது. நடுங்கிப்போய் ஓரமாக நின்றுவிடுவேன்.
ஹைதராபாதில் நான் வேலை செய்யத் தொடங்கிய காலத்தில், தெருநாய்ப் பிரச்னை அளவுக்கு அதிகமாக இருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரம், ஒரு ஏழு வயதுப் பையனை முப்பது வெறிநாய்கள் சூழ்ந்து கடித்துக் கொன்று தின்றுவிட்டன என்று பத்திரிகையில் செய்தி படித்துப் பதறினோம்.
அதன்பிறகு, நாங்கள் தெருவில் கவனமாக நடக்கத் தொடங்கினோம். ’நாயைக் கண்டால் தூர விலகு’ எனும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தோம்.
ஹைதராபாதில் நாங்கள் குடியிருந்த ஏரியாவின் மிகப் பெரிய குப்பைத் தொட்டி எங்கள் தெருவில்தான் இருந்தது. அதைக் கிளறி அகப்படுவதைத் தின்பதற்காகவே ஏகப்பட்ட நாய்கள் அங்கே சுற்றிக்கொண்டிருந்தன.
நல்லவேளையாக, அந்த நாய்களுக்குக் குப்பைத் தொட்டியிலேயே நல்ல தீனி தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆகவே அவை எங்களைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை.
பின்னர் பெங்களூர் வந்தபிறகு, நண்பர்களுடன் ஓர் அடுக்ககத்தில் தங்கியிருந்தேன். அங்கே கீழ் வீட்டில் ஒரு முரட்டு நாய் இருந்தது.
அந்த நாய் பார்ப்பதற்கு ஒரு பெரிய சைஸ் கன்றுக்குட்டிபோல் ஆஜானுபாகுவாக இருக்கும். எந்நேரமும் வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதால் அதன் பற்கள் ஒவ்வொன்றும் குட்டிக் குட்டிக் கத்திகள்போல பயமுறுத்தும்.
இத்தனைக்கும், அந்த நாயை அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகக் கட்டிப்போட்டுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும், மனோகரா படத்தில் வருவதுபோல் சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து கடித்துவிடுமோ என்று எனக்குப் பயம்.
சரி, அந்த நாய் இருக்கும் திசைக்கே போகவேண்டாம் என்று ஒதுங்கவும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், எங்கள் அடுக்ககத்தில் தபால் பெட்டி அந்த நாய் கட்டப்பட்டிருந்த தூணுக்கு மிக அருகே இருந்தது.
அப்போதுதான் நான் பத்திரிகைகளுக்கு நிறைய எழுதத் தொடங்கியிருந்த நேரம். தினந்தோறும் ஏதாவது ஒரு கதை நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வரும், பதினைந்து நாளைக்கு ஒருமுறை ஏதாவது கதை ஏற்கப்பட்டு இலவசப் பிரதி வரும், அதையெல்லாம் பார்த்து மனம் உடைவதற்கு அல்லது மகிழ்ச்சி அடைவதற்கு அந்தத் தபால் பெட்டிதான் எனக்கு ஆதாரம்.
இதனால், வேறு வழியில்லாமல் தினந்தோறும் பயந்து பயந்து அந்தப் பெட்டியை நெருங்குவேன். சத்தம் போடாமல் அதனைத் திறக்க முயற்சி செய்வேன்.
உங்களுக்கே தெரியும். உலகத்தில் எந்தத் தகரப் பெட்டியும் சத்தம் போடாமல் திறக்காது. நீங்கள் அதை எண்ணெயிலேயே குளிப்பாட்டினாலும் ஒரு சின்ன ‘க்ரீச்’சாவது வந்தே தீரும்.
ஆகவே ஒவ்வொருமுறையும் நான் அந்த நாயிடம் தவறாமல் மாட்டிக்கொள்வேன். அது தூணருகே நின்றபடி என்னைப் பார்த்துக் கண்டபடி குரைக்கும், பயமுறுத்தும்.
அப்போது நான் பயந்து நடுங்குவதை யாரேனும் பார்த்தால், அந்த அபார்ட்மென்டில் திருட வந்தவன், நாயிடம் மாட்டிக்கொண்டுவிட்டேன் என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு அந்த நாய் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தது.
ஏதோ என்னால் முடிந்தது, வேறு வீட்டுக்கு மாறியபிறகு அந்த நாயைப்பற்றி ஒரு சிறுகதை எழுதினேன். அதைக் குங்குமத்தில் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்துடன் அழகாகப் பிரசுரித்தார்கள்.
பெங்களூரில் நான் இரண்டாவதாகக் குடியேறிய வீட்டுப் பக்கம் நாய்த் தொந்தரவு இல்லை. மூன்றாவதாகச் சொந்த வீடு வாங்கிக்கொண்டு இடம் மாறியபோது, மறுபடியும் நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.
வழக்கமாக நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் இரவு ஏழு, ஏழே கால். அதற்குமேல் ஏதாவது முக்கிய வேலை வந்தால் பிரச்னையில்லை. வீட்டில் இணையம் இருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம்.
என்றைக்காவது அபூர்வமாக, ஒன்பதரை, பத்து மணிவரை அலுவலகத்தில் தங்க நேர்ந்துவிடும். அப்போதுதான் இந்த நாய்களின் பிரச்னை பூதாகரமாகிவிடும்.
ஒன்பதே முக்கால் மணியளவில் எங்கள் தெருவை ஆக்கிரமிக்கத் தொடங்கும் நாய்கள், அதன்பிறகு இரு திசைகளிலும் யாரும் அவைகளைக் கடந்து செல்வதை விரும்புவதில்லை. ஒரு முரட்டுத்தனமான உறுமலின்மூலம் அவை தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும்.
அதுபோன்ற தருணங்களில் நான் சற்றுத் தொலைவிலேயே தயங்கி நின்றுவிடுவேன். மேற்கொண்டு நடக்கலாமா, வேண்டாமா?
குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்வார்கள். அது நிஜமா, அல்லது சும்மா புருடாவா? எனக்கு இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகவே தைரியமாகத் தொடர்ந்து நடக்கும் துணிச்சல் வரவே வராது.
ஒருவேளை ஏதேனும் ஒரு நாய் என்னைக் கடிக்க வந்தால்? என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? சிமென்ட் ரோட்டில் கல்கூட இருக்காதே? எதை எடுத்து அந்த நாயை அடிப்பது?
என் தோளில் லாப்டாப் பை இருக்கிறது. லாப்டாப் 3 கிலோ, மற்ற புத்தகங்கள், நோட்டுகள் எல்லாம் சேர்ந்து இன்னொரு 2 கிலோ, ஆக மொத்தம் 5 கிலோ கனம் கொண்ட பையினால் நாயைத் தாக்கினால்? அது சுருண்டு விழுந்துவிடாதா?
விழும் என்று ஒரு மனது சொல்லும், இன்னொரு மனது, ‘நாய் கடிக்க வரும்போது நீ தோளில் இருந்து பையை எடுக்கக்கூட நேரம் இருக்காது’ என்று சிரிக்கும். அல்லது, ‘நீயாவது நாயைத் தாக்குவதாவது? போடா சர்த்தான்’ என்று கேலி செய்யும்.
இப்படியாக, நான் எனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு வேறு வழிகளில் யோசிக்கத் தொடங்குவேன். வீட்டுக்கு ஃபோன் செய்து, எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனைக் கையில் தடியுடன் வரச் சொல்லலாமா?
இதைவிட அபத்தமான ஒரு யோசனை இருக்கவே முடியாது. ஏனெனில், நான் நாய்க்குப் பயப்படுகிறேன் என்று தெரிந்தால் என் மனைவி விழுந்து விழுந்து சிரிப்பாரேதவிர வாட்ச்மேனையெல்லாம் அனுப்பிவைக்கவே மாட்டார்.
சரி, இந்த வம்பே வேண்டாம், திரும்பி நடந்து ரோட்டுக்குச் சென்று ஓர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விடலாமா?
இதுவும் சொதப்பல் யோசனைதான். கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த ஆட்டோக்காரர் வருவார்? அப்படியே வந்தாலும் ஐம்பது, நூறு என்று பிடுங்கிவிடமாட்டாரா?
இவ்வளவு வம்பு எதற்கு? தினமும் அலுவலகத்துக்கு பைக்கில் போய்விட்டால் என்ன?
அதுவும் சரிப்படாது. எங்கள் அலுவலகம் வீட்டிலிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரம். நடந்து சென்றால் ஐந்து அல்லது ஆறு நிமிடம், பைக்கில் சென்றால், போக்குவரத்து நெரிசலைத் தாண்டி எங்கேயோ யு டர்ன் எடுத்துத் திரும்பி வருவதற்குக் குறைந்தபட்சம் இருபது நிமிடம் ஆகும்.
சரி, தினமும் வேண்டாம். மாலை வீடு திரும்பத் தாமதமாகும் என்று தெரிந்தால், அன்றைக்குமட்டும் பைக் எடுத்துச் செல்லலாம் இல்லையா?
என்ன விளையாடுகிறீர்களா? இந்தத் துறையில் எப்போது திடீர் வேலை வரும், எப்போது வேலையில்லாமல் உட்கார்ந்து ப்ளாக் எழுதிக்கொண்டிருப்போம் என்று யாரால் சொல்லமுடியும்?
ஆக, என்னுடைய நாய்ப் பிரச்னைக்கு என்னதான் வழி?
ஜஸ்ட் நூற்றுச் சொச்ச மீட்டர்கள்தானே? மிரட்டும் நாய்களைக் கண்டுகொள்ளாமல் வீடு நோக்கி ஓடலாமா?
சுஜாதாவின் ஒரு நாவல் தலைப்பு: ‘பத்து செகண்ட் முத்தம்’. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தைப் பத்து விநாடிகளில் முடிக்கும் வெறியைப்பற்றிய கதை அது.
பத்து செகண்டில் முடியாவிட்டாலும், இந்த தூரத்தை என்னால் முப்பது அல்லது நாற்பது செகண்டில் ஓடிக் கடந்துவிடமுடியாதா? ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன?
நான் சந்தேகமாக அந்த நாயை(அல்லது நாய்களை)ப் பார்க்கிறேன். இது என்னைத் துரத்துமா? நூறு மீட்டரை இந்த நாய் எத்தனை விநாடிகளில் கடக்கும்? மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கிறது.
இப்படி யோசித்து யோசித்தே பத்து நிமிடம் கடந்துவிட்டது. இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நின்றுகொண்டிருப்பது? இந்த நாய்கள் தூங்கும்வரையா? பொதுவாக நாய்கள் ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்கும்? தேடுவதற்கு இங்கே கூகுள், விக்கிபீடியாகூட இல்லையே!
நான் முன்னே, பின்னே திரும்பிப் பார்க்கிறேன். தெரு முழுக்க வெறிச்சோடிக் கிடக்கிறது. துணிந்து நடக்கலாமா, வேண்டாமா? நாய்களுடன் யுத்தம் நடத்துவதைவிட, திரும்பிப் போய் ஆஃபீசிலேயே ராத்தூக்கத்தை முடித்துக்கொள்வது உத்தமம் என்று தோன்றுகிறது.
ஐந்து நிமிடம் கழித்து, இரண்டு பேர் பீடி வலித்தபடி நடந்து வருகிறார்கள். எனக்கு நிம்மதி திரும்புகிறது.
அவர்களும் நான் நடந்த அதே ரோட்டில்தான் நடக்கிறார்கள். ஆனால் நாய்களின் உறுமலைப் பொருட்படுத்துவதில்லை. பேசிக்கொண்டே அவற்றைச் சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள். அந்தத் தைரியமான வீரர்களின் நிழல்போல ஒட்டியபடி நான் பின்னாலேயே போகிறேன்.
ஒருவழியாக, நேற்றைய பிரச்னை முடிந்தது. இனி அடுத்தமுறை அலுவலகத்தில் தாமதமாக வேலை செய்ய நேரும்வரை கவலை இல்லை.
அப்போதும், என்னை நாய்களிடமிருந்து காப்பாற்ற யாராவது வருவார்கள். கடவுள் கருணையுள்ளவன்!
  • **
என். சொக்கன் …

ஆடை விளையாட்டு


ஆடை விளையாட்டு

Posted by: என். சொக்கன்

    ’அலை பாயுதே’வில் எல்லோருக்கும் பிடித்த ‘ரகசிய சிநேகிதனே’ பாட்டில் வைரமுத்து எழுதிய ஒரு வரி:
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
இந்தப் படம் வந்த அதே நேரத்தில் (அல்லது சில மாதங்கள் முன் பின்னாக) ‘மின்னலே’ என்ற  படத்தின் ஒலிநாடா வெளியானது. அதில் ஹாரிஸ் ஜெயராஜ் என்ற புதுமுகம் ‘தாமரை’யின் பாடல் வரிகளுக்கு இசையமைத்திருந்தார். அதிலும் ‘ரகசிய சிநேகிதனே’போல் ஒரு female-solo பாட்டு, ‘வசீகரா’ என்று தொடங்கிய அந்தப் பாடலிலும் இதேமாதிரி ஒரு வரி:
சில சமயம்,
விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
இதைக் கேட்டபோது ’வைரமுத்து, தாமரை இருவரில் யார் யாரைப்  பார்த்துக் காப்பி அடித்தார்கள்?’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். விளையாட்டாகதான்.
பல வருடம் கழித்து, இன்றைய #365paa வரிசைப் பாடலுக்காகப் ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள ‘பட்டினப் பாலை’யை முழுமையாகப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு பகுதி:
துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்து,
மட்டு நீக்கி மது மகிழ்ந்து,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்…
’பாலை’த் திணையின் இலக்கணம், பிரிதலும் பிரிதல் நிமித்தமும். ஆனால் தலைப்பிலேயே ‘பாலை’யை வைத்திருக்கும் ஒரு புத்தகத்தில் இப்படி ஒரு ‘குறிஞ்சி’க் காட்சியா என்று ஆச்சர்யமானேன். இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று என்னிடம் உள்ள உரைகளைப் புரட்டிப் பார்த்தபோது பல சுவாரஸ்யமான அலசல்கள் கிடைத்தன.
முதலில், கடைசி 2 வரிகள். மைந்தர் கண்ணி, அதாவது ஆண் கழுத்தில் உள்ள மாலையை, மகளிர் சூடவும், மகளிர் கோதை, அதாவது பெண் கழுத்தில் உள்ள மாலையை மைந்தர் சூடவும்… பள்ளியறைக்குள் மாலை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு. ஓகே.
அதற்கு முந்தைய வரி, ‘மட்டு நீக்கி மது மகிழ்ந்து’, இந்த வரிக்கும் பலவிதமான விளக்கங்கள் கிடைத்தன, அதில் மிகச் சுவாரஸ்யமானது என்று பார்த்தால் ‘கள் அருந்துவதை விடுத்து, காதல் இன்பத்தைச் சுவைத்தார்கள்’. இதுவும் ஓகே.
இப்போது முக்கியமான வரி, ‘பட்டு நீக்கித் துகில் உடுத்து’. இதற்கும் இரண்டுவிதமான விளக்கங்களைச் சொல்கிறார்கள்:
  • பெண்கள் பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, துகில் – மென்மையான பருத்தி ஆடையை அணிகிறார்கள் – சங்க கால Lingerie? Smile
  • பெண்கள் தங்களுடைய பட்டாடையைக் கழற்றிவிட்டு, விளையாட்டாகத் தங்களுடைய கணவரின் ஆடை (துகில்) அணிகிறார்கள் – அணிந்திருந்த மாலைகளை மாற்றிக்கொண்டதைப்போலவே
ஆக, ரகசிய சிநேகிதனையும் வசீகரனையும் பாடிய பெண்களுக்கு முன்னோடிகள் சங்க காலத்தில் இருக்கிறார்கள்!
இதைப் படித்தபோது கவிஞர் வாலி தனது சுயசரிதையாகிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இணையத்தில் அதைத் தேடிப் பிடித்தேன் (fromhttp://www.tfmpage.com/ppp/)
ஒரு சமயம், தாதாமிராசி இயக்கி எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையமைத்த ஒரு படத்தில் நான் ஒரு பாடலின் பல்லவியை நான் இப்படி எழுதினேன்:
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்
தூக்கமும் சாந்தமும் – நானாவேன்!
நான் எழுதிய இந்தப் பாடலுக்கு திரு. எஸ்.எம்.எஸ் அவர்கள் மிகச் சிறப்பாக இசையமைத்து விட்டார்கள். பாடல் ஓரிரு நாளில் ஒலிப்பதிவாக இருந்தது. அப்போது தாதாமிராசியின் உதவி டைரக்டர் ஒருவர் வந்து, எங்களிடம் -
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே! – அந்தத்
தூக்கமும் அமைதியும் – நானானால்..
என்று ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி “ஆலயமணி” படத்திற்காகப் போன வாரம் ஒலிப்பதிவாயிருக்கிறது என்று சொன்னார்.
இந்தச் செய்தியைக் கேட்டு நான் வியக்கவில்லை. ஆனால் தாதாமிராசி வியந்து போய் என்னிடம் “மிஸ்டர் வாலி! Great men think alike!.. உங்களுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரே மாதிரி கற்பனை உருவாகியிருக்கு. அவர் சொன்ன நினைத்ததை நீங்களும் நென்ச்ச்சிருக்கீங்க..இதுக்குப் பேர்தான் டெலிபதி!” என்றார்.
உடனே நான் அவரிடம் “சார்! இதுக்குக் காரணம் டெலிபதி இல்ல..அம்பிகாபதி” என்றேன். அவருக்குப் புரியும் படியாக விளக்கினேன்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில், நிலவொளியில் அமராவதியின் உப்பரிகைக்குக் கீழே நின்று கொண்டு அமராவதி
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்!
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்!…ஆஹா!
அந்தத் தூக்கமும் சாந்தமும் – நானானால்!
என்று தனக்குத் தானே விரகதாபத்தோடு பேசி பெருமூச்சு விடுவான். இது அந்தப் படத்திற்காக திரு. இளங்கோவன் எழுதிய வசனம். இந்த வசனம் கூட இளங்கோவனின் மொழிபெயர்ப்புத்தான். ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் வருகின்ற வசனத்தின் தமிழாக்கமே இது.
நானும் கண்ணதாசனும் சந்தர்ப்பம் வரும் போது இந்த வசனத்தை உபயோகிக்க முயற்சித்திருக்கோம்; அவ்வளவுதான்! மற்றபடி நாங்கள் இருவரும் எழுத நேர்ந்ததுக்குக் காரணம், டெலிபதி அல்ல; அம்பிகாபதிதான்.
***
என். சொக்கன் …

எந்தநாள் காண்பேன் இனி!



நாஞ்சில் நாடன் சுந்தர ராமசாமி அவர்கள் நாஞ்சில்நாடனின் எழுத்தின் மீதும் அவர் மீதும் அவரைவிட அதிகமாக பற்று வைத்திருக்கிறார்கள் என்றும் விமரிசனம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து எழுவதே என்றும் சொன்னார்.
நாஞ்சில் நாடன்
 
 
எஸ் ஐ சுல்தான்